Posts Tagged ‘விடுதலை’

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி!

பிப்ரவரி 28, 2013

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி!

விஷமத்தனமான பிரச்சாரம்: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாடும் சாக்கில் யார்-யாரோ அவரைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். கிருத்துவர்கள் அவர் ஏதோ ஏசுவை ஏற்றுக் கொண்டது போல பிட் நோட்டிசுகள் விடுகின்றனர், கிறிஸ்தவர்கள் அவர் கிருஸ்துவை ஏற்றுக் கொண்டதை போல பொய் பிரச்சாரம் செய்கின்றனர்[1]. அதுபோல நமது கருணாநிதியும் இப்படித்தான் 2008ல் பேசினார்[2]. இன்று திமுகவிற்குப் பிறகு, அதிமுக பதவிக்கு வந்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா விழாவில் பங்கு கொண்டு பேசியுள்ளார்[3]. “அண்ணா நாமம் வாழ்க, பெரியார் நாமம் வாழ்க” என்பவர், சுவாமி விவேகானந்தர், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி! 2008ல் பேசியதை இப்பொழுது ஏன் ஞாபகத்தில் கொண்டு வரவேண் டும் என்று கேட்கலாம். ஆனால், இதை வைத்துக் கொண்டுதான், 2013லும் கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று பார்க்கும் போது விவகாரம் புரிகின்றது. கருணாநிதியின் நக்கலான பேச்சை படிக்கவும்:

 

விவேகானந்தர்புகைபிடிப்பார்[4]: நீங்கள் சாமியாரிடத்திலே மோத விட்டாலும், மாமியாரிடத்திலே மோத விட்டாலும் நாங்கள் யாரும் அவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை. கட்டிடத்தைத்தான் எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச்சு என்று கேட்பீர்கள். விவேகானந்தரைப் பற்றி தலைவர்கள் பேசிக் கேட்க வேண்டும் என்ற ஆசையாலும், விவேகானந்தரைப் பற்றி பேசி அதிக நாளாகி விட்டது என்பதாலும்தான். மூட நம்பிக்கைகளை சாய்த்தவர் விவேகானந்தர். மத வெறி, ஜாதி வெறியைச் சாய்த்தவர். அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர். அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். மனம் சுத்தமாக இருந்தால் இவை எல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல்பட்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள்.

கருணாநிதியைத் தொடர்ந்து வீரமணியின் விஷமத்தனம்: ஆக பகுத்தறிவாளிகள், பெரியார் தாசர்கள் என்ற போர்வையில் இப்படியும் தூசிக்கலாம், தூஷணம் செய்யலாம், அதனை சந்தோஷமாக கிருத்துவர்கள் எடுத்தாளலாம் என்று தான் எடுத்துக் காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு “விடுதலை”யில் இதைப் பற்றி வெளிவந்துள்ளவை:

… எந்த வழியிலாவது காட்டவேண்டும் என்கிற கோபம் இயல்பானதே! ####### விவேகானந்தர் ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி என்ற பெயரில் இந்துத்துவா சக்திகள் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ளன. …

… வெளிப்படுத்து வார்கள். விவேகானந்தரின் அறிவுரைகள் என்ற நூல் சென்னை மயிலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தினால் 2008இல் வெளியடப்பட்டுள்ளது. நூலின் 83ஆம் பக்கத்தில்விவேகானந்தர் பின்வரும் இந்து …

சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர்150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு  மட்டும் …

… விவேகானந்தர்   ரதம் செல்லுகிறதாம் – அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவே கானந்தர் முற்போக்குப் பேசினார் – இளை ஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள். …

3.2.13 பிற்பகல் 11.00 மணி அளவில், தென் சென்னை மாவட்டத்தின் திருவல்லிக்கேணி  நீலம் பாசா தர்கா பகுதியில் அன்னி பெசன்ட் சாலை விவேகானந்தர் இல்லம் பின்புறம் திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் …

… மதத்திற்கு மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறதாம்.வெளியிடப்பட்டுள்ள பேச்சு முழுவதும் விவேகானந்தர்இயேசுவைப் போற்றிப் பேசுவதாக உள்ளதாம்.  ராம கிருஷ்ணா மடம் சார்பில் வெளியிடப்பட் டதைத்தானே எடுத்து போட்டிருக்கிறார்கள்? …

… நாத்திகன் என்று முழங்கினார் விவேகானந்தர். தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில்தான் லட்சியம் இருக்கும். லட்சியம் – இருக்கும்போது அங்கே வளர்ச்சி நிச்சயமாக இருக்கும். (நம்பு தம்பி நம்மால் முடியும், ஆகஸ்டு 2008) …

விவேகானந்தரின் 150ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்தவர் சுவாமி விவேகானந்தர் என்று பெருமையாகப் பேசுவார்கள். பல பேர் நினைத்துக் கொண்டு …

…  அதே நேரத்தில் சென்னைக் கடற்கரை சாலை என்ற மிக முக்கியமான பகுதியில் உள்ள விவேகானந்தர்இல்லத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாரிக் கொடுப்பதும் இந்த அரசுதான். திருவள்ளுவர் என்றால் உதாசீனம் -விவேகானந்தர் …

… அனைத்து மாநில அரசுகளும், பள்ளிப் பாடத்திட்டத்தில், நாராயண குரு, ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மிக தத்துவவாதிகளின் போதனை களைப் பாடமாக இணைக்க வேண்டும் – இவ்வாறு அவர் பேசியுள்ளார். …

இப்படி நாத்திகர்கள், கிருத்துவர்கள், பகுத்தறிவுவாதிகள், கிறிஸ்தவர்கள் முதலியோர் எப்படி, ஏன், எதற்காக சொல்லி வைத்தால் போல இப்படி ஒரே நேரத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

 

செய்திகளைப் பரப்புகிறார்கள், இணைதளத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

பிறகு இவற்றைத் தொகுத்து புத்தகம் வெளியிடலாம், ஆராய்ச்சிக் கட்டுரை போர்வையில் கருத்தரங்கங்களில் படிக்கப்படலாம்.

கிருத்துவ இலக்கியக் கழகம், ஏன் திராவிடர் கழகமே வெளியிடலாம்.

© வேதபிரகாஷ்

28-02-2013


[4] ஏப்ரல். 25, 2008 , தினத்தந்தியில், முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது என்று வெளியிடப்பட்டது.

கோகுலாஷ்டமியா? – விடுதலையில் வீரமணியின் இந்து விரோத தலையங்கம்

செப்ரெம்பர் 1, 2010

கோகுலாஷ்டமியா? – விடுதலையில் வீரமணியின் இந்து விரோத தலையங்கம்

ஆசிரியர் – கே. வீரமணி, வேந்தர், பெரியார் நிகர்நிலை பல்கலைக்கழகம்.

http://www.viduthalai.periyar.org.in/20100901/news07.html

வீரமணி இப்படி ஒவ்வொரு இந்துமத பண்டிகையின் போதும் ஆபாசாமாக, துவேஷத்துடன் எழுதுவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால், அதே மாதிரி, செக்யூலரிஸ நாத்திக-பகுத்தறிவுடன் மற்ற மதப் கொண்டாட்டங்களைப் பற்றி எழுதுவதில்லை. ஏசு, மேரி, ஜோஸப், அல்லா, முகமது நபி, புத்தர், மஹாவீரர் முதலியோர் பிறந்த நாள் பண்டிகைகள்[1] போதும் எழுதினால், இவரது செக்யூலரிஸ பகுத்தறிவை மெச்சலாம்! இதிலிருந்து அந்த வேந்தரின் போலித்தனத்தை, மோசடித்தனத்தை, அயோக்கியதனத்தை அறிந்து கொள்ளலாம்.

இன்று கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம். பிறப்பு இறப்பு அற்றவர் உருவம் அற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் வாய்ப் பறை கொட்டுவோர் அதற்கு நேர் எதிராக அறிவு நாணயமற்ற முறையில் கடவுள் பிறந்தார்[2] என்றும், இந்த உருவத்தில் உள்ளார் என்றும், அந்தக் கடவுளுக்கும் பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள், பிள்ளை குட்டிகள் உண்டு என்றும் கூறும் அபத்தத்தை ஆபாசத்தை என்னவென்று சொல்ல!

கடவுள் சண்டை போட்டார்; கொலை செய்தார் விபச்சாரம் செய்தார்; சூழ்ச்சி செய்தார்; தந்திரம் செய்தார் என்றெல்லாம் கடவுள்கள் இந்து மதத்தில் கற்பிக்கப்பட்ட திலிருந்து இந்து மதத்தின் சாக்கடை நாற்றத்தையும் இவ்வாறெல்லாம் தெருப்புழுதியாக எழுதி வைத்துள்ள ஆசாமிகளின் ஆபாச சேட்டைகளையும் ஆறறிவுள்ள மனிதர்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

இன்றைக்குக் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்களே இந்தக் கிருஷ்ணன் எப்படிப் பிறந்தானாம்?

தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்கவேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயினவாம் இவ்வாறு கூறுவது இந்து மதத்தின் அபிதானகோசம்தான்[3].

எவ்வளவுக் காட்டுமிராண்டித்தனத்தில் கடவுளின் கீழ்த்தர உற்பத்தி நடந்திருக்கவேண்டும்?

கடவுள்தானே தேவர்களையும், ராட்சதர்களையும் படைத்தான் என்கின்றனர். அப்படி இருக்கும்போது கடவுளால் படைக்கப்பட்ட ராட்சதன், கடவுளால் படைக் கப்பட்ட இன்னொரு தேவர்களை எப்படித் துன்புறுத்துவான்? கடவுளின் வளர்ப்பு சரியில்லையா?

எந்த அவதாரம் எடுத்தாலும் ராட்சதனைக் கொன்றான் ராட்சதனைக் கொன்றான் என்று எழுதி வைத்துள்ளார்களே, அந்த ராட்சசன் வம்சம் அழிந்து போய்விட்டதா அல்லது தொடர்கிறதா?

வரலாற்று ஆசிரியர்கள் எல்லாம் பார்ப்பன[4] பி.டி. சீனிவாசய்யங்கார் உள்பட, இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம்[5] செய்து வந்த விவேகானந்தர் வரை ராட்சதர்கள் என்று இதிகாசங்களிலும், வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று எழுதியுள்ளார்களே[6] இதன் பொருள் என்ன?

திராவிடர்களை இழிவுபடுத்த, மட்டந்தட்ட, கொன்றொழிக்க, இட்டுக்கட்டி எழுதப்பட்ட[7] சரக்குகள்தான் இவை என்பது விளங்கவில்லையா?

நாட்டில் நடப்பது ஆரியர் திராவிடர்[8] போராட்டம் என்று தந்தை பெரியார் சொன்னதும் தேவர்கள் அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்று சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 18.9.1953 அன்று திருவொற்றியூரில் பேசியதும் இதனை நிரூபிக்கின்றனவே!

பார்ப்பனர்களுக்காகப் போரிட்டவர்களுக்கு விழா கொண்டாடும்போது அவர்களை எதிர்த்துப் போரிட்ட திராவிடர்கள் என்ன செய்யவேண்டும்? அந்தக் கடவுள்களை வீதிக்கு வீதி போட்டுக் கொளுத்தவேண்டாமா?

தந்தை பெரியார் இராமன் படத்தை எரிக்கச் சொன்னதும், பிள்ளையார் பொம்மைகளை வீதிகளில் போட்டு உடைக்கச் சொன்னதும்[9] இந்த அடிப்படையில் தானே?

புத்த மார்க்கத்தை[10] ஒழிக்கத்தான் கிருஷ்ண அவதாரம் கற்பிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்[11].

புத்தர் ஒழுக்க நெறிகளைப் போதித்தார் கட்டுப் பாடுகளை, நியதிகளை வரையறுத்தார். ஆரியர்களின் யாகங்களை எதிர்த்தார். அவர்கள் வகுத்த வருணாசிரம அமைப்பை நிர்மூலப்படுத்தினார்[12].

அந்த ஒழுக்க நெறிகளுக்கு மாறாக ஆபாச உணர்வையும், விபச்சாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் ஒரு கதாபாத்திரத்தை (கிருஷ்ணனை) உருவாக்கி கவர்ச்சியைக் காட்டி மக்களை மதிமயங்கச் செய்த ஏற்பாடுதான் இது.

சினிமாக்காரர்களைக் காட்டியும், பாலுணர்வைத் தூண்டும் சமாச்சாரங்களை ஒளிபரப்பியும் மக்களை இப்பொழுது திசை திருப்பவில்லையா? மதி மயக்கம் செய்யவில்லையா? இந்த ஒழுக்கங்கெட்ட விவகாரங்களை இந்து மதத்தின் கிருஷ்ணாவதாரத்திலிருந்து கற்றுக் கொண்டவர்கள்தான் இவர்கள்.

குளிக்கும் பெண்களின் ஆடைகளைத் திருடிச் செல்வதும், நிர்வாணமாகக் கரைக்கு வந்து இரு கைகளையும் உயரே தூக்கிக் கும்பிட்டால்தான் ஆடைகளைக் கொடுப்பேன் என்று அடாவடித்தனம் செய்ததும் தான் கிருஷ்ணக் கடவுளின் சிறப்பாம்.

இந்தக் கேவலமான கடவுளின் பிறந்த நாள் என்று கூறி அரசு விடுமுறை வேறு விடுகிறது. செல்வி ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த இந்த விடுமுறை இப்பொழுதும் தொடர்வது நியாயந்தானா?[13]



[1] ஏசு (கிருஸ்துமஸ்), மேரி (கன்னிமேரி பிறந்த நாள்), ஜோஸப், அல்லா, முகமது நபி (மீலாது நபி), புத்தர் (புத்த பூர்ணிமா), மஹாவீரர் (மஹாவீர் ஜெயந்தி)…………………………இவற்றைப்பற்றியும் எழுதலாம்.

[2] ஏசு மற்றமத கடவுளர்களின் பிறந்த நாட்களும் அவ்வாறே கொண்டாடப்படுகின்றன. அரசும் விடுனுறை அளித்து வருகின்றது. அப்பொழுது, இம்மாதிரி கட்டுரைகளை, பகுத்தறிவோடு வீரமணி எழுதுவதில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

[3] அபிதானகோசம் இந்துமத நூல் அல்ல. இப்படி புருடா வீட்டு தான், பொய்களைப் பர்ரப்பி வருவது இவர்களின் வேலையாக உள்ளது.

[4] இப்படி ஜாதி வெறி, காழ்ப்புக் கொண்டு எழுதுவதை கவனிக்க வேண்டும், ஏனெனில், மற்றவர்களைக் குறிக்கும் போது, ஏன் அவர்களுடைய ஜாதியைக் குறிப்பிடுவது கிடையாது?

[5] கிருத்துவர்களைவிட கேவலமாக, விவேகானந்தர் ஏதோ, இந்து மதத்தை அமெரிக்காவில், மிஷனரிகளைப் போலப் பரப்பச் சென்றார் என்பது போல் எழுதுவதும் பொய்யே.

[6] விவேகானந்தர் அவ்வாறு எழுதவில்லை என்பதை, முன்னர் ஒரு கட்டுரையில் எடுத்துக் காட்டியுள்ளேன். இப்படி, விவாகானந்தர் எழுதாததை எழுதினார், சொல்லாதை சொன்னார் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

[7] இட்டுக்கட்டி எழுதப்பட்ட சரக்குகள்தான் இவை என்றால், அதைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்?

[8] இன்னும் இது போன்ற சரித்திர ஆதாரமில்லாத கட்டுக்கதைகளை வைத்துக் கொண்டு, பிழைப்பு நடத்தும் இந்த கூட்டத்தை, இக்காலத்தைய இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

[9] ஆனால், உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டபோது, பெரியார் ஓடி

ஒளிந்து கொண்டுவிட்டார். அதுமட்டுமா, நம்றக செமத்தையாக “டோஸ்” விட்டும் இருக்கிறார்கள், இவர்கள்தாம், இன்று தங்களது வீரத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

[10] புத்தரே தனது 81வது வயதில் பன்றி இறைச்சி சாப்பிட்டு, குடலில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார். அந்நிலையில், பௌத்தம் அஹிம்சையை போதித்தது என்பது பெரிய பொய் ஆகும்,

[11] இது வரலாற்று உண்மையே கிடையாது, பௌத்தர்கள் அஹிம்சை பேசிக்கொண்டு, நன்றாகா புலால் உண்டுக் கொழுத்தனர். விஹாரங்களில் / மடங்களில் பிக்குனிகளுடன் சரசம் புரிந்து பெயரிக் கெடுத்து கொண்டனர்.

[12] பிறகு எப்படி மறுபடியும் வந்தது?

[13] செக்யூலரிஸ வித்தகர், இந்து விரோதி நாத்திகர் கருணாநிதி விடுமுறையை ரத்து செய்திருக்கலாமே?

நான்தான் ஜெயேந்திரன் பேசுகின்றேன்! விடுதலையில் நக்கல் – இதேமாதிரி மற்றவரும் பேசுவதுதானே?

ஓகஸ்ட் 1, 2010

நான்தான் ஜெயேந்திரன் பேசுகின்றேன்!

மின்சாரம்

http://www.viduthalai.periyar.org.in/20100731/snews01.html

திகவினர், இதே மாதிரி மற்ற கிருத்துவ, முஸ்லீம் மதத்தலைவர்கள், சாமியார்கள், போப்பு-காஜிகள், பிஷப்-முல்லாக்கள், பாஸ்டர்-மஸ்தான்கள், முதலியோரைப்பற்றி எழுதினால், அவர்களது செக்யூலரிஸ நாத்திகத்தை மெச்சலாம்!

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதிமீது கொலைக் குற்றம் இருந்தும், காமவெறியர் என்று மக்களால் தூற்றப்பட்டும்கூட அவருக்கு 76ஆம் ஆண்டு பிறந்த நாளை ஜெயந்தியை வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ஆசாமியும் கொஞ்சமும் லஜ்ஜையின்றி

ராஜ நடை போட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்.

சங்கை கெட்டுப் போன சங்கராச்சாரியாரை பார்ப்பனர்கள் தூற்றுவதில்லை; விட்டுக் கொடுப்பதில்லை. காரணம் இனவுணர்வுதான். தமிழர்களின் நிலை என்ன?

உண்டகலத்தில் ரெண்டுக்குப் போகும் மனிதர்கள் தானே!(தந்தை பெரியார் கூறிய உவமை இது.) நான் யார் தெரியுமா?

இதோ காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பேசுகிறார்:

1) என்மீதுள்ள வழக்குகள் குற்றப்பிரிவு 302, 120பி,34, 201 ஆகிய பிரிவுகள் கொலை செய்யத் தூண்டுதல் கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை இந்தப் பிரிவுகளில் என்னைக் கைது செய்துள்ளனர். (11.11.2004). என்மீதுள்ள முக்கிய குற்றச்சாற்று. காஞ் சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் ஆனந்த சர்மா மகன் சங்கரராமனைக் கொலை செய்தது. (3.9.2004)

2) என்மீதுள்ள இன்னொரு குற்றச்சாற்று சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது (இ.பி.கோ. 120பி, 307).

3) மற்றொரு குற்றச்சாற்றும் உண்டு. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது (31.8.2004) நெல்லை மாவட்டம் திருக்கருக்குடி பெருமாள் கோயிலில் இருந்த சிவன் கோயிலை நான் இடித்தேன். இடித்தது தவறு என்றுகூறி இந்த மாதவன் மறுபடியும் சிவன் கோயிலைக் கட்ட முயற்சி செய்தான். அதனால் மாதவனைத் தாக்கியது.

4) 1987இல் (23.8.1987) காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக தண்டத்தை விட்டு விட்டு தலைக் காவேரிக்கு ஓடினேன் (நேபாள பெண்மணி ஒருவருடன்)

5) தண்டத்தை மடத்தில் விட்டு விட்டு ஓடியதால் மடத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றாகி விட்டது. காமத்தைத் துறந்த நிலையிலிருந்து விடுபட்டு, காதல் உலகில் சஞ்சரித்ததாக இதன் பொருள். நான் தண்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு மடத்தைவிட்டு ஓடியதால், காஞ்சிப் பெரியவாள் அவசர அவசரமாக விஜயேந்திரனுக்கு அடுத்த பட்டத்தைச் சூட்டி விட்டார்.

6) அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் முயற்சியால் மீண்டும் காஞ்சி மடத்துக்குக் கொண்டு வரப்பட்டேன். தண்டத்தைத் துறந்து மடத்தைவிட்டு நான் வெளியேறி விட்டதால், மடத்துக்கும் எனக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை என்று சொன்னதை மகா பெரியவாள் கடைசி வரை வாபஸ் வாங்கவேயில்லை. ஆனாலும் விவஸ்தைகெட்டு மடத்தில் இருந்தேன் இருக்கிறேன்.

7) என்மீது வேறு குற்றச்சாற்றுகளும் உண்டு.

திருப்பதி தோமலை சேவையின்போது குலசேகரன் படியில் அமர்ந்து ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணி) அர்ச்சனை செய்தேன். கோயில் அர்ச்சகரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று தெரிந்தும் அதனைச் செய்தேன். அர்ச்சகர் என்னைத் தடுத்தார்; நான் அதைச் சிறிதும் சட்டை செய்யவேயில்லை. (3.11.2000).

8. பெண் விஷயத்திலும் என்மீது ஏகப்பட்ட புகார்கள். இந்த வகையில் பிரேமானந்தா. நித்யானந்தாக்களுக்கு முன்னோடி நான். அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து நான் இழுத்ததாக டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக எடுத்துக்கூறி என் மானத்தைக் கப்பலேற்றிவிட்டார்.

9) திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் செய்து அணிவித்தேன் (5.4.2002) இதன் மூலம் கடவுளையும் என் பிராமண ஜாதிக்குள் கொண்டு வந்து விட்டேன்.

10) தாம்ப்ராஸ் என்னும் பார்ப்பன சங்கத்தின் மூலம் வெளியிடப்பட்ட அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் நூல் வெளியீட்டு விழாவில் கடவுளுக்கும் மேலே உயர்ந்தவன் பிராமணன் என்று பேசினேன் (9.10.2002). இதன்மூலம் என் ஜாதி ஆணவத்தை வெளிப்படுத்தினேன். (மும்மலத்தையும் அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் கடந்தவர்கள் தான் காமகோடி என்று சொல்லப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரை இவற்றிற்கு ஆட்பட்டவன் தான்).

11) மதுரை மாவட்டம் தும்பைப்பட்டிக்குச் சென்றேன், (10.11.2002). கக்கன் பிறந்த ஊர்அது. ஹரிஜன்கள் என்னைத் தொட்டு விடாதபடி தோளில் தொங்கிய துணியை எடுத்துக் காலில் சுற்றிக் கொண்டேன்.

இதன் மூலம் நான் தீண்டாமையை ஆதரிக்கும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டேன்.

12) எல்லா ஜாதியாருக்கும் ஒரே சுடுகாடு கூடாது என்ற கருத்தைச் சொன்னவன் நான் (விடுதலை 8.3.1982). இதனால் ஜாதி வெறியன் என்று தூற்றப்பட்டேன்.

13) பா.ஜ.க., ஆட்சியின் போது அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதற்கு எனது பாராட்டுதலை வெளிப் படையாகத் தெரிவித்தேன் (தினமணி 16.5.1998).

இதன் மூலம் உலகில் சாந்தம் தழைக்க வேண்டும் ஹானி நீடிக்கக் கூடாது என்கிற பொதுவான மனிதப் பண்புக்கு எதிரியாக அடையாளம் காட்டப்பட்டேன்.

14) ரஜினியுடன் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம் என்று விஜயகாந்துக்கு அட்வைஸ் செய்தேன்.

(குமுதம் 18.1.2001)

இதன் மூலம் ஒரு மதத் தலைவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை உடைத்தவன் ஆனேன்.

15) அயோத்தியில் கட்டடத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை என்று கூறினேன் தினமணி (27.11.2000). இதன்மூலம் வன்முறைக்கு வித்திட்டவன்; சட்டத்தை மதிக்க மறப்பவன் என்று விமர்சிக்கப்பட்டேன்.

16) தமிழில் குடமுழுக்கு கூடாது என்றேன்.(இந்தியா டுடே 2.10.2002).

இதன் மூலம் தமிழ் நீஷப்பாஷை என்று என் குருநாதர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்தில் உறுதியாக நான் இருந்ததால் தமிழர்களால் நான் தூற்றப்பட்டேன்.

17) பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்றேன் (தி பயனீர் 17.3.1997)

பெண்களால், எதிர்க்கப்பட்டேன். விதவைப் பெண்களைத் தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டுப் பேட்டி அளித்தேன். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும் கூறினேன்.

மகளிர் உண்டு இல்லை என்று எதிர்ப்புச் சூட்டைக் கிளப்பினார்கள். தி.க. மகளிர் அணியினர் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டமே நடத்தினர் (9.3.1998).

18) கொலை செய்யப்பட்ட சங்கரராமன் என் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி விட்டான். எனது இன்னொரு பக்கமான ஆபாச நடவடிக்கைகளை எல்லாம் வண்டி வண்டியாக ஏற்றி விட்டான். (தனிப் பட்டியல் கீழே)

19) குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படும்வரை மடத்தின் பதவியிலிருந்து நான் விலக வேண்டும் என்று துவாரகா பீடம் ஸ்வரூபானந்துகூட கூறினார். (தி இந்து 3.12.2004) நான் சட்டை செய்யவில்லையே! ஆனாலும் பார்த்தேளா, எனது 76ஆவது ஜெயந்தி விழா ஜாம்ஜாமென்று நடக்கிறது. பத்திரிகைகளில் எல்லாம் பக்கம் பக்கமாக விளம்பரங்கள்! பிராமணாள் ஒரு பக்கம் சூத்திராள் இன்னொரு பக்கம் ஜமாயிக்கிறார்கள். எவ்வளவு கேவலமாக எங்கள் நடத்தை இருந்தாலும் எங்களவாள் விட்டுக் கொடுக்க மாட்டவே மாட்டாள். இவ்வளவு நடந்திருக்கே… எங்க மனுஷாள் என்மீதோ, மடத்தின் மீதோ கரித்துக் கொட்டியதுண்டா?

உங்களவாள் மாதிரியா? உண்ட வீட்டுக்கே ரெண்டகம் என்பதெல்லாம் எங்களைப் பொறுத்தவரை இல்லாத ஒன்று. ஆயிரம் பெரியார் தான் வரட்டுமே உங்களில் விபீஷணன்களை நாங்கள் உற்பத்தி செய்து கொண்டே இருப்போம்!

அந்தக் கைத்தடிகள் அனுமார்கள் இனாமாக எங்களுக்குக் கிடைக்கும் போது எங்களுக்கு ஏது பயம்?

ஹி… ஹி….

ஜெயேந்திரரின் ஆபாசப் புழுதிகள்

சங்கரராமன் கடிதம்

http://www.viduthalai.periyar.org.in/20100731/snews11.html

(சோம சேகர கனபாடிகள் என்ற பெயரில் சங்கரராமன் (கொலைசெய்யப்பட்டவர்) உயிரோடு இருந்தபோது எழுதிய கடிதத்தில் காணப்படும் ஜெயேந்திரரின் லீலைகள்.)

1.. ஆஸ்ரமஸ்விகரணம் ஆன சில மாதங்களிலேயே பிரதானமாக, வாநாகரம் மற்ற முகாம்கள் இவைகளில் நடந்த பால ஸ்திரி லீலைகள் (உப. நாகங்குடி வைத்தா)

2. வேதபுரி மூலம் தங்கத்திடம் வெள்ளி கேட்ட பிச்சை அதிக ஸ்வாரஸ்யமான அத்யாயம் (உப. தகவல் ஆதாரம்: நா. வைத்தா)

3. இளையாத்தங்குடியில் ஸ்ரீராமசாமி சர்மா சாட்சியாக கொட்டாயில் அடித்த கொட்டங்கள்.

4. கும்பகோணம் பட்டாபிக்கு பாங்க் விசுவநாதன் பார்யை விஜயாவுடன் நிர்வாண ஆலிங்கனம் செய்த கோலத்தில் திவ்ய தரிசனம் கொடுத்த விவரமான அத்தியாயம்பதிலுக்கு காமாக்ஷி கல்யாண மண்டபம்மடம் வாசலில் விஜயாவுடன் கடை கொடுத்த கருணை.

5. குண்டூர் காமாக்ஷி பீட மாமிக்கு பரமானுக்ரகம் செய்து வைத்த நிர்வாண நவாவர்ண வைபவம்.

6. தெனாலியில் நாகசதுர்த்தசி புண்ய காலத்தில் அதிகாலையில் (ஸ்ரீஸ்ரீபரமாசார்யாள் பூஜை செய்துகொண்டிருந்த சமயம்) ஆந்திர சுவாசினிகளுடன் சல்லாப சங்கமம் (பா.பேட்டை கண்ணன் நா.குடி வைத்தா இவர்களால் பந்தனம் செய்யப்பட்டது)

7. விஜயவாடாவில் திருவண்ணாமலை ராமு சாஸ்திரிகளுடன் ஓடியது மார்கழி மாதம் அதிகாலை இதுவரை வெளிவராத புதிய விஷமங்கள் (உ.ப.ப.பேட்டை குப்பு)

8. குருவாயூர் க்ஷேத்திரத்தில் வனஜாவுடன், குருநாதர் செய்த லீலா வினோதங்கள். தம்பிக்கும் பங்கு. (உ.ப.பாட்னா முரளி)

9. திருப்பதி மாமியுடன் தான் அனுபவித்து விட்டு, தாடி நடராஜனையும் அனுபவிக்குமாறு பரமானுக்கிரஹம் செய்த பிறகு அவனுக்கு கல்தா கொடுத்த அத்யாயம்(உப.ராமமூர்த்தி பாட்டு)

10. எத்திராஜ முதலியாரின் உபபத்னி ஸ்தானத்தில் இருந்த மைதிலியுடன் நடத்திய சரச சல்லாப லீலைகள் சரித்திரம்.

11. நட்சத்திரப் பேர் கொண்ட பத்திரிகை அம்மாவுடன் நடத்திய லீலைகள், அதனால் ஏற்பட்ட சிக்கல்கள், சரணாகதி, வாக்குவாதம், த்ரவ்ய நஷ்டம் ஆகிய விவரங்கள் அடங்கிய விசேஷ அத்யாயம்.

12. அனந்தா பிக்சர்ஸ் மாமியுடனும், ஆலங்காடு நவிசம்சாரத்துடனும் பெற்ற ஆனந்த லீலைகள் அத்யாயம் (உப.பாட்னா முரளி)

13. பான்பராக்கு தாண்டவ பத்தினியைத் தொடர்ந்து தற்பொழுதுகூட அருகில் வைத்துக் கொண்டு நடத்தி வரும் சரச சல்லாப அத்யாயம் (உப.தாம்பரம் பாபு)

14. புதுக்கோட்டை திவான் பயிஷ்கார் மாட்டுப்பெண் தாம்பரம் பேபி(எ) ஜெயலக்ஷ்மியுடன் அடித்த மோஹ லீலைகள் அத்யாயம் (உப.தா.பாக்கம் தியாகராஜர்)

15. கூடவே இருக்கும் தாம்பரம் சகோதரர்களின் சகோதரிக்கு விவாகம் செய்துவிட்டு அவள் புருஷனை அடையவிடாமல் ஜெயேந்திரரும் நட்ட காலனும் (திரிசூலம்) அனுபவித்த அத்யாயங்கள்.(உப.தாம்பரம் பாபு)

குறிப்பு: இதன் பலன் நட்ட காலன் தன் ஒரே பிள்ளையையும் பறிகொடுத்துவிட்டுத் தானும் போய்ச் சேர்ந்தான்.

16. காமகோடி லீலா உடனும் அவளால் அறிமுகம் செய்யப்பட்ட இளசுகளுடனும் விதவிதமான லீலா சரச சல்லாப அத்யாயம் (உப. திருவிடைமருதூர் சந்திரா, பெ. வாழ்ந்தான் மௌலி)

17. சேலம் சுந்தரானு அய்யர் பார்வையுடன் பலகாலமாக இன்னும் நடத்தி வரும் கோலாகல லீலைகள் (உப.பாட்னா முரளி)

18. பாங்க் விதவை சரோஜா அவள் பெண்களுடன் நடத்திய சரச சல்லாபம், பெண்களுக்குக் கல்யாணம் செய்து வைத்து திவ்யானுக்ரஹம் செய்த அத்யாயம்(உப. பாட்னா முரளி)

மேலே குறிப்பிட்ட அத்யாயங்கள் தவிர,

1. விசேஷ அனுபந்தங்கள்

2. அந்தே வாசியின் பொண்பாடி லீலைகள் கோயில் ராமு குடும்பத்து ஸ்திரீகளுடன் தொடர்ந்து அடித்துவரும் கூத்துகள், ஸ்திரீகள் விடுதியில் நடைபெறும் விபசாரங்கள் ஆகிய விஷயங்களும் இணைப்புகளாக வெளிவரும். இதில் முக்கியப் பங்கு தம்பி ரகுவிற்கு.

குருநாதர் நடத்திய லீலைகள்பற்றி புகைப்படங்கள் ஆடியோ, வீடியோ கேசட் பதிவுகள் கைப்பட எழுதிய கடிதங்களின் நகல்கள் இவைகளைக் கொடுத்துதவிய சென்னைராதா மற்றும் நா. குடி வைத்தா இவர்களுக்கும் என்னுடைய கிருத்ஞையை இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

வரப்போகும் அத்யாயங்களைத் தாங்கள் படிப்பதுடன் பிரதிகள் எடுத்து மற்றவர்களுக்கும் அனுப்பி வைத்து குருநாதர்களின் மகத்துவங்களைப் பலரும் அறிய சகாயம் செய்து ஸ்ரீசந்த்ரமௌலீஸ்வரர் அனுக்கிரஹத்தால் காமமோஹ விவகாரங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு பரமஷேமத்தை அடைய பிரார்த்திக்கிறேன், ஈசுவரோரசஷது.

இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்ட பிறகும் பீடத்தின் சிஷ்யர்களும், அபிமானிகளும், பக்தர்களும், தொடர்ந்து திரவியங்களை அள்ளிக் கொடுத்தும், பீடாரோஹண விழாக்களிலும் பங்கு கொண்டு சம்பந்தப்பட்டால் அது அவர்களுடைய துர்பாக்கியம்தான். இந்த பீடத்தின் அழிவுக்குச் செய்யும் கைங்கர்யமாகும். துணிச்சலுடன் இந்த காமாந்த பீடைகளை விரட்டி அடித்தால் மடம் உருப்பட்டு, நமக்கு நல்ல குரு கிடைப்பார்.

சோமசேகர கனபாடிகள்

ஜம்புகேசவர க்ஷேத்திரம் 6.9.2005 ஆதாரம்: (ஜெயேந்திரரின் ஆன்மீகமும், அரசியலும் எம்.ஆர் ரகுநாதன்)