Archive for the ‘ஐயர்’ Category

லெனின் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை திறப்பு, பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு, அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு! (2)

மார்ச் 7, 2018

லெனின் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை திறப்பு, பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு, அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு! (2)

H raja comments and removal

பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு: இருப்பினும் ராஜா பெயரில் அத்தகைய அறிவிப்பு வெளிவந்ததும், தேசிய அரசிலை கவனித்து வரும் திராவிடக் கட்சிகள் அதிர்ந்து விட்டன. நீர்த்து விட்ட கம்யூனிஸத்தை ஆதரிக்கவும் அவர்களுக்கு மனமில்லை. ஏனெனில், கூட்டணி பேரத்தில் நஷ்டம் வரும். ஆகவே, நக்கீரன் கோபால் அப்பணியை செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது. பெரியார் சிலையை உடைப்போம் என தெரிவித்த எச்.ராஜாவை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை என்பது நாடறிந்தது என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்[1]. நக்கீரன், ஒரு முஸ்லிம் மூலமாக, கம்யூனிஸத்தை ஆதரிப்பது போல ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளது செயற்கையாக உள்ளது[2]. எந்த துலுக்கனும், கம்யூனிஸத்தை ஆதடிக்க மாட்டான் என்பதையும், சிலை வைப்பு, திறப்பு முதலியவற்றை அடியோடு எதிர்ப்பான் என்பதும் தெரிந்த விசயம் தான். இருப்பினும், கோபால் செய்வது, திமுகவின் ஆதரவு இருப்பது வெளிப்படுகிறது. அதாவது, திராவிட கட்சிகள், தலைவர்கள், சித்தாந்திகள் சஞ்சலத்தில் உள்ளனர் என்று தெரிகிறது.

Stalin, DK, Vaiko against Raja

திராவிட கட்சி தலைவர்களின் வீராப்பு: திக, திமுக தலைவர்கள் ஆக்ரோஷமாக அறிக்கை விட்டதாக, ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆட்சிக்கு வரும்வரை காத்திருக்காமல் தைரியம் இருந்தால் பெரியார் சிலையை உடைத்துப் பாருங்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் கருத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[3]. “ஆட்சிக்கு வரும்வரை காத்திருக்காமல்………………….” என்றது, ஆட்சிக்கு வந்துவிடும் என்று ஒப்புக் கொண்டால் போலிருக்கிறது! எச். ராஜா மீது வழக்கு பதிய வேண்டும் என்று சுப. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்[4]. எச். ராஜாவின் பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியதாவது: “திரிபுராவில் ஆட்சிக்கு வந்த உடனேயே காளித்தனங்களை செய்கிறார்கள், தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இப்படி பேசக்கூடிய துணிச்சல் வந்திருக்கிறது என்றால் அதை அவர்கள் உடைக்கட்டும், அதனை வரவேற்கிறோம்”. பிறகு, அஞ்சுவது, மிரட்டுவது என்றேல்லாம் ஏன் என்று தெரியவில்லையே?

Vaiko balances verbal violence

அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு!: ஈரோட்டில் ம.தி.மு.க-வின் 26 வது மாநிலப் பொதுக்குழுவில் இருந்த வைகோவுக்கு இந்தத் தகவல் கிடைக்க மிகவும் ஆக்ரோஷமானார். நிர்வாகி ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருக்க, அவரை இடைமறித்து மைக்பிடித்த வைகோ[5], “பெரியார் சிலையை உடைப்பேன்னு ஒருவர் சொல்லியிருக்கார். அவருக்கு நான் சவால் விடுக்கிறேன். தமிழ்நாட்டுல எந்தப் பகுதியில வேணும்னாலும் வச்சிக்கலாம். தைரியம் இருந்தால் சிலை உடைக்க நாள் குறிச்சிட்டு வாங்க. அப்படி வர்றவங்களோட கை, கால் துண்டாக்கப்படும். இந்தக் கை அரிவாள் பிடித்த கை. மோடியின் முப்படையும் வந்தாலும் அதை சந்திக்க நான் தயார்,” என ஆக்ரோஷமாகப் பேசிவிட்டு அமர்ந்தார்[6]. “ஹெச். ராஜா மட்டுமல்ல, அவருடைய பாட்டன் வந்தாலும் பெரியாரின் சிலையை ஒன்றும் செய்ய முடியாது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருக்கிறார். பெரியார் குறித்த ஹெச். ராஜாவின் கருத்து, அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் பா.ஜ.கவின் கருத்து அல்ல என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, “ஹெச்.ராஜா தனது புத்தியை இழந்துவிட்டார்” என தெரிவித்துள்ளார். “எச்சை” என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது. என்ன ஒரு பெண்மணி இப்படி பேசலாமா என்று கேட்டால், டுவிட்டரில் அவரது பதிவுகள், இதை விட மோசமக இருக்கின்றன.

Raja disturbed the DK cadre

சிலை கலாச்சாரம் திராவிடத்திற்கு அடிப்படையானது: நாத்திக கொள்கைகளை பின்பற்றி வரும் திராவிட சித்தாந்திகள் இந்துமதத்தை எதிர்த்து வருவதால், கடவுளர்களின் உருவங்கள், சித்திரங்கள் முதலியவற்றை எதிர்த்து வந்தனர். தாவது உருவச்சிலையை எதிர்ப்பது உடைப்பது என்பது, மூடநம்பிக்கையை எதிர்ப்பது என்ற விதத்தில் செய்து வந்தனர். சிலைகளை எதிர்த்துக் கொண்டே, சிலைகளை ராமசாமி நாயக்கர், விநாயகர் சிலை உடைத்து, வழக்குகளில் சிக்கியுள்ளார். உச்சநீதி மன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். அதே நேரத்தில், திராவிட கழகங்களுக்கு ஒன்றும் சிலை வைப்பது, உடைப்பது புதியதல்ல என்ற நிலையும் உருவாயிற்று. 1968ல் உலக தமிழ்நாடு பெயரில், மெரினா கடற்கரையில் சிலைகளை திமுக வைத்தது. அதே காலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தினர். சிலைகளுக்குப் பிறகு, திமுக சமாதியும் கட்ட ஆரம்பித்தது. இவ்விரு திராவிட சம்பிரதாயங்கள் இன்று வரை தொடந்து வருகின்றது. கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொண்டார். ஆனால், 1987ல் எம்ஜிஆர் இறந்த போது, அது உடைத்தெரியப் பட்டது! ஆனால், எம்ஜிஆர் இறந்த பிறகு, அவருக்கும் சிலைகள் வைக்கப்பட்டன.

Why Dravida ideologists oppose and support statues

சிலைகள் அதிகமானது, விழாக்களும் அதிகமானது: அம்பேத்கரைப் பற்றி முதலில் திராவிட சித்தாந்திகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஜாதிய அரசியலை நிலைப் படுத்த, அம்பேத்கர் சிலைகளை வைத்து அவற்றை சின்னமாக்கியது திராவிட-அம்பேத்கர் போலி சித்தாந்திகள் தாம். அம்பேத்கர் என்ன தமிழரா, அவர் சிலை ஏன் தமிழகத்தில் வைக்க வேண்டும் போன்ற கேள்விகள் ஆரம்பத்தில் எழுப்பப் பட்டாலும், ஓட்டு வங்கி அரசியலில், அவையெல்லாம் நீர்க்கப் பட்டன, சமரசம் செய்து கொள்ளப்பட்டன.  முத்துராமலிங்கத் தேவர் சிலை வைத்தது, சிலைப்பு-போட்டியை அதிகமாக்கியது. அது முதல், இருவருக்கும் மாற்றி-மாறி மாலை போட்டு, கும்பிடுவது என்பது திராவிர அரசியல் கலாச்சாரத்திற்கு ஆண்டிற்கு ஒருமுறை கட்டாயமாக்கப் பட்டது. இந்த சடங்கில் பெரியார் சிலையும் சேர்ந்தது. கண்ணகி சிலை வைத்தும் அரசியல் செய்தது கருணாநிதி தான்! திராவிட ஆட்சியில் தான் கோடிக்கணக்கான மதிப்புள்ள சிலைகளும் கோவில்களிலிருந்து கடத்தப் பட்டன. அந்நிலையில், இப்பொழுது, பெரியார் சிலை விவகாரத்தை பெரிது படுத்துவது வியப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

07-03-2018

vck-Thevar statue-attacked

[1] நக்கீரன், பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை என்பது நாடறிந்ததுதமிமுன் அன்சாரி கடும் தாக்கு, வே.ராஜவேல், Published on 06/03/2018 (13:59) | Edited on 06/03/2018 (14:00).

[2] http://www.nakkheeran.in/special-articles/special-article/bjp-has-no-courage-thamimun-ansari

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தில் இருந்தால் பெரியார் சிலையை உடைத்துப் பாருங்கள்வீரமணி, சுப.வீ சவால்!, Posted By: Gajalakshmi Published: Tuesday, March 6, 2018, 12:48 [IST]

[4] https://tamil.oneindia.com/news/tamilnadu/veeramani-suba-veerapandiyan-condemns-h-raja-s-post-periyar-313439.html

[5] விகடன், நாள் குறிச்சிட்டு வாங்க ஹெச்.ராஜா’’ – பகிரங்கமாக எச்சரித்த வைகோ!, Posted Date : 15:37 (06/03/2018); Last updated : 17:35 (06/03/2018)

[6] https://www.vikatan.com/news/tamilnadu/118401-vaiko-warns-hraja.html

திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

செப்ரெம்பர் 6, 2010

திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

தாலி-மாலை எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைக்கும் கருணாநிதி: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்த திருமணத்தை முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி மணமக்களுக்கு மாலையையும், மங்கல நாணையம் எடுத்துக்கொடுத்து[1] நடத்தி வைத்தார்[2]. இப்படி செய்திகள் வந்துள்ளன. திராவிடத் திருமணத்தில், எங்கு தாலி வந்தது[3] என்று எந்த பகுத்தறிவு ஜீவியும் கேட்கவில்லை[4]. அந்த அடிமைச்சின்னத்தை ஏன், இந்த புரோகிதர் எடுத்துத் தரவேண்டும்? சரி, ஏன் ஒரு ஆண் எடுத்துத் தரவேண்டும், ஒரு பெண் எடுத்துத் தரலாமே? பகுத்தறிவு பதில் சொல்வதில்லை போலும்!

திருமண விழாக்களில் விளக்க உரை தேவையானால், அது எப்போது என்பது எனக்கும், வீரமணிக்கும் நன்றாகத் தெரியும்[5]: “திருமண விழாவில் அனைவரிடத்திலும் உள்ள உரிமை காரணமாக கவிஞர் வைரமுத்து நன்றி உரை என்ற பெயரில் மணமக்களுக்கான வாழ்த்துரையுடன், விளக்க உரையும் இங்கு ஆற்றியுள்ளார். ………. இதுபோன்ற திருமண விழாக்களில் விளக்க உரை தேவை. ஆனால், அது எப்போது என்பது எனக்கும், திராவிட கட்சித் தலைவர் வீரமணிக்கும் நன்றாகத் தெரியும். எனவே, தேவைப்படும்போது மட்டுமே நீண்ட நேரம் பேச வேண்டும்”, என்றார் முதல்வர் கருணாநிதி. ஆக, திராவிட திருமணத்தில் இவர்கள் இருவரும்தான் விற்ப்பன்னர்கள் என்று சொல்லிக்கொள்கிறர் போலும்!

திராவிடத்தில் இப்படி பலதார மணம் புரிந்த ஆண்கள்-பெண்கள் மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று வரலாமா? அதற்கு ஏதாவது யோக்கியதை, அந்தஸ்து முதலியவை இருக்கின்றனவா?

புரோகிதரின் மகன் இன்னொரு புரோகிதர் மு.. ஸ்டாலின் சாட்சி சொல்கிறார்: தமிழகத்தில் 1960-ம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. ஆனால், 1967ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அப்போதைய முதல்வர் அண்ணா பெற்றுத் தந்தார். அந்த வகையில் இப்போது நடைபெற்றிருக்கும் கபிலன் – ரம்யா தம்பதியினரின் சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும். தமிழகத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதுபோல், நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை தமிழக முதல்வர் கருணாநிதி பெற்றுத் தருவார்.

ஸ்டாலின் போட்டு உடைத்த உண்மை: “………..அண்ணா பெற்றுத் தந்தார். …………….நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை கருணாநிதி பெற்றுத் தருவார்”, என்று ஸ்டாலின் சொல்லும் போது, மற்ற உண்மைகளையும் சொல்லவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[6]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[7] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர்..

மாப்பிள்ளை, மணப்பெண் எதற்காக இப்படி பட்டு வேஷ்டி, சட்டை, புடவை-ஜாக்கெட் என்று வரவேண்டும்? இப்பொழுது, மணத்தில் இத்தகைய முடநாற்றம்[8]! இதெல்லாம், தமிழனின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியமா? பிறகு எதற்கு இதே தமிழன் நடத்திவைக்கும் கல்யாணங்களில் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு வருகிறர்கள்? பட்டுப்புடவை, பூ, நகைகள் சகிதம் வருகிறார்கள்? இதென்ன பார்ப்பான்கள் கலாச்சாரமா, இல்லை சூத்திரன்கள் கலாச்சாரமா? தட்டுகளில், தாம்பாளங்களில் தேங்காய், பழம், பூ, குங்குமம், மஞ்சள்………..இவையெல்லாம் எதற்கு? ஒரு நண்பர், எனக்கு இப்படி கேட்டுள்ளார்[9]:

சங்க காலத்தில், பெண்கள் தழையுடைத்தான் அணிந்து கொண்டார்களாம். ரவிக்கையெல்லாம் போட்டார்களா என்று தெரியவில்லை. 

ஆகவே அத்தகைய முறையையும் கையாலலாம்.

சங்க இலக்கியத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற எண்ணம் இருந்ததே இல்லை. தலைவன் எப்பொழுதும், மற்ற பெண்டிருடன் காமத்தில் ஈடுபட்டிருப்பான். தலைவி அவன் வருவானா என்று ஏங்கிக் கொண்டிருப்பான்.

இல்லை பரத்தையருடன் இருப்பான். ஆக, தமிழரிடத்தில் காமம்தான் மேலோங்கி இருந்தது போலும்.

ஊடல், கூடல் என்ற நிலையில் அகம் மேலோங்கி நின்ற நிலையில், பிறகுதான் புறம் வருகின்றது.

அந்நிலையில் எங்கு இருந்தது சுயமரியாதை?

கருணாநிதி விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து, ஆசிவாதம் செய்து,……………மணமக்கள் காலில் வீழ்ந்து…………………………..இப்படி திராவிட புரோகிதம் வளர்கிறது[10].

  • இந்து கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றை தூஷிக்கும் இந்த மானங்கெட்ட கூட்டம், எதற்கு அதே சின்னங்களை, சடங்குகளை பின்பற்றி போலி வேடம் போட வேண்டும்?
  • என்ன நெற்றியில் காயம் பட்டிருக்கா என்று நக்கலாக கேட்ட கருணாநிதியின் காலில் ஏன் குங்குமம் இட்டுக் கொண்டு ஒரு தமிழச்சி விழவேண்டும்?
  • தாலியைக் கழற்றி, மணமுறிவு விழா நடத்தும் அயோக்கியர்கள் முன்னிலையில் ஏன் தாலிகாட்டிக் கொள்ளவேண்டும்?
  • எதற்கு அந்த பாட்டுப்புடவை, தேங்காய் …………………………………எல்லாம்?
  • தூஷிக்கும் அந்த ஆள் ஆசிர்வதிக்கமுடியுமா?
  • ஒரே மனத்தில் எப்படி அத்தகைய நல்ல-கெட்ட-சிந்தனைகள் காழ்ப்புகள் வரும்?
  • நாத்திகர்களுக்கு எதற்கு ஆத்திக சடங்குகள், சம்பிரதாயங்கள்?

[1] http://www.maalaisudar.com/newsindex.php?id=35276%20&%20section=19

 

[2] http://thatstamil.oneindia.in/movies/news/2010/09/5-kapilan-vairamuthu-marriage-karunanidhi-rajini.html

[3] வேதபிரகாஷ், தமிழர் கல்யாணம்: தாலி இருந்ததா?, http://dravidianatheism.wordpress.com/2010/02/27/தமிழர்-கல்யாணம்-தாலி-இரு/

[4] வேதபிரகாஷ், திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!,

http://dravidianatheism2.wordpress.com/2010/02/02/திராவிட-புரோகிதர்கள்-நடத/

[5] தினமலர், வைரமுத்து வெளிப்படையானவர் : முதல்வர் பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2 010 ; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 06, 2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=78433

[6] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[7] வேதபிரகாஷ், பகுத்தறிவு-தீவிரவாதம் திராவிட புரோகிதர்களின் ஆண்-பெண் இணைப்புகள்!,

https://rationalisterrorism.wordpress.com/2010/01/29/பகுத்தறிவு-தீவிரவாதம்/

[8] மன்னிக்கவும், இதெல்லாம் திருவாளர் வீரமணியின் விடுதலையில், உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகள்! ஆகவே, உபயம் – வீரமணி

[9] வேதபிரகாஷ், சுயமரியாதை திருமணத்தில் கருப்பு ஆடைகளை ஏன் அணியக்கூடாது: திராவிட புரோகிதர்கள் விளக்குவார்களா?, http://dravidianatheism.wordpress.com/2010/07/17/சுயமரியாதை-திருமணத்தில்/

[10] வேதபிரகாஷ், நவீன திராவிட புரோகிதர்கள், http://dravidianatheism.wordpress.com/2010/05/24/திராவிட-புரோகிதர்கள /