Posts Tagged ‘முகமதியர்’

திகவின் விநாயக சதுர்த்தி வியாபாரம்!

செப்ரெம்பர் 11, 2010

திகவின் விநாயக சதுர்த்தி வியாபாரம்!

வித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தி பற்றிய துண்டு அறிக்கைகள் தயார்[1]! விநாயகர் என்கிற இறக்குமதிக் கடவுளுக்கு தமிழ்நாட்டில் பண்டிகையாம்! தமிழர் தலைவர் அவர்கள் 3.9.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி ஆபாசத்தை – அருவருப்பை மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவோம்! வித்தியாசமான வகையில் 4 பக்க அளவில் துண்டு அறிக்கைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஆயிரம் துண்டு அறிக்கைகளுக்கு நன்கொடை ரூ.300 தான். கழகத் தோழர்கள் வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை சென்று விநியோகியுங்கள்! விநியோகியுங்கள்!! திராவிடர் கழகம் தலைமை நிலையம், பெரியார் திடல், சென்னை – 600 007 போன்: 044-26618163.

திகவின் விநாயக சதுர்த்தி அவதூறு பிரச்சாரம்

திகவின் விநாயக சதுர்த்தி அவதூறு பிரச்சாரம்

இறக்குமதி செய்யப்பட்ட கடவுளர்களும், வியாபாரமும்: விநாயகர் என்கிற இறக்குமதிக் கடவுள் என்றால், அல்லா, முஹமது, ஜேஹோவா, மேரி, ஏசு, ………………..முதலியவை என்ன ரகத்தில் வரும்? இவையெல்லாம் என்ன இந்தியாவில் இருந்தனவா? நாத்திகம் என்றால் அறிவு தேவையில்லையா? பகுத்தறிவு என்றால் புத்தி வேண்டாமா?

மதசார்பற்ற / செக்யூலரிஸ நாத்திகமா, மக்களை ஏமாற்றும் வேலையா? மதசார்பற்ற / செக்யூலரிஸ நாத்திகத்தை மெய்ப்பிக்க ரம்ஜானுக்கு, பக்ரீதுக்கு, கிருஸ்துமஸுக்கு………………………இத்தகைய துண்டு அறிக்கைகள் வளியிடுவார்களா? அதிலுள்ளவற்றை எடுத்துக் காட்டி மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவார்களா?

கோவையில் விநாயகரை அவமதிக்கும் நோட்டீஸ்[1] : கோவையில் பரபரப்பு; போலீசில் புகார்: விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடக்கும் நிலையில் கோவையில், விநாயகரை அவமதிக்கும் வகையில் பிரசுரம் வெளியிட்ட தி.க.,வினர் மீது கோவை போலீசில், இந்து அமைப்பினர் புகார் கொடுத்தனர். கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள், அனுமதிக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். பொதுமக்களும் பக்தியுடன், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று விநாயகரை வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தி.க.,வைச் சேர்ந்த சிலர், கோவை ரேஸ்கோர்ஸ், சுங்கம் பகுதியில் “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு’ என்ற தலைப்பில் நான்கு பக்க துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வினியோகித்தனர். இப்பிரசுரத்தை படித்து பார்த்த பொதுமக்களும், இந்து அமைப்புகளும் மிகுந்த வேதனையும், கடும் அதிருப்தியும் அடைந்தனர்.

இந்து அமைப்புகள் போலீஸாரிடம் புகார்: இது தொடர்பாக, வேதனை அடைந்த இந்து முன்னணி, பாரத் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று காலை சுங்கம் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர். நேற்று, இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலர் சதீஷ் தலைமையில் இந்து முன்னணி, பாரத்சேனா, வி.எச்.பி., உள்ளிட்ட இந்து அமைப்புகள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனிடம் புகார் கொடுத்தனர். புகாரில்,” முழுமுதற் கடவுள் விநாயகரை பல்வேறு வகையில் அவமதிக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நோட்டீஸ் சென்னை, வேப்பேரியில் உள்ள திராவிடக் கழகம், தலைமை நிலையத்தில் இருந்து வெளியிட்டதாக அச்சிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நோட்டீசை கைப்பற்றுவதோடு, இந்துக்கள் மனம் நோகும்படியாக, நோட்டீஸ் வினியோகித்தவர்களை கைது செய்து, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

கலவரத்தை தூண்டும் நோட்டீஸ் தி..,வினர் மீது வழக்கு[2]:திண்டுக்கல்: கலவரத்தை தூண்டும் வகையில் விநாயகர் குறித்து சர்ச்சைக்குரிய வாசகம்,போட்டோ அடங்கிய நோட்டீஸ் விநியோகித்த தி.க.,வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் முன்பு நேற்று முன்தினம் சிலர் “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு’ என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகித்தனர். இதில் பார்வதியின் அழுக்கு உருண்டையில் பிள்ளையார் பிறந்ததுள்ளார்.பகவான் பிறப்பு இவ்வளவு அசிங்கமா சிந்திப்பீர். யானை தலையை மனிதருக்கு வைத்தால் பொருந்துமா என்று விநாயகர் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து இந்துமுன்னணி மாவட்ட பொது செயலாளர் ரவிபாலன் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தார்.விநாயகர் பிறப்பை கேவலப்படுத்தியது, போட்டோக்கள் வெளியிட்டது, கெட்ட வார்த்தையால் திட்டியது, விநாயகர் சதுர்த்தியில் கலவரத்தை தூண்ட முயற்சித்தது ஆகிய குற்றத்திற்காக தி.க., மாவட்ட தலைவர் வீரபாண்டி உட்பட 3 பேர் மீது இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்துள்ளார்.


[1] தினமலர், விநாயகரை அவமதிக்கும் நோட்டீஸ் : கோவையில் பரபரப்பு; போலீசில் புகார், செப்டம்பர் 12, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83176

[2] தினமலர், கலவரத்தை தூண்டும் நோட்டீஸ் தி..,வினர் மீது வழக்கு, செப்டம்பர் 10, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=81504


[1] விடுதலை, 07-09-2019, ப.8, http://www.viduthalai.periyar.org.in/20100907/news27.html

எல்லா வழிபடும் இடங்களும், தீர்த்தங்களும் புனிதமல்ல என்று விமர்சனிக்க திராவிட நாத்திகர்களுக்கு தைரியம் உண்டா?

பிப்ரவரி 14, 2010

எல்லா  வழிபடும் இடங்களும், தீர்த்தங்களும் புனிதமல்ல என்று விமர்சனிக்க திராவிட நாத்திகர்களுக்கு தைரியம் உண்டா?

நாத்திகத்தில் “தேர்ந்தெடுப்பு நாத்திகம்” உண்டா என்றால் உண்டு என்பதுபோல, திராவிட நாத்திகவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள்.

காசியும் கங்கையும் புனிதமல்ல!

http://viduthalai.periyar.org.in/20100213/snews04.html

நவம்பர் 2007இல் நான் டில்லிக்குச் சென்றிருந்தபோது, காசிக்குச் செல்ல நேர்ந்தது. அந்த ஊரும், கங்கையும் சாக்-கடையாகவே இருந்தன. அதனால் காலில் கூட கங்கைத் தண்ணீர் படா-மல் திரும்பி வந்து, காசியும் கங்கையும் புனிதமானதல்ல என்று எழுதினேன்.

14.12.2009 முதல் 18.12.2009 வரை சன் தொலைக்காட்சயில் இரவு 10.30 மணிக்கு நிஜம் நிகழ்ச்சியில் காசியின் மறுபக்கம் என்று காண்பித்தார்கள். அவற்றைப் பார்த்தபின் நான் சென்றபோது பார்த்-தவற்றை மூடத்தனம் என்று மட்டுமே நினைத்துக் கொண்டது, தவறுகள், குற்றங்கள் என்று அறியலானேன். அங்கு கங்கைக் கரையினில் உட்கார்ந்-திருந்தவர்களை கங்கையில் குளிக்க வந்த-வர்கள் என்றும், கஞ்சா அடித்தவர்-களை வடநாட்டு வழக்கப்படியும் குளிர்போக்கவும் இப்படிச் செய்கி-றார்கள் என்று நினைத்தேன். சில கடை-களில் சாமான்கள் (உண்ணக்கூடியவை) வாங்க வேண்டாம் என்று வழிகாட்ட வந்தவர் சொன்னதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிணங்-களும், பாதிஎரிந்த பிணங்களும், மாடு, பன்றி முதலியவைகளும் தண்ணீரில் மிதந்து செல்வதை மக்களின் தவறு-களும் மூடத்தனமும் என்று நினைத்-தேன். 14.12.2009 அன்று கங்கையையும். கங்கைக் கரையிலுள்ள பெரிய பெரிய கட்டடங்களையும், குளிக்க ஏதுவான படிக்கட்டுகளையும் (காட்) கங்கைக் கரையில் அரிச்சந்திரா காட் மணி-கார்ணிகாகாட் இரண்டிலும் எப்போ-தும் எரிந்து கொண்டிருக்கும் பிணங்-களையும், கங்கையில் போடப்படும் பிணங்களையும் (குழந்தைகள், நோயுற்-றவர்கள், சாமியார்கள்) காட்டினார்கள்: 15.1220.09 அன்று நடு இரவில் கங்கைக்-கரையில் எரியும் பிணங்களின் அருகில் அமரும் அகோரிகள் என்பவர்களையும் அவர்கள் எரியும் சிதையிலிருந்து மனிதர்களின் இறைச்சியை எடுத்து உண்பதையும் வெளிப்படுத்தின. 16.12.2009 அன்று நேபாள அரண்மனை என்று சொல்லப்பட்ட தங்குமிடத்தில் பலர், இறந்து முக்தி அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் பல ஆண்டுகள் இருப்பதும், பலர் இறந்து அவர்களின் உடல்கள் கங்கைக் கரையினில் எரிக்கப்பட்டன என்ற செய்தியையும் பலரைப் பேட்டிகண்டு அவர்கள் நாற்-பது ஆண்டுகளுக்கு மேலும் இறப்ப-தற்காக அங்கு தங்கி இருப்பதாகவும் விளம்பரப்படுத்தினர். பலரைப் பேட்டி கண்டபோது, காசிக்கு வந்து கங்கையில் குளித்து விசுவநாதரை தரிசித்துக் கொண்டு இறப்பதற்காகவே காத்திருப்ப-தாகவும், கோயிலுக்குப் போய் கும்பிட இயலாத முதியோர் பலர், இருந்த இடத்திலேயே அவரை நினைத்து வணங்கிக்கொண்டு காத்திருப்பதாகவும் கூறினர். 17.12.2009 அன்று போதைப் பொருள்-கள் பெட்டிக்கடை முதல் பல இடங்களிலும் ஒளிவு மறைவு இல்லா-மல் விற்கப்படுவதையும், அவற்றைப் பலர் வாங்கித் தின்று தண்ணீர் குடிப்-பதையும், கடைகளில் பல பொருள்-களுடன் கஞ்சா இலையும், சிலும்பி-களும் பாங்க் என்ற போதைப் பொரு-ளும் வெளிப்படையாக விற்கப்படு-வதையும் காட்டினர். பலரும் கஞ்சா-வைப் புகைப்பதும், போதைப் பொருள்களுக்காகவே காசிக்கு வந்து தங்கியுள்ள இளைஞர்கள் பலரும் கூட்டமாகவும், எரியூட்டும் இடத்தில் அகோரிகளுடன் சேர்ந்தும் கஞ்சாவை மாற்றி மாற்றிப் புகைப்பதும் காட்டப்-பட்டது. 18.12.2009 அன்று சிலவற்றைத் தொகுத்து வழங்கியும் பலரைப் பேட்டி கண்டும் வெளியிடப்பட்டது. கடை-களில் விற்கப்படும் அப்பளம் சமையல் சாமான்கள் பலவற்றிலும் கஞ்சா கலந்து விற்கப்படுவதையும் அறியமுடிந்தது. சிவகாமிக்குருக்கள் என்பவர் பேட்டி-யின் போது, காசிக்கு வருபவர்கள் பக்தி நோக்குடன் காசி விசுவநாதரைக் காணவும், கங்கையில் குளித்து பாவத்தைப் போக்கிக் கொள்ளவும் வருவதாகவும் பிணங்கள் பல கங்கையில் போடப்படுவதும், பாதி, எரிந்த பிணங்கள் போடப்படுவதும் காசியில் இறந்து முக்தி அடைய வேண்டும் என்ற நோக்கம்தான் என்றும் கூறினார். பல ஆண்டுகள் காசிக்குப் போய்வரும் பக்தர்கள் பலரும் பக்தியினால்தான் சென்று வருவதாகவும், மற்றவை எதுவும் தெரியாது என்றும் கூறினர். நாராயண அய்யர் என்பவரின் பேட்டியில் இந்து மக்கள் முதலில் ராமேஸ்வரம் (நடந்தே புனித யாத்திரை செல்ல வேண்டி-யிருந்ததால்) சென்று மனதையும் உடலையும் திடப்படுத்திக் கொண்டு, காசிக்கு வந்து கங்கையில் குளித்தும் விசுவநாதரை தரிசித்தும் புண்ணியம் அடையும் வழக்கமும் அங்கேயே இறந்து முக்தி அடைவதும் பல ஆண்டுகளாக உள்ளன என்றும் கூறினார். அகோரிகள் என்பவர்கள் பழையகபாலிக மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஆதி சங்கரர் அந்தப் பிரிவைக் கண்டித்துப் பேசி பெரும்பாலும் அது அழிந்துவிட்டது. ஆனால் சிலர் அந்த வழியில் வந்திருக்கின்றனர். கடவுளைக் காண தவம் செய்து, உன்மத்த நிலையை அடைந்து சிவனை அடையும் வழிதான் தவம் என்பது. அந்த உன்மத்த நிலையை அடைய மாற்று வழியாக போதைப் பொருள்களை உண்டு பலர் காசியில் வந்து இருப்பதாகவும் போதைப் பொருளுக்காக இளைஞர்கள் பலர் வந்து தங்குவதாகவும் கூறினார்.

அரசியல் சட்டம் 51 (கி) (எச்) பிரிவின்படி விஞ்ஞான மனப்பான்-மையை வளர்க்க வேண்டும் என்று இருந்தும், இதுபோன்று பக்தி என்று பல-ரும் மூடத்தனமாக நடந்து கொள்-வதைத்தடுக்க அரசுகள் முயற்சி எதுவும் செய்யவில்லை. பல கோடிகளை கங்-கையைச் சுத்தப்படுத்த அரசு செல-வழித்துக் கொண்டே, கங்கையில் போடப்படும் பிணங்கள், பாதி எரிந்த கரிக்கட்டைகள், விறகுகள் , சோத்துப்-பிண்டங்கள், பிளாஸ்டிக் பைகள், பூக்கள், மாலைகள் ஆகியவற்றையும். காசி-யில் பல இடங்களில் கலக்கும் சாக்-கடைக் (திடக்கழிவு, திரவக் கழிவு) கழிவு-களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க-வில்லை. அகோரிகள் என்பவர்கள் எரியும் சிதையிலிருந்து சுடுபடும் மனித இறைச்சியைத் தின்பதையும், பலர் இறப்பதற்காகவே காசியில் வந்து தங்கி, உணவு சரியாகச் சாப்பிடாமல் தற்-கொலை முயற்சி செய்வதையும் கண்டு கொள்ளவில்லை. கஞ்சா, அபின், பாங்க் முதலிய போதைப் பொருள்கள் தங்குதடையில்லாமல் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதையும், பலரும் அவற்றை வெளிப்படையாக உட்-கொண்டு வருவதையும் ஆயிரக்-கணக்கான இளைஞர்கள் இங்குவந்து போதையிலேயே காலங்கழிப்பதையும் தடுக்கவில்லை. சட்டவிரோதமான காரி-யங்கள் பல நடப்பதைத் தடுக்காமல் இருக்-கும் காவல் துறையினர் மற்றவர்-கள், மாநில, மத்திய அரசுகள் குற்றம் செய்பவர்களின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் லஞ்சம் வாங்குவதையும் தடுக்காமல் உள்ளனர். ஆகவே காசி என்பது பக்தி என்ற போர்வையில் மூடத்தனம், போதைப் பொருள், தற்கொலை முயற்சி, மனித இறைச்சியை வெளிப்படையாக உண்பவர்கள் போன்ற காட்டு மிராண்டிகள் நிறைந்த இடமாகும். அதற்கு எந்தப் புனிதமும் இல்லை. கங்கையும் பாவத்தைப் போக்கி புண்ணியம் கொடுக்கும் நதி என்ற நிலையிலும் இல்லை. இரண்டும் மனிதனின் உடலுக்கும் உள்ளத்துக்கும் கேடு செய்பவைதான். மத்திய அரசு ஏற்கெனவே கங்கையைச் சுத்தப்படுத்தச் செலவிட்ட பணம் பயனில்லாமல் இருக்-கும்போது, கங்கையை மாசுபடுத்தும் செயல்களைத் தடுக்காமல் இரண்டு அரசுகளும் உள்ளன. சமீபத்தில் சுற்றுச்-சூழல் அமைச்சர் திரு. ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் 15 ஆயிரம் கோடி பணம் கங்கையைச் சுத்தப்படுத்த, செலவிடப் போவதாகவும், 2020 ஆம் ஆண்டு சுத்தமான கங்கை நதி ஓடும் என்றும் கூறி-யுள்ளார். மக்கள் வரிப்பணம் இப்-படி வீணாவதைத் தடுக்க என்ன வழி?


இப்படி “விடுதலை” சன்-டிவியின் தூஷணத்தை மறுபடியும் அரைத்து வெளியிடுகிறது!

http://viduthalai.periyar.org.in/20100213/snews04.html

மக்காவும், “ஜம்ஜம்”மும் புனிதமல்ல!

இப்படிசன்-டிவி ஒரு நிகழ்ச்சி தயாரித்து, விடுதலையும் வெளியிட்டால், அதனுடைய நாத்திகத்தைப் பாராட்டலாம்!

ஜெருஸலேமும், ஏசுவிடைய ரத்தமும் புனிதமல்ல!

இப்படிசன்-டிவி ஒரு நிகழ்ச்சி தயாரித்து, விடுதலையும் வெளியிட்டால், அதனுடைய நாத்திகத்தைப் பாராட்டலாம்!

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!

பிப்ரவரி 12, 2010

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!

© வேதபிரகாஷ்

முன்னுரை: உலக சைவ மாநாடு நடந்து சில நாட்களே ஆகியுள்ளன[1] (பிப்ரவரி 5-7, 2010). கலந்து கொண்ட மடாதிபதிகள், அடியார்கள், ஆய்வாளர்கள், பேராளர்கள், மற்றவர்கள் இன்னும் தங்கள் ஊர்களுக்குக் கூட சென்று சேரவில்லை. ஆனால், குன்றக்குடி மடாதிபதி, இந்துக்களைத் தூஷித்த, இந்துமதத்தைத் தொடர்ந்து தூஷணம் செய்து வரும் ஒரு ஜீவியை “திருக்குறள் பேரொளி” என்ற பட்டத்தை அளித்து, திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு பச்சைத் துரோகம் மற்றும் அவமானத்தைச் செய்துள்ளது[2]. கிருத்துவர்கள் 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா?” என்ற குறும்புத்தகம் தெய்வநாயகத்தால் எழுதவிக்கப்பட்டு வெளியிடுகிறார்கள்[3]. மு.கருணாநிதி “மதிப்புரை” அளித்துப் பாராட்டுகிறார். தமிழ் தெரிந்த கருணாநிதி, அப்பொழுதே, அது தவறு என்று எடுத்துக் காட்டியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை. ஆகவே அன்றே அவர் திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு தகாத துரோகத்தை செய்து விட்டார் எனலாம். அன்றிலிருந்து, இன்றுவரை, சென்ற வருடம் அந்த போலி / கள்ள ஆராய்ச்சிக்குத் துணைபோய், கிருத்துவர்களின் திரைப்படத்தை ஆரம்பித்து வைத்துள்ளர்[4].

திருவள்ளுவர் இரண்டாவது முறை மைலாப்பூரில் சாகடிக்கப்பட்டார்: கருணாநிதி, அந்த போலி தாமஸ் நினைவு தினமான ஜூலை 3 அன்று எப்பொழுது அந்த மோசடி திரைப்படத்தை ஆரம்பித்து வைத்தாரோ அன்றே திருவள்ளுவரை மைலாப்பூரிலேயே சாகத்து விட்டார் எனலாம்.

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!: உலகத் திருக்குறள் பேரவை சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு, “திருக்குறள் பேரொளி’ விருது வழங்கும் விழா, தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடந்தது. உண்மையில், வாய்மை இருளில், காரிருளில் மறைந்தது எனலாம்.

துறவிகளின் ஆசையும், அரசர்களின் மோக-இச்சைகளும்: விருதை ஏற்று முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “மறைந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் எனக்கு அன்பும், பாசமும், பரிவும் உண்டு. தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும் அவர் கொண்டிருந்த பற்றைக் கண்டு நான் வியந்துள்ளேன். அவரைப் போலவே இளையவர் பொன்னம்பல அடிகளாரும் செயல்பட்டு வருகிறார். இரண்டு அடிகளார்களும் பெரியார், அண்ணா மற்றும் என் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர்கள் என்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். எனக்குதிருக்குறள் பேரொளிஎன்ற விருது வழங்க விரும்புவதாகவும், அதற்காக ஒரு தேதியைத் தருமாறு அடிகளார் என்னிடம் வலியுறுத்தினார். எனக்கிருந்த பல்வேறு அலுவல்களை எடுத்துச் சொல்லி இந்த விழா தேவைதானா? என்றேன்.​ “எனது ஆசையை நிறைவேற்றுங்கள்என்றார். துறவிகள் ஆசைப்படக் கூடாது[5]. இருப்பினும் இந்த ஆசையை நிராகரிக்க முடியாது என சம்மதம் தெரிவித்து[6], விழாவில் பங்கேற்றுள்ளேன்.

இருட்டில் உள்ளவர்கள், ஒளியில் உள்ளவர்கள்!: எனக்கு, “திருக்குறள் பேரொளிஎன்ற விருதை தந்துள்ளனர். திருக்குறளே பேரொளி தான். அந்த பேரொளிக்கு திருக்குறள் என்று பெயரிடத் தேவையா? என்பதுதான் என் கேள்வி. இருந்தாலும், திருக்குறளை பேரொளி என்று இருட்டிலே இருப்பவர்களுக்கெல்லாம் உணர்த்துவதற்காகவாவது[7], இந்த விருது பயன்படட்டும் என்று எண்ணியோ என்னவோ, இந்த பேரொளீயை அவர்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள். இந்த விருதை எனக்கு வழங்கியுள்ளதன் மூலம், என்னைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றியுள்ளதாக நான் கருதவில்லை[8]. ஒளியை கையில் கொடுத்து, அது மற்றவர்களுக்கு பயன்பட வேண்டுமென்று கொடுத்ததாகக் கருதுகிறேன். என் கையிலே தூக்கிப்பிடுத்துருக்கின்ற ஒளி என்ற உணர்வோடு தமிழை, தமிழின் புகழை இந்த தரணியிலே நிலைநாட்டுவதற்கு பயன்படுத்துவேன் என்ற உறுதிமொழியை நான் அவருக்கும், அவருடைய மன்றத்துற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்யமேவஜெயதேயும் “வாய்மையே வெல்லும்” என்பதும்: சட்டசபையில் நான் பணியாற்றும் போது, எப்படியெல்லாம் தமிழுக்கு பணியாற்றுவது எனக் கருதி, “சத்ய மேவ ஜெயதேஎன்ற வார்த்தையைவாய்மையே வெல்லும்என்று மாற்றினோம். முதலில் எப்படி அந்த சொற்றொடரை மாற்றலாம் என்று அதற்கு எதிர்ப்பு இருந்தாலும், பிற்பாடு பழகப்பழக அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர். நம்முடைய தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சுட்டுச் சொல்லாக, இலட்சினைச் சொல்லாக இன்றைக்கு மாறிவிட்டிருக்கின்றது[9].

வாய்மையும் உண்மையும்!உண்மையயும் வாய்மையயும் ஒன்றாக எண்ணிக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. அப்படி இன்னமுன் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். வாய்மை என்பது பிறருக்கு தீங்கில்லாமல் சொல்லப்படுகின்ற ஒரு சொல்லுக்கு பெயர்தான் வாய்மை அடிப்படையில் பிறக்கின்ற ஒரு சொல்லாகும். யாருக்கும் எந்தவித கெடுதலும் ஏற்படாமல், இந்த வார்த்தையினால் உறுதியோட சொல்லப்படுகின்ற சொல் வாய்மை ஆகிறது. உண்மை என்பதை அதற்கு அடுத்தக் கட்டத்தில் வைக்கலாமே தவிர, அது வேறு, இது வேறு[10].

“பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்” என்றார் வள்ளுவர். அதற்கு குறளோவியத்தில் நான் விளக்கம் அளித்திருக்கிறேன். “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்” என்பதற்கு ஒரு சிறிய கதை. அந்த கதையில் வேடன் ஒருவன் வில்லும், அம்பும் கையில் ஏந்தி வேகமாக வருகின்றான். வருகின்ற வேடனுடையக் குறிக்கோள் அவனால் துரத்தப்பட்ட மான்குட்டியை[11] கொன்று அந்த மானை உணவாக ஆக்கிக்கொள்ளவேண்டுமென்ற குறிக்கோளோடு வேடன் வருகிறான்.

வேடன், மான்குட்டி, மாமிசம் சாப்பிடுவது: வள்ளுவர் தன் குடிலிலே அமர்ந்திருக்கிறார். அந்த குடுலுக்குள்ளே மான்குட்டி ஓடிவந்து ஒளிந்துக் கொள்கிறது. ஓடிவந்த வேடன், “ஐயா இங்கே மான்குட்டி வந்ததா? என்று கேட்கிறான், அதற்கு அவர், “இல்லையே, வரவில்லையே” என்கிறர். மான்குட்டித் தப்பித்துக் கொள்கிறது. பக்கத்திலே இருக்கிற ஒருவர், வள்ளுவரைப் பார்த்து, “ஏனய்யா ஊருக்கெல்லாம் உண்மை பேசச் சொல்லி அறிவுரை கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் வேடனிடத்தில் பொய்யாக மான் குட்டி வரவில்லை என்ரு சொல்லிவிட்டீர்களே” என்று கேட்கிறார். “நான் உண்மை சொல்லியிருந்தால் மான்குட்டி இந்நேரம் வேடன் வயிற்றுக்குள் போயிருக்கும். அதனால் தான் நான் வாய்மையோடு மான்குட்டியைக் காப்பாற்றினேன்”, என்கிறார்[12].

நாத்திகமும், ஆத்திகமும்: நான் எழுதிய குறளோவியத்தில், திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை[13] கருத்தில் கொண்டு அதற்கு பொருள் வடித்துள்ளேன். எனக்கு முன் திருக்குறளுக்கு உரை எழுதிய பலர், அவர்கள் ஆத்திகர்களாக இருந்தால், ஆத்திக கருத்துகளையும், நாத்திகர்களாக இருந்தால், நாத்திக கருத்துகளையும் அதில் வெளிப்படுத்தியுள்ளனர்[14]. “ஆனால், நான் திருக்குறளின் உரையை திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை கருத்தில் கொண்டு, நாத்திகத்தை திணிக்காமல், ஆத்திகத்தை புறக்கணிக்காமல் எழுதியுள்ளளேன். நான் குறளோவியத்திலிருந்து ஒன்றிரண்டு சொல்ல விரும்புகிறேன். பலரும் உண்மையும், வாய்மையும் ஒன்று என்று என நினைக்கின்றனர். ஆனால், உண்மை வேறு, வாய்மை வேறு. உண்மை என்பது உள்ளதைச் சொல்வது. வாய்மை என்பது யாருக்கும் தீங்கு நேரக்கூடாது என்று உரைப்பது. “யாருக்கும் தீங்கு செய்யாமல் நன்மை செய்ய வேண்டும் என்றால், பொய்யையும் சொல்லலாம். அந்தப் பொய் உண்மை இல்லை என்றாலும், அது வாய்மைக்கு இணையாகக் கருதப்படும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். எனக்கு கொடுக்கப்பட்ட இந்த விருதை, இங்கு கூடியுள்ள அறிஞர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்,” இவ்வாறு முதல்வர் பேசினார்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க ஆரம்பித்து விட்டது: கருணாநிதியே உண்மையா, பொய்மையா என்ற ஆராய்ச்சி செய்யவேண்டிய நிலையில் உள்ளது, ஏனனில், திருக்குறளைப் பொறுத்த வரைக்கும் செய்துள்ள துரோகம் சொல்ல மாளாது. கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு, திருவள்ளுவரையும், திருக்குறளையும் பழித்தது, தூஷித்தது,………..(முன்னமே குறிப்பிட்டுள்ளேன். எனது நூலில் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை”யில் விளக்கியுள்ளேன்). “குறளா, குரானா?” என்ற பிரச்சினை வந்தபோது, வாய்மூடிக்கொண்டிருந்தது முதலியன. இன்று வேடன், மான்குட்டி, வாய்மை, பொய்மை என்று கதை சொல்கிறார். அப்பொழுது ஏன் மான்குட்டியைக் காப்பாற்றவில்லை? “குறளா, குரானா?” என்று கேட்டபோது, “வாய்மை” வரவில்லையே,’உண்மையும்” சொல்லவில்லையே? மௌனியாக இருந்ததால், இன்னொரு மான் உண்மையிலேயே இதே சென்னையில் கொலைசெய்யப்பட்டது! ஆமாம், “குறள்”தான் என்று வாய்மை சொன்ன கண்ணுதல் என்ற மான்குட்டி கொலை செய்யப்பட்டது. ஆக குறளுக்காக உயிர்விட்டது யார், தியாகம் செய்தது யார் என்றால் கண்ணுதல் தானே. உண்மையிலேயே வாய்மையுடன், அந்த மடாதிபதிக்கு ஏதாவது தெரிந்தால், அந்த விருது அந்த கண்ணுதலுக்குத் தான் கொடுத்திருக்க வேண்டும். பாவம், இந்த மடதிபதிகளுக்கு சரித்திரம் தெரியாது, வரலாறும் தெரியாது. முந்தைய குன்றக்குடி கிருத்துவர்களுக்குத் துணை போனது, அந்த தெய்வநாயகமே தம்பட்டம் அடித்துக் காட்டுகிறன். இந்த குறக்குடி இப்படி செய்கிறது. தெரிந்தும், அரசர்களின் கால்களில் வீழ்ந்து வாழும் காவிவேடத்தில் உலாவரும் போலிகள். இங்குதான் ஆத்திகமும், நாத்திகமும் வெளிப்படுகின்றன. காவி உடையில் நாத்திகம் உலா வருவதால்தான் திருமூலர் சாடுகிறார். சித்தர்கள் தோலுறுத்திக் காட்டுகிறர்கள்! ஆனால் சித்தர்களையேப் புரட்டிப்போடுகிறார் இந்த “பேரொளி”பட்டர்! இன்னும் மான்குடிகள் சாகத்தான் செய்யும், ஏனெனில் வேடர்கள் ஏற்கெனவே விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்! இப்பொழுதுதான் தமிழர்கள் இவர்களைப் புரிந்து கொள்ளப்போகிறர்களோ தெரியவில்லை!

வேதபிரகாஷ்

12-02-2010


[1] அதற்கு எந்த திராவிட கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆத்திகம், ஆன்மீகம் பேசும் திராவிடர்களும் கவலைப்படவில்லை. எனவே தமிழர்கள் அவர்கள் எத்தகையவர்கள் என்று அடையாளங்கண்டு கொள்ளவேண்டும்.

[2] உண்மையிலேயே இத்தகைய திருக்குறள் துரோக, சைவ-துரோக, இந்து-துரோக மடங்கள் இருப்பதைவிட இல்லாமலேயே போய்விடுவது நல்லதே. பிறகு யான் அவர்கள் வெட்கம் இல்லாமல், இந்து, இந்து மடங்கள், இந்து மடாதிபதி என்றெல்லாம் மற்ற நேரங்களில் உலா வருகிறார்கள் என்று தெரியவில்லை.

[3] கத்தோலிக்க சர்ச் செய்துவரும் ஒரு மாபெரும் கள்ள ஆவண, சரித்திரப் புரட்டு ஆராய்ச்சி. ஏற்கெனவே கோர்ட் வரை சென்று அவர்களின் ஃபோர்ஜரி, மோசடி, கள்ள ஆவணம் தயாரித்தல் போன்ற விஷயங்கள் வெளிவந்துள்ளன.

[4] “இந்தியாவில் தாமஸ்” என்ற படத்தை ஆரம்பித்து வைத்து, திருவள்ளுவரை மறுபடியும் சாகடித்துவிட்டார் எனலாம்!

[5] இப்படி சொன்னவுடன், அது தூக்குப்போட்டு செத்திருக்க வேண்டாமோ? இல்லை, ஏதாவது குளம், ஆற்றில் வீழ்ந்து மறைந்திருக்கவேண்டாமோ? எதற்கு, திருநீறு, ஜடாமுடி, ருத்ராக்ஷம் எல்லாம்? யாரை ஏமாற்ற?

[6] ஆமாம் இத்தகைய விபச்சாரவேலை செய்யத் துணிந்தால், யாருக்குதான் ஆசை விடும். அதுவும், இது ஆசையில்லை, தினம் தினம் விருதுகளை நுகரும் மோகம், பட்டங்களைத் தழுவு பற்றும் இச்சை, உட்கார்ந்து கொண்டே ரசிக்கும் சல்லாபம், அது சாகும்வரை அடங்காது.

[7] எந்த கொழுப்பு இருந்தால், இருட்டில் உள்ளவர்கள் என்று மற்றவர்களைச் சொல்ல எண்ணம் வரும். இங்கேயே, அவருக்கு வயதாகியும் அந்த மமதை, செருக்கு, அணவம் முதலியன மனத்தை மறைத்துள்ளது வளிப்படுகிறது.

[8] “கடவுள்” ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் விளம்பரங்கள் கொடுத்துக் கொண்டதில் மட்டும் குறைவில்லை. “கடவுள்” பெயர் சொல்லி நீண்ட ஆயுள் வேண்டும் என்று கேட்டதிலும் வெட்கமில்லை.

[9] இதே மாதிரித்தான் “மாஹாத்மா”, “அண்ணல்” ஆகியது, ஆனால், அத்தகைய மரியாதை, மதிப்பு வரவில்லையே, திராவிடர்களுக்கு? ஏன்?

[10] நிச்சயமாக கருணநிதியை ஆன்மீகவாதி என்று யாரும் நினைத்துக் கொண்டால் அது பொய்யேயாகும்.

[11] அதனால்தான் வயதாகியதும், மான்குட்டி, மானாகியது போலும்! மானாட வந்துவிட்டது, கூட மயிலும் வந்துவிட்டது போலும்! பிறகென்ன, மானாட, மயிலாட, மார்பாட…………………

[12] “தான் மானாட மயிலான” பார்த்துக் கொண்டிருக்கும்போது, யாராவது கேட்டிருந்தால் இல்லையென்றுதான் சொல்லிருப்பார். ஏனெனில் மான்களை ஆடவிட்டுப் பார்க்கும்போது, குட்டிகளைப் பற்றி எப்படி ஞாபகம் வரும்?

[13] நல்லவேளை அக்காலத்தில் கருணாநிதி இல்லை!

[14] எப்படி நாஜுக்காகச் சொல்கிறார் பாருங்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பதால், இப்படி பேசுகிறார்.

திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்

பிப்ரவரி 11, 2010

திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்

வேதபிரகாஷ்

குறிப்பு: இக்கட்டுரை “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியவின் பங்கு” என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. திராவிடச் சான்றோர் பேரவை சார்பில் நடந்த ஆய்கத்தில் அதே தலைப்பில் கருத்தரங்கம் கடந்த மார்ச் 2009ல் சென்னையில் நடந்தது. பதிப்பகத்தார் – திராவிட சான்றோர் பேரவை, சென்னை, 2009, ப.201-208.

தமிழகத்தில் தமிழுக்குக் கிடைக்கும் அந்தஸ்த்தும், மதிப்பும், மரியாதையும் சொல்லவொன்னாத நிலையை அடைந்துள்ளன. திருக்குறளை அவமதிக்கும் புனித காரியத்தைத் திருவாளர் பகுத்தறிவு பகலவன் பெரியார் ஈவேரா அவர்கள்தாம் துவைக்கி வைத்தார் . தமிழைப் பற்றியும், தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் அவர் சொல்லியுள்ளதை படித்தால், படித்திருந்தால், படிக்க நேரிட்டால், தமிழ், முத்தமிழ், வாழும் தமிழ், நடக்கும் தமிழ், தமிழின் மூச்சு, தமிழின் உயிர், முதலியவைல்லாம் என்றோ, அவர்களது உடலில் சூடு, சொரணை, தமிழ்ப் பற்று என்றெல்லாம் யாதாவது இருந்திருந்தால், வீழ்ந்திருக்கும், மூச்சு நின்றிருக்கும், செத்திருக்கும். ஆனால், தமிழ் வாழ்ந்திருக்கும். என்னே, அலங்கோலம் இது! தமிழ், முத்தமிழ் ஆகி, வாழும் தமிழ் ஆகி, நடக்கும் தமிழ் ஆகி, இன்று “செம்மொழி”யாகி, ஒரு கட்டடத்தில் அடைப்பட்டு விட்டது . அதன் பெயரில் கிடைத்த கோடிகள், தமிழின் மூச்சுகள், உயிர்கள் பங்கு போட்டுக் கொண்டு விட்டன.

திருக்குறள் சர்ச்சைக்குட்பட்ட பின்னணி (1968 முதல்): திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து, திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. பிறகு தமிழ்மொழி மூலம் சமுதாயத்தில் தங்கள் மீதுள்ள எதிர்மறை சிந்தனைகளை துடைக்க, 1968ல் உலகத் தமிழ் மாநாடு – என்றெல்லாம் செயல்பாடு வெளிப்பட்டது. மதுரை பல்கலைக் கழகத்தில் தமிழக அரசு, ஒரு அறக்கட்டளையை நிறுவி “திருக்குறள் ஆய்வுத்துறை” துவங்கப் பட்டு, கருத்தரங்கங்கள் நடத்தப் பட்டு, புத்தகங்களும் (திருக்குறள் ஆய்வு வெளியீடு) வெளியிடப்பட்டன[2]. அவ்வாறு பல நூல்கள் வெளிவர திருக்குறளின் இந்தியமதத்தொன்மை, சார்பு மற்றும் பிணைப்பு முதலியன நன்றாகத் தெரிந்தது. அதாவது, திருக்குறளை படிக்க-படிக்க, ஆராய-ஆராய அத்தகைய உண்மைகள் புலப்பட்டன[3]. இதனால், திராவிட சித்தாந்திகளுக்கு மட்டுமல்லாது, குறிப்பாக முகமதிய-கிருத்துவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகையால், அவர்கள், இந்த புதிய பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது, மற்றும், தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்வது என்பதில் கலந்து ஆலோசிக்க ஆரம்பித்தனர்.

கிருத்துவ-முகமதிய எதிர்ப்புகள் (1968 முதல்): கிருத்துவ-முகமதிய எதிரிப்புகள் இரண்டு வழிகளில் செயல்பட்டு வெளிப்பட்டன என தெரிகிறது.

  • ஒன்று “அறிவுஜீவிகள்” என்ற ரீதியில் மாநாடுகள் நடத்தி கருத்துருவாக்கம் ஏற்படுத்துவது.
  • இரண்டு துண்டு பிரசாரம் (handbill distribution), சிறுநூல் பிரபலம் / குறுப்புத்தக விநியோகம் (pamphleteering) மூலம் “பயத்தை”த் தூண்டுவது.

குரானை புகழ்ந்தும், குறளை இகழ்ந்தும். “பொதுமறை எது? குறளா? குரானா?” என்ற தலைப்பில் திருச்சியை சேர்ந்த மதனி என்ற முஸ்லிம் எழுதிய ஒரு “ஆராய்ச்சி நூல்” வெளியிடப்பட்டு, 1968ம் ஆண்டு முதல் பதிப்பும் 1974ம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது.

கிருத்துவர்கள் தமது “கட்டுக்கதைகள்” வெளிப்பட்டு அஸ்திவாரம் ஆட்டங்கண்டு விடுமோ என பயந்து, தமது பிரசாரங்களை முடுக்கி விட்டனர். கிருத்துவர்கள் 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா?” என்ற குறுபம்புத்தகம் தெய்வநாயகத்தால் எழுதவிக்கப்பட்டு வெளியிடுகிறார்கள் [4]. மு.கருணாநிதி “மதிப்புரை” அளித்துப் பாராட்டுகிறார்.

பல்கலைகழகங்களும், மதரீதியிலான “நாற்காலிகளும்”, சித்தாந்த மோதல்களும்: முகமதியரும் தமது யுக்திகளைத் தொடங்கினர். அதே மதுரை பல்கலைக் கழகத்தில் “இஸ்லாமிய தமிழிலக்கிய ஆரய்ச்சிப் பிரிவு” துவக்கப் பட்டது. நல்ல முஸ்லிம்கள் இருதலைக்கொள்ளி எறும்புகள் மாதிரி தவித்தனர், ஏனெனில், அவர்கள் “தமிழின் நண்பர்கள்” என்றும் காட்டிக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் தங்களது அடிப்படைவாதத்தையும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். ஆகையால், அவர்கள் திருக்குறளை தவிர்த்து தமது மதம்தான் சிறந்தது என்ற ரீதியில் “சூஃபி மெய்ஞானம்” என்ற போர்வையில் “ஆரய்ச்சி” ஆரம்பித்தனர். அவர்களும் “உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள்” நடத்த ஆரம்பித்தனர்[5]. இவ்விதமாக, திருக்குறள் பின்னேத் தள்ளப்பட்டு, “இஸ்லாமிய தமிழ் இலக்கியம்”, “தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லீம்கள் ஆற்றியத் தொண்டு”, முதலியன முன்வைக்கப் பட்டன. அப்துர் ரஹ்மான், மணவை முஸ்தபா முதலியோர் இதில் பங்கு கொண்டனர்.

இவ்வாறு, முகமதியர் தெளிவாக இருக்கும்போது, கிருத்துவர்கள் தமது “உள்-பிரச்சினைகளுக்காக” யோசித்து செயல்பட வேண்டியிருந்தது. கத்தோலிக்க சர்ச் தெய்வநாயகத்தின் மூலம் இந்த பிரச்சினை அணுக முடிவெடுத்தது. அதனால்தான் தெய்வநாயகத்தை வைத்தே எல்லா பிஷப்புகளும் தமது வேலைகளை இன்றளவிலும் செய்து வருகின்றனர்.

சித்தர்கள்: கிருத்துவர்களும், முகமதியரும்: திருக்குறளைவிட, “சித்தர்”களைப் பிடித்துக் கொண்டால், திருவள்ளுவரையும் மறக்கலாம், தமது “இந்து-விரோத” பிரசாரத்திற்கு “சித்தர் பாடல்களை” திரித்து விளக்கமும் அளிக்கலாம் என முடிவு செய்தனர் போலும். “தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்” என்ற மாநாட்டை மணவை முஸ்தபா[6] 1980ல் நடத்தினார். முதல் கிருத்துவ தமிழ் மாநாடு துருச்சியில் டிசம்பர் 28-30, 1981 தேதிகளில் நடக்கிறது. அதில், வி. ஞானசிகாமணி என்ற கிருத்துவரின் போலி “சித்தர் பாடல்களை” ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட, “அகத்தியர் ஞானம்” என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இவ்வாறு திருவள்ளுவத்தில் முரண்பாடு கொள்ளும் இவர், “சித்தர்களில்” போட்டி போட்டு மாநாடுகள் நடத்துகின்றனர், புத்தகங்கள் வெளியிடுகின்றனர். கருணாநிதியும், கனிமொழியும் சமீபத்தில் சிவவாக்கியர் பாடல்களைப் பற்றி அரைகுறையாக சொல்லி மாட்டிக் கொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இனி தனித்தனியாக, சில குறிப்பான திருக்குறள்-விரோத நிகழ்ச்சிகள் அரங்கேறியுள்ளதைப் பார்ப்போம்.

குறளா, குரானா? இவ்வாறு குரல் எழுப்பியது, கேள்வி கேட்டது, தமிழன் தான், ஆமாம் தமிழ் படித்த முகமதியன். தமிழனாக, இந்தியனாக, ஏன் இந்துவாக இருந்த முகமதியன் தான் கேட்டான், கேட்கிறான். சரி, பதில் தான், உண்மையை வெளிக்காட்டுகிறது. ஆமாம், குரான் முன்னம், குறள், ஆமாம், “திருக்குறள்” இல்லை, துச்சமாம்! காஃபிர்[7] (முகமதியன் அல்லாதவன்) மோமினானதால்[8] (நம்பிக்கையுள்ளாவன்) ஏற்பட்ட கோளாரா அல்லது முகமதியம் வளர்த்த அடிப்படைவாதமா என்று ஆராயவேண்டியுள்ளது. மதம் மாறுவதிலேயே, கடவுள் மாறும்போது, போலித்தனமான நம்பிக்கை வெளிப்படுகிறது.

“பொதுமறை எது? குறளா? குரானா?” இத்தலைப்பில் திருச்சியை சேர்ந்த மதனி என்ற முஸ்லிம் தமிழில் ஒரு “ஆராய்ச்சி நூலை” எழுதியுள்ளதாகவும், அதில் குரான்தான் பொதுமறை என்றும் குறள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் கண்ணுதல்[9] என்பவர் எழுதியுள்ள “பொதுமறை குறள்தான்-குரானில்லை” என்ற மறுப்பு நூல் மூலம் தெரியவந்துள்ளது. 1968ம் ஆண்டு முதல் பதிப்பும் 1974ம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது. புத்தகதை பேகம்பூர், திண்டுக்கல்-2 என்ற விலாசத்திலிருக்கும் “டில்லி குதுப்கானா” என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேற்படி புத்தகம் நெ.67, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-1 என்ற விலாசத்தில் இருக்கும் மன்சர் புக் சென்டர் என்ற புத்தகக் கடையில் விற்பனை செய்யப்படுகிறது. புத்தகதை அச்சிட்டோர் ஜோதி பிரிண்டர்ஸ், திருச்சி-1. இன்று இப்புத்தகம் கிடைப்பதில்லை.

மதனியும், தெய்வநாயகமும்: மேற்கண்ட உண்மைகளினின்று தெளிவாக அறியப்படுவது, மதனி மற்றும் தெய்வநாயகம் முகமதியர் மற்றும் கிருத்துவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவை, குண்டு, வெடிகுண்டு, எதிர்ப்பு சின்னங்கள் தாம், அவைற்றை வெடிக்கச் செய்யும் துப்பாக்கி, ராக்கட்-லாஞ்சர் மற்றும் ரிமோட்-கருவிகள் இஸ்லாமிய-கிருத்துவ தலமைகள்-தலமையகங்கள் தாம்[10]. மதனியின் புத்தகத்தை மறைத்து விட்டனர் முகமதியர், ஏனெனில் இன்று அது கிடைப்பதில்லை. ஆனால், தெய்வநாகம் கிருத்துவ தீவீரவாத பிரச்சாரம், கத்தோலிக்க சர்ச்சின் ஆதரவோடு வலுவாக நடந்து வருகிறது[11]. நாளைக்கு சட்டரீதியில் ஏதாவது பிரச்சினை வந்தால் தப்பித்துக் கொள்ள செய்துள்ள ஏற்பாடு என்று நன்றாகத் தெரிகின்றது[12].

மொழி-இலக்கியம் மதத்திற்கு விரோதமா? இத்தகைய நோக்கு, இந்த மதம் மாறிய முகமதிய-கிறித்துவர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தங்களது இறையியல் கொள்கைகள் பாதிக்கப் படுவதால், வெளிப்படுகின்றது. முகமதியரைப் பொறுத்த வரைக்கும், அரேபிய பாடை(மொழி)த்தான்[13] சிறந்தது. குறிப்பாக, வெளிநாட்டு கிருத்துவர்களுக்கும் இந்த மொழி வெறி, நிறவெறியோடு உள்ளது. அவர்கள் இந்தியாவில் எப்பொழுதுமே இலத்தினில்தான் “பலி-பூஜை” (Eucharist) நடத்துவார்கள். பங்களுரில் தமிழில் இறைவணக்கம் நடந்தபோது, கன்னட-கிருத்துவர்கள் எதிர்த்ததை நினைவு கொள்ளவேண்டும். மேலும்,

இங்கு முகமதிய-கிறித்துவர்கள் தமது மத-கடவுளர்களை, தூதர்களை தமிழில் விளக்க முற்பட்டபோது, பல பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பாக பெண்-கடவுளர், தேவதைகள் முதலியோரை “கேசாதி-பாத” வர்ணனைகளுக்கு உட்படுத்தப் பட்டபோது, ஆரம்பகாலங்களில் எதிர்ப்பு இல்லை. அல்லாப் பிள்ளைத் தமிழ், நபி/முகமதுப் பிள்ளைத் தமிழ், பாத்திமாப் பிள்ளைத் தமிழ் என்பதையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. நபி/முகமதுப் பிள்ளைத் தமிழ் முதலியன இருந்ததாகத் தெரிகிறது, ஆனால், 20வது நூற்றாண்டுகளில் அவர்களது மத-அடிப்படைவாதம், தீவிரவாதம் முதலியன சித்தாந்தரீதியில் வளர்ந்தபோது, அத்தகைய வர்ணனைகளை எதிர்த்தனர். அதுமட்டுமல்லாது அத்தகைய மற்றும் தமது சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகாது என்றுள்ள “பாடபேதங்கள்’ என்ற போர்வையில் பாடல்களையும் நீக்கி விட்டனர் மற்றும் புதிதாக எழுதி சேர்த்தும் உள்ளனர்.

முகமதியமத காப்பியங்களைப் பொறுத்தவரைக்கும், அவர்களுக்கு இடையே இருந்த ஷியா-சுன்னி வெறுப்பும் வெளிப்படுகிறது[14]. தமது கடவுளர், தூதர்களை தமிழ் மரபுபடி அவன், அவள் என்று ஒருமையில் குறிப்பிடுவதை எதிர்த்தனர்[15].

செமித்திய-சகோதர மதங்களின் முரண்பாடு ஏன்? இந்தியாவில் இந்துமதத்தை எதிர்த்து மதம் மாற்ற வேண்டும் என்ற நோக்கில் முகமதியர்-கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, ஒன்றாக செயல்பட்டாலும், அவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் பலமுறை வெளிப்படுகின்றன. யூதர்கள் “ஏசுகிருஸ்து” என்ற நபரை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. அத்தகைய பாத்திரமே பொல்லியானது என்றும், “ஏசுகிருஸ்து” ஒரு கபடதாரி, வேடதாரி மற்றவரைப் போன்று நடித்து ஏமாற்றுவன் (imposter) என்றுதான் அவர்கள் கொண்டுள்ளனர். கிருத்துவர்களுக்கோ, யூதர்களின் மீது தீராத பகை, ஏனெனில் அவர்கள்தாம் தமது தலைவர் சிலுவையில் அறையப்பட காரணமாக இருந்தவர்கள் என்றதினால். முகமதியரோ, “ஏசுகிருஸ்து”வை கடவுளாக, இறைமைந்தனாக ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு, “சிலுவையில் அறைப்பட்டதையும்” மறுக்கின்றனர்[16]. எனெனில், அவர்களது கடவுள் “அல்லா”, அத்தகைய நபர் என்றுமே சிலுவையில், பறிக்கவில்லை மற்றும் உயர்த்தெழவில்லை, மாறாக உயர்வான ஒரு இடத்திற்கு எடுத்தச் செல்லப் பட்டு, அவரது காயங்களுக்கு மருந்து போடப்பட்டு, குணமாகினார் எனச் சொல்கிறாகத்தான் நம்புகின்றனர். பிறகு, மேரி மேக்தலினை மணம் செய்து “ஏசுகிருஸ்து” கல்லறை இந்தியாவில், காஷ்மீரத்தில், “ரோஸாபெல்” என்ற இடத்தில் இருப்பதாகவும் புனையப்பட்ட “சரித்திரம்”![17] ஆகவே, இத்தகைய சூழ்நிலைகளிலும் திருக்குறளை அவர்கள் தாக்குகின்றனர்.

தமிழர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? தமிழ் என்று பேசுபவரும், திருக்குறள், திருவள்ளுவர் என்றெல்லாம் விழாக்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் நடத்தும் தமிழ் அறிஞர்கள், பண்டிதர்கள், புலவர்கள், கவிகள், கவிக்கோக்கள், பெருங்கவிக்கோக்கள் முதலியோர், இவ்வாறு தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் தாக்கப்படுவது, இழிவுபடுத்தப்படுவது, கேவலப்படுத்தப்படுவது முதலியற்றைப் பற்றி கவலைப்படாமல், மூச்சுக்கூட விடாமல் இருப்பது கண்டு ஆச்சரியமாக உள்ளது. முக்கியமாக, பலர் கிருத்துவர்-முகமதியர் முதலியோர் தமக்கு கொடுக்கும் சலுகைகள், பாராட்டுகள், மரியாதைகள் முதலியற்றில் மயங்கி, தமது சுயமரியாதை, மானம் முதலியற்றை மறந்து, அவர்களுடன் செயல்படுகின்றனர். சமயம் வரும்போது திராவிட அரசியல்வாதிகளும் தாம் ஆளும்போது, அவர்களுக்கு, “கலைமாமணி” முதலிய பட்டங்களால் கௌரவிக்கப் படுகின்றனர்.

கண்ணுதலின் போராட்டமும், முடிவும்: கண்ணுதல் என்ற தனிப்பட்ட மனிதர், இந்த குறளா-குரானா போராட்டத்தில் ஈடுபட்டு, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அவரது குறும்புத்தகம் வெளிப்படுத்துகின்றது. இருப்பினும், அவரது எழுத்துகள் மற்றும் தனிநபர் போராட்டம், இப்பொழுதே அறியப்படாமால் உள்ளது. காலடைவில் அவர் முழுவதுமாக மறக்கப்படலாம். கிருத்துவர்கள் தமிழறிஞர்கள், புலவர்கள் முதலியோரது நூல்களை அழித்துள்ளனர். உதாரணத்திற்கு சிவரபிரகாசரின் ஏசுமத நிராகரணம் மற்றும் ஏசுமத நிர்க்கிரகம் என்றஇரு புத்தகங்ககளை அவர்கள் எரித்துள்ளனர். இந்த கண்ணுதல் என்பவரோ முகமத வெறியர்களால் கொலை செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அதற்கு மேல் எந்த விவரமும் தெரியவில்லை[18].

எனவே, இந்த திருக்குறள் எதிர்ப்பு, மறப்பு, மறைப்பு, திரிப்பு முதலிய காரியங்களில் ஒட்டுமொத்த தமிழ்-எதிர்ப்பு கூட்டங்கள்தாம் “திராவிடர்” என்ற போர்வையில், முகமதியர்-கிருத்துவர்களுக்கு துணைபோய், தன் கையே தன் கண்களைக் குத்திக்கொள்வதைப் போன்று தமிழர்கள் செய்ய மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகையால்தான், அவர்களுக்கு மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து குழுக்களும் தமக்கு எடிராக செயல்படுவதை அறியாமல், அவர்கள் தமது காப்பாளர்கள் என்று இன்றளவிலும் நம்பப்பட்டு வர்கின்றார்கள். இந்த மாயவலையிலிருந்து தமிழர்கள் விடுபடும் வரை, தமிழர்களுக்கு, தமிழுக்கு விடிவு காலம் இல்லை.

வேதபிரகாஷ்


[1] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

 

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[2] சென்னை, மயிலாப்பூரில் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ஆம் நாள் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆற்றிய சிறப்புரை – நம் நாடு நாளிதழ் அக்டோபர் 16, 1967) பேசியபோது, “சென்னைப் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் ஆராய்ச்சிக்கு என்றே ஒரு தனித் துறையை ஏற்படுத்தத் தமிழக அரசு முயற்சி செய்யும்” என்றார். ஒருவேளை, அதுதான் மதுரை பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தபட்டதா என்று தெரியவில்லை.

[3] திருக்குறள் உலக பொதுமறை என்றெல்லாம் திராவிட அரசியல்வாதிகள் பேசியபோது, முகமதியர் கடுமையாக எதிர்த்தது மட்டுமல்லாது, அவர்கள் திராவிட சித்தாந்திகளிடம் அவ்வாறு பேசவேண்டாம் என்றும் எடுத்துக் கூறினர். இன்றளவிலும் முகமதியர் இணைத்தளங்கள் மூலம் குறளை குரானுடன் ஒப்பிடுவதை கடுமையாக எதிர்க்கின்றனர்.

[4] ஆர்ச் பிஷப் அருளப்பா இதற்கு பெருமளவில் உதவி வெய்துள்ளதாக, தெய்வநாயகமே ஓப்புக்கொண்டுள்ளதை அவர்கள் வெளியுட்டுள்ள குறும்புத்தகங்கள் மூலம் அறியலாம்.

[5] ஏழாம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மே மாதம் 25, 26, மற்றும் 27 ஆம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

[6] மணவை முஸ்தபா, தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள், மீரா பப்ளிகேஷன், AE-103, அண்ணா நகர், சென்னை-600040, 1983.

[7] காஃபிர் = இவார்த்தை “குஃப்ரு” என்ற அரேபிய சொல்லினின்றுப் பெறப் படுகின்றது. குஃப்ரு என்றால் சுத்தமில்லாதவன், ஆச்சாரமில்லாதவன், விலக்கப்பட்ட உணவை உண்பவன், அல்லாவை நம்பாதவன் என்றெல்லால்ம் பொருள்படும். குரானின் படி, இவ்வுலகம் “தாருல்-இஸ்லாம்” மற்றும் “தாருல்-ஹர்ப்” என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பின்னதில், எப்பொழுதும் “ஜிஹாத்” என்ற புனித மதப்போர் நடத்தி, காஃபிர்களைக் கொன்றால் தான், அந்த “குஃப்ரு” நீங்கப்படும். அதுவர “ஜிஹாத்” தொடரும்.

[8] “மோமின்” = நம்பிக்கை உள்ளவன், அதாவது குரானில் மட்டும் நம்பிக்கையுள்ளவன், அதனால் மற்றவற்றை அடியோடு நம்பாதவன், நம்பக் கூடாதவன், நம்ப முடியாதவன்.

[9] கண்ணுதல், பொதுமறை குறள்தான்-குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.

[10] வில்லிருக்க அம்பை நோவானேன் என்பது பழைய “பழமொழி”, இப்பொழுது, துப்பாக்கி இருக்கத் ரவையை நோவானேன், ராக்கட்-லாஞ்சர் இருக்க குண்டை நோவானேன், ரிமோட்-கருவிகள் இருக்க வெடிகுண்டுகளை நோவானேன் என புது “பழமொழிகள்” உபயோகப்படுத்தலாம். ஆனால், இவையும், தொழிஏநுட்பத்தால் பழையதாகி விடுகின்றன!

[11] ஆகஸ்த்து 2008ல் நடந்த தமிழர் சமயம் மாநாடு முழுக்க-முழுக்க பிஷப்புகள் மாநாடுதான். அவர்கள் பங்கு கொண்டது மட்டுமன்றி அங்கேயே இருந்து, பாடி-ஆடி மற்றவர்களை மகிழ்வித்தனர்.

[12] அருளப்பா மாதிரி சட்டப் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு, தேவையற்ற விளம்பரத்தைத் தர விரும்பவில்லை என்று நன்றாகத் தெரிகின்றது.

[13] திராவிட-மற்றும் சித்தாந்திகளைப் போல “பாஷை” என்ற சொல்லிற்கு பதிலாக “பாடை” என்று அவர்கள் உபயோகிக்கும் வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.

[14] எம். செய்யது முகம்மது ஹஸன் (பதிப்பாசிரியர்), கனகாபிஷேகமாலை, ஐந்தாம் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, கீழக்கரை, 1990, ப.xiv-xv.

[15] அதே இலத்தில், ப.xvii.

[16] முஹம்மது அப்துல்காதிர், இயேசுநாதர் சிலுவையிலறைப்படவில்லை, முஸல்மான் ஆபீஸ், தென்காசி, 1980.

Ahmed Deedat, Crucifixion or Cruci-fiction, Islamic Propagation Centre, Durban, South Africa, 1987.

…………………….., Resurrection or Resusiatation, Islamic Propagation Centre, Durban, South Africa, 1987.

………………………, Who moved the stone?, Islamic Propagation Centre, Durban, South Africa, 1987.

[17] இதன் மீது ஆதாரமாகத் தான் “இந்தியாவில் ஏசு” என்ற படத்தை கிருத்துவர் எடுக்கின்றனர். விவரங்களை அவர்களது இனைத்தளத்தில் காணலாம்.

[18] சமீபத்தில் திரு. நாத்திகம் ராமசாமி அவர்களைப் பார்த்தபோது, கண்ணுதலின் “பொதுமறை குறள்தான்-குரானில்லை” என்ற குறும்புத்தகத்தைக் காண்பித்ததுடன், இந்த சிறிய விவரங்களையும் சொன்னார்கள்.