Posts Tagged ‘ஜெயலலிதா’

அம்மா உணவகங்கள், கிளினுக்குகள் தாக்குவதால், திமுக மக்களை ஜெயித்து விட முடியாது!

மே 8, 2021

அம்மா உணவகங்கள், கிளினுக்குகள் தாக்குவதால், திமுக மக்களை ஜெயித்து விட முடியாது!

அம்மா உணவகங்கள் தாக்கப் படுதல்: சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் ‘அம்மா’ என்ற பெயரை திமுகவினர் மறைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன[1]. சென்னை ஜெ.ஜெ.நகரில் ஏழை, எளிய மக்களின் பசியாற்றி வந்த வந்த அம்மா உணவகத்தின் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சைதாப்பேட்டை மாந்தோப் பள்ளி மற்றும் சிஐடி நகரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் இருந்த ‘அம்மா’ என்ற பெயர்களும் அடுத்தடுத்து மறைக்கப்பட்டுள்ளன[2]. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ‘அம்மா’ என தமிழக மக்கள் அன்பாக அழைத்து வந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகும் நிலைத்திருக்கும் புகழை பார்த்து, பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவினர், உணவகத்தில் இருக்கும் அம்மா பெயரை மறைத்து அடாவடி செயலில் ஈடுபட்டுள்ளனர்[3]. திமுகவினரின் இந்த செயல்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன[4]. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த, அவரிக்காடு ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்கில் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த பேனர்களை கிழித்தெறிந்து, அராஜகத்தில் ஈடுபட்டனர்[5]. அப்பகுதி மீனவர்கள் பெரும்பாலானோர் மருத்துவம் பார்த்து பயனடைந்து வந்த மினி கிளினிக்கில், அராஜகத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்[6].

அதிமுக கண்டனம்: அம்மா மினி கிளினிக் சேதப்படுத்தப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா பேரிடர் காலத்தில் எளிய மக்களுக்கும் சிறந்த மருத்துவம் உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்னும் உன்னத நோக்குடன், அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டதாகவும், சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக ஆட்சியில் கட்டிய பாலத்தில் இருந்த கல்வெட்டை, கடப்பாரையால் சேதப்படுத்தி திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதிகார திமிரில் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்யக்கோரி கோஷமிட்டு கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

அம்மா மினி கிளினிக்குகள் ஊழியர்கள் கொரோனா பணிக்கு அனுப்பப் படுகின்றனர்: தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது[7]. இந்த மினி கிளினிக்குகளில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது[8].  தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2,000 அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளதால் மினி கிளினிக்குகளில் பணிபுரிந்து வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் இனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா பணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மினி கிளினிக்குகள் உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தது போல துணை சுகாதார நிலைங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் முடியும் வரை மினி கிளினிக்குகள் செயல்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடப்படுகிறதா அல்லது மூடுவிழா திட்டம் ஆரம்பமா?: அன்னுார் ஒன்றியத்தில், கணுவக்கரை, அக்கரை செங்கப்பள்ளி, ருத்திரியம்பாளையம், குப்பேபாளையம் என நான்கு இடங்களில் அமைக்கப்பட்டன. கடந்த மூன்று மாதங்களாக, நான்கு மினி கிளினிக்குகள் செயல்பட்டு வந்தன. அம்மா மினி கிளினிக்குகள் இவற்றில் தலா, ஒரு டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் உதவியாளர் பணி புரிந்து வந்தனர். இந்நிலையில் 15 நாட்களுக்கு முன் கணுவக் கரையில் உள்ள அம்மா மினி கிளினிக் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 3ம் தேதி முதல் ருத்திரியம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, குப்பேபாளையம் ஆகிய மூன்று ஊர்களிலுள்ள மினி கிளினிக்குகள் மூடப்பட்டன[9]. இதுகுறித்து குப்பேபாளையம் மக்கள் கூறுகையில், ‘டாக்டர் மற்றும் செவிலியர்கள் கொரோனா சிகிச்சை பணிக்காக கோவை செல்கின்றனர். எனவே, இங்கு பணிபுரிய டாக்டர், செவிலியர் இல்லாததால், தற்காலிகமாக மூடப்படுகிறது, என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்[10]. மினி கிளினிக் செயல்பட்டதால் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. தற்போது எட்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அரசு மீண்டும் மினி கிளினிக்கை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்’ என்றனர்.அன்னுார் ஒன்றியத்தில், நான்கு மினி கிளினிக்குகள் அமைந்துள்ள பகுதிகளில் தலா மூன்று ஊராட்சி மக்கள் பயன்பெற்று வந்தனர். இவை மூடப்பட்டதால், 12 ஊராட்சி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சிக்கு திமுக வந்ததால் மமதை, செருக்குடன் வன்முறையில் இறங்கும் கழகக் கண்மணிகள்: பதவி ஏற்றதுடன் கருணாநிதி, அண்ணா, பெரியார் சமாதிகளுக்குச் சென்று வழிபட்டு வந்த ஸ்டாலின்,  அதே முறையில், எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா-திராவிடத் தலைவர்களுக்கு மரியாதை செய்யவில்லை. ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்குச் சென்று மரியாதை செய்தது, அரசியல் என்றாகிறது. இதனால், அதிமுக-விரோதம், காழ்ப்பு, துவேசம் உறுதியான நிலையில், தொண்டர்கள் இன்னும் பல நடவடிக்கைகளில் இறங்கலாம். ஆட்சி மாறினாலும், எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா-திராவிடத் தலைவர்களை தமிழகத்திலிருந்து அழித்துவிட முடியாது. இப்பொழுது, கணக்குகள் மாறியதால், வெற்றிக் கிடைத்டுள்ளது. ஐந்தாண்டுகள் பிறகு, மறுபடியும் அதிமுக வரும். எனவே, இத்தகைய சுழற்சி சந்தர்ப்பவாத அரசியலில், திமுக-அதிமுக மோதல்கள் தமிழகததின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும். வன்முறையும் பெருகலாம்.

அம்மா உணவகம் மாதிரி மற்ற மாநிலங்களில் பின்பற்றப் பட்டன: தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இருந்த போது அம்மா உணவகம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி இட்லி ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்றும், மதிய உணவு 5 ரூபாய் என்ற வீதத்திலும் விற்கப்பட்டது. தினசரி கூலி வேலை செய்பவர்கள், குறைந்த சம்பளம் வாங்குவோர், பள்ளி மாணவர்கள் என பலருக்கும் உணவளிக்கும் இடமாக மாறியது. டெல்லியிலும் கூட பொங்கல் சமயத்தில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தை பல்வேறு மாநில அரசுகள், சில வெளிநாட்டு அமைச்சர்கள் வந்து பார்வையிட்டு செயல்படுத்தப்படும் விதம் குறித்து தெரிந்து சென்றனர். இதனையடுத்து கர்நாடகாவில் இந்திரா கேண்டீன் திறக்கபட்டது; ராஜஸ்தானில் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது ; இன்னும் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.  இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்ணா கேண்டீன் என்ற பெயரில் இதனை திறந்தார். அதன்படி மதிய உணவு 5 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது.  கடந்த 2014-ம் ஆண்டில் தேர்தல் வாக்குறுதியாக மாநிலம் முழுவதும் அண்ணா கேண்டீன் உருவாக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்[11]. அதன்படி முதல்கட்டமாக 160 இடங்களில் அண்ணா கேண்டின் அமைக்கப்பட்டது. இதில் மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்பட உள்ளது. மதிய உணவு 15 ரூபாய்க்கும் இரவு உணவு 5 ரூபாய்க்கும் கொடுக்கப்படும். விரைவில் இந்த திட்டம் மாநிலம் முழுக்க விரிவுபடுத்தப்படும் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்[12].

ஜெயலலிதாஎதிர்ப்பு தேவையில்லை: ஜெயலலிதா பெயரில் இயங்கி வரும் அம்மா உணவகம், லட்சக் கணக்கான கூலித் தொழிலாளர், மற்ற ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு அளித்து வருகிறது. எம்,ஜி.ஆரின் மத்திய சத்துணவு திட்டம் போல பிரபலமாகியுள்ளது. இது போல ஆந்திராவில், தெலிங்கானாவில் உணவகங்கள் நடத்தப் படுகின்றன. அதே போல அம்மா கிளினிக்குகளில், வசதி இல்லாதவர்கள், ஏழைகள் மருத்துவ வசதி பெற்று வருகின்றனர். ஆகவே, இவற்றைத் தாக்குவதால், திமுகவினர் எதையும் சாதிக்க முடியாது.  இல்லை, அண்ணா-ராஜண்ணா மாதிரி மோதல்களை உருவாக்கினால், மக்கள் புரிந்து கொள்வர்.

© வேதபிரகாஷ்

07-05-2021


[1] நியூஸ்.ஜே, அம்மா உணவகங்களில்அம்மாஎன்ற பெயரை திமுகவினர் மறைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன, May 06, 2021 10:14 AM.

[2] https://www.newsj.tv/view/After-DMK-coming-to-power-Amma-Unavagam,-Amma-Clinics-come-under-attack-43079

[3] தினமலர், அம்மா மினி கிளினிக் சேதம், Added : மே 06, 2021  00:23

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2762630

[5] தினத்தந்தி, வேதாரண்யம் அருகே அம்மா மினி கிளினிக் பெயர் பதாகை பேனர் கிழிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு, பதிவு: மே 05,  2021 22:00 PM.

[6] https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/05/05220025/attack-on-amma-clinic.vpf

[7] தமிழ்.ஏசியா.நெட்.நியூஸ், அதிர்ச்சி தகவல்தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடல்…!, By Vinoth Kumar, Tamil Nadu, First Published Apr 24, 2021, 5:56 PM IST; Last Updated Apr 24, 2021, 5:56 PM IST

[8] https://tamil.asianetnews.com/politics/temporary-closure-of-2-000-amma-mini-clinic-qs2ik5

[9] தினமலர், மூன்று மினி கிளினிக்குகள் மூடல், Added : மே 05, 2021  23:46

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=2762516

[11] விகடன், ஆந்திராவில்அண்ணா கேன்டீன்’ – 5 ரூபாய்க்கு சாப்பாடு!, ராம் பிரசாத், Published: 11 Jul 2018 8 PM; Updated:12 Jul 2018 1 PM

[12] https://www.vikatan.com/news/politics/130509-anna-canteen-serves-meals-rs-5-in-andhra-pradesh

லெனின் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை திறப்பு, பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு, அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு! (1)

மார்ச் 7, 2018

லெனின் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை திறப்பு, பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு, அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு! (1)

Lenin statue down - Tiripura

திரிபுராவில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி: மார்ச் 3, 2018 அன்று அறிவிக்கப் பட்ட தேர்தல் முடிவுகள் மூலம், திரிபுராவில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது[1]. இது அரசியல் ரீதியில், சித்தாந்த போராட்ட நிலையில், ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. “காங்கிரஸ் இல்லாத பாரதம்” என்ற கொள்கையில் அரசியல் செய்யும் போது, இவ்வாறு கம்யூனிஸம் தோற்றது, பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும். அதனால் தான், இது கம்யூனிஸ சித்தாந்திகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேசவிரோத சக்திகளுடன் சேர்ந்து கொண்டு, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி, பிஜேபி அரசு அமைத்துள்ளதாக, பிருந்தா காரத் குற்றஞ்சாட்டினார். ஆனால், பிஜேபி தேசியம், தேசிஅ ஒருமைப்பாடு பற்றி தெளிவாக இருப்பதாக எடுத்துக் காட்டியது. உடனடியாக மாநிலத்தில் சில பகுதிகளில் வன்முறை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன[2]. வழக்கம் போல பரஸ்பர குற்றச்சாட்டுகள் இருந்தாலும், வன்முறைகள் கம்யூனிஸ்டுகளின் வாடிக்கையான செயல்பாடாக இருந்து வந்ததால், அதனை பெரிதாக யாரும் பொருட்படுத்தவில்லை.

Second Lenin statue down - Tiripura

லெனின் சிலை உடைப்பு: திரிபுராவில் மார்க்சிஸ்ட் தொடர்ந்து ஆட்சி செய்வதை கொண்டாடும் விதமாக 2013ல் லெனின் சிலையை நிறுவினர். ஆனால் பாஜக ஆட்சியை கைப்பற்றிய இரண்டாவது நாளே மார்க்சிஸ்ட் ஆட்சியின் தொடர் வெற்றி அடையாளமான லெனினின் சிலையை புல்டௌசரை வைத்து காவி உடை அணிந்த சிலர் அகற்றியுள்ளனர்[3]. சிலையை உடைத்ததும், ‘பாரத் மாதா கி ஜெய்’ என கூச்சல்களிட்டதும் இது தொடர்பான சுற்றில் உள்ள ஒரு விடியோவில் தெரிகிறது[4]. சட்டவிரோதமாக இதுபோன்ற செயல்களில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபடுவதாக சிபிஐ குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பிஜேபி இதனை மறுத்துள்ளது. பெலோனியா சதுக்கத்தில் இருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது[5].  திரிபுரா மாநிலம் சப்ரூம் மோட்டார் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த இன்னொரு லெனின் சிலை உடைக்கப்பட்டது[6]. இதனால் 144 ஊரடங்கு சட்டமும் அமூல் படுத்தப் பட்டது. யு.எஸ்.எஸ்.ஆர் உடைந்த போது, லெனின் சிலைகள் உடைக்கப் பட்டன. பிரிந்த நாடுகளில் உள்ள ஆயிரக் கணக்கான சிலைகள் அகற்றப் பட்டன.

Mamta, rao, third front

மேற்கு வங்காளத்தை கம்யூனிஸ ஆட்சியை வீழ்த்திய மம்தா சிலையுடைப்பை எதிர்த்தது: 33 வருடங்களாக மேற்கு வங்காளத்தில் இருந்த சி.பி.எம் ஆட்சியை நீக்கி பதவிக்கு வந்தார். ஆனால், இப்பொழுது, லெனின் மற்றும் மார்க்ஸ் சிலைகளை அப்புறப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளது[7] வேடிக்கையாக உள்ளது. ஏனெனில், மறுபடியும் பிஜேபிக்கு எதிராக, ஒரு அணியை உண்டாக்க மம்தா, ராஜசேகரராவ், ஸ்டாலின் முதலியோர் முயலும் நேரத்தில், இவ்வாறு கூறப் பட்டுள்ளதையும் கவனிக்கப் பட்டுள்ளது[8]. அதுமட்டுமல்லாது, அங்கு கம்யூனிஸத் தலைவர்கள் யாரும் மம்தாவை நம்புவதாக இல்லை. இருப்பினும் கூட்டணி அரசியலில் ஆதாயம் பெறலாம் என்ற நோக்க்கில் பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது. இரண்டாவது அணி தலைமையில் காங்கிரஸ் தள்ளாடிக் கொண்டிருக்கும் வேளையில், மூன்றாவது அணி என்றாலே, முரண்பட்ட, எதிர்-புதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்து வந்து, பிரிந்து போகும் நிலை என்பதும் மக்களால் அறியப் பட்ட விசயமாக விட்டது. அவர்களால், நிச்சயமாக நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது. மேலும், இது ஓட்டுகளைப் பிரித்து பிஜேபிக்குத் தான் சாதகத்தை ஏற்படுத்தும்.

Jayalaita statue

சிறிது நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா சிலை திறந்து உருவான “உருவப் பிரச்சினைகள்” [9]: அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வெண்கல சிலை ரூ.7 லட்சம் மதிப்பில் 350 கிலோ எடையில் 7 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளான கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந்தேதியன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த சிலை ஜெயலலிதாவின் முகத்தை போல் இல்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, சசிகலாவின் உறவினர்கள் திவாகரன், டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. உள்பட பலரும் குற்றம்சாட்டினர். அதேபோல், சமூக வலைதளங்களிலும் பல்வேறு விமர் சனங்கள், கருத்துகள் வந்தன. அதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘ஜெயலலிதா சிலையில் மாற்றம் செய்ய தலைமைக்கழகம் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கும்’ என்று தெரிவித்தார். அதன்படி, ஜெயலலிதாவின் சிலையை வடிவமைத்த சிற்பி பிரசாத்திடம், ஜெயலலிதாவின் முகத்தை மாற்ற சொல்லி இருப்பதாக கூறப்பட்டது. அவரும் தனது சொந்த செலவிலேயே சிலையை மாற்றி தருவதாக கூறியிருந்தார். இந்தநிலையில், ஜெயலலிதா சிலையுடன், எம்.ஜி.ஆர். சிலையையும் மாற்றம் செய்ய அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. சிலைகளை செய்யும் பணிகளையும் ஆந்திர மாநிலத்தில் உள்ள மற்றொரு சிற்பியான டி.ராஜ்குமார் உடையார் என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது[10]. இந்த 2 சிலைகளையும் 1½ மாத காலத்தில் சிறப்பாக செய்து தருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த மாதம் இறுதியில் இந்த சிலைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது. 05-03-2018 அன்று வேலப்பன்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்த எம்.ஜி.ஆர். சிலையை வடிவமைத்தவர் ராஜ்குமார் உடையார் என்பது குறிப்பிடத்தக்கது.

MGR statue, Rajini

05-03-2018ல் எம்ஜிஆர் சிலை திறப்பு, லெனின் சிலை உடைப்பு, 06-03-2018 அன்று பெரியார் சிலை சர்ச்சை: “எம்ஜிஆர் நுற்றாண்டு விழா” போர்வையில், ஏ.சி.சண்முகம் முதலியார் சிலை திறப்பு விழா நடத்தியது, ரஜினியை வரவழைத்தது வேடிக்கையாக இருந்தது. இவர் பழைய நினைவு ஆதிக்க சிந்தனைகளில் தான் “புதிய நீதிக் கட்சி” தொடங்கினார். ஆனால், தேர்தல் நேரத்தில், ஏதாவது ஒரு கட்சியுடன் பேரம் பேசி, அமைதியாகி விடுவார். வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் சிலையை, ரஜினிகாந்த் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்த பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்[11]. விழாவில் நடிகர்கள் பிரபு, விஜய்குமார், சுந்தர் சி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு உள்ளனர்[12]. ரஜினிகாந்தின் பேச்சு பேராசையாகத்தான் வெளிப்பட்டது. யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்று ஒப்புக் கொண்டு, எம்ஜிஆர் ஆட்சி அளிப்பேன் என்று பேசியது தமாஷாக இருந்தது. அந்நிலையில், சிலை உடைப்பு விசயத்தில், எச். ராஜா தனது முகநூலில், ”இன்று திரிபூராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என குறிப்பிட்டார். நிச்சயமாக ராஜா அல்லது அவர் பெயரில், யாரோ அவசரக் குடுக்கைத் தன்மாக அப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. திராவிட சித்தாந்தத்தில் ஆட்சி நடக்கும் மாநிலத்தில், எந்த முதிர்ந்த அரசியல்வாதி அத்தகைய பதிவை செய்ய மாட்டார்.

© வேதபிரகாஷ்

07-03-2018

MGR statue, Rajini, அ ௵ ஶன்முகம்

[1] Hindusthan Times, Violence in Tripura after BJP win; Lenin statue toppled, Section 144 in several areas,  Updated: Mar 06, 2018 18:10 IST

[2] https://www.hindustantimes.com/india-news/people-want-statues-of-vivekananda-and-sardar-patel-not-lenin-says-tripura-bjp-leader/story-RsgVHcrmChdON3TadY1gIK.html

[3] நியூஸ்.டி.எம், லெனின் சிலை உடைப்பு; திரிபுராவில் வன்முறை, Posted Date : 12:07 (06/03/2018)

[4] http://www.newstm.in/India/1520318236825?Lenin-Statue-Vandalised;-Violence-in-Tripura

[5]  தினகரன், திரிபுராவில் மேலும் ஒரு லெனின் சிலை உடைப்பு, 2018-03-06@ 20:04:31.

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=381832

[7] Hindusthan Times, Lenin statue toppled in Tripura, Mamata Banerjee says won’t tolerate it,,  Updated: Mar 06, 2018 20:14 IST

[8] https://www.hindustantimes.com/kolkata/lenin-statue-toppled-in-tripura-mamata-banerjee-says-won-t-tolerate-it/story-OtLwhnfpwK3HmXDgtHTLIL.html

[9] தினத்தந்தி, ஜெயலலிதா சிலை செய்யும் பணி வேறு சிற்பியிடம் ஒப்படைப்பு, மார்ச் 07, 2018, 04:30 AM

[10] https://www.dailythanthi.com/News/State/2018/03/07035053/The-task-of-Jayalalithaa-statue—Handed-over-to-another.vpf

[11] தினத்தந்தி, எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த், மார்ச் 05, 2018, 05:42 PM

[12]  https://www.dailythanthi.com/News/TopNews/2018/03/05174228/Rajinikanth-is-the-last-actor-to-open-the-MGR-Statue.vpf</p>

அதிகாரிகளின் முகமூடி கிழியும்: கருணாநிதி எச்சரிக்கை!

ஏப்ரல் 6, 2010
அதிகாரிகளின் முகமூடி கிழியும்: கருணாநிதி எச்சரிக்கை
ஏப்ரல் 06,2010,00:00  IST
Front page news and headlines today

கருணாநிதி-ஜெயலலிதா-அரசு அதிகாரிகள்: ‘ஜெயலலிதாவுக்குத் தகவல் தரக்கூடிய அதிகாரிகள் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும், அந்த விஷமிகளின் முகமூடி கிழிவதற்கும் வெகுநாள் ஆகாது’ என, தமிழக முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

1969-70 கோதுமை ஊழல் போல கருணாநிதி யின் அறிக்கை: நிலக்கரி இறக்குமதி பற்றி ஜெயலலிதா மீண்டும் விடுத்த அறிக்கையில், ‘2005 மற்றும் 2010க்கு இடைப்பட்ட காலத்தில், 680 லட்சம் டன் நிலக்கரியை மின் வாரியம் இறக்குமதி செய்திருக்கிறது’ எனச் சொல்லியிருக்கிறார். இந்த காலத்தில் மின்வாரியம் இறக்குமதி செய்த நிலக்கரி, மொத்தம் 83 லட்சம் டன்கள் தான்.ஜெயலலிதா தனது அறிக்கையில், சராசரியாக ஆண்டுக்கு 130 லட்சம் டன் நிலக்கரியை மின்வாரியம் இறக்குமதி செய்ததாகக் கூறுகிறார். ஆனால், சராசரியாக, ஆண்டுக்கு 17 லட்சம் டன் தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தற்போதைய நிலக்கரி தேவையான ஆண்டுக்கு 150 லட்சம் டன் நிலக்கரியில், மத்திய அரசுக்கு உட்பட்ட நிலக்கரி நிறுவனத்தின் (கோல் இந்தியா) மூலம் 130 லட்சம் டன் கிடைத்துவிடுகிறது. மீதி 20 லட்சம் டன் மட்டுமே ஆண்டுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

டன் நிலக்கரி என்ன விலையானால், தமிழனுக்கு என்ன? ஒரு டன் நிலக்கரி, 120 டாலர் என்ற விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது’ எனச் சொல்லியிருக்கிறார். இதுவும் தவறான தகவல் தான். 2010ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு டன் நிலக்கரியின் விலை, நான் ஏற்கனவே தெரிவித்ததைப் போல, 90 முதல் 95 டாலர்கள் மட்டுமே. பத்து லட்சம் டன் எனும்போது 520 கோடி ரூபாய் என்பதும், 20 லட்சம் டன் எனும்போது விலை சற்று குறைந்ததால், ஆயிரம் கோடி ரூபாய் என்றும் தான் எனது அறிக்கையிலே விளக்கப்பட்டது.மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில், 2010ம் ஆண்டு பிப்ரவரியில் சில நிறுவனங்கள், குறைந்த விலையில் நிலக்கரியை வழங்க முன்வந்ததாகவும், அதை விட அதிக விலை கொடுத்து மின்வாரியம் வாங்கியதாகவும் கூறியிருக்கிறார்.இந்த ஆண்டில், மின் வாரியத்துக்கு நிலக்கரி வாங்குவதற்காக, எந்தவிதமான ஒப்பந்தப் புள்ளியும் கோரப்படவே இல்லை. மத்திய அரசின் நிறுவனமான எம்.எம்.டி.சி., மூலமாகத் தான் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை மின் வாரியம் வாங்குகிறது. 2005ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே கூட, மத்திய அரசின் இதே நிறுவனம் மூலமாகத் தான் நிலக்கரி பெறப்பட்டது.

அரசு அதிகாரிகள் செயலலிதாவிர்கு தவறான செய்திகளைத் தருகிறார்கள்: ஜெயலலிதா போன்ற முன்னாள் முதல்வர், தற்போது எதிர்க்கட்சித் தலைவர், இதுபோன்ற காரியங்களில் நுனிப்புல் மேயக்கூடாது. அரசாங்கம் மாறப்போகிறது என்ற நம்பிக்கையில், யாரோ அதிகாரிகள் இத்தகைய ரகசியங்களைத் தனக்கு தெரிவிப்பதாக ஜெயலலிதா தம்பட்டம் அடித்திருக்கிறார். அவரை ஏமாற்ற, யாரோ அதிகாரிகள் இதுபோன்ற கற்பனையையும், பொய்களையும் தாங்கள் கண்டுபிடித்த செய்திகளாகக் கூறி, அவரை ஏமாற்றுகின்றனர். யார் அவர்கள் எனத் தெரிவதற்கும், அந்த விஷமிகளின் முகமூடி கிழிவதற்கும் வெகுநாட்கள் ஆகாது.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அரசு அதிகாரிகளை மிரட்டும் கருணாநிதி: “அரசாங்கம் மாறப்போகிறது என்ற நம்பிக்கையில், யாரோ அதிகாரிகள் இத்தகைய ரகசியங்களைத் தனக்கு தெரிவிப்பதாக ஜெயலலிதா தம்பட்டம் அடித்திருக்கிறார். அவரை ஏமாற்ற, யாரோ அதிகாரிகள் இதுபோன்ற கற்பனையையும், பொய்களையும் தாங்கள் கண்டுபிடித்த செய்திகளாகக் கூறி, அவரை ஏமாற்றுகின்றனர். யார் அவர்கள் எனத் தெரிவதற்கும், அந்த விஷமிகளின் முகமூடி கிழிவதற்கும் வெகுநாட்கள் ஆகாது‘, இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார். பால் கமிஷன் அறிக்கை விவகாரத்திற்குப் பிறகு, கருணாநிதி இவ்வாறு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகப் படுத்துகிறார் என்பதைக் கவனிக்க முடிகிறது. அப்படியென்ன கோபமோ தெரியவில்லை.

சானியா கசாபை மணந்தால் என்ன?

ஏப்ரல் 5, 2010

சானியா கசாபை மணந்தால் என்ன?

சானியா யாரை மணந்தால் என்ன, என்று கிளம்பி விட்டார்கள், நமது பகுத்தறிவு தீவிரவாதிகள்.

சரிதான்.

அஜ்மல் கசாபையே சானியா மணந்தால் என்ன?

முன்பு, நமது நண்பர்கள் கருணாநிதி-ஜெயலலிதாவிற்கு கல்யாணம் என்று மார்ஃப்-செய்யப் பட்டப் புகைப் படத்தை வெளியிட்டனர். இருவருக்கும் கல்யாணம் செய்து விட்டால், தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்றும் விமர்சனம் செய்தனர். அதார்கு வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, இதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?

சோயப் ஏற்கெனவே இரண்டு பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டுவிட்டதால், கசாப்பிற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம்.

இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால், தீவிரவாதம் முடிவுக்கு வந்து விடும்.

திருமனத்திற்குப் பிறகு கசாப்பையும், சானியாவையும் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பி வைத்து விட்டால், தாலிபான் பிரச்சினையும் தீர்ந்து விடும்.

இஸ்லாம் உண்மையிலேயே, பெயருக்கு ஏற்றபடி “அமைதி”யாகி விடும்!