பூஜாரி வேலைக்கு பெரியார் சிலைக்கு மாலை போடுவது மாதிரி, நிர்வாண பூஜை செய்தால் “டீன்” பதவி கிடைக்குமா?
நிர்வாண பூஜைக்கு மறுத்த மனைவியை அடித்த மருத்துவ கணவர்: இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தன்னை அடித்து உதைத்ததால் காயம் அடைந்ததாக கூறி கார்த்திகா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது[1]. தன் கணவர் நிர்வாண பூஜையில் ஈடுபட்டதை, கார்த்திகா மொபைலில் படம் எடுத்து வெளியிட்டார். அதாவது, கணவரது நடவடிக்கையை அர்த்த ராத்திரியிலும் விழித்துக் கொண்டு நன்றாகவே கவனித்துள்ளார் என்று தெரிகிறது. நிர்வாண பூஜை குறித்து கார்த்திகா கூறுகையில், ”என் கணவர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரியில், பிசியாலஜி துறை தலைவராக பணியாற்றி வருகிறார். ‘டீன்’ பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அடிக்கடி இப்படி நிர்வாண பூஜையில் ஈடுபடுகிறார்[2]. இது மூட நம்பிக்கை என்று எனது கணவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை[3]. பூஜை நடத்துவதில் அவர் குறியாக உள்ளார். இந்த பூஜையை தட்டிக் கேட்ட என்னை அவர் தாக்கி விட்டார்,” என்றார்[4]. டாக்டரின் நிர்வாண படம் ஓமலுார், தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[5]. நிர்வாண பூஜை குறித்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் செல்வராஜிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”நான் வக்கீலை சந்திக்க சென்று கொண்டிருக்கிறேன். பின் பேசுகிறேன்,” எனக்கூறி, தொடர்பை துண்டித்தார்[6].
நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக முடியுமா?: மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக, தமிழகத்தில் என்ன வேண்டும் என்ற சந்தேகம் வந்துள்ளது போலும். பல்கலைக் கழக வேந்தர் ஆக வேண்டுமானால், கோடி அல்லது லட்சங்கள் வேண்டும் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துகுள்ளன. தமிழகத்தில் “டாக்டர்” ஆவது சுலபமான செயலாக உள்ளது, ஆனால், “டீனாக” வேண்டும் என்றால், பற்பல வழிகளைப் பின்பற்ற வேண்டும் போலிருக்கிறது. பூஜாரியாக வேண்டும் என்று பெரியார் சிலைக்கு மாலைப் போட்டும் காலக் கட்டமாக உள்ளது. சாத்திரம் படித்தவர்களே பட்டை-கொட்டைகளுடன் அவ்வாறு மாலை போட்டுள்ளன. நானும் நான்கே மாதத்தில் எல்லாம் கரைத்துக் குடித்து விட்டேன், எனக்கும் வேலை கொடு என்று இப்பொழுதெல்லாம் கிளம்பி விடுகிறார்கள். “டாக்டர்” பட்டம் வாங்குவதும் அவ்வாறே உள்ளது[7]. போலி டாக்டர்களை கைது செய்யும் படலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்நிலையில் உண்மையான டாக்டர், நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக முடியும் என்ற எண்ணத்தை எப்படி கொண்டார் என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, மனையுடன் சேர்ந்து நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று டாக்டருக்கு “பிரிஷ்கிரிப்ஸன்” யார் கொடுத்தது என்று தெரியவில்லை. ஒருவேளை, பெரியார் சிலைக்கு மாலை போட்டால் வேலை கிடைக்கும் என்று நம்பிய அக்கூட்டத்தவர், யாராவது இவருக்கு சொல்லியிருப்பார்களா?
தமிழகத்தில் படித்தவர்கள் இவ்வாறு முரண்பாடாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பதனை அறியவேண்டும்: கடந்த 60-100 ஆண்டுகளாக திராவிடத்துவம் போர்வையில், இந்துமதத்தினரின் நம்பிக்கைகள்-சடங்குகள்-கிரியைகள் முதலியவை கேலிப்படுத்தப்பட்டு, அவதூறாக பேசப்பட்டு, தூஷிக்கப்பட்டுள்ளன. “பார்ப்பன எதிர்ப்பு” என்ற ரீதியில் இந்துமத எதிர்ப்பை செய்து வந்தனர். ஆனால், அச்சித்தாந்திகள் சொல்லியதைப் போல, எந்த சமூக மேன்பாடும் தமிழகத்தில் ஏற்பட்டு விடவில்லை, மாறாக, சமூக சீரழிவுகள் தாம் அதிகமாக நடந்துள்ளன, நடந்து வருகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, தமிழகம் தாழ்ந்து வருவதை அறிவது மட்டுமல்லாது, அதற்கு காரணமே இவர்கள் தாம் என்றும் தெரிந்து கொண்டு வருகிறார்கள். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வடநாட்டில் இந்தி தெரிந்தவர்களுக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை” என்று விதண்டாவாதம் பேசினர், ஆனால், இன்றோ தமிழகத்தில் இந்தி பேசுபவர்கள் வந்து கடின உழைப்பு செய்ய வந்து விட்டனர். நாத்திகம், பகுத்தறிவு பேசியவர்கள் சோம்பேறிகளாகி விட்டனர். கற்பனை-விரோதிகளை உருவாக்கி, அவர்கள் மற்றும் மற்றவர்கள் மீது பழிபோட்டு, பொய்களை சொல்லி வந்ததும் தெரிந்து விட்டது.
1960 முதல் 2016 வரை ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்கள் திராவிடத்துவ–நாத்திகத்தை நீர்த்துவிட்டன: மேலும், இயற்கை சீற்றங்கள், அழிவுகள் முதலியனவும் அதிகமாகியுள்ளன. இவை படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரன் என்று எல்லோரையும் பாதித்துள்ளன. உயிர், பொருள் என்று எல்லாவற்றையும் இழந்துள்ளனர். ஆனால், நடந்து வந்த-வரும் திராவிடத்துவ-நாத்திக-பகுத்தறிவு ஆட்சியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதாவது, “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக்கற்பித்தவன் முட்டாள், மடையன்” என்றெல்லாம் சொல்லியவர்களால், இவற்றையெல்லாம் ஒன்று தடுக்க முடியவில்லை. விஞ்ஞானம் பேசியவர்களாலும் முடியவில்லை. அதற்கும் மேலாக, இவர்கள் தாம் அதற்கு காரணம் என்று தெரிந்து கொண்டனர். அதாவது, புவியின் தன்மையினை பாதித்து, ஊழலில் திளைத்து, மழைநீர்-வடிகால் போக்குவரத்தை செய்ய முடியாமல் தடுத்து, மக்களை வாட்டியதில் உள்ல பங்கை நன்றாகவே புரிந்து கொண்டனர்.
கோவில், கோவில் இருப்பிடம், சுற்றமைப்பு இவற்றை பாதித்தனால் பாதிப்ப்பு ஏறட்டுள்ளது என்பதனை அறிந்து கொண்டனர்: ஆனால், ஏரி-குளங்கள் மறையாமல் இருந்திருந்தால், இப்பேரிடர்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்று புரிந்து கொண்டு விட்டார்கள். அதாவது, கோவில்கள் இருக்கும்வகையில் குளம், ஏரி முதலியவை சூழ இருந்திருந்தால், தப்பித்துக் கொண்டிருக்கலாம். அப்படியென்றால், கடவுளை மறுத்து, கோவில் சொத்துகளைக் கொள்ளையெடித்து, குளங்களை தூர்த்து, ஏரிகளை வளைத்துப் போட்டு, எல்லாவற்றையும் நாசமாக்கியது யார் என்று பார்த்தால், திராவிடத்துவ அரசியல்வாதிகள் தாம்[8]. கருப்பு-சிவப்பு நிறங்களின் அமைப்பு மாறினாலும், “திராவிட” சொல்லுக்கு முன்னும்-பின்பும் எதை சேர்த்து புது கட்சி வந்தாலும், ஆட்கள் மாறாமல் தான் இருக்கிறார்கள். கடவுள் பயம் மட்டுமல்லாது, எந்த பயமும் இல்லாமல் போய், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னை யாரும் செய்யமுடியாது, என்ற நிலையில் இறங்கி விட்டார்கள்.
கோவில் மட்டுமல்ல, சமூகமும் சீரழிந்தது: கோவில் பகிஷ்காரம் ஏன் என்று திகவினர் புத்தகங்களை வெளியிட்டனர். சுயமரியாதை-சீர்திருத்த-பகுத்தறிவு திருமணங்கள் சட்டரீதியில் செல்லாமல் போய், மரியாதை போனபோது, இந்தி திருமண சட்டத்தில் நுழைந்து மரியாதை பெற்றன. தாலியறுப்பு போராட்டங்களினால், பெண்களின் மனங்கள் புண்பட்டன[9]. இதனால், கொலை-கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புகள், அதிகமாகின. திருமணங்கள் முறிந்தன, கணவன்-மனைவியர் பிரிந்தனர், குடும்பங்கள் சிதறுண்டனர்; சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் பரிதவித்தனர்; காப்பர்-கேட்பர்-பேணி காப்போர் என்று யாரும் இல்லாத நிலையில், திசை மாறி குற்றவாளிகளாகவும் மாறினர். ஆனால், இதகைய சீரழிவுகளை திராவிட சித்தாந்தம், நாத்திக-பகுத்தறிவு முதலிய விதண்டாவாதங்கள் ஆதரித்தன. இதனால் தான் முரண்பாடுகள் பெருகி, மக்களின் நம்பிக்கைக்கள் தேட ஆரம்பித்து விட்டன.
போலி மருத்துவர்கள் போன்று போலி ஜோதிடர்கள் முதலியவற்றை உருவக்கியது திராவிட அரசாட்சி மற்றும் கொள்கைகள் தாம்: மக்கள் அமைதி தேடி அலையும் நேரத்தில் தான், மற்றவர்கள் அமைதியாக இருக்கும் நிலையை கவனிக்க ஆரம்பித்தனர். கடந்த 60 ஆண்டுகளாக நாத்திகக் குடும்பங்கள் சிதறியுள்ள நேரத்தில், ஆத்திகக் குடும்பங்கள் மாறாமல் இருக்கின்றனர் மற்றும் மேலோங்கியும் உள்ளனர் என்பதனை அறிந்து கொண்டனர். இவர்கள் முன்னமே தங்களது தாய், மனைவி, மகள், சகோதரி என்று அவர்களை வைத்து சாமி மும்பிட வைப்பது, படையல் வைப்பது, கோவில்களுக்குச் சென்று பூஜைகள் செய்வது, யாகங்கள் செய்வது என்றெல்லாம் செய்து வந்தனர். இப்பொழுது, கொஞ்சம் வெளிப்படையாக செய்ய ஆரம்பித்தனர். அதாவது, புகைப்படம், டிவி முதலிய சாதனங்கள் மூலம், இவர்களது போலித்தனங்கள் வெளிவந்து கொண்டிருப்பதினால், இனிமேல் மறைப்பதில் பிரயோஜனம் இல்லை என்று கொஞ்சம் வெளியில் வந்து செய்ய ஆரம்பித்து வுட்டனர். “நானும் இந்து தான்” என்று கூறிக் கொள்ளும் அளவுக்கு தைரியம் வந்துள்ளது.
.
முறையற்ற நிர்வாண பூஜைகள்: இப்படி ஜோதிடம், பூஜை, பரிகாரம், படையல் என்று இவர்களும் செய்ய ஆரம்பித்த போது, அவர்கள் ரகசியமாக செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அப்பொழுது, அவர்களது அடியாட்கள் தேடியலைந்து, யாரையாவது பிடித்துக் கொண்டு வந்தன. அந்நிலையில், அரைகுறைகள் நுழைந்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றன, பார்க்கின்றன. இதனால், பூஜை-புனஸ்காரம், கிரிய-சடங்கு போன்றவற்றில் அத்தகைய தெறிகெட்டவர்கள் நுழைந்துள்ளனர். இதனால் தான் மேன்மேலும் குழப்பங்கள் நீடிக்கின்றன. ஒழுங்காக பக்தியை வளர்த்துக் கொண்டு அமைதியாக செய்ய வேண்டியவற்றை, குறுக்கு வழிகளில் சென்று, மந்திரம்-தந்திரம்-யந்திரம் போன்ற வழிகளில் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்து விட்டது. அந்நிலயில் தான் இதைப் போன்ற நிர்வாண பூஜை போன்ற சடங்குகளை சிலர் பரிந்துரைக்க, குறுக்கு வழியில், சீக்கிரம் விரும்பியதைப் பெற்று விடலாம், என்று சபலம் கொண்டவர்கள் மற்றும் பேராசைக் கொண்டவர்கள் அவற்றில் நுழைகின்றனர்.
© வேதபிரகாஷ்
13-02-12016
[1] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=160581
[2] http://www.maalaimalar.com/2016/02/12161725/Why-Dharmapuri-Medical-College.html
[3] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=88036
[4] மாலைமலர், தர்மபுரி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை நடத்துவது ஏன்?: மனைவி பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2016. 4:17 PM IST.
[5] தமிழ்முரசு, முதல்வராக வேண்டும் என்பதற்காக நிர்வாண பூஜை செய்த பேராசிரியர் மனைவியே புகைப்படம் வெளியிட்டதால் பரபரப்பு, பெப்ரவரி 12, 2016.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1455606
[7] தமிழகத்தைப் பொறுத்த வரையில் “டாக்டர்” மோகம் 1970களிலிருந்து அதிகமாக உள்ளது என்பதனை ஞாபகப்படுத்திக் கொள்லவேண்டும். அதிலும் எம்.பி.பி.எஸ் டாக்டர்களை விட, “ஹானரெரி” டாக்டர் பட்டங்கள் தமிழக பல்கலைக்கழகங்கள் வாரி, அரசியல்வாதிகளுக்குக் கொடுத்தன. இல்லை, விலை கொடுத்து வாங்கவும் செய்தனர்.
[8] “Ecological Imbalance” ஐ உருவாக்கி, சென்னையை சீரழித்தவர்கள் இவர்கள் தாம் என்று மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர்.
[9] திராவிடப் புரோகிதர்கள் திருமணங்களை செய்வித்து, தாலிகளையும் அறுக்க ஆரம்பித்தனர், அதாவது “திருமண முறிவு விழா”க்களையும் சந்தோஷமாக நடத்தினர். ஆனால், பெண்கள் வருத்தப்படத்தான் செய்தனர்.
நிர்வாண பூஜைக்கு மறுத்த மனைவியை அடித்த மருத்துவ கணவர்: இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தன்னை அடித்து உதைத்ததால் காயம் அடைந்ததாக கூறி கார்த்திகா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது[1]. தன் கணவர் நிர்வாண பூஜையில் ஈடுபட்டதை, கார்த்திகா மொபைலில் படம் எடுத்து வெளியிட்டார். அதாவது, கணவரது நடவடிக்கையை அர்த்த ராத்திரியிலும் விழித்துக் கொண்டு நன்றாகவே கவனித்துள்ளார் என்று தெரிகிறது. நிர்வாண பூஜை குறித்து கார்த்திகா கூறுகையில், ”என் கணவர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரியில், பிசியாலஜி துறை தலைவராக பணியாற்றி வருகிறார். ‘டீன்’ பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அடிக்கடி இப்படி நிர்வாண பூஜையில் ஈடுபடுகிறார்[2]. இது மூட நம்பிக்கை என்று எனது கணவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை[3]. பூஜை நடத்துவதில் அவர் குறியாக உள்ளார். இந்த பூஜையை தட்டிக் கேட்ட என்னை அவர் தாக்கி விட்டார்,” என்றார்[4]. டாக்டரின் நிர்வாண படம் ஓமலுார், தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[5]. நிர்வாண பூஜை குறித்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் செல்வராஜிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”நான் வக்கீலை சந்திக்க சென்று கொண்டிருக்கிறேன். பின் பேசுகிறேன்,” எனக்கூறி, தொடர்பை துண்டித்தார்[6].
நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக முடியுமா?: மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக, தமிழகத்தில் என்ன வேண்டும் என்ற சந்தேகம் வந்துள்ளது போலும். பல்கலைக் கழக வேந்தர் ஆக வேண்டுமானால், கோடி அல்லது லட்சங்கள் வேண்டும் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துகுள்ளன. தமிழகத்தில் “டாக்டர்” ஆவது சுலபமான செயலாக உள்ளது, ஆனால், “டீனாக” வேண்டும் என்றால், பற்பல வழிகளைப் பின்பற்ற வேண்டும் போலிருக்கிறது. பூஜாரியாக வேண்டும் என்று பெரியார் சிலைக்கு மாலைப் போட்டும் காலக் கட்டமாக உள்ளது. சாத்திரம் படித்தவர்களே பட்டை-கொட்டைகளுடன் அவ்வாறு மாலை போட்டுள்ளன. நானும் நான்கே மாதத்தில் எல்லாம் கரைத்துக் குடித்து விட்டேன், எனக்கும் வேலை கொடு என்று இப்பொழுதெல்லாம் கிளம்பி விடுகிறார்கள். “டாக்டர்” பட்டம் வாங்குவதும் அவ்வாறே உள்ளது[7]. போலி டாக்டர்களை கைது செய்யும் படலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்நிலையில் உண்மையான டாக்டர், நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக முடியும் என்ற எண்ணத்தை எப்படி கொண்டார் என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, மனையுடன் சேர்ந்து நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று டாக்டருக்கு “பிரிஷ்கிரிப்ஸன்” யார் கொடுத்தது என்று தெரியவில்லை. ஒருவேளை, பெரியார் சிலைக்கு மாலை போட்டால் வேலை கிடைக்கும் என்று நம்பிய அக்கூட்டத்தவர், யாராவது இவருக்கு சொல்லியிருப்பார்களா?
தமிழகத்தில் படித்தவர்கள் இவ்வாறு முரண்பாடாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பதனை அறியவேண்டும்: கடந்த 60-100 ஆண்டுகளாக திராவிடத்துவம் போர்வையில், இந்துமதத்தினரின் நம்பிக்கைகள்-சடங்குகள்-கிரியைகள் முதலியவை கேலிப்படுத்தப்பட்டு, அவதூறாக பேசப்பட்டு, தூஷிக்கப்பட்டுள்ளன. “பார்ப்பன எதிர்ப்பு” என்ற ரீதியில் இந்துமத எதிர்ப்பை செய்து வந்தனர். ஆனால், அச்சித்தாந்திகள் சொல்லியதைப் போல, எந்த சமூக மேன்பாடும் தமிழகத்தில் ஏற்பட்டு விடவில்லை, மாறாக, சமூக சீரழிவுகள் தாம் அதிகமாக நடந்துள்ளன, நடந்து வருகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, தமிழகம் தாழ்ந்து வருவதை அறிவது மட்டுமல்லாது, அதற்கு காரணமே இவர்கள் தாம் என்றும் தெரிந்து கொண்டு வருகிறார்கள். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வடநாட்டில் இந்தி தெரிந்தவர்களுக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை” என்று விதண்டாவாதம் பேசினர், ஆனால், இன்றோ தமிழகத்தில் இந்தி பேசுபவர்கள் வந்து கடின உழைப்பு செய்ய வந்து விட்டனர். நாத்திகம், பகுத்தறிவு பேசியவர்கள் சோம்பேறிகளாகி விட்டனர். கற்பனை-விரோதிகளை உருவாக்கி, அவர்கள் மற்றும் மற்றவர்கள் மீது பழிபோட்டு, பொய்களை சொல்லி வந்ததும் தெரிந்து விட்டது.
1960 முதல் 2016 வரை ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்கள் திராவிடத்துவ–நாத்திகத்தை நீர்த்துவிட்டன: மேலும், இயற்கை சீற்றங்கள், அழிவுகள் முதலியனவும் அதிகமாகியுள்ளன. இவை படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரன் என்று எல்லோரையும் பாதித்துள்ளன. உயிர், பொருள் என்று எல்லாவற்றையும் இழந்துள்ளனர். ஆனால், நடந்து வந்த-வரும் திராவிடத்துவ-நாத்திக-பகுத்தறிவு ஆட்சியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதாவது, “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக்கற்பித்தவன் முட்டாள், மடையன்” என்றெல்லாம் சொல்லியவர்களால், இவற்றையெல்லாம் ஒன்று தடுக்க முடியவில்லை. விஞ்ஞானம் பேசியவர்களாலும் முடியவில்லை. அதற்கும் மேலாக, இவர்கள் தாம் அதற்கு காரணம் என்று தெரிந்து கொண்டனர். அதாவது, புவியின் தன்மையினை பாதித்து, ஊழலில் திளைத்து, மழைநீர்-வடிகால் போக்குவரத்தை செய்ய முடியாமல் தடுத்து, மக்களை வாட்டியதில் உள்ல பங்கை நன்றாகவே புரிந்து கொண்டனர்.
கோவில், கோவில் இருப்பிடம், சுற்றமைப்பு இவற்றை பாதித்தனால் பாதிப்ப்பு ஏறட்டுள்ளது என்பதனை அறிந்து கொண்டனர்: ஆனால், ஏரி-குளங்கள் மறையாமல் இருந்திருந்தால், இப்பேரிடர்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்று புரிந்து கொண்டு விட்டார்கள். அதாவது, கோவில்கள் இருக்கும்வகையில் குளம், ஏரி முதலியவை சூழ இருந்திருந்தால், தப்பித்துக் கொண்டிருக்கலாம். அப்படியென்றால், கடவுளை மறுத்து, கோவில் சொத்துகளைக் கொள்ளையெடித்து, குளங்களை தூர்த்து, ஏரிகளை வளைத்துப் போட்டு, எல்லாவற்றையும் நாசமாக்கியது யார் என்று பார்த்தால், திராவிடத்துவ அரசியல்வாதிகள் தாம்[8]. கருப்பு-சிவப்பு நிறங்களின் அமைப்பு மாறினாலும், “திராவிட” சொல்லுக்கு முன்னும்-பின்பும் எதை சேர்த்து புது கட்சி வந்தாலும், ஆட்கள் மாறாமல் தான் இருக்கிறார்கள். கடவுள் பயம் மட்டுமல்லாது, எந்த பயமும் இல்லாமல் போய், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னை யாரும் செய்யமுடியாது, என்ற நிலையில் இறங்கி விட்டார்கள்.
கோவில் மட்டுமல்ல, சமூகமும் சீரழிந்தது: கோவில் பகிஷ்காரம் ஏன் என்று திகவினர் புத்தகங்களை வெளியிட்டனர். சுயமரியாதை-சீர்திருத்த-பகுத்தறிவு திருமணங்கள் சட்டரீதியில் செல்லாமல் போய், மரியாதை போனபோது, இந்தி திருமண சட்டத்தில் நுழைந்து மரியாதை பெற்றன. தாலியறுப்பு போராட்டங்களினால், பெண்களின் மனங்கள் புண்பட்டன[9]. இதனால், கொலை-கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புகள், அதிகமாகின. திருமணங்கள் முறிந்தன, கணவன்-மனைவியர் பிரிந்தனர், குடும்பங்கள் சிதறுண்டனர்; சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் பரிதவித்தனர்; காப்பர்-கேட்பர்-பேணி காப்போர் என்று யாரும் இல்லாத நிலையில், திசை மாறி குற்றவாளிகளாகவும் மாறினர். ஆனால், இதகைய சீரழிவுகளை திராவிட சித்தாந்தம், நாத்திக-பகுத்தறிவு முதலிய விதண்டாவாதங்கள் ஆதரித்தன. இதனால் தான் முரண்பாடுகள் பெருகி, மக்களின் நம்பிக்கைக்கள் தேட ஆரம்பித்து விட்டன.
போலி மருத்துவர்கள் போன்று போலி ஜோதிடர்கள் முதலியவற்றை உருவக்கியது திராவிட அரசாட்சி மற்றும் கொள்கைகள் தாம்: மக்கள் அமைதி தேடி அலையும் நேரத்தில் தான், மற்றவர்கள் அமைதியாக இருக்கும் நிலையை கவனிக்க ஆரம்பித்தனர். கடந்த 60 ஆண்டுகளாக நாத்திகக் குடும்பங்கள் சிதறியுள்ள நேரத்தில், ஆத்திகக் குடும்பங்கள் மாறாமல் இருக்கின்றனர் மற்றும் மேலோங்கியும் உள்ளனர் என்பதனை அறிந்து கொண்டனர். இவர்கள் முன்னமே தங்களது தாய், மனைவி, மகள், சகோதரி என்று அவர்களை வைத்து சாமி மும்பிட வைப்பது, படையல் வைப்பது, கோவில்களுக்குச் சென்று பூஜைகள் செய்வது, யாகங்கள் செய்வது என்றெல்லாம் செய்து வந்தனர். இப்பொழுது, கொஞ்சம் வெளிப்படையாக செய்ய ஆரம்பித்தனர். அதாவது, புகைப்படம், டிவி முதலிய சாதனங்கள் மூலம், இவர்களது போலித்தனங்கள் வெளிவந்து கொண்டிருப்பதினால், இனிமேல் மறைப்பதில் பிரயோஜனம் இல்லை என்று கொஞ்சம் வெளியில் வந்து செய்ய ஆரம்பித்து வுட்டனர். “நானும் இந்து தான்” என்று கூறிக் கொள்ளும் அளவுக்கு தைரியம் வந்துள்ளது.
.
முறையற்ற நிர்வாண பூஜைகள்: இப்படி ஜோதிடம், பூஜை, பரிகாரம், படையல் என்று இவர்களும் செய்ய ஆரம்பித்த போது, அவர்கள் ரகசியமாக செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அப்பொழுது, அவர்களது அடியாட்கள் தேடியலைந்து, யாரையாவது பிடித்துக் கொண்டு வந்தன. அந்நிலையில், அரைகுறைகள் நுழைந்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றன, பார்க்கின்றன. இதனால், பூஜை-புனஸ்காரம், கிரிய-சடங்கு போன்றவற்றில் அத்தகைய தெறிகெட்டவர்கள் நுழைந்துள்ளனர். இதனால் தான் மேன்மேலும் குழப்பங்கள் நீடிக்கின்றன. ஒழுங்காக பக்தியை வளர்த்துக் கொண்டு அமைதியாக செய்ய வேண்டியவற்றை, குறுக்கு வழிகளில் சென்று, மந்திரம்-தந்திரம்-யந்திரம் போன்ற வழிகளில் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்து விட்டது. அந்நிலயில் தான் இதைப் போன்ற நிர்வாண பூஜை போன்ற சடங்குகளை சிலர் பரிந்துரைக்க, குறுக்கு வழியில், சீக்கிரம் விரும்பியதைப் பெற்று விடலாம், என்று சபலம் கொண்டவர்கள் மற்றும் பேராசைக் கொண்டவர்கள் அவற்றில் நுழைகின்றனர்.
© வேதபிரகாஷ்
13-02-12016
[1] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=160581
[2] http://www.maalaimalar.com/2016/02/12161725/Why-Dharmapuri-Medical-College.html
[3] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=88036
[4] மாலைமலர், தர்மபுரி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை நடத்துவது ஏன்?: மனைவி பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2016. 4:17 PM IST.
[5] தமிழ்முரசு, முதல்வராக வேண்டும் என்பதற்காக நிர்வாண பூஜை செய்த பேராசிரியர் மனைவியே புகைப்படம் வெளியிட்டதால் பரபரப்பு, பெப்ரவரி 12, 2016.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1455606
[7] தமிழகத்தைப் பொறுத்த வரையில் “டாக்டர்” மோகம் 1970களிலிருந்து அதிகமாக உள்ளது என்பதனை ஞாபகப்படுத்திக் கொள்லவேண்டும். அதிலும் எம்.பி.பி.எஸ் டாக்டர்களை விட, “ஹானரெரி” டாக்டர் பட்டங்கள் தமிழக பல்கலைக்கழகங்கள் வாரி, அரசியல்வாதிகளுக்குக் கொடுத்தன. இல்லை, விலை கொடுத்து வாங்கவும் செய்தனர்.
[8] “Ecological Imbalance” ஐ உருவாக்கி, சென்னையை சீரழித்தவர்கள் இவர்கள் தாம் என்று மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர்.
[9] திராவிடப் புரோகிதர்கள் திருமணங்களை செய்வித்து, தாலிகளையும் அறுக்க ஆரம்பித்தனர், அதாவது “திருமண முறிவு விழா”க்களையும் சந்தோஷமாக நடத்தினர். ஆனால், பெண்கள் வருத்தப்படத்தான் செய்தனர்.