Posts Tagged ‘ஆழ்வார்கள் ஆய்வு மையம்’

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்!

ஜூலை 13, 2010

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்!

தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38052

இது பற்றி விரிவாக பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், தினமலரில் வந்த செய்தியை அப்படியே போட்டுவிட்டு,அடைப்புக்க்குறிகளில் மட்டும் என்னுடைய விமர்சனத்தைச் சிறியதாகக் கொடுத்திருந்தேன்.

இப்பொழுது, விவாதம் ஒன்றிற்கு மேற்பட்ட கோணங்களில் செல்வதால், இதனை மாற்றாமல் அப்படியே வைத்து, இன்னொரு பதிவை செய்ய விரும்புகிறேன்.

எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்: சென்னை: “எங்கெங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை, தமிழ் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது, அதனால், வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் பங்கேற்கும் விழாவில், எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்,” என, ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்த நாடக விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார். [உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டாம் என்று தமிழில் யோரோ சொல்லியிருக்கிறார்களே?]

ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், முதல்வர் கருணாநிதி கதை, வசனம், பாடல்கள் எழுதிய, “போர்வாளும் பூவிதழும்’ என்ற நாட்டிய நாடக விழா, சென்னையில் நேற்று நடந்தது. [ஜகத்ரெக்ஸகன் இப்படி ஜகஜாலக் கில்லாடியாக, எல்லாரையும் வைத்து சிண்டு முடித்து விடுகிறாரா அல்லது திட்டமிட்டே இப்படியொரு நாடகம் அரங்கேறுகிறதா, என்று கூடிய சீக்கிரத்தில் தெரிந்துவிடும்.]

கருணாநிதி-வேலுக்குடிகிருஷ்ணன்-2010

கருணாநிதி-வேலுக்குடிகிருஷ்ணன்-2010

விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் புதியவர்கள். இந்த மேடையில் தான் அவர்களை நேரில் பார்க்கிறேன். ஜெகத்ரட்சகன் மூலம், அவர்களுடைய தமிழை நாம் எல்லாரும் பருகும் வாய்ப்பை பெற்றோம். இத்தனை நாட்கள் இதைக் கேட்காமல் விட்டோமே என்ற எண்ணத்தை அவர்களின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பேச்சில் ஓரிரு வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவர்களின் தமிழ்ப் பற்று, எதை பற்றி சொன்னாலும், இறுதியில் முன் இருப்பது தமிழ்தான், தமிழர்தான் என்ற உணர்வு. அந்த உணர்வுதான் நம்மை இங்கே இணைத்துள்ளது”.

பத்மா.சுப்ரமணியம்.காட்சி.2010

பத்மா.சுப்ரமணியம்.காட்சி.2010

எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது: “அதற்காகத்தான் செம்மொழி மாநாடு நடத்தி முடித்துள்ளோம். எவ்வித பாகுபாடும் இன்றி, செம்மொழி மாநாட்டிற்கு அனைத்து சமயத்தவர்களையும், அனைத்து மதத்தவர்களயும், மாற்று கருத்து உடையவர்களையும், மற்ற கட்சியினரையும் அழைத்து விழா எடுத்துள்ளோம் [இப்படியெல்லாம் பொய் சொல்லுவதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதியேதான்]. கட்சி அடையாளம் இன்றி நடந்த அந்த விழாவில், நாம் தமிழர்கள் என்ற உணர்வுடையவர்கள் பங்கேற்றனர். அந்த உணர்வு இல்லாதவர்கள் மாநாட்டை புறக்கணித்தனர் [இதுதான் கொழுப்பு என்பது. அம்மாந்நாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று தடுக்கப் பட்டவர்கள், மறுக்கப் பட்டவர்கள், ஆய்வுக் கட்டுரைகள் கொடுத்தும் ஒதுக்கப் பட்டவர்கள் முதலியவர்கள் மவுனமாக இருப்பதே இந்த ஆள் தொந்தரவைத் தாங்க முடியாது என்பதால்தான்]. வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் பங்கேற்றுள்ள இந்த விழாவில், கருணாநிதி என்ன பேசுவார் என்ற எண்ணத்துடன் வெளியில் காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள். எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். [இந்துக்களை அவதூறு பேசியபோது, ஸ்ரீராமனை தூஷித்த போதும், அந்த பண்பாடு இல்லாமல் போனது ஏனோ?]

கருணாநிதி-நாட்டியம்-2010

கருணாநிதி-நாட்டியம்-2010

[திருப்பதி லட்டு கொடுத்தால்கூட சுவைத்து சாப்பிடும் ஆட்கள் உள்ளனர்]: விழாவிற்கு நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். ஆன்மிக பிரசாரகர்கள் வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் ஆகியோர் வைணவத் தமிழ் கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதை, முதல்வர் கருணாநிதி உட்பட அனைவரும் ரசித்து கேட்டனர். நாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் குழுவினர், இந்நாடகத்தை தொகுத்து, இசையமைத்து, நாட்டியம் ஆடினர். விழாவில், ஆழ்வார்கள் ஆய்வு மையத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தனர்.

கொஞ்சும்-குஷ்புவும்-தவிக்கும்-கருணாநிதியும்

கொஞ்சும்-குஷ்புவும்-தவிக்கும்-கருணாநிதியும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் இருக்கும் பண்பாடு ஏன் இப்பொழுதைய மனிதர்களை இப்படி வைத்திருக்கிறது? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் வாழ்ந்த எட்டு வரலாற்று சிறப்பு பெற்றவர்களை மையமாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கதைக்கு முதன்மை ஆதாரங்களாக, நற்கண்ணை, காவற்பெண்டு எனும் இரு பெண்பாற் புலவர்களின் பாடல்களும், சாத்தந்தை எனும் முதுபெரும் புலவரின் பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் அமைகின்றன. இந்த சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் இயற்றப்பட்டுள்ளது. இந்நாட்டிய நாடகம், ஏற்கனவே கோவை செம்மொழி மாநாட்டில் நடத்தப்பட்டது.