Posts Tagged ‘டிவி’

ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – டி.வி. ஒளிபரப்பு புகார்கள் குழுவின் தீர்ப்பு!

செப்ரெம்பர் 6, 2013

ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – டி.வி. ஒளிபரப்பு புகார்கள் குழுவின் தீர்ப்பு!

 

‘‘நடந்ததுஎன்ன? குற்றமும்பின்னணியும்’’ –  ஸ்டார்விஜய்டிவியின் நிகழ்சி:  நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக் காட்சியில் ‘‘நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்’’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. கடந்தாண்டு 2012 மார்ச் 21ஆம் தேதி இதே காட்சிகளை ஸ்டார் விஜய் டிவி, தனது நடந்தது என்ன – குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் இடம் பெற்றது. நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக, ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டிவி சேனல் ஒழுங்கு முறை அமைப்பு.

 

கர்நாடகஐகோர்ட்டில்நடிகைரஞ்சிதாதொடர்ந்தவழக்கு: இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னையும், நித்தியானந்தாவையும் இணைத்து ஒளிபரப்பான வீடியோ காட்சிகள், போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று கூறியிருந்தார்[1]. இது தனிப்பட்ட முறையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்து இருந்தார். வீடியோவை ஒளிபரப்பிய டி.வி.செய்தி சேனல் அல்ல, பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் டி.வி.என்பதால் இது பற்றி டி.வி. ஒளிபரப்பு புகார்கள் குழு [Broadcast Content Complaints Council (BCCC)] விசாரணை நடத்த கர்நாடக ஐகோர்ட்டு உத்தர விட்டது[2].

 

டி.வி. ஒளிபரப்புபுகார்கள்குழுவின்தீர்ப்பு: நீதிபதி ஏ.பி.ஷா (ஓய்வு) தலைமையிலான இந்தக்குழு விசாரணை நடத்தியது. நேற்று முன்தினம் அந்த வழக்கில் அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அந்த வீடியோ காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் மனுதாரரின் மதிப்பையும், மரியாதையும் கெடுப்பதாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த கருத்தும் கேட்காமல் ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது. இது ஒளிபரப்பு உரிமையை மீறும் செயலாகும்[3]. தனிப்பட்ட நபரின் உரிமையை அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் டி.வி. வருகிற 9–ந் தேதி முதல் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுத்துக்கள் மூலம் ஆங்கிலத்திலும், தமிழிலும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து 7 நாட்களுக்கு வருத்தத்தை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது[4].

 

சன்-குழுமம் ஆரம்பித்து வைத்த வீடியோ நிகழ்சி: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்யானந்தா-ரஞ்சிதா தனியறையில் இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ ஒன்றை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பி மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அந்த படுக்கையறைக் காட்சிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என மாறி மாறி ஒளிபரப்பியது அந்த சேனல்[5]. அதுவும், பரீட்சை நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது[6]. போதாகுறைக்கு கருணாநிதி வேறு நக்கல் அடித்துக் கொண்டிருந்தார்[7]. 02-03-2010, செவ்வாய்கிழமை அன்று மாலையிலிருந்து சன் நியுஸ் தொலைக்காட்சி முன்பு காசியைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்தது போல அதே பாணியில் அதிரடியாக செய்திகள் நடுவே, கீழே ஓடும் துண்டு செய்தியில் தொடர்ந்து சேலம் சாமியார் சினிமா நடிகையுடன் உல்லாசமாக இருக்கிறார், சாமியார் நித்தியானந்தா தமிழ் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி, ………………என்று ஓட்டிக்கொண்டிருந்தது[8]. ரஞ்சிதா டிசம்பர் 2011ல், சன் குழுமத்தின் மீதும்[9], இதே மாதிரியான வழக்கு தொடர்ந்தார்[10]. குற்றஞ்சாட்டப் பட்டுள்ளவர்களில் கீழ்கண்டவர்கள் அடங்குவர்[11]:

 

  • விஜய் குமார்  (CEO, Sun TV),
  • சாக்சேனா (former CEO, Sun TV),
  • ஜோதீஸ்வரன்  (Program Manager, Sun TV),
  • கே. விஜயகுமார் (Editor and Publisher, Dinakaran and Tamil Murasu Tamil daies),
  • ஆர். எம். ஆர். ரமேஷ் (Editor and Publisher, Dinakaran and Tamil Murasu Tamil dailies).

 

2010ல்ஆரம்பித்தஆபாசம்தொடரும்விதம்: காந்தப்படுக்கை வழக்கில் சிக்கிக் கொண்ட லெனின்[12] சரண்டர் ஆனபோது, சிடிக்காக பணம் கேட்கப்பட்டது என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆசிரமத்தின் சார்பில் ஸ்ரீதர் என்பவர் சொன்னதாவது, தொலைகாட்சியில் வீடியோவை வெளியிட்ட அந்த டிவி செனல் (அவர்களுடன்) ஒரு “டீல்” வைத்துக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அந்த டிவி செனல் சாமியாரிடம் ரூ. 50 கோடி கேட்டது, என்றும் குற்றம் சாட்டினார்[13]. அப்பொழுது, குற்றப்பிரிவு சி.ஐ.டி சென்னை உய்ர்நீதி மன்றத்திடம் ரஞ்சிதாவின் வழக்கு ஏற்கெனவே கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால்றைன்கு எப்.ஐ.ஆர் எதுவும் போடப்போவதில்லை என்று அறிவித்தது. ஏற்கெனவே உள்ள நித்ய ஆத்ம பரமானந்தா என்பவர் தொடுத்துள்ள வழக்குடன், இதனையும் சேர்த்துக் கொள்ள பரிந்துரைத்தது[14].


[1] As Star Vijay was an entertainment channel, the HC routed the complaint to BCCC by the Ministry of Information and Broadcasting along with a CD of programme.

[3] “The programme not only used her name liberally but also continued to reinforce it on viewers by using her public film photos, videos repeatedly which were totally unconnected. This conduct of the channel totally disregards the complainant’s reputation, honour and basic rights of existence,” said BCCC’s order.

http://newindianexpress.com/nation/Channel-ordered-to-apologise-to-Ranjitha/2013/09/03/article1765099.ece

[11] Ms. Ranjitha filed criminal defamation complaints against Sun TV and their two Tamil dailies, Dinakaran and Tamil Murasu, before the Third Additional Chief Metropolitan Magistrate, Bangalore in December 2011, for recklessly defaming her through false articles and the morphed video allegedly linking her to her Guru Paramahamsa Nithyananda in March 2010. Advocates P.Nehru and Murugaiya Babu filed the petitions on behalf of Ms.Ranjitha. By the sheer gravity of the offence, the Hon’ble Chief Magistrate has taken cognizance and issued summons to the three accused parties. The accused list includes Vijay Kumar (CEO, Sun TV), Saxena (former CEO, Sun TV), Jothiswaran (Program Manager, Sun TV), K. Vijayakumar (Editor and Publisher, Dinakaran and Tamil Murasu Tamil daies), R. M. R. Ramesh (Editor and Publisher, Dinakaran and Tamil Murasu Tamil dailies).

http://www.nithyananda.org/news/court-summons-sun-tv-dinakaran-and-tamil-murasu-ms-ranjitha-criminal-defamation-case

[14] The Crime Branch CID on Friday told the Madras high court that it would not file a separate first information report (FIR) on actress Ranjitha’s petition against the Sun TV network and that it would be clubbed with Nithya Atmaprabhananda’s complaint that related to the same matter.

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-25/chennai/30200516_1_ranjitha-cb-cid-petition

கேபிள் இணைப்பையும் அரசே இலவசமாக தர வேண்டும்: தமிழகம் முன்னேறும் விதம்!

ஏப்ரல் 10, 2010
கேபிள் இணைப்பையும் அரசே இலவசமாக தர வேண்டும்: சட்டசபையில் பா.ம.க., கோரிக்கை
ஏப்ரல் 10,2010,00:00  IST

Latest indian and world political news information

சென்னை:”அரசு கேபிள், ‘டிவி’ இணைப்பையும் இலவசமாக வழங்க முன்வர வேண்டும்,” என, சட்டசபை பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.பட்ஜெட் மீது சட்டசபையில் நேற்று நடந்த பொது விவாதம்: ஜி.கே.மணி – பா.ம.க: பென்னாகரம் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியின் மிகப்பெரிய கூட்டணி, பிரதான எதிர்க்கட்சியை எதிர்த்து பா.ம.க., தனித்து போட்டியிட்டு 41 ஆயிரத்து 285 ஓட்டுகளை பெற்றுள்ளது. வாக்காளர்களுக்கு நன்றி.வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பொருளாதார ஆய்வறிக்கை, கடந்த ஆண்டு திட்டங்கள் எந்த அளவு நிறைவேற்றப்பட்டன என்ற அறிக்கை, கடந்த ஆண்டு மக்களை போய்ச்சேர்ந்த திட்டங்களால் எந்த அளவு விளைவு, தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்ற அறிக்கை ஆகியவற்றையும் தாக்கல் செய்ய வேண்டும்.

மாவட்ட வாரியாக குடிசைகளை கணக்கெடுத்து, முன்னுரிமை கொடுத்து, எவ்வித குறுக்கீடும் இல்லாமல் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கழிவறைகள் அதிகம் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. அவ்வாறு கட்டப்படும் வீடுகளில் கட்டாயம் கழிவறை வசதியும் செய்ய வேண்டும். கிராமப்புறங்களிலும் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்.தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

குடும்பத்திற்கு மாதம் 5,000 ரூபாயும், கிணறு வைத்திருக்கும் குடும்பத்திற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாயும் கொடுக்க வேண்டும்.இயற்கை இடர்பாடு நிதி உருவாக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், இடைக்கால தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. அதன்பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேசிய அளவில் விவசாயிகள் கடனாளிகளாக இருப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

நிதியமைச்சர் அன்பழகன்: தமிழகத்தில் தான் விவசாயிகளின் 7,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.ஜி.கே.மணி: சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலம் உருவாக்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதையை, தமிழகத்திற்கு நுழைய விடாமல் மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்க மாநில, மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுக்கள் பரிந்துரை செய்யும் தொகை மிகவும் குறைவாக உள்ளது.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் எதுவும் இல்லை என்ற நிலை 2012ம் ஆண்டிற்குள் ஏற்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.ஸ்ரீபெரும்புதூரில் குட்டி ஜப்பான் உருவாகவுள்ளது என 75 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு விவசாய நிலத்தை ஏன் அடிமாட்டு விலைக்கு வாங்கித்தர வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களாகவே வாங்கட்டும். விலைவாசி உயர்வு குறித்து துணை முதல்வர் ஸ்டாலின், டில்லியில் பேசியுள்ளார். விலைவாசியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி, விவசாயிகள் ஏற்றுக் கொண்டால் தான் விவசாய நிலம் பன்னாட்டு நிறுவனத்திற்காக வாங்கப்படுகிறது. ‘சிப்காட்’டில், தவிர்க்க முடியாத நிலையில் அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. வெளிநாட்டு முதலாளிகளுக்காக அரசு விவசாய நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கவில்லை.

ஜி.கே.மணி: கிராமப்புற மாணவர்களுக்கான 15 சதவீத இடஒதுக்கீடு, கோர்ட் உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளது. அதை, மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் பொன்முடி: கோர்ட் உத்தரவால் தான், கிராமப்புற மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது நிறுத்தப்பட்டது. முதல் தலைமுறையாக பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், கிராமப்புற முதல்தலைமுறை மாணவர்கள் பயனடைவர்.

ஜி.கே.மணி: அரசு இலவச கலர், ‘டிவி’யை, 1,500 ரூபாய்க்கும் மேல் வாங்கி வழங்கி வருகிறது. கேபிள், ‘டிவி’க்கு தனித்தொகை செலுத்த வேண்டியுள்ளது. கிராமங்களில் 100 ரூபாய், நடுத்தர நகரங்களில் 120 ரூபாய், பெரிய நகரங்களில் 150 ரூபாய் என கேபிள், ‘டிவி’ கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.இதனால், ஏழைகள் ஆண்டிற்கு 1,200 முதல் 1,800 ரூபாய் செலவழிப்பது, சிரமமாக உள்ளது. கேபிள், ‘டிவி’ இணைப்பையும் அரசு இலவசமாக வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு ஜி.கே.மணி கோரினார்.