Posts Tagged ‘தூஷணம்’

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி!

பிப்ரவரி 28, 2013

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி!

விஷமத்தனமான பிரச்சாரம்: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாடும் சாக்கில் யார்-யாரோ அவரைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். கிருத்துவர்கள் அவர் ஏதோ ஏசுவை ஏற்றுக் கொண்டது போல பிட் நோட்டிசுகள் விடுகின்றனர், கிறிஸ்தவர்கள் அவர் கிருஸ்துவை ஏற்றுக் கொண்டதை போல பொய் பிரச்சாரம் செய்கின்றனர்[1]. அதுபோல நமது கருணாநிதியும் இப்படித்தான் 2008ல் பேசினார்[2]. இன்று திமுகவிற்குப் பிறகு, அதிமுக பதவிக்கு வந்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா விழாவில் பங்கு கொண்டு பேசியுள்ளார்[3]. “அண்ணா நாமம் வாழ்க, பெரியார் நாமம் வாழ்க” என்பவர், சுவாமி விவேகானந்தர், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி! 2008ல் பேசியதை இப்பொழுது ஏன் ஞாபகத்தில் கொண்டு வரவேண் டும் என்று கேட்கலாம். ஆனால், இதை வைத்துக் கொண்டுதான், 2013லும் கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று பார்க்கும் போது விவகாரம் புரிகின்றது. கருணாநிதியின் நக்கலான பேச்சை படிக்கவும்:

 

விவேகானந்தர்புகைபிடிப்பார்[4]: நீங்கள் சாமியாரிடத்திலே மோத விட்டாலும், மாமியாரிடத்திலே மோத விட்டாலும் நாங்கள் யாரும் அவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை. கட்டிடத்தைத்தான் எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச்சு என்று கேட்பீர்கள். விவேகானந்தரைப் பற்றி தலைவர்கள் பேசிக் கேட்க வேண்டும் என்ற ஆசையாலும், விவேகானந்தரைப் பற்றி பேசி அதிக நாளாகி விட்டது என்பதாலும்தான். மூட நம்பிக்கைகளை சாய்த்தவர் விவேகானந்தர். மத வெறி, ஜாதி வெறியைச் சாய்த்தவர். அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர். அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். மனம் சுத்தமாக இருந்தால் இவை எல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல்பட்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள்.

கருணாநிதியைத் தொடர்ந்து வீரமணியின் விஷமத்தனம்: ஆக பகுத்தறிவாளிகள், பெரியார் தாசர்கள் என்ற போர்வையில் இப்படியும் தூசிக்கலாம், தூஷணம் செய்யலாம், அதனை சந்தோஷமாக கிருத்துவர்கள் எடுத்தாளலாம் என்று தான் எடுத்துக் காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு “விடுதலை”யில் இதைப் பற்றி வெளிவந்துள்ளவை:

… எந்த வழியிலாவது காட்டவேண்டும் என்கிற கோபம் இயல்பானதே! ####### விவேகானந்தர் ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி என்ற பெயரில் இந்துத்துவா சக்திகள் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ளன. …

… வெளிப்படுத்து வார்கள். விவேகானந்தரின் அறிவுரைகள் என்ற நூல் சென்னை மயிலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தினால் 2008இல் வெளியடப்பட்டுள்ளது. நூலின் 83ஆம் பக்கத்தில்விவேகானந்தர் பின்வரும் இந்து …

சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர்150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு  மட்டும் …

… விவேகானந்தர்   ரதம் செல்லுகிறதாம் – அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவே கானந்தர் முற்போக்குப் பேசினார் – இளை ஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள். …

3.2.13 பிற்பகல் 11.00 மணி அளவில், தென் சென்னை மாவட்டத்தின் திருவல்லிக்கேணி  நீலம் பாசா தர்கா பகுதியில் அன்னி பெசன்ட் சாலை விவேகானந்தர் இல்லம் பின்புறம் திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் …

… மதத்திற்கு மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறதாம்.வெளியிடப்பட்டுள்ள பேச்சு முழுவதும் விவேகானந்தர்இயேசுவைப் போற்றிப் பேசுவதாக உள்ளதாம்.  ராம கிருஷ்ணா மடம் சார்பில் வெளியிடப்பட் டதைத்தானே எடுத்து போட்டிருக்கிறார்கள்? …

… நாத்திகன் என்று முழங்கினார் விவேகானந்தர். தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில்தான் லட்சியம் இருக்கும். லட்சியம் – இருக்கும்போது அங்கே வளர்ச்சி நிச்சயமாக இருக்கும். (நம்பு தம்பி நம்மால் முடியும், ஆகஸ்டு 2008) …

விவேகானந்தரின் 150ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்தவர் சுவாமி விவேகானந்தர் என்று பெருமையாகப் பேசுவார்கள். பல பேர் நினைத்துக் கொண்டு …

…  அதே நேரத்தில் சென்னைக் கடற்கரை சாலை என்ற மிக முக்கியமான பகுதியில் உள்ள விவேகானந்தர்இல்லத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாரிக் கொடுப்பதும் இந்த அரசுதான். திருவள்ளுவர் என்றால் உதாசீனம் -விவேகானந்தர் …

… அனைத்து மாநில அரசுகளும், பள்ளிப் பாடத்திட்டத்தில், நாராயண குரு, ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மிக தத்துவவாதிகளின் போதனை களைப் பாடமாக இணைக்க வேண்டும் – இவ்வாறு அவர் பேசியுள்ளார். …

இப்படி நாத்திகர்கள், கிருத்துவர்கள், பகுத்தறிவுவாதிகள், கிறிஸ்தவர்கள் முதலியோர் எப்படி, ஏன், எதற்காக சொல்லி வைத்தால் போல இப்படி ஒரே நேரத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

 

செய்திகளைப் பரப்புகிறார்கள், இணைதளத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

பிறகு இவற்றைத் தொகுத்து புத்தகம் வெளியிடலாம், ஆராய்ச்சிக் கட்டுரை போர்வையில் கருத்தரங்கங்களில் படிக்கப்படலாம்.

கிருத்துவ இலக்கியக் கழகம், ஏன் திராவிடர் கழகமே வெளியிடலாம்.

© வேதபிரகாஷ்

28-02-2013


[4] ஏப்ரல். 25, 2008 , தினத்தந்தியில், முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது என்று வெளியிடப்பட்டது.