எம்.ஜி.ஆர். தான் என்னை முதல்வராக்கினார்: முதல்வர் கருணாநிதி
First Published : 14 May 2010 01:09:34 AM IST
கருணநிதிக்கு கொஞ்சம் கூட மனசாட்சி, வெட்கம், மானம்………….முதலியவை இல்லை என்று தெரிகிறது. எம். ஜி. ஆரைத் திட்டியது, வசவு பாடியது ……………….முதலியவற்றை இங்கு எழுதினால் நாறிவிடும். ஏன், பெரியார், அவரது மனைவி பற்றிக் கூறியது……..முதலியவற்றை ஞாபகப் படுத்திக் கொண்டால், மனங்கள் கூசிக் குறுகிவிடும். இன்றைய தமிழ் இளைஞர்கள், ஆஹா, இவர்களா, இவ்வளவு அசிங்கமாக, ஆபாசமாக, கேவலமாக………………..பேசியிருக்கிறார்கள் ………..இவர்களைப் போய், நாம் தலைவர்கல் என்ரு எண்ணியிருந்தோமே………………என்று வெட்கப்பட்டு, தங்களது எண்ணங்களையே மாற்றிக் கொண்டு விடுவர். எங்களைப் போன்ற, இந்த ஆட்கள் பேசியதையெல்லாம் 50களினின்று நன்றாக கேட்டிருப்பதனால், அவர்களைப் பற்றி நிறையவே எழுதலாம் |
சென்னை, மே 13: அண்ணா மறைவுக்குப் பிறகு நான் தமிழக முதல்வர் ஆனதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
முதல்வர் பதவியில் 18 ஆண்டுகளை பூர்த்தி செய்து 19-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதல்வர் பதவியில் 19-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும், நிதியமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்து பேசினர். அப்போது குறுக்கிட்டு முதல்வர் கருணாநிதி பேசியது:
அண்ணா மறைந்த பிறகு யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர். எனது வீட்டுக்கே வந்து முதல்வர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கெல்லாம் முன்பு அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது அடுத்து யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்த நேரத்தில், என்னுடைய வீட்டிற்கே வந்து, என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதல்வராக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, இவர்தான் முதலமைச்சராக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என்று என்னுடைய வீட்டிலே உள்ளவர்களையெல்லாம் சமாதானப்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தார். என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார். என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார்.
குறிப்பாக முரசொலி மாறன், நீ வர வேண்டாம்; முதலமைச்சராக ஆகவேண்டாம்; அடுத்து மூத்தவரான நாவலர்தான் அதற்கு ஏற்றவர் என்று சொல்லியும்கூட, நானும், மாறன் வழியிலே நின்று கழகத் தோழர்களுக்கு எடுத்துச் சொல்லியும்கூட, அதையெல்லாம் கேட்காமல், உங்களை கொண்டுபோய் முதல்வர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன் என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார்.நான் முதல்வராக பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவித்த எனது குடும்பத்தினரையும், குறிப்பாக நாவலர் தான் முதல்வராக வேண்டும் என்று கூறிய முரசொலி மாறனையும் அவர் தான் சமாதானப்படுத்தினார்.
நான் இதை ஏதோ இன்றைக்கு வாழ்த்துரை அரங்கம் என்பதால் சொல்வதாகக் கருதிக் கொள்ளக்கூடாது. எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதைச் சொல்லியிருக்கிறேன். நானும் அவரும் வேகமாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டதுண்டு. ஆனால், அவரும் நானும் வாழ்ந்த, பழகிய நாற்பதாண்டு கால நட்பை நான் என்றைக்கும் மறந்ததில்லை.
அப்படி மறக்காத காரணத்தினால்தான், அவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டதும், புகைவண்டியில் வந்து நான் இறங்கி நின்றபோது, ரயிலடியில் அந்தச் செய்தி கிடைத்ததும் உடனடியாக ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று முதல் மாலையை அணிவித்தேன். இது மாதவன், ஜேப்பியார் போன்றவர்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.
எனக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தவர்களுக்கும், வாழ்த்த இயலாத சூழ்நிலையில் அவையில் இருப்பவர்களுக்கும் கனிவான அன்பை வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். எந்தப் பண்பாடும், நாகரிகமும் அரசியலில் தலைகாட்ட வேண்டும் என்று இந்தியாவின் மாபெரும் தலைவர்கள் பாடுபட்டார்களோ, அந்த நாகரிகம் சட்டப் பேரவையில் ஒரளவுக்கு ஈடேறியுள்ளது. அந்த நாகரிகம் முழுவதும் ஈடேற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.
நீதிமன்றத்தில் வாதாடி விட்டு வெளியே வந்து இரண்டு வக்கீல்களும் தோழமையோடு கைகோர்த்துக் கொள்வது போன்ற நிலைமை அரசியலிலும் வர வேண்டும்.
தில்லியில் சோனியா காந்தியும், அத்வானியும் திருமண விழாக்களில் அருகருகே அமர்ந்து குசலம் விசாரித்துக் கொண்டு அன்போடு பழகுகிறார்கள். இந்த நிலை தமிழகத்தில் இல்லையே என்ற பொறாமை எனக்கு ஏற்படுகிறது.
அண்ணா முதல்வராக இருந்தபோது சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டை காமராஜர் தான் தொடங்கி வைத்தார். அதன் பிறகு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் நான் கலந்து கொள்ளவில்லை. அதனை விவாதப் பொருளாக மாற்ற விரும்பவில்லை.
இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், அரசியல் காழ்ப்புணர்ச்சி தனிப்பட்ட வாழ்க்கையையும், பழக்கத்தையும், நட்பையும் கெடுக்கும் நிலை உருவாகி விடக் கூடாது.
திமுக தலைவர்களில் ஒருவரான என்.வி. நடராஜன் மறைந்தபோது அதிமுகவில் இருந்த நாஞ்சில் மனோகரன் 50 பேருடன் கருப்பு சட்டை அணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார். காமராஜர் காலம் வரையிலும், எம்ஜிஆர் காலம் வரையிலும் இந்த அரசியல் பண்பாடு இருந்தது.
என் தாய் மறைந்தபோது மருத்துவமனையில் இருந்து நான் வீடு திரும்பும் முன்பாக காமராஜர் என் வீட்டுக்கு வந்து என் தாயின் உடலுக்கு இறுதி மரியாதை செய்ததை என்னால் என்றும் மறக்க முடியாது.
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், மூதறிஞர் ராஜாஜி மறைந்தபோது தேம்பி, தேம்பி அழுதவர் பெரியார். அரசியலில் நட்பையும், நாகரிகத்தையும் பேணிக்காத்த தலைவர்கள் இவர்கள்.
காயிதே மில்லத் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த போது நான் அவர் அருகே சென்று ”ஐயா” என்று சொன்னதும், எங்கள் சமுதாயத்திற்கு நீங்கள் ஆற்றிய நன்றியை என்றும் மறக்க மாட்டேன் என்று கூறினார்.
அதைப்போலவே, பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்தபோது அவருக்கும் எனக்கும் இருந்த அரசியல் காழ்ப்புணர்வு எல்லோருக்கும் தெரியும். அவர் மறைந்தபோது ஆட்சிப் பொறுப்பிலே இருந்த நான், அவருக்கு சகலவிதமான அரசு மரியாதைகளோடும் அவரைத் தகனம் செய்கின்ற அந்தப் பணியை மேற்கொண்டதும் உங்களுக்கெல்லாம் மறந்து போய் விடக்கூடிய விஷயமல்ல.
அதைப்போலவே நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் வாழ்ந்த அந்தக் காலத்தில் ஒன்றாகவே இருந்த அந்தக் காலத்தில், சட்டசபையில் அவர் சொன்ன ஒரு கருத்து இன்னமும் என்னுடைய காதுகளிலே ஒலித்துக் கொண்டிருக்கிறது.காமராஜருக்கும் எனக்கும் எத்தனையோ அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் அவர் மறைந்தபோது சகலவிதமான அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. அதுபோல எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஹிந்தி மொழி எதிர்ப்பில் நானும், கருணாநிதியும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று எம்.ஜி.ஆர். பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது.
அரசியலில் ஏற்படும் காழ்ப்புகள் தனிப்பட்ட தோழமைக்கு விரோதமாக ஆகி விடக்கூடாது என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன். நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். எல்லாவற்றையும் விட தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்று இருக்கிறது. அதனைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது என்றார் கருணாநிதி.
ஒரு நிலையில், தான் ஒரு பெரிய ராஜ தந்திரி, தேர்தல் வரும் சமயத்தில் இப்ப்டியெல்லாம் பேசினால், ஓட்டுகள் கிடைக்கும். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் எல்லாம் இவர்க்கு ஓட்டு போடுவார்கள் என்று இவருக்கே உரித்தான சூழ்ச்சியுடன் பேசலாம்.
ஆனால், மக்கள் மறக்க மாட்டார்கள்.
இன்றைய நிலையில், அரசியலை மக்களை வெகுவாக பாத்திதுள்ளது.
தங்களை பிழிந்தெடுத்துள்ளது, கசக்கிப் பிழிந்துள்ளது; சாப்பிட்டிற்கே கஷ்டப்பட்டு ஒழைக்க வேண்டியிருக்கிறது.
ஆனால், கோடிகலில் கொள்ளையெடித்த அரசியல்வாதிகள், ஜாலியாக வாழ்க்கையை குளு-குளு கார்களில், அறைகளில்……………….அனுபவித்துக் கொண்டிருக்கிறர்கள்.