கொடியேற்றுவேன் என்று அடம் பிடித்து கொடி பிடிக்கும் கருணாநிதி!
கருணநிதிக்கு மஹாத்மா காந்தி மீது என்றுமே மதிப்போ, மரியாதையோ கிடையாது. மாறாக வெறுப்பும், காழ்ப்பும் தான் அதிகமாக இருக்கிறது என்பதை, அன்பழகன் போன்ற மூத்த திமுகவினருக்கேத் தெரிந்த விஷயம் தான்.
முன்னர், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையை “மஹாத்மா காந்தி சாலை” என்று பெயர்மாற்றியபோது, ஒப்புக்கொள்ளாமல், அதனை “உத்தமர் காந்தி சாலை” என்ற நிலைக்குக் கொண்டுவந்ததை மகிழ்ந்ததை, சோனியாவின் கால்களை அடிவருடி……………..வரும் காங்கிரஸ்காரர்கள் ஒருவேளை மறந்திருக்கலாம். ஆனால், பல 70-80-90 வயது பெரியவர்கள் கருணநிதியின் தேசவிரோத போக்கை அறிந்தவர்கள், “சே, இந்த நேரத்தில் கூட இந்த ஆள் தனது புத்தியை இப்படி காட்டுகிறானே”, என்று மனதில் வெறுத்து நொந்துக்கொண்டனர்.
ராமரை தூஷித்துப் பேசியபோது கூட, அந்த கேடுகெட்ட சோனியா காங்கிரஸார், கருணநிதியை ஆதரித்தது மட்டுமல்லாமல், பிரியரஞன்தாஸ் முன்ஷி என்ற பைத்தியக்காரன், கருணாநிதியை மஹாத்மா காந்திஜியுடன் ஒப்பிட்டுப் பேசினான்! பாவம், இவர்களுக்கு எல்லாம், சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி என்னத் தெரியப்போகிறது?
2009ம் ஆண்டிலேயே, சுதந்திர விழாவின்போது, கொடியேற்ற மிகவும் கஷ்டப்பட்டது, பார்ப்பவர்களுக்கே சங்கடத்தை ஏற்படுத்தியது. பேசாமல் இருக்கலாமே, எத்ற்கு இந்த ஆளுக்கு இந்த வேலையெல்லாம்”, என்று மனதிற்குள் முணுமுணுத்தவர்கள் இல்லாமல் இல்லை.
2010லும், கருணாநிதி விடுவதாக இல்லை. அடம் பிடித்து கொண்டு, கொடியை ஏற்றுவேன் என்று நாற்காலியில் வந்துவிட்டார். இவரை நாற்காலியிலிருந்து எழுந்து நிற்க்கவைப்பதற்கே கஷ்டமாகி விட்டது. இரண்டு பேர் பிடித்துக் கொண்டு அந்த வேலையைச் செய்தனர். பிறகு, இவர் ஒரு கையால் கொடிக்கயிறைப் பிடிப்பதுபோல காட்ட, ராணுவ வீரர்கள் கொடியேற்றினர்.
குறிச்சொற்கள்: இந்திய தேசக் கொடி, இந்திய தேசம், கருணாநிதி, கொடி பிடிக்கும் கருணாநிதி, கொடியேற்றுதல், தேசியக் கொடி, பாரத நாட்டுக் கொடி, பாரதம், போஸ் கொடுக்கும் கருணாநி
7:47 முப இல் ஓகஸ்ட் 16, 2010 |
This senile man’s stunt is disgusting.
See, how he is acting –
in the first photo, even while sitting, he requires a lot of assistance from the police / seuirity guards accompanying him.
In the second photo, he was leaning on his right side and the officers were cleverly holding him without falling. The army officer, who was actually holding the flag-hoist rope, anxiously looking at Karunanidhi about his position.
In the third photo, the officers held Karunanidhi safely, the uniformed officer on RHS of Karunanidhi unflurreed the flag and K was just posing for photo holding the orope with his both hands! Of course, he was held safely by two officers for staging such stunt!
4:09 முப இல் ஓகஸ்ட் 18, 2010 |
Kalaignanar is a Great Person and is like Dridashtra
11:54 முப இல் ஓகஸ்ட் 27, 2010 |
கருணாநிதி பெரிய ஆளாக இருக்கலாம், வயதில். ஆனால், வயதிற்கேற்றபடி பேசுவதும் இல்லை, நடந்து கொள்வதும் இல்லை. அதில் தான் அவரது மதிப்பே போய் விடுகிறது.
இனிமேலாவது, பழுத்த அரசியல்வாதியாக இருப்பதினால், அதற்கேற்றவடி, தனது நிலையை மதிப்பாக வைத்துக் கொண்டால் நல்லது.
9:23 முப இல் செப்ரெம்பர் 7, 2010 |
அடடா, இந்த வயதில், இந்த ஆளுக்கு இவ்வளவு ஆசை தேவையா என்றுதான் தோன்றுகிறது!
கயிறு பித்துள்ள “ஸ்டைலை”ப் பார்த்தால், எம்,ஜி.ஆரையும் மிஞ்சிவிடுவார் போல இருக்கிறது.
என்.டி.ஆர் மாதிரி வயது இருந்திருந்தால், காலழகி ஸ்ரேயா, இடுப்பழகி அஸின், குண்டு குஷ்பு, பெரிய்ய சைஸ் நமிதா…..என்று எல்லொர் கூடேயும் சேர்ந்து, திரைப்படங்களில் நடித்துவிட்டு இருப்பாரே?