Archive for the ‘மான்’ Category

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

திசெம்பர் 31, 2010

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

கேட்ட பணம் கொடுக்காததால் அவதூறு செய்திகள் பரப்பப்பட்டன: “மிகப்பெரிய அளவில் பணத்தொகை கேட்டு மிரட்டப்பட்டேன். அதற்கு நான்

சென்னை உயர்நீதி மன்றத்தில் அஃபிடேவிட் தாக்கல் செய்யப்பட்டபோதே, இது சொல்லப்பட்டது. சன்-குழுமம் என்றும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டது. அத்தகைய வீடியோ ஒலிப்பரப்பாமல் இருக்கப் பணம் கேட்டதாகவும், பேரம் பேசியதாகவும் சொல்லப் பட்டது.

மறுத்ததால் என் மீது அவதூறான செய்திகளை பரப்பினர், ” என, சாமியார் நித்யானந்தா பேசினார். திருவண்ணாமலையில், சாமியார் நித்யானந்தாவின் 34வது பிறந்த நாளை முன்னிட்டு நித்யானந்த தியான பீடம் சார்பில் சத் சங்கம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு ஆசி வழங்கி நித்யானந்தா பேசியதாவது[1]:

தமிழக முதல்வர் அய்யாவுக்கு நான் கூறிக்கொள்வது; “மிகப்பெரிய ஆன்மிகநிறுவனம் நித்யானந்த தியானபீடம். இதில், தமிழகத்தை சேர்ந்த 12 லட்சம் பேர்

அப்படி தாக்கப்பட்டது நித்யானந்தா விரோதம் என்பதா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா?.

பக்தர்களாக உள்ளனர். இவர்களின் வேதனைகளையும், குமுறல்களையும், புண்படுத்தப்பட்ட மத உணர்வுகளையும், பழிக்கப்படுவதோடு அல்லாமல் மீண்டும் மீண்டும் நாங்கள் தாக்கப்படுவதால், எங்கள் வாழ்வுரிமையை நாங்கள் எங்கு சென்று தான் மீட்டெடுப்போம். மொத்தம் 197 நாடுகளில் தியானபீடத்தின் சத்சங்க மையம், கோவில், வழிபாட்டு தலங்கள் உள்ளன. ஒன்பது மாதங்களில் 120 வழிபாட்டு தியான பீடங்கள் சமூக விரோதிகளால், அடித்து நொறுக்கப்பட்டன.

தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும் தாக்கப்படவில்லை: “தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும்

தமிழகத்தில் மட்டும் ஏன் தாக்கப் படவேண்டும்?  அப்படியென்றல், பெரும்பாலான கிருத்துவ நிறுவனங்கள் அடித்து நொறுக்கப் பட்டிருக்க வேண்டுமே? ஆனால், ஒன்றுமே நடக்கவில்லையே? மாறாக, இது மட்டும் நடக்கிறது என்றால், என்ன அர்த்தம்?

தாக்கப்படவில்லை. சில தமிழ்தொலைக்காட்சிகளும், சில தமிழ்பத்திரிகைகளும் திட்டமிட்டு எங்களை அழிப்பதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய பணத்தொகைக்காக மிரட்டப்பட்டேன். யார் தான் இதற்கு பதில் சொல்வது; யார் தான் முடிவு சொல்வது. யார் தான் முற்றுப்புள்ளி வைப்பது. நாங்களும் எங்கள் அகிம்சை கொள்கையிலிருந்து மாறமாட்டோம். இதை அகிம்மையினாலேயே எதிர்கொள்வோம். எங்களை தாக்குபவர்கள் தாங்களாகவே ஒழிந்து போவார்கள்.

கருணாநிதி ஆளும் மாநிலத்தில் பக்தர்கள் தாக்கப் படுகிறார்கள்: “நீங்கள் ஆளும் இந்த நாட்டில், வாழும் என் மக்களுக்கு, என் பக்தர்களுக்கு சாத்தியமில்லை என்பதனால், தமிழகத்தின் முதல்வராகிய உங்களுக்கு,

கருணாநிதியின் பெயரைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன என்றால் அதன் பின்னணி என்ன? இதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? அதனால்தான் பகலில் சாமி, இரவில் காமி என்றெல்லாம் கருணாநிதி நக்கல் அடித்தாரா?

உங்களின் பார்வைக்கு இந்த கோரிக்கையை நேரடியாக எடுத்து வந்து, உங்களிடம் கொடுத்து உடனடி நிவாரணத்துக்காக காத்திருக்க போகிறோம்.
உங்கள் பெயரை பயன்படுத்தி, எங்களை எல்லாம் தாக்குகின்ற, ஊடகங்கள் சொல்லுகின்ற தகவல்களை மட்டும் கேட்காமல், உளவுத்துறை மூலம் இந்த புள்ளி விவரங்களை சரிபார்த்து கொள்ளுமாறு உங்களை கேட்டு கொள்கின்றேன்.

பக்தர்களையும் மிரட்டி பணம் பறிக்கப் படுகிறது: “என் பக்தர்கள் பாதுகாப்போடு கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லமுடியவில்லை. எங்கள் காப்பு அணிவது என்பது, எங்கள் மத உரிமை; என் படம் பொறித்த டாலர்களை, காப்புகளை அணிந்து வர பள்ளி, கல்லூரிகள் தடை விதித்துள்ளன. இது மத உரிமை மீறிய செயல். என் பக்தர்கள் அமைதியை விரும்புபவர்கள்,

இப்படி யாருக்கும் தெரியாமல் ஒரு ஆணையை அரசு எப்படி வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி வெப்சைட்டில் இன்னும் ராஜரத்தினம் புகை படம் உள்ளது.

எங்கள் மத சின்னம். தியான பீடத்தின் கோரிக்கை கடிதத்தை கோடிக் கணக்கான பக்தர்கள் கண்ணீரோடு, சில லட்சக் கணக்கான மக்களின் ரத்தத்தோடும், உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். நான் சொல்ல முடியாத அளவிற்கு எங்களை சில நிறுவனங்கள், ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டுகின்றன. என் பக்தர்கள் எனக்கு தெரியாமல் மிரட்டப்பட்டு, மிகப்பெரிய பணமும் பறிக்கப்பட்டது”, இவ்வாறு அவர் பேசினார்.

ரத்தக் கையெழுத்துடன் கலைஞருக்கு நித்யானந்தா கடிதம்[2]: “அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. அவர்களை காக்கவே இக்கடிதத்தை எழுதுகிறேன். இதில் இறுதியில் என் ரத்தத்தால் ஆன கையெழுத்தும், கை நாட்டும் வைத்துள்ளேன்”, என்று நக்கீரனில் உள்ளது!


ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்!

ஜூலை 13, 2010

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்!

தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38052

இது பற்றி விரிவாக பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், தினமலரில் வந்த செய்தியை அப்படியே போட்டுவிட்டு,அடைப்புக்க்குறிகளில் மட்டும் என்னுடைய விமர்சனத்தைச் சிறியதாகக் கொடுத்திருந்தேன்.

இப்பொழுது, விவாதம் ஒன்றிற்கு மேற்பட்ட கோணங்களில் செல்வதால், இதனை மாற்றாமல் அப்படியே வைத்து, இன்னொரு பதிவை செய்ய விரும்புகிறேன்.

எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்: சென்னை: “எங்கெங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை, தமிழ் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது, அதனால், வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் பங்கேற்கும் விழாவில், எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்,” என, ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்த நாடக விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார். [உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டாம் என்று தமிழில் யோரோ சொல்லியிருக்கிறார்களே?]

ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், முதல்வர் கருணாநிதி கதை, வசனம், பாடல்கள் எழுதிய, “போர்வாளும் பூவிதழும்’ என்ற நாட்டிய நாடக விழா, சென்னையில் நேற்று நடந்தது. [ஜகத்ரெக்ஸகன் இப்படி ஜகஜாலக் கில்லாடியாக, எல்லாரையும் வைத்து சிண்டு முடித்து விடுகிறாரா அல்லது திட்டமிட்டே இப்படியொரு நாடகம் அரங்கேறுகிறதா, என்று கூடிய சீக்கிரத்தில் தெரிந்துவிடும்.]

கருணாநிதி-வேலுக்குடிகிருஷ்ணன்-2010

கருணாநிதி-வேலுக்குடிகிருஷ்ணன்-2010

விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் புதியவர்கள். இந்த மேடையில் தான் அவர்களை நேரில் பார்க்கிறேன். ஜெகத்ரட்சகன் மூலம், அவர்களுடைய தமிழை நாம் எல்லாரும் பருகும் வாய்ப்பை பெற்றோம். இத்தனை நாட்கள் இதைக் கேட்காமல் விட்டோமே என்ற எண்ணத்தை அவர்களின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பேச்சில் ஓரிரு வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவர்களின் தமிழ்ப் பற்று, எதை பற்றி சொன்னாலும், இறுதியில் முன் இருப்பது தமிழ்தான், தமிழர்தான் என்ற உணர்வு. அந்த உணர்வுதான் நம்மை இங்கே இணைத்துள்ளது”.

பத்மா.சுப்ரமணியம்.காட்சி.2010

பத்மா.சுப்ரமணியம்.காட்சி.2010

எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது: “அதற்காகத்தான் செம்மொழி மாநாடு நடத்தி முடித்துள்ளோம். எவ்வித பாகுபாடும் இன்றி, செம்மொழி மாநாட்டிற்கு அனைத்து சமயத்தவர்களையும், அனைத்து மதத்தவர்களயும், மாற்று கருத்து உடையவர்களையும், மற்ற கட்சியினரையும் அழைத்து விழா எடுத்துள்ளோம் [இப்படியெல்லாம் பொய் சொல்லுவதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதியேதான்]. கட்சி அடையாளம் இன்றி நடந்த அந்த விழாவில், நாம் தமிழர்கள் என்ற உணர்வுடையவர்கள் பங்கேற்றனர். அந்த உணர்வு இல்லாதவர்கள் மாநாட்டை புறக்கணித்தனர் [இதுதான் கொழுப்பு என்பது. அம்மாந்நாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று தடுக்கப் பட்டவர்கள், மறுக்கப் பட்டவர்கள், ஆய்வுக் கட்டுரைகள் கொடுத்தும் ஒதுக்கப் பட்டவர்கள் முதலியவர்கள் மவுனமாக இருப்பதே இந்த ஆள் தொந்தரவைத் தாங்க முடியாது என்பதால்தான்]. வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் பங்கேற்றுள்ள இந்த விழாவில், கருணாநிதி என்ன பேசுவார் என்ற எண்ணத்துடன் வெளியில் காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள். எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். [இந்துக்களை அவதூறு பேசியபோது, ஸ்ரீராமனை தூஷித்த போதும், அந்த பண்பாடு இல்லாமல் போனது ஏனோ?]

கருணாநிதி-நாட்டியம்-2010

கருணாநிதி-நாட்டியம்-2010

[திருப்பதி லட்டு கொடுத்தால்கூட சுவைத்து சாப்பிடும் ஆட்கள் உள்ளனர்]: விழாவிற்கு நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். ஆன்மிக பிரசாரகர்கள் வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் ஆகியோர் வைணவத் தமிழ் கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதை, முதல்வர் கருணாநிதி உட்பட அனைவரும் ரசித்து கேட்டனர். நாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் குழுவினர், இந்நாடகத்தை தொகுத்து, இசையமைத்து, நாட்டியம் ஆடினர். விழாவில், ஆழ்வார்கள் ஆய்வு மையத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தனர்.

கொஞ்சும்-குஷ்புவும்-தவிக்கும்-கருணாநிதியும்

கொஞ்சும்-குஷ்புவும்-தவிக்கும்-கருணாநிதியும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் இருக்கும் பண்பாடு ஏன் இப்பொழுதைய மனிதர்களை இப்படி வைத்திருக்கிறது? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் வாழ்ந்த எட்டு வரலாற்று சிறப்பு பெற்றவர்களை மையமாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கதைக்கு முதன்மை ஆதாரங்களாக, நற்கண்ணை, காவற்பெண்டு எனும் இரு பெண்பாற் புலவர்களின் பாடல்களும், சாத்தந்தை எனும் முதுபெரும் புலவரின் பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் அமைகின்றன. இந்த சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் இயற்றப்பட்டுள்ளது. இந்நாட்டிய நாடகம், ஏற்கனவே கோவை செம்மொழி மாநாட்டில் நடத்தப்பட்டது.

நித்துவிற்குப் பிறகு கல்கி பாட்டு ஆரம்பித்து விட்டது!

ஜூலை 7, 2010

நித்துவிற்குப் பிறகு கல்கி பாட்டு ஆரம்பித்து விட்டது!

http://www.viduthalai.periyar.org.in/20100707/news05.html

ஏற்கெனவே கோர்ட்டுகளில் வெளிவந்த செய்திகள், ஒரு தெலுங்கு டிவி செனல் ஒளிபரப்பிய கலப்படக் காட்சிகள்…………..முதலியவற்றை வைத்துக் கொண்டு முன்பே கதையளந்து கொண்டிருந்தனர்.

கல்கி ஆசிரமத்திலிருந்து பிரிந்து சென்ற சீடர்கள், ஆளுக்கு ஆள் இப்படி புகார்கள் கொடுப்பது, வழக்குகள் போடுவது என்று சாதாரணமாகி விட்டது.

எப்படி, கருணாநிதி எம்.ஜி.ஆரை, அவர் வெளியேறி கணக்குக் கேட்டபோது, , வசைபாடினாரோ, அதே ரீதியில்-தொணியில், இந்த சீடர்கள் பேசிவருகிறார்கள்.

கல்கியின் மகன், ஏற்கெனெவே.இந்த பிரச்சாரங்கள் நிறுத்தப்படவேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்.

அந்நிலையில், மறுபடியும், அரைத்த மாவையே அரைக்கும் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

வீரமணி, கோபால் முதலியோர்களுக்கு நித்யானந்தா, கல்கி……………….முதலியோர் அவ்வப்போது ஞாபகத்தில் வந்து கொண்டே இருப்பார்கள் போல இருக்கிறது. மற்றவர்கள் மறந்து விட்டாலும், இவர்கள் மறக்கமாட்டார்கள்.

பிற இதழிலிருந்து…இதுதான் கல்கி குடும்பம்!

கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றிப் பணம், பொன், பொருள், நிலம் எல்லாம் சம்பாதிக்கிறார். பக்தர்களுக்கு தீட்சை தந்து மோட்சம் தருவதாகச் சொல்லி, போதை ஊட்டி காம வக்கிரங்களை அரங்கேற்றுகிறார். கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஹவாலா மோசடி செய்து வருகிறார். இப்படிப்பட்ட பகீர் செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் கசிந்தபோதும், மனிதர் எதற்கும் சளைக்கவில்லை. நான்தான் விஷ்ணு-வின் 10_ஆவது அவதாரம் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார் கல்கி பகவான்!!

இந்த நிலையில், முன்பு கல்கி பகவானின் நண்பராக இருந்தவரும், போலி சாமியார்களுக்கு எதிரான அமைப்பின் தலைவருமான விஸ்வநாத் சுவாமி, கன்னட மீடியாக்களிடம் கல்கி பகவான் பற்றிக் காட்டமான சில தக-வல்களை வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்-தினார். பெங்களூருவில் இருந்த விஸ்வ-நாத் சுவாமியை சந்தித்தோம்.

கல்கி பகவான் என்று அழைக்-கப்-படும் விஜயகுமார், 1984_இல் என்னோடு ஆந்திர மாநிலம் குப்பத்தில் ஒரு நடு-நிலைப்பள்ளியில் சக ஆசிரியராக இருந்-தவர். போதிய வருமானம் இல்லாததால், அதை விட்டுவிட்டு, எல்.அய.சி. ஏஜென்ட் ஆனார். அப்போதே அவருக்குப் பணவெறி… முதலில் நான் சாமியின் வரம் பெற்றவன என்று மக்களிடம் காணிக்கையாகப் பணம் வசூலிக்கத் தொடங்கினார். அப்புறம் நான் விஷ்ணுவின் 10_ஆவது அவ-தார-மான கல்கி பகவான் என்று கூற ஆரம்பித்தார். யாரும் அதை நம்ப-வில்லை. அப்போது இவர், ஒரு புது டெக்னிக்கைக் கையாண்டார். அதாவது கிராமங்களில் 10_ம் வகுப்பு முடித்த 125 ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்ந்-தெடுத்து, அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி மசிய வைத்து, அனைவருக்கும் வெள்ளை உடுப்பு கொடுத்து, அக்கம்பக்கக் கிராமங்-களுக்கு அனுப்பி வைத்தார். விஜய-குமார் நாயுடுவின் மீது கல்கி பகவான் இறங்கி உள்ளார் என்று பிரசாரம் செயயவைத்தார். மக்கள் காணிக்கை கொடுக்க முன் வந்தனர். நாளடைவில இவரே சிலரை ரெடி பண்ணி, எனக்கு கேன்சர் குணம் ஆகாமல் இருந்தது… பகவான் தொட்டார், சரியாகிவிட்டது என்று மேடைகளில் சொல்ல வைத்தார்.

அதோடு, ஷில்பா ஷெட்டி, மனீஷா கொய்ராலா போன்ற நடிகைகளை, நான் பகவானிடம் வேண்டிக்கொண்ட பிறகுதான் பெரும் வாய்ப்புகள் வாச-லுக்கு தேடி வரத் தொடங்கின என்று லட்சக்கணக்கில் ரூபாய் செலவழித்துப் பேசவைத்து விளம்பரம் தேடினார். இதுதான் விஜயகுமார்… கல்கி பகவான் ஆன கதை! என்று ஒரு முன்னோட்-டம் கொடுத்தவர் தொடர்ந்தார்.

இவர், நான் உலகத்தையே தீட்சை அடையச் செய்கிறேன். தீட்சைக்கு மூன்று நிலைகள் உள்ளன என்று கூறி, முதல் நிலைக்கு 5,000 ரூபாயும் இரண்-டாம் நிலைக்கு 10,000 ரூபாயும் மூன்-றாம் நிலைக்கு 21,000 ரூபாய் என்று தன்னை நாடி வரும் ஒவ்வொருவரிட-மும் கறந்துவிடுகிறார். அதுவும் வெளி-நாட்டினர் சிக்கிவிட்டால், அவர்களது மொத்தச் சொத்துகளும் அம்போதான்!

கல்கி பகவான் ஆசிரமத்தில் நடக்கும் கஞ்சா, களியாட்டங்கள் பற்றி ஏற்கெனவே உங்கள் ஜூ.வி. உள்பட பல பத்திரிகைகளில் விவர-மாகச் செய்திகள் வந்தன. இந்தக் களி-யாட்டங்களை அரங்கேற்றவே, ஒரு ஸ்பெஷல் ஸ்டூடியோவை உருவாக்கி இருக்கிறார். இதன் உள்ளே 25 வயதுக்கும் குறைவான பெண்களை மட்டும் அழைத்து ஸ்பெஷல் தீட்சை தருவார். ஆந்திர மாநில சேனலில் வெளியான அதிர்ச்சிக் காட்சிகள் மிகக் குறைவுதான். ஆசிரமத்தில் நடப்-பவை முழுதாக இன்னும் வெளிவர-வில்லை.

இவருக்கு 90_களில் வெறும் 43,000 ரூபாய் மட்டுமே வருட வருமானம். ஆனால் இன்று 1,200 கோடி ரூபாய் சொத்து. ஆந்திராவில் மட்டும் 5,000 ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா என அத்தனை மாநிலங்களிலும் கோடிக் கணக்கில் சொத்துகள்… ஆசிரமங்கள். தனது வீட்டின் நீச்சல் குளத்துக்கு ஸ்பெயினில் இருந்து டைல்ஸ் வாங்கி வந்து பதித்து இருக்கிறார். ஒரு சந்நியாசிக்கு இதெல்லாம் எதற்கு? இவரது மகன் கிருஷ்ணாவுக்கு லாஸ்-ஏஞ்ஜல்ஸில் கம்பெனி… 33 வெளி-நாட்டுகார்கள், பெங்களூருவில் ஆயி-ரம் கோடியில் கட்டுமான பிசினஸ்… இவை எல்லாம் எப்படி வந்தன?

மக்களுடைய நிலங்களையும், பணத்தையும் பறித்துக்கொண்டு பகவான் பெயரில் உலா வருவதால், வரிச் சலுகை பெற்று, மும்பையில் உள்ள தனது ஆட்கள் மூலமாகக் கறுப்பு பணத்தை லாஸ்ஏஞ்ஜலீஸில் இருக்கும் மகனுக்கு அனுப்பி, அதை மாற்றிவிடுகிறார்.

அதோடு, இவரது அந்தரங்க உண்மைகள் எல்லாம் தெரிந்த மேனேஜர்களான பவன், விகாஷ் என்ற இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். அதெல்லாம் விபத்துகள் என்று கூறி போலீஸார் கேஸை முடித்ததும் இவருடைய தாராளம் காரணமாகத்தான்!.

நித்தியானந்தா விவகாரம் குறித்த விசாரணை நடத்துபவர்கள், கல்கி பகவானை மட்டும் ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றனர்? இவரை போலீஸ் செமத்தியாக விசாரித்தால் போதும்… ஆயிரம் நித்தியானந்தா கதைகள் வெளிவரும் என்று நிறுத்தியவர், கடைசியாக…

நான் அவருக்கு எதிரான உண்மை-களைச் சொல்வதால், பலமுறை என் மீது கொலை முயற்சிகள் நடந்தன. அவற்றில் இருந்து தப்பி சென்னை உயர் நீதி மன்றத்திலும், சைதாப்பேட்டை கீழ் நீதிமன்றத்திலும் அவர் மீது நில அபகரிப்பு, கொலை முயற்சி, ஹவாலா மோசடி ஆகிய வழக்குகளை நடத்தி வருகிறேன். எந்த நேரத்திலும் என் உயிர் போகலாம். ஆனாலும், கல்கி பகவானுக்குக் கடவுளாவது தண்டனை தர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்! என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சித்தூர், வரதபாளையத்தில் உள்ள கல்கி பகவான் தலைமை ஆசிரம செயலாளர் நமன் தாஸாவிடம் விளக்கம் கேட்-டோம். கல்கி பகவான் மீது விஸ்வநாத் சுவாமி மூன்று வழக்கு போட்டிருக்கிறார். அதில் ஒரு வழக்கு தள்ளுபடியாகி விட்டது, மற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. கல்கி பகவான் மீது கூறப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளும் தவறானவை என்று நாங்கள் சொல்-வதைவிட, நீதிமன்றம் அறிவிப்பதே சரியாக இருக்கும்! என்கிறார்.

நன்றி: இரா.வினோத்
(ஜூனியர் விகடன், 7.7.2010)

உச்சத்திற்கு ஏறும் கருணாநிதியின் பித்தம்!

ஏப்ரல் 17, 2010

உச்சத்திற்கு ஏறும் கருணாநிதியின் பித்தம்!

1960களிலிருந்து, திராவிடத் தலைவர்கள், அவர்களின் பேச்சு, எழுத்து முதலியவற்றைக் கவனித்து வருவதில் நானும் ஒருவன்.

பெரியார், அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், மனோகரன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா………………போன்றவர்கள், மற்றும் வீரமணி, அசோகன் (நடிகர்), வெடிகுண்டு / தீப்பொரி ஆறுமுகம், ………..முதலியோரின் மேடைப்பேச்சு, மற்ற பேச்சாளர்களின் பேச்சு, குறிப்பாக இரவு நேரத்தில் அப்பொழுதெல்லாம் 10 மணிக்கு மேலே மறுநாள் காலை 2-3 மணி வரை நடக்கும் கூட்டங்களில் அவர்கள் பேசுவதைப் பார்த்தால் (நடிப்போடு ஆடிக்கொண்டும், மற்றவர்களைப் போல நடித்துக் காட்டியும்), கேட்டிருந்தால் (ஆபாச, அசிங்கமான) அவர்களைப் பற்றி, இக்கால இளைஞர்கள் தமது கருத்தை அப்படியே மாற்றிக் கொள்ளவேண்டியிருக்கும்.

கருணாநிதிக்கு இந்த வயதில் அத்தகைய பழக்கதோஷம் வந்து விட்டது போலும்.

அதே பாணியில் பேசியிருக்கிறார்.

அந்த பேச்சை மிகவும் உன்னிப்பாகக் கவனிக வேண்டும்.

ஏனெனில், ஜெயலலிதாவைத் திட்டியிருக்கிறார், அவதூறு பேசியிருக்கிறார் என்பதைவிட அதிக-பிரசங்கித்தனமாக, திராவிடக் கொழுப்போடு, பகுத்தறிவு திமிரோடு, பக்தி, பதிபக்தி, பதிர்விதா தர்மம், கற்பு, போன்ற விசயங்களையும் சம்பந்தப் படுத்திப் பேசியுள்ளதை தமிழர்கள், இந்தியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

பதிபக்தி இல்லாதவர் ஜெயலலிதா : முதல்வர் கருணாநிதி கடும் தாக்கு
ஏப்ரல் 17,2010,00:00  IST
Front page news and headlines today

சென்னை :”பதிபக்தி இல்லாதவர் ஜெயலலிதா,” என, முதல்வர் கருணாநிதி கடுமையாக குற்றம் சாட்டி பேசினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மற்றும் ஒன்றியத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., – தே.மு.தி.க., – பா.ஜ., கட்சிகளைச் சேர்ந்த மூவாயிரம் பேர் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று முதல்வர் பேசியதாவது:நீங்கள் எல்லாம் தி.மு.க.,வில் சேர்ந்த போது, என் முன் இருந்த மேஜையின் மீது ஏராளமான கட்சி உறுப்பினர் அட்டைகளை மூட்டையாக கட்டி வந்து கொட்டினர். மூட்டையில் அடைபட்டிருந்த உறுப்பினர் அட்டைகள் வெளியில் விழுந்தன. அதில் அடைபட்டிருந்தது உறுப்பினர் அட்டைகள் இல்லை. நீங்களே அதில் அடைபட்டு கிடந்ததாகத்தான் எனக்கு தெரிந்தது.நம்மை இங்கே இணைத்திருப்பது அன்பு. நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பு. நான் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பு. இப்போதாவது உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு தெரிந்து, தெளிந்து தி.மு.க.,வில் இணைந்திருக்கிறீர்களே அதுவே மகிழ்ச்சி.


‘எம்.ஜி.ஆரை மதிக்கத் தெரியாதவர் ஜெயலலிதா. அதனால், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைகிறேன்’ என, அன்பு பேசினார். ஜெயலலிதா இப்போது தான் என்று இல்லை. எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றியிருந்த போதே, அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்த பதவியில் அமர்த்தும்படி கடிதம் எழுதியவர் தான் ஜெயலலிதா.இங்கு ஏராளமான பெண்கள் உள்ளனர். உங்கள் சகோதரருக்கு, தந்தைக்கு, ஏன் கணவருக்கு உடல் நலம் குன்றினால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் காளியம்மன், மாரியம்மன் போன்ற தெய்வங்களிடம் வேண்டுவர். இது தான் கிராமங்களில் உள்ள நடைமுறை. நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் செய்யும் நடைமுறை.


ஆனால், ஜெயலலிதா, தான் கணவராக வரிந்து கொண்ட, தான் தலைவராக வருவதற்கு காரணமாக இருந்த, சர்வாதிகாரத்துடன் கட்சியை நடத்த காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி இருந்த போது அவருக்காக பிரார்த்தனை செய்யாமல் அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்தப் பதவியில் அமர்த்தும் படி சொல்லும் அளவிற்கு பதிபக்தி இல்லாமல் இருந்தவர். அன்பு போன்ற எம்.ஜி.ஆர்., மீது விசுவாசம் கொண்டவர்களுக்கு இப்போதாவது விழிப்புணர்வு வந்ததே என்ற வரையில் மகிழ்ச்சி. இது வரை அண்ணா அறிவாலயத்தைப் பார்த்துக் கொண்டுதான் சென்றிருப்பீர்கள். இனி அதன் உள் வந்து அமரலாம். உங்கள் அனைவரையும் உள் அன்புடன் வரவேற்கிறேன்.” இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!

பிப்ரவரி 12, 2010

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!

© வேதபிரகாஷ்

முன்னுரை: உலக சைவ மாநாடு நடந்து சில நாட்களே ஆகியுள்ளன[1] (பிப்ரவரி 5-7, 2010). கலந்து கொண்ட மடாதிபதிகள், அடியார்கள், ஆய்வாளர்கள், பேராளர்கள், மற்றவர்கள் இன்னும் தங்கள் ஊர்களுக்குக் கூட சென்று சேரவில்லை. ஆனால், குன்றக்குடி மடாதிபதி, இந்துக்களைத் தூஷித்த, இந்துமதத்தைத் தொடர்ந்து தூஷணம் செய்து வரும் ஒரு ஜீவியை “திருக்குறள் பேரொளி” என்ற பட்டத்தை அளித்து, திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு பச்சைத் துரோகம் மற்றும் அவமானத்தைச் செய்துள்ளது[2]. கிருத்துவர்கள் 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா?” என்ற குறும்புத்தகம் தெய்வநாயகத்தால் எழுதவிக்கப்பட்டு வெளியிடுகிறார்கள்[3]. மு.கருணாநிதி “மதிப்புரை” அளித்துப் பாராட்டுகிறார். தமிழ் தெரிந்த கருணாநிதி, அப்பொழுதே, அது தவறு என்று எடுத்துக் காட்டியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை. ஆகவே அன்றே அவர் திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு தகாத துரோகத்தை செய்து விட்டார் எனலாம். அன்றிலிருந்து, இன்றுவரை, சென்ற வருடம் அந்த போலி / கள்ள ஆராய்ச்சிக்குத் துணைபோய், கிருத்துவர்களின் திரைப்படத்தை ஆரம்பித்து வைத்துள்ளர்[4].

திருவள்ளுவர் இரண்டாவது முறை மைலாப்பூரில் சாகடிக்கப்பட்டார்: கருணாநிதி, அந்த போலி தாமஸ் நினைவு தினமான ஜூலை 3 அன்று எப்பொழுது அந்த மோசடி திரைப்படத்தை ஆரம்பித்து வைத்தாரோ அன்றே திருவள்ளுவரை மைலாப்பூரிலேயே சாகத்து விட்டார் எனலாம்.

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!: உலகத் திருக்குறள் பேரவை சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு, “திருக்குறள் பேரொளி’ விருது வழங்கும் விழா, தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடந்தது. உண்மையில், வாய்மை இருளில், காரிருளில் மறைந்தது எனலாம்.

துறவிகளின் ஆசையும், அரசர்களின் மோக-இச்சைகளும்: விருதை ஏற்று முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “மறைந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் எனக்கு அன்பும், பாசமும், பரிவும் உண்டு. தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும் அவர் கொண்டிருந்த பற்றைக் கண்டு நான் வியந்துள்ளேன். அவரைப் போலவே இளையவர் பொன்னம்பல அடிகளாரும் செயல்பட்டு வருகிறார். இரண்டு அடிகளார்களும் பெரியார், அண்ணா மற்றும் என் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர்கள் என்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். எனக்குதிருக்குறள் பேரொளிஎன்ற விருது வழங்க விரும்புவதாகவும், அதற்காக ஒரு தேதியைத் தருமாறு அடிகளார் என்னிடம் வலியுறுத்தினார். எனக்கிருந்த பல்வேறு அலுவல்களை எடுத்துச் சொல்லி இந்த விழா தேவைதானா? என்றேன்.​ “எனது ஆசையை நிறைவேற்றுங்கள்என்றார். துறவிகள் ஆசைப்படக் கூடாது[5]. இருப்பினும் இந்த ஆசையை நிராகரிக்க முடியாது என சம்மதம் தெரிவித்து[6], விழாவில் பங்கேற்றுள்ளேன்.

இருட்டில் உள்ளவர்கள், ஒளியில் உள்ளவர்கள்!: எனக்கு, “திருக்குறள் பேரொளிஎன்ற விருதை தந்துள்ளனர். திருக்குறளே பேரொளி தான். அந்த பேரொளிக்கு திருக்குறள் என்று பெயரிடத் தேவையா? என்பதுதான் என் கேள்வி. இருந்தாலும், திருக்குறளை பேரொளி என்று இருட்டிலே இருப்பவர்களுக்கெல்லாம் உணர்த்துவதற்காகவாவது[7], இந்த விருது பயன்படட்டும் என்று எண்ணியோ என்னவோ, இந்த பேரொளீயை அவர்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள். இந்த விருதை எனக்கு வழங்கியுள்ளதன் மூலம், என்னைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றியுள்ளதாக நான் கருதவில்லை[8]. ஒளியை கையில் கொடுத்து, அது மற்றவர்களுக்கு பயன்பட வேண்டுமென்று கொடுத்ததாகக் கருதுகிறேன். என் கையிலே தூக்கிப்பிடுத்துருக்கின்ற ஒளி என்ற உணர்வோடு தமிழை, தமிழின் புகழை இந்த தரணியிலே நிலைநாட்டுவதற்கு பயன்படுத்துவேன் என்ற உறுதிமொழியை நான் அவருக்கும், அவருடைய மன்றத்துற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்யமேவஜெயதேயும் “வாய்மையே வெல்லும்” என்பதும்: சட்டசபையில் நான் பணியாற்றும் போது, எப்படியெல்லாம் தமிழுக்கு பணியாற்றுவது எனக் கருதி, “சத்ய மேவ ஜெயதேஎன்ற வார்த்தையைவாய்மையே வெல்லும்என்று மாற்றினோம். முதலில் எப்படி அந்த சொற்றொடரை மாற்றலாம் என்று அதற்கு எதிர்ப்பு இருந்தாலும், பிற்பாடு பழகப்பழக அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர். நம்முடைய தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சுட்டுச் சொல்லாக, இலட்சினைச் சொல்லாக இன்றைக்கு மாறிவிட்டிருக்கின்றது[9].

வாய்மையும் உண்மையும்!உண்மையயும் வாய்மையயும் ஒன்றாக எண்ணிக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. அப்படி இன்னமுன் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். வாய்மை என்பது பிறருக்கு தீங்கில்லாமல் சொல்லப்படுகின்ற ஒரு சொல்லுக்கு பெயர்தான் வாய்மை அடிப்படையில் பிறக்கின்ற ஒரு சொல்லாகும். யாருக்கும் எந்தவித கெடுதலும் ஏற்படாமல், இந்த வார்த்தையினால் உறுதியோட சொல்லப்படுகின்ற சொல் வாய்மை ஆகிறது. உண்மை என்பதை அதற்கு அடுத்தக் கட்டத்தில் வைக்கலாமே தவிர, அது வேறு, இது வேறு[10].

“பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்” என்றார் வள்ளுவர். அதற்கு குறளோவியத்தில் நான் விளக்கம் அளித்திருக்கிறேன். “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்” என்பதற்கு ஒரு சிறிய கதை. அந்த கதையில் வேடன் ஒருவன் வில்லும், அம்பும் கையில் ஏந்தி வேகமாக வருகின்றான். வருகின்ற வேடனுடையக் குறிக்கோள் அவனால் துரத்தப்பட்ட மான்குட்டியை[11] கொன்று அந்த மானை உணவாக ஆக்கிக்கொள்ளவேண்டுமென்ற குறிக்கோளோடு வேடன் வருகிறான்.

வேடன், மான்குட்டி, மாமிசம் சாப்பிடுவது: வள்ளுவர் தன் குடிலிலே அமர்ந்திருக்கிறார். அந்த குடுலுக்குள்ளே மான்குட்டி ஓடிவந்து ஒளிந்துக் கொள்கிறது. ஓடிவந்த வேடன், “ஐயா இங்கே மான்குட்டி வந்ததா? என்று கேட்கிறான், அதற்கு அவர், “இல்லையே, வரவில்லையே” என்கிறர். மான்குட்டித் தப்பித்துக் கொள்கிறது. பக்கத்திலே இருக்கிற ஒருவர், வள்ளுவரைப் பார்த்து, “ஏனய்யா ஊருக்கெல்லாம் உண்மை பேசச் சொல்லி அறிவுரை கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் வேடனிடத்தில் பொய்யாக மான் குட்டி வரவில்லை என்ரு சொல்லிவிட்டீர்களே” என்று கேட்கிறார். “நான் உண்மை சொல்லியிருந்தால் மான்குட்டி இந்நேரம் வேடன் வயிற்றுக்குள் போயிருக்கும். அதனால் தான் நான் வாய்மையோடு மான்குட்டியைக் காப்பாற்றினேன்”, என்கிறார்[12].

நாத்திகமும், ஆத்திகமும்: நான் எழுதிய குறளோவியத்தில், திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை[13] கருத்தில் கொண்டு அதற்கு பொருள் வடித்துள்ளேன். எனக்கு முன் திருக்குறளுக்கு உரை எழுதிய பலர், அவர்கள் ஆத்திகர்களாக இருந்தால், ஆத்திக கருத்துகளையும், நாத்திகர்களாக இருந்தால், நாத்திக கருத்துகளையும் அதில் வெளிப்படுத்தியுள்ளனர்[14]. “ஆனால், நான் திருக்குறளின் உரையை திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை கருத்தில் கொண்டு, நாத்திகத்தை திணிக்காமல், ஆத்திகத்தை புறக்கணிக்காமல் எழுதியுள்ளளேன். நான் குறளோவியத்திலிருந்து ஒன்றிரண்டு சொல்ல விரும்புகிறேன். பலரும் உண்மையும், வாய்மையும் ஒன்று என்று என நினைக்கின்றனர். ஆனால், உண்மை வேறு, வாய்மை வேறு. உண்மை என்பது உள்ளதைச் சொல்வது. வாய்மை என்பது யாருக்கும் தீங்கு நேரக்கூடாது என்று உரைப்பது. “யாருக்கும் தீங்கு செய்யாமல் நன்மை செய்ய வேண்டும் என்றால், பொய்யையும் சொல்லலாம். அந்தப் பொய் உண்மை இல்லை என்றாலும், அது வாய்மைக்கு இணையாகக் கருதப்படும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். எனக்கு கொடுக்கப்பட்ட இந்த விருதை, இங்கு கூடியுள்ள அறிஞர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்,” இவ்வாறு முதல்வர் பேசினார்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க ஆரம்பித்து விட்டது: கருணாநிதியே உண்மையா, பொய்மையா என்ற ஆராய்ச்சி செய்யவேண்டிய நிலையில் உள்ளது, ஏனனில், திருக்குறளைப் பொறுத்த வரைக்கும் செய்துள்ள துரோகம் சொல்ல மாளாது. கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு, திருவள்ளுவரையும், திருக்குறளையும் பழித்தது, தூஷித்தது,………..(முன்னமே குறிப்பிட்டுள்ளேன். எனது நூலில் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை”யில் விளக்கியுள்ளேன்). “குறளா, குரானா?” என்ற பிரச்சினை வந்தபோது, வாய்மூடிக்கொண்டிருந்தது முதலியன. இன்று வேடன், மான்குட்டி, வாய்மை, பொய்மை என்று கதை சொல்கிறார். அப்பொழுது ஏன் மான்குட்டியைக் காப்பாற்றவில்லை? “குறளா, குரானா?” என்று கேட்டபோது, “வாய்மை” வரவில்லையே,’உண்மையும்” சொல்லவில்லையே? மௌனியாக இருந்ததால், இன்னொரு மான் உண்மையிலேயே இதே சென்னையில் கொலைசெய்யப்பட்டது! ஆமாம், “குறள்”தான் என்று வாய்மை சொன்ன கண்ணுதல் என்ற மான்குட்டி கொலை செய்யப்பட்டது. ஆக குறளுக்காக உயிர்விட்டது யார், தியாகம் செய்தது யார் என்றால் கண்ணுதல் தானே. உண்மையிலேயே வாய்மையுடன், அந்த மடாதிபதிக்கு ஏதாவது தெரிந்தால், அந்த விருது அந்த கண்ணுதலுக்குத் தான் கொடுத்திருக்க வேண்டும். பாவம், இந்த மடதிபதிகளுக்கு சரித்திரம் தெரியாது, வரலாறும் தெரியாது. முந்தைய குன்றக்குடி கிருத்துவர்களுக்குத் துணை போனது, அந்த தெய்வநாயகமே தம்பட்டம் அடித்துக் காட்டுகிறன். இந்த குறக்குடி இப்படி செய்கிறது. தெரிந்தும், அரசர்களின் கால்களில் வீழ்ந்து வாழும் காவிவேடத்தில் உலாவரும் போலிகள். இங்குதான் ஆத்திகமும், நாத்திகமும் வெளிப்படுகின்றன. காவி உடையில் நாத்திகம் உலா வருவதால்தான் திருமூலர் சாடுகிறார். சித்தர்கள் தோலுறுத்திக் காட்டுகிறர்கள்! ஆனால் சித்தர்களையேப் புரட்டிப்போடுகிறார் இந்த “பேரொளி”பட்டர்! இன்னும் மான்குடிகள் சாகத்தான் செய்யும், ஏனெனில் வேடர்கள் ஏற்கெனவே விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்! இப்பொழுதுதான் தமிழர்கள் இவர்களைப் புரிந்து கொள்ளப்போகிறர்களோ தெரியவில்லை!

வேதபிரகாஷ்

12-02-2010


[1] அதற்கு எந்த திராவிட கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆத்திகம், ஆன்மீகம் பேசும் திராவிடர்களும் கவலைப்படவில்லை. எனவே தமிழர்கள் அவர்கள் எத்தகையவர்கள் என்று அடையாளங்கண்டு கொள்ளவேண்டும்.

[2] உண்மையிலேயே இத்தகைய திருக்குறள் துரோக, சைவ-துரோக, இந்து-துரோக மடங்கள் இருப்பதைவிட இல்லாமலேயே போய்விடுவது நல்லதே. பிறகு யான் அவர்கள் வெட்கம் இல்லாமல், இந்து, இந்து மடங்கள், இந்து மடாதிபதி என்றெல்லாம் மற்ற நேரங்களில் உலா வருகிறார்கள் என்று தெரியவில்லை.

[3] கத்தோலிக்க சர்ச் செய்துவரும் ஒரு மாபெரும் கள்ள ஆவண, சரித்திரப் புரட்டு ஆராய்ச்சி. ஏற்கெனவே கோர்ட் வரை சென்று அவர்களின் ஃபோர்ஜரி, மோசடி, கள்ள ஆவணம் தயாரித்தல் போன்ற விஷயங்கள் வெளிவந்துள்ளன.

[4] “இந்தியாவில் தாமஸ்” என்ற படத்தை ஆரம்பித்து வைத்து, திருவள்ளுவரை மறுபடியும் சாகடித்துவிட்டார் எனலாம்!

[5] இப்படி சொன்னவுடன், அது தூக்குப்போட்டு செத்திருக்க வேண்டாமோ? இல்லை, ஏதாவது குளம், ஆற்றில் வீழ்ந்து மறைந்திருக்கவேண்டாமோ? எதற்கு, திருநீறு, ஜடாமுடி, ருத்ராக்ஷம் எல்லாம்? யாரை ஏமாற்ற?

[6] ஆமாம் இத்தகைய விபச்சாரவேலை செய்யத் துணிந்தால், யாருக்குதான் ஆசை விடும். அதுவும், இது ஆசையில்லை, தினம் தினம் விருதுகளை நுகரும் மோகம், பட்டங்களைத் தழுவு பற்றும் இச்சை, உட்கார்ந்து கொண்டே ரசிக்கும் சல்லாபம், அது சாகும்வரை அடங்காது.

[7] எந்த கொழுப்பு இருந்தால், இருட்டில் உள்ளவர்கள் என்று மற்றவர்களைச் சொல்ல எண்ணம் வரும். இங்கேயே, அவருக்கு வயதாகியும் அந்த மமதை, செருக்கு, அணவம் முதலியன மனத்தை மறைத்துள்ளது வளிப்படுகிறது.

[8] “கடவுள்” ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் விளம்பரங்கள் கொடுத்துக் கொண்டதில் மட்டும் குறைவில்லை. “கடவுள்” பெயர் சொல்லி நீண்ட ஆயுள் வேண்டும் என்று கேட்டதிலும் வெட்கமில்லை.

[9] இதே மாதிரித்தான் “மாஹாத்மா”, “அண்ணல்” ஆகியது, ஆனால், அத்தகைய மரியாதை, மதிப்பு வரவில்லையே, திராவிடர்களுக்கு? ஏன்?

[10] நிச்சயமாக கருணநிதியை ஆன்மீகவாதி என்று யாரும் நினைத்துக் கொண்டால் அது பொய்யேயாகும்.

[11] அதனால்தான் வயதாகியதும், மான்குட்டி, மானாகியது போலும்! மானாட வந்துவிட்டது, கூட மயிலும் வந்துவிட்டது போலும்! பிறகென்ன, மானாட, மயிலாட, மார்பாட…………………

[12] “தான் மானாட மயிலான” பார்த்துக் கொண்டிருக்கும்போது, யாராவது கேட்டிருந்தால் இல்லையென்றுதான் சொல்லிருப்பார். ஏனெனில் மான்களை ஆடவிட்டுப் பார்க்கும்போது, குட்டிகளைப் பற்றி எப்படி ஞாபகம் வரும்?

[13] நல்லவேளை அக்காலத்தில் கருணாநிதி இல்லை!

[14] எப்படி நாஜுக்காகச் சொல்கிறார் பாருங்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பதால், இப்படி பேசுகிறார்.