Posts Tagged ‘இமயமலை’

இமயமலையில் பதுங்கியுள்ள நித்யானந்தாவை ரஜினியை விட்டுத் தேடச் சொல்லலாமா?

மார்ச் 31, 2010

இமயமலையில் பதுங்கியுள்ள நித்யானந்தாவை ரஜினியை விட்டுத் தேடச் சொல்லலாமா?

தினகரன் இன்று இப்படியொரு செய்தியை வெளியிட்டுள்ளது!

சொல்வதெல்லாம் “நிஜம்” தான்: அது சன்-குழுமத்தைச் சேர்ந்தது மட்டுமன்றி, அரசியல் பலத்தையும் கொண்டுள்ளது. ஆகவே அது பொய்யாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதாவது சொல்வதெல்லம் “நிஜம்” தான்!

இமயமலையில் நித்யானந்தா பதுங்கல்?

பதிவு செய்த நாள் 3/31/2010 3:43:23 PM
http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=1587&id1=12

தலைமறைவாக உள்ள நித்யானந்தா! பெங்களூர்: தியான பீடம் மற்றும் அதன் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்கிடையே நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கு, கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. சென்னை போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரின் ஆங்கில மற்றும் கன்னட மொழிபெயர்ப்பை சிஐடி சூப்பிரண்டு யோகப்பா சமர்ப்பித்தார். கோர்ட்டில் அவர் கூறுகையில், ‘‘நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க 2 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நித்யானந்தாவின் இருப்பிடம் தெரியவில்லை. ஆவணங்களை மொழி பெயர்த்ததை தவிர, இந்த வழக்கில் வேறு முன்னேற்றம் எதுவும் இல்லை’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதி அரளி நாகராஜ், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 6&ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கு தொடர்பாக நித்யானந்தா தனது ஆட்சேபணையை தாக்கல் செய்யவும் நீதிபதி அனுமதி வழங்கினார். தியான பீட தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியுள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பெங்களூரு, நித்யானந்தா, கருணாநிதி: ஜெயலலிதாவிற்கு எப்படி ஹைதராபாதோ, கருணாநிதிக்கு பெங்களூரும், மஹாபலிபுரமும். பெங்களூரில் எல்லாமே உண்டு. ஆனால், மஹாபலிபுரம், இப்பொழுது “செக்ஸ்-டூரிஸ’த்திற்கு உலகப் புகழ் பெற்றுவிட்டது. ஜோ அங்குதான் ஜாலியாக இருந்தான். வில்-ஹியூம் சின்னவீடு வைத்திருந்தான். அவன் ரஜினி படத்திலும் நடித்து இருக்கிறான்!

பெங்களூரு, நக்கீரன் கோபால், ரஜினி காந்த், கருணாநிதி: இவற்றிற்கெல்லாம் நெருங்கிய தொடர்பு உள்ளது. முன்னம், சந்தனக் கடத்தல் வீரப்பன் விஷயத்தில் கோடிகள் பறிமாற்றங்கள் நடந்தன என்றெல்லாம் சட்டசபையிலேயே பேச்சு அடிபட்டபோது, இவர்கள் அதில் சம்பந்தப் பட்டுள்ளதாக விவாதம் வந்தது.

இமயமலை, ரஜினி காந்த், நித்யானந்தா: தினகரன் இப்பொழுது “இமயமலையில் நித்யானந்தா பதுங்கலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளதால், இந்த சம்பந்தமும் இன்று முக்கியத்துவம் பெறுகிறது. இனி கருணாநிதி ஆணையிடுவது தான் பாக்கி. ஆணையிட்டால், உடனே ரஜினியை இமயமலைக்கு அனுப்பி, நித்யனந்தாவைப் பிடித்துவிடலாம்!