Posts Tagged ‘ஈரோடு மாரியம்மன்’

எந்த காளியும் / காலியும் வந்து நாக்கில் எழுத வேண்டாம், நாற்காலியாலேயே எழுதிவிடுவார்கள்.

ஜூன் 2, 2010

எந்த காளியும் / காலியும் வந்து நாக்கில் எழுத வேண்டாம், நாற்காலியாலேயே எழுதிவிடுவார்கள்.

செம்மொழியில் எழுதப் பட்டுள்ள சங்க இலக்கியத்தின் படி, “கழகம்” என்பது, திருடர்கள், கொள்ளைக்காரர்கள் கூடும் இடம். அவ்வாறே, அடலேறுக்கழகக் கண்மணிகள் தங்களது சுயரூபத்தைக் காண்பிக்கத் தொடங்கிவிட்டனர்.

செம்மொழி மாநாடே கோடிகளில் புரண்டு, ஊழலில் மிதக்கும் இந்நேரத்தில் அருமை கவுன்சிலர்கள் தமது வீரத்தை காட்டி, போர்களத்தில் இறங்கிவிட்டனர். தாம்புக்கயிறும் நாணிக்குனியும் அளவிற்கு தடித்தத் தங்கச் செயிகளையும், கைகளில் வளையல்கள் மற்ற அணிகளை அணிந்த இந்த திராவிட போர்வாள்கள், இன்று காலிகளைப்போல், நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு அடித்துக் கொள்கிறார்கள்!

அன்று சேர, சோழ, பாண்டியர்கள் எவ்வளவு ஒற்றுமையாக சண்டை போட்டுக் கொண்டனரோ, அதே மாதிரி, இந்த கழகங்களின் வீரர்கள் ஆயுதங்களுடன் போராடியது மெய்சிலிர்க்க வைத்தது. இதை பொறுமையாக படம் வேறு பிடிக்கிறார்கள்! நாளை அவர்களுக்கும் அத்தகைய உபசரிப்புக் கிடைக்கலாம்.

இனி கருணாநிதி, இதைப்பற்றியும் கவிதைகள் எழுதலாம், கதைகள் எழுதலாம்,

எந்த காளியும் / காலியும் வந்து நாக்கில் எழுத வேண்டாம், நாற்காலியாலேயே எழுதிவிடுவார்கள்.

பல்கலை துணைவேந்தர்கள் முதலியோர் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கலாம், பாராட்டு விழாக்கள் நடத்தலாம், பட்டங்கள் கொடுக்கலாம்……….

அம்மா, திருக்குவலை அங்காள பரமேஸ்வரியே, ஈரோடு ஃபர்ப் ரோடு மாரியம்மனே, மயிலை கற்பகவல்லியே…………………………………ஜாக்கிரதை, எச்சரிக்கை……………………………

அன்று சீமான் உள்ளே நுழைந்தான் என்று புரளி, இதில் பொய்யான படங்கள் வேறு!

தாயே, தமிழ் பேசி, செம்மொழி என்று சொல்லி உன்னைத் தாக்க வருகின்றனர்,

திராவிட ஆட்சியில் நீ கல்லாகவே இருந்துவிட்டபடியால், கயவர்கள், கொள்ளைக்காரர்கள், கொலையாளிகள், ……………….எல்லோருமே கருவறைக்குள் நுழைந்து விட்டனர்.

இன்னும் நுழையப் பார்க்கின்றனர்.

காளி, நீலி, சூலி………………………………..உண்மையாகவே நீ என்று கண் திறப்பாயோ தெரியவில்லை!