விநாயகர் கைது: நாத்திக சத்திரியரான கருணாநிதியின் மகத்தான சாதனை!
![Coimbatore Vinayakar arrested with women! Coimbatore Vinayakar arrested with women!](https://rationalisterrorism.wordpress.com/wp-content/uploads/2010/09/vinayakar-arrested-in-coimbatore-with-women.jpg?w=450)
Coimbatore Vinayakar arrested with women!
மக்களோடு மக்களாக விநாயகரும் கைது: போலீசார் அரங்கேற்றிய சதுர்த்தி “நாடகம்‘[1]: கஞ்சி குடிக்கும் கருணநிதிக்கு, இந்துக்களை தூஷிக்கும் கருணாநிதிக்கு, போலீஸ் துறையை தன்னிடம் வைத்திருக்கும் கருணாநிதிக்கு, வேறு வேலையில்லை என்றதால், விநாயகரை கைது செய்ய ஆணையிட்டு விட்டாதாகத் தெரிகிறது. கோவை செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரிமாரியம்மன் கோவில் பகுதியில், விநாயகரை சுற்றி வளைத்து நின்ற பெண்களை தவிர்த்து விநாயகர் சிலையை போலீசாரால் கைப்பற்ற முடியவில்லை. அதனால் விநாயகர் சிலையையும் பெண்களையும் சேர்த்து கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.ஆண்கள், பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் என்று மொத்தம் 146 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் கல்லாமேடு பகுதியில், பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலையை போலீசார் அப்புறப்படுத்தியபோது தடுத்ததாக, ஆண், பெண், குழந்தைகள் உள்ளிட்ட 146 பேரை போலீசார் கைது செய்தனர்.
“சிலை வைக்கக்கூடாது‘ என எதிர்ப்புத் தெரிவித்து அனுமதி மறுத்த போலீஸார்: கோவை செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரிமாரியம்மன் கோவில் பகுதியில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்றரை அடி உயர விநாயகர் சிலையை நேற்று முன் தினம் இரவு பிரதிஷ்டை செய்தனர். சதுர்த்தி விழாவையொட்டி, 20 ஆண்டுகளாக இங்கு இந்து முன்னணியினர் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது வழக்கம். கடந்த ஆண்டு இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததால், சிலை பிரதிஷ்டை செய்யவில்லை. இந்த ஆண்டு வழக்கம் போல் சிலை பிரதிஷ்டை செய்ய போலீசாரிடம் இந்து முன்னணியினர் அனுமதி கோரினர். வேண்டுகோளை நிராகரித்த போலீசார், சிலையை வைக்கக்கூடாது என தடை விதித்தனர்[2]. இதை ஏற்றுக்கொள்ளாத இந்துமுன்னணியினர், பொறுப்பாளர் குணசேகரன் தலைமையில் மூன்றரை அடி விநாயகர் சிலையை நேற்று முன் தினம் இரவு பிரதிஷ்டை செய்தனர். தகவலறிந்த போலீஸ் துணை கமிஷனர் நாகராஜன், உதவிகமிஷனர்கள் குமாரசாமி, பாலாஜிசரவணன் ஆகியோர், “சிலை வைக்கக்கூடாது’ என எதிர்ப்புத்தெரிவித்தனர்[3].
வேண்டுமென்றே சட்டப்பிரச்சினையை ஏற்படுத்தி கைது செய்யும் போலீஸார் – கைது செய்யப்பட்ட விநாயகர்: போலீசாரோ, முறையாக அனுமதி பெறாமல் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது எனக் கூறி, அப்புறப்படுத்த முயன்றனர். இதை கவனித்த பெண்கள் விநாயகரை சுற்றிவளைத்து அப்புறப்படுத்தவிடாமல் தடுத்தனர். இதையடுத்து, போலீசார் அங்கிருந்த இந்து முன்னணி தொண்டர்களை கைதுசெய்து வேனில் ஏற்றினர். விநாயகரை சுற்றி வளைத்து நின்ற பெண்களை தவிர்த்து விநாயகர் சிலையை போலீசாரால் கைப்பற்ற முடியவில்லை. அதனால் விநாயகர் சிலையையும் பெண்களையும் சேர்த்து கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்[4]. ஆண்கள், பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் என்று மொத்தம் 146 பேரை போலீசார் கைது செய்தனர். கைதுசெய்தவர்களை பாதுகாப்பாக வைக்க கோவை நகரிலுள்ள பல திருமண மண்டபங்களை போலீசார் தேடி அலைந்தனர். விசேஷ நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்ததால் காலியாக எதுவும் இல்லை.
கைது செய்யப்பட்ட விநாயகர் மைதானத்தில் விடுதலை! கோவை அண்ணாமலை ஓட்டல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி கைது செய்தவர்களை இறங்க அறிவுறுத்தினர். ஒருவரும் இறங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஸ்டேட் பாங்க் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீசார் கைது செய்தவர்களை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு கொண்டுசென்றனர். அங்கு கைது செய்யப்பட்டவர்களை இறக்கி விட்டனர் அங்கு விநாயகர் சிலையும் இறக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களுக்கு மதிய உணவு போலீசாரால் வழங்கப்பட்டது. வாங்க மறுத்து அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை நைட்டி அணிந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்கள் பலர் உணவருந்தாமல் போலீஸ் பயிற்சி மைதானத்திலேயே வைக்கப்பட்டனர்[5]. இதனிடையே இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்குமிடையே சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக பேச்சு நடந்தது. இதில் எந்த முன்னேற்றமும் நேற்று மாலை வரை ஏற்படவில்லை.
இந்து முன்னணி பேனர் கிழிப்பு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை[6]: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி வைத்த “பிளக்ஸ்’ பேனரை யாரோ கிழித்து விட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணியினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து முன்னணியினர் நகரில் 10 இடங்களில் “பிளக்ஸ்’ பேனர்கள் வைத்தனர். காரமடை, ஊட்டி மெயின் ரோடு, காந்தி மைதானம், சிறுமுகை ரோடு ஆகிய இடங்களில் வைத்திருந்த ஏழு விளம்பர போர்டுகளை, சிலர் நள்ளிரவில் பிளேடால் கிழித்து விட்டனர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் ராஜ்குமார், சதீஸ்குமார் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேசனுக்கு காலை 10.00 மணிக்கு சென்று புகார் தெரிவித்தனர். 11.00 மணி ஆகியும் உயர் அதிகாரிகள் வந்து விசாரணை செய்யவில்லை. இதையடுத்து, இந்து முன்னணியினர் கோஷம் போட்டு ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். பின்னர், டி.எஸ்.பி., ராஜாராம், இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் வந்து, இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேசினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி., கூறியதை அடுத்து 12.30 மணிக்கு இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர்[7].
விநாயகர் சதுர்த்தியை வெற்றி விழா ஆக்கப் பாடுபடுவோம் என்று ராம.கோபாலன் கூறினார்[8]: இதுகுறித்து இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 11.9.2010 அன்று உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடவிருக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா இந்து எழுச்சிப் பெருவிழாவாகப் பட்டி தொட்டி எங்கும் கொண்டாடப்பட்டு, இன்று மக்கள் விழாவாக வளர்ந்து வருவதைக் காணமுடிகிறது. சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல் இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தவும், தெய்வீகத்தின் மூலம் தேசிய எழுச்சி, தேச பக்தி வளரவும் இவ்விழா உதவியாக அமைகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று எல்லாம் வல்ல எம்பெருமான் விநாயகர் அருளால் தடைகளெல்லாம் நீங்கி, இந்து எழுச்சி ஓங்கி விநாயகர் சதுர்த்தி விழா வெற்றிகரமாக நடைபெற இந்துக்கள் தாங்கள் வாழும் பகுதியில் உள்ள எல்லா விநாயகர் ஆலயங்களிலும் மனமார பிரார்த்தித்து சிதறு தேங்காய் உடைக்கக் கேட்டுக்கொள்கிறேன். கிராமம்தோறும், வீதி தோறும் உள்ள எல்லா விநாயகரிடமும் நமது பிரார்த்தனையை வைப்போம். எளியோனுக்கு எளியோனாக வீதியில் நின்று நம்மைக் காத்துவரும் கணபதியைக் கைத்தொழுவோம்.
இந்துக்களுக்கு இடையூறு ஏற்படுத்த அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், காவல்துறையினர் முயற்ச்சியா? அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், காவல்துறையினர் விழா நடத்தும் சாமான்யனான இந்துக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக செய்திகள் வருகின்றன[9]. இடையூறு செய்வோர் நியாய உணர்வோடு மனம் திருந்தி விழா வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைக்கவும், விழா எடுக்கும் இந்துக்களுக்குத் தைரியமும், உத்வேகமும், நம்பிக்கையும் ஏற்படவும் விநாயகப் பெருமானைப் பிரார்த்திப்போம். நாம் ஆழ்ந்த பக்தி சிரத்தையோடு விநாயகர் பெருமானை வணங்குவோம், தடைகளைக் கடந்து, விநாயகர் சதுர்த்தியை வெற்றிவிழாவாக்கப் பாடுபடுவோம். விநாயகர் அருள் நமக்கு என்றும் துணை. எல்லோரும் விநாயகர் பெருமான் அருளால் எல்லா நலன்களும், வளங்களும் பெற பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ராம.கோபாலன் கூறியுள்ளார்.
விநாயகர் கோயில் சிலை உடைப்பு, கல்வீச்சால் பதட்டம் :பழநியில் மர்ம நபர்களால் பரபரப்பு[10]; பழநியில் விநாயகர் கோயில் சிலை உடைப்பு, காளியம்மன் கோயில் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.பழநி கருப்பண தேவர் சந்தில், காக்கும் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பகுதி மக்கள் இங்கு கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இங்கு ஒரு விநாயகர், இரண்டு நாகங்கள், ஒரு மூஞ்சுறு(விநாயகர் வாகனம்) சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாதந்திர சதுர்த்தி மற்றும் விசேஷ நாட்களில், இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதிகாலை, விநாயகர் முன் உள்ள மூஞ்சுறு சிலையின் தலைப்பகுதி சேதப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் வீரப்பபிள்ளை சந்தில் உள்ள பணக்கார காளியம்மன் கோயிலில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கற்களை வீசியுள்ளனர். இது குறித்து அங்கு தங்கியிருந்த பூசாரி முருகேசன், போலீசில் புகார் செய்தார். பா.ஜ., நகர தலைவர் தீனதயாளன், இந்து முன்னணி பிரமுகர் ராஜா உள்ளிட்டோர் வந்தனர்.டி.எஸ்.பி., பாண்டியராஜன், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். செப். 11ல் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பழநி விநாயகர், காளியம்மன் கோயில்களில் நடந்த சம்பவங்கள், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. டி.எஸ்.பி., பாண்டியராஜன் கூறுகையில், “”சிலையின் தலைப்பகுதி வட்ட வடிவில் அறுத்து எடுக்கப்பட்டது போன்று காட்சியளிக்கிறது. இப்பிரச்னைக்கு காரணம் விஷமிகளா? வேட்டையாடும் நபர்கள் செய்ததா? என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இச்சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
பெருந்துறை அருகே விநாயகர் கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதம்[11]: பெருந்துறை அருகே விநாயகர் கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.ஈரோடு மாவட்டம் பெருந்துறை – கோபி ரோட்டில் ஆறாவது கி.மீ.யில், துடுப்பதி அருகே துலுக்கபாளையத்தை சேர்ந்த பொது மக்கள், விநாயகர் கோவிலை கட்டியுள்ளனர். 2009 ஜூலை 2ம் தேதி கோவில் கும்பாபிஷேம் நடந்தது. இன்று கோகுலாஷ்டமி என்பதால், பக்தர்கள் சிலர் காலையில் கோவிலுக்கு சென்றனர். கோவில் கோபுரத்திலுள்ள சில சிலைகள் மற்றும் கோவிலின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.கோபுரத்தின் முகப்பில் உள்ள விநாயகர் சிலையின் இரு கைகளும், மூன்று பக்கவாட்டிலும் உள்ள அம்மன் சிலைகளின் இரு கைகளும், கோபுரத்தை தாங்கி நிற்கும் சிலையின் இரு கைகளும் உடைக்கப்பட்டுள்ளன. வரும் 11ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் கோவில் கோபுர சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெருந்துறை போலீஸார் விசாரிக்கின்றனர்.
சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லாமல் விநாயகர் சதுர்த்தி: அனைத்து கட்சிகளுடன் போலீஸ் ஆலோசனை[12]: திருத்தணி, ஆக. 25, 2010: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அனைத்து கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை திருத்தணி காவல் துறை புதன்கிழமை நடத்தியது. செப்டம்பர் 11-ம் தேதி விநாயகர் சதுர்த்தி நடைபெறும் விழாவில் சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லாமல் நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் திருத்தணி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மாணிக்கம் பேசியதாவது[13]:
- “விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அமைக்கப்பட உள்ள சிலைகளின் உயரம், உள்ளிட்ட குறிப்புகளை காவல் நிலையத்தில் தர வேண்டும்.
- எந்த நேரமும் சமூக விரோதிகளால் அசம்பாவிதமும் சட்ட விரோத செயலும் நடைபெற கூடும்.
- ஆகவே அந்தந்த பகுதியில் குழுக்கள் அமைத்து காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்[14].
- விழாக்கள் நடைபெறும் இடங்களில் பூஜைகள் செய்வதில் குறிப்பிட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்.
- இரவில் அங்கேயே தங்கியிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.
- எந்தெந்த பகுதிகளில் ஊர்வலம் நடத்தப்படுகிறது, எங்கே தொடங்கி, எங்கே முடியும், யார் தலைமையில் நடைபெறுகிறது உள்ளிட்ட அனைத்து தகவல்களை முன்கூட்டியே எழுத்து மூலம் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தெரிவிக்கவேண்டும்.
- பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விழாவை நடத்த வேண்டும்.
- விநாயகர் சிலைகள் வெறும் களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- அந்ததந்த பகுதிகளில் விளம்பர பேனர்கள் விழாவிற்கு முன்னதாக இரண்டு நாளும், விழாவிற்கு அடுத்து இரண்டு நாட்களும் வைத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை கவனத்தில் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும்”, என்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், உதவி ஆய்வாளர் ஏ.அண்ணாதுரை, ஆகியோரும் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, திருவாலங்காடு, கம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த அனைத்து கட்சியினர் கலந்துகொண்டனர்.
கருணாநிதியின் நாத்திக தாக்கத்தில் / இந்து விரோத போக்கில் வேலை செய்யும் போலீஸார், போலீஸ் அதிகாரிகள்: பூஜைப் பொருட்களின் விலையை அடாவடித்தனமாக உயர்த்தி விற்ப்பது, கிருத்துவர்[15]-முஸ்லீம்கள்[16] இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு கொள்ளையடிப்பது, முதலிய செயல்களும், இதில் கவனிக்க வேண்டியுள்ளது. தினமலர் கூட (பார்ப்பனப் பத்திரிக்கை என்று சொல்லப்படுகிறது), தலைப்புகளில் “விநாயகர்” என்று குறிப்பிடாமல், செய்திக்குள் விநாயகர் என்று குறிப்பிட்டிருப்பது, இவ்வாறான சேதங்கள் ஏற்படுத்தியிருப்பது, ஒருவேளை ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளக் கட்டுப்பாடா? ரம்ஜானிற்கு வாழ்த்து தெரிவித்து, விநாயக சதுர்த்திற்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது, முதலியவை மறைமுகமாக சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் அதிகாரிகளின் மீது நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும்.. ஏனெனில், கருணாநிதிக்கு பிடிக்கவில்லை, ஆகையால், நாமும் அவ்வாறே இருப்பதாகக் காட்டிக் கொள்ளவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அத்தகைய போகுதான் கோவை போலீஸ் அதிகாரிகளிடம் காணப்படுகிறது எனலாம்.
வேதபிரகாஷ்
12-09-2010
[1] தினமலர்,
மக்களோடு மக்களாக விநாயகரும் கைது: போலீசார் அரங்கேற்றிய சதுர்த்தி “நாடகம்‘, செப்டம்பர் 12, 2010,
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=82807
[2] இது நிச்சயமாக, தொடருகின்ற பாரம்பரியங்களைத் தடுக்க மேற்கொள்ளும் முயற்ச்சிதான். இந்துக்களின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல்தான். இந்து அமைப்புகள், இதனை சட்டரீதியாக எடுத்து அதற்கான உரிய விடையைக் காணவேண்டும்.
[3] சட்டத்தை நிர்வாகிக்கின்ற அதிகாரிகள், இவ்வாறு பேசுவது-பேசியது வியப்பாக இருக்கிறது. இந்துக்களின் உரிமைகள் என்பதைப் பற்றியும், இந்த அதிகாரிகள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
[4] இந்த புகைப் படங்களை பிரசுரிக்காததும் வேடிக்கைத்தான். ஏனெனில், மற்ற விஷயங்களில் அத்தகைய படங்களை வெளியிட்டு இரக்கத்தை ஏற்படுத்த ஊடகங்கள் கையாளுகின்றனர். ஆனால், இந்துக்கள் என்று வரும்போது, ஏன் மறைக்கின்றனர் என்று தெரியவில்லை!
[5] இப்படி கைது செய்யப்படுவதற்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா, முதலியவற்றை சட்டம் தெரிந்த பெரியோர்கள்தாம் ஆராயவேண்டும்.
[6] தினமலர், இந்து முன்னணி பேனர் கிழிப்பு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை, செப்டம்பர் 10, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=81436
[7] இதே முஸ்லீம்கள் என்றால், ஓடி வந்து விடுகிறார்களே, ஆனால் இந்துக்கள் என்றால், இப்படி ஆசுவாசமாக வந்து, நிதானமாக வருவார்கள் போலும்!
[8]
[9] இதற்கான ஆதாரங்களை, இவர் குறிப்பிடாவிட்டாலும், போலீஸாருக்கு நிச்சயமாக ரகசிய அறிக்கைக்கள் வந்திருக்கும். அந்நிலையில், இந்துக்களுக்காகத்தானே, உரிய பாதுகாப்புக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்?
[10] தினமலர், சிலை உடைப்பு, கல்வீச்சால் பதட்டம் :பழநியில் மர்ம நபர்களால் பரபரப்பு, ஆகஸ்ட் 24, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=69393
[11] தினமலர், பெருந்துறை அருகே கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதம் , செப்டம்பர் 01, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=75439
[12] தினமணி, சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லாமல் விநாயகர் சதுர்த்தி: அனைத்து கட்சிகளுடன் போலீஸ் ஆலோசனை,, 26 Aug 2010, http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Chennai&artid=293128&SectionID=135&MainSectionID=135&SEO=…………………… %88
[13] அப்பா, இத்தனை கண்டிஷன்கள் போட்டுமா, விநாயகர் ஊர்வலங்கள் நடத்துகிறார்கள்? ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஏனெனில், இவையெல்லாமே, மறைமுகமாக, அத்தகைய விழாக்களை நடக்கவிடாமல் தடுப்பதைப் போலத்தான் உள்ளது. அதாவது, மக்களின் விழா கொண்டாடும் மனப்பாங்கை, ஊக்கத்தைக் குலைப்பதாக உள்ளது.
[14] பாவம் போலீஸாருக்கு அது தெரியாது போலும், இதையும் மக்களே அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் போலும்!
[15] தாம்பரம், மைலாப்பூர், பழைய மாம்பலத்தில், கிருத்துவ வியாபாரிகள் களிமண் பிள்ளையார்களை ரூ.100/- விலை வைத்து கொள்ளையடிக்கிறார்கள். இப்பொழுது, இவர்கள் மொத்தமாக வாங்கி விற்ப்பதனால், மற்ற சிறு வியாபரிகள் குறைவான விலையில் விற்பதற்க்க்கும் முடியவில்லை. மேலும், லாரிகள்-வேன்களிலிருந்து இறக்கும்போது, சேதப்பட்டுள்ள பிள்ளையார்களை அங்குள்ள பெண்களிடம் கொடுத்து, விலை குறைவாக விற்கின்றனர்.
[16] பூ, வெற்றிலை, பாக்கு, பன்னீர் முதலிய வாசனைத் திரவியங்கள் முதலியவற்றில், இவர்கள்தாம் “ஒட்டு மொத்த வியாபாரம்” செய்கிறார்கள், இவர்கள் வைப்பதுதான் விலை! இவர்கள் நினைத்தால்க், ஒருவேளை, பூஜைக்கு வேண்டிய பொருட்களே மார்க்கெட்டில் வரவிடாமல் செய்துவிடலாம்! அந்த ஆலவிற்கு அவர்கள் ஆதிக்கத்தைச் செல்லுத்துகிறார்கள்!