Archive for the ‘பிறப்பிற்கு லஞ்சம்’ Category

எந்த காளியும் / காலியும் வந்து நாக்கில் எழுத வேண்டாம், நாற்காலியாலேயே எழுதிவிடுவார்கள்.

ஜூன் 2, 2010

எந்த காளியும் / காலியும் வந்து நாக்கில் எழுத வேண்டாம், நாற்காலியாலேயே எழுதிவிடுவார்கள்.

செம்மொழியில் எழுதப் பட்டுள்ள சங்க இலக்கியத்தின் படி, “கழகம்” என்பது, திருடர்கள், கொள்ளைக்காரர்கள் கூடும் இடம். அவ்வாறே, அடலேறுக்கழகக் கண்மணிகள் தங்களது சுயரூபத்தைக் காண்பிக்கத் தொடங்கிவிட்டனர்.

செம்மொழி மாநாடே கோடிகளில் புரண்டு, ஊழலில் மிதக்கும் இந்நேரத்தில் அருமை கவுன்சிலர்கள் தமது வீரத்தை காட்டி, போர்களத்தில் இறங்கிவிட்டனர். தாம்புக்கயிறும் நாணிக்குனியும் அளவிற்கு தடித்தத் தங்கச் செயிகளையும், கைகளில் வளையல்கள் மற்ற அணிகளை அணிந்த இந்த திராவிட போர்வாள்கள், இன்று காலிகளைப்போல், நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு அடித்துக் கொள்கிறார்கள்!

அன்று சேர, சோழ, பாண்டியர்கள் எவ்வளவு ஒற்றுமையாக சண்டை போட்டுக் கொண்டனரோ, அதே மாதிரி, இந்த கழகங்களின் வீரர்கள் ஆயுதங்களுடன் போராடியது மெய்சிலிர்க்க வைத்தது. இதை பொறுமையாக படம் வேறு பிடிக்கிறார்கள்! நாளை அவர்களுக்கும் அத்தகைய உபசரிப்புக் கிடைக்கலாம்.

இனி கருணாநிதி, இதைப்பற்றியும் கவிதைகள் எழுதலாம், கதைகள் எழுதலாம்,

எந்த காளியும் / காலியும் வந்து நாக்கில் எழுத வேண்டாம், நாற்காலியாலேயே எழுதிவிடுவார்கள்.

பல்கலை துணைவேந்தர்கள் முதலியோர் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கலாம், பாராட்டு விழாக்கள் நடத்தலாம், பட்டங்கள் கொடுக்கலாம்……….

அம்மா, திருக்குவலை அங்காள பரமேஸ்வரியே, ஈரோடு ஃபர்ப் ரோடு மாரியம்மனே, மயிலை கற்பகவல்லியே…………………………………ஜாக்கிரதை, எச்சரிக்கை……………………………

அன்று சீமான் உள்ளே நுழைந்தான் என்று புரளி, இதில் பொய்யான படங்கள் வேறு!

தாயே, தமிழ் பேசி, செம்மொழி என்று சொல்லி உன்னைத் தாக்க வருகின்றனர்,

திராவிட ஆட்சியில் நீ கல்லாகவே இருந்துவிட்டபடியால், கயவர்கள், கொள்ளைக்காரர்கள், கொலையாளிகள், ……………….எல்லோருமே கருவறைக்குள் நுழைந்து விட்டனர்.

இன்னும் நுழையப் பார்க்கின்றனர்.

காளி, நீலி, சூலி………………………………..உண்மையாகவே நீ என்று கண் திறப்பாயோ தெரியவில்லை!

கடவுளுக்கே லஞ்சம் லஞ்சத்தை எப்படி ஒழிக்கமுடியும்? காவல்துறை அதிகாரி கருத்து

ஜூன் 1, 2010

கடவுளுக்கே லஞ்சம் லஞ்சத்தை எப்படி ஒழிக்கமுடியும்? காவல்துறை அதிகாரி கருத்து

http://www.viduthalai.com/20100601/news18.html

தமிழகத்தைப் பொருத்த வரைக்கும் திராவிட அரசியலும் லஞ்சமும், நகமும்-சதையும் போன்றது, பிரிக்க முடியாதது.

கார்பரேஷன் லஞ்சத்தின் சின்னமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. அதுபோலத்தான், மின்சார வாரியம், எல்லாமே……

பிறப்பிலிருந்து, இறப்பிற்கு வரை லஞ்சம் வாங்கும் தமிழகத்தை, திராவிடத்தை யாராலும் மாற்ற முடியாது.

கடவுளுக்கே லஞ்சம் லஞ்சத்தை எப்படி ஒழிக்கமுடியும்? காவல்துறை அதிகாரி கருத்து என்றால், அந்த கோவில்களை ஆட்டிப் படைப்பது இந்த நாத்திக பேய்கள்தாம்.

எப்படி ஆர்.டி.எக்ஸ் உள்ளே நுழைய லஞ்சம் வாங்கப் பட்டதோ, அதுபோலத்தான், இந்த நாத்திக அரசும் கடவுளைப் பார்க்க, காசு கேட்கிறது.

சென்னை, ஜூன் 1-_ கடவுளுக்கே லஞ்சம் கொடுக்கும் நாட்டில் லஞ்சத்தை ஒழிப்பது என்பது அவ்வளவு சுலப-மல்ல என்று சி.பி.அய்.-அதிகாரி ஈசுவரமூர்த்தி தெரிவித்தார் லஞ்சத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்று முகா-மில் சி.பி.அய். காவல்-துறைக் கண்காணிப்-பா-ளர் ஈஸ்வர மூர்த்தி பேசி-யதாவது:-

லஞ்ச ஊழல் தற்-போது நாட்டில் விரிந்து பரந்து கிடக்கிறது. லஞ்ச ஊழலை பற்றி நாட்டு மக்களும் பெரிதாக கவ-லைப்படுவதில்லை. எவ்வளவு பணம் கொடுத்-தாலும் நம்முடைய வேலை முடிய வேண்டும் என்ற மனப்பான்மைக்கு மக்கள் வந்துவிட்டார்-கள். கடவுளுக்கே லஞ்சம் கொடுக்கும் சூழ்நிலை-தான் நமது நாட்டில் நிலவுகிறது. லஞ்சம் வாங்-காதவர்களை ஏமாளி-களாக பார்க்கும் அவலம் உள்ளது. ஏனென்றால் லஞ்சம் வாங்கி லட்சக்-கணக்-கில் பணம் சேர்த்து வைத்திருக்கும் ஒரு நபர் தனது பிள்ளைகளை எளிதில் பொறியியல் கல்லூரியிலோ, நல்ல பள்ளியிலோ படிப்-பதற்கு சேர்த்துவிடுகிறார்கள்.

ஆனால் லஞ்சம் வாங்-காமல் நியாயமாக வாழ்க்-கையை நடத்தும் ஒரு நபரால் தன்னுடைய குழந்தைகளை அழைத்-துக்கொண்டு கல்லூரி-களின் கதவை தட்ட முடியாது. 1993ஆ-ம் ஆண்டில் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 300 பேர் மாண்டார்கள். அந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு லஞ்சம் தான் காரணகர்த்தாவாக இருந்தது. அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்திய ஆர்.டி.-எக்ஸ். ரக வெடிமருந்து-களை கடத்துவதற்கு ஒரு சுங்க அதிகாரிக்கு ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுக்-கப்பட்டது பின்னால் தெரிய வந்தது.

உலகில் உள்ள 180 நாடுகளை கணக்கெ-டுத்து பார்த்தபோது, லஞ்ச லாவண்யத்தில் நமது நாடு 84ஆ-வது இடத்தில்-தான் உள்ளது. லஞ்ச லாவண்யத்தில் நம்மை-விட 83 நாடுகள் முன்-னால் இருக்கிறார்கள் என்பதில் வேண்டு-மா-னால் பெருமைப்பட்டுக்-கொள்ளலாம். லஞ்சம் வாங்குவதோ, லஞ்சம் கொடுப்பதோ சட்டப்-படி குற்றம் என்று அனைத்து அரசு அலு-வல-கங்களிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்-டும் என்று அரசு ஆணை உள்ளது. ஆனால் இது-போன்ற எந்த அறிவிப்பு பலகையையும் நம்முடைய அரசு அலுவலகங்களில் பார்க்க முடியாது. காவல்-துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளால் லஞ்-சம் வாங்குபவர்கள் குறைந்தபட்சம் 3 மாதங்-களாவது பயத்தோடு வாங்காமல் இருக்-கிறார்-கள். அதற்காகவாவது காவல்துறை நடவடிக்கை பயன்படுகிறது. சி.பி.-அய்.யை பொறுத்த-மட்-டில் பொதுமக்கள் எஸ்.-எம்.எஸ். மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமா-கவோ லஞ்சம் வாங்குப-வர்கள் பற்றி புகார் அளிக்கலாம். நம்மால் லஞ்சத்தை ஒழிக்க முடி-யாவிட்டாலும், லஞ்ச-வாதிகளை பயமுறுத்-தவாவது செய்வோம். லஞ்சத்தை ஒழிப்பதற்கு இதழ்களும் துணைபுரிய வேண்டும். அதற்கு இந்த பயிற்சி முகாம் நல்ல பலனை கொடுக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கண்-கா-ணிப்பாளர் ஈஸ்வர-மூர்த்தி மிகவும் வெளிப்-படையாகப் பேசி செய்-தியாளர்களின் கைதட்-டலை பெற்றார்.