Archive for the ‘நாத்திக செக்ஸ்’ Category

பூஜாரி வேலைக்கு பெரியார் சிலைக்கு மாலை போடுவது மாதிரி, நிர்வாண பூஜை செய்தால் “டீன்” பதவி கிடைக்குமா?

பிப்ரவரி 13, 2016

 

பூஜாரி வேலைக்கு பெரியார் சிலைக்கு மாலை போடுவது மாதிரி, நிர்வாண பூஜை செய்தால் “டீன்” பதவி கிடைக்குமா?

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை

நிர்வாண பூஜைக்கு மறுத்த மனைவியை அடித்த மருத்துவ கணவர்: இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தன்னை அடித்து உதைத்ததால் காயம் அடைந்ததாக கூறி கார்த்திகா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது[1].  தன் கணவர் நிர்வாண பூஜையில் ஈடுபட்டதை, கார்த்திகா மொபைலில் படம் எடுத்து வெளியிட்டார். அதாவது, கணவரது நடவடிக்கையை அர்த்த ராத்திரியிலும் விழித்துக் கொண்டு நன்றாகவே கவனித்துள்ளார் என்று தெரிகிறது. நிர்வாண பூஜை குறித்து கார்த்திகா கூறுகையில், ”என் கணவர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரியில், பிசியாலஜி துறை தலைவராக பணியாற்றி வருகிறார். ‘டீன்’ பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அடிக்கடி இப்படி நிர்வாண பூஜையில் ஈடுபடுகிறார்[2]. இது மூட நம்பிக்கை என்று எனது கணவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை[3]. பூஜை நடத்துவதில் அவர் குறியாக உள்ளார். இந்த பூஜையை தட்டிக் கேட்ட என்னை அவர் தாக்கி விட்டார்,” என்றார்[4]. டாக்டரின் நிர்வாண படம் ஓமலுார், தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[5]. நிர்வாண பூஜை குறித்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் செல்வராஜிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”நான் வக்கீலை சந்திக்க சென்று கொண்டிருக்கிறேன். பின் பேசுகிறேன்,” எனக்கூறி, தொடர்பை துண்டித்தார்[6].

பெரியார் சிலைக்கு மாலை போட்ட ரங்கநாதன்நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரிடீன்ஆக முடியுமா?: மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக, தமிழகத்தில் என்ன வேண்டும் என்ற சந்தேகம் வந்துள்ளது போலும். பல்கலைக் கழக வேந்தர் ஆக வேண்டுமானால், கோடி அல்லது லட்சங்கள் வேண்டும் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துகுள்ளன. தமிழகத்தில் “டாக்டர்” ஆவது சுலபமான செயலாக உள்ளது, ஆனால், “டீனாக” வேண்டும் என்றால், பற்பல வழிகளைப் பின்பற்ற வேண்டும் போலிருக்கிறது. பூஜாரியாக வேண்டும் என்று பெரியார் சிலைக்கு மாலைப் போட்டும் காலக் கட்டமாக உள்ளது. சாத்திரம் படித்தவர்களே பட்டை-கொட்டைகளுடன் அவ்வாறு மாலை போட்டுள்ளன. நானும் நான்கே மாதத்தில் எல்லாம் கரைத்துக் குடித்து விட்டேன், எனக்கும் வேலை கொடு என்று இப்பொழுதெல்லாம் கிளம்பி விடுகிறார்கள். “டாக்டர்” பட்டம் வாங்குவதும் அவ்வாறே உள்ளது[7]. போலி டாக்டர்களை கைது செய்யும் படலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்நிலையில் உண்மையான டாக்டர், நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக முடியும் என்ற எண்ணத்தை எப்படி கொண்டார் என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, மனையுடன் சேர்ந்து நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று டாக்டருக்கு “பிரிஷ்கிரிப்ஸன்” யார் கொடுத்தது என்று தெரியவில்லை. ஒருவேளை, பெரியார் சிலைக்கு மாலை போட்டால் வேலை கிடைக்கும் என்று நம்பிய அக்கூட்டத்தவர், யாராவது இவருக்கு சொல்லியிருப்பார்களா?

ramasamiyum-karunanidhisamiyum

ramasamiyum-karunanidhisamiyum

தமிழகத்தில் படித்தவர்கள் இவ்வாறு முரண்பாடாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பதனை அறியவேண்டும்: கடந்த 60-100 ஆண்டுகளாக திராவிடத்துவம் போர்வையில், இந்துமதத்தினரின் நம்பிக்கைகள்-சடங்குகள்-கிரியைகள் முதலியவை கேலிப்படுத்தப்பட்டு, அவதூறாக பேசப்பட்டு, தூஷிக்கப்பட்டுள்ளன. “பார்ப்பன எதிர்ப்பு” என்ற ரீதியில் இந்துமத எதிர்ப்பை செய்து வந்தனர். ஆனால், அச்சித்தாந்திகள் சொல்லியதைப் போல, எந்த சமூக மேன்பாடும் தமிழகத்தில் ஏற்பட்டு விடவில்லை, மாறாக, சமூக சீரழிவுகள் தாம் அதிகமாக நடந்துள்ளன, நடந்து வருகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, தமிழகம் தாழ்ந்து வருவதை அறிவது மட்டுமல்லாது, அதற்கு காரணமே இவர்கள் தாம் என்றும் தெரிந்து கொண்டு வருகிறார்கள். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வடநாட்டில் இந்தி தெரிந்தவர்களுக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை” என்று விதண்டாவாதம் பேசினர், ஆனால், இன்றோ தமிழகத்தில் இந்தி பேசுபவர்கள் வந்து கடின உழைப்பு செய்ய வந்து விட்டனர். நாத்திகம், பகுத்தறிவு பேசியவர்கள் சோம்பேறிகளாகி விட்டனர். கற்பனை-விரோதிகளை உருவாக்கி, அவர்கள் மற்றும் மற்றவர்கள் மீது பழிபோட்டு, பொய்களை சொல்லி வந்ததும் தெரிந்து விட்டது.

கலைமகளை தூஷித்த பெரியார்1960 முதல் 2016 வரை ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்கள் திராவிடத்துவநாத்திகத்தை நீர்த்துவிட்டன: மேலும், இயற்கை சீற்றங்கள், அழிவுகள் முதலியனவும் அதிகமாகியுள்ளன. இவை படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரன் என்று எல்லோரையும் பாதித்துள்ளன. உயிர், பொருள் என்று எல்லாவற்றையும் இழந்துள்ளனர். ஆனால், நடந்து வந்த-வரும் திராவிடத்துவ-நாத்திக-பகுத்தறிவு ஆட்சியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதாவது, “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக்கற்பித்தவன் முட்டாள், மடையன்” என்றெல்லாம் சொல்லியவர்களால், இவற்றையெல்லாம் ஒன்று தடுக்க முடியவில்லை. விஞ்ஞானம் பேசியவர்களாலும் முடியவில்லை. அதற்கும் மேலாக, இவர்கள் தாம் அதற்கு காரணம் என்று தெரிந்து கொண்டனர். அதாவது, புவியின் தன்மையினை பாதித்து, ஊழலில் திளைத்து, மழைநீர்-வடிகால் போக்குவரத்தை செய்ய முடியாமல் தடுத்து, மக்களை வாட்டியதில் உள்ல பங்கை நன்றாகவே புரிந்து கொண்டனர்.

தாலி அவிழ்ப்பு போராட்டம்கோவில், கோவில் இருப்பிடம், சுற்றமைப்பு இவற்றை பாதித்தனால் பாதிப்ப்பு ஏறட்டுள்ளது என்பதனை அறிந்து கொண்டனர்: ஆனால், ஏரி-குளங்கள் மறையாமல் இருந்திருந்தால், இப்பேரிடர்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்று புரிந்து கொண்டு விட்டார்கள். அதாவது, கோவில்கள் இருக்கும்வகையில் குளம், ஏரி முதலியவை சூழ இருந்திருந்தால், தப்பித்துக் கொண்டிருக்கலாம். அப்படியென்றால், கடவுளை மறுத்து, கோவில் சொத்துகளைக் கொள்ளையெடித்து, குளங்களை தூர்த்து, ஏரிகளை வளைத்துப் போட்டு, எல்லாவற்றையும் நாசமாக்கியது யார் என்று பார்த்தால், திராவிடத்துவ அரசியல்வாதிகள் தாம்[8]. கருப்பு-சிவப்பு நிறங்களின் அமைப்பு மாறினாலும், “திராவிட” சொல்லுக்கு முன்னும்-பின்பும் எதை சேர்த்து புது கட்சி வந்தாலும், ஆட்கள் மாறாமல் தான் இருக்கிறார்கள். கடவுள் பயம் மட்டுமல்லாது, எந்த பயமும் இல்லாமல் போய், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னை யாரும் செய்யமுடியாது, என்ற நிலையில் இறங்கி விட்டார்கள்.

தாலி ஆரூஊ - அவிழ்ப்பு கழட்டும் போராட்டம்கோவில் மட்டுமல்ல, சமூகமும் சீரழிந்தது: கோவில் பகிஷ்காரம் ஏன் என்று திகவினர் புத்தகங்களை வெளியிட்டனர். சுயமரியாதை-சீர்திருத்த-பகுத்தறிவு திருமணங்கள் சட்டரீதியில் செல்லாமல் போய், மரியாதை போனபோது, இந்தி திருமண சட்டத்தில் நுழைந்து மரியாதை பெற்றன. தாலியறுப்பு போராட்டங்களினால், பெண்களின் மனங்கள் புண்பட்டன[9]. இதனால், கொலை-கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புகள், அதிகமாகின. திருமணங்கள் முறிந்தன, கணவன்-மனைவியர் பிரிந்தனர், குடும்பங்கள் சிதறுண்டனர்; சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் பரிதவித்தனர்; காப்பர்-கேட்பர்-பேணி காப்போர் என்று யாரும் இல்லாத நிலையில், திசை மாறி குற்றவாளிகளாகவும் மாறினர். ஆனால், இதகைய சீரழிவுகளை திராவிட சித்தாந்தம், நாத்திக-பகுத்தறிவு முதலிய விதண்டாவாதங்கள் ஆதரித்தன. இதனால் தான் முரண்பாடுகள் பெருகி, மக்களின் நம்பிக்கைக்கள் தேட ஆரம்பித்து விட்டன.

தாலி அவிழ்ப்பு போராட்டம்போலி மருத்துவர்கள் போன்று போலி ஜோதிடர்கள் முதலியவற்றை உருவக்கியது திராவிட அரசாட்சி மற்றும் கொள்கைகள் தாம்: மக்கள் அமைதி தேடி அலையும் நேரத்தில் தான், மற்றவர்கள் அமைதியாக இருக்கும் நிலையை கவனிக்க ஆரம்பித்தனர். கடந்த 60 ஆண்டுகளாக நாத்திகக் குடும்பங்கள் சிதறியுள்ள நேரத்தில், ஆத்திகக் குடும்பங்கள் மாறாமல் இருக்கின்றனர் மற்றும் மேலோங்கியும் உள்ளனர் என்பதனை அறிந்து கொண்டனர். இவர்கள் முன்னமே தங்களது தாய், மனைவி, மகள், சகோதரி என்று அவர்களை வைத்து சாமி மும்பிட வைப்பது, படையல் வைப்பது, கோவில்களுக்குச் சென்று பூஜைகள் செய்வது, யாகங்கள் செய்வது என்றெல்லாம் செய்து வந்தனர். இப்பொழுது, கொஞ்சம் வெளிப்படையாக செய்ய ஆரம்பித்தனர். அதாவது, புகைப்படம், டிவி முதலிய சாதனங்கள் மூலம், இவர்களது போலித்தனங்கள் வெளிவந்து கொண்டிருப்பதினால், இனிமேல் மறைப்பதில் பிரயோஜனம் இல்லை என்று கொஞ்சம் வெளியில் வந்து செய்ய ஆரம்பித்து வுட்டனர். “நானும் இந்து தான்” என்று கூறிக் கொள்ளும் அளவுக்கு தைரியம் வந்துள்ளது.

.தாலி அவிழ்ப்பு கழட்டும் போராட்டம்- பெற்ற குழந்தைகள் முன்பாக

முறையற்ற நிர்வாண பூஜைகள்: இப்படி ஜோதிடம், பூஜை, பரிகாரம், படையல் என்று இவர்களும் செய்ய ஆரம்பித்த போது, அவர்கள் ரகசியமாக செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அப்பொழுது, அவர்களது அடியாட்கள் தேடியலைந்து, யாரையாவது பிடித்துக் கொண்டு வந்தன. அந்நிலையில், அரைகுறைகள் நுழைந்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றன, பார்க்கின்றன. இதனால், பூஜை-புனஸ்காரம், கிரிய-சடங்கு போன்றவற்றில் அத்தகைய தெறிகெட்டவர்கள் நுழைந்துள்ளனர். இதனால் தான் மேன்மேலும் குழப்பங்கள் நீடிக்கின்றன. ஒழுங்காக பக்தியை வளர்த்துக் கொண்டு அமைதியாக செய்ய வேண்டியவற்றை, குறுக்கு வழிகளில் சென்று, மந்திரம்-தந்திரம்-யந்திரம் போன்ற வழிகளில் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்து விட்டது. அந்நிலயில் தான் இதைப் போன்ற நிர்வாண பூஜை போன்ற சடங்குகளை சிலர் பரிந்துரைக்க, குறுக்கு வழியில், சீக்கிரம் விரும்பியதைப் பெற்று விடலாம், என்று சபலம் கொண்டவர்கள் மற்றும் பேராசைக் கொண்டவர்கள் அவற்றில் நுழைகின்றனர்.

© வேதபிரகாஷ்

13-02-12016

[1] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=160581

[2] http://www.maalaimalar.com/2016/02/12161725/Why-Dharmapuri-Medical-College.html

[3] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=88036

[4] மாலைமலர், தர்மபுரி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை நடத்துவது ஏன்?: மனைவி பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2016. 4:17 PM IST.

[5] தமிழ்முரசு, முதல்வராக வேண்டும் என்பதற்காக நிர்வாண பூஜை செய்த பேராசிரியர் மனைவியே புகைப்படம் வெளியிட்டதால் பரபரப்பு, பெப்ரவரி 12, 2016.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1455606

[7] தமிழகத்தைப் பொறுத்த வரையில் “டாக்டர்” மோகம் 1970களிலிருந்து அதிகமாக உள்ளது என்பதனை ஞாபகப்படுத்திக் கொள்லவேண்டும். அதிலும் எம்.பி.பி.எஸ் டாக்டர்களை விட, “ஹானரெரி” டாக்டர் பட்டங்கள் தமிழக பல்கலைக்கழகங்கள் வாரி, அரசியல்வாதிகளுக்குக் கொடுத்தன. இல்லை, விலை கொடுத்து வாங்கவும் செய்தனர்.

[8] “Ecological Imbalance” ஐ உருவாக்கி, சென்னையை சீரழித்தவர்கள் இவர்கள் தாம் என்று மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர்.

[9] திராவிடப் புரோகிதர்கள் திருமணங்களை செய்வித்து, தாலிகளையும் அறுக்க ஆரம்பித்தனர், அதாவது “திருமண முறிவு விழா”க்களையும் சந்தோஷமாக நடத்தினர். ஆனால், பெண்கள் வருத்தப்படத்தான் செய்தனர்.

 

நிர்வாண பூஜைக்கு மறுத்த மனைவியை அடித்த மருத்துவ கணவர்: இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தன்னை அடித்து உதைத்ததால் காயம் அடைந்ததாக கூறி கார்த்திகா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது[1].  தன் கணவர் நிர்வாண பூஜையில் ஈடுபட்டதை, கார்த்திகா மொபைலில் படம் எடுத்து வெளியிட்டார். அதாவது, கணவரது நடவடிக்கையை அர்த்த ராத்திரியிலும் விழித்துக் கொண்டு நன்றாகவே கவனித்துள்ளார் என்று தெரிகிறது. நிர்வாண பூஜை குறித்து கார்த்திகா கூறுகையில், ”என் கணவர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரியில், பிசியாலஜி துறை தலைவராக பணியாற்றி வருகிறார். ‘டீன்’ பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அடிக்கடி இப்படி நிர்வாண பூஜையில் ஈடுபடுகிறார்[2]. இது மூட நம்பிக்கை என்று எனது கணவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை[3]. பூஜை நடத்துவதில் அவர் குறியாக உள்ளார். இந்த பூஜையை தட்டிக் கேட்ட என்னை அவர் தாக்கி விட்டார்,” என்றார்[4]. டாக்டரின் நிர்வாண படம் ஓமலுார், தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[5]. நிர்வாண பூஜை குறித்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் செல்வராஜிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”நான் வக்கீலை சந்திக்க சென்று கொண்டிருக்கிறேன். பின் பேசுகிறேன்,” எனக்கூறி, தொடர்பை துண்டித்தார்[6].

நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரிடீன்ஆக முடியுமா?: மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக, தமிழகத்தில் என்ன வேண்டும் என்ற சந்தேகம் வந்துள்ளது போலும். பல்கலைக் கழக வேந்தர் ஆக வேண்டுமானால், கோடி அல்லது லட்சங்கள் வேண்டும் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துகுள்ளன. தமிழகத்தில் “டாக்டர்” ஆவது சுலபமான செயலாக உள்ளது, ஆனால், “டீனாக” வேண்டும் என்றால், பற்பல வழிகளைப் பின்பற்ற வேண்டும் போலிருக்கிறது. பூஜாரியாக வேண்டும் என்று பெரியார் சிலைக்கு மாலைப் போட்டும் காலக் கட்டமாக உள்ளது. சாத்திரம் படித்தவர்களே பட்டை-கொட்டைகளுடன் அவ்வாறு மாலை போட்டுள்ளன. நானும் நான்கே மாதத்தில் எல்லாம் கரைத்துக் குடித்து விட்டேன், எனக்கும் வேலை கொடு என்று இப்பொழுதெல்லாம் கிளம்பி விடுகிறார்கள். “டாக்டர்” பட்டம் வாங்குவதும் அவ்வாறே உள்ளது[7]. போலி டாக்டர்களை கைது செய்யும் படலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்நிலையில் உண்மையான டாக்டர், நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக முடியும் என்ற எண்ணத்தை எப்படி கொண்டார் என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, மனையுடன் சேர்ந்து நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று டாக்டருக்கு “பிரிஷ்கிரிப்ஸன்” யார் கொடுத்தது என்று தெரியவில்லை. ஒருவேளை, பெரியார் சிலைக்கு மாலை போட்டால் வேலை கிடைக்கும் என்று நம்பிய அக்கூட்டத்தவர், யாராவது இவருக்கு சொல்லியிருப்பார்களா?

தமிழகத்தில் படித்தவர்கள் இவ்வாறு முரண்பாடாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பதனை அறியவேண்டும்: கடந்த 60-100 ஆண்டுகளாக திராவிடத்துவம் போர்வையில், இந்துமதத்தினரின் நம்பிக்கைகள்-சடங்குகள்-கிரியைகள் முதலியவை கேலிப்படுத்தப்பட்டு, அவதூறாக பேசப்பட்டு, தூஷிக்கப்பட்டுள்ளன. “பார்ப்பன எதிர்ப்பு” என்ற ரீதியில் இந்துமத எதிர்ப்பை செய்து வந்தனர். ஆனால், அச்சித்தாந்திகள் சொல்லியதைப் போல, எந்த சமூக மேன்பாடும் தமிழகத்தில் ஏற்பட்டு விடவில்லை, மாறாக, சமூக சீரழிவுகள் தாம் அதிகமாக நடந்துள்ளன, நடந்து வருகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, தமிழகம் தாழ்ந்து வருவதை அறிவது மட்டுமல்லாது, அதற்கு காரணமே இவர்கள் தாம் என்றும் தெரிந்து கொண்டு வருகிறார்கள். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வடநாட்டில் இந்தி தெரிந்தவர்களுக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை” என்று விதண்டாவாதம் பேசினர், ஆனால், இன்றோ தமிழகத்தில் இந்தி பேசுபவர்கள் வந்து கடின உழைப்பு செய்ய வந்து விட்டனர். நாத்திகம், பகுத்தறிவு பேசியவர்கள் சோம்பேறிகளாகி விட்டனர். கற்பனை-விரோதிகளை உருவாக்கி, அவர்கள் மற்றும் மற்றவர்கள் மீது பழிபோட்டு, பொய்களை சொல்லி வந்ததும் தெரிந்து விட்டது.

1960 முதல் 2016 வரை ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்கள் திராவிடத்துவநாத்திகத்தை நீர்த்துவிட்டன: மேலும், இயற்கை சீற்றங்கள், அழிவுகள் முதலியனவும் அதிகமாகியுள்ளன. இவை படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரன் என்று எல்லோரையும் பாதித்துள்ளன. உயிர், பொருள் என்று எல்லாவற்றையும் இழந்துள்ளனர். ஆனால், நடந்து வந்த-வரும் திராவிடத்துவ-நாத்திக-பகுத்தறிவு ஆட்சியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதாவது, “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக்கற்பித்தவன் முட்டாள், மடையன்” என்றெல்லாம் சொல்லியவர்களால், இவற்றையெல்லாம் ஒன்று தடுக்க முடியவில்லை. விஞ்ஞானம் பேசியவர்களாலும் முடியவில்லை. அதற்கும் மேலாக, இவர்கள் தாம் அதற்கு காரணம் என்று தெரிந்து கொண்டனர். அதாவது, புவியின் தன்மையினை பாதித்து, ஊழலில் திளைத்து, மழைநீர்-வடிகால் போக்குவரத்தை செய்ய முடியாமல் தடுத்து, மக்களை வாட்டியதில் உள்ல பங்கை நன்றாகவே புரிந்து கொண்டனர்.

கோவில், கோவில் இருப்பிடம், சுற்றமைப்பு இவற்றை பாதித்தனால் பாதிப்ப்பு ஏறட்டுள்ளது என்பதனை அறிந்து கொண்டனர்: ஆனால், ஏரி-குளங்கள் மறையாமல் இருந்திருந்தால், இப்பேரிடர்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்று புரிந்து கொண்டு விட்டார்கள். அதாவது, கோவில்கள் இருக்கும்வகையில் குளம், ஏரி முதலியவை சூழ இருந்திருந்தால், தப்பித்துக் கொண்டிருக்கலாம். அப்படியென்றால், கடவுளை மறுத்து, கோவில் சொத்துகளைக் கொள்ளையெடித்து, குளங்களை தூர்த்து, ஏரிகளை வளைத்துப் போட்டு, எல்லாவற்றையும் நாசமாக்கியது யார் என்று பார்த்தால், திராவிடத்துவ அரசியல்வாதிகள் தாம்[8]. கருப்பு-சிவப்பு நிறங்களின் அமைப்பு மாறினாலும், “திராவிட” சொல்லுக்கு முன்னும்-பின்பும் எதை சேர்த்து புது கட்சி வந்தாலும், ஆட்கள் மாறாமல் தான் இருக்கிறார்கள். கடவுள் பயம் மட்டுமல்லாது, எந்த பயமும் இல்லாமல் போய், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னை யாரும் செய்யமுடியாது, என்ற நிலையில் இறங்கி விட்டார்கள்.

கோவில் மட்டுமல்ல, சமூகமும் சீரழிந்தது: கோவில் பகிஷ்காரம் ஏன் என்று திகவினர் புத்தகங்களை வெளியிட்டனர். சுயமரியாதை-சீர்திருத்த-பகுத்தறிவு திருமணங்கள் சட்டரீதியில் செல்லாமல் போய், மரியாதை போனபோது, இந்தி திருமண சட்டத்தில் நுழைந்து மரியாதை பெற்றன. தாலியறுப்பு போராட்டங்களினால், பெண்களின் மனங்கள் புண்பட்டன[9]. இதனால், கொலை-கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புகள், அதிகமாகின. திருமணங்கள் முறிந்தன, கணவன்-மனைவியர் பிரிந்தனர், குடும்பங்கள் சிதறுண்டனர்; சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் பரிதவித்தனர்; காப்பர்-கேட்பர்-பேணி காப்போர் என்று யாரும் இல்லாத நிலையில், திசை மாறி குற்றவாளிகளாகவும் மாறினர். ஆனால், இதகைய சீரழிவுகளை திராவிட சித்தாந்தம், நாத்திக-பகுத்தறிவு முதலிய விதண்டாவாதங்கள் ஆதரித்தன. இதனால் தான் முரண்பாடுகள் பெருகி, மக்களின் நம்பிக்கைக்கள் தேட ஆரம்பித்து விட்டன.

போலி மருத்துவர்கள் போன்று போலி ஜோதிடர்கள் முதலியவற்றை உருவக்கியது திராவிட அரசாட்சி மற்றும் கொள்கைகள் தாம்: மக்கள் அமைதி தேடி அலையும் நேரத்தில் தான், மற்றவர்கள் அமைதியாக இருக்கும் நிலையை கவனிக்க ஆரம்பித்தனர். கடந்த 60 ஆண்டுகளாக நாத்திகக் குடும்பங்கள் சிதறியுள்ள நேரத்தில், ஆத்திகக் குடும்பங்கள் மாறாமல் இருக்கின்றனர் மற்றும் மேலோங்கியும் உள்ளனர் என்பதனை அறிந்து கொண்டனர். இவர்கள் முன்னமே தங்களது தாய், மனைவி, மகள், சகோதரி என்று அவர்களை வைத்து சாமி மும்பிட வைப்பது, படையல் வைப்பது, கோவில்களுக்குச் சென்று பூஜைகள் செய்வது, யாகங்கள் செய்வது என்றெல்லாம் செய்து வந்தனர். இப்பொழுது, கொஞ்சம் வெளிப்படையாக செய்ய ஆரம்பித்தனர். அதாவது, புகைப்படம், டிவி முதலிய சாதனங்கள் மூலம், இவர்களது போலித்தனங்கள் வெளிவந்து கொண்டிருப்பதினால், இனிமேல் மறைப்பதில் பிரயோஜனம் இல்லை என்று கொஞ்சம் வெளியில் வந்து செய்ய ஆரம்பித்து வுட்டனர். “நானும் இந்து தான்” என்று கூறிக் கொள்ளும் அளவுக்கு தைரியம் வந்துள்ளது.

.

முறையற்ற நிர்வாண பூஜைகள்: இப்படி ஜோதிடம், பூஜை, பரிகாரம், படையல் என்று இவர்களும் செய்ய ஆரம்பித்த போது, அவர்கள் ரகசியமாக செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அப்பொழுது, அவர்களது அடியாட்கள் தேடியலைந்து, யாரையாவது பிடித்துக் கொண்டு வந்தன. அந்நிலையில், அரைகுறைகள் நுழைந்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றன, பார்க்கின்றன. இதனால், பூஜை-புனஸ்காரம், கிரிய-சடங்கு போன்றவற்றில் அத்தகைய தெறிகெட்டவர்கள் நுழைந்துள்ளனர். இதனால் தான் மேன்மேலும் குழப்பங்கள் நீடிக்கின்றன. ஒழுங்காக பக்தியை வளர்த்துக் கொண்டு அமைதியாக செய்ய வேண்டியவற்றை, குறுக்கு வழிகளில் சென்று, மந்திரம்-தந்திரம்-யந்திரம் போன்ற வழிகளில் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்து விட்டது. அந்நிலயில் தான் இதைப் போன்ற நிர்வாண பூஜை போன்ற சடங்குகளை சிலர் பரிந்துரைக்க, குறுக்கு வழியில், சீக்கிரம் விரும்பியதைப் பெற்று விடலாம், என்று சபலம் கொண்டவர்கள் மற்றும் பேராசைக் கொண்டவர்கள் அவற்றில் நுழைகின்றனர்.

© வேதபிரகாஷ்

13-02-12016

[1] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=160581

[2] http://www.maalaimalar.com/2016/02/12161725/Why-Dharmapuri-Medical-College.html

[3] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=88036

[4] மாலைமலர், தர்மபுரி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை நடத்துவது ஏன்?: மனைவி பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2016. 4:17 PM IST.

[5] தமிழ்முரசு, முதல்வராக வேண்டும் என்பதற்காக நிர்வாண பூஜை செய்த பேராசிரியர் மனைவியே புகைப்படம் வெளியிட்டதால் பரபரப்பு, பெப்ரவரி 12, 2016.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1455606

[7] தமிழகத்தைப் பொறுத்த வரையில் “டாக்டர்” மோகம் 1970களிலிருந்து அதிகமாக உள்ளது என்பதனை ஞாபகப்படுத்திக் கொள்லவேண்டும். அதிலும் எம்.பி.பி.எஸ் டாக்டர்களை விட, “ஹானரெரி” டாக்டர் பட்டங்கள் தமிழக பல்கலைக்கழகங்கள் வாரி, அரசியல்வாதிகளுக்குக் கொடுத்தன. இல்லை, விலை கொடுத்து வாங்கவும் செய்தனர்.

[8] “Ecological Imbalance” ஐ உருவாக்கி, சென்னையை சீரழித்தவர்கள் இவர்கள் தாம் என்று மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர்.

[9] திராவிடப் புரோகிதர்கள் திருமணங்களை செய்வித்து, தாலிகளையும் அறுக்க ஆரம்பித்தனர், அதாவது “திருமண முறிவு விழா”க்களையும் சந்தோஷமாக நடத்தினர். ஆனால், பெண்கள் வருத்தப்படத்தான் செய்தனர்.

பெரியார் பூமியில் நிர்வாண பூஜையில் ஈடுபட்ட உடல் இயக்கவியல் மருத்துவ பேராசியர், மனைவியையும் துணைக்குக் கூப்பிடதால், போட்டோவை வெளியிட்ட மனைவி!

பிப்ரவரி 13, 2016

 

பெரியார் பூமியில் நிர்வாண பூஜையில் ஈடுபட்ட உடல் இயக்கவியல் மருத்துவ பேராசியர், மனைவியையும் துணைக்குக் கூப்பிடதால், போட்டோவை வெளியிட்ட மனைவி!

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி - டாக்டர் செல்வராஜ்

தமிழகமும், பெரியார்பகுத்தறிவும், நிர்வாணமும்: பெரியார் பிறந்த மண், நாத்திகத்திற்கு வேரிட்ட தலைவரின் கால் பதிந்த பாதை, பெரியாரிஸம் ஊன்றிய பூமி, என்றெல்லாம் தமிழகத்தை மேடைகளில் கருப்புச் சட்டைகள் வர்ணிப்பதுண்டு. பெரியாரே எல்லாவற்றையும் துறந்தவர் தாம், அதனால் தான் அவர் நிர்வாண கிளப்பின் உறுப்பினர் ஆகி, அவர்களோடு சேர்ந்து கொண்டு நிர்வாண புகைப்படமும் எடுத்துக் கொண்டார் என்றேல்லாம் அவருடைய முற்றும் துறந்த நிலையை விவரிப்பர். ஆனால், அதே கருஞ்சட்டைகள் ஜைன துறவிகள் தெருக்களில் நடந்து சென்றால், கல்லேறிந்து தாக்கவும் செய்வார்கள். அதாவது நிர்வாணத்திலும் வித்தியாசம் பார்ப்பது நாத்திகமா, திராவிட ஜாதித்துவமா, சாதிவெறித்துவ நாத்திகமா, பகுத்தறிவா என்பதை அவர்கள் தாம் விளக்க வேண்டும். அரசு கோவில்களுக்குள் செல்பவர்களுக்கு “உடை ஒழுக்கம்” வேண்டும் என்ற போது, “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” என்று அத்தகைய அறிவிஜீவித்தனத்துடன் சமீபத்தில் ஒருவர் எழுதி கேட்டுள்ளார்[1].

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை-டிரஸ் கோட் இல்லையா

தமிழகத்து மருத்துவருக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?”, என்றோ, “தமிழகத்து மருத்துவருக்கு டிரஸ்கோட் உண்டா மருத்துவரே?” என்று கேட்க துணிவு உண்டா?: நிர்வாண உரிமைக்காக எழுதிய அவர்[2], இம்மருத்துவரும் தனது உரிமை என்றால், ஆதரிப்பாரா, எதிர்ப்பாரா? அதாவது அந்த நிர்வாணம் வேறு, இந்த நிர்வாணம் வேறு என்று வாதிப்பாரா அல்லது திகவினர் போன்று கல்லெறிந்து தடுப்பாரா? போதாகுறைக்கு, தமிழக அரசு மருத்துவர் நிர்வாண பூஜையிலும் ஈடுபட்டுள்ளார். மனைவி இதெல்லாம் மூடத்தனம் என்று தட்டிக் கேட்டபோது, இதெல்லாம் எனது உரிமை என்றும் சண்டை போட்டுள்ளார். “தமிழகத்து மருத்துவருக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?”, என்றோ, “தமிழகத்து மருத்துவருக்கு டிரஸ்கோட் உண்டா மருத்துவரே?” என்று கேட்டு எந்த சமத்தும் கட்டுரை எழுதவில்லை! ஒருவேளை, அவர் இதைத் தெரிந்து கொண்ட பிறகு எழுதலாம், எழுத முயற்சிக்கலாம்.

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை

விதவையைத் திருமணம் செய்து கொண்ட விதவர்: தர்மபுரி இலக்கியம்பட்டி பாரதிபுரம் மருத்துவ குடியிருப்பில் வசித்து வரும் டாக்டர் செல்வராஜ் (50), தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பிசியாலஜி – உடல் இயக்கவியல் – துறை தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி கல்பனா இறந்து விட்டார்.   இவருக்கு, அவர் மூலம் பிறந்த அதிதர் என்ற மகன் உள்ளார்.  இவ்வாறு “விதவர்” நிலையில் இருந்த இவர், மனைவி இறந்ததைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியை சேர்ந்த வையாபுரி மகள் கார்த்திகாவை (28) செல்வராஜ் 2–வது திருமணம் செய்து கொண்டார்[3]. தன்னைவிட 22 வயது குறைவான பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். ஏற்கனவே கார்த்திகாவுக்கு இன்னொருவருடன் திருமணம் ஆகி இரண்டு வருடத்தில் அவரது கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார்[4]. அதாவது கார்த்திகாவும் கைம்பெண் / விதவைதான். திருமணம் நடைபெற்று 1 வருடம் அவர்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினர். இவ்வாறு விதவையைத் திருமணம் செய்து கொண்டு புரட்சி செய்திருக்கிறார்.

பெரியாரைப் பின்பற்றிய செல்வராஜ்

பிசியோலாஜி புரொபசர் சைக்கோலாஜியாக செய்து வந்த சில காரியங்கள்: பிசியாலஜி – உடல் இயக்கவியல் டாக்டர் செல்வராஜ், மனோதத்துவ ரீதியிலும் சில பரிசோதனைகள் செய்ய ஆரம்பித்தார் போலும்! அடிக்கடி இரவு நேரத்தில், வீட்டில் தன் அறையில் நீண்ட நேரம் தனியாக பூஜை செய்தபடி இருப்பதுண்டு. இந்த நிலையில் அவ்வப்போது பூஜை செய்ய செல்வராஜ் வெளியில் சென்று வந்தார். இதை கண்ட அவரது மனைவி கார்த்திகா ஏதோ ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளதால் சென்று வருவதாக நினைத்து அதை கண்டு கொள்ளவில்லை[5]. இதனால் வெளியில் பூஜை செய்து வந்த பேராசிரியர் செல்வராஜ் நாளடைவில் தனது வீட்டில் ஒரு நாற்காலியில் நிர்வாணமாக அமர்ந்து பூஜை செய்ய ஆரம்பித்தார்[6]. அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். சந்தேகமடைந்த கார்த்திகா, டாக்டருக்கு தெரியாமல் அவருடைய அறைக்கு சென்ற போது, அவர் நிர்வாணமாக பலகையில் அமர்ந்து பூஜையில் ஈடுபட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்[7]. மேலும், அவரது டைரியில் ஆபாசமான வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன[8]. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பல முறை மருத்துவராகிய நீங்கள் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று கூறியும் அவர்கேட்கவில்லை. தொடர்ந்து அவர் நிர்வாண பூஜை செய்து வந்தார்.

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி - Photo courtesy - Jeyakoopi

நிர்வாண பூஜையில் ஈடுபட்டு வந்த கணவனை நினைந்து வருந்திய மனைவி: கார்த்திகா எவ்வளவு சொல்லியும் பிசியாலஜி – உடல் இயக்கவியல் பேராசியர் நிர்வாண பூஜையை விடவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாத கார்த்திகா ஏற்கனவே கணவனை இழந்து தற்போது மற்றொரு கணவனும் இது போன்ற செயலில் மூழ்கி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்[9]. இருந்தாலும் கணவரின் ஆதரவில் வாழ்ந்து வருவதால் அவர் ஏதோ ஒன்றை செய்து கொள்ளட்டும் என்று கண்டும் காணாமலும் இருந்து வந்தார்.  அர்த்தஜாம பூஜை நடந்து கொண்டிருந்தது. கணவன் – மனைவி உடல்-உள்ளம் போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. மனம் உடலைக் கட்டுப்படுத்துமா, உடல் மனத்தை ஆட்டிப் படைக்குமா என்ற போராட்டம் தொடர்ந்தது போலும்!

Dravida desa Physiology professor indulging in Nude worship psychologically

தன்னுடன் நிர்வாண பூஜையில் பங்கு கொள் என்று வற்புருத்திய டாக்டர்: இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அவரது மனைவி கார்த்திகாவையும் நிர்வாண பூஜை செய்யவேண்டும் என்று டாக்டர் செல்வராஜ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு கார்த்திகா உடன் படாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு அடிக்கடி அவரது பெற்றோர்கள் வீடான ஓமலூர் அருகே உள்ள எலத்தூருக்கு கார்த்திகா வந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் விவாகரத்து செய்வதாக கார்த்திகாவுக்கு பேராசிரியர் நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.  இதை கண்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்த கார்த்திகா தனது பாட்டி மற்றும் தாய் ஆகியோரை அழைத்து கொண்டு கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது நிர்வாண பூஜையில் இருந்த கணவனை பார்த்து இனி சேர்ந்து வாழலாம் என்றும், இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறினார்.  ஆனால் பேராசிரியர் செல்வராஜ் என்னுடன் வாழ வேண்டும் என்றால் நான் கூறுவது போல் நீயும் நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் உன்னை விவாகரத்து செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்றும் மிரட்டியதாக அவரது மனைவி கூறினார்[10].

© வேதபிரகாஷ்

13-02-12016

[1] சமஸ், சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?, Published: December 29, 2015 09:13 ISTUpdated: December 29, 2015 09:14 IST.

[2]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80/article8040900.ece

[3] நக்கீரன், நிர்வாண பூஜை நடத்தும் மருத்துவ கல்லூரி பேராசிரியர்மனைவி பரபரப்பு புகார், பதிவு செய்த நாள் : 12, பிப்ரவரி 2016 (18:6 IST), மாற்றம் செய்த நாள் :12, பிப்ரவரி 2016 (18:17 IST).

[4]  மாலைமலர், ஓமலூரில் நிர்வாண பூஜை நடத்தும் மருத்துவ கல்லூரி பேராசிரியர் தன்னையும் வற்புறுத்துவதாக மனைவி பரபரப்பு புகார், பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2:17 PM IST.

[5] http://www.maalaimalar.com/2016/02/12141712/Professor-of-the-Medical-Colle.html

[6] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=160581

[7] சென்னை.ஆன்.லைன், நிர்வாண பூஜை நடத்தும் மருத்துவ கல்லூரி பேராசிரியர்: மனைவி போலீஸில் புகார், பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2:17 PM IST.

[8] தினமலர், அரசு டாக்டரின் நிர்வாண பூஜை தன்னையும் வற்புறுத்துவதாக மனைவி புகார், பிப்ரவரி.13, 2016.00.36

[9] http://tamil.chennaionline.com/news/tamilnadu/newsitem.aspx?NEWSID=d538d071-abed-4cb6-beed-bb5562d76a2f&CATEGORYNAME=TTN

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=195934

சினேகாவை அடுத்து, குஷ்புவின் இடுப்பு கிள்ளப்படுகிறதாம்!

ஜூன் 9, 2012

சினேகாவை அடுத்து, குஷ்புவின் இடுப்பு கிள்ளப்படுகிறதாம்!

பதவியில் இல்லாமலிருந்தாலும் படோபடமாக கொண்டாடப்படும் விழாக்கள், ஊடக தரிசனங்கள், தெரு உலாக்கள்: தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், முதலமைச்சர் பதவியில் இல்லையென்றால் யாரும் அவ்வளவாக மதிக்க மாட்டார்கள். சுவரொட்டிகளுக்குக் கூட கணக்குப் பார்த்துதான் செலவழிப்பார்கள். ஆனால், திமுகவிற்கு எங்கிருந்துதான் பணம் வந்துள்ளது என்று தெரியவில்லை, லட்சக்கணக்கில் செலவழித்துள்ளார்கள். பதவியில் இல்லாமலிருந்தாலும் படோபடமாக விழாக்களை கொண்டாடியுள்ளர்கள். ஊடகங்கள் அவர்கள் கைகளில் இருப்பதனால் தரிசனங்கள் அதிகமாகவே இருந்துள்ளன[1]. பிறகு, தெரு உலாக்கள் தாம்! அக்கால மன்னர்கள் மாதிரி பவனி; பிறகு நாட்டிய மகளிர் வந்து ஆடவேண்டாமோ? ஜகத் ரெட்சகன்[2] மறந்து விட்டாரோ அல்லது ஒதுக்கப்பட்டாரோ?

குஷ்புவின் ஏக்கமும், நெருக்கமும், தரிசனத்திற்காக ஓடிய ஓட்டமும்: திமுக தலைவர் கருணாநிதியின் 89 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு இடுப்பை மர்ம நபர் கிள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[3]. முன்னர் சினேகாவின் இடுப்பை கிள்ளுகிறார்கள் என்று ஒரே பரபரப்பான செய்திகள்[4]. இப்பொழுது, பகுத்தறிவாளிகள் பாசறையில், பக்குவமாக, பக்கத்தில் வந்து, குஷ்புவின் இடுப்பை கிள்ளுகிறார்களாம். திமுகவில் இணைந்ததிலிருந்து, இவர் கருணாநிதிக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்[5]. எனவே, திட்டமிட்டே அந்த மர்ம நபரும் இதை செய்துள்ளாறர் போலும்! வயதான கூட்டத்தில் இப்படி, ஒரு அம்மாவைப் பிடித்து விட்டார்கள் போலும்!

கருணாநிதி கண்டித்தாலும், கமல் ஹஸன் குஷ்பு தமிழைக் கேட்டு வியக்கிறாராம்: ஒரு கூட்டத்தில் குஷ்பு, முந்தி கொண்டு ஏதோ தமிழில் பேசியதைக் கேட்டு, கருணாநிதி நன்றாகவே விமர்சனம் செய்து விட்டார்[6]. ‘தமிழை யாரும் அழிக்க முடியாது. குஷ்பு தமிழிலே பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழ் மொழி எந்த அளவு வலுவானது என்று பார்க்க வேண்டும்” என்றார்[7]. ஆனால் கமல் ஹஸனுக்கு குஷ்புவின் தமிழைக் கேட்டு புல்லரிக்கிறாராம்.

Adding, he said “I never envied Rajini’s growth or any one’s growth in the industry, but today I envy the Tamil spoken by Kushboo in this function.  Even Karunanidhi and Rajini were surprised by the way Kushboo speaks out the classical language[8].  It seems she will be awarded for speaking a wonderful Tamil” ரஜினியின் உயர்வைக் கண்டு கூட நான் அதிசயிக்கவில்லை. ஆனால், நான் குஷ்பு தமிழ் பேசுவதைக் கண்டு பொறாமைப் படுகிறேன், என்றாராம். கருணாநிதி, ரஜினிகாந்த் முதலியோரும் குஷ்புவின் செந்தமிழைக் கேட்டு வியந்து விட்டனராம். அதற்காக அவர் பரிசளிக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

அதெப்படி கருணாநிதி அதற்குள் மாறிவிட்டார் என்று தெரியவில்லை. “Even Karunanidhi and Rajini were surprised by the way Kushboo speaks out the classical language”, என்றால் என்ன கதைவிடுகார்களா என்று தெரியவில்லை. இல்லை மயக்கத்தில் இருந்தனரா? கதாநாயகிகளை தூக்கி புகழ்பெற்ற இவருக்கு, அதிகமான அனுபவம் இருக்கிறது. இன்றும் தூக்குகிறாரா என்று தெரியவில்லை.

ஜெயலலிதாவை எதிர்த்த குஷ்பு: ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்றெல்லாம் குஷ்பு பேசியதை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், கருணாநிதி / திமுக தோற்க்கத்தான் நேர்ந்தது. அப்பொழுதும், நக்கலாக, அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டவர்கள் துன்பப்படப்போகிறார்கள் என்றெல்லாம் பேசியதும் ஞாபகத்தில் இருக்கலாம். திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூன் 03 ந் தேதி 89 -வது பிறந்த நாள் ஆகும். அன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அடுத்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவித்தில் மரியாதை செலுத்தினார். பின்பு, காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்.

கருணாநிதியை தொடர்ந்து சென்ற குஷ்பு: இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்படியும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நடிகை குஷ்பு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றார். ஆனால் ஏற்கனவே , அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு அறிவாலயம் சென்றதால், அறிவாலயம் நோக்கி குஷ்பு சென்றார். ஆனால் அங்கு இருந்து கருணாநிதி வேறு இடத்திற்கு சென்று விட்டதால், அவரால் அங்கும் சந்திக்க முடியவில்லை. இதனையடுத்து, மாலை 6 மணிக்கு கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல் வரிசையில் நடிகை குஷ்பு வந்து அமர்ந்திருந்தார். தலைவரை பிடிக்க வேண்டும் என்றால், இப்படியெல்லாம் துரத்திக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதே மாதிரி, குஷ்புவின் இடையைக் கிள்ள வேண்டும் என்றால், அந்த ஆசாமியும் அதே மாதிரி பின் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்!

குஷ்புவின் இடுப்பைக் கிள்ளிய மர்ம ஆசாமி: கூட்டம் முடிந்து குஷ்பு வெளியேற முன்ற போது, அவரது இடுப்பை யாரோ மர்ம ஆசாமி கிள்ளிவிட்டதாக கூறப்பட்டுகிறது. இதை சற்றும் எதிர்பாராத குஷ்பு கடும் அதிர்ச்சி அடைந்து அதே இடத்தில் சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் குஷ்புவை பத்திரமாக அவரது காருக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினால் அது குஷ்புவுக்கும், கருணாநிதி பிறந்த நாள் பொது கூட்டத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துக் கூறியதால், குஷ்பு அமைதி காத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து திமுக தலைமை கடும் கோபத்திலும், சங்கடத்திலும் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என குஷ்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்[9]. பிறகு யாருக்கு இத்தகைய ரோமாஞ்சக செய்தியோ அல்லது தகவலோ தேவைப் படுகிறது? தனியாகவே போய் பார்த்திருக்கலாமே? எல்லோருக்கும் தெரியும் படி, துரத்திக் கொண்டு சென்றிருக்க வேண்டாமே?


[1] கலாநிதி மாறன் ஓரமாக நின்று கொண்டு முறைக்கும் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பது தெளிவாகவே தெரிந்தது.

[2] ஜெகத் ரெட்சகன் அரசவை மாதிரியே செட்டிங் அமைத்து, காவலாட்கள், பெண்கள் வைத்து, நாட்டிய மகளிரை வைத்து ஆடவைத்து அமர்க்களப்படுத்தி விட்டார். இப்பொழுது மறந்து விட்டார்களோ, மறைத்து விட்டார்களோ, தனியாக வைத்துக் கொண்டார்களோ தெரியவில்லை.

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

திசெம்பர் 31, 2010

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

கேட்ட பணம் கொடுக்காததால் அவதூறு செய்திகள் பரப்பப்பட்டன: “மிகப்பெரிய அளவில் பணத்தொகை கேட்டு மிரட்டப்பட்டேன். அதற்கு நான்

சென்னை உயர்நீதி மன்றத்தில் அஃபிடேவிட் தாக்கல் செய்யப்பட்டபோதே, இது சொல்லப்பட்டது. சன்-குழுமம் என்றும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டது. அத்தகைய வீடியோ ஒலிப்பரப்பாமல் இருக்கப் பணம் கேட்டதாகவும், பேரம் பேசியதாகவும் சொல்லப் பட்டது.

மறுத்ததால் என் மீது அவதூறான செய்திகளை பரப்பினர், ” என, சாமியார் நித்யானந்தா பேசினார். திருவண்ணாமலையில், சாமியார் நித்யானந்தாவின் 34வது பிறந்த நாளை முன்னிட்டு நித்யானந்த தியான பீடம் சார்பில் சத் சங்கம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு ஆசி வழங்கி நித்யானந்தா பேசியதாவது[1]:

தமிழக முதல்வர் அய்யாவுக்கு நான் கூறிக்கொள்வது; “மிகப்பெரிய ஆன்மிகநிறுவனம் நித்யானந்த தியானபீடம். இதில், தமிழகத்தை சேர்ந்த 12 லட்சம் பேர்

அப்படி தாக்கப்பட்டது நித்யானந்தா விரோதம் என்பதா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா?.

பக்தர்களாக உள்ளனர். இவர்களின் வேதனைகளையும், குமுறல்களையும், புண்படுத்தப்பட்ட மத உணர்வுகளையும், பழிக்கப்படுவதோடு அல்லாமல் மீண்டும் மீண்டும் நாங்கள் தாக்கப்படுவதால், எங்கள் வாழ்வுரிமையை நாங்கள் எங்கு சென்று தான் மீட்டெடுப்போம். மொத்தம் 197 நாடுகளில் தியானபீடத்தின் சத்சங்க மையம், கோவில், வழிபாட்டு தலங்கள் உள்ளன. ஒன்பது மாதங்களில் 120 வழிபாட்டு தியான பீடங்கள் சமூக விரோதிகளால், அடித்து நொறுக்கப்பட்டன.

தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும் தாக்கப்படவில்லை: “தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும்

தமிழகத்தில் மட்டும் ஏன் தாக்கப் படவேண்டும்?  அப்படியென்றல், பெரும்பாலான கிருத்துவ நிறுவனங்கள் அடித்து நொறுக்கப் பட்டிருக்க வேண்டுமே? ஆனால், ஒன்றுமே நடக்கவில்லையே? மாறாக, இது மட்டும் நடக்கிறது என்றால், என்ன அர்த்தம்?

தாக்கப்படவில்லை. சில தமிழ்தொலைக்காட்சிகளும், சில தமிழ்பத்திரிகைகளும் திட்டமிட்டு எங்களை அழிப்பதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய பணத்தொகைக்காக மிரட்டப்பட்டேன். யார் தான் இதற்கு பதில் சொல்வது; யார் தான் முடிவு சொல்வது. யார் தான் முற்றுப்புள்ளி வைப்பது. நாங்களும் எங்கள் அகிம்சை கொள்கையிலிருந்து மாறமாட்டோம். இதை அகிம்மையினாலேயே எதிர்கொள்வோம். எங்களை தாக்குபவர்கள் தாங்களாகவே ஒழிந்து போவார்கள்.

கருணாநிதி ஆளும் மாநிலத்தில் பக்தர்கள் தாக்கப் படுகிறார்கள்: “நீங்கள் ஆளும் இந்த நாட்டில், வாழும் என் மக்களுக்கு, என் பக்தர்களுக்கு சாத்தியமில்லை என்பதனால், தமிழகத்தின் முதல்வராகிய உங்களுக்கு,

கருணாநிதியின் பெயரைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன என்றால் அதன் பின்னணி என்ன? இதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? அதனால்தான் பகலில் சாமி, இரவில் காமி என்றெல்லாம் கருணாநிதி நக்கல் அடித்தாரா?

உங்களின் பார்வைக்கு இந்த கோரிக்கையை நேரடியாக எடுத்து வந்து, உங்களிடம் கொடுத்து உடனடி நிவாரணத்துக்காக காத்திருக்க போகிறோம்.
உங்கள் பெயரை பயன்படுத்தி, எங்களை எல்லாம் தாக்குகின்ற, ஊடகங்கள் சொல்லுகின்ற தகவல்களை மட்டும் கேட்காமல், உளவுத்துறை மூலம் இந்த புள்ளி விவரங்களை சரிபார்த்து கொள்ளுமாறு உங்களை கேட்டு கொள்கின்றேன்.

பக்தர்களையும் மிரட்டி பணம் பறிக்கப் படுகிறது: “என் பக்தர்கள் பாதுகாப்போடு கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லமுடியவில்லை. எங்கள் காப்பு அணிவது என்பது, எங்கள் மத உரிமை; என் படம் பொறித்த டாலர்களை, காப்புகளை அணிந்து வர பள்ளி, கல்லூரிகள் தடை விதித்துள்ளன. இது மத உரிமை மீறிய செயல். என் பக்தர்கள் அமைதியை விரும்புபவர்கள்,

இப்படி யாருக்கும் தெரியாமல் ஒரு ஆணையை அரசு எப்படி வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி வெப்சைட்டில் இன்னும் ராஜரத்தினம் புகை படம் உள்ளது.

எங்கள் மத சின்னம். தியான பீடத்தின் கோரிக்கை கடிதத்தை கோடிக் கணக்கான பக்தர்கள் கண்ணீரோடு, சில லட்சக் கணக்கான மக்களின் ரத்தத்தோடும், உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். நான் சொல்ல முடியாத அளவிற்கு எங்களை சில நிறுவனங்கள், ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டுகின்றன. என் பக்தர்கள் எனக்கு தெரியாமல் மிரட்டப்பட்டு, மிகப்பெரிய பணமும் பறிக்கப்பட்டது”, இவ்வாறு அவர் பேசினார்.

ரத்தக் கையெழுத்துடன் கலைஞருக்கு நித்யானந்தா கடிதம்[2]: “அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. அவர்களை காக்கவே இக்கடிதத்தை எழுதுகிறேன். இதில் இறுதியில் என் ரத்தத்தால் ஆன கையெழுத்தும், கை நாட்டும் வைத்துள்ளேன்”, என்று நக்கீரனில் உள்ளது!


நித்துவிற்குப் பிறகு கல்கி பாட்டு ஆரம்பித்து விட்டது!

ஜூலை 7, 2010

நித்துவிற்குப் பிறகு கல்கி பாட்டு ஆரம்பித்து விட்டது!

http://www.viduthalai.periyar.org.in/20100707/news05.html

ஏற்கெனவே கோர்ட்டுகளில் வெளிவந்த செய்திகள், ஒரு தெலுங்கு டிவி செனல் ஒளிபரப்பிய கலப்படக் காட்சிகள்…………..முதலியவற்றை வைத்துக் கொண்டு முன்பே கதையளந்து கொண்டிருந்தனர்.

கல்கி ஆசிரமத்திலிருந்து பிரிந்து சென்ற சீடர்கள், ஆளுக்கு ஆள் இப்படி புகார்கள் கொடுப்பது, வழக்குகள் போடுவது என்று சாதாரணமாகி விட்டது.

எப்படி, கருணாநிதி எம்.ஜி.ஆரை, அவர் வெளியேறி கணக்குக் கேட்டபோது, , வசைபாடினாரோ, அதே ரீதியில்-தொணியில், இந்த சீடர்கள் பேசிவருகிறார்கள்.

கல்கியின் மகன், ஏற்கெனெவே.இந்த பிரச்சாரங்கள் நிறுத்தப்படவேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்.

அந்நிலையில், மறுபடியும், அரைத்த மாவையே அரைக்கும் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

வீரமணி, கோபால் முதலியோர்களுக்கு நித்யானந்தா, கல்கி……………….முதலியோர் அவ்வப்போது ஞாபகத்தில் வந்து கொண்டே இருப்பார்கள் போல இருக்கிறது. மற்றவர்கள் மறந்து விட்டாலும், இவர்கள் மறக்கமாட்டார்கள்.

பிற இதழிலிருந்து…இதுதான் கல்கி குடும்பம்!

கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றிப் பணம், பொன், பொருள், நிலம் எல்லாம் சம்பாதிக்கிறார். பக்தர்களுக்கு தீட்சை தந்து மோட்சம் தருவதாகச் சொல்லி, போதை ஊட்டி காம வக்கிரங்களை அரங்கேற்றுகிறார். கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஹவாலா மோசடி செய்து வருகிறார். இப்படிப்பட்ட பகீர் செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் கசிந்தபோதும், மனிதர் எதற்கும் சளைக்கவில்லை. நான்தான் விஷ்ணு-வின் 10_ஆவது அவதாரம் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார் கல்கி பகவான்!!

இந்த நிலையில், முன்பு கல்கி பகவானின் நண்பராக இருந்தவரும், போலி சாமியார்களுக்கு எதிரான அமைப்பின் தலைவருமான விஸ்வநாத் சுவாமி, கன்னட மீடியாக்களிடம் கல்கி பகவான் பற்றிக் காட்டமான சில தக-வல்களை வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்-தினார். பெங்களூருவில் இருந்த விஸ்வ-நாத் சுவாமியை சந்தித்தோம்.

கல்கி பகவான் என்று அழைக்-கப்-படும் விஜயகுமார், 1984_இல் என்னோடு ஆந்திர மாநிலம் குப்பத்தில் ஒரு நடு-நிலைப்பள்ளியில் சக ஆசிரியராக இருந்-தவர். போதிய வருமானம் இல்லாததால், அதை விட்டுவிட்டு, எல்.அய.சி. ஏஜென்ட் ஆனார். அப்போதே அவருக்குப் பணவெறி… முதலில் நான் சாமியின் வரம் பெற்றவன என்று மக்களிடம் காணிக்கையாகப் பணம் வசூலிக்கத் தொடங்கினார். அப்புறம் நான் விஷ்ணுவின் 10_ஆவது அவ-தார-மான கல்கி பகவான் என்று கூற ஆரம்பித்தார். யாரும் அதை நம்ப-வில்லை. அப்போது இவர், ஒரு புது டெக்னிக்கைக் கையாண்டார். அதாவது கிராமங்களில் 10_ம் வகுப்பு முடித்த 125 ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்ந்-தெடுத்து, அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி மசிய வைத்து, அனைவருக்கும் வெள்ளை உடுப்பு கொடுத்து, அக்கம்பக்கக் கிராமங்-களுக்கு அனுப்பி வைத்தார். விஜய-குமார் நாயுடுவின் மீது கல்கி பகவான் இறங்கி உள்ளார் என்று பிரசாரம் செயயவைத்தார். மக்கள் காணிக்கை கொடுக்க முன் வந்தனர். நாளடைவில இவரே சிலரை ரெடி பண்ணி, எனக்கு கேன்சர் குணம் ஆகாமல் இருந்தது… பகவான் தொட்டார், சரியாகிவிட்டது என்று மேடைகளில் சொல்ல வைத்தார்.

அதோடு, ஷில்பா ஷெட்டி, மனீஷா கொய்ராலா போன்ற நடிகைகளை, நான் பகவானிடம் வேண்டிக்கொண்ட பிறகுதான் பெரும் வாய்ப்புகள் வாச-லுக்கு தேடி வரத் தொடங்கின என்று லட்சக்கணக்கில் ரூபாய் செலவழித்துப் பேசவைத்து விளம்பரம் தேடினார். இதுதான் விஜயகுமார்… கல்கி பகவான் ஆன கதை! என்று ஒரு முன்னோட்-டம் கொடுத்தவர் தொடர்ந்தார்.

இவர், நான் உலகத்தையே தீட்சை அடையச் செய்கிறேன். தீட்சைக்கு மூன்று நிலைகள் உள்ளன என்று கூறி, முதல் நிலைக்கு 5,000 ரூபாயும் இரண்-டாம் நிலைக்கு 10,000 ரூபாயும் மூன்-றாம் நிலைக்கு 21,000 ரூபாய் என்று தன்னை நாடி வரும் ஒவ்வொருவரிட-மும் கறந்துவிடுகிறார். அதுவும் வெளி-நாட்டினர் சிக்கிவிட்டால், அவர்களது மொத்தச் சொத்துகளும் அம்போதான்!

கல்கி பகவான் ஆசிரமத்தில் நடக்கும் கஞ்சா, களியாட்டங்கள் பற்றி ஏற்கெனவே உங்கள் ஜூ.வி. உள்பட பல பத்திரிகைகளில் விவர-மாகச் செய்திகள் வந்தன. இந்தக் களி-யாட்டங்களை அரங்கேற்றவே, ஒரு ஸ்பெஷல் ஸ்டூடியோவை உருவாக்கி இருக்கிறார். இதன் உள்ளே 25 வயதுக்கும் குறைவான பெண்களை மட்டும் அழைத்து ஸ்பெஷல் தீட்சை தருவார். ஆந்திர மாநில சேனலில் வெளியான அதிர்ச்சிக் காட்சிகள் மிகக் குறைவுதான். ஆசிரமத்தில் நடப்-பவை முழுதாக இன்னும் வெளிவர-வில்லை.

இவருக்கு 90_களில் வெறும் 43,000 ரூபாய் மட்டுமே வருட வருமானம். ஆனால் இன்று 1,200 கோடி ரூபாய் சொத்து. ஆந்திராவில் மட்டும் 5,000 ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா என அத்தனை மாநிலங்களிலும் கோடிக் கணக்கில் சொத்துகள்… ஆசிரமங்கள். தனது வீட்டின் நீச்சல் குளத்துக்கு ஸ்பெயினில் இருந்து டைல்ஸ் வாங்கி வந்து பதித்து இருக்கிறார். ஒரு சந்நியாசிக்கு இதெல்லாம் எதற்கு? இவரது மகன் கிருஷ்ணாவுக்கு லாஸ்-ஏஞ்ஜல்ஸில் கம்பெனி… 33 வெளி-நாட்டுகார்கள், பெங்களூருவில் ஆயி-ரம் கோடியில் கட்டுமான பிசினஸ்… இவை எல்லாம் எப்படி வந்தன?

மக்களுடைய நிலங்களையும், பணத்தையும் பறித்துக்கொண்டு பகவான் பெயரில் உலா வருவதால், வரிச் சலுகை பெற்று, மும்பையில் உள்ள தனது ஆட்கள் மூலமாகக் கறுப்பு பணத்தை லாஸ்ஏஞ்ஜலீஸில் இருக்கும் மகனுக்கு அனுப்பி, அதை மாற்றிவிடுகிறார்.

அதோடு, இவரது அந்தரங்க உண்மைகள் எல்லாம் தெரிந்த மேனேஜர்களான பவன், விகாஷ் என்ற இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். அதெல்லாம் விபத்துகள் என்று கூறி போலீஸார் கேஸை முடித்ததும் இவருடைய தாராளம் காரணமாகத்தான்!.

நித்தியானந்தா விவகாரம் குறித்த விசாரணை நடத்துபவர்கள், கல்கி பகவானை மட்டும் ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றனர்? இவரை போலீஸ் செமத்தியாக விசாரித்தால் போதும்… ஆயிரம் நித்தியானந்தா கதைகள் வெளிவரும் என்று நிறுத்தியவர், கடைசியாக…

நான் அவருக்கு எதிரான உண்மை-களைச் சொல்வதால், பலமுறை என் மீது கொலை முயற்சிகள் நடந்தன. அவற்றில் இருந்து தப்பி சென்னை உயர் நீதி மன்றத்திலும், சைதாப்பேட்டை கீழ் நீதிமன்றத்திலும் அவர் மீது நில அபகரிப்பு, கொலை முயற்சி, ஹவாலா மோசடி ஆகிய வழக்குகளை நடத்தி வருகிறேன். எந்த நேரத்திலும் என் உயிர் போகலாம். ஆனாலும், கல்கி பகவானுக்குக் கடவுளாவது தண்டனை தர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்! என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சித்தூர், வரதபாளையத்தில் உள்ள கல்கி பகவான் தலைமை ஆசிரம செயலாளர் நமன் தாஸாவிடம் விளக்கம் கேட்-டோம். கல்கி பகவான் மீது விஸ்வநாத் சுவாமி மூன்று வழக்கு போட்டிருக்கிறார். அதில் ஒரு வழக்கு தள்ளுபடியாகி விட்டது, மற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. கல்கி பகவான் மீது கூறப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளும் தவறானவை என்று நாங்கள் சொல்-வதைவிட, நீதிமன்றம் அறிவிப்பதே சரியாக இருக்கும்! என்கிறார்.

நன்றி: இரா.வினோத்
(ஜூனியர் விகடன், 7.7.2010)

சிறீ ரவிசங்கர், ஸ்ரீ ரவிசங்கர், வீரமணி, நாத்திகம்…………….

ஜூன் 7, 2010

வாழும் கலை ரவிசங்கரின் பின்னணி என்ன?

http://www.viduthalai.com/20100607/news06.html

வீரமணி ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர். மற்ற பல கல்லூரிகளுடன் தொடர்பு கொண்டவர். திகவின் இப்பொழுதைய தலைவர். ஆளும் திராவிட கட்சிகளுடன் மாறி-மாறி உறைவை வைத்துக் கொண்டுப் பிழைத்து வரும் போலி அரசியல்வாதி. விடுதலை என்ற நாளிதழின் ஆசிரியர், இதத பெரும்பாலாக இந்து விரோத சித்தாந்தத்தையேக் கொண்டுள்ளது. சில ஆண்டுகளுகாக அதை நான் கடுமையாக விமர்சித்து, ஈ-மெயில்களை அனுப்பி வந்தேன். அதற்கு பதில் இல்லை என்றாலும், மறைமுகமாக எனக்கு எதிர்ப்பு வந்தது. தனது “நாத்திக செக்யூலரிஸத்தை” மெய்பித்துக் கொள்ள சில மேனாட்டு இஸ்லாமிய-கிருத்துவ விமர்சனக் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட்டது. “மின்தமிழ்” எனக்கு தடை விதித்தது. இப்பொழுது, குறிப்பிட்ட இந்து சந்நியாசிகள், குரு முதலியவற்றை மட்டும் இலக்காகத் தாக்கி வருவது தொடர்கிறது. உலகளவில், ஏன் இந்தியாவிலும் கிருத்துவ-இஸ்லாம் மதங்களில் மிகக்கொடுமையான தீவிரவாதம், அடிப்படைவாதம், மக்கள் உரிமைகள் மீறல், பாலியல் வன்மம், சிறுவர்-சிறுமியர்களை கலவியில் ஈடுபடுத்தும் குரூரங்கள் முதலியவை அளவிற்கு அதிகமாக இருந்தாலும், கண்களை மூடிக்கொண்டு, இத்தகைய பாட்டுகளைப் பாடிவரும் போலித்தனத்தை காட்டவே, அத்தகைய படித்த, பகுத்தறிவுள்ள வீரமணி எழுது தனது விடுதலையில் தலையங்கமாக வந்துள்ளதை இங்கு வெளியிடப்பட்டு அலசப் படுகிறது

பார்ப்பனர் / பிராமணர் ரவிசங்கர்: வாழும் கலை போதிக்கும் சிறீ ரவிசங்கர் என்பவர் பார்ப்பன ஊடகங்களால் தூக்கிப் பிடித்து நிறுத்தப்-படுகிறார். ஆசிரமவாசிகளின் அந்தரங்கங்கள் எல்லாம் ஆபாசமானதாகவும், அருவருப்பானதாகவும், மக்களைச் சுரண்டுவதாகவும், பொருள் குவிப்பதாகவும்தான் இருந்து வருகின்றன. அன்றாடம் வரும் தகவல்கள் எல்லாம் இதனை உறுதிப்படுத்துகின்றன.

ரமணரிஷி துறவியா, கிரஸ்தரா? ரமணரிஷி என்ற ஒருவர் திருவண்ணாமலையில் இருந்தார். ஆன்மிகத்தின் பெயரால் கோடி கோடியாக பணம் சம்பாதித்தார். கடைசியில் தன் அண்ணன் மகனுக்கு அந்தச் சொத்துகளை எழுதி வைத்தார். அது தொடர்பான வழக்கு நீதிமன்றம் சென்றது. துறவிக்கு_ – சந்நியாசம் வாங்கியவருக்கு அண்ணன் மகன் என்ற உறவெல்லாம் கிடையாதே என்று நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தபோது, நான் துறவியல்லவே! நான் எப்போது சந்நியாசம் வாங்கினேன்? என்று பல்டி அடித்தாரா இல்லையா?

பெங்களூரைத் தேர்ந்தெடுப்பது ஏன்? பெரிய பெரிய ஆசிரமம் நடத்துபவர்கள் எல்லாம் பெங்களூருவை ஏன் தேடிச் செல்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வியாகும். அரசியல்வாதிகளாக அங்கு இருப்பவர்கள் பெரும்பாலோர் ஆன்மிகவாதி-களாக இருக்கிறார்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். யோகா என்று கூறப்படும் உடற்பயிற்சிக் கலையை ஆன்மிகக் குதிரையில் பூட்டி சவாரி செய்கிறார்கள் இந்த ஆசிரமவாசிகள். இடை இடையே வசீகரமான, ஆளை மயக்கும் உபந்நியாசங்கள்! அதில் ஏமாந்த சீட கோடிகள் இவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

ரவிசங்கரின் பூர்வோத்திரம் என்ன? இந்த ரவிசங்கரின் பூர்வோத்திரத்தை அறிந்தவர்கள் ஆசாமி ஏதோ வேடம் போடுகிறார் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஊரை விட்டு ஏன் ஓடிவந்தார் என்பதெல்லாம் அவருக்கு மரியாதையைச் சேர்க்கக்-கூடியதல்ல.

சாமியாருக்கு  நெருக்கடி ஏற்படுவது ஏன்?: நித்தியானந்தா சாமியாருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு இந்த சாமியார்களுக்கு எல்லாம் நெரி கட்டிவிட்டது. தங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி விட்டனர். பெங்களூருவில் உள்ள ரவிசங்கரை நோக்கி யாரோ சுட்டதாக ஒரு தகவல்! காவல்துறையின் புலன் விசாரணை ஒரு விதமாக இருக்கிறது; ரவிசங்கர் தரப்பில் வேறு வகையாகச் சொல்லப்படுகிறது. ரவிசங்கர் சீடர்களுக்குள் பிரச்சினை இருக்கிறது. அதன் விளைவாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதாகக் காவல் துறை கூறுகிறது.

சாயிபாபாவை கொலை செய்ய முயன்றது: இதுபோல பல சாமியார்களுக்கும் ஏற்கனவே பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. புட்டபர்த்தியில் சாயிபாபாவைக் கொலை செய்வதற்குச் சீடர்கள் முயற்சித்த போது, அறைக்குள் ஓடிப்போய் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதால் உயிர் தப்பித்தார்.

அமிர்தானந்த மயி அம்மையாரை ஒரு சீடன் கத்தியால் குத்த முயன்றது: அமிர்தானந்த மயி அம்மையாரை ஒரு சீடன் கத்தியால் குத்த முயன்ற நிகழ்ச்சியும் இந்த இடத்தில் நினைவு கூரத்தக்கதாகும். அதுபோல இப்பொழுது ரவிசங்கர் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

ஆண்டவனோடு அந்தரங்கத்தில் பேசுபவர்களுக்கு ஒய் பாதுகாப்பு, இசட் பாதுகாப்பு தேவையா? ரவிசங்கர் விஷயத்தில் வேறு சில கருத்துகளும் கூறப்படுகின்றன. ரவிசங்கருக்கு இப்பொழுது ஒய் பிரிவு பாதுகாப்புத்தான் அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆர்வக் கோளாறினால் அவருடைய சீடர்கள், பக்தர்கள் இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் வெளிவந்துள்ளது. தன் மீது பக்தர்கள் மத்தியில் அனுதாபம் வரு-வதற்குக்கூட கில்லாடி சாமியார் இது போன்ற சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்கலாம். எது உண்மையோ அது வெளியில் கொண்டு வரப்-பட்டே தீர வேண்டும்! கெட்ட நோக்கத்தோடு துப்பாக்-கிச் சூடு நடந்திருந்தால், குற்றவாளி கண்டு பிடிக்கப்-பட்டு கண்டிப்பாகத் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.

சாமியார்களிடம் எப்படி கோடிகள் வருகின்றன? அதே நேரத்தில் இந்தச் சாமியார்களின் அன்றாட வேலைகள் என்ன? அவர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளால் சமுதாயத்திற்கு நன்மையா? அல்லது தனி மனிதருக்கு நன்மையா? என்பதெல்லாம் அறிவியல் ரீதியில் ஆராயப்பட வேண்டும். இந்தச் சாமியார்களின் வேடத்தை நம்பும் மக்கள் தங்கள் ;பொருள்களை இழக்கிறார்கள், காலத்தைக் கரியாக்கு கிறார்கள். இந்த மனிதசக்தி நாசத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். மேலும் இவர்களுக்கு இவ்வளவு சொத்துகள் எப்படி குவிகின்றன? வரவுக்கான கணக்குகள் என்ன? வெளிநாடுகளில் கூட சொத்துகளைக் குவித்து உள்-ளார்களே, இது எப்படி சாத்தியம்? (சந்திரா சாமியார்கள் ஆயுத பேரம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆக-வில்லையா?)

சாமியார்கள் மீது விச்சரணை தேவை: சமுதாயத்தில் பல அவலங்கள் தலை தூக்குவதற்கு இந்தச் சாமியார் தொழில் கரணியாக இருப்பதால் இதன் பின்னணியைக் கண்டறிந்து தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியமாகிறது. சாமியார்களால் சமுதாய முன்னேற்றத்திற்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ ஒன்றும் ஆகப் போவதில்லை; மாறாக மனித சக்தி பாழ்படுத்தப்படுகிறது. இது குற்றங்களிலேயே மாபெரும் குற்றமாகும். எனவே இவர்கள் மீது விசாரணைகள் அவசியம்தேவை! மத்திய மாநில அரசுகள் அலட்சியப்படுத்தக்கூடாது!

வீரமணியின் பின்னணி என்ன?

  1. வீரமணி எப்படி திகவின் தலைவர் ஆனார்?
  2. வீரமணி பெரியாரின் வாரிசு என்று அந்த டிரஸ்டின் தலைவர் ஆனாரா இல்லை, வலுக்கட்டயமாக பறித்துக் கொண்டாரா?
  3. நாத்திகம் பேசும் வீரமணியிடம் எப்படி கோடிகள் வருகின்றன?
  4. தான் நடத்தும் நிகர்நிலை பல்கலைக்கழகம் தகுதியற்றது என்று உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப் பட்டது குறித்து வெட்கமாக இல்லையா?
  5. பெரியார் மணியம்மை பல்கழகம் மற்ற ஊழல்களில் மாட்டிக் கொண்டது அழகாக இருக்கிறதா?
  6. உள்ள நிலையைக் காப்பாற்றக் கொள்ள லட்சங்களில் சேகரிக்க – வசூலில் இறங்கியிருப்பது நியாயமானதா?
  7. தமிழ்நாடு சரித்திர பேரவை மாநாட்டின்போது, பேராளர்களை சரியாக உபசரிக்காமல், குளிக்கக் கூட வழியின்றி அலையவிட்டது முதலியன நன்றான விஷயங்களா?
  8. நாத்திக வேஷத்தில் இந்து விரோத பிரச்சாரத்தை மட்டும் செய்துவருவது “சமதர்மம்” / செக்யூலரிஸம் ஆகுமா? இதனை அவர் பல்கலை மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் புரிந்து கொண்டு கேட்டால், என்ன செய்வார்?
  9. ………………………………………

இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மேள தாளங்கள், பேண்டு வாத்திய இசை முழங்க உற்சாக வரவேற்பு!

மே 21, 2010

தூத்துக்குடி: அறிவுலக ஆசான் சிலை திறப்பு விழா: தமிழர் தலைவருக்கு பேண்டு வாத்தியம் இசை முழங்க வரவேற்பு

பகுத்தறிவு போர்வையில் எதையுமே மாறாக – எதிர்மறையாக செய்யும் இவர்கள் வீரமணி வரும் போது ஒப்பாரி வைக்கலாமே?

ஐயோ, ஐயய்யோ, வந்துட்டாரய்யா, வந்துட்டாரய்யா, என்று கூவலாமே?

மேள தாளங்கள், பேண்டு வாத்திய இசைகளுக்குப் பதிலாக பறைமேளம் அடிக்கலாமே?

மாலை-சால்வைக்கு பதிலாக வேறு ஏதாவது போடலாமே?

சிரிப்பதற்கு பதிலாக அழலாமே?

பகுத்தறிவு, தன்மானம், சுயமரியாதை, இனமானம் முதலியவை அப்பொழுது மழுங்கிவிடடகின்றனவோ?

தூத்துக்குடி, மே 20_ தூத்துக்குடியில் அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழாவில் கலந்து-கொள்ள தூத்துக்குடி வந்த தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலை-வர் கி. வீரமணி அவர்-களுக்கு ரயில் நிலை-யத்-தில், மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மேள தாளங்கள் முழங்க உற்-சாக வரவேற்பு அளிக்கப்-பட்டது.

இன்று பெரியார் சிலை திறப்பு: தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலை தென்பாகம் காவல் நிலையம் அருகில் அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா இன்று மாலை சுமார் 6 மணி-யளவில் நடைபெறுகிறது. தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழர் தலைவரும், திரா-விடர் கழகத் தலைவரு-மான கி. வீரமணி அவர்-கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

மாலை பேரணி: முன்னதாக மாலை 4 மணியளவில் கழகத் தோழர்கள் பங்கேற்கும் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், தீமிதி நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்-சிகளை தலைமை நிலை-யச் செயலாளர் வீ. அன்பு-ராஜ் 3 ஆவது மைல் என்ற இடத்தில் தொடங்கி வைக்கிறார். வரலாற்றுச் சிறப்பு-மிக்க இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று (20.5.2010) காலை தூத்-துக்குடி வந்து சேர்ந்த தமிழர் தலைவருக்கு உற்-சாக வரவேற்பு அளிக்கப்-பட்டது.

தூத்துக்குடியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிக்கு, பெரியார் சிலை அமைப்-புக் குழு புரவலரும், தமிழக சமூக நலத்துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் தலைமை வகிக்க, மாவட்ட திரா-விடர் கழகத் தலைவர் பேரா. கனகராசு வர-வேற்புரை வழங்குகிறார்.  நிகழ்ச்சிக்கு, திராவிடர் கழகப் பொதுச்செய-லாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செய-லாளர் என். பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்-ணன், மேயர் கஸ்தூரி தங்கம், தென் மாவட்ட திராவி-டர் கழகப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் தே.எடிசன் ராஜா ஆகி-யோர் முன்னிலை வகிக்-கின்றனர். திராவிடர் கழகம் நடத்தும் சமூக விழிப்பு-ணர்வூட்டும் நிகழ்ச்சியை-யொட்டி தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் முனிய-சாமி நன்றியுரை நிகழ்த்து-கிறார்.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில், பேண்டு வாத்திய இசை முழங்க தமிழர் தலைவருக்கு உற்-சாக வரவேற்பு கொடுக்கப்-பட்டது. தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுடன் தலைமை நிலைய செயலா-ளர் வீ. அன்புராஜ் அவர்-களும் உடன் சென்றிருந்-தார்.

ரஞ்சிதாவிற்காக வருந்தும் லெனின் குருப்!

ஏப்ரல் 3, 2010

புளுஃபிலிம் மாதிரி படம் எடுத்த லெனினின் படமெடுத்தது பற்றிய விளக்கம்!

நித்யானந்தாவை படம் பிடித்தது எப்படி? லெனின் விளக்கம்

  • நான் ரஞ்சிதாவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
  • சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி வீடியோ எடுக்கும் போது அவர் சிக்கிக் கொண்டார்.
  • இதற்காக வருந்துகிறேன்.
ரஞ்சிதாவிற்காக வருந்தும் லெனின் குருப்: நித்யானந்தா பற்றி ஒரிஜினல் சி.டி.யை கர்நாடக போலீசாரின் விசாரணையின் போது ஒப்படைத்து இருக்கிறேன். என்னுடன் அவர் டெலிபோனில் பேசி மிரட்டிய ஆடியோ கேசட்டையும் போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறேன். நித்யானந்தா என்னை சமரசத்துக்கு வருமாறு அழைத்தார். நான் மறுத்ததால் என்னை மிரட்டினார். நான் ரஞ்சிதாவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி வீடியோ எடுக்கும் போது அவர் சிக்கிக் கொண்டார். இதற்காக வருந்துகிறேன். எனது எண்ணம் சாமியாரைப் பற்றி வெளி உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதுதான்.
லெனின் குருப் ஜஞ்சிதாவிற்காக வருத்தப்படுவது ஆச்சரியமான விஷயம்தான்!
பிறகு நித்யானந்தாவிடம் ரஞ்சிதாவிற்காக பதிலாக இருக்கவேண்டிய நடிகை அல்லது பெண் யார்?
லெனின் குருப்பிற்கு ரஞ்சிதா மீது மட்டும் ஏன் அவ்வளவு கரிசனம்?
ஒருவேளை மலையாளம் ஸ்டைலில் ரஞ்சிதா வேலை செய்தது காட்டிக்கொடுத்துவிட்டதா?
அத்தகைய ஸ்டைலை குருப் தான் சொல்லிக்கொடுத்ததா?
இதனால் திசைத் திருப்ப விரும்பும் படலம் தான் இத்தகைய வெளிப்பாடா?
“.…………சாமியாரை வீடியோ படம் எடுத்தேன். வீடியோ கேமராவை நான் சாமியாரின் படுக்கை அறையில் வைக்கவில்லை“!
  • துவும் வேடிக்கையாகவே உள்ளது –…….சாமியாரை வீடியோ படம் எடுத்தேன். வீடியோ கேமராவை நான் சாமியாரின் படுக்கை அறையில் வைக்கவில்லை
  • அப்படியென்றால், படுக்கையறை காட்சிகளை படம் எடுத்தது யார்?
  • இல்லை தா சாமியாரை மட்டும் வீடியோ எடுத்தேன் என்றால், ரஞ்சிதாவை, யாரோ எடுத்தார்கள் என்று அர்த்தமா?
  • லெனின் சொல்லவருவது என்ன?

நித்யம் அனந்தம் தரும் ஊடக விபச்சாரிகள்: நித்யானந்தா நடிகை ரஞ்சிதா விவகாரத்தில் புதுப்புது தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ காட்சிகளை சாமியாரின் சீடர் லெனின் வெளியிட்டார். இது சம்பந்தமான வழக்குகள் அனைத்தும் கர்நாடக போலீசிடம் தமிழக போலீஸ் ஒப்படைத்து விட்டது. கொலை மிரட்டல் உள்பட 2 வழக்குகள் மட்டும் சென்னை போலீசில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தைப் பின்பற்றும் கர்நாடகம்: நித்யானந்தா வீடியோ வெளியான பின்பு முதல் முறையாக லெனினிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது நித்யானந்தாவின் நடவடிக்கைகள் பற்றி போலீசார் பல்வேறு கேள்விகளுக்கு லெனின் பதில் அளித்துள்ளார்.

இதுபற்றி லெனின் குருப் / குருப் லெனின் / ஸ்ரீநித்ய தர்மானந்தா கூறியதாவது: நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் நான் பணிபுரிந்தேன். அப்போது நித்யானந்தா தவறான நடவடிக்கையில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதனால் அவரது தவறான நடவடிக்கைகளை வெளி உலகுக்கு காட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். எனவே சாமியாரை வீடியோ படம் எடுத்தேன். வீடியோ கேமராவை நான் சாமியாரின் படுக்கை அறையில் வைக்கவில்லை. அங்குள்ள சிலர் எனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் தான் கேமராவை வைக்க உதவினர். வீடியோவில் சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டுள்ளன.

லெனினுக்கே மாமா வேலைசெய்தவர்கள்
: முழு சி.டி.யை கர்நாடக போலீசிடம் ஒப்படைத்து இருக்கிறேன். வீடியோ எடுக்க உதவியவர்களை வெளியிட மாட்டேன். அவர்கள் உதவியதால் தான் வீடியோ எடுக்க முடிந்தது. அந்த வீடியோவை நான் வெளியிட்டேன். இதில் என் பங்கு அவ்வளவுதான். நித்யானந்தாவை ஆயிரக்கணக்கானவர்கள் கடவுளாக பாவித்து வழிபடுகிறார்கள். அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக வீடியோவை வெளியிட்டு நித்யானந்தாவின் உண்மையான சொரூபத்தை காட்டினேன். ஆசிரமத்தில் உள்ள மேலும் 2 பெண்கள் நித்யானந்தா பற்றி என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களையும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி உள்ளார். ஒரு ஆணும், பெண்ணும் நித்யானந்தா பற்றி என்னிடம் தெரிவித்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதன் பிறகு தான் நித்யானந்தா பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். 3 மாதத்துக்கு முன்புதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் இன்னும் ஆசிரமத்தில் உள்ளார். அவர் நித்யானந்தாவுக்கு எதிராக முறைப்படி புகார் தெரிவித்துள்ளார்.

ரஞ்சிதாவிற்காக வருந்தும் லெனின் குருப்: நித்யானந்தா பற்றி ஒரிஜினல் சி.டி.யை கர்நாடக போலீசாரின் விசாரணையின் போது ஒப்படைத்து இருக்கிறேன். என்னுடன் அவர் டெலிபோனில் பேசி மிரட்டிய ஆடியோ கேசட்டையும் போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறேன். நித்யானந்தா என்னை சமரசத்துக்கு வருமாறு அழைத்தார். நான் மறுத்ததால் என்னை மிரட்டினார். நான் ரஞ்சிதாவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி வீடியோ எடுக்கும் போது அவர் சிக்கிக் கொண்டார். இதற்காக வருந்துகிறேன். எனது எண்ணம் சாமியாரைப் பற்றி வெளி உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதுதான்.

இமயமலையில் பதுங்கியுள்ள நித்யானந்தாவை ரஜினியை விட்டுத் தேடச் சொல்லலாமா?

மார்ச் 31, 2010

இமயமலையில் பதுங்கியுள்ள நித்யானந்தாவை ரஜினியை விட்டுத் தேடச் சொல்லலாமா?

தினகரன் இன்று இப்படியொரு செய்தியை வெளியிட்டுள்ளது!

சொல்வதெல்லாம் “நிஜம்” தான்: அது சன்-குழுமத்தைச் சேர்ந்தது மட்டுமன்றி, அரசியல் பலத்தையும் கொண்டுள்ளது. ஆகவே அது பொய்யாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதாவது சொல்வதெல்லம் “நிஜம்” தான்!

இமயமலையில் நித்யானந்தா பதுங்கல்?

பதிவு செய்த நாள் 3/31/2010 3:43:23 PM
http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=1587&id1=12

தலைமறைவாக உள்ள நித்யானந்தா! பெங்களூர்: தியான பீடம் மற்றும் அதன் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்கிடையே நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கு, கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. சென்னை போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரின் ஆங்கில மற்றும் கன்னட மொழிபெயர்ப்பை சிஐடி சூப்பிரண்டு யோகப்பா சமர்ப்பித்தார். கோர்ட்டில் அவர் கூறுகையில், ‘‘நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க 2 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நித்யானந்தாவின் இருப்பிடம் தெரியவில்லை. ஆவணங்களை மொழி பெயர்த்ததை தவிர, இந்த வழக்கில் வேறு முன்னேற்றம் எதுவும் இல்லை’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதி அரளி நாகராஜ், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 6&ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கு தொடர்பாக நித்யானந்தா தனது ஆட்சேபணையை தாக்கல் செய்யவும் நீதிபதி அனுமதி வழங்கினார். தியான பீட தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியுள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பெங்களூரு, நித்யானந்தா, கருணாநிதி: ஜெயலலிதாவிற்கு எப்படி ஹைதராபாதோ, கருணாநிதிக்கு பெங்களூரும், மஹாபலிபுரமும். பெங்களூரில் எல்லாமே உண்டு. ஆனால், மஹாபலிபுரம், இப்பொழுது “செக்ஸ்-டூரிஸ’த்திற்கு உலகப் புகழ் பெற்றுவிட்டது. ஜோ அங்குதான் ஜாலியாக இருந்தான். வில்-ஹியூம் சின்னவீடு வைத்திருந்தான். அவன் ரஜினி படத்திலும் நடித்து இருக்கிறான்!

பெங்களூரு, நக்கீரன் கோபால், ரஜினி காந்த், கருணாநிதி: இவற்றிற்கெல்லாம் நெருங்கிய தொடர்பு உள்ளது. முன்னம், சந்தனக் கடத்தல் வீரப்பன் விஷயத்தில் கோடிகள் பறிமாற்றங்கள் நடந்தன என்றெல்லாம் சட்டசபையிலேயே பேச்சு அடிபட்டபோது, இவர்கள் அதில் சம்பந்தப் பட்டுள்ளதாக விவாதம் வந்தது.

இமயமலை, ரஜினி காந்த், நித்யானந்தா: தினகரன் இப்பொழுது “இமயமலையில் நித்யானந்தா பதுங்கலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளதால், இந்த சம்பந்தமும் இன்று முக்கியத்துவம் பெறுகிறது. இனி கருணாநிதி ஆணையிடுவது தான் பாக்கி. ஆணையிட்டால், உடனே ரஜினியை இமயமலைக்கு அனுப்பி, நித்யனந்தாவைப் பிடித்துவிடலாம்!

நித்யானந்தாவுடன் நிர்வாண நடனம் ஆட அமெரிக்காவிற்கு சென்ற நடிகைகள்!

மார்ச் 30, 2010

நித்யானந்தாவுடன் நிர்வாண நடனம் ஆட அமெரிக்காவிற்கு சென்ற நடிகைகள்!

சன் – டிவி, நக்கீரன், தினகரன்……இவர்களையெல்லாம் மிஞ்சிவிடக்கூடிய நிலையில், ஒரு அமெரிக்க சாமி, அமெரிக்கா ஸ்டைலில் செக்சஸ்-புகார் கொடுத்துள்ளது (மார்ச் 2010), அனைவர்க்கும் ஜொல்லுவிடும் வகையில் உள்ளது.

டக்ளஸ் மெக்கல்லர் மெகா டகிள் விட்டுள்ளரா, இல்லை உண்மையா என்று அந்த “நடிகைகள்” தாம் வந்து விளக்கம் சொல்லவேண்டும்.

லெனின் குருப் வீடியோவைவிட இந்த டக்ளஸ் சொல்வது, புளூ ஃபிலிமையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது!

# அமெரிக்கா வரும்போது, அவரது தனிப்பட்ட குடியிருப்பில், அழகான பெண்களுடன்தான் இருப்பார். அவர்களுடன்தான் சாப்பிடுவார் [அதென்ன “அழகான பெண்கள்” என்று புரியவில்லை. அப்பொழுது அந்த அமெரிக்க சாமியும் நல்ல சாமி இல்லை என்று தெரிகிறது. அதாவது கூட்டிக்கொடுக்கும் சாமி போல!].

# ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது, வேறு யாரும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு நித்யானந்தா என்னை கதவு அருகே காவலுக்கு நிற்க சொன்னார் [ஆஹா, இப்படி எந்த சாமியாவது, நான் மாமா வேலை இப்படித்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்வார்களா?].

இது நம்ம ஆட்களின் கொசுரு!

அமெரிக்காவுக்கு நித்தியானந்தா செல்லும்போதெல்லாம் அவருடன் இரு தமிழ்ப் பட நடிகைகளும் செல்வார்கள், அங்கு நிர்வாண நடனம் ஆடுவார்கள் என்றெல்லாம் சமீபத்தில் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.

ஆகவே, இதில் சம்பந்தப் பட்டுள்ள ஊடகங்கள் நிச்சயாமாக இந்திய சமுதாயத்தைக் கெடுக்கவே திட்டமிட்டு செயல்படுகின்றன என்றுத் தெரிகின்றது.

அவை ஏற்கெனவே ஒத்திகை பார்த்து புளூ ஃபிளிம் எனப்படுகின்ற ஆபாசமான ஆண்-பெண் புணர்ச்சி படங்களை வெளிப்படையாக ஆனால் சூசகமாக பொது ஊடகத்தில் பட்டப்பகலில், அதுவும், முக்கியமாக பரீட்சை நடக்கும் காலத்தில், திரும்ப-திரும்ப ஒளிப்பரப்பியது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த அமெரிக்க சாமியின் புகாரும் அதே ரிதியில்தான் உள்ளன. இங்கு இந்தியாவிலேயே லெனின் குருப் / குருப் லெனின் / நித்ய தர்மானந்தா இத்தகைய படங்களை தனக்குத்தெரிந்த தொழிற்நுட்பத்துடன் எடுத்துள்ளான் என்றால், நிச்சயமாக அந்த மாமா வேலை பார்த்த அமெரிக்க சாமி அதையும் மிஞ்சி புளூ ஃபிளிம் எடுத்தேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்ப்டுவதற்கு ஒன்றும் இல்லை!

சன் – டிவி, நக்கீரன், தினகரன்……முதலியவையெல்லாம் பிரத்யேகமாக ஒளிபரப்பு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒளிபரப்பினாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை!

அன்று சரோஜாதேவி புத்தகம் என்ற நிலையில் இருந்து, சில குறிப்பிட்ட பிரபலமான நடிகை-நடிகர்களுடன் புளூ ஃபிளிம் என்ற நிலையில் இருந்து, இப்பொழுதைய “நித்யானந்தா-ரஞ்சிதா மாதிரி” வெளிப்படையான ஒளிப்பரப்பிற்கு வந்து விட்ட விஷயங்கள், நாளைக்கு புளூ ஃபிளிமே ஒளிபரப்பப் பட்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

நிர்வாண ஓவியன், ஹுஸைன் அன்றே துச்சாதனையும் விஞ்சி ஆடைகளைக் களைந்து படம் காட்டினான். பாரத மாதாவையும் கற்பழித்தான். எந்த இந்தியனுக்கும் சொரணை வரவில்லை!

குஷ்புவின் கற்பின்மை தன்மைப் பற்றி உச்சநீதி மன்றமே உச்சம் குளிர இல்லை சூடேறும் வகையில் தீர்ப்புக் கொடுத்துள்ளது.

இனி கற்ப்பைப் பற்றியோ, உட்லுறவுக் கொல்வது பற்றியோ கவலைப் படவே வேண்டாம்.

திருமணத்திற்கு முன்போ, பின்போ நீதிமன்றமே சொல்லிவிட்டது!