Archive for the ‘உண்மையான திராவிட இயக்கம்’ Category

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி!

பிப்ரவரி 28, 2013

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி!

விஷமத்தனமான பிரச்சாரம்: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாடும் சாக்கில் யார்-யாரோ அவரைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். கிருத்துவர்கள் அவர் ஏதோ ஏசுவை ஏற்றுக் கொண்டது போல பிட் நோட்டிசுகள் விடுகின்றனர், கிறிஸ்தவர்கள் அவர் கிருஸ்துவை ஏற்றுக் கொண்டதை போல பொய் பிரச்சாரம் செய்கின்றனர்[1]. அதுபோல நமது கருணாநிதியும் இப்படித்தான் 2008ல் பேசினார்[2]. இன்று திமுகவிற்குப் பிறகு, அதிமுக பதவிக்கு வந்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா விழாவில் பங்கு கொண்டு பேசியுள்ளார்[3]. “அண்ணா நாமம் வாழ்க, பெரியார் நாமம் வாழ்க” என்பவர், சுவாமி விவேகானந்தர், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி! 2008ல் பேசியதை இப்பொழுது ஏன் ஞாபகத்தில் கொண்டு வரவேண் டும் என்று கேட்கலாம். ஆனால், இதை வைத்துக் கொண்டுதான், 2013லும் கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று பார்க்கும் போது விவகாரம் புரிகின்றது. கருணாநிதியின் நக்கலான பேச்சை படிக்கவும்:

 

விவேகானந்தர்புகைபிடிப்பார்[4]: நீங்கள் சாமியாரிடத்திலே மோத விட்டாலும், மாமியாரிடத்திலே மோத விட்டாலும் நாங்கள் யாரும் அவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை. கட்டிடத்தைத்தான் எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச்சு என்று கேட்பீர்கள். விவேகானந்தரைப் பற்றி தலைவர்கள் பேசிக் கேட்க வேண்டும் என்ற ஆசையாலும், விவேகானந்தரைப் பற்றி பேசி அதிக நாளாகி விட்டது என்பதாலும்தான். மூட நம்பிக்கைகளை சாய்த்தவர் விவேகானந்தர். மத வெறி, ஜாதி வெறியைச் சாய்த்தவர். அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர். அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். மனம் சுத்தமாக இருந்தால் இவை எல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல்பட்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள்.

கருணாநிதியைத் தொடர்ந்து வீரமணியின் விஷமத்தனம்: ஆக பகுத்தறிவாளிகள், பெரியார் தாசர்கள் என்ற போர்வையில் இப்படியும் தூசிக்கலாம், தூஷணம் செய்யலாம், அதனை சந்தோஷமாக கிருத்துவர்கள் எடுத்தாளலாம் என்று தான் எடுத்துக் காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு “விடுதலை”யில் இதைப் பற்றி வெளிவந்துள்ளவை:

… எந்த வழியிலாவது காட்டவேண்டும் என்கிற கோபம் இயல்பானதே! ####### விவேகானந்தர் ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி என்ற பெயரில் இந்துத்துவா சக்திகள் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ளன. …

… வெளிப்படுத்து வார்கள். விவேகானந்தரின் அறிவுரைகள் என்ற நூல் சென்னை மயிலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தினால் 2008இல் வெளியடப்பட்டுள்ளது. நூலின் 83ஆம் பக்கத்தில்விவேகானந்தர் பின்வரும் இந்து …

சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர்150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு  மட்டும் …

… விவேகானந்தர்   ரதம் செல்லுகிறதாம் – அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவே கானந்தர் முற்போக்குப் பேசினார் – இளை ஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள். …

3.2.13 பிற்பகல் 11.00 மணி அளவில், தென் சென்னை மாவட்டத்தின் திருவல்லிக்கேணி  நீலம் பாசா தர்கா பகுதியில் அன்னி பெசன்ட் சாலை விவேகானந்தர் இல்லம் பின்புறம் திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் …

… மதத்திற்கு மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறதாம்.வெளியிடப்பட்டுள்ள பேச்சு முழுவதும் விவேகானந்தர்இயேசுவைப் போற்றிப் பேசுவதாக உள்ளதாம்.  ராம கிருஷ்ணா மடம் சார்பில் வெளியிடப்பட் டதைத்தானே எடுத்து போட்டிருக்கிறார்கள்? …

… நாத்திகன் என்று முழங்கினார் விவேகானந்தர். தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில்தான் லட்சியம் இருக்கும். லட்சியம் – இருக்கும்போது அங்கே வளர்ச்சி நிச்சயமாக இருக்கும். (நம்பு தம்பி நம்மால் முடியும், ஆகஸ்டு 2008) …

விவேகானந்தரின் 150ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்தவர் சுவாமி விவேகானந்தர் என்று பெருமையாகப் பேசுவார்கள். பல பேர் நினைத்துக் கொண்டு …

…  அதே நேரத்தில் சென்னைக் கடற்கரை சாலை என்ற மிக முக்கியமான பகுதியில் உள்ள விவேகானந்தர்இல்லத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாரிக் கொடுப்பதும் இந்த அரசுதான். திருவள்ளுவர் என்றால் உதாசீனம் -விவேகானந்தர் …

… அனைத்து மாநில அரசுகளும், பள்ளிப் பாடத்திட்டத்தில், நாராயண குரு, ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மிக தத்துவவாதிகளின் போதனை களைப் பாடமாக இணைக்க வேண்டும் – இவ்வாறு அவர் பேசியுள்ளார். …

இப்படி நாத்திகர்கள், கிருத்துவர்கள், பகுத்தறிவுவாதிகள், கிறிஸ்தவர்கள் முதலியோர் எப்படி, ஏன், எதற்காக சொல்லி வைத்தால் போல இப்படி ஒரே நேரத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

 

செய்திகளைப் பரப்புகிறார்கள், இணைதளத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

பிறகு இவற்றைத் தொகுத்து புத்தகம் வெளியிடலாம், ஆராய்ச்சிக் கட்டுரை போர்வையில் கருத்தரங்கங்களில் படிக்கப்படலாம்.

கிருத்துவ இலக்கியக் கழகம், ஏன் திராவிடர் கழகமே வெளியிடலாம்.

© வேதபிரகாஷ்

28-02-2013


[4] ஏப்ரல். 25, 2008 , தினத்தந்தியில், முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது என்று வெளியிடப்பட்டது.

சினேகாவை அடுத்து, குஷ்புவின் இடுப்பு கிள்ளப்படுகிறதாம்!

ஜூன் 9, 2012

சினேகாவை அடுத்து, குஷ்புவின் இடுப்பு கிள்ளப்படுகிறதாம்!

பதவியில் இல்லாமலிருந்தாலும் படோபடமாக கொண்டாடப்படும் விழாக்கள், ஊடக தரிசனங்கள், தெரு உலாக்கள்: தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், முதலமைச்சர் பதவியில் இல்லையென்றால் யாரும் அவ்வளவாக மதிக்க மாட்டார்கள். சுவரொட்டிகளுக்குக் கூட கணக்குப் பார்த்துதான் செலவழிப்பார்கள். ஆனால், திமுகவிற்கு எங்கிருந்துதான் பணம் வந்துள்ளது என்று தெரியவில்லை, லட்சக்கணக்கில் செலவழித்துள்ளார்கள். பதவியில் இல்லாமலிருந்தாலும் படோபடமாக விழாக்களை கொண்டாடியுள்ளர்கள். ஊடகங்கள் அவர்கள் கைகளில் இருப்பதனால் தரிசனங்கள் அதிகமாகவே இருந்துள்ளன[1]. பிறகு, தெரு உலாக்கள் தாம்! அக்கால மன்னர்கள் மாதிரி பவனி; பிறகு நாட்டிய மகளிர் வந்து ஆடவேண்டாமோ? ஜகத் ரெட்சகன்[2] மறந்து விட்டாரோ அல்லது ஒதுக்கப்பட்டாரோ?

குஷ்புவின் ஏக்கமும், நெருக்கமும், தரிசனத்திற்காக ஓடிய ஓட்டமும்: திமுக தலைவர் கருணாநிதியின் 89 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு இடுப்பை மர்ம நபர் கிள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[3]. முன்னர் சினேகாவின் இடுப்பை கிள்ளுகிறார்கள் என்று ஒரே பரபரப்பான செய்திகள்[4]. இப்பொழுது, பகுத்தறிவாளிகள் பாசறையில், பக்குவமாக, பக்கத்தில் வந்து, குஷ்புவின் இடுப்பை கிள்ளுகிறார்களாம். திமுகவில் இணைந்ததிலிருந்து, இவர் கருணாநிதிக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்[5]. எனவே, திட்டமிட்டே அந்த மர்ம நபரும் இதை செய்துள்ளாறர் போலும்! வயதான கூட்டத்தில் இப்படி, ஒரு அம்மாவைப் பிடித்து விட்டார்கள் போலும்!

கருணாநிதி கண்டித்தாலும், கமல் ஹஸன் குஷ்பு தமிழைக் கேட்டு வியக்கிறாராம்: ஒரு கூட்டத்தில் குஷ்பு, முந்தி கொண்டு ஏதோ தமிழில் பேசியதைக் கேட்டு, கருணாநிதி நன்றாகவே விமர்சனம் செய்து விட்டார்[6]. ‘தமிழை யாரும் அழிக்க முடியாது. குஷ்பு தமிழிலே பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழ் மொழி எந்த அளவு வலுவானது என்று பார்க்க வேண்டும்” என்றார்[7]. ஆனால் கமல் ஹஸனுக்கு குஷ்புவின் தமிழைக் கேட்டு புல்லரிக்கிறாராம்.

Adding, he said “I never envied Rajini’s growth or any one’s growth in the industry, but today I envy the Tamil spoken by Kushboo in this function.  Even Karunanidhi and Rajini were surprised by the way Kushboo speaks out the classical language[8].  It seems she will be awarded for speaking a wonderful Tamil” ரஜினியின் உயர்வைக் கண்டு கூட நான் அதிசயிக்கவில்லை. ஆனால், நான் குஷ்பு தமிழ் பேசுவதைக் கண்டு பொறாமைப் படுகிறேன், என்றாராம். கருணாநிதி, ரஜினிகாந்த் முதலியோரும் குஷ்புவின் செந்தமிழைக் கேட்டு வியந்து விட்டனராம். அதற்காக அவர் பரிசளிக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

அதெப்படி கருணாநிதி அதற்குள் மாறிவிட்டார் என்று தெரியவில்லை. “Even Karunanidhi and Rajini were surprised by the way Kushboo speaks out the classical language”, என்றால் என்ன கதைவிடுகார்களா என்று தெரியவில்லை. இல்லை மயக்கத்தில் இருந்தனரா? கதாநாயகிகளை தூக்கி புகழ்பெற்ற இவருக்கு, அதிகமான அனுபவம் இருக்கிறது. இன்றும் தூக்குகிறாரா என்று தெரியவில்லை.

ஜெயலலிதாவை எதிர்த்த குஷ்பு: ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்றெல்லாம் குஷ்பு பேசியதை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், கருணாநிதி / திமுக தோற்க்கத்தான் நேர்ந்தது. அப்பொழுதும், நக்கலாக, அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டவர்கள் துன்பப்படப்போகிறார்கள் என்றெல்லாம் பேசியதும் ஞாபகத்தில் இருக்கலாம். திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூன் 03 ந் தேதி 89 -வது பிறந்த நாள் ஆகும். அன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அடுத்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவித்தில் மரியாதை செலுத்தினார். பின்பு, காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்.

கருணாநிதியை தொடர்ந்து சென்ற குஷ்பு: இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்படியும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நடிகை குஷ்பு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றார். ஆனால் ஏற்கனவே , அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு அறிவாலயம் சென்றதால், அறிவாலயம் நோக்கி குஷ்பு சென்றார். ஆனால் அங்கு இருந்து கருணாநிதி வேறு இடத்திற்கு சென்று விட்டதால், அவரால் அங்கும் சந்திக்க முடியவில்லை. இதனையடுத்து, மாலை 6 மணிக்கு கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல் வரிசையில் நடிகை குஷ்பு வந்து அமர்ந்திருந்தார். தலைவரை பிடிக்க வேண்டும் என்றால், இப்படியெல்லாம் துரத்திக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதே மாதிரி, குஷ்புவின் இடையைக் கிள்ள வேண்டும் என்றால், அந்த ஆசாமியும் அதே மாதிரி பின் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்!

குஷ்புவின் இடுப்பைக் கிள்ளிய மர்ம ஆசாமி: கூட்டம் முடிந்து குஷ்பு வெளியேற முன்ற போது, அவரது இடுப்பை யாரோ மர்ம ஆசாமி கிள்ளிவிட்டதாக கூறப்பட்டுகிறது. இதை சற்றும் எதிர்பாராத குஷ்பு கடும் அதிர்ச்சி அடைந்து அதே இடத்தில் சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் குஷ்புவை பத்திரமாக அவரது காருக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினால் அது குஷ்புவுக்கும், கருணாநிதி பிறந்த நாள் பொது கூட்டத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துக் கூறியதால், குஷ்பு அமைதி காத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து திமுக தலைமை கடும் கோபத்திலும், சங்கடத்திலும் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என குஷ்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்[9]. பிறகு யாருக்கு இத்தகைய ரோமாஞ்சக செய்தியோ அல்லது தகவலோ தேவைப் படுகிறது? தனியாகவே போய் பார்த்திருக்கலாமே? எல்லோருக்கும் தெரியும் படி, துரத்திக் கொண்டு சென்றிருக்க வேண்டாமே?


[1] கலாநிதி மாறன் ஓரமாக நின்று கொண்டு முறைக்கும் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பது தெளிவாகவே தெரிந்தது.

[2] ஜெகத் ரெட்சகன் அரசவை மாதிரியே செட்டிங் அமைத்து, காவலாட்கள், பெண்கள் வைத்து, நாட்டிய மகளிரை வைத்து ஆடவைத்து அமர்க்களப்படுத்தி விட்டார். இப்பொழுது மறந்து விட்டார்களோ, மறைத்து விட்டார்களோ, தனியாக வைத்துக் கொண்டார்களோ தெரியவில்லை.

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

செப்ரெம்பர் 11, 2010

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ராமசாமி நாயக்கர் பிள்ளையார் உடைப்பு 1956

ராமசாமி நாயக்கர் பிள்ளையார் உடைப்பு 1953

ஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்:  ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்!

Equivalent citations: 1958 AIR 1032, 1959 SCR 1211

Bench: Sinha, B P.

PETITIONER:

S. VEERABADRAN CHETTIAR

Vs.

RESPONDENT:

E. V. RAMASWAMI NAICKER & OTHERS

DATE OF JUDGMENT:

25/08/1958

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

IMAM, SYED JAFFER

WANCHOO, K.N.

CITATION:

1958 AIR 1032 1959 SCR 1211

ACT:

Insult to Religion-Ingredients of offence–Interpretation of statute-Duty of Court-Indian Penal Code (Act XLV of 1860), s. 295.

Idol breaker, iconoclast became an idol to be protected

Idol breaker, iconoclast became an idol to be protected

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம்! இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. கோர்ட் சொல்வது “No one appeared for the respondents”! பிரதிவாதிகளின் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை! மற்றொரு இடத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “It is regrettable that the respondents have remained ex parts in this Court.”!! “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்தது வருத்ததிற்கு உகந்தது”, என்று சொல்வது உச்சநீதி மன்றத்தின் நீதிபதி!

EVR statue at Vaikam 31-01-1994

EVR statue at Vaikam 31-01-1994

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் பிள்ளையார் விக்கிரகத்தை உடைத்தது, வழக்குப் போடப்பட்டது: எஸ். வீரபத்ரன் செட்டியார் என்பவர் இந்துமதத்திற்கு எதிராக பேசியும் எழுதிதியும் வருவதாக ராமசாமி நாயக்கர் மற்ற மூன்று நபர்கள் மீது ஜூன் 5, 1953 அன்று புகார் கொடுத்தார். அதுமட்டுமல்லாது மே 27, 1953 அன்று திருச்சி டவுன்ஹாலில் பிள்ளையார் சிலையை உடைப்பதாக சொல்லியிருப்பதால், சைவப்பிரிவைச் சேர்ந்த இந்து சமூகத்தினரது மனங்களில் பீதி, வருத்தம் மற்றும் உணர்ச்சிகள் கிளம்பியுள்ளன. அதுமட்டுமல்லாது, அன்று மாலை 5.30 அளவில் டவுன்ஹால் மைதானத்தில் ஒரு விக்கிரத்தை உடைத்து, அவதூறாக பேசியும் உள்ளார் என்று புகாரில் சொல்லப்பட்டது. இவ்வாறு பேசியது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 295 மற்றும் 295ஆ கீழ், மத உணர்வுகளைப் புண்படும் வகையில் உள்ளது என்ரு சொல்லப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் சர்கிள் இன்ஸ்பெக்டரை குற்றவியல் நடத்தை விதி பிரிவு 202ன் கீழ் விசாரிக்க ஆணையிட்டார். ஜூன் 26, 1953 அன்று, அறிக்கைக் கொடுக்க மாஜிஸ்டிரேட், “மண்ணால் செய்யப்பட்ட கணேசனுடைய விக்கிரம் புனிதமானதாகாது. அது கணேசனுடையது போன்று இருப்பதனால் அது புனிதமான வஸ்து ஆகாது. மக்களால் விடப்படுகின்ற விக்கிரங்கள் வழிபாட்டிற்கு ஆகாது. ஏனெனில் அத்தகைய விக்கிரங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆகவே ஒரு மனிதன் அத்தகைய விடப்பட்ட விக்கிரத்துடன் மோதினால் குற்றாமாக்சது. ஆகையால் இது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295 கீழ் குற்றாமாகாது”

செட்டியாரை அலையவிட்ட நயக்கருக்கு சாதகமான கீழ் கோர்ட்டார்: “குற்றஞ்ச்சாட்டப் பட்டவர் வேண்டுமென்றே, கெட்ட எண்ணத்துடன் மத உணர்வுகளைப் புண்படும் வகையில் பேசியிருந்தால், சந்தேகமில்லாமல், அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான்.  ஆனால், அத்தகைய புகார் கொடுக்க வேண்டுமானால், அரசாங்கத்தின் அனுமதி தேவைப் படுகிறது. அத்தகைய தகுந்த அனுமதி இல்லாததனால், இதற்கு மேல் இவ்வழக்கில் குற்றவியல் நடத்தை விதி பிரிவு 203ன் கீழ் தொடர ஆதாரம் இல்லை என்ற காரணத்தால் நிராகரிக்கிறேன்”

இதனால் வீரபத்ரன் செட்டியார், தனது புகாரை செஸன்ஸ் கோர்டிற்கு ஜூலை 9, 1953 அன்று எடுத்துச் செல்கிறார். ஆனால், ஜனவரி 12, 1954 அன்று நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்கிறார், “மாஜிஸ்ட்ரேட் சொல்லியபடியே, அத்தகைய நடத்தைகள் குற்றாமாகாது என்று ஒப்புக்க் கொள்கிறேன். குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு பொதுகூட்டத்தை ஏற்பாடு செய்து, உருவ வழிபாட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து, மண்ணல் செய்யப் பட்ட கடவுள் கணேசனுடைய உருவத்தை உடைத்துள்ளார். அந்த உருவம் குற்றஞ்சாட்டப்பட்டவருடைய சொந்தப் பொருளாகும், ஆகையால் அது மற்றவர்களால் புனிதமாகக் கருதப்படும் பொருளாகாது. அதே மாதிரி, நானும், ஒரு நம்பிக்கையில்லாதவன், இம்மாதிரி நம்பிக்கையுள்ளவனை புண்படுத்த முடியும்ன் என்று நினைக்கவில்லை. ஆகையால் அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான் என பெய்பிக்க வேண்டிய கூறுகளுக்கு ஏற்றபடி இல்லை”.

இதனால், செட்டியார் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இங்கேயும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் மீது குற்றத்தை மெய்ப்பிக்க போதியா ஆதாரங்கள் காட்டப்படவில்லை, என்று சில வழக்கு உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டினார்.

(1) (1887) I.L.R. 10 All. 150.

(2) (1890) I.L.R. 117 Cal. 852.

உயர்நீதி மன்ற நீதிபதியும் அலைய விட்டார்; செட்டியார் இதற்கு எதிராக அப்பீல் / முறையீடு செய்ய தேவையான சான்றிதழ் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார். ஆனால், இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு Art. 134(1)(c) கீழ், மேல்முறையீடு செல்வதற்கான வழக்கு இல்லை என்று மறுத்து விட்டார். ஆகையால், அவர் மறுபடியும் நீதிமன்றத்திற்கு சென்று, தேவையான அனுமதி பெற்றார். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்தது வருத்ததிற்கு உகந்தது [It is regrettable that the respondents have remained ex parts in this Court.].

தீர்ப்பில் பதிவாகியுள்ள உச்சநீதி மன்றத்தின் கருத்து: இந்த வழக்கில், புண்படுத்தக்கூடிய செயல் நடந்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்னவென்றால், கடவுள் கணேசனுடைய உருவத்தை உடைத்துள்ளார்கள் என்பதாகும். அத்தாட்சி என்பதைவிட, இந்துக்களுக்கு கணேசனுடைய உருவம் அல்லது அம்மாதிரி, வழிபடுவதற்கு என்று ஸ்தாபிக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் புனிதமானது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கீழ்கோர்ட்டின் நீதிபதிகள் நிச்சயமாக சரத்தில் உள்ள வார்த்தைகளுக்கு மிகவும் குறுகிய அர்த்ததைக் கொண்டு அதற்கேற்றபடியான விளக்கத்தை அளித்துள்ளனர். அதாவது கோவிலில் உள்ள விக்கிரங்கள் அல்லது ஊர்வலத்தில், விழாக்களில் எடுத்துச் செல்லப்படகுடியவைதான், இந்த விளக்கத்தில் வரும் என்பது போல பொருள் கொண்டுள்ளர்கள். அத்தகைய குறுகிய விளக்கம் அளிக்க அச்சரத்தில், அத்தகைய வரையரைகள் கொடுக்கப்படவில்லை. ஆகையால், மெத்தப்படித்த நீதிபதி அத்தகைய தவறான வேலையில் பொருட்கொண்டுள்ளார்.

பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவற்றை எரித்தால் என்னாகும்? புனிதமான புத்தகம், பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவையெல்லாம் இந்த வார்த்தைகளில் வரும். ஆக கீழ் கோர்ட்டாரின் திரிபுவாத விளக்கத்தின்படி பார்த்தால் அல்லது அவர்கள் சொன்னது சரியென்றால், அத்தகைய புனித நூல்களை அவமதிப்பு செய்தால், சேதப்படுத்தினால் அல்லது எரித்தால் இந்த சட்டப் பிரிவிலிலேயே வராது என்றாகும். ஆனால், எங்களுடைய கருத்தின்படி, அத்தகைய குறுகிய விளக்கம் மற்றும் அந்த வார்த்தைகளுக்கு அத்தகைய விளக்கத்தை வலியப் பெறுவது ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லா சட்டமுறைகளும் விரோதமானது ஆகும்.

புனிதமான எந்த வஸ்துவும் அவமதிக்கப்படக்கூடாது, சேதப்படக்கூடாது: எந்த வஸ்து, எவ்வளவு அற்பமேயாகிலும் அல்லது விலையில் மிகவும் குறைவானதாக இருந்தாலும், மற்றவர் அது புனிதமானது என்று மதித்தால், இந்த சட்டப்பிரிவில் வரும். அவமதிப்பவர்களை சட்டம் கவனித்துக் கொள்ளும். ஆகையால் அந்த புனிதமானதாக மதிக்கப்படும் வஸ்து, வழிபாட்டிற்குட்பட்டிருக்க வேண்டும் என்ற நிலை தேவையில்லை. ஆகையால் கீழ் கோர்ட்டார்கள் பலத்ரப்பட்ட மக்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்காமல், விஷயத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கொடுத்த புகாரை அணுகியுள்ளர்கள். இந்த பிரிவானது பலதரப்பட்ட மத நம்பிக்கையாளர்களின்  மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்க ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகும். ஆகவே, கோர்ட்டாரே அத்தகைய நம்பிக்கைகளை ஏற்கிறார்களோ இல்லையோ, இத்தகைய விஷயங்களில் மற்றவர்களின் உணர்ச்சிகளை நம்பிக்கைகளை நிச்சயமாக மதிக்க வேண்டும். அத்தகைய விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பெரியார் செய்தது மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது: அகையால், நிச்சயமசக கீழ் கோர்ட்டார்கள் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295ல் உள்ள முக்கியமான வார்த்தைகளை தவறாகத்தான் விளக்கஙம் கொடுத்துள்ளார்கள். இருப்பினும் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டபடியினால், கீழ் கோர்ர்ட்டாருடன் மாறுபட்டாலும், வழக்கின் புகாரை விசாரிக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நடத்தை உண்மையானால், மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது, இருப்பினும், இவ்வழக்கு காலந்தாழ்ந்து விட்டபடியால், விசாரிக்க ஆணையிடவில்லை. இருப்பினும் மறுபடியும் அத்தகைய முட்டாள்தனமன நடத்தை சமூகத்தின் எந்த பிரிவினராவது செய்ய முற்பட்டால், நிச்சயமாக சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்படித்த அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதார்கு சட்டப்பிரிவுகள் பொறுந்தும் என்று நாங்கள் விளக்கம் கொடுத்துள்ளோம். அதன்படியே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை கடுமையாக விமர்சித்ததற்காக ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? உச்சநீதி மன்றம் இவ்வாறு கடுமையாக ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை விமர்சனம் செய்ததற்கு, திட்டியதற்கு மேல்முறையீடு செய்யவில்லையே? அப்படியென்றால், “மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது”, என்றதை ஒப்புக்க்கொள்கிறார்களா? இன்றைக்கு திகவினர், பகுத்தறிவு புல்லர்கள், நாத்திக நொண்டிகள், உண்மைகளை மறைத்து எப்படி பொய்களைப் பரப்புகின்றனர் என்பதனை, இந்த உச்சநீதி மன்ற தீர்ப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

வேதபிரகாஷ்

11-09-2010

உண்மையான திராவிட இயக்கம், போலியான திராவிட இயக்கம்!

ஜூன் 6, 2010

சென்னை 05-06-2010:””தி.மு.க., தான் உண்மையான திராவிட இயக்கம். மற்ற கட்சிகள் எல்லாம் மக்களை ஏமாற்றத்தான் “திராவிட’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன,” என கருணாநிதி பேசினார். சேலம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., துணைச் செயலர் மோகன் தலைமையில், சேலம், நாமக்கல் மாவட்டங்களின், அ.தி.மு.க.,- ம.தி.மு.க., – தே.மு.தி.க.,- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 838 பேர், தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி, அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

கருணாநிதி முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து, “காமராஜர் காங்கிரஸ்’, “இந்திரா காங்கிரஸ்’, “மொரார்ஜி தேசாய் காங்கிரஸ்’ என உருவான அனைத்து கட்சிகளும், தங்கள் கட்சிகளின் பெயரில் “காங்கிரஸ்’ என்ற வார்த்தையை விடாமல் வைத்துக் கொண்டன. ஆனால், இன்று காங்கிரஸ் மட்டுமே இந்தியாவை ஆளுகின்ற கட்சியாக திகழ்கிறது.அதுபோல, அ.தி.மு.க., – தே.மு.தி.க., – ம.தி.மு.க., என எத்தனை கட்சிகள் இருந்தாலும், எல்லாமே தி.மு.க.,வில் இருந்து வந்த கட்சிகள் என்று சொல்கிற அளவிற்கு அக்கட்சிகளின் பெயர்களில் “திராவிட’ என்ற வார்த்தை உள்ளது.

எம்ஜியாரை வாழ்த்தி, இப்படி திட்டும் கலை கருணாநிதியிடம் தான் உள்ளது: “திராவிட’ என்ற வார்த்தையை,”அண்ணா’ என்ற பெயருடன் இணைத்துக் கொண்டு, பாமர மக்களை ஏமாற்றி, அ.தி.மு.க.,வினர் கொஞ்சம் காலம் கட்சியை நடத்தினர். சிறிதுகாலம் ஆட்சியும் செய்தனர். ஆனால், தி.மு.க., தான் இவர்களுக்கெல்லாம் மூலாதாரம், தலைமைப் பீடம் என, சொல்லும்படியாக அக்கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் தி.மு.க.,வில் இணைந்துள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர் தாய்மார்களாக இருப்பது, தி.மு.க, இயக்கம் மேன்மேலும் வலுவடைந்து வருகிறது என்பதை உணர்த்துகிறது. இன்னும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் தி.மு.க.,வில் இணைவர் என்ற நம்பிக்கை உள்ளது.

ஊழலையே ஊழலாக்கிய கலை யாரிடத்தில் உள்ளது? இன்றுகூட, தி.மு.க.,வின் ஊழலைப் பற்றி கூட்டம்போட்டு பேசுங்கள் என்று, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். உடல் முழுவதும் ஒட்டியாணம், நகைகள், வளையல்களை போட்டுக் கொண்டு நிற்கிற உருவத்திற்கு பெயர்தான் ஊழல்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

‡.˜.L. Uy|ÚU EÛUVÖ] ‡WÖ«P CVeL•; U¼\ÛY G¥XÖ• ÚTÖ¦
Lyp›¥ CÛQ• «ZÖ«¥ L£QÖŒ‡ ÚTor


ÙNÁÛ], ^ØÁ.6