Posts Tagged ‘அணில்’

அணில் வேலை செய்கிறது, அணில்கள் வேலை செய்கின்றன, கலியுகத்திலும் அணில்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன (3)

ஜூலை 7, 2021

அணில் வேலை செய்கிறது, அணில்கள் வேலை செய்கின்றன, கலியுகத்திலும் அணில்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன (3)

அணில் போன்று சேவை செய்யும் அர்ஜுன்
தனது கைகளினால் வேலை செய்யும் அர்ஜுன் – அணில் போன்று சேவை செய்யும் அர்ஜுன்
கும்பாபிஷேகம் முடித்து, ஸ்வாமிகள் பிரசாதம் கொடுக்கிறார்.

அர்ஜுன் போன்ற அணில்கள் சேவை செய்து கொண்டிருக்கின்றன: தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்துக்களுக்கு, மடங்களுக்கு, மடாதிபதிகளுக்கு, நம்பிக்கைகளுக்கு மரியாதை, பாதுகாப்பு, போற்றல், ஆதரவு முதலியவை தொடர்ந்து இருந்து வருகின்றன. மத்வ சம்பிரதாயத்தில், மண்ணிற்குத் தான் மகிமை. ஶ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் (மூல பிருந்தாவனத்தில் இருந்து புண்ணிய எடுக்கப் பட்ட மண் மிருத்திக என்று சொல்லப் படும். மண் மட்டுமல்லாது, அந்த வார்த்தையும் புனிதத்துடன் தொனிக்கப் படும், பாவிக்கப் படும். அத்தகைய புண்ணிய மண் எடுத்து மற்ற இடங்களில் பிருந்தாவனங்கள் நிறுவப்பட்டன, நிறுவப் படுகின்றன. அதனால், அவற்றிற்கு அதே மரியாதை, போற்றல், சடங்குகள், கிரியைகள் முறையாக நடக்கும். அதுபோல இங்கு, பேஜேவர் மட ஸ்வாமிஜி[1]  அயோத்தியாவிலிருந்து, புனித மண்ணை எடுத்து வந்து, இங்கு, இக்கோவில் நிறுவ ஆவண செய்து வைத்தார். இப்பொழுதும், கும்பாபிஷேகம் முடித்து வைத்தார்.  மண், சாம்பல், யாக ஆகுதி முதலியவற்றிற்கு அத்தகைய புனிதத் தன்மை உள்ளது, மதிக்கப் படுகிறது. அவற்றைப் பற்றிய சில உதாரணங்கள் கீழே விவரிக்கப் பட்டுள்ளன. ஆனால், இங்கோ – தமிழகத்தில் எல்லாமே பகுத்தறிவு, பெரியாரிஸம், நாத்திக போர்வைகளில், தொடர்ந்து தூஷிக்கப் படுகின்றன. இந்துக்கள் மனரீதியில், உடல் ரீதியிலும் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகிறார்கள்[2].

கொரோனா தடுப்பு விதிமுறைக்ளுடன் பக்தர்கள் வருகிறார்கள், சேவிக்கிறார்கள்.

அணில் வேலை செய்கிறது, அணில்கள் வேலை செய்கின்றன, கலியுகத்திலும் அணில்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன: எவ்வளவு சிறிய உயிரினம் ஆனாலும், மக்களுக்கு உதவ வேண்டும், சேவையில் ஈடுபட்டு பணியை செய்ய வேண்டும், அதில் உருண்டு திளைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு, வேலை செய்தது அணில். ராம பிரான் அதன் சேவையை மெச்சி, அன்பாக தடவிக் கொடுத்தார்.  அதாவது, லங்கைக்குச் சென்று படைகளோடு கடக்க குருக்கில் இருக்கும் கடலுக்கு, அத்தீவுக்கும் இடையே பாலம் கட வேண்டும். ராமரிடம் பலவித தொழிற்நுட்ப வல்லுனர்கள் இருந்தனர். பணிகள் நடந்து பாலம் கட்டியாகி விட்டது. அப்பொழுது, ஒரு அணில் மண்ணின் மேற்பரப்பில் உருண்டு கொண்டிருப்பதைக் கண்டு ராமர் கேட்டார், “நீ ஏன் அவ்வாறு செய்து கொன்டிருக்கிறாய்?” அணில், “நானும் உங்கள் பாலம் கட்டிய பணியில் கலந்து கொண்டு, நீங்கள் எல்லோரும் நடந்து செல்ல வசதியாக இவ்வாறு உருண்டு மண்ணை சமன் படுத்துகிறேன்”, என்றது. அதன் சேவையை மெச்சி, அப்பொழுது, அதன் முதுகில் அன்போடு தடவி கொடுத்தார். அப்பொழுது மூன்று கோடுகளாக மாறியது. அதாவது, மண் நிறைந்த அதன் முதுகை நான்கு விரல்களால் தடவிக் கொடுத்த போது, மூன்று விரலிடைகளில் மண் அப்படியே இருக்க அது அடையாளமாகியது. சேவையின் மேன்மையைப் போற்றும் வகையில், பணியின் மகத்துவத்தை சிறப்பிக்கும் முறையில், வேலையின் உழைப்பை மதிக்கும் நிலையில் பரிசாக, விருதாக, தெய்வத்தின் தானமாக கிடைத்த அடையாளமாக பாவிக்கப் பட்டது. பின்னர் மகாபாரத்தில் கீரிப்பிள்ளை சம்பவம் விவரிக்கப் படுகிறது.

ராமரின் அணிலும், மகாபாரத கீரிப்பிள்ளையும் – கற்க வேண்டிய படிப்பினைகள்

கீரிப் பிள்ளையும், குருக்ஷேத்திர யுத்தமும், தருமனின் யாக ஆகுதி சாம்பலும், கீரிப்பிள்ளையும்[3]: குருக்ஷேத்திர யுத்தத்திற்குப் பிறகு, இந்திரபிரஸ்தத்தில், தான் பெற்ற மகத்தான வெற்றிக்கு, அஸ்வமேத யாகம் சிறப்பாக நடத்தி முடிக்கிறான். யாகம் முடிந்து விட்டது. ஆகுதி குறைந்து விட்டது. சாம்பல் உருவாகி விட்டது. ஆனால், தருமனுக்கு கொஞ்சம் அகம்பாவம் வந்து விடுகிறது. ஆஹா, நான் வெற்றி பெற்று மஹாராஜன் ஆகிவிட்டேன் என்று நினைத்தபடி உட்கார்ந்து கற்பனை செய்து கொண்டிருக்கிறான். அப்பொழுது, ஒரு கீரிப்பிள்ளை வந்து, அந்த சாம்பலைப் பார்த்து, அதில் வந்து உருளுகிறது. தருமனுக்கு சிந்தனை சிதற கோபம் வருகிறது. கீரிப்பிள்ளையோ விடாமல் புரண்டு பார்க்கிறது.

யுதிஸ்ட்ரன் – தருமராஜன் தருமனாகிறான். “கீரிப்பிள்ளையே, உனக்கு என்ன வேண்டும்?,” என்று கேட்கிறான்.

“எனக்கு ஒன்றும் வேண்டாம். இங்கோ ஏதோ மிகப் பெரியப-சிறந்த யாகம் நடந்தது என்று கேள்விப் பட்டேன். அதனால், இங்கு வந்தேன்”

“அப்படியா, சரி நீ என்ன எதிர்பார்க்கிறாய்?”

“முன்பு, ஒரு ஏழைப் பராரி பிராமணனின் வீட்டு அடுப்பு சாம்பலில் உருண்ட போது, என்னுடைய உஅலின் ஒரு பகுதி தங்கநிறமாகி விட்டது. பிறகு முனிவர்களிடம் வழி கெட்டபோது. எங்கெங்கெல்லாம் யாகம் நடக்கின்றனவோ, அங்கெங்கெல்லாம் சென்று ஆகுதி சாம்பலில் உருண்டு பார், மேன்மை இருந்தால், உனது ஆசை தீரும் என்றனர். ஆனால், இங்கும் ஒன்றும் நாக்கவில்லை”

“அதாவது, எனது யாகமும் அந்த அளவுக்கு சிறப்பில்லை போன்றிருக்கிறது,” என்று யோசித்து, ஆணவம் குறைந்து, சித்திக்க ஆரம்பித்தான்.

“தருமரே நன்றி நான் சென்று வருகிறேன், ” என்று அந்த கீரிப்பிள்ளை சென்று விட்டது.

தமிழக கொக்கோக கவிப்பெருங்கவிக்கோக்களுக்கு அணிலைப் பற்றி சரியாமல் இருபது அவர்களது பேதமையை வெளிப்படுத்துகிறது: தமிழகத்திற்கும், அணிலுக்கும் அடிக்கடி தொடர்பு, சந்தர்ப்பம், விவாதம்  வந்து விடுகின்றன. கொக்கோக திராவிட நாசகார கவிக்கோக்களுக்கு மூன்று கோடுகள், இரண்டு கோடுகளாகின்றன[4]. மூன்று என்பது, திராவிடத் தலைவர்களுக்குப் பிடித்த வார்த்தை மற்றும் செயல்பாட்டு எண் வடிவம், குறியீடு, அடையாளமும் ஆகும். மனை, துணைவி, கூட இருப்பவள் என்றெல்லாம் வாழ்க்கை கணக்குகள் நடந்தன, நடக்கின்றன[5]. ஆனால், பக்தர்களுக்கு அணில் மகிமை சரியாகத் தான் புரிந்திருக்கிறது. ராமர் அணிலின் சேவையை மெச்சி, அதன் முதுகில், தடவி கொடுத்தார். அப்பொழுது மூன்று கோடுகளாக மாறியது. அதாவது, மண் நிறைந்த அதன் முதுகை நான்கு விரல்களால் தடவிக் கொடுத்த போது, மூன்று விரலிடைகளில் மண் அப்படியே இருக்க அது அடையாளமாகியது. ஆனால், இந்த கொக்கோக சிறுமதி கவிஞர்களுக்கு கணக்கு தெரியாது போலும். அதனால், “அணில் முதுகில் இராமர் மூன்று கோடு போட்ட மாதிரி,” என்று எழுதினான் அவன்[6]. இவன்கள் எப்படி தடவுவார்கள் என்பது அவர்களுக்குத் தான் தெரியும். ஒரு கையில் ஐந்து விரல்கள், இரண்டு கைகளில் பத்து விரல்கள் என்றிருக்கும் போது, குடிபோதையில், எப்படி-எப்படியோ தடவி இருப்பார்கள்.  “ஐந்து விரலால் நான் உன்னை தொட்ட போது எப்படி? ஜிங்கிடிசாம், ஜிங்கிடிசாம், ஜிங்கிடிசாம்,” என்று பழைய பாடலும் உண்டு[7], ஆனால், இது போன்ற வக்கிரம் இல்லை. ராமர் எந்த இஞ்சினியரிங் காலேஜில் படித்தார், என்று கருணாநிதி கேட்டது, அத்தகைய வக்கிரத்தின் உச்சம். இன்று அதே திராவிட பாரம்பரியம் அணில்களால் மின்சார கம்பிகள் பாதிக்கப் படுகின்றன என்ற அளவுக்கு, பகுத்தறிவு வளர்ந்துள்ளது.

© வேதபிரகாஷ்

07-07-2021

ஸ்டாலின் துர்கா, அர்ஜுன் குடும்பத்தாருடன்
ஶ்ரீ ஆஞ்சநேயர் விக்கிரகத்தின் பீடம்
விக்கிரகத்தின் மேலே அபிஷேகம், விசேஷ பூஜைகள் செய்ய, ஒரு மேடை அமைக்கப் பட்டுள்ளது.
அதில் 40 பேர் இருந்து தெய்வ காரியங்களை செய்யலாம்


[1] உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.

[2]  இவற்றைப்பற்றி என்னுடைய பிளாக்குகளில் விவரமாக பதிவு செய்துள்ளேன்.

[3]  மகாபாரதத்தில் அஸ்வமேத மற்றும் அனுகீத பருவங்களில் (1. Aswamedhika Parva (Chapters: 1–15) 2. Anugita Parva (Chapters: 16–96)) வரும் இந்த கதை சிறிது வேறுபாடுகளுடன் உரையாசிரியர்கள் எழுதி வருகிறார்கள். யாகமறுப்பு போன்ற கருத்துகள் இருப்பதால், இது ஜைன-பௌத்த இடைச்செருகல்கள் என்றும் கருதப் படுகின்றது.

[4] இரண்டு மனைவிகளை (தெரிந்தும், தெரியாமலும்) வைத்திருக்கும் நிலை. இது திராவிட பாரம்பரியத்தில் சிலருக்கு சகஜமாகி விட்டது.

[5]  சில திராவிடத் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் கூட பின்பற்றியது, இன்றைக்கு ஆதரித்து பேசும் நிலைக்கு வந்தாகி விட்டது.

[6]  திருவாச்சி படத்தில் வைரமுத்து எழுதின சினிமா பாடல்.

[7] 1969ல் வெளிவந்த மேஜர் சந்திரகாந்த் பாடலில், “நேற்று நீ சின்ன பாப்பா இன்று நீ அப்பப்பா ஆயிரம் கண் ஜாடையோ,” இந்த வரி வரும். வாலியின் பாடல்.

கோவிலுக்கு வருகிறவர்கள் தியானம் செய்ய, தியான மண்டமும் கட்டப் பட்டுள்ளது.
சுற்றியுள்ள சன்னிதிகள் – நாகதேவதைகள்.
விநாயகர் சன்னிதி
ஶ்ரீ ராமர் கோவில், சன்னிதி
உள்ளே இருக்கும் ஶ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணர் விக்கிரங்கள்