Posts Tagged ‘கற்பனை உரையாடல்’

நான்தான் ஜெயேந்திரன் பேசுகின்றேன்! விடுதலையில் நக்கல் – இதேமாதிரி மற்றவரும் பேசுவதுதானே?

ஓகஸ்ட் 1, 2010

நான்தான் ஜெயேந்திரன் பேசுகின்றேன்!

மின்சாரம்

http://www.viduthalai.periyar.org.in/20100731/snews01.html

திகவினர், இதே மாதிரி மற்ற கிருத்துவ, முஸ்லீம் மதத்தலைவர்கள், சாமியார்கள், போப்பு-காஜிகள், பிஷப்-முல்லாக்கள், பாஸ்டர்-மஸ்தான்கள், முதலியோரைப்பற்றி எழுதினால், அவர்களது செக்யூலரிஸ நாத்திகத்தை மெச்சலாம்!

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதிமீது கொலைக் குற்றம் இருந்தும், காமவெறியர் என்று மக்களால் தூற்றப்பட்டும்கூட அவருக்கு 76ஆம் ஆண்டு பிறந்த நாளை ஜெயந்தியை வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ஆசாமியும் கொஞ்சமும் லஜ்ஜையின்றி

ராஜ நடை போட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்.

சங்கை கெட்டுப் போன சங்கராச்சாரியாரை பார்ப்பனர்கள் தூற்றுவதில்லை; விட்டுக் கொடுப்பதில்லை. காரணம் இனவுணர்வுதான். தமிழர்களின் நிலை என்ன?

உண்டகலத்தில் ரெண்டுக்குப் போகும் மனிதர்கள் தானே!(தந்தை பெரியார் கூறிய உவமை இது.) நான் யார் தெரியுமா?

இதோ காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பேசுகிறார்:

1) என்மீதுள்ள வழக்குகள் குற்றப்பிரிவு 302, 120பி,34, 201 ஆகிய பிரிவுகள் கொலை செய்யத் தூண்டுதல் கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை இந்தப் பிரிவுகளில் என்னைக் கைது செய்துள்ளனர். (11.11.2004). என்மீதுள்ள முக்கிய குற்றச்சாற்று. காஞ் சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் ஆனந்த சர்மா மகன் சங்கரராமனைக் கொலை செய்தது. (3.9.2004)

2) என்மீதுள்ள இன்னொரு குற்றச்சாற்று சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது (இ.பி.கோ. 120பி, 307).

3) மற்றொரு குற்றச்சாற்றும் உண்டு. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது (31.8.2004) நெல்லை மாவட்டம் திருக்கருக்குடி பெருமாள் கோயிலில் இருந்த சிவன் கோயிலை நான் இடித்தேன். இடித்தது தவறு என்றுகூறி இந்த மாதவன் மறுபடியும் சிவன் கோயிலைக் கட்ட முயற்சி செய்தான். அதனால் மாதவனைத் தாக்கியது.

4) 1987இல் (23.8.1987) காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக தண்டத்தை விட்டு விட்டு தலைக் காவேரிக்கு ஓடினேன் (நேபாள பெண்மணி ஒருவருடன்)

5) தண்டத்தை மடத்தில் விட்டு விட்டு ஓடியதால் மடத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றாகி விட்டது. காமத்தைத் துறந்த நிலையிலிருந்து விடுபட்டு, காதல் உலகில் சஞ்சரித்ததாக இதன் பொருள். நான் தண்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு மடத்தைவிட்டு ஓடியதால், காஞ்சிப் பெரியவாள் அவசர அவசரமாக விஜயேந்திரனுக்கு அடுத்த பட்டத்தைச் சூட்டி விட்டார்.

6) அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் முயற்சியால் மீண்டும் காஞ்சி மடத்துக்குக் கொண்டு வரப்பட்டேன். தண்டத்தைத் துறந்து மடத்தைவிட்டு நான் வெளியேறி விட்டதால், மடத்துக்கும் எனக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை என்று சொன்னதை மகா பெரியவாள் கடைசி வரை வாபஸ் வாங்கவேயில்லை. ஆனாலும் விவஸ்தைகெட்டு மடத்தில் இருந்தேன் இருக்கிறேன்.

7) என்மீது வேறு குற்றச்சாற்றுகளும் உண்டு.

திருப்பதி தோமலை சேவையின்போது குலசேகரன் படியில் அமர்ந்து ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணி) அர்ச்சனை செய்தேன். கோயில் அர்ச்சகரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று தெரிந்தும் அதனைச் செய்தேன். அர்ச்சகர் என்னைத் தடுத்தார்; நான் அதைச் சிறிதும் சட்டை செய்யவேயில்லை. (3.11.2000).

8. பெண் விஷயத்திலும் என்மீது ஏகப்பட்ட புகார்கள். இந்த வகையில் பிரேமானந்தா. நித்யானந்தாக்களுக்கு முன்னோடி நான். அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து நான் இழுத்ததாக டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக எடுத்துக்கூறி என் மானத்தைக் கப்பலேற்றிவிட்டார்.

9) திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் செய்து அணிவித்தேன் (5.4.2002) இதன் மூலம் கடவுளையும் என் பிராமண ஜாதிக்குள் கொண்டு வந்து விட்டேன்.

10) தாம்ப்ராஸ் என்னும் பார்ப்பன சங்கத்தின் மூலம் வெளியிடப்பட்ட அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் நூல் வெளியீட்டு விழாவில் கடவுளுக்கும் மேலே உயர்ந்தவன் பிராமணன் என்று பேசினேன் (9.10.2002). இதன்மூலம் என் ஜாதி ஆணவத்தை வெளிப்படுத்தினேன். (மும்மலத்தையும் அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் கடந்தவர்கள் தான் காமகோடி என்று சொல்லப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரை இவற்றிற்கு ஆட்பட்டவன் தான்).

11) மதுரை மாவட்டம் தும்பைப்பட்டிக்குச் சென்றேன், (10.11.2002). கக்கன் பிறந்த ஊர்அது. ஹரிஜன்கள் என்னைத் தொட்டு விடாதபடி தோளில் தொங்கிய துணியை எடுத்துக் காலில் சுற்றிக் கொண்டேன்.

இதன் மூலம் நான் தீண்டாமையை ஆதரிக்கும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டேன்.

12) எல்லா ஜாதியாருக்கும் ஒரே சுடுகாடு கூடாது என்ற கருத்தைச் சொன்னவன் நான் (விடுதலை 8.3.1982). இதனால் ஜாதி வெறியன் என்று தூற்றப்பட்டேன்.

13) பா.ஜ.க., ஆட்சியின் போது அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதற்கு எனது பாராட்டுதலை வெளிப் படையாகத் தெரிவித்தேன் (தினமணி 16.5.1998).

இதன் மூலம் உலகில் சாந்தம் தழைக்க வேண்டும் ஹானி நீடிக்கக் கூடாது என்கிற பொதுவான மனிதப் பண்புக்கு எதிரியாக அடையாளம் காட்டப்பட்டேன்.

14) ரஜினியுடன் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம் என்று விஜயகாந்துக்கு அட்வைஸ் செய்தேன்.

(குமுதம் 18.1.2001)

இதன் மூலம் ஒரு மதத் தலைவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை உடைத்தவன் ஆனேன்.

15) அயோத்தியில் கட்டடத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை என்று கூறினேன் தினமணி (27.11.2000). இதன்மூலம் வன்முறைக்கு வித்திட்டவன்; சட்டத்தை மதிக்க மறப்பவன் என்று விமர்சிக்கப்பட்டேன்.

16) தமிழில் குடமுழுக்கு கூடாது என்றேன்.(இந்தியா டுடே 2.10.2002).

இதன் மூலம் தமிழ் நீஷப்பாஷை என்று என் குருநாதர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்தில் உறுதியாக நான் இருந்ததால் தமிழர்களால் நான் தூற்றப்பட்டேன்.

17) பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்றேன் (தி பயனீர் 17.3.1997)

பெண்களால், எதிர்க்கப்பட்டேன். விதவைப் பெண்களைத் தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டுப் பேட்டி அளித்தேன். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும் கூறினேன்.

மகளிர் உண்டு இல்லை என்று எதிர்ப்புச் சூட்டைக் கிளப்பினார்கள். தி.க. மகளிர் அணியினர் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டமே நடத்தினர் (9.3.1998).

18) கொலை செய்யப்பட்ட சங்கரராமன் என் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி விட்டான். எனது இன்னொரு பக்கமான ஆபாச நடவடிக்கைகளை எல்லாம் வண்டி வண்டியாக ஏற்றி விட்டான். (தனிப் பட்டியல் கீழே)

19) குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படும்வரை மடத்தின் பதவியிலிருந்து நான் விலக வேண்டும் என்று துவாரகா பீடம் ஸ்வரூபானந்துகூட கூறினார். (தி இந்து 3.12.2004) நான் சட்டை செய்யவில்லையே! ஆனாலும் பார்த்தேளா, எனது 76ஆவது ஜெயந்தி விழா ஜாம்ஜாமென்று நடக்கிறது. பத்திரிகைகளில் எல்லாம் பக்கம் பக்கமாக விளம்பரங்கள்! பிராமணாள் ஒரு பக்கம் சூத்திராள் இன்னொரு பக்கம் ஜமாயிக்கிறார்கள். எவ்வளவு கேவலமாக எங்கள் நடத்தை இருந்தாலும் எங்களவாள் விட்டுக் கொடுக்க மாட்டவே மாட்டாள். இவ்வளவு நடந்திருக்கே… எங்க மனுஷாள் என்மீதோ, மடத்தின் மீதோ கரித்துக் கொட்டியதுண்டா?

உங்களவாள் மாதிரியா? உண்ட வீட்டுக்கே ரெண்டகம் என்பதெல்லாம் எங்களைப் பொறுத்தவரை இல்லாத ஒன்று. ஆயிரம் பெரியார் தான் வரட்டுமே உங்களில் விபீஷணன்களை நாங்கள் உற்பத்தி செய்து கொண்டே இருப்போம்!

அந்தக் கைத்தடிகள் அனுமார்கள் இனாமாக எங்களுக்குக் கிடைக்கும் போது எங்களுக்கு ஏது பயம்?

ஹி… ஹி….

ஜெயேந்திரரின் ஆபாசப் புழுதிகள்

சங்கரராமன் கடிதம்

http://www.viduthalai.periyar.org.in/20100731/snews11.html

(சோம சேகர கனபாடிகள் என்ற பெயரில் சங்கரராமன் (கொலைசெய்யப்பட்டவர்) உயிரோடு இருந்தபோது எழுதிய கடிதத்தில் காணப்படும் ஜெயேந்திரரின் லீலைகள்.)

1.. ஆஸ்ரமஸ்விகரணம் ஆன சில மாதங்களிலேயே பிரதானமாக, வாநாகரம் மற்ற முகாம்கள் இவைகளில் நடந்த பால ஸ்திரி லீலைகள் (உப. நாகங்குடி வைத்தா)

2. வேதபுரி மூலம் தங்கத்திடம் வெள்ளி கேட்ட பிச்சை அதிக ஸ்வாரஸ்யமான அத்யாயம் (உப. தகவல் ஆதாரம்: நா. வைத்தா)

3. இளையாத்தங்குடியில் ஸ்ரீராமசாமி சர்மா சாட்சியாக கொட்டாயில் அடித்த கொட்டங்கள்.

4. கும்பகோணம் பட்டாபிக்கு பாங்க் விசுவநாதன் பார்யை விஜயாவுடன் நிர்வாண ஆலிங்கனம் செய்த கோலத்தில் திவ்ய தரிசனம் கொடுத்த விவரமான அத்தியாயம்பதிலுக்கு காமாக்ஷி கல்யாண மண்டபம்மடம் வாசலில் விஜயாவுடன் கடை கொடுத்த கருணை.

5. குண்டூர் காமாக்ஷி பீட மாமிக்கு பரமானுக்ரகம் செய்து வைத்த நிர்வாண நவாவர்ண வைபவம்.

6. தெனாலியில் நாகசதுர்த்தசி புண்ய காலத்தில் அதிகாலையில் (ஸ்ரீஸ்ரீபரமாசார்யாள் பூஜை செய்துகொண்டிருந்த சமயம்) ஆந்திர சுவாசினிகளுடன் சல்லாப சங்கமம் (பா.பேட்டை கண்ணன் நா.குடி வைத்தா இவர்களால் பந்தனம் செய்யப்பட்டது)

7. விஜயவாடாவில் திருவண்ணாமலை ராமு சாஸ்திரிகளுடன் ஓடியது மார்கழி மாதம் அதிகாலை இதுவரை வெளிவராத புதிய விஷமங்கள் (உ.ப.ப.பேட்டை குப்பு)

8. குருவாயூர் க்ஷேத்திரத்தில் வனஜாவுடன், குருநாதர் செய்த லீலா வினோதங்கள். தம்பிக்கும் பங்கு. (உ.ப.பாட்னா முரளி)

9. திருப்பதி மாமியுடன் தான் அனுபவித்து விட்டு, தாடி நடராஜனையும் அனுபவிக்குமாறு பரமானுக்கிரஹம் செய்த பிறகு அவனுக்கு கல்தா கொடுத்த அத்யாயம்(உப.ராமமூர்த்தி பாட்டு)

10. எத்திராஜ முதலியாரின் உபபத்னி ஸ்தானத்தில் இருந்த மைதிலியுடன் நடத்திய சரச சல்லாப லீலைகள் சரித்திரம்.

11. நட்சத்திரப் பேர் கொண்ட பத்திரிகை அம்மாவுடன் நடத்திய லீலைகள், அதனால் ஏற்பட்ட சிக்கல்கள், சரணாகதி, வாக்குவாதம், த்ரவ்ய நஷ்டம் ஆகிய விவரங்கள் அடங்கிய விசேஷ அத்யாயம்.

12. அனந்தா பிக்சர்ஸ் மாமியுடனும், ஆலங்காடு நவிசம்சாரத்துடனும் பெற்ற ஆனந்த லீலைகள் அத்யாயம் (உப.பாட்னா முரளி)

13. பான்பராக்கு தாண்டவ பத்தினியைத் தொடர்ந்து தற்பொழுதுகூட அருகில் வைத்துக் கொண்டு நடத்தி வரும் சரச சல்லாப அத்யாயம் (உப.தாம்பரம் பாபு)

14. புதுக்கோட்டை திவான் பயிஷ்கார் மாட்டுப்பெண் தாம்பரம் பேபி(எ) ஜெயலக்ஷ்மியுடன் அடித்த மோஹ லீலைகள் அத்யாயம் (உப.தா.பாக்கம் தியாகராஜர்)

15. கூடவே இருக்கும் தாம்பரம் சகோதரர்களின் சகோதரிக்கு விவாகம் செய்துவிட்டு அவள் புருஷனை அடையவிடாமல் ஜெயேந்திரரும் நட்ட காலனும் (திரிசூலம்) அனுபவித்த அத்யாயங்கள்.(உப.தாம்பரம் பாபு)

குறிப்பு: இதன் பலன் நட்ட காலன் தன் ஒரே பிள்ளையையும் பறிகொடுத்துவிட்டுத் தானும் போய்ச் சேர்ந்தான்.

16. காமகோடி லீலா உடனும் அவளால் அறிமுகம் செய்யப்பட்ட இளசுகளுடனும் விதவிதமான லீலா சரச சல்லாப அத்யாயம் (உப. திருவிடைமருதூர் சந்திரா, பெ. வாழ்ந்தான் மௌலி)

17. சேலம் சுந்தரானு அய்யர் பார்வையுடன் பலகாலமாக இன்னும் நடத்தி வரும் கோலாகல லீலைகள் (உப.பாட்னா முரளி)

18. பாங்க் விதவை சரோஜா அவள் பெண்களுடன் நடத்திய சரச சல்லாபம், பெண்களுக்குக் கல்யாணம் செய்து வைத்து திவ்யானுக்ரஹம் செய்த அத்யாயம்(உப. பாட்னா முரளி)

மேலே குறிப்பிட்ட அத்யாயங்கள் தவிர,

1. விசேஷ அனுபந்தங்கள்

2. அந்தே வாசியின் பொண்பாடி லீலைகள் கோயில் ராமு குடும்பத்து ஸ்திரீகளுடன் தொடர்ந்து அடித்துவரும் கூத்துகள், ஸ்திரீகள் விடுதியில் நடைபெறும் விபசாரங்கள் ஆகிய விஷயங்களும் இணைப்புகளாக வெளிவரும். இதில் முக்கியப் பங்கு தம்பி ரகுவிற்கு.

குருநாதர் நடத்திய லீலைகள்பற்றி புகைப்படங்கள் ஆடியோ, வீடியோ கேசட் பதிவுகள் கைப்பட எழுதிய கடிதங்களின் நகல்கள் இவைகளைக் கொடுத்துதவிய சென்னைராதா மற்றும் நா. குடி வைத்தா இவர்களுக்கும் என்னுடைய கிருத்ஞையை இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

வரப்போகும் அத்யாயங்களைத் தாங்கள் படிப்பதுடன் பிரதிகள் எடுத்து மற்றவர்களுக்கும் அனுப்பி வைத்து குருநாதர்களின் மகத்துவங்களைப் பலரும் அறிய சகாயம் செய்து ஸ்ரீசந்த்ரமௌலீஸ்வரர் அனுக்கிரஹத்தால் காமமோஹ விவகாரங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு பரமஷேமத்தை அடைய பிரார்த்திக்கிறேன், ஈசுவரோரசஷது.

இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்ட பிறகும் பீடத்தின் சிஷ்யர்களும், அபிமானிகளும், பக்தர்களும், தொடர்ந்து திரவியங்களை அள்ளிக் கொடுத்தும், பீடாரோஹண விழாக்களிலும் பங்கு கொண்டு சம்பந்தப்பட்டால் அது அவர்களுடைய துர்பாக்கியம்தான். இந்த பீடத்தின் அழிவுக்குச் செய்யும் கைங்கர்யமாகும். துணிச்சலுடன் இந்த காமாந்த பீடைகளை விரட்டி அடித்தால் மடம் உருப்பட்டு, நமக்கு நல்ல குரு கிடைப்பார்.

சோமசேகர கனபாடிகள்

ஜம்புகேசவர க்ஷேத்திரம் 6.9.2005 ஆதாரம்: (ஜெயேந்திரரின் ஆன்மீகமும், அரசியலும் எம்.ஆர் ரகுநாதன்)