Posts Tagged ‘திராவிட கற்பு’

திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

செப்ரெம்பர் 6, 2010

திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

தாலி-மாலை எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைக்கும் கருணாநிதி: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்த திருமணத்தை முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி மணமக்களுக்கு மாலையையும், மங்கல நாணையம் எடுத்துக்கொடுத்து[1] நடத்தி வைத்தார்[2]. இப்படி செய்திகள் வந்துள்ளன. திராவிடத் திருமணத்தில், எங்கு தாலி வந்தது[3] என்று எந்த பகுத்தறிவு ஜீவியும் கேட்கவில்லை[4]. அந்த அடிமைச்சின்னத்தை ஏன், இந்த புரோகிதர் எடுத்துத் தரவேண்டும்? சரி, ஏன் ஒரு ஆண் எடுத்துத் தரவேண்டும், ஒரு பெண் எடுத்துத் தரலாமே? பகுத்தறிவு பதில் சொல்வதில்லை போலும்!

திருமண விழாக்களில் விளக்க உரை தேவையானால், அது எப்போது என்பது எனக்கும், வீரமணிக்கும் நன்றாகத் தெரியும்[5]: “திருமண விழாவில் அனைவரிடத்திலும் உள்ள உரிமை காரணமாக கவிஞர் வைரமுத்து நன்றி உரை என்ற பெயரில் மணமக்களுக்கான வாழ்த்துரையுடன், விளக்க உரையும் இங்கு ஆற்றியுள்ளார். ………. இதுபோன்ற திருமண விழாக்களில் விளக்க உரை தேவை. ஆனால், அது எப்போது என்பது எனக்கும், திராவிட கட்சித் தலைவர் வீரமணிக்கும் நன்றாகத் தெரியும். எனவே, தேவைப்படும்போது மட்டுமே நீண்ட நேரம் பேச வேண்டும்”, என்றார் முதல்வர் கருணாநிதி. ஆக, திராவிட திருமணத்தில் இவர்கள் இருவரும்தான் விற்ப்பன்னர்கள் என்று சொல்லிக்கொள்கிறர் போலும்!

திராவிடத்தில் இப்படி பலதார மணம் புரிந்த ஆண்கள்-பெண்கள் மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று வரலாமா? அதற்கு ஏதாவது யோக்கியதை, அந்தஸ்து முதலியவை இருக்கின்றனவா?

புரோகிதரின் மகன் இன்னொரு புரோகிதர் மு.. ஸ்டாலின் சாட்சி சொல்கிறார்: தமிழகத்தில் 1960-ம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. ஆனால், 1967ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அப்போதைய முதல்வர் அண்ணா பெற்றுத் தந்தார். அந்த வகையில் இப்போது நடைபெற்றிருக்கும் கபிலன் – ரம்யா தம்பதியினரின் சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும். தமிழகத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதுபோல், நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை தமிழக முதல்வர் கருணாநிதி பெற்றுத் தருவார்.

ஸ்டாலின் போட்டு உடைத்த உண்மை: “………..அண்ணா பெற்றுத் தந்தார். …………….நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை கருணாநிதி பெற்றுத் தருவார்”, என்று ஸ்டாலின் சொல்லும் போது, மற்ற உண்மைகளையும் சொல்லவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[6]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[7] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர்..

மாப்பிள்ளை, மணப்பெண் எதற்காக இப்படி பட்டு வேஷ்டி, சட்டை, புடவை-ஜாக்கெட் என்று வரவேண்டும்? இப்பொழுது, மணத்தில் இத்தகைய முடநாற்றம்[8]! இதெல்லாம், தமிழனின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியமா? பிறகு எதற்கு இதே தமிழன் நடத்திவைக்கும் கல்யாணங்களில் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு வருகிறர்கள்? பட்டுப்புடவை, பூ, நகைகள் சகிதம் வருகிறார்கள்? இதென்ன பார்ப்பான்கள் கலாச்சாரமா, இல்லை சூத்திரன்கள் கலாச்சாரமா? தட்டுகளில், தாம்பாளங்களில் தேங்காய், பழம், பூ, குங்குமம், மஞ்சள்………..இவையெல்லாம் எதற்கு? ஒரு நண்பர், எனக்கு இப்படி கேட்டுள்ளார்[9]:

சங்க காலத்தில், பெண்கள் தழையுடைத்தான் அணிந்து கொண்டார்களாம். ரவிக்கையெல்லாம் போட்டார்களா என்று தெரியவில்லை. 

ஆகவே அத்தகைய முறையையும் கையாலலாம்.

சங்க இலக்கியத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற எண்ணம் இருந்ததே இல்லை. தலைவன் எப்பொழுதும், மற்ற பெண்டிருடன் காமத்தில் ஈடுபட்டிருப்பான். தலைவி அவன் வருவானா என்று ஏங்கிக் கொண்டிருப்பான்.

இல்லை பரத்தையருடன் இருப்பான். ஆக, தமிழரிடத்தில் காமம்தான் மேலோங்கி இருந்தது போலும்.

ஊடல், கூடல் என்ற நிலையில் அகம் மேலோங்கி நின்ற நிலையில், பிறகுதான் புறம் வருகின்றது.

அந்நிலையில் எங்கு இருந்தது சுயமரியாதை?

கருணாநிதி விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து, ஆசிவாதம் செய்து,……………மணமக்கள் காலில் வீழ்ந்து…………………………..இப்படி திராவிட புரோகிதம் வளர்கிறது[10].

  • இந்து கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றை தூஷிக்கும் இந்த மானங்கெட்ட கூட்டம், எதற்கு அதே சின்னங்களை, சடங்குகளை பின்பற்றி போலி வேடம் போட வேண்டும்?
  • என்ன நெற்றியில் காயம் பட்டிருக்கா என்று நக்கலாக கேட்ட கருணாநிதியின் காலில் ஏன் குங்குமம் இட்டுக் கொண்டு ஒரு தமிழச்சி விழவேண்டும்?
  • தாலியைக் கழற்றி, மணமுறிவு விழா நடத்தும் அயோக்கியர்கள் முன்னிலையில் ஏன் தாலிகாட்டிக் கொள்ளவேண்டும்?
  • எதற்கு அந்த பாட்டுப்புடவை, தேங்காய் …………………………………எல்லாம்?
  • தூஷிக்கும் அந்த ஆள் ஆசிர்வதிக்கமுடியுமா?
  • ஒரே மனத்தில் எப்படி அத்தகைய நல்ல-கெட்ட-சிந்தனைகள் காழ்ப்புகள் வரும்?
  • நாத்திகர்களுக்கு எதற்கு ஆத்திக சடங்குகள், சம்பிரதாயங்கள்?

[1] http://www.maalaisudar.com/newsindex.php?id=35276%20&%20section=19

 

[2] http://thatstamil.oneindia.in/movies/news/2010/09/5-kapilan-vairamuthu-marriage-karunanidhi-rajini.html

[3] வேதபிரகாஷ், தமிழர் கல்யாணம்: தாலி இருந்ததா?, http://dravidianatheism.wordpress.com/2010/02/27/தமிழர்-கல்யாணம்-தாலி-இரு/

[4] வேதபிரகாஷ், திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!,

http://dravidianatheism2.wordpress.com/2010/02/02/திராவிட-புரோகிதர்கள்-நடத/

[5] தினமலர், வைரமுத்து வெளிப்படையானவர் : முதல்வர் பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2 010 ; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 06, 2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=78433

[6] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[7] வேதபிரகாஷ், பகுத்தறிவு-தீவிரவாதம் திராவிட புரோகிதர்களின் ஆண்-பெண் இணைப்புகள்!,

https://rationalisterrorism.wordpress.com/2010/01/29/பகுத்தறிவு-தீவிரவாதம்/

[8] மன்னிக்கவும், இதெல்லாம் திருவாளர் வீரமணியின் விடுதலையில், உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகள்! ஆகவே, உபயம் – வீரமணி

[9] வேதபிரகாஷ், சுயமரியாதை திருமணத்தில் கருப்பு ஆடைகளை ஏன் அணியக்கூடாது: திராவிட புரோகிதர்கள் விளக்குவார்களா?, http://dravidianatheism.wordpress.com/2010/07/17/சுயமரியாதை-திருமணத்தில்/

[10] வேதபிரகாஷ், நவீன திராவிட புரோகிதர்கள், http://dravidianatheism.wordpress.com/2010/05/24/திராவிட-புரோகிதர்கள /

உச்சத்திற்கு ஏறும் கருணாநிதியின் பித்தம்!

ஏப்ரல் 17, 2010

உச்சத்திற்கு ஏறும் கருணாநிதியின் பித்தம்!

1960களிலிருந்து, திராவிடத் தலைவர்கள், அவர்களின் பேச்சு, எழுத்து முதலியவற்றைக் கவனித்து வருவதில் நானும் ஒருவன்.

பெரியார், அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், மனோகரன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா………………போன்றவர்கள், மற்றும் வீரமணி, அசோகன் (நடிகர்), வெடிகுண்டு / தீப்பொரி ஆறுமுகம், ………..முதலியோரின் மேடைப்பேச்சு, மற்ற பேச்சாளர்களின் பேச்சு, குறிப்பாக இரவு நேரத்தில் அப்பொழுதெல்லாம் 10 மணிக்கு மேலே மறுநாள் காலை 2-3 மணி வரை நடக்கும் கூட்டங்களில் அவர்கள் பேசுவதைப் பார்த்தால் (நடிப்போடு ஆடிக்கொண்டும், மற்றவர்களைப் போல நடித்துக் காட்டியும்), கேட்டிருந்தால் (ஆபாச, அசிங்கமான) அவர்களைப் பற்றி, இக்கால இளைஞர்கள் தமது கருத்தை அப்படியே மாற்றிக் கொள்ளவேண்டியிருக்கும்.

கருணாநிதிக்கு இந்த வயதில் அத்தகைய பழக்கதோஷம் வந்து விட்டது போலும்.

அதே பாணியில் பேசியிருக்கிறார்.

அந்த பேச்சை மிகவும் உன்னிப்பாகக் கவனிக வேண்டும்.

ஏனெனில், ஜெயலலிதாவைத் திட்டியிருக்கிறார், அவதூறு பேசியிருக்கிறார் என்பதைவிட அதிக-பிரசங்கித்தனமாக, திராவிடக் கொழுப்போடு, பகுத்தறிவு திமிரோடு, பக்தி, பதிபக்தி, பதிர்விதா தர்மம், கற்பு, போன்ற விசயங்களையும் சம்பந்தப் படுத்திப் பேசியுள்ளதை தமிழர்கள், இந்தியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

பதிபக்தி இல்லாதவர் ஜெயலலிதா : முதல்வர் கருணாநிதி கடும் தாக்கு
ஏப்ரல் 17,2010,00:00  IST
Front page news and headlines today

சென்னை :”பதிபக்தி இல்லாதவர் ஜெயலலிதா,” என, முதல்வர் கருணாநிதி கடுமையாக குற்றம் சாட்டி பேசினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மற்றும் ஒன்றியத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., – தே.மு.தி.க., – பா.ஜ., கட்சிகளைச் சேர்ந்த மூவாயிரம் பேர் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று முதல்வர் பேசியதாவது:நீங்கள் எல்லாம் தி.மு.க.,வில் சேர்ந்த போது, என் முன் இருந்த மேஜையின் மீது ஏராளமான கட்சி உறுப்பினர் அட்டைகளை மூட்டையாக கட்டி வந்து கொட்டினர். மூட்டையில் அடைபட்டிருந்த உறுப்பினர் அட்டைகள் வெளியில் விழுந்தன. அதில் அடைபட்டிருந்தது உறுப்பினர் அட்டைகள் இல்லை. நீங்களே அதில் அடைபட்டு கிடந்ததாகத்தான் எனக்கு தெரிந்தது.நம்மை இங்கே இணைத்திருப்பது அன்பு. நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பு. நான் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பு. இப்போதாவது உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு தெரிந்து, தெளிந்து தி.மு.க.,வில் இணைந்திருக்கிறீர்களே அதுவே மகிழ்ச்சி.


‘எம்.ஜி.ஆரை மதிக்கத் தெரியாதவர் ஜெயலலிதா. அதனால், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைகிறேன்’ என, அன்பு பேசினார். ஜெயலலிதா இப்போது தான் என்று இல்லை. எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றியிருந்த போதே, அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்த பதவியில் அமர்த்தும்படி கடிதம் எழுதியவர் தான் ஜெயலலிதா.இங்கு ஏராளமான பெண்கள் உள்ளனர். உங்கள் சகோதரருக்கு, தந்தைக்கு, ஏன் கணவருக்கு உடல் நலம் குன்றினால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் காளியம்மன், மாரியம்மன் போன்ற தெய்வங்களிடம் வேண்டுவர். இது தான் கிராமங்களில் உள்ள நடைமுறை. நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் செய்யும் நடைமுறை.


ஆனால், ஜெயலலிதா, தான் கணவராக வரிந்து கொண்ட, தான் தலைவராக வருவதற்கு காரணமாக இருந்த, சர்வாதிகாரத்துடன் கட்சியை நடத்த காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி இருந்த போது அவருக்காக பிரார்த்தனை செய்யாமல் அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்தப் பதவியில் அமர்த்தும் படி சொல்லும் அளவிற்கு பதிபக்தி இல்லாமல் இருந்தவர். அன்பு போன்ற எம்.ஜி.ஆர்., மீது விசுவாசம் கொண்டவர்களுக்கு இப்போதாவது விழிப்புணர்வு வந்ததே என்ற வரையில் மகிழ்ச்சி. இது வரை அண்ணா அறிவாலயத்தைப் பார்த்துக் கொண்டுதான் சென்றிருப்பீர்கள். இனி அதன் உள் வந்து அமரலாம். உங்கள் அனைவரையும் உள் அன்புடன் வரவேற்கிறேன்.” இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.