சுவாமி விவேகானந்தர் – ஶ்ரீ ராககிருஷ்ண மடம்: கருணாநிதி, ஜெயலலிதா – திராவிடகட்சிகளின் வேடங்கள் திராவிடத்துவத்தின் அந்தர்பல்டிக்கள்:
சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர், கருணநிதி, இதே கட்டிடத்தை “செந்தமிழ்” போர்வையில் இடிக்க திட்டம் போட்டார். ஶ்ரீ ராமகிருஷ்ண மட துறவிகள் மனு கொடுத்தபோது, மிரட்டியும் பார்த்தார்[1]. அன்பழகன் என்ற எஞ்சினியர் மூலம் சொல்லி அனுப்பி, காலிசெய்யுமாறு கூறினார். குத்தகை முடிவடைகிறது என்று ஒரு தொழிலதிபர் மூலம் அறிவித்தார்[2]. பிறகு உலகம் முழுவதும் கருவிற்கு எதிராக கருத்து உருவாகவே[3], அந்தர்பல்டி அடித்து சமாளித்தார். அந்த செயலைக் கைவிட்தாக ச்டட்டசபையிலேயே அறிவித்தார்[4]. திராவிட பாரம்பரையத்தை தனகேயுரிய பொய்மாலத்தால் காத்தார். நக்கலாக, அநாகரிகமாக, ஆபாசமாக, அவதூறக பேசுவதில், எழுதுவதில் வல்லவர் கருணாநிதி. 1970ல் ஒருமாதிரி, 2007ல் ஒருமாதிரி….இப்படி மாற்றி-மாற்றி பேசுவதில் கில்லாடி!
விவேகானந்தரின் கொள்கைகளின் ஆட்சி நடத்துவதாக பொய் பேசிய கருணாநிதி: கரு அப்பொழுது பேசியதை நினைவு கூர்ந்தால், ஒவ்வொரு திராவிடப்பூனை, திராவிடக் குஞ்சு, கழகக்கண்மணி, உடன் பிறப்புகள்முதலியோகளுக்குப் பைத்தியமே பிடித்து விடும். அப்பொழுது திராவிடத்தில் ஊறிய நிலையில், ஆங்கிலத்தில் வேறு பேசியுள்ளது. இதோ அந்த பூனை பேசியதைப் பாருங்கள்:
“The name `Vivekananda’ means, one who can distinguish the right from the wrong. He was noble sage who had universal vision, which ennobled everyone who came in contact with him or with teachings.“Though he is not with us today, the flame he lit is still alight and from his teachings have sprung the conscience of India and faith in her unity. And his great message manking finds solace and confidence.“The memorial stands here today will be a sentinel guarding not only our frontiers but also our cultural traditions.“Swami Vivekananda always had before him the great motto of elevation of masses. His messages are always gospels of salvation, social elevation and equality for everyone.“I am very happy to inform on this historical occasion that the Tamilnadu government is wedded to the thoughts and gospels for which Swami Vivekananda stood. |
“விவேகானந்தர் என்றால் சரி-தவறு எதுவென்று பிரித்துப் பார்க்கும் தன்மையுள்ளவர். அவர் ஒரு உலகளாவிய பார்வைக் கொண்ட துறவி. அதனால், யார் அவருடைய தொடர்பு ஏற்பட்டாலும் அல்லது அவரது போதனைகளை அறிந்து கொண்டாலும் அவரை நல்வழிபடுத்தியது.“இங்கு இன்று நிற்கும் இந்த நினைவு மண்டமமானது, நமது கலாச்சார எல்லைகள் மட்டுமல்லாது, நமது கலாச்சாரப் பாரம்பரியங்களையும் காக்க வல்லது.“சுவாமி விவேகானந்தர் சாமன்ய மக்களை உயர்த்தவேண்டும் என்ற சிறந்த கொள்கையைக் கொண்டிருந்தார். அவரது போதனைகள் மீட்சி, சமூக ஏற்றம் மற்றும் சமூக-சமத்துவம் முதலியவற்றைப் பற்ரிதான் இருந்தது.“இந்த சரித்துவ முக்கியத்துவம் வாய்ந்தநேரத்தில் நான் ஒன்று சொல்லிக் கொள்ளப் பெருமைப் படுகிறேன், தமிழக அரசு சுவாமி விவேகானந்தருடைய போதனைகள் மற்றும் அவர் எதற்காக நின்றாரோ அவற்றை இணைத்துக் கொண்டு செயல்படவுள்ளது” |
கருணாநிதி 1970 மற்றும் 2008[5]: சமஸ்கிருதத்தை வெறுக்கும், துவேஷிக்கும், அவதூறு பேசும் கரு சமஸ்கிருத சுலோகத்தைச் சொல்லி நல்ல பெயரை வாங்கிக் கொள்ள வேடம் போட்டது தெரியுமா? “உத்திஸ்டதா ஜாக்ரதா, ப்ரபய்வர்ன் நிபோததா”(“Uthistahtha Jagrata, Prapyavarn Nibhodhata” = (Arise, Awake and stop not till the goal is reached).). ஆமாம், அப்பொழுது முலமைச்சராக இருந்தபோது, செப்டம்பர் 2, 1970 அன்று உச்சரித்தது. இதை எந்த ஆரிய பூனையோ, சங்கராச்சாரியோ, மனுதர்மவாதியோ உச்சரிக்கவில்லை. இந்த திராவிடப் பூனைத்தான் உச்சரித்தது! செத்தப்பாடையை வாசித்து வாயைக் கழுவியதா இல்லையா என்று தெரியவில்லை!
2007ல் திருநெல்வேலியில் சுவானி விவேகானந்தர் தங்கிய இடம் இடிக்கப்பட்டது[6]: திருநெல்வேலியில், சுவாமி விவேகானந்தர் வந்திருந்த போது, அங்கிருந்த இடம் / வீடு, சரித்திரத்தன்மையே இல்லாமல் அமைதியாக இடித்துத் தள்ளினார்கள். அப்பொழுது ஏதோ காரணங்களுக்காக ஶ்ரீராமகிருஷ்ண மடமே கன்டுகொள்ளமல் இருந்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால் தான் போலும், அடுத்த வருடமே, இந்த திராவிட கபடு பூனை, கடற்கரையில் இருந்த விவேகானந்தர் இல்லத்தின் மீது கண்வைத்தது! இதோ அப்பொழுது சாமியார்களை மிரட்டி பேசிய பேச்சு:
சாதுக்கள் சவால் விடக்கூடாது – கலைஞர் அறிவுரை – சுவாமி விவேகானந்தரைப் பற்றி கருணநிதி பேசிய
அவதூறுகள்!
“எனக்கு ஒரு ஆசை – விவேகானந்தரைப் பற்றி நம்முடைய தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான் எல்லோரும் பேச அது இங்கே பரவ வேண்டும், ரொம்ப நாளாகி விட்டது விவேகானந்தரைப் பற்றி பேச என்பதற்காக –
அவர் மூட நம்பிக்கைகளையெல்லாம் சாய்த்தவர் – மத வெறிக்கு ஆளாகாதவர் – ஜாதி வெறியைச் சாய்த்தவர் – அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர் என்ற காரணத்தாலும், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – இவையெல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது மனம் சுத்தமாக இருந்தால் என்று எண்ணி சீர்திருத்த நோக்கங் களோடு செயல்பட்டவர்.
அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள்[7]. பாருங்கள், இடிக்கக் கூடிய மண்டபமா அது? இடிக்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு வலுவிழந்த மண்டபமா?
இல்லை; வலுவான மண்டபம். அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை, நினைக்கவுமில்லை, அதற்காக அந்தப் பக்கம் திரும்பவுமில்லை. “அந்த மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம், முறைப்படி தான் நடக்கிறோம் என்று அந்த மடத்தினுடைய பெரிய சாமியார் கூட சவால் விட்டிருக் கிறார். நான் அந்த சவால்களுக்கெல்லாம் பயப்படவில்லை. அது வேறு விஷயம்.
ஆனால், சாதுக்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வரக் கூடாது. அது விவேகானந்தருடைய கொள்கைக்கே – அவருடைய குருநாதர் இராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களுடைய கொள்கைக்கே விரோதமானது. இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது.
குமரிமுனையிலே அவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அமைத்து, அங்கே விவேகானந்தருடைய மண்டபத்தை போஷித்துப் பாதுகாத்து வருகின்ற இந்த அரசைப் பார்த்து சவால் விடுவது நல்லதல்ல, சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தருடைய விவேகமான பொன்மொழியைப் பின்பற்றுங்கள் என்று அவர்களைக் கேட்டுக் கொண்டு இதை இடிப்பதாகவோ அல்லது பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு செல்வதாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும் என்ற உண்மையை உங்களுக்குச் சொல்லி வீணாக நாம் அலட்டிக் கொள்ள வேண்டாம், பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாம், இந்த அரசைப் பொறுத்த வரையில் நாங்கள் தேடிய வரையிலே தற்காலிகமாக எங்களுக்குக் கிடைத்திருக் கிற இடம் அதே காமராஜர் சாலையில் பாலாறு இல்லம் – அந்தப் பாலாறு இல்லத்தில், சோளிங்கநல்லூரில் எங்களுக்கு அந்தப் பெரிய கட்டிடம் அமைகின்ற வரையில் தற்காலிகமாக செம்மொழி மையம் இங்கே இடம் பெறும், செம்மொழி நிறுவனம் பாலாறு இல்லத்தில் நடைபெறும் என்பதைத் தெரிவித்து அமைகின்றேன்”.
|
பாலாறு இல்லத்தில் தற்காலிக செம்மொழி மையம்: விவேகானந்தர் இல்லத்தை அரசு எடுப்பதாகக் கூறுவது தவறு – கருணாநிதி அறிவிப்பு
சென்னை, ஏப். 25, 2008 (தினத்தந்தி) – தமிழ் செம்மொழி மையத்துக்காக விவேகானந்தர் இல்லத்தை எடுக்கவில்லை என்றும் அதன் அருகே உள்ள பாலாறு இல்லத்தில் தற்காலிக மையம் இடம் பெறும் என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
சட்டசபையில்…: சென்னை விவேகானந்தர் இல்லம் தொடர்பாக சட்டசபையில் பல்வேறு கட்சிகள் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. அதை தகவல் கோரும் நிகழ்வாக எடுத்துக் கொண்டு எம்.எல்.ஏ.க்கள் பேச சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதித்தார். இந்த விவகாரம் பற்றி செங்கோட்டையன் (அ.தி.மு.க.), ஞானசேகரன் (காங்கிரஸ்), ஆறுமுகம் (பா.ம.க.), கம்பம் ராமகிருஷ்ணன் (ம.தி.மு.க.), செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் பேசினார்கள். விவேகானந்தர் இல்லத்தை அரசு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று செங்கோட்டையன், ஆறுமுகம், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். இவர்களுக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-
விவேகானந்தர் இல்லம்: செங்கோட்டையன், ஞானசேகரன், ஆறுமுகம், ராமகிருஷ்ணன், செல்வம் ஆகியோர் விவேகானந்தர் இல்லம் குறித்த சில கருத்துக்களை கூறினர். இதிலே வேடிக்கை என்னவென்றால், இல்லாத ஒன்றைப் பற்றி, நடக்கப் போகாத ஒன்றைப் பற்றி அவர்கள் பேசினார்கள் என்பதுதான் ஆச்சரியப் படக்கூடியது. சென்னையில் 1897-ம் ஆண்டில் 9 நாட்கள் தங்கியிருந்து விவேகானந்தர் விரிவுரைகள் செய்ததால் அதன் நினைவாக சென்னை காமராஜர் சாலையில் உள்ள 27 ஆயிரத்து 546 சதுரஅடி பரப்பளவு கொண்ட விவேகானந்தர் இல்லத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு அரசு ஒப்படைக்க வேண்டும் என்று மடத்தின் தலைவர் கேட்டார். 24.2.1997 தேதியிட்ட உயர்கல்வித் துறையின் அரசாணைபடி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்த இல்லம் முதன்முதலாக ராமகிருஷ்ண மடத்திடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது. 3 ஆண்டு காலத்திற்கு, ஆண்டொன்றுக்கு குத்தகைத் தொகை ரூ.1,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
10 ஆண்டு குத்தகை: விவேகானந்தர் இல்லத்திற்கு நுழைவு வழி இல்லை எனக் கூறியதால் அந்த இல்லத்தின் முன்னுள்ள 8 கிரவுண்ட் 1,928 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தையும் குத்தகைக்கு அளிக்கும்படி ராமகிருஷ்ண மடம் செங்கோட்டையன், ஞானசேகரன், ஆறுமுகம், ராமகிருஷ்ணன், செல்வம்கோரியது. 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த நிலத்தையும் 3 ஆண்டுகால குத்தகைக்கு ஆண்டொன்றுக்கு ஆயிரம் ரூபாய் குத்தகைத் தொகை என தி.மு.க. அரசு வழங்கியது. மேலும், இதை 30 ஆண்டுக்கு குத்தகைக்குத் தர வேண்டும் என்று கேட்டனர். அமைச்சரவைக் கூட்டத்தில்தான் அதுபற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறினேன். விவேகானந்தர் இல்லத்தின் சந்தை மதிப்பு ரூ.2 கோடிக்கும் மேல் இருப்பதால், சலுகைக் குத்தகையாக மாதம் ஒன்றுக்கு ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் குத்தகைத் தொகையாகவும், குத்தகைக் காலத்தை 10 ஆண்டுகள் என்றும் நிர்ணயம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவு 28.1.2000 தேதியிட்ட உயர்கல்வித் துறை அரசாணை மூலம் வெளியிடப்பட்டது.
ஏன் அபகரிக்க வேண்டும்?: ஏதோ விவேகானந்தர் இல்லத்திலே உள்ளவர்களுக்கும் தி.மு.க. அரசுக்கும் தகராறு என்பதைப் போல் எழுதப்படுகிறது. `விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க தி.மு.க. ஆட்சி முயற்சி என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியது. அதை ஏன் அபகரிக்க வேண்டும்? என்று எனக்குத் தெரியவில்லை. விவேகானந்தரிடத்திலே எங்களுக்கு பகை எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், பகுத்தறிவு இயக்கத்தினுடைய கருத்துக்களை, பெரியாருடைய கருத்துக்களை, அண்ணாவுடைய கருத்துக்களைப் பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர். அப்படிப்பட்ட விவேகானந்தரிடத்திலே என்ன விரோதம்?
சாமியாரிடம் தள்ளி விட்டனர்: இதுவரையில், விவேகானந்தர் இல்லம் பற்றி நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை, கடிதமும் எழுதவில்லை. செம்மொழியாகத் தமிழை ஆக்கி அதைப் பரப்ப வழிவகைகளைக் காணவும், அதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்ற `ஐம்பெருங்குழு’, `எண்பேராயம்’ போன்ற அமைப்புக்கள் செயல்படவும் ரூ.76 கோடி ஒதுக்கப்படுகிறது. அதற்கு நீங்கள் ஒரு கட்டிடம், ஒரு அமைப்பு ஆகியவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. சோளிங்கநல்லூரிலே ஒரு நிரந்தரமான கட்டிடத்தை கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. தற்காலிகமாக அரசுக்குச் சொந்தமான இடம் தேடப்பட்டது. தற்காலிக இடம் பற்றி எண்ணிய நேரத்தில் யாரோ ஏதேதோ ஒரு கதை கட்டினார்கள். அது பலிக்காத காரணத்தால் இவர்களைச் சாமியார் பக்கம் தள்ளி விடுவோம் என்று சாமியார்களிடம் மோத விடுவதற்காக சில காரியங்களிலே ஈடுபட்டிருக்கிறார்கள்.
விவேகானந்தர் புகை பிடிப்பார்: நீங்கள் சாமியாரிடத்திலே மோத விட்டாலும், மாமியாரிடத்திலே மோத விட்டாலும் நாங்கள் யாரும் அவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை. கட்டிடத்தைத்தான் எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச்சு என்று கேட்பீர்கள். விவேகானந்தரைப் பற்றி தலைவர்கள் பேசிக் கேட்க வேண்டும் என்ற ஆசையாலும், விவேகானந்தரைப் பற்றி பேசி அதிக நாளாகி விட்டது என்பதாலும்தான். மூட நம்பிக்கைகளை சாய்த்தவர் விவேகானந்தர். மத வெறி, ஜாதி வெறியைச் சாய்த்தவர். அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர். அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். மனம் சுத்தமாக இருந்தால் இவை எல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல்பட்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள்.
சாமியார் விட்ட சவால்: இடிக்கக் கூடிய மண்டபமா அது? இடிக்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு வலுவிழந்த மண்டபமா? அது வலுவான மண்டபம். அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை, நினைக்கவுமில்லை. அதற்காக அந்தப் பக்கம் திரும்பவுமில்லை. `அந்த மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம், முறைப்படி தான் நடக்கிறோம்’ என்று அந்த மடத்தினுடைய பெரிய சாமியார் சவால் விட்டிருக்கிறார். நான் அந்த சவால்களுக்கு பயப்படவில்லை. ஆனால், சாதுக்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வரக் கூடாது. அது விவேகானந்தருடைய கொள்கைக்கும், அவருடைய குருநாதர் ராமகிருஷ்ண பரமஹம்சருடைய கொள்கைக்கும் விரோதமானது.
பாலாறு இல்லத்தில் மையம்: குமரிமுனையிலே அவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அமைத்து, இங்கே விவேகானந்தருடைய மண்டபத்தை போஷித்துப் பாதுகாத்து வருகின்ற இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது? அது நல்லதல்ல, சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தருடைய விவேகமான பொன்மொழியைப் பின்பற்றுங்கள். இதை இடிப்பதாகவோ அல்லது பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு செல்வதாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும் என்பது உண்மை. நாம் அலட்டிக் கொள்ள வேண்டாம். பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாம். அதே காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லம் எங்களுக்குக் தற்காலிகமாக கிடைத்திருக்கிறது. சோளிங்கநல்லூரில் பெரிய கட்டிடம் அமைகின்ற வரையில் தற்காலிகமாக பாலாறு இல்லத்தில் செம்மொழி மையம் இடம் பெறும்”, இவ்வாறு அவர் கூறினார்.
2013 – ஜெயலலிதா இப்பொழுது அதே இடத்தில் விழாவைத் துவக்கி வைத்தார்: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழாவை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னையில் துவக்கி வைத்தார். விவேகானந்தர் பண்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஓராண்டு தொடர் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இதற்கான துவக்க விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்றார். இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விவேகானந்தர் பண்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன் விவேக ஜோதி எனும் அணையா விளக்கையும் ஏற்றி வைத்தார்[8]. சென்னை கடற்கரை சாலையில் உள்ள சுவாமி விவேகானந்தர் இல்லத்தில் அவரது 150வது பிறந்த ஆண்டு விழாவை தமிழகம் முழுவதும் ஓராண்டு தொடர் கொண்டாட்டத்திற்கான விழா நடைபெற்றது.இந்த விழாவில் பங்கேற்க வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பேண்டு வாத்தியம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதா மேடை அருகே வைக்கப்பட்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி வணங்கினார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தர் முதலமைச்சருக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.இதையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கினார். தொடர்ந்து விவேகானந்தர் இல்ல வளாகத்தில் அமைய உள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அதையடுத்து விவேக ஜோதி எனும் அணையா விளக்கை முதலமைச்சர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து சுவாமி விவேகானந்தரின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு நூலை முதலமைச்சர் வெளியிட கௌதமானந்தர் பெற்றுக்கொண்டார். அதையடுத்து தேசிய இளைஞர் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பரிசுகள் வழங்கினார். ராமகிருஷ்ணா மடத்தின் மேலாளர் சுவாமி ஆசுதோசானந்தர் வரவேற்று பேசினார். அவரைத் தொடர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணா விஜயம் இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர் வாழ்த்துமடலை வாசித்து அளித்தார். அதைத் தொடர்ந்து சுவாமி கௌதாமனந்தர் ஆசி உரை வழங்கினார். இந்த விழாவின் இறுதியில் சுவாமி தர்பிஷ்டானந்தர் நன்றி கூறினார். விழாவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், விவேகானந்தர் மிஷன் மற்றும் மடத்தில் பணிபுரியும் துறவியர்கள், மாணவ மாணவியர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
|