Posts Tagged ‘சமூக உணர்வு’

நித்யானந்தாவின் பின்னணியை மறந்து விட்ட வீர-சூர ஊடகப் புலிகள்!

மார்ச் 6, 2010

நித்யானந்தாவின் பின்னணியை மறந்து விட்ட வீர-சூர ஊடகப் புலிகள்!

நித்யானந்தா என்ற போலி சாமியார் ஒரு நடிகையுடன் சல்லாபித்தது கேடுகெட்டச் செயல். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், இதன் பின்னணியை முழுவதும் வெளிக்கொணர வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பல மக்களை பாத்திக்கும் வகையில் இப்பிரச்சினை உள்ளது. ஒரு பெரிய ஆளும் கட்சியின் சார்பில் இயங்கும் ஊடகம் இத்தகைய செக்ஸ்-படங்களை / வீடியோக்களை, “புளூ-ஃபிளிம்” / நீலப்படம் என்பார்களே அதைப் போன்ற சரக்கை, தினமும் திரும்ப-திரும்ப நேரம்-காலம் குறிப்பிட்டு செய்திகள் நடுவே காண்பித்து ஒளிபரப்பிய பின்னணி, ரகசியம், மர்மம் என்ன?

ஆளும் கட்சிக்காரர்களுடைய மற்றும் அவர்களின் உதவியில் இருக்கும் ஊடகங்களின் பங்கு, சம்பந்தம், பிணைப்பு  மற்றும் இணைப்பு நன்றாகவே தெரிகிறது.

ஏதோ தாங்கள் சாமியார்களின் வேலைகளை படம் பிடித்துக் காட்டுகிறோம் என்று பகுத்தறிவு, நாத்திக முகமூடிகளில் மறைந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

நல்ல எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை: சமூக உணர்வு, சமூக சிந்தனை, சமூக பாதுகாப்பு, சமூக பிரக்னை, சமூக தார்மீக கடமைகள் முதலியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, அவர்கள் இந்த வேலையச் செய்ததாகத் தெரியவில்லை. வேறு ஏதோ உள்நோக்கத்தை வைத்துக் கொண்டு, சரியாக பரீட்சை ஆரம்பிக்கும் நாளிலிருந்து இத்தகைய வேலையை, பிரச்சரத்தை, ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த காரியத்தை ஒருவன் – ஒரு ஆள் – ஒரு தனிப்பட்ட மனிதன் செய்துவிட முடியாது.

பின்னணி வெளிக்கொணர வேண்டும்: ஆகவே, இதன் பின்னணியில் மிகவும் பலமான, அதிகாரம் கொண்ட, ஆதிக்கம் கொண்ட, பணபலம் கொண்ட நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் பல நாட்கள் உட்கார்ந்து பேசி, ஆலோசனை செய்து, உபகரணங்களை, ஆட்களை ஏற்பாடு செய்து கொண்டு, இடம்-நேரம்-ஏவல் அறிந்து செயல்பட்டுள்ளது தெரிகின்றது.

பின்னணியில் இருப்பவர்களும் அறியப்பட வேண்டும்: எனவே யார் பின்னணியில் இருந்தவர்கள், எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்று அலசப்படுகிறது:

* இந்தகைய திட்டத்தைத் தீட்டியவர்கள்

* குறிப்பாக நிதயானந்தர் மற்றும் ரஞ்சிதா இருவரின் சம்ந்தத்தை அறிந்தவர்கள்

* அந்த இருவரும் “ஆஸ்ரமமோ” அல்லது “வேறு இடமோ” என்று பீடிகை போடுகிறார்களே, தெரிந்தே ஏன் அப்படி புளுக வேண்டும்? அதாவது அந்த இடம் தெரிந்திருக்கிறது. அந்த இடத்திலேயே செய்திருக்கிறார்கள்!

* இருவரின் நடவடிக்கைகளையும் அந்த அந்நியோயன்னியக்காரர்கள்

* ஏற்கெனவே அறிந்து, புரிந்து வைத்திருக்கிறார்கள்.

* அவர்களின் சல்லாபங்களையும் திருட்டுத்தனமாகப் பார்த்திருக்கிறர்கள், ஒத்திகைக்காக!

* ஏனெனில் அப்பொழுதுதான் அத்தகைய காட்சிகள் கேமாராவின் கண்களுக்குள் வரும், பிடிக்கும், பிறகு தங்களது டிட்டத்திற்கேற்றப்படி வரும்.

* தொழிற்நுட்ப ரீதியில் சரியான கோணம் / கோணங்களில் கேமராவை / கேமராக்களை வைத்தவர்கள்

* அவர்களுக்கு படுக்கையறைக்கு போகும் அளவில் சுதந்திரம் இருந்திருக்கிறது என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும்.

* அவ்வாறே கேமராவை வைத்தவர்கள்.

* மறுபடியும் சுதந்திரமாக படுக்கையறைக்குச் சென்று கேமராக்களை எடுத்து வந்தவர்கள்.

* அவர்களின் பேச்சுப்படியே இரண்டு நாட்களுக்கு மேலே படுக்கையறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

* அதாவது ஒருநாளில் இருமுறை – படுக்கையறைக்குள் சென்று உள்ளே வைக்க, வைத்ததைத் திரும்பி எடுக்க – அப்படியென்றால், அந்த நடிக்கைக்கு எத்தனைத் தடவை உடை மாறியுள்ளதோ அத்தனை தடவைகள், படுக்கையறைக்குள் உள்ளே வைத்து எடுத்திருக்கிறர்கள்!

* என்னடா அது, நிதயானந்தா மற்றும் ரஞ்சிதா தவிர இந்த் ஆட்கள் வேறு தினமும் இப்படி தாராளமாக “அந்தப்புரத்தில்” சென்று-சென்று வருகிறர்களே என்று யாருக்கும் தெரிவில்லையா, கண்டுக் கொள்ளவில்லையா, அல்லது அவர்களும் இந்த திட்டத்தில் ஒத்துழைத்தார்களா?

* பிறகு – டிவிடி பிளேயர்-காப்பியர் என்றால் அப்படியே பதிவு செய்யப்பட்டதை பிரதிகள் எடுத்து விடலாம்.

* ஆனால், ஒரு மணி நேரம் ஓடியிருந்தால் எடிட்டிங் செய்யப் பட்டைருக்கவேண்டும், இவற்றையெல்லாம் செய்தவர்கள் யார்?

* பிறகு இந்த துப்பறியும் கோஷ்டி முதலில் அல்லது பிறகு அல்லது பலதடவை யார்-யாருக்கெல்லாம் போட்டுக் காண்பித்தார்கள்?

* பார்த்தவர்கள் எல்லோரும் யார்?

* பார்த்துப் புரிந்து கொண்டு, அடையாளம் கண்டு, அதற்கேற்றப்படி உரையெழுதியது யார்?

எனவே அந்த “புளூ ஃபிலிம்” எடுத்ததில், பங்கு கொண்டதில் பலர் ஈடுப்பட்டுள்ளது தெரிகின்றது.

ஆகவே, இது “புளூ ஃபிலிம்” எடுத்து வியாபாரம் செய்யும் கோஷ்டியின் வேலையோ எனவும் தோன்றுகிறது.

தேவநாதன் மற்றும் நித்யானந்தா விஷயத்தில் தான், உடனே மார்க்கெட்டில் சிடிகள் கிடைக்கின்றன என்று அந்தந்த பத்திரிக்கையாளர்கள், இணைத்தள விசுவாசிகள், ஆதரவாளர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறர்கள். குறிப்பாக இந்தியாவில் நமக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, வலைகுடா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ளவர்களுக்கு சுலபமாகக் கிடைத்துவிடுவது ஆச்சரியமாக உள்ளது.

அதாவது அத்தகைய தொழிற்நுட்பம் அறிந்த “வெள்ளைக் கலர் காலர்” வித்துவான்கள் – மக்களும் ஈடுபட்டுள்ளதைக் காட்டுகிறது.

இதே வி ஹியூம் என்றால், மாத்யூஸ், ஜோ, ஷாஜி, கோயல் ராட்சன்…………..என்றால் ஒன்றும் கிடைப்பதில்லை.

பாலியல் குற்றங்களிலும் ஏன் பாரபட்சம் பார்க்கப் படுகிறது? இன்டர்போல் எச்சரிக்கை வருகிறது (பல செக்ஸ் குற்றவாளிகளைப் பற்றி), இங்கிலாந்து போலீஸாரே சென்னைக்கு வந்து விசாரித்து கைது செய்து கொண்டு லண்டனுக்கே அந்த குற்றாவாளியை கூட்டிச் செல்கிறார்கள், கைது செய்யப்பட்ட வில் ஹியூம் ரஜினி காந்த படத்தில் நடிக்கிறான், தப்பித்து ஓடுகிறான்., ஸ்ரீபெரொம்புதூரில், வேலூரில், கன்னியாகுமரியில், திருச்சியில்……….

ஆனால் அதைப்பற்றி இந்த புலிகள் ஒன்றும் செய்வதில்லை, அவர்களே தாராளமாக இன்டர்நெட்டில் உலாவ விட்டாலும் அதையெல்லாம் பார்ப்பதில்லை, சிட்களாஆக மாற்றுவதில்லை, பர்மா பஜார், ரிச்சித் தெருக்களில் விற்பதில்லை!

வேடிக்கைதான்!

ஒருவேளை, இந்த பாழாபோன செக்ஸில் கூட செக்யூலரிஸம் பார்க்கிறர்களா, இந்த கேடு கெட்டவர்கள்?