Posts Tagged ‘பத்திரிகா தர்மம்’

பரீட்சை நேரத்தில் உங்கம்மா, அப்பா படுக்கயறைக் காட்சியை ஒளிபரப்புவாயா?

மார்ச் 4, 2010

பரீட்சை நேரத்தில் உங்கம்மா, அப்பா படுக்கையறைக் காட்சியை ஒளிபரப்புவாயா?

இத்தகைய கனமான வார்த்தைகளை உபயோகப் படுத்துவதற்காக மன்னிக்க வேண்டும்.

ஆனால், இதன் பின்னணியில் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை, இந்தியர்களைக் கேவலப் படுத்த வேண்டும் என்ற ரீதியில் இறங்கியுள்ள கூட்டங்கள் தான் செயல்படுவதாக உள்ளன.

உள்ள நாத்திக அரசும் தாராளமாகவே ஆதரிப்பது தெரிகிறது.

துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் மாபெரும் செக்ஸ் அம்பலம்: துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் மாபெரும் செக்ஸ் அம்பலத்தை, படுக்கயறைக்கேச் சென்று படம் பிடித்து வெளிக்காட்டிய செய்தியாளர்களின் திறமையை, கட்டில் கலவி காட்சிகளை காட்டியேத்தீருவோம் என்ற டிவி விற்பன்னர்களின் சாமர்த்தியத்தை கவனிக்கும்போது, மிகவும் ஆச்சரியமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.

போலி சாமியார்களின் காவியை கிழித்தெரியவேண்டும்: சாமியார் என்ற ரீதியில் ஒரு நடிகையுடன் சல்லாபித்திருக்கும் அந்த போலியைத் தண்டிப்பதில், அவனது காவி உடையை உருவுதலில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் கற்ப்பைப் பற்றி ஆர்பரித்து கொக்கரிக்கும் நடிகர்-நடிகைகளும் தமது குற்றங்களிலிருந்து தப்ப முடியாது. சம்பந்தப் பட்டிருக்கும் அரசியல்வாதிகளும் அத்தகைய குற்றங்களில் சமமாகவேத் தண்டிக்கப்படுவதற்கு பாத்தியதையாக உள்ளார்கள்.

படுக்கறைக் கலவி காட்சிகளை பொது தொலைக்காட்சியில் காட்டுவது துப்பறியும் பத்திரிக்கைத்தொழிலா? நேற்று சன் மற்றும் வசந்த் தொலைக்காட்சியினர் இத்தகைய கலவிக்காட்சிகளை தொடர்ந்து, திரும்ப-திரும்ப காட்டியதற்கு பல பெற்றோர்கள் புகார் செய்துள்ளனர், ஏனெனில் 10+2 பரீட்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன, பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். உடனே ஏதோ தாங்கள் பத்திரிகா தர்மத்தைப் பின்பற்றுகிறார்போல, சாமியார் இவ்வாறு செய்துவிட்டார், மக்கள் விழிப்புணர்வாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வெளிப்படுத்திக் காண்பித்தோம் என்று சப்பைக் கட்ட ஆரம்பித்து விட்டனராம்!

நாத்திகம் என்ற பெயரில் ஊடகத்துறையில் இந்து-விரோத சக்திகள் அப்பட்டமாக வேலை செய்வது: ஊடகத் துறையில் நாத்திகம் போர்வையில் பெரியார்-அம்பேத்கர் என்று பேசிக் கொண்டும், இந்து பெயர்களை வைத்துக் கொண்டு உலாவருவது கிருத்துவ மற்றும் முஸ்லீம் இந்து-விரோத சக்திகள் தாம். இப்போது கூட பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்ற பெயர் அடிபடுகிறது.