Posts Tagged ‘கொலைகாரர்’

திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

ஜூன் 21, 2010

திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

திருவள்ளுவர் சிலைக்கு பாதுபாப்பு என்றால், அதைவிட கேவலமான நிகழ்ச்சி தமிழகத்தில் நினைத்துக் கூட பார்க்கமுடியாது.

முதலில் அத்தகைய தமிழ் துரோகிகள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் முகமூடிகள் கிழிக்கப் பட்டு மக்களுக்கு காட்டப்படவேண்டும்.

அத்தகைய மனப்பாங்குடன், தமிழகத்தில், தமிழகர்களாக இருந்தால், அவர்கள் தமிழர்களே இல்லை.

பயந்து கொண்டு மாநாடு எதற்கு நடத்தவேண்டும்? நாகர்கோவில் (20-06-2010): செம்மொழி மாநாட்டை ஓட்டு கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் வரும் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. கடந்த வாரம் விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் கோவை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ரயில் தண்டவாளங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் எஸ்பி ராஜேந்திரன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் லாட்ஜூகளில் தீவிர சோதனையும் நடந்து வருகிறது. சந்தேகப்படும்படி நபர்கள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி லாட்ஜ் உரிமையாளர்களை போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

திருவள்ளூவரின் எதிரி யார்? கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தற்போது துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளிடமும் சோதனை நடத்தப்படுகிறது. செம்மொழி மாநாடு முடியும் வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்று எஸ்பி ராஜேந்திரன் தெரிவித்தார்.

திருக்குறளின் எதிரிகள், துரோகிகள்: முன்னமே விளக்கி ஆதாரங்களுடன் காட்டியுள்ளபடி, திருவள்ளுவரையும், திருக்குறளையும் கேவலப்படுத்துகிறவர்கள் கிருத்துவர்கள், முஸ்லீம்கள், திராவிட நாத்திகர்கள் மற்றும் தமிழ் போர்வையில் உலாவந்துக் கொண்டிருக்குன் புல்லுருவிகள். இந்தியாவில் யாரும் திருவள்ளுவ சிலைய சிதைக்கக்கூட நினைக்க மாட்டான். அத்தகைய அழிக்கும் மனப்பாங்கு இந்த கூட்டத்தாரிடம் தான் உள்ளது.

மைலாப்பூரில், திருக்குறள் கோனிலில் வந்து மிரட்டிய துரோகிகள்: மைலாப்பூரில், திருவள்ளுவர் வாழ்ந்த இடமாகக் கருதப்படுகின்ற இடத்தில், ஒரு கோவில் உள்ளது. இதில் சில உண்மையான திருக்குறள் அன்பர்கள், அமைதியாக தமது பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்நிலையில் சில தமிழ் துரோகிகள் உள்ளே நுழைந்து, “என்ன, திருவள்ளூவர்க்கு விபூதி எல்லாம் வைத்திருக்கிறாயே, என்ன விஷயம்”, என்றேல்லாம் மிரட்டியதாகத் தெரிகிறது. அத்தகைய திருவள்ளுவர் விரோதிகள் யார்?