Archive for the ‘கேபிள் டிவி இணைப்பு’ Category

குஷ்புவின் சாபம்: “இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை”.

மே 16, 2011

குஷ்புவின் சாபம்: இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி.  அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. 

சினிமாக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு குஷ்பு மறுபடியும் உதாரணமமக உள்ளார். முன்பு கற்பு பற்றி பேசி, கலாச்சாரத்தை இழிவு படுத்திய அம்மணி இப்பொழுது, மக்களின் தேர்தல் முடிவுகளையும் இழிவு படுத்தி பேசியுள்ளது விநோதமாக உள்ளது. அதிமுக வெற்றி பெற்றதும், அதிர்த்து பிரச்சாரம் செய்த திரையுலகப் புள்ளிகள் திகைத்துள்ளன. சிலர் ராஜினாமா செய்துள்ளனர். சிலர் மறைந்துள்ளனர்; சிலர் தங்களுக்கு பாதுபாப்பு கேட்டு நடிக்கின்றனர்.

மக்களுக்குத்தான் தோல்வி: நடிகை குஷ்பு[1]: 13-05-2011, காலை 10.30 மணியளவில் கலைஞரை பார்க்க மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, நெப்போலியன், நடிகை குஷ்பூ ஆகியோர் வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,

திராவிடத்தில் ஊறிய அம்மணி கற்பு ஒன்றும் பெரிதல்ல என்றெல்லாம் வியாக்யானம் கொடுத்தார். இப்பொழுது, அதிமுக அதிக இடங்களில் வென்றுள்ள நிதர்சனத்தையும் மறந்து, தமிழ் மக்களை சாடியுள்ளது எந்த பகுத்தறிவின் வெளிப்பாடு என்று புரியவில்லை.

இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. தி.மு.க. கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை வழங்கி மக்களை காப்பாற்றியிருக்கிறது. இதை அவர்கள் உணரவில்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் மீடியாக்கள் அதிகமாக விளையாடி விட்டன. இந்த வழக்கில் இருந்து தி.மு.க. மீண்டு வரும்”, என்றார்[2]. சில நாட்களுக்கு முன்புதான் கனிமொழிக்கு ஆதரவாக பேசினார்[3].

ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன்[4]: ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு. இதுகுறித்து குஷ்பு கூறுகையில், “ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி. இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார்.நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார். ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன்”, என்றார் குஷ்பு[5].

சின்னத்திரை சங்கத்திலிருந்து ராஜினாமா செய்த குஷ்பு: இப்படி வீராப்பாக பேசினாலும், சின்னத்திரை சங்கத்தின் [Chinna Thirai Producers Council (CTPC)[6] ] தலைவி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருப்பது[7] வேடிக்கைத்தான்! “ஷூட்டிங் செட்யூல்” அதிகமாக உள்ளது என்று காரணம் வேறு சொல்லியிருக்கிறார். திமுகவின் தோல்வி குறித்து ஆராய்ச்சி செய்யபோகிறாராம்[8]. பார்ப்போம் என்ன முடிவு சொல்லப் போகிறார் என்று.

சகநடிகையின் எதிர்ப்பு குரல்: இதற்கு விந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்[9]. அவர் கூறுகையில், “குஷ்பு அரசியலில் பக்குவப்படாதவர் என்பதை நிரூபித்துள்ளார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அந்த தீர்ப்பை குறை சொல்வதும் கேலி செய்வதும் குஷ்புவின் அறியாமையை காட்டுகிறது. சினிமாவுக்கு வந்ததில் இருந்து வாழ்க்கையில் ஏற்றங்களையே பார்த்து இருக்கிறார். சிறந்த நடிகை என்ற புகழ் கிடைத்தது. சிறப்பான வாழ்க்கையும் அமைந்தது. கஷ்ட நஷ்டங்களை சந்தித்தது இல்லை. இந்த தேர்தலில்தான் முதல் முறையாக தோல்வியைப் பார்த்திருக்கிறார் அவர். என்வேதான் அவரால் தாங்க முடியவில்லை. தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக தி.மு.க. ஆட்சி போக வேண்டும் என வாக்களித்துள்ளனர். அப்படியெனில் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா…. எல்லா தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வென்றுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக கண்ணுக்குத் தெரியாத பெரிய அலையே வீசி இருக்கிறது.

குஷ்புவின் ஆணவப்பேச்சு: இதை தவறான தீர்ப்பு என்பது ஆணவ பேச்சு. நான் தேர்தல் பிரசாரம் செய்தபோது மக்களிடம் எழுச்சியை காண முடிந்தது. ஜெயலலிதா முதல்வராகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் வருவது உறுதி என்று பேசினேன். அது நடந்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்றதை கட்சிக்காரர்கள் மட்டும் கொண்டாடவில்லை. மக்களே கொண்டாடுகிறார்கள். நிறைய வீடுகளில் பெண்கள் வெளியே வந்து பட்டாசுகள் வெடிப்பதை பார்க்க முடிந்தது. நான் மூன்று தேர்தல்களை பார்த்துள்ளேன். வெயில், கஷ்ட நஷ்டம் ஆகியவை எனக்கு பழகி விட்டது. குஷ்புவுக்கு அது தெரியாது. சினிமா உலகில் சந்தோஷமாக இருந்தார். முதல் தடவையாக தேர்தல் பிரசாரம் செய்து வெயில் கொடுமைகளை அனுபவித்தார். இதனால் தோல்வியை தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தப்புத் தப்பாக பேசுகிறார். அரசியலுக்கு வந்த பிறகு கட்டுப்பாடு வேண்டும். எது வேண்டுமானாலும் பேசக் கூடாது. குஷ்பு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்,” என்றார்.

குஷ்புவைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர்: திமுகவுக்கு இது தோல்வி அல்ல. மக்களுக்குத்தான் இதுதோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சாபம் விடுவது போல நடிகை குஷ்பு பேசியதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்[10]. சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குஷ்பு அடங்க வேண்டும் என்று விந்தியா காட்டமாக கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற அதிமுக வக்கீல்கள் பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், நடிகை குஷ்புவுக்கு எச்சரிக்கை. தேர்தல் முடிவுகள் மக்களுக்கு தோல்வி என்று கூறி, 202 தொகுதி மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தி, பேட்டி கொடுத்த, நடிப்பில் காலம் சென்ற நடிகை குஷ்புவை மிக வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


எம்.ஜி.ஆர். தான் கரூணாநிதியை முதல்வராக்கினார், கணக்குக் கேட்டார், அதிமுக ஆரம்பித்தார்! கருணாநிதிதான் அவரை பதிலுக்குத் திட்டினார், வசவு பாடினார்!!

மே 14, 2010

எம்.ஜி.ஆர். தான் என்னை முதல்வராக்கினார்: முதல்வர் கருணாநிதி

First Published : 14 May 2010 01:09:34 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D…………%E0%AE%9C%B0=&SectionName=Tamilnadu

கருணநிதிக்கு கொஞ்சம் கூட மனசாட்சி, வெட்கம், மானம்………….முதலியவை இல்லை என்று தெரிகிறது.

எம். ஜி. ஆரைத் திட்டியது, வசவு பாடியது ……………….முதலியவற்றை இங்கு எழுதினால் நாறிவிடும்.

ஏன், பெரியார், அவரது மனைவி பற்றிக் கூறியது……..முதலியவற்றை ஞாபகப் படுத்திக் கொண்டால், மனங்கள் கூசிக் குறுகிவிடும்.

இன்றைய தமிழ் இளைஞர்கள், ஆஹா,  இவர்களா, இவ்வளவு அசிங்கமாக, ஆபாசமாக, கேவலமாக………………..பேசியிருக்கிறார்கள் ………..இவர்களைப் போய், நாம் தலைவர்கல் என்ரு எண்ணியிருந்தோமே………………என்று வெட்கப்பட்டு, தங்களது எண்ணங்களையே மாற்றிக் கொண்டு விடுவர்.

எங்களைப் போன்ற, இந்த ஆட்கள் பேசியதையெல்லாம் 50களினின்று நன்றாக கேட்டிருப்பதனால், அவர்களைப் பற்றி நிறையவே எழுதலாம்

சென்னை, மே 13: அண்ணா மறைவுக்குப் பிறகு நான் தமிழக முதல்வர் ஆனதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

முதல்வர் பதவியில் 18 ஆண்டுகளை பூர்த்தி செய்து 19-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதல்வர் பதவியில் 19-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும், நிதியமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்து பேசினர். அப்போது குறுக்கிட்டு முதல்வர் கருணாநிதி பேசியது:

அண்ணா மறைந்த பிறகு யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர். எனது வீட்டுக்கே வந்து முதல்வர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கெல்லாம் முன்பு அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது அடுத்து யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்த நேரத்தில், என்னுடைய வீட்டிற்கே வந்து, என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதல்வராக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, இவர்தான் முதலமைச்சராக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என்று என்னுடைய வீட்டிலே உள்ளவர்களையெல்லாம் சமாதானப்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தார். என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார். என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார்.

குறிப்பாக முரசொலி மாறன், நீ வர வேண்டாம்; முதலமைச்சராக ஆகவேண்டாம்; அடுத்து மூத்தவரான நாவலர்தான் அதற்கு ஏற்றவர் என்று சொல்லியும்கூட, நானும், மாறன் வழியிலே நின்று கழகத் தோழர்களுக்கு எடுத்துச் சொல்லியும்கூட, அதையெல்லாம் கேட்காமல், உங்களை கொண்டுபோய் முதல்வர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன் என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார்.நான் முதல்வராக பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவித்த எனது குடும்பத்தினரையும், குறிப்பாக நாவலர் தான் முதல்வராக வேண்டும் என்று கூறிய முரசொலி மாறனையும் அவர் தான் சமாதானப்படுத்தினார்.

நான் இதை ஏதோ இன்றைக்கு வாழ்த்துரை அரங்கம் என்பதால் சொல்வதாகக் கருதிக் கொள்ளக்கூடாது. எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதைச் சொல்லியிருக்கிறேன். நானும் அவரும் வேகமாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டதுண்டு. ஆனால், அவரும் நானும் வாழ்ந்த, பழகிய நாற்பதாண்டு கால நட்பை நான் என்றைக்கும் மறந்ததில்லை.

அப்படி மறக்காத காரணத்தினால்தான், அவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டதும், புகைவண்டியில் வந்து நான் இறங்கி நின்றபோது, ரயிலடியில் அந்தச் செய்தி கிடைத்ததும் உடனடியாக ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று முதல் மாலையை அணிவித்தேன். இது மாதவன், ஜேப்பியார் போன்றவர்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

எனக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தவர்களுக்கும், வாழ்த்த இயலாத சூழ்நிலையில் அவையில் இருப்பவர்களுக்கும் கனிவான அன்பை வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். எந்தப் பண்பாடும், நாகரிகமும் அரசியலில் தலைகாட்ட வேண்டும் என்று இந்தியாவின் மாபெரும் தலைவர்கள் பாடுபட்டார்களோ, அந்த நாகரிகம் சட்டப் பேரவையில் ஒரளவுக்கு ஈடேறியுள்ளது. அந்த நாகரிகம் முழுவதும் ஈடேற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

நீதிமன்றத்தில் வாதாடி விட்டு வெளியே வந்து இரண்டு வக்கீல்களும் தோழமையோடு கைகோர்த்துக் கொள்வது போன்ற நிலைமை அரசியலிலும் வர வேண்டும்.

தில்லியில் சோனியா காந்தியும், அத்வானியும் திருமண விழாக்களில் அருகருகே அமர்ந்து குசலம் விசாரித்துக் கொண்டு அன்போடு பழகுகிறார்கள். இந்த நிலை தமிழகத்தில் இல்லையே என்ற பொறாமை எனக்கு ஏற்படுகிறது.

அண்ணா முதல்வராக இருந்தபோது சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டை காமராஜர் தான் தொடங்கி வைத்தார். அதன் பிறகு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் நான் கலந்து கொள்ளவில்லை. அதனை விவாதப் பொருளாக மாற்ற விரும்பவில்லை.

இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், அரசியல் காழ்ப்புணர்ச்சி தனிப்பட்ட வாழ்க்கையையும், பழக்கத்தையும், நட்பையும் கெடுக்கும் நிலை உருவாகி விடக் கூடாது.

திமுக தலைவர்களில் ஒருவரான என்.வி. நடராஜன் மறைந்தபோது அதிமுகவில் இருந்த நாஞ்சில் மனோகரன் 50 பேருடன் கருப்பு சட்டை அணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார். காமராஜர் காலம் வரையிலும், எம்ஜிஆர் காலம் வரையிலும் இந்த அரசியல் பண்பாடு இருந்தது.

என் தாய் மறைந்தபோது மருத்துவமனையில் இருந்து நான் வீடு திரும்பும் முன்பாக காமராஜர் என் வீட்டுக்கு வந்து என் தாயின் உடலுக்கு இறுதி மரியாதை செய்ததை என்னால் என்றும் மறக்க முடியாது.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், மூதறிஞர் ராஜாஜி மறைந்தபோது தேம்பி, தேம்பி அழுதவர் பெரியார். அரசியலில் நட்பையும், நாகரிகத்தையும் பேணிக்காத்த தலைவர்கள் இவர்கள்.

காயிதே மில்லத் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த போது நான் அவர் அருகே சென்று ”ஐயா” என்று சொன்னதும், எங்கள் சமுதாயத்திற்கு நீங்கள் ஆற்றிய நன்றியை என்றும் மறக்க மாட்டேன் என்று கூறினார்.

அதைப்போலவே, பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்தபோது அவருக்கும் எனக்கும் இருந்த அரசியல் காழ்ப்புணர்வு எல்லோருக்கும் தெரியும். அவர் மறைந்தபோது ஆட்சிப் பொறுப்பிலே இருந்த நான், அவருக்கு சகலவிதமான அரசு மரியாதைகளோடும் அவரைத் தகனம் செய்கின்ற அந்தப் பணியை மேற்கொண்டதும் உங்களுக்கெல்லாம் மறந்து போய் விடக்கூடிய விஷயமல்ல.

அதைப்போலவே நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் வாழ்ந்த அந்தக் காலத்தில் ஒன்றாகவே இருந்த அந்தக் காலத்தில், சட்டசபையில் அவர் சொன்ன ஒரு கருத்து இன்னமும் என்னுடைய காதுகளிலே ஒலித்துக் கொண்டிருக்கிறது.காமராஜருக்கும் எனக்கும் எத்தனையோ அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் அவர் மறைந்தபோது சகலவிதமான அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. அதுபோல எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஹிந்தி மொழி எதிர்ப்பில் நானும், கருணாநிதியும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று எம்.ஜி.ஆர். பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது.

அரசியலில் ஏற்படும் காழ்ப்புகள் தனிப்பட்ட தோழமைக்கு விரோதமாக ஆகி விடக்கூடாது என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன். நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். எல்லாவற்றையும் விட தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்று இருக்கிறது. அதனைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது என்றார் கருணாநிதி.

ஒரு நிலையில், தான் ஒரு பெரிய ராஜ தந்திரி, தேர்தல் வரும் சமயத்தில் இப்ப்டியெல்லாம் பேசினால், ஓட்டுகள் கிடைக்கும். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் எல்லாம் இவர்க்கு ஓட்டு போடுவார்கள் என்று இவருக்கே உரித்தான சூழ்ச்சியுடன் பேசலாம்.

ஆனால், மக்கள் மறக்க மாட்டார்கள்.

இன்றைய நிலையில், அரசியலை மக்களை வெகுவாக பாத்திதுள்ளது.

தங்களை பிழிந்தெடுத்துள்ளது, கசக்கிப் பிழிந்துள்ளது; சாப்பிட்டிற்கே கஷ்டப்பட்டு ஒழைக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், கோடிகலில் கொள்ளையெடித்த அரசியல்வாதிகள், ஜாலியாக வாழ்க்கையை குளு-குளு கார்களில், அறைகளில்……………….அனுபவித்துக் கொண்டிருக்கிறர்கள்.

கேபிள் இணைப்பையும் அரசே இலவசமாக தர வேண்டும்: தமிழகம் முன்னேறும் விதம்!

ஏப்ரல் 10, 2010
கேபிள் இணைப்பையும் அரசே இலவசமாக தர வேண்டும்: சட்டசபையில் பா.ம.க., கோரிக்கை
ஏப்ரல் 10,2010,00:00  IST

Latest indian and world political news information

சென்னை:”அரசு கேபிள், ‘டிவி’ இணைப்பையும் இலவசமாக வழங்க முன்வர வேண்டும்,” என, சட்டசபை பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.பட்ஜெட் மீது சட்டசபையில் நேற்று நடந்த பொது விவாதம்: ஜி.கே.மணி – பா.ம.க: பென்னாகரம் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியின் மிகப்பெரிய கூட்டணி, பிரதான எதிர்க்கட்சியை எதிர்த்து பா.ம.க., தனித்து போட்டியிட்டு 41 ஆயிரத்து 285 ஓட்டுகளை பெற்றுள்ளது. வாக்காளர்களுக்கு நன்றி.வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பொருளாதார ஆய்வறிக்கை, கடந்த ஆண்டு திட்டங்கள் எந்த அளவு நிறைவேற்றப்பட்டன என்ற அறிக்கை, கடந்த ஆண்டு மக்களை போய்ச்சேர்ந்த திட்டங்களால் எந்த அளவு விளைவு, தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்ற அறிக்கை ஆகியவற்றையும் தாக்கல் செய்ய வேண்டும்.

மாவட்ட வாரியாக குடிசைகளை கணக்கெடுத்து, முன்னுரிமை கொடுத்து, எவ்வித குறுக்கீடும் இல்லாமல் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கழிவறைகள் அதிகம் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. அவ்வாறு கட்டப்படும் வீடுகளில் கட்டாயம் கழிவறை வசதியும் செய்ய வேண்டும். கிராமப்புறங்களிலும் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்.தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

குடும்பத்திற்கு மாதம் 5,000 ரூபாயும், கிணறு வைத்திருக்கும் குடும்பத்திற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாயும் கொடுக்க வேண்டும்.இயற்கை இடர்பாடு நிதி உருவாக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், இடைக்கால தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. அதன்பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேசிய அளவில் விவசாயிகள் கடனாளிகளாக இருப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

நிதியமைச்சர் அன்பழகன்: தமிழகத்தில் தான் விவசாயிகளின் 7,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.ஜி.கே.மணி: சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலம் உருவாக்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதையை, தமிழகத்திற்கு நுழைய விடாமல் மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்க மாநில, மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுக்கள் பரிந்துரை செய்யும் தொகை மிகவும் குறைவாக உள்ளது.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் எதுவும் இல்லை என்ற நிலை 2012ம் ஆண்டிற்குள் ஏற்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.ஸ்ரீபெரும்புதூரில் குட்டி ஜப்பான் உருவாகவுள்ளது என 75 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு விவசாய நிலத்தை ஏன் அடிமாட்டு விலைக்கு வாங்கித்தர வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களாகவே வாங்கட்டும். விலைவாசி உயர்வு குறித்து துணை முதல்வர் ஸ்டாலின், டில்லியில் பேசியுள்ளார். விலைவாசியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி, விவசாயிகள் ஏற்றுக் கொண்டால் தான் விவசாய நிலம் பன்னாட்டு நிறுவனத்திற்காக வாங்கப்படுகிறது. ‘சிப்காட்’டில், தவிர்க்க முடியாத நிலையில் அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. வெளிநாட்டு முதலாளிகளுக்காக அரசு விவசாய நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கவில்லை.

ஜி.கே.மணி: கிராமப்புற மாணவர்களுக்கான 15 சதவீத இடஒதுக்கீடு, கோர்ட் உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளது. அதை, மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் பொன்முடி: கோர்ட் உத்தரவால் தான், கிராமப்புற மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது நிறுத்தப்பட்டது. முதல் தலைமுறையாக பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், கிராமப்புற முதல்தலைமுறை மாணவர்கள் பயனடைவர்.

ஜி.கே.மணி: அரசு இலவச கலர், ‘டிவி’யை, 1,500 ரூபாய்க்கும் மேல் வாங்கி வழங்கி வருகிறது. கேபிள், ‘டிவி’க்கு தனித்தொகை செலுத்த வேண்டியுள்ளது. கிராமங்களில் 100 ரூபாய், நடுத்தர நகரங்களில் 120 ரூபாய், பெரிய நகரங்களில் 150 ரூபாய் என கேபிள், ‘டிவி’ கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.இதனால், ஏழைகள் ஆண்டிற்கு 1,200 முதல் 1,800 ரூபாய் செலவழிப்பது, சிரமமாக உள்ளது. கேபிள், ‘டிவி’ இணைப்பையும் அரசு இலவசமாக வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு ஜி.கே.மணி கோரினார்.