Archive for the ‘திராவிட மணம்’ Category

பூஜாரி வேலைக்கு பெரியார் சிலைக்கு மாலை போடுவது மாதிரி, நிர்வாண பூஜை செய்தால் “டீன்” பதவி கிடைக்குமா?

பிப்ரவரி 13, 2016

 

பூஜாரி வேலைக்கு பெரியார் சிலைக்கு மாலை போடுவது மாதிரி, நிர்வாண பூஜை செய்தால் “டீன்” பதவி கிடைக்குமா?

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை

நிர்வாண பூஜைக்கு மறுத்த மனைவியை அடித்த மருத்துவ கணவர்: இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தன்னை அடித்து உதைத்ததால் காயம் அடைந்ததாக கூறி கார்த்திகா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது[1].  தன் கணவர் நிர்வாண பூஜையில் ஈடுபட்டதை, கார்த்திகா மொபைலில் படம் எடுத்து வெளியிட்டார். அதாவது, கணவரது நடவடிக்கையை அர்த்த ராத்திரியிலும் விழித்துக் கொண்டு நன்றாகவே கவனித்துள்ளார் என்று தெரிகிறது. நிர்வாண பூஜை குறித்து கார்த்திகா கூறுகையில், ”என் கணவர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரியில், பிசியாலஜி துறை தலைவராக பணியாற்றி வருகிறார். ‘டீன்’ பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அடிக்கடி இப்படி நிர்வாண பூஜையில் ஈடுபடுகிறார்[2]. இது மூட நம்பிக்கை என்று எனது கணவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை[3]. பூஜை நடத்துவதில் அவர் குறியாக உள்ளார். இந்த பூஜையை தட்டிக் கேட்ட என்னை அவர் தாக்கி விட்டார்,” என்றார்[4]. டாக்டரின் நிர்வாண படம் ஓமலுார், தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[5]. நிர்வாண பூஜை குறித்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் செல்வராஜிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”நான் வக்கீலை சந்திக்க சென்று கொண்டிருக்கிறேன். பின் பேசுகிறேன்,” எனக்கூறி, தொடர்பை துண்டித்தார்[6].

பெரியார் சிலைக்கு மாலை போட்ட ரங்கநாதன்நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரிடீன்ஆக முடியுமா?: மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக, தமிழகத்தில் என்ன வேண்டும் என்ற சந்தேகம் வந்துள்ளது போலும். பல்கலைக் கழக வேந்தர் ஆக வேண்டுமானால், கோடி அல்லது லட்சங்கள் வேண்டும் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துகுள்ளன. தமிழகத்தில் “டாக்டர்” ஆவது சுலபமான செயலாக உள்ளது, ஆனால், “டீனாக” வேண்டும் என்றால், பற்பல வழிகளைப் பின்பற்ற வேண்டும் போலிருக்கிறது. பூஜாரியாக வேண்டும் என்று பெரியார் சிலைக்கு மாலைப் போட்டும் காலக் கட்டமாக உள்ளது. சாத்திரம் படித்தவர்களே பட்டை-கொட்டைகளுடன் அவ்வாறு மாலை போட்டுள்ளன. நானும் நான்கே மாதத்தில் எல்லாம் கரைத்துக் குடித்து விட்டேன், எனக்கும் வேலை கொடு என்று இப்பொழுதெல்லாம் கிளம்பி விடுகிறார்கள். “டாக்டர்” பட்டம் வாங்குவதும் அவ்வாறே உள்ளது[7]. போலி டாக்டர்களை கைது செய்யும் படலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்நிலையில் உண்மையான டாக்டர், நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக முடியும் என்ற எண்ணத்தை எப்படி கொண்டார் என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, மனையுடன் சேர்ந்து நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று டாக்டருக்கு “பிரிஷ்கிரிப்ஸன்” யார் கொடுத்தது என்று தெரியவில்லை. ஒருவேளை, பெரியார் சிலைக்கு மாலை போட்டால் வேலை கிடைக்கும் என்று நம்பிய அக்கூட்டத்தவர், யாராவது இவருக்கு சொல்லியிருப்பார்களா?

ramasamiyum-karunanidhisamiyum

ramasamiyum-karunanidhisamiyum

தமிழகத்தில் படித்தவர்கள் இவ்வாறு முரண்பாடாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பதனை அறியவேண்டும்: கடந்த 60-100 ஆண்டுகளாக திராவிடத்துவம் போர்வையில், இந்துமதத்தினரின் நம்பிக்கைகள்-சடங்குகள்-கிரியைகள் முதலியவை கேலிப்படுத்தப்பட்டு, அவதூறாக பேசப்பட்டு, தூஷிக்கப்பட்டுள்ளன. “பார்ப்பன எதிர்ப்பு” என்ற ரீதியில் இந்துமத எதிர்ப்பை செய்து வந்தனர். ஆனால், அச்சித்தாந்திகள் சொல்லியதைப் போல, எந்த சமூக மேன்பாடும் தமிழகத்தில் ஏற்பட்டு விடவில்லை, மாறாக, சமூக சீரழிவுகள் தாம் அதிகமாக நடந்துள்ளன, நடந்து வருகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, தமிழகம் தாழ்ந்து வருவதை அறிவது மட்டுமல்லாது, அதற்கு காரணமே இவர்கள் தாம் என்றும் தெரிந்து கொண்டு வருகிறார்கள். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வடநாட்டில் இந்தி தெரிந்தவர்களுக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை” என்று விதண்டாவாதம் பேசினர், ஆனால், இன்றோ தமிழகத்தில் இந்தி பேசுபவர்கள் வந்து கடின உழைப்பு செய்ய வந்து விட்டனர். நாத்திகம், பகுத்தறிவு பேசியவர்கள் சோம்பேறிகளாகி விட்டனர். கற்பனை-விரோதிகளை உருவாக்கி, அவர்கள் மற்றும் மற்றவர்கள் மீது பழிபோட்டு, பொய்களை சொல்லி வந்ததும் தெரிந்து விட்டது.

கலைமகளை தூஷித்த பெரியார்1960 முதல் 2016 வரை ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்கள் திராவிடத்துவநாத்திகத்தை நீர்த்துவிட்டன: மேலும், இயற்கை சீற்றங்கள், அழிவுகள் முதலியனவும் அதிகமாகியுள்ளன. இவை படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரன் என்று எல்லோரையும் பாதித்துள்ளன. உயிர், பொருள் என்று எல்லாவற்றையும் இழந்துள்ளனர். ஆனால், நடந்து வந்த-வரும் திராவிடத்துவ-நாத்திக-பகுத்தறிவு ஆட்சியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதாவது, “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக்கற்பித்தவன் முட்டாள், மடையன்” என்றெல்லாம் சொல்லியவர்களால், இவற்றையெல்லாம் ஒன்று தடுக்க முடியவில்லை. விஞ்ஞானம் பேசியவர்களாலும் முடியவில்லை. அதற்கும் மேலாக, இவர்கள் தாம் அதற்கு காரணம் என்று தெரிந்து கொண்டனர். அதாவது, புவியின் தன்மையினை பாதித்து, ஊழலில் திளைத்து, மழைநீர்-வடிகால் போக்குவரத்தை செய்ய முடியாமல் தடுத்து, மக்களை வாட்டியதில் உள்ல பங்கை நன்றாகவே புரிந்து கொண்டனர்.

தாலி அவிழ்ப்பு போராட்டம்கோவில், கோவில் இருப்பிடம், சுற்றமைப்பு இவற்றை பாதித்தனால் பாதிப்ப்பு ஏறட்டுள்ளது என்பதனை அறிந்து கொண்டனர்: ஆனால், ஏரி-குளங்கள் மறையாமல் இருந்திருந்தால், இப்பேரிடர்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்று புரிந்து கொண்டு விட்டார்கள். அதாவது, கோவில்கள் இருக்கும்வகையில் குளம், ஏரி முதலியவை சூழ இருந்திருந்தால், தப்பித்துக் கொண்டிருக்கலாம். அப்படியென்றால், கடவுளை மறுத்து, கோவில் சொத்துகளைக் கொள்ளையெடித்து, குளங்களை தூர்த்து, ஏரிகளை வளைத்துப் போட்டு, எல்லாவற்றையும் நாசமாக்கியது யார் என்று பார்த்தால், திராவிடத்துவ அரசியல்வாதிகள் தாம்[8]. கருப்பு-சிவப்பு நிறங்களின் அமைப்பு மாறினாலும், “திராவிட” சொல்லுக்கு முன்னும்-பின்பும் எதை சேர்த்து புது கட்சி வந்தாலும், ஆட்கள் மாறாமல் தான் இருக்கிறார்கள். கடவுள் பயம் மட்டுமல்லாது, எந்த பயமும் இல்லாமல் போய், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னை யாரும் செய்யமுடியாது, என்ற நிலையில் இறங்கி விட்டார்கள்.

தாலி ஆரூஊ - அவிழ்ப்பு கழட்டும் போராட்டம்கோவில் மட்டுமல்ல, சமூகமும் சீரழிந்தது: கோவில் பகிஷ்காரம் ஏன் என்று திகவினர் புத்தகங்களை வெளியிட்டனர். சுயமரியாதை-சீர்திருத்த-பகுத்தறிவு திருமணங்கள் சட்டரீதியில் செல்லாமல் போய், மரியாதை போனபோது, இந்தி திருமண சட்டத்தில் நுழைந்து மரியாதை பெற்றன. தாலியறுப்பு போராட்டங்களினால், பெண்களின் மனங்கள் புண்பட்டன[9]. இதனால், கொலை-கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புகள், அதிகமாகின. திருமணங்கள் முறிந்தன, கணவன்-மனைவியர் பிரிந்தனர், குடும்பங்கள் சிதறுண்டனர்; சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் பரிதவித்தனர்; காப்பர்-கேட்பர்-பேணி காப்போர் என்று யாரும் இல்லாத நிலையில், திசை மாறி குற்றவாளிகளாகவும் மாறினர். ஆனால், இதகைய சீரழிவுகளை திராவிட சித்தாந்தம், நாத்திக-பகுத்தறிவு முதலிய விதண்டாவாதங்கள் ஆதரித்தன. இதனால் தான் முரண்பாடுகள் பெருகி, மக்களின் நம்பிக்கைக்கள் தேட ஆரம்பித்து விட்டன.

தாலி அவிழ்ப்பு போராட்டம்போலி மருத்துவர்கள் போன்று போலி ஜோதிடர்கள் முதலியவற்றை உருவக்கியது திராவிட அரசாட்சி மற்றும் கொள்கைகள் தாம்: மக்கள் அமைதி தேடி அலையும் நேரத்தில் தான், மற்றவர்கள் அமைதியாக இருக்கும் நிலையை கவனிக்க ஆரம்பித்தனர். கடந்த 60 ஆண்டுகளாக நாத்திகக் குடும்பங்கள் சிதறியுள்ள நேரத்தில், ஆத்திகக் குடும்பங்கள் மாறாமல் இருக்கின்றனர் மற்றும் மேலோங்கியும் உள்ளனர் என்பதனை அறிந்து கொண்டனர். இவர்கள் முன்னமே தங்களது தாய், மனைவி, மகள், சகோதரி என்று அவர்களை வைத்து சாமி மும்பிட வைப்பது, படையல் வைப்பது, கோவில்களுக்குச் சென்று பூஜைகள் செய்வது, யாகங்கள் செய்வது என்றெல்லாம் செய்து வந்தனர். இப்பொழுது, கொஞ்சம் வெளிப்படையாக செய்ய ஆரம்பித்தனர். அதாவது, புகைப்படம், டிவி முதலிய சாதனங்கள் மூலம், இவர்களது போலித்தனங்கள் வெளிவந்து கொண்டிருப்பதினால், இனிமேல் மறைப்பதில் பிரயோஜனம் இல்லை என்று கொஞ்சம் வெளியில் வந்து செய்ய ஆரம்பித்து வுட்டனர். “நானும் இந்து தான்” என்று கூறிக் கொள்ளும் அளவுக்கு தைரியம் வந்துள்ளது.

.தாலி அவிழ்ப்பு கழட்டும் போராட்டம்- பெற்ற குழந்தைகள் முன்பாக

முறையற்ற நிர்வாண பூஜைகள்: இப்படி ஜோதிடம், பூஜை, பரிகாரம், படையல் என்று இவர்களும் செய்ய ஆரம்பித்த போது, அவர்கள் ரகசியமாக செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அப்பொழுது, அவர்களது அடியாட்கள் தேடியலைந்து, யாரையாவது பிடித்துக் கொண்டு வந்தன. அந்நிலையில், அரைகுறைகள் நுழைந்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றன, பார்க்கின்றன. இதனால், பூஜை-புனஸ்காரம், கிரிய-சடங்கு போன்றவற்றில் அத்தகைய தெறிகெட்டவர்கள் நுழைந்துள்ளனர். இதனால் தான் மேன்மேலும் குழப்பங்கள் நீடிக்கின்றன. ஒழுங்காக பக்தியை வளர்த்துக் கொண்டு அமைதியாக செய்ய வேண்டியவற்றை, குறுக்கு வழிகளில் சென்று, மந்திரம்-தந்திரம்-யந்திரம் போன்ற வழிகளில் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்து விட்டது. அந்நிலயில் தான் இதைப் போன்ற நிர்வாண பூஜை போன்ற சடங்குகளை சிலர் பரிந்துரைக்க, குறுக்கு வழியில், சீக்கிரம் விரும்பியதைப் பெற்று விடலாம், என்று சபலம் கொண்டவர்கள் மற்றும் பேராசைக் கொண்டவர்கள் அவற்றில் நுழைகின்றனர்.

© வேதபிரகாஷ்

13-02-12016

[1] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=160581

[2] http://www.maalaimalar.com/2016/02/12161725/Why-Dharmapuri-Medical-College.html

[3] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=88036

[4] மாலைமலர், தர்மபுரி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை நடத்துவது ஏன்?: மனைவி பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2016. 4:17 PM IST.

[5] தமிழ்முரசு, முதல்வராக வேண்டும் என்பதற்காக நிர்வாண பூஜை செய்த பேராசிரியர் மனைவியே புகைப்படம் வெளியிட்டதால் பரபரப்பு, பெப்ரவரி 12, 2016.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1455606

[7] தமிழகத்தைப் பொறுத்த வரையில் “டாக்டர்” மோகம் 1970களிலிருந்து அதிகமாக உள்ளது என்பதனை ஞாபகப்படுத்திக் கொள்லவேண்டும். அதிலும் எம்.பி.பி.எஸ் டாக்டர்களை விட, “ஹானரெரி” டாக்டர் பட்டங்கள் தமிழக பல்கலைக்கழகங்கள் வாரி, அரசியல்வாதிகளுக்குக் கொடுத்தன. இல்லை, விலை கொடுத்து வாங்கவும் செய்தனர்.

[8] “Ecological Imbalance” ஐ உருவாக்கி, சென்னையை சீரழித்தவர்கள் இவர்கள் தாம் என்று மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர்.

[9] திராவிடப் புரோகிதர்கள் திருமணங்களை செய்வித்து, தாலிகளையும் அறுக்க ஆரம்பித்தனர், அதாவது “திருமண முறிவு விழா”க்களையும் சந்தோஷமாக நடத்தினர். ஆனால், பெண்கள் வருத்தப்படத்தான் செய்தனர்.

 

நிர்வாண பூஜைக்கு மறுத்த மனைவியை அடித்த மருத்துவ கணவர்: இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தன்னை அடித்து உதைத்ததால் காயம் அடைந்ததாக கூறி கார்த்திகா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது[1].  தன் கணவர் நிர்வாண பூஜையில் ஈடுபட்டதை, கார்த்திகா மொபைலில் படம் எடுத்து வெளியிட்டார். அதாவது, கணவரது நடவடிக்கையை அர்த்த ராத்திரியிலும் விழித்துக் கொண்டு நன்றாகவே கவனித்துள்ளார் என்று தெரிகிறது. நிர்வாண பூஜை குறித்து கார்த்திகா கூறுகையில், ”என் கணவர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரியில், பிசியாலஜி துறை தலைவராக பணியாற்றி வருகிறார். ‘டீன்’ பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அடிக்கடி இப்படி நிர்வாண பூஜையில் ஈடுபடுகிறார்[2]. இது மூட நம்பிக்கை என்று எனது கணவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை[3]. பூஜை நடத்துவதில் அவர் குறியாக உள்ளார். இந்த பூஜையை தட்டிக் கேட்ட என்னை அவர் தாக்கி விட்டார்,” என்றார்[4]. டாக்டரின் நிர்வாண படம் ஓமலுார், தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[5]. நிர்வாண பூஜை குறித்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் செல்வராஜிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”நான் வக்கீலை சந்திக்க சென்று கொண்டிருக்கிறேன். பின் பேசுகிறேன்,” எனக்கூறி, தொடர்பை துண்டித்தார்[6].

நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரிடீன்ஆக முடியுமா?: மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக, தமிழகத்தில் என்ன வேண்டும் என்ற சந்தேகம் வந்துள்ளது போலும். பல்கலைக் கழக வேந்தர் ஆக வேண்டுமானால், கோடி அல்லது லட்சங்கள் வேண்டும் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துகுள்ளன. தமிழகத்தில் “டாக்டர்” ஆவது சுலபமான செயலாக உள்ளது, ஆனால், “டீனாக” வேண்டும் என்றால், பற்பல வழிகளைப் பின்பற்ற வேண்டும் போலிருக்கிறது. பூஜாரியாக வேண்டும் என்று பெரியார் சிலைக்கு மாலைப் போட்டும் காலக் கட்டமாக உள்ளது. சாத்திரம் படித்தவர்களே பட்டை-கொட்டைகளுடன் அவ்வாறு மாலை போட்டுள்ளன. நானும் நான்கே மாதத்தில் எல்லாம் கரைத்துக் குடித்து விட்டேன், எனக்கும் வேலை கொடு என்று இப்பொழுதெல்லாம் கிளம்பி விடுகிறார்கள். “டாக்டர்” பட்டம் வாங்குவதும் அவ்வாறே உள்ளது[7]. போலி டாக்டர்களை கைது செய்யும் படலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்நிலையில் உண்மையான டாக்டர், நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக முடியும் என்ற எண்ணத்தை எப்படி கொண்டார் என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, மனையுடன் சேர்ந்து நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று டாக்டருக்கு “பிரிஷ்கிரிப்ஸன்” யார் கொடுத்தது என்று தெரியவில்லை. ஒருவேளை, பெரியார் சிலைக்கு மாலை போட்டால் வேலை கிடைக்கும் என்று நம்பிய அக்கூட்டத்தவர், யாராவது இவருக்கு சொல்லியிருப்பார்களா?

தமிழகத்தில் படித்தவர்கள் இவ்வாறு முரண்பாடாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பதனை அறியவேண்டும்: கடந்த 60-100 ஆண்டுகளாக திராவிடத்துவம் போர்வையில், இந்துமதத்தினரின் நம்பிக்கைகள்-சடங்குகள்-கிரியைகள் முதலியவை கேலிப்படுத்தப்பட்டு, அவதூறாக பேசப்பட்டு, தூஷிக்கப்பட்டுள்ளன. “பார்ப்பன எதிர்ப்பு” என்ற ரீதியில் இந்துமத எதிர்ப்பை செய்து வந்தனர். ஆனால், அச்சித்தாந்திகள் சொல்லியதைப் போல, எந்த சமூக மேன்பாடும் தமிழகத்தில் ஏற்பட்டு விடவில்லை, மாறாக, சமூக சீரழிவுகள் தாம் அதிகமாக நடந்துள்ளன, நடந்து வருகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, தமிழகம் தாழ்ந்து வருவதை அறிவது மட்டுமல்லாது, அதற்கு காரணமே இவர்கள் தாம் என்றும் தெரிந்து கொண்டு வருகிறார்கள். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வடநாட்டில் இந்தி தெரிந்தவர்களுக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை” என்று விதண்டாவாதம் பேசினர், ஆனால், இன்றோ தமிழகத்தில் இந்தி பேசுபவர்கள் வந்து கடின உழைப்பு செய்ய வந்து விட்டனர். நாத்திகம், பகுத்தறிவு பேசியவர்கள் சோம்பேறிகளாகி விட்டனர். கற்பனை-விரோதிகளை உருவாக்கி, அவர்கள் மற்றும் மற்றவர்கள் மீது பழிபோட்டு, பொய்களை சொல்லி வந்ததும் தெரிந்து விட்டது.

1960 முதல் 2016 வரை ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்கள் திராவிடத்துவநாத்திகத்தை நீர்த்துவிட்டன: மேலும், இயற்கை சீற்றங்கள், அழிவுகள் முதலியனவும் அதிகமாகியுள்ளன. இவை படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரன் என்று எல்லோரையும் பாதித்துள்ளன. உயிர், பொருள் என்று எல்லாவற்றையும் இழந்துள்ளனர். ஆனால், நடந்து வந்த-வரும் திராவிடத்துவ-நாத்திக-பகுத்தறிவு ஆட்சியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதாவது, “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக்கற்பித்தவன் முட்டாள், மடையன்” என்றெல்லாம் சொல்லியவர்களால், இவற்றையெல்லாம் ஒன்று தடுக்க முடியவில்லை. விஞ்ஞானம் பேசியவர்களாலும் முடியவில்லை. அதற்கும் மேலாக, இவர்கள் தாம் அதற்கு காரணம் என்று தெரிந்து கொண்டனர். அதாவது, புவியின் தன்மையினை பாதித்து, ஊழலில் திளைத்து, மழைநீர்-வடிகால் போக்குவரத்தை செய்ய முடியாமல் தடுத்து, மக்களை வாட்டியதில் உள்ல பங்கை நன்றாகவே புரிந்து கொண்டனர்.

கோவில், கோவில் இருப்பிடம், சுற்றமைப்பு இவற்றை பாதித்தனால் பாதிப்ப்பு ஏறட்டுள்ளது என்பதனை அறிந்து கொண்டனர்: ஆனால், ஏரி-குளங்கள் மறையாமல் இருந்திருந்தால், இப்பேரிடர்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்று புரிந்து கொண்டு விட்டார்கள். அதாவது, கோவில்கள் இருக்கும்வகையில் குளம், ஏரி முதலியவை சூழ இருந்திருந்தால், தப்பித்துக் கொண்டிருக்கலாம். அப்படியென்றால், கடவுளை மறுத்து, கோவில் சொத்துகளைக் கொள்ளையெடித்து, குளங்களை தூர்த்து, ஏரிகளை வளைத்துப் போட்டு, எல்லாவற்றையும் நாசமாக்கியது யார் என்று பார்த்தால், திராவிடத்துவ அரசியல்வாதிகள் தாம்[8]. கருப்பு-சிவப்பு நிறங்களின் அமைப்பு மாறினாலும், “திராவிட” சொல்லுக்கு முன்னும்-பின்பும் எதை சேர்த்து புது கட்சி வந்தாலும், ஆட்கள் மாறாமல் தான் இருக்கிறார்கள். கடவுள் பயம் மட்டுமல்லாது, எந்த பயமும் இல்லாமல் போய், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னை யாரும் செய்யமுடியாது, என்ற நிலையில் இறங்கி விட்டார்கள்.

கோவில் மட்டுமல்ல, சமூகமும் சீரழிந்தது: கோவில் பகிஷ்காரம் ஏன் என்று திகவினர் புத்தகங்களை வெளியிட்டனர். சுயமரியாதை-சீர்திருத்த-பகுத்தறிவு திருமணங்கள் சட்டரீதியில் செல்லாமல் போய், மரியாதை போனபோது, இந்தி திருமண சட்டத்தில் நுழைந்து மரியாதை பெற்றன. தாலியறுப்பு போராட்டங்களினால், பெண்களின் மனங்கள் புண்பட்டன[9]. இதனால், கொலை-கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புகள், அதிகமாகின. திருமணங்கள் முறிந்தன, கணவன்-மனைவியர் பிரிந்தனர், குடும்பங்கள் சிதறுண்டனர்; சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் பரிதவித்தனர்; காப்பர்-கேட்பர்-பேணி காப்போர் என்று யாரும் இல்லாத நிலையில், திசை மாறி குற்றவாளிகளாகவும் மாறினர். ஆனால், இதகைய சீரழிவுகளை திராவிட சித்தாந்தம், நாத்திக-பகுத்தறிவு முதலிய விதண்டாவாதங்கள் ஆதரித்தன. இதனால் தான் முரண்பாடுகள் பெருகி, மக்களின் நம்பிக்கைக்கள் தேட ஆரம்பித்து விட்டன.

போலி மருத்துவர்கள் போன்று போலி ஜோதிடர்கள் முதலியவற்றை உருவக்கியது திராவிட அரசாட்சி மற்றும் கொள்கைகள் தாம்: மக்கள் அமைதி தேடி அலையும் நேரத்தில் தான், மற்றவர்கள் அமைதியாக இருக்கும் நிலையை கவனிக்க ஆரம்பித்தனர். கடந்த 60 ஆண்டுகளாக நாத்திகக் குடும்பங்கள் சிதறியுள்ள நேரத்தில், ஆத்திகக் குடும்பங்கள் மாறாமல் இருக்கின்றனர் மற்றும் மேலோங்கியும் உள்ளனர் என்பதனை அறிந்து கொண்டனர். இவர்கள் முன்னமே தங்களது தாய், மனைவி, மகள், சகோதரி என்று அவர்களை வைத்து சாமி மும்பிட வைப்பது, படையல் வைப்பது, கோவில்களுக்குச் சென்று பூஜைகள் செய்வது, யாகங்கள் செய்வது என்றெல்லாம் செய்து வந்தனர். இப்பொழுது, கொஞ்சம் வெளிப்படையாக செய்ய ஆரம்பித்தனர். அதாவது, புகைப்படம், டிவி முதலிய சாதனங்கள் மூலம், இவர்களது போலித்தனங்கள் வெளிவந்து கொண்டிருப்பதினால், இனிமேல் மறைப்பதில் பிரயோஜனம் இல்லை என்று கொஞ்சம் வெளியில் வந்து செய்ய ஆரம்பித்து வுட்டனர். “நானும் இந்து தான்” என்று கூறிக் கொள்ளும் அளவுக்கு தைரியம் வந்துள்ளது.

.

முறையற்ற நிர்வாண பூஜைகள்: இப்படி ஜோதிடம், பூஜை, பரிகாரம், படையல் என்று இவர்களும் செய்ய ஆரம்பித்த போது, அவர்கள் ரகசியமாக செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அப்பொழுது, அவர்களது அடியாட்கள் தேடியலைந்து, யாரையாவது பிடித்துக் கொண்டு வந்தன. அந்நிலையில், அரைகுறைகள் நுழைந்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றன, பார்க்கின்றன. இதனால், பூஜை-புனஸ்காரம், கிரிய-சடங்கு போன்றவற்றில் அத்தகைய தெறிகெட்டவர்கள் நுழைந்துள்ளனர். இதனால் தான் மேன்மேலும் குழப்பங்கள் நீடிக்கின்றன. ஒழுங்காக பக்தியை வளர்த்துக் கொண்டு அமைதியாக செய்ய வேண்டியவற்றை, குறுக்கு வழிகளில் சென்று, மந்திரம்-தந்திரம்-யந்திரம் போன்ற வழிகளில் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்து விட்டது. அந்நிலயில் தான் இதைப் போன்ற நிர்வாண பூஜை போன்ற சடங்குகளை சிலர் பரிந்துரைக்க, குறுக்கு வழியில், சீக்கிரம் விரும்பியதைப் பெற்று விடலாம், என்று சபலம் கொண்டவர்கள் மற்றும் பேராசைக் கொண்டவர்கள் அவற்றில் நுழைகின்றனர்.

© வேதபிரகாஷ்

13-02-12016

[1] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=160581

[2] http://www.maalaimalar.com/2016/02/12161725/Why-Dharmapuri-Medical-College.html

[3] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=88036

[4] மாலைமலர், தர்மபுரி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை நடத்துவது ஏன்?: மனைவி பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2016. 4:17 PM IST.

[5] தமிழ்முரசு, முதல்வராக வேண்டும் என்பதற்காக நிர்வாண பூஜை செய்த பேராசிரியர் மனைவியே புகைப்படம் வெளியிட்டதால் பரபரப்பு, பெப்ரவரி 12, 2016.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1455606

[7] தமிழகத்தைப் பொறுத்த வரையில் “டாக்டர்” மோகம் 1970களிலிருந்து அதிகமாக உள்ளது என்பதனை ஞாபகப்படுத்திக் கொள்லவேண்டும். அதிலும் எம்.பி.பி.எஸ் டாக்டர்களை விட, “ஹானரெரி” டாக்டர் பட்டங்கள் தமிழக பல்கலைக்கழகங்கள் வாரி, அரசியல்வாதிகளுக்குக் கொடுத்தன. இல்லை, விலை கொடுத்து வாங்கவும் செய்தனர்.

[8] “Ecological Imbalance” ஐ உருவாக்கி, சென்னையை சீரழித்தவர்கள் இவர்கள் தாம் என்று மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர்.

[9] திராவிடப் புரோகிதர்கள் திருமணங்களை செய்வித்து, தாலிகளையும் அறுக்க ஆரம்பித்தனர், அதாவது “திருமண முறிவு விழா”க்களையும் சந்தோஷமாக நடத்தினர். ஆனால், பெண்கள் வருத்தப்படத்தான் செய்தனர்.

பெரியார் பூமியில் நிர்வாண பூஜையில் ஈடுபட்ட உடல் இயக்கவியல் மருத்துவ பேராசியர், மனைவியையும் துணைக்குக் கூப்பிடதால், போட்டோவை வெளியிட்ட மனைவி!

பிப்ரவரி 13, 2016

 

பெரியார் பூமியில் நிர்வாண பூஜையில் ஈடுபட்ட உடல் இயக்கவியல் மருத்துவ பேராசியர், மனைவியையும் துணைக்குக் கூப்பிடதால், போட்டோவை வெளியிட்ட மனைவி!

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி - டாக்டர் செல்வராஜ்

தமிழகமும், பெரியார்பகுத்தறிவும், நிர்வாணமும்: பெரியார் பிறந்த மண், நாத்திகத்திற்கு வேரிட்ட தலைவரின் கால் பதிந்த பாதை, பெரியாரிஸம் ஊன்றிய பூமி, என்றெல்லாம் தமிழகத்தை மேடைகளில் கருப்புச் சட்டைகள் வர்ணிப்பதுண்டு. பெரியாரே எல்லாவற்றையும் துறந்தவர் தாம், அதனால் தான் அவர் நிர்வாண கிளப்பின் உறுப்பினர் ஆகி, அவர்களோடு சேர்ந்து கொண்டு நிர்வாண புகைப்படமும் எடுத்துக் கொண்டார் என்றேல்லாம் அவருடைய முற்றும் துறந்த நிலையை விவரிப்பர். ஆனால், அதே கருஞ்சட்டைகள் ஜைன துறவிகள் தெருக்களில் நடந்து சென்றால், கல்லேறிந்து தாக்கவும் செய்வார்கள். அதாவது நிர்வாணத்திலும் வித்தியாசம் பார்ப்பது நாத்திகமா, திராவிட ஜாதித்துவமா, சாதிவெறித்துவ நாத்திகமா, பகுத்தறிவா என்பதை அவர்கள் தாம் விளக்க வேண்டும். அரசு கோவில்களுக்குள் செல்பவர்களுக்கு “உடை ஒழுக்கம்” வேண்டும் என்ற போது, “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” என்று அத்தகைய அறிவிஜீவித்தனத்துடன் சமீபத்தில் ஒருவர் எழுதி கேட்டுள்ளார்[1].

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை-டிரஸ் கோட் இல்லையா

தமிழகத்து மருத்துவருக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?”, என்றோ, “தமிழகத்து மருத்துவருக்கு டிரஸ்கோட் உண்டா மருத்துவரே?” என்று கேட்க துணிவு உண்டா?: நிர்வாண உரிமைக்காக எழுதிய அவர்[2], இம்மருத்துவரும் தனது உரிமை என்றால், ஆதரிப்பாரா, எதிர்ப்பாரா? அதாவது அந்த நிர்வாணம் வேறு, இந்த நிர்வாணம் வேறு என்று வாதிப்பாரா அல்லது திகவினர் போன்று கல்லெறிந்து தடுப்பாரா? போதாகுறைக்கு, தமிழக அரசு மருத்துவர் நிர்வாண பூஜையிலும் ஈடுபட்டுள்ளார். மனைவி இதெல்லாம் மூடத்தனம் என்று தட்டிக் கேட்டபோது, இதெல்லாம் எனது உரிமை என்றும் சண்டை போட்டுள்ளார். “தமிழகத்து மருத்துவருக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?”, என்றோ, “தமிழகத்து மருத்துவருக்கு டிரஸ்கோட் உண்டா மருத்துவரே?” என்று கேட்டு எந்த சமத்தும் கட்டுரை எழுதவில்லை! ஒருவேளை, அவர் இதைத் தெரிந்து கொண்ட பிறகு எழுதலாம், எழுத முயற்சிக்கலாம்.

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை

விதவையைத் திருமணம் செய்து கொண்ட விதவர்: தர்மபுரி இலக்கியம்பட்டி பாரதிபுரம் மருத்துவ குடியிருப்பில் வசித்து வரும் டாக்டர் செல்வராஜ் (50), தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பிசியாலஜி – உடல் இயக்கவியல் – துறை தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி கல்பனா இறந்து விட்டார்.   இவருக்கு, அவர் மூலம் பிறந்த அதிதர் என்ற மகன் உள்ளார்.  இவ்வாறு “விதவர்” நிலையில் இருந்த இவர், மனைவி இறந்ததைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியை சேர்ந்த வையாபுரி மகள் கார்த்திகாவை (28) செல்வராஜ் 2–வது திருமணம் செய்து கொண்டார்[3]. தன்னைவிட 22 வயது குறைவான பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். ஏற்கனவே கார்த்திகாவுக்கு இன்னொருவருடன் திருமணம் ஆகி இரண்டு வருடத்தில் அவரது கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார்[4]. அதாவது கார்த்திகாவும் கைம்பெண் / விதவைதான். திருமணம் நடைபெற்று 1 வருடம் அவர்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினர். இவ்வாறு விதவையைத் திருமணம் செய்து கொண்டு புரட்சி செய்திருக்கிறார்.

பெரியாரைப் பின்பற்றிய செல்வராஜ்

பிசியோலாஜி புரொபசர் சைக்கோலாஜியாக செய்து வந்த சில காரியங்கள்: பிசியாலஜி – உடல் இயக்கவியல் டாக்டர் செல்வராஜ், மனோதத்துவ ரீதியிலும் சில பரிசோதனைகள் செய்ய ஆரம்பித்தார் போலும்! அடிக்கடி இரவு நேரத்தில், வீட்டில் தன் அறையில் நீண்ட நேரம் தனியாக பூஜை செய்தபடி இருப்பதுண்டு. இந்த நிலையில் அவ்வப்போது பூஜை செய்ய செல்வராஜ் வெளியில் சென்று வந்தார். இதை கண்ட அவரது மனைவி கார்த்திகா ஏதோ ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளதால் சென்று வருவதாக நினைத்து அதை கண்டு கொள்ளவில்லை[5]. இதனால் வெளியில் பூஜை செய்து வந்த பேராசிரியர் செல்வராஜ் நாளடைவில் தனது வீட்டில் ஒரு நாற்காலியில் நிர்வாணமாக அமர்ந்து பூஜை செய்ய ஆரம்பித்தார்[6]. அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். சந்தேகமடைந்த கார்த்திகா, டாக்டருக்கு தெரியாமல் அவருடைய அறைக்கு சென்ற போது, அவர் நிர்வாணமாக பலகையில் அமர்ந்து பூஜையில் ஈடுபட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்[7]. மேலும், அவரது டைரியில் ஆபாசமான வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன[8]. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பல முறை மருத்துவராகிய நீங்கள் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று கூறியும் அவர்கேட்கவில்லை. தொடர்ந்து அவர் நிர்வாண பூஜை செய்து வந்தார்.

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி - Photo courtesy - Jeyakoopi

நிர்வாண பூஜையில் ஈடுபட்டு வந்த கணவனை நினைந்து வருந்திய மனைவி: கார்த்திகா எவ்வளவு சொல்லியும் பிசியாலஜி – உடல் இயக்கவியல் பேராசியர் நிர்வாண பூஜையை விடவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாத கார்த்திகா ஏற்கனவே கணவனை இழந்து தற்போது மற்றொரு கணவனும் இது போன்ற செயலில் மூழ்கி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்[9]. இருந்தாலும் கணவரின் ஆதரவில் வாழ்ந்து வருவதால் அவர் ஏதோ ஒன்றை செய்து கொள்ளட்டும் என்று கண்டும் காணாமலும் இருந்து வந்தார்.  அர்த்தஜாம பூஜை நடந்து கொண்டிருந்தது. கணவன் – மனைவி உடல்-உள்ளம் போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. மனம் உடலைக் கட்டுப்படுத்துமா, உடல் மனத்தை ஆட்டிப் படைக்குமா என்ற போராட்டம் தொடர்ந்தது போலும்!

Dravida desa Physiology professor indulging in Nude worship psychologically

தன்னுடன் நிர்வாண பூஜையில் பங்கு கொள் என்று வற்புருத்திய டாக்டர்: இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அவரது மனைவி கார்த்திகாவையும் நிர்வாண பூஜை செய்யவேண்டும் என்று டாக்டர் செல்வராஜ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு கார்த்திகா உடன் படாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு அடிக்கடி அவரது பெற்றோர்கள் வீடான ஓமலூர் அருகே உள்ள எலத்தூருக்கு கார்த்திகா வந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் விவாகரத்து செய்வதாக கார்த்திகாவுக்கு பேராசிரியர் நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.  இதை கண்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்த கார்த்திகா தனது பாட்டி மற்றும் தாய் ஆகியோரை அழைத்து கொண்டு கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது நிர்வாண பூஜையில் இருந்த கணவனை பார்த்து இனி சேர்ந்து வாழலாம் என்றும், இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறினார்.  ஆனால் பேராசிரியர் செல்வராஜ் என்னுடன் வாழ வேண்டும் என்றால் நான் கூறுவது போல் நீயும் நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் உன்னை விவாகரத்து செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்றும் மிரட்டியதாக அவரது மனைவி கூறினார்[10].

© வேதபிரகாஷ்

13-02-12016

[1] சமஸ், சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?, Published: December 29, 2015 09:13 ISTUpdated: December 29, 2015 09:14 IST.

[2]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80/article8040900.ece

[3] நக்கீரன், நிர்வாண பூஜை நடத்தும் மருத்துவ கல்லூரி பேராசிரியர்மனைவி பரபரப்பு புகார், பதிவு செய்த நாள் : 12, பிப்ரவரி 2016 (18:6 IST), மாற்றம் செய்த நாள் :12, பிப்ரவரி 2016 (18:17 IST).

[4]  மாலைமலர், ஓமலூரில் நிர்வாண பூஜை நடத்தும் மருத்துவ கல்லூரி பேராசிரியர் தன்னையும் வற்புறுத்துவதாக மனைவி பரபரப்பு புகார், பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2:17 PM IST.

[5] http://www.maalaimalar.com/2016/02/12141712/Professor-of-the-Medical-Colle.html

[6] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=160581

[7] சென்னை.ஆன்.லைன், நிர்வாண பூஜை நடத்தும் மருத்துவ கல்லூரி பேராசிரியர்: மனைவி போலீஸில் புகார், பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2:17 PM IST.

[8] தினமலர், அரசு டாக்டரின் நிர்வாண பூஜை தன்னையும் வற்புறுத்துவதாக மனைவி புகார், பிப்ரவரி.13, 2016.00.36

[9] http://tamil.chennaionline.com/news/tamilnadu/newsitem.aspx?NEWSID=d538d071-abed-4cb6-beed-bb5562d76a2f&CATEGORYNAME=TTN

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=195934

சாணக்யாவிற்குப் பிறகு திராவிடம் – கெட்ட வார்த்தை பட்டியல் நீள்கிறது!

ஓகஸ்ட் 14, 2011

சாணக்யாவிற்குப் பிறகு திராவிடம் – கெட்ட வார்த்தை பட்டியல் நீள்கிறது!

 மூதறிஞரை வெல்ல முயன்ற கலைஞர், கலைஞரை மிஞ்சும் மருத்துவர்: தமிழகத்தில் தமிழ் பேசும் தமிழர்களுக்கு, தமிழில் இல்லாத வார்த்தைகள் மீதுதான் அன்பு, காதல், போகம், பிணைப்பு, இணைப்பு எல்லாமே. ஆனால், திடீரென்று அவற்றை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இது ராமசாமி நாயக்கர், அண்ணாதுரை, கருணாநிதி முதலியோர்களுக்கு வழக்கமாக இருந்து வந்தது.  இப்பொழுது ராமதாஸுக்கும் அந்த பித்துப் பிடித்து விட்டது போலும். ஆண்டுக்கு ஆண்டு, வார்த்தைகளுக்கு, புதிய வியாக்ரானம் / விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பிரிவினைவாதங்களை வைத்துக் கொண்டு, பிழைப்பு நடத்தி, மக்களை மயக்கப் பார்த்தது பாமக. ஆனால், ராஜதுரோகக் குற்றட்திற்குள்ளாவோம் என்று பயந்து, அண்ணாதுரையைப் போல, அமைதியாக கொள்கைளை மாற்றிக்கொண்டனர்.

சங்கராச்சாரியார், ரஜினிகாந்த் இந்த இருவர்களால் தான் தமிழகமே கெட்டுவிட்டது: இப்படி ஒருமுறை பேசிக் கலக்கியுள்ளார் ராமதாஸ். அதாவது, தெய்வநம்பிக்கை இளைஞர்களிடம் இவர்களால்தான் வளர்ந்தது, அதனால் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற அளவிற்கு பேசினார். ரஜினி படங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, தியேட்டர் முதலாளிகளை மிரட்டி எல்லாம் செய்து பார்த்தனர். ஆனால், நாத்திகத்தினால் கடந்த 60 ஆண்டுகளில் என்ன சாதிக்க முடிந்தது என்று இந்த பகுத்தறிவாளியால் சொல்லமுடியவில்லை.

“திராவிடம்’ என்ற சொல் கெட்டவார்த்தை: ராமதாஸ் புது அர்த்தம்[1]கிருஷ்ணகிரி: “”திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், “மக்களுக்காக அரசியல்’ என்ற செயல் திட்டத்தை, ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டில் இருந்து, முழுமையான சமச்சீர் கல்வி திட்டத்தை, நடைமுறைப்படுத்த வேண்டும். காமராஜர் காலத்தில், 12 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தது. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின், 11 ஆயிரம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துவங்கப்பட்டன. திராவிட கட்சிகள், கல்வியை கொள்ளையர்களுக்கு தாரை வார்த்துவிட்டன.
சமச்சீர் கல்வி முழுமையாக செயல்படுத்தப்பட்டால், மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு வேலையே இல்லை. 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ள தலைமைச் செயலக கட்டடத்தை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் கூட்டணி வைப்பது குறித்து நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். “திராவிடம்’ என்ற சொல்லை நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், “மக்களுக்காக அரசியல்’ என்ற செயல்திட்டத்தை ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

 

சாணக்யன்ஒருதுரோகி’ : பா..., ராமதாஸ்பேச்சு[2]திண்டிவனம் : திண்டிவனத்தில் நடந்த சாணக்யா பள்ளி திறப்பு விழாவில், “சாணக்யன் துரோகி, சாணக்யா என்ற பெயர் கெட்ட வார்த்தை’ என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்[3].

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்  நடந்த சாணக்யா மெட்ரிகுலேஷன் பள்ளி திறப்பு விழாவிற்கு, மரகதாம்பிகை கல்வி அறக்கட்டளை தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளி வளாகத்தை திறந்து வைத்து, பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:அரசு தேர்வுகளில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. 25 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் இருக்க என்ன காரணம்? விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான தனியார் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குகின்றன. இதற்கு அரசை தான் குறை கூற வேண்டும்.

பல நாடுகளில் கல்வியை அரசுகளே தான் தருகின்றன.கல்வி தற்போது வணிகமாகி விட்டது. புற்றீசல் போல் கிளம்பி உள்ள ஆங்கிலப் பள்ளிகள் மக்களிடையே ஒரு மோகத்தை ஏற்படுத்தியுள்ளன.  ஏழைகளுக்கும் பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும். சாணக்யன் மிகவும் கெட்டவன். சாணக்யா என்ற பெயர் கெட்ட வார்த்தை. சாணக்யனும், வெளிநாட்டைச் சேர்ந்த மாக்கியவல்லியும் துரோகிகள். அடுத்த பள்ளிக்காவது தேவராஜ் வேறு பெயர் சூட்டுவார் என்று நம்புகிறேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

 

திராவிட மாயையிலிருந்து என்று திராவிடர்கள் அல்லது தமிழர்கள் வெளிவரப்போகிறர்கள் என்று தெரியவில்லை: பி. ராமமூர்த்தி 1980களில் “ஆரிய மாயையா, திராவிட மாயையா” என்று திராவிட இயக்கத்தை விமர்சித்தார்[4]. குணா “திராவிடத்தால் வீழ்ந்தோம்!” என்று 1990களில் எழுதியுள்ளார்[5]. அப்பொழுது கருணாநிதி அவரை சிறையில் அடைத்தார். ஆனால், தமிழர்கள் அந்த மாயையிலிருந்து மீளவில்லை. திராவிட மாயையும் தொடர்ந்தது. “திராவிடம்” இல்லாமல் அரசியல் கட்சியே இல்லை என்ற நிலையில் தான் இருந்துவந்தது. பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள், விடுதலை சிறுத்தைகள் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் “திராவிட” அடைமொழி இல்லாத கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. “ஆரியர்” இனம் பொய், மாயை, கட்டுக்கதை என்றெல்லாம் மெய்ப்பிக்கப் பட்ட பிறகும், அந்த இனவாதம், இனவெறி, இனசெருக்கு, இனமாயை வாதங்களை வைத்துக் கொண்டு, திராவிட கட்சிகள் அரசியல் நடத்தி வருகின்றன. பணபலம் மிக்க வீரமணி கோஷ்டியர்கள் கூட கருணாநிதி-ஜெயலலிதா என்று மாறி-மாறி தங்களது திராவிடப் பற்றைக் காட்டிக் கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கு பணம், பதவி ஏதாவது கொடுத்தால் போதும், மாறிக்கொண்டேயிருப்பார்கள், மாற்றிக்கொண்டேயிருப்பார்கள்! கேட்டால் அரசியலில் இதெல்லாம் சகஜம், அரசியலில் நண்பனும் இல்லை-எதிரியும் இல்லை என்றெல்லாம் பேசுவார்கள். இனியேனும், உண்மையை அறிந்து தெளிவார்களா பார்ப்போம்!

வேதபிரகாஷ்

14-08-2011


[3] பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010,23:55 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13883

[4] பி. ராமமூர்த்தி, “ஆரிய மாயையா, திராவிட மாயையா” – விடுதலைப் போரும், திராவிட இயக்கமும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1983.

[5] குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம்!, தமிழக ஆய்வரண், பெங்களூர், 1994.

திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

செப்ரெம்பர் 6, 2010

திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

தாலி-மாலை எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைக்கும் கருணாநிதி: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்த திருமணத்தை முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி மணமக்களுக்கு மாலையையும், மங்கல நாணையம் எடுத்துக்கொடுத்து[1] நடத்தி வைத்தார்[2]. இப்படி செய்திகள் வந்துள்ளன. திராவிடத் திருமணத்தில், எங்கு தாலி வந்தது[3] என்று எந்த பகுத்தறிவு ஜீவியும் கேட்கவில்லை[4]. அந்த அடிமைச்சின்னத்தை ஏன், இந்த புரோகிதர் எடுத்துத் தரவேண்டும்? சரி, ஏன் ஒரு ஆண் எடுத்துத் தரவேண்டும், ஒரு பெண் எடுத்துத் தரலாமே? பகுத்தறிவு பதில் சொல்வதில்லை போலும்!

திருமண விழாக்களில் விளக்க உரை தேவையானால், அது எப்போது என்பது எனக்கும், வீரமணிக்கும் நன்றாகத் தெரியும்[5]: “திருமண விழாவில் அனைவரிடத்திலும் உள்ள உரிமை காரணமாக கவிஞர் வைரமுத்து நன்றி உரை என்ற பெயரில் மணமக்களுக்கான வாழ்த்துரையுடன், விளக்க உரையும் இங்கு ஆற்றியுள்ளார். ………. இதுபோன்ற திருமண விழாக்களில் விளக்க உரை தேவை. ஆனால், அது எப்போது என்பது எனக்கும், திராவிட கட்சித் தலைவர் வீரமணிக்கும் நன்றாகத் தெரியும். எனவே, தேவைப்படும்போது மட்டுமே நீண்ட நேரம் பேச வேண்டும்”, என்றார் முதல்வர் கருணாநிதி. ஆக, திராவிட திருமணத்தில் இவர்கள் இருவரும்தான் விற்ப்பன்னர்கள் என்று சொல்லிக்கொள்கிறர் போலும்!

திராவிடத்தில் இப்படி பலதார மணம் புரிந்த ஆண்கள்-பெண்கள் மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று வரலாமா? அதற்கு ஏதாவது யோக்கியதை, அந்தஸ்து முதலியவை இருக்கின்றனவா?

புரோகிதரின் மகன் இன்னொரு புரோகிதர் மு.. ஸ்டாலின் சாட்சி சொல்கிறார்: தமிழகத்தில் 1960-ம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. ஆனால், 1967ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அப்போதைய முதல்வர் அண்ணா பெற்றுத் தந்தார். அந்த வகையில் இப்போது நடைபெற்றிருக்கும் கபிலன் – ரம்யா தம்பதியினரின் சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும். தமிழகத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதுபோல், நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை தமிழக முதல்வர் கருணாநிதி பெற்றுத் தருவார்.

ஸ்டாலின் போட்டு உடைத்த உண்மை: “………..அண்ணா பெற்றுத் தந்தார். …………….நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை கருணாநிதி பெற்றுத் தருவார்”, என்று ஸ்டாலின் சொல்லும் போது, மற்ற உண்மைகளையும் சொல்லவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[6]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[7] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர்..

மாப்பிள்ளை, மணப்பெண் எதற்காக இப்படி பட்டு வேஷ்டி, சட்டை, புடவை-ஜாக்கெட் என்று வரவேண்டும்? இப்பொழுது, மணத்தில் இத்தகைய முடநாற்றம்[8]! இதெல்லாம், தமிழனின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியமா? பிறகு எதற்கு இதே தமிழன் நடத்திவைக்கும் கல்யாணங்களில் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு வருகிறர்கள்? பட்டுப்புடவை, பூ, நகைகள் சகிதம் வருகிறார்கள்? இதென்ன பார்ப்பான்கள் கலாச்சாரமா, இல்லை சூத்திரன்கள் கலாச்சாரமா? தட்டுகளில், தாம்பாளங்களில் தேங்காய், பழம், பூ, குங்குமம், மஞ்சள்………..இவையெல்லாம் எதற்கு? ஒரு நண்பர், எனக்கு இப்படி கேட்டுள்ளார்[9]:

சங்க காலத்தில், பெண்கள் தழையுடைத்தான் அணிந்து கொண்டார்களாம். ரவிக்கையெல்லாம் போட்டார்களா என்று தெரியவில்லை. 

ஆகவே அத்தகைய முறையையும் கையாலலாம்.

சங்க இலக்கியத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற எண்ணம் இருந்ததே இல்லை. தலைவன் எப்பொழுதும், மற்ற பெண்டிருடன் காமத்தில் ஈடுபட்டிருப்பான். தலைவி அவன் வருவானா என்று ஏங்கிக் கொண்டிருப்பான்.

இல்லை பரத்தையருடன் இருப்பான். ஆக, தமிழரிடத்தில் காமம்தான் மேலோங்கி இருந்தது போலும்.

ஊடல், கூடல் என்ற நிலையில் அகம் மேலோங்கி நின்ற நிலையில், பிறகுதான் புறம் வருகின்றது.

அந்நிலையில் எங்கு இருந்தது சுயமரியாதை?

கருணாநிதி விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து, ஆசிவாதம் செய்து,……………மணமக்கள் காலில் வீழ்ந்து…………………………..இப்படி திராவிட புரோகிதம் வளர்கிறது[10].

  • இந்து கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றை தூஷிக்கும் இந்த மானங்கெட்ட கூட்டம், எதற்கு அதே சின்னங்களை, சடங்குகளை பின்பற்றி போலி வேடம் போட வேண்டும்?
  • என்ன நெற்றியில் காயம் பட்டிருக்கா என்று நக்கலாக கேட்ட கருணாநிதியின் காலில் ஏன் குங்குமம் இட்டுக் கொண்டு ஒரு தமிழச்சி விழவேண்டும்?
  • தாலியைக் கழற்றி, மணமுறிவு விழா நடத்தும் அயோக்கியர்கள் முன்னிலையில் ஏன் தாலிகாட்டிக் கொள்ளவேண்டும்?
  • எதற்கு அந்த பாட்டுப்புடவை, தேங்காய் …………………………………எல்லாம்?
  • தூஷிக்கும் அந்த ஆள் ஆசிர்வதிக்கமுடியுமா?
  • ஒரே மனத்தில் எப்படி அத்தகைய நல்ல-கெட்ட-சிந்தனைகள் காழ்ப்புகள் வரும்?
  • நாத்திகர்களுக்கு எதற்கு ஆத்திக சடங்குகள், சம்பிரதாயங்கள்?

[1] http://www.maalaisudar.com/newsindex.php?id=35276%20&%20section=19

 

[2] http://thatstamil.oneindia.in/movies/news/2010/09/5-kapilan-vairamuthu-marriage-karunanidhi-rajini.html

[3] வேதபிரகாஷ், தமிழர் கல்யாணம்: தாலி இருந்ததா?, http://dravidianatheism.wordpress.com/2010/02/27/தமிழர்-கல்யாணம்-தாலி-இரு/

[4] வேதபிரகாஷ், திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!,

http://dravidianatheism2.wordpress.com/2010/02/02/திராவிட-புரோகிதர்கள்-நடத/

[5] தினமலர், வைரமுத்து வெளிப்படையானவர் : முதல்வர் பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2 010 ; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 06, 2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=78433

[6] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[7] வேதபிரகாஷ், பகுத்தறிவு-தீவிரவாதம் திராவிட புரோகிதர்களின் ஆண்-பெண் இணைப்புகள்!,

https://rationalisterrorism.wordpress.com/2010/01/29/பகுத்தறிவு-தீவிரவாதம்/

[8] மன்னிக்கவும், இதெல்லாம் திருவாளர் வீரமணியின் விடுதலையில், உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகள்! ஆகவே, உபயம் – வீரமணி

[9] வேதபிரகாஷ், சுயமரியாதை திருமணத்தில் கருப்பு ஆடைகளை ஏன் அணியக்கூடாது: திராவிட புரோகிதர்கள் விளக்குவார்களா?, http://dravidianatheism.wordpress.com/2010/07/17/சுயமரியாதை-திருமணத்தில்/

[10] வேதபிரகாஷ், நவீன திராவிட புரோகிதர்கள், http://dravidianatheism.wordpress.com/2010/05/24/திராவிட-புரோகிதர்கள /