Archive for the ‘பேஜவார் மடம்’ Category

அணில் வேலை செய்கிறது, அணில்கள் வேலை செய்கின்றன, கலியுகத்திலும் அணில்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன (3)

ஜூலை 7, 2021

அணில் வேலை செய்கிறது, அணில்கள் வேலை செய்கின்றன, கலியுகத்திலும் அணில்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன (3)

அணில் போன்று சேவை செய்யும் அர்ஜுன்
தனது கைகளினால் வேலை செய்யும் அர்ஜுன் – அணில் போன்று சேவை செய்யும் அர்ஜுன்
கும்பாபிஷேகம் முடித்து, ஸ்வாமிகள் பிரசாதம் கொடுக்கிறார்.

அர்ஜுன் போன்ற அணில்கள் சேவை செய்து கொண்டிருக்கின்றன: தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்துக்களுக்கு, மடங்களுக்கு, மடாதிபதிகளுக்கு, நம்பிக்கைகளுக்கு மரியாதை, பாதுகாப்பு, போற்றல், ஆதரவு முதலியவை தொடர்ந்து இருந்து வருகின்றன. மத்வ சம்பிரதாயத்தில், மண்ணிற்குத் தான் மகிமை. ஶ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் (மூல பிருந்தாவனத்தில் இருந்து புண்ணிய எடுக்கப் பட்ட மண் மிருத்திக என்று சொல்லப் படும். மண் மட்டுமல்லாது, அந்த வார்த்தையும் புனிதத்துடன் தொனிக்கப் படும், பாவிக்கப் படும். அத்தகைய புண்ணிய மண் எடுத்து மற்ற இடங்களில் பிருந்தாவனங்கள் நிறுவப்பட்டன, நிறுவப் படுகின்றன. அதனால், அவற்றிற்கு அதே மரியாதை, போற்றல், சடங்குகள், கிரியைகள் முறையாக நடக்கும். அதுபோல இங்கு, பேஜேவர் மட ஸ்வாமிஜி[1]  அயோத்தியாவிலிருந்து, புனித மண்ணை எடுத்து வந்து, இங்கு, இக்கோவில் நிறுவ ஆவண செய்து வைத்தார். இப்பொழுதும், கும்பாபிஷேகம் முடித்து வைத்தார்.  மண், சாம்பல், யாக ஆகுதி முதலியவற்றிற்கு அத்தகைய புனிதத் தன்மை உள்ளது, மதிக்கப் படுகிறது. அவற்றைப் பற்றிய சில உதாரணங்கள் கீழே விவரிக்கப் பட்டுள்ளன. ஆனால், இங்கோ – தமிழகத்தில் எல்லாமே பகுத்தறிவு, பெரியாரிஸம், நாத்திக போர்வைகளில், தொடர்ந்து தூஷிக்கப் படுகின்றன. இந்துக்கள் மனரீதியில், உடல் ரீதியிலும் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகிறார்கள்[2].

கொரோனா தடுப்பு விதிமுறைக்ளுடன் பக்தர்கள் வருகிறார்கள், சேவிக்கிறார்கள்.

அணில் வேலை செய்கிறது, அணில்கள் வேலை செய்கின்றன, கலியுகத்திலும் அணில்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன: எவ்வளவு சிறிய உயிரினம் ஆனாலும், மக்களுக்கு உதவ வேண்டும், சேவையில் ஈடுபட்டு பணியை செய்ய வேண்டும், அதில் உருண்டு திளைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு, வேலை செய்தது அணில். ராம பிரான் அதன் சேவையை மெச்சி, அன்பாக தடவிக் கொடுத்தார்.  அதாவது, லங்கைக்குச் சென்று படைகளோடு கடக்க குருக்கில் இருக்கும் கடலுக்கு, அத்தீவுக்கும் இடையே பாலம் கட வேண்டும். ராமரிடம் பலவித தொழிற்நுட்ப வல்லுனர்கள் இருந்தனர். பணிகள் நடந்து பாலம் கட்டியாகி விட்டது. அப்பொழுது, ஒரு அணில் மண்ணின் மேற்பரப்பில் உருண்டு கொண்டிருப்பதைக் கண்டு ராமர் கேட்டார், “நீ ஏன் அவ்வாறு செய்து கொன்டிருக்கிறாய்?” அணில், “நானும் உங்கள் பாலம் கட்டிய பணியில் கலந்து கொண்டு, நீங்கள் எல்லோரும் நடந்து செல்ல வசதியாக இவ்வாறு உருண்டு மண்ணை சமன் படுத்துகிறேன்”, என்றது. அதன் சேவையை மெச்சி, அப்பொழுது, அதன் முதுகில் அன்போடு தடவி கொடுத்தார். அப்பொழுது மூன்று கோடுகளாக மாறியது. அதாவது, மண் நிறைந்த அதன் முதுகை நான்கு விரல்களால் தடவிக் கொடுத்த போது, மூன்று விரலிடைகளில் மண் அப்படியே இருக்க அது அடையாளமாகியது. சேவையின் மேன்மையைப் போற்றும் வகையில், பணியின் மகத்துவத்தை சிறப்பிக்கும் முறையில், வேலையின் உழைப்பை மதிக்கும் நிலையில் பரிசாக, விருதாக, தெய்வத்தின் தானமாக கிடைத்த அடையாளமாக பாவிக்கப் பட்டது. பின்னர் மகாபாரத்தில் கீரிப்பிள்ளை சம்பவம் விவரிக்கப் படுகிறது.

ராமரின் அணிலும், மகாபாரத கீரிப்பிள்ளையும் – கற்க வேண்டிய படிப்பினைகள்

கீரிப் பிள்ளையும், குருக்ஷேத்திர யுத்தமும், தருமனின் யாக ஆகுதி சாம்பலும், கீரிப்பிள்ளையும்[3]: குருக்ஷேத்திர யுத்தத்திற்குப் பிறகு, இந்திரபிரஸ்தத்தில், தான் பெற்ற மகத்தான வெற்றிக்கு, அஸ்வமேத யாகம் சிறப்பாக நடத்தி முடிக்கிறான். யாகம் முடிந்து விட்டது. ஆகுதி குறைந்து விட்டது. சாம்பல் உருவாகி விட்டது. ஆனால், தருமனுக்கு கொஞ்சம் அகம்பாவம் வந்து விடுகிறது. ஆஹா, நான் வெற்றி பெற்று மஹாராஜன் ஆகிவிட்டேன் என்று நினைத்தபடி உட்கார்ந்து கற்பனை செய்து கொண்டிருக்கிறான். அப்பொழுது, ஒரு கீரிப்பிள்ளை வந்து, அந்த சாம்பலைப் பார்த்து, அதில் வந்து உருளுகிறது. தருமனுக்கு சிந்தனை சிதற கோபம் வருகிறது. கீரிப்பிள்ளையோ விடாமல் புரண்டு பார்க்கிறது.

யுதிஸ்ட்ரன் – தருமராஜன் தருமனாகிறான். “கீரிப்பிள்ளையே, உனக்கு என்ன வேண்டும்?,” என்று கேட்கிறான்.

“எனக்கு ஒன்றும் வேண்டாம். இங்கோ ஏதோ மிகப் பெரியப-சிறந்த யாகம் நடந்தது என்று கேள்விப் பட்டேன். அதனால், இங்கு வந்தேன்”

“அப்படியா, சரி நீ என்ன எதிர்பார்க்கிறாய்?”

“முன்பு, ஒரு ஏழைப் பராரி பிராமணனின் வீட்டு அடுப்பு சாம்பலில் உருண்ட போது, என்னுடைய உஅலின் ஒரு பகுதி தங்கநிறமாகி விட்டது. பிறகு முனிவர்களிடம் வழி கெட்டபோது. எங்கெங்கெல்லாம் யாகம் நடக்கின்றனவோ, அங்கெங்கெல்லாம் சென்று ஆகுதி சாம்பலில் உருண்டு பார், மேன்மை இருந்தால், உனது ஆசை தீரும் என்றனர். ஆனால், இங்கும் ஒன்றும் நாக்கவில்லை”

“அதாவது, எனது யாகமும் அந்த அளவுக்கு சிறப்பில்லை போன்றிருக்கிறது,” என்று யோசித்து, ஆணவம் குறைந்து, சித்திக்க ஆரம்பித்தான்.

“தருமரே நன்றி நான் சென்று வருகிறேன், ” என்று அந்த கீரிப்பிள்ளை சென்று விட்டது.

தமிழக கொக்கோக கவிப்பெருங்கவிக்கோக்களுக்கு அணிலைப் பற்றி சரியாமல் இருபது அவர்களது பேதமையை வெளிப்படுத்துகிறது: தமிழகத்திற்கும், அணிலுக்கும் அடிக்கடி தொடர்பு, சந்தர்ப்பம், விவாதம்  வந்து விடுகின்றன. கொக்கோக திராவிட நாசகார கவிக்கோக்களுக்கு மூன்று கோடுகள், இரண்டு கோடுகளாகின்றன[4]. மூன்று என்பது, திராவிடத் தலைவர்களுக்குப் பிடித்த வார்த்தை மற்றும் செயல்பாட்டு எண் வடிவம், குறியீடு, அடையாளமும் ஆகும். மனை, துணைவி, கூட இருப்பவள் என்றெல்லாம் வாழ்க்கை கணக்குகள் நடந்தன, நடக்கின்றன[5]. ஆனால், பக்தர்களுக்கு அணில் மகிமை சரியாகத் தான் புரிந்திருக்கிறது. ராமர் அணிலின் சேவையை மெச்சி, அதன் முதுகில், தடவி கொடுத்தார். அப்பொழுது மூன்று கோடுகளாக மாறியது. அதாவது, மண் நிறைந்த அதன் முதுகை நான்கு விரல்களால் தடவிக் கொடுத்த போது, மூன்று விரலிடைகளில் மண் அப்படியே இருக்க அது அடையாளமாகியது. ஆனால், இந்த கொக்கோக சிறுமதி கவிஞர்களுக்கு கணக்கு தெரியாது போலும். அதனால், “அணில் முதுகில் இராமர் மூன்று கோடு போட்ட மாதிரி,” என்று எழுதினான் அவன்[6]. இவன்கள் எப்படி தடவுவார்கள் என்பது அவர்களுக்குத் தான் தெரியும். ஒரு கையில் ஐந்து விரல்கள், இரண்டு கைகளில் பத்து விரல்கள் என்றிருக்கும் போது, குடிபோதையில், எப்படி-எப்படியோ தடவி இருப்பார்கள்.  “ஐந்து விரலால் நான் உன்னை தொட்ட போது எப்படி? ஜிங்கிடிசாம், ஜிங்கிடிசாம், ஜிங்கிடிசாம்,” என்று பழைய பாடலும் உண்டு[7], ஆனால், இது போன்ற வக்கிரம் இல்லை. ராமர் எந்த இஞ்சினியரிங் காலேஜில் படித்தார், என்று கருணாநிதி கேட்டது, அத்தகைய வக்கிரத்தின் உச்சம். இன்று அதே திராவிட பாரம்பரியம் அணில்களால் மின்சார கம்பிகள் பாதிக்கப் படுகின்றன என்ற அளவுக்கு, பகுத்தறிவு வளர்ந்துள்ளது.

© வேதபிரகாஷ்

07-07-2021

ஸ்டாலின் துர்கா, அர்ஜுன் குடும்பத்தாருடன்
ஶ்ரீ ஆஞ்சநேயர் விக்கிரகத்தின் பீடம்
விக்கிரகத்தின் மேலே அபிஷேகம், விசேஷ பூஜைகள் செய்ய, ஒரு மேடை அமைக்கப் பட்டுள்ளது.
அதில் 40 பேர் இருந்து தெய்வ காரியங்களை செய்யலாம்


[1] உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.

[2]  இவற்றைப்பற்றி என்னுடைய பிளாக்குகளில் விவரமாக பதிவு செய்துள்ளேன்.

[3]  மகாபாரதத்தில் அஸ்வமேத மற்றும் அனுகீத பருவங்களில் (1. Aswamedhika Parva (Chapters: 1–15) 2. Anugita Parva (Chapters: 16–96)) வரும் இந்த கதை சிறிது வேறுபாடுகளுடன் உரையாசிரியர்கள் எழுதி வருகிறார்கள். யாகமறுப்பு போன்ற கருத்துகள் இருப்பதால், இது ஜைன-பௌத்த இடைச்செருகல்கள் என்றும் கருதப் படுகின்றது.

[4] இரண்டு மனைவிகளை (தெரிந்தும், தெரியாமலும்) வைத்திருக்கும் நிலை. இது திராவிட பாரம்பரியத்தில் சிலருக்கு சகஜமாகி விட்டது.

[5]  சில திராவிடத் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் கூட பின்பற்றியது, இன்றைக்கு ஆதரித்து பேசும் நிலைக்கு வந்தாகி விட்டது.

[6]  திருவாச்சி படத்தில் வைரமுத்து எழுதின சினிமா பாடல்.

[7] 1969ல் வெளிவந்த மேஜர் சந்திரகாந்த் பாடலில், “நேற்று நீ சின்ன பாப்பா இன்று நீ அப்பப்பா ஆயிரம் கண் ஜாடையோ,” இந்த வரி வரும். வாலியின் பாடல்.

கோவிலுக்கு வருகிறவர்கள் தியானம் செய்ய, தியான மண்டமும் கட்டப் பட்டுள்ளது.
சுற்றியுள்ள சன்னிதிகள் – நாகதேவதைகள்.
விநாயகர் சன்னிதி
ஶ்ரீ ராமர் கோவில், சன்னிதி
உள்ளே இருக்கும் ஶ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணர் விக்கிரங்கள்

அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் – அர்ஜுன் கட்டிய கோவில், ஸ்டாலின் துர்கா விஜயம்! (2)

ஜூலை 7, 2021

அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் – அர்ஜுன் கட்டிய கோவில், ஸ்டாலின் துர்கா விஜயம்! (2)

அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம்: தமிழ் சினிமா துறையில் ஆக்‌ஷன் கிங் என அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் ஒரு தீவிர ஆஞ்சநேயர் சுவாமி பக்தர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இவர் சென்னை போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவில் கட்டியுள்ளார்[1]. அர்ஜுன் புதியதாக கட்டிய கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த கோயில் தனது 17 வருட கனவு என்று கூறியுள்ள அர்ஜுன், கோயிலில் 180 டன் எடைகொண்ட ஒற்றைக்கல் ஆஞ்சநேயர் சுவாமி சிலை சிறப்பம்சமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்[2]. அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் சுவாமி கும்பாபிஷேகம் விழாவையடுத்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய மனைவி துர்கா ஸ்டாலின் இந்த கோயிலுக்கு சென்றுள்ளார். துர்கா ஸ்டாலின் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்ற புகைப்படம் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஒருவேளை முதலமைச்சரையே வருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கலாம், இருந்தாலும், “சிறந்த பக்தையான” தனது மனைவியை “சென்று வா,” என்று பணித்திருக்கலாம். அரசியல் ரீதியில், இதுவும் ஸ்டாலினுக்கு லாபம் தான்!

ஶ்ரீ ஆஞ்சநேயர் கோவில் நுழைவாயில்
ஶ்ரீ ஆஞ்சநேயர் கோவில் நுழைவாயில் – துவார பாலகர்கள்
நிறுவ பட்ட தியான ஆஞ்சநேயர்

ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்ய தூண்டியதுஅஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம்: தான் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் குறித்து நடிகர் அர்ஜூன் கூறுகையில் “இந்த கோவில் என்னுடைய 17 வருட கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை. தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் பலரின் ஆதரவும் என்னை மேலும் மேலும் இந்த நற்செயலை செய்ய தூண்டுதலாக இருந்தது. இருப்பினும் இந்த கோவிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்ய தூண்டியது என்பது தான் உண்மை. 2004- எஃபக்டை / விளைவை மனதில் வைத்துக் கொண்டு, கூறுகிறார் என்று தெரிகிறது.

அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம்கோவிலில் உள்ள மற்ற சன்னிதிகள்: ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது. இது தான் முதல் 180 டன் எடையுடய ஶ்ரீ ஆஞ்சநேயர் சிலை என்று கூறுகின்றனர். ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளது. பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலின் பிரதிஷ்டை செய்து கொடுத்தார். மேலும் ஒரு சிறப்பம்சமாக பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலுக்கு வருகை தருவதற்கு முன்பு அயோத்திக்கு சென்றிருந்தார். அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேயசுவாமி மந்திரம் கோயிலின் பிரதிஷ்டை செய்ய விஜயம் செய்த சுவாமிகள் தன்னுடன் அயோத்தியின் மண் எடுத்து வந்திருந்தார். அந்த மண்ணின் மீது இந்த கோவிலின் ஶ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சிங்காரச் சென்னையில் எந்த மண் இருந்தது என்று தெரியவில்லை, ஆனால், அம்மண்ணில் பலமுறை விநாயகர் சிலைகள் ஈவேரா-பெரியாரால் உடைக்கப் பட்டுள்ளன. மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில், அப்பாவி பிராமணர்கள் வெட்டப் பட்டுள்ளனர். ஆனால், அதே இடத்திற்கு அயோத்தியிலிருந்து மண் வந்தது என்றால், நினைத்துப் பார்க்க வேண்டும்.

அயோத்தி மண்ணும், சிங்காரச் சென்னை மண்ணும், பெரியா மண்ணும்: பகுத்தறிவின் பெயரால், திக, திமுக, கம்யூனிஸ்ட், சில நேரங்களில் காங்கிரஸ் வகையறாக்களும் பித்து பிடித்தால் போல, “பெரியார் மண்” என்றெல்லாம், தொடர்ந்து பேசி வருவது தெரிந்த விசயமே. இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும், ஏதோ அறநிலையத் துறையினையே பல சோப்புகள், பினாயில், டெட்டால் எல்லாம் ஊற்றி, சுத்தமாக கழுவி, தூய்மைப் படுத்துவது போல, தினம்-தினம் செய்திகள் வந்து கொண்டியிருக்கின்றன. இரண்டு ஆண்டுகளாக கோவில்கள் பூட்டப் பட்டிருக்கின்றன. தினசரி, மாதாந்திர, பட்ச, வருடாந்திர விழாக்கள், கிரியைகள், சடங்குகள் நடக்காமல் இருக்கின்றன. ஆகம சாத்திரங்களின் படி நடக்கவில்லை என்பது தெரிந்த விசயமே. பௌர்ணமி-அமாவாசை வந்து செல்கின்றன. ஆனால், அவற்றைப் பற்றி கவலைப் படாமல், கோவில் சொத்து, நிலம், பாக்கி என்று நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பாக்கி வைத்திருக்கும் வாடகை, குத்தகை பணம் வசூலிக்கப் படவில்லை. லட்சக்கணக்கில் ஆக்கிரமிப்புகளை செய்தவர்கள் – துலுக்கர்-கிருத்துவர்-நாத்திகர்-இந்துவிரோதிகள் உட்பட, யாரையும் விரட்டியடிக்கப் படவில்லை, இதுவரை அனுபவித்த சொத்துக்களுக்கும் பாக்கி வசூலிக்கவில்லை. ஆனால், சீதா கிங்ஸ்டன் பள்ளிக்காரர்கள், எங்களால் முடியவில்லை என்று, இததனை ஆண்டுகள் வாடகைக் கொடுத்தவர்களை சட்டப்படி வெளியேற்றி விட்டார்கள். ஆனால், அதே சட்டம் மற்ற கிரிமினல்களை, சட்டமீறல் செய்தவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஆக ஆழ்வார்கள்-நாயமார்கள் பிறந்த புண்ணிய பூமி, பெரியாரிஸ நாத்திக பூமியாகி, பிறகு பெரியார் மண்ணாகியப் பிறகு, எல்லாமே, மண்ணோடு மண்ணாகி போகும் நிலைக்கு வந்து விட்டது. திருமூலரின் மந்திரங்களும் பொய்த்து விட்டன போலும். காலமேகப் புலவர் இருந்திருந்தால், பாடியே மண்மாரி வரவழைத்து, இந்த நாத்திக மண்ணை மூடியிருப்பார்.

அவரது (துர்கா ஸ்டாலின்) வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது” – நடிகர் அர்ஜுன் பெருமிதம்![3]: “இன்று தமிழ்நாடு முதல்வர் திரு.மு..ஸ்டாலின் அவர்களின் துணைவி துர்கா ஸ்டாலின் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேயசுவாமி மந்திரம் கோவிலுக்கு வந்து ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் தரிசனம் பெற்றார். அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது[4]. விரைவில் இந்த கோவில் பொது மக்களுக்காக திறக்கபடவுள்ளது. கொரோனாவால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் கடவுளின் அனுக்கிரங்களும் ஆசியும் மக்கள் அவசியம். கடவுளின் அருள் மக்களுக்கு கிடைக்க வேண்டும், அவர்களின் வாழ்வில் துன்பம் மறைந்து இன்பம் பெருக வேண்டும் என்பதே என் ஆசை,” என்று கூறினார். நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்று வணங்கி இருக்கிறார்[5]. அவர் கோயிலில் ஒற்றைக்கல் ஆஞ்சநேயர் சிலை முன்பு இருக்கிற புகைப்படம் வெளியாகி சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில், நடிகர் அர்ஜுன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது[6]..

© வேதபிரகாஷ்

07-07-2021


[1] தமிழ்.நியூஸ்.18, Arjun: ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த நடிகர் அர்ஜுன்!, NEWS18 TAMIL, LAST UPDATED : JULY 02, 2021, 09:55 IST

[2] https://tamil.news18.com/news/entertainment/cinema-anjaneyar-temple-built-by-actor-arjun-scs-494581.html

[3] நக்கீரன், அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது” – நடிகர் அர்ஜுன் பெருமிதம்!, நக்கீரன் செய்திப்பிரிவு –ஸ்டாலின், Published on 03/07/2021 (10:12) | Edited on 03/07/2021 (10:35).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/her-visit-made-us-very-happy-actor-arjun

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில்… 180 டன் ஒற்றைக்கல் சிலைதுர்கா ஸ்டாலின் தரிசனம்!, Written By WebDesk, Updated: July 2, 2021 10:36:47 pm.

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/durga-stalin-visits-at-actor-arjun-build-new-temple-319623/

ஆக்ஸன் கிங் அர்ஜுன், ஜெய்ஹிந்த் அர்ஜுன், ஆஞ்சநேயர் பக்தராக, அயோத்தியா மண்ணெடுத்து, கர்நாடக கல்லில் சமைத்து, சிங்கார சின்னையில் கோவில் கட்டியது! (1)

ஜூலை 7, 2021

ஆக்ஸன் கிங் அர்ஜுன், ஜெய்ஹிந்த் அர்ஜுன், ஆஞ்சநேயர் பக்தராக, அயோத்தியா மண்ணெடுத்து, கர்நாடக கல்லில் சமைத்து, சிங்கார சின்னையில் கோவில் கட்டியது! (1)

சென்னை கூகுள் நகரமைப்பு, சாலைகள், முக்கியமான இடங்களை பற்றிய விவரங்கள் காண்பிக்கும் கூகுள் மேப்.

நடிகர் அர்ஜுன் தோட்டம் (Actor Arjun Gardens) இருப்பிடம்:  நடிகர் அர்ஜுன் தோட்டம் – வடக்கு-போரூர், கிழக்கு – சென்னை விமான நிலையம்; தண்டலம்; தெற்கு மதனபுரம் (பம்மலலிக்கு மேல்) இடையே அமைந்துள்ளது. அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த கோவிலை கட்டியுள்ளார். அதன் இருப்பிடத்தை “கூகுள் மேப்பில்,” காணலாம். அந்த தோட்டத்தில் வடகிழக்கு மூலையில் அக்கோவில் அமைந்துள்ளது. அச்சிலையின் உயரம் (height), நீளம் (length), மற்றும் அகலம் (width) முறையே 32 x 12 x 7 (feet respectively) அடிகள் என்றுள்ளது. அச்சிலையின் எடை உருவம் மற்றும் பீடம் சேர்த்து 140 / 180 டன்கள். அச்சிலை, விக்கிரகம், பிரதிமை, உருவம் சிற்ப சாத்திரங்களின் படி வடிவகைக்கப் பட்டுள்ளது. இங்கு தியான ஆசனத்தில், தியான முத்திரையுடன், தியான ஆசனத்தின் / பீடத்தின் மீது இருப்பதாக, அவ்விக்கிரகம் செதுக்கப் பட்டுள்ளது. கோவிலைக் கட்டுகிறவர் விக்கிரகத்தை ஸ்தாபிக்கும் போது, அவரால் வேலை முடிக்கப் படும் என்ற வழக்கம் இருப்பதால், பீடத்தில் சில சிற்பம் முழுவதுமாக இல்லாததை, அர்ஜுன் முடிப்பது வீடியோக்களில் காணலாம்.

ஶ்ரீ ஆஞநேயர் விக்கிரகத்தின் அளவுகள் – ஒரே கல்லினால் வடிக்கப் பட்ட விக்கிரகம்
நடிகர் அர்ஜுனனின் தோட்டம் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் இருப்பிடங்களை மேப்பில் காணலாம்.
கோவிலில் அருகிய தோற்றம்.

அர்ஜுனக்கும், ஆஞ்சநேருக்கும் என்ன சம்பந்த, தொடர்பு அல்லது அர்ஜுனனின் விருப்பம் என்ன?: இக்கேள்வி கேட்ட போது, அர்ஜுன் கொடுத்த விளக்கம், “ஆஞ்சநேயர் எனது நண்பர். எனது விருப்பமான மிகப்பெரிய மனித வீரர். எனது குழந்தைசிறுவயதிலிருந்தே அவருடன் விருப்பமானதொடர்பு இருந்தது. நான் தினமும் மனதார வேண்டுவதோடு அல்லாமல், அவருடன் அடிக்கடி பேசி வந்தேன். அவர் தான் எனக்கு எல்லாமே. அவர் உருவில் தான் எல்லொரும் என்னிடம் வருகிறார்கள், உதவுகிறார். எனக்கு ஆஞ்சநேயர் விக்கிரங்களை எனக்கு பரிசாக அளிக்கின்றனர். ஆகையால், காலத்தை வென்று, நிலைத்து நிற்பது போல எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவ்விதமாகத்தான், இந்த கோவிலைப் பற்றிய கட்ட வேண்டிய திட்டம் உருவாகியது. இது மாதிரி என்னால், செய்ய முடியுமா என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. இருப்பினும் எல்லோருடைய உதவியால், பெரியவர்களின் ஆசிர்வாதத்தால், வேலை ஆரம்பித்தாகி விட்டது. 2004ல், தெலுங்கில்வீர ஆஞ்சநேயம்என்ற படத்தில் நடித்தேன். அது பெரிய அளவில் வெற்றியடைந்தது. அப்பொழுதிலிருந்து, கோவில் கட்ட வேண்டும் என்பது உறுதியானது. கோவில் பணிகள் இவ்வாறு நடந்து முடிந்தது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.”

இது அவரது மனமார பக்தி, பற்றுதல் சிறந்த ஆன்மீக பக்குவத்தைக் காட்டுகின்றது.

17 வருட கனவின் ரகசியம், காத்திருப்பு முதலியவற்றின் பின்னணி இதுதான்[1]:  அர்ஜுன் சொன்னது, “2004ல், தெலுங்கில்வீர ஆஞ்சநேயம்என்ற படத்தில் நடித்தேன். அது பெரிய அளவில் வெற்றியடைந்தது. அப்பொழுதிலிருந்து, கோவில் கட்ட வேண்டும் என்பது உறுதியானது. கோவில் பணிகள் இவ்வாறு நடந்து முடிந்தது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.” அப்படத்தில், அஞநேயர் மனித உருவில் வந்து மக்களுக்கு உதவுவதாகச் சித்தரிக்கப்பட்டது. அவ்வேடத்தில் அர்ஜுன் நடித்தார். “அஞ்சி” என்றவனை காப்பாற்ற, அவன் உருவிலேயே வருவதாக இருக்கும். அப்படம் “பிளாக் பஸ்டர்” படமாகியது. ஆகவே, 2004லிருந்து மனத்தில் ஆரம்பித்து, போட்டு வைத்த திட்டம் 2021ல் பூர்த்தியடைந்துள்ளது[2]. தெலுங்கு நாளிதழ்கள், சஞ்சிகைகள் இதைப் பற்றி முன்னரே செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன[3]. கும்பாபிஷேகம் நடக்கும் என்பதையும் முன்னரே குறிப்பிட்டன[4]. 2004-2021, அதுதான் அந்த 17 வருட காலம். அவ்விக்கிரகம் செய்து முடிக்கவும் ஏழு மாதங்கள் ஆகின.  கர்நாடகாவில் செய்யப் பட்டு, இங்கு பெரிய டிரைலர் வண்டியில் எடுத்து வரப் பட்டு[5], பிறகு கிரேன் மூலம், கெருகம்பாக்கம் தோட்டத்தில், விக்கிரம் இறக்கப் பட்டது, குறிப்பிட்ட இஅத்தில் வைக்கப் பட்டு போன்ற விவரங்களையும் கொடுத்துள்ளன[6]. சில பக்தர்களுக்கு இத்தகைய பாக்கியம் எல்லாம் கிடைக்கிறது. மனது இருக்கிறது, செய்து முடிக்கிறார்கள். பணம் இருப்பவர்களும், பக்திமான்களாக இருந்தாலும், சிலரே, இத்தகைய திருப்பணிகள், புனர்-நிர்மாணம், பழுது பார்த்தல் போன்ற காரியங்களை செய்து வருகிறார்கள்.

பலமொழிகளில் பேசி விளக்கும் அர்ஜுன், வீடியோவிலிருந்து எடுக்கப் பட்ட புகைப்படம்.
நன்றி நான் – ஸ்டாப்-நியூஸ்.

ஆஞ்சநேயர் கோவில் பற்றி தென்னக மொழிகளில், ஆங்கிலத்தில் பேசி விவரித்த அர்ஜுன்: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளில் பேசி, பக்திமயத்துடன், அடக்கமாக, அமைதியாக நிகழ்சியைப் பற்றி விவரித்துக் கூறியது சிறப்பாக இருந்தது.  அவரது கன்னட உச்சரிப்பு அந்த அளவுக்கு ஸ்வச்சமாக, சுத்தமாக, தெளிவாக இருந்தது. உண்மையில் அது மற்றவர்களுக்கும் புரியும் படியும் இருந்தது, உதாரணத்திற்கு சில வரிகள்: கருணாநிதி தெய்வ ஸ்வ்ருபராகியிருத்த நம்ம பேஜாவரு ஸ்மாமிகுளு இல்லி பந்து அவர ஒந்து தரிசன கொட்டு, ……….

அவர அம்ருத ஹஸ்தனிந்த, தேவரினன்ன பிரதிஸ்டாபரண மாடிதார…………..

இந்த எச்சு நமக பேரே பேகாயிது அல்ல……………… தும்ப இவத்து ……

.நன அதினாறு வருசத 16 years கெலச இவுத்து ஆகதாத…….”

பிறகு தமிழில், குழந்தை போல இயற்கையாக, “ஸ்வாமிஜி இங்கு வர வேண்டிய ப்ரோக்ராம் இல்ல….. அயோத்தியாவுக்கு போயிந்தாரு அங்கிருந்து வரும் போது பிரசாதம் கொண்டு வந்தார்……….   அயோத்தி மண் கொண்டு வந்தார் அதை தான் இங்கு வைத்து, பூமி பூஜை நடந்து கோவில் கட்டப் பட்டது. ………..அதனால், இது இன்னொரு அயோத்யா என்பேன்……,”  என்றும் பேசினார்!

அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

கோவில் விக்கிரகம், மற்ற விவரங்கள்: நடிகர் அர்ஜுன் சென்னை போரூரில் கெருகம்பாக்கத்தில்கட்டியுள்ள புதிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார். அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த கோவிலை கட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் கொய்ரா என்ற கிராமத்தில் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்று சிலையை வடித்து, 22 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக்கில் ஏற்றி கெருகம்பாக்கத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் விசேஷ பூஜைகள் செய்து பெரிய கிரேன் மூலம் அந்த சிலை சாமி பீடத்தில் அமர்த்தப்பட்டது[7]. உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவிலாக இதனை உருவாக்கி வருவதாகவும் கோவிலின் உள் பிரகாரம், வெளிபிரகாரம் கட்டும் வேலைகள் நடந்து வருகின்றன என்றும் அர்ஜூன் தெரிவித்து இருந்தார்[8]. பல வருடங்களாக நடந்த கோவில் கட்டும் பணி தற்போது முடிந்துள்ள நிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சில விஷேச பூஜைகள் மற்றும் கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்த அர்ஜுன், தனது யூடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிப்பரப்பை செய்தார். பின்னர் அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அர்ஜுன் கட்டிய புதிய கோயிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய மனைவி துர்கா ஸ்டாலின் சென்று தரிசனம் செய்திருக்கிறார்.

© வேதபிரகாஷ்

07-07-2021


[1] குமுதம், 17 வருட கனவு நிறைவேறியதுஆஞ்சநேயர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த நடிகர் அர்ஜுன்!, kumudam bookmark line | CINEMA| Updated: Jul 03, 2021.

[2] https://www.kumudam.com/news/cinema/33784

[3] இ.டிவி.பாரத், நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்!, Published on: Jun 29, 2021, 5:09 PM IST.

[4] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/sitara/cinema/anjaneyar-temple-kumbabishekam-built-by-actor-arjun/tamil-nadu20210629170945420

[5] இ.டிவி.பாரத், 17 ஆண்டு கனவு: 180 டன் எடையில் ஆஞ்சநேயர் சிலை உருவாக்கிய அர்ஜுன், Published on: Jul 2, 2021, 7:34 PM IST.

[6] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/sitara/cinema/arjun-anjaneyar-temple-festival-held-in-chennai/tamil-nadu20210702193416097

[7] தினத்தந்தி, நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில், பதிவு: ஜூன் 30,  2021 07:28 AM.

[8] Published on 03/07/2021 (10:12) | Edited on 03/07/2021 (10:35).