Archive for the ‘படுக்கையறை’ Category

காந்த செக்ஸ் படுக்கை விற்ற ஸ்ரீநித்ய தர்மானந்தா!

மார்ச் 7, 2010

காந்த செக்ஸ் படுக்கை விற்ற ஸ்ரீநித்ய தர்மானந்தா என்கின்ற லெனின் குருப்!

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6812

காந்தப் படுக்கை மோசடியில் தர்மானந்தா: நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின், ஏற்கனவே, காந்தப் படுக்கை மோசடியில் சிக்கியவர். ஆத்தூரை சேர்ந்த லெனின், அழகாபுரத்தில் வசித்து வந்தார். இவர், காந்தப் படுக்கை விற்பனை செய்து வந்தார். ஒரு காந்தப்படுக்கை விலை 12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. காந்தப் படுக்கையில் “உறவு’ கொண்டால், உணர்வுகளை அதீதமாக தூண்டி விடும் என, பொய் பிரசாரம் செய்யப்பட்டது. அதை நம்பி, காந்தப்படுக்கையை வாங்கிய ஏமாந்த தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் போலீசில் அடுக்கடுக்காக புகார் அளித்தனர்.

magnetic_floating_bed

magnetic_floating_bed

காந்தப் படுக்கையில் “உறவு’ கொண்டால்: காந்தப் படுக்கையில் “உறவு’ கொண்டால், உணர்வுகளை அதீதமாக தூண்டி விடும் என, பொய் பிரசாரம் செய்யப்பட்டது. அதாவது செக்ஸ் அதிகமாக வரும் என்றார்களாம். நம்பிவிட்டனராம், 60 வருடங்களாக பெரியார் பால் குடித்து வந்த பகுத்தறிவுவாதிகள். அதாவது அவர்களது பிரச்சாரத்தை விட லெனின் பிரச்சாரம்தான் எடுபட்டது போலும்!

magnetic-bed-example

magnetic-bed-example

வேறு தொழில் செய்யாமல் இந்த தொழிலை ஆரம்பித்தார்: இப்பிரச்னை, தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, லெனின் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சில காலம், வேறு தொழில் எதுவும் செய்யாமல் லெனின், வீட்டில் இருந்து வந்தார். நித்யானந்தாவின் புகழ் பரவிய நிலையில், அவரை சேலத்துக்கு அழைத்து வந்தார். ஆன்மிக வழியில் தன்னை தயார் படுத்தி கொண்ட லெனின், தன் பெயரை தர்மானந்தா என மாற்றி கொண்டு, நித்யானந்தாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக விளங்கி வந்தார். தற்போது, “சிடி’ பிரச்னையில் சிக்கியுள்ளதால், நித்யானந்தா தரப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

magnetic-bed

magnetic-bed

இப்படங்கள் எல்லாம் உதாரணத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளன. அதன் பயன்கள், விளைவுகள் பற்றி எந்தவிதமான கருத்துகளையும் கொள்ளவேண்டாம்.

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா ஓட்டமா, ரஞ்சிதா சிடி, நடிகைகள் லிஸ்ட்!

மார்ச் 5, 2010

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா ஓட்டமா?

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28140

ரஞ்சிதா 1992ல் பாரதி ராஜா இயக்கிய நாடோடி தென்றல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் பெரிய மருது, சத்யராஜுடன் அமைதிப்படை, அர்ஜுனுடன் கர்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.

மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்தார்.

கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியாயின. இதற்கு பதில் அளித்து ரஞ்சிதா கூறும்போது, எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக்கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்றார்.

தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் ரஞ்சிதா வசித்து வந்தார். சில வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதன் மூலம் மாதம் ரூ. 30 ஆயிரம் வரை வாடகை வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா உல்லாசமாக இருப்பது போன்று பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன.

வீடியோ படங்கள் பற்றி கருத்து கேட்க அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. வீடும் பூட்டி கிடக்கிறது. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2ஆம் தேதி இச்செய்தி வெளியானதில் இருந்து நித்தியானந்தாவும் தலைமறைவாகிவிட்டார்.

நித்யானந்தரும் இப்போது தலைமறைவாகியுள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வெளிமாநிலத்துக்கு ஓடிப் போய்விட்டதாக பெங்களூரில் உள்ள ஆஸ்ரம ஊழியர் ஒருவரே கூறியுள்ளார். இந்த செக்ஸ் வீடியோக்கள் வெளியானபோது, நித்யானந்தர் தனது பெங்களூர் ஆசிரமத்தில்தான் இருந்தாராம். ஆனால் நிலைமை மோசமாவதை உணர்ந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
அவரும் ரஞ்சிதாவும் பத்ரிநாத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக வெளிநாடு பயணம் போகும்போது ரஞ்சிதாவையும் அழைத்துச் செல்வாராம் நித்யா. இப்போதும் அதே பாணியில் அழைத்துச் சென்றிருக்கலாம் என்கிறார்கள்.

நித்யானந்தா மீது பணமோசடி புகார்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28139

நித்யானந்தா ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்திருப்பதாக சேலம் காவல்துறை ஆணையரிடம் அசோகன் என்பவர் புகார் மனு கொடுத்துள்ளார்.

புகார் கொடுத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசோகன்,

என்னுடைய ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலப்பிரச்சனை கோர்ட்டில் உள்ளது உள்ளது. அப்போது என்னிடம் நித்யானந்தா சாமியாரிடம் சென்றால் பிரச்சனை குறையும் என்று சிலர் சொன்னார்கள். பிரச்சனை குறையும் என்று நான் நித்யானந்தா ஆசிரமத்தை தொடர்பு கொண்டேன். எந்த பிரச்சனையானாலும் விண்ணத்தில் எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள்.

பின்னர் சேலம் ஆசிரமத்தை தொடர்பு கொள்ளுமாறு எனக்கு முகவரியும், போன் நம்பரும் கொடுத்தார்கள். அங்கு நான் சென்றுபோது நித்யானந்தா சீடர்கள், சாமியார் உங்கள் பிரச்சனையை குறைக்க சிறப்பு பூஜை நடத்துவதாக கூறியிருக்கிறார். அதனால் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமா சாமியார் கையில் கொடுங்கள். உங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்து வெற்றி கிடைக்கும் என்றனர்.

நானும் அதை நம்பி சாமியாரிடம் பணம் கொடுத்தேன். கேஸ் தோல்வி அடைந்தால் என்ன செய்வது என்று கேட்டேன். கேஸ் தோல்வி அடைந்தால் பணம் திரும்பி பெற்றுக்கொள்ளுங்கள் என்று சாமியாரின் சீடர்கள் சொன்னார்கள்.

இப்போது என்னுடைய கேஸ் கோர்ட்டில் தோற்றுவிட்டது. நான் சாமியாரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். அது முடியவில்லை. யாரும் சரியான பதில் சொல்ல மறுக்கிறார்கள் என்றார்.

நித்யானந்தாவிடமிருந்து என் மகனை மீட்டுத் தாருங்கள்: தமிழாசிரியர் கண்ணீர்

நித்யானந்தாவிடம் கல்வி கற்க சென்ற தனது மகன் திரும்பி வரவில்லை என்றும், மகனோடு தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என்றும் திருச்சி அருகே உள்ள நவலூர் புட்டப்பட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இடும்பன் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் நமது செய்தியாளரிடம் பேசிய இடும்பன், திருச்சில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் இருக்கும் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். ஓய்வு பெற்ற தமிழாசிரியரான எனக்கு 4 பெண்கள், ஒரு மகன். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இதே ஊரைச் சேர்ந்த சித்த மருத்துவர் கோவிந்தராஜன் என்பவர் மூலம் நித்யானந்தா சாமியாரிடம் அறிமுகமானேன்.

சிகிச்சை பலன் அளித்தால், நானும் எனது குடும்பத்தார் அனைவரும், நித்யானந்தா முகாம்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தோம். 10ஆம் வகுப்பில் 440 மார்க் எடுத்து, கேட்டரிங் முடித்து விடுமுறையில் இருந்த எனது மகன் சுரேந்தரை, பெங்களூரில் உள்ள நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான லைப் ப்ரீவ் டெக்னாலஜி என்ற இலவச படிப்புக்கு அனுப்பினேன்.

பெங்களுரில் படிக்கும் பையனையும், சாமியாரையும் மாதம் ஒருமுறை நான் சந்தித்து வந்தேன். அப்போது நவலூர் புட்டப்பட்டு கிராமத்தில் ஆசிரமம் ஆரம்பிப்பித்தால், உங்களைப் போல் நிறைய பேர் பயன்பெறுவார்கள் என்று யோசனைகளை சாமியார் கூறினார்.

சாமியார் பேச்சைக் கேட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள இடத்தை ரூ.4 லட்சத்துக்கு எனது மருமகனிடம் இருந்து வாங்கினேன். இதற்கு சாமியாரின் பக்தர் அமெரிக்காவைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் பணம் கொடுத்தார். அந்த ஆசிரமத்துக்கு என்னை செயலாளராக நியமித்தார் நித்யானந்தா. நித்யானந்தா மீது நம்பிக்கை வைத்து எனது சொந்த பணத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து பாதி ஆசிரமம் கட்டி விட்டேன்.

ஆசிரமம் ஆரம்பித்த சிறிது நாட்களில், அப்பகுதியில் முகாம்கள் அமைக்க பணம் வசூல் செய்யுமாறும், ஆசிரமத்தில் செயலாளராக உள்ளவர்கள் கண்டிப்பாக பணம் வசூலீக்க வேண்டும் என்றும் சாமியார் கட்டளையிட்டார். மேலும் தன்னை சந்திக்க பக்தர்கள் விருப்பப்பட்டால், அவர்களிடமும் பணம் வசூலிக்க சொன்னார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28127

அப்போதுதான் எனக்கு இவர்கள் ஆசிரமம் நடத்தவில்லை. பிசினஸ் செய்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்தது. இந்த விஷயத்தை என் மகனிடம் சொல்ல முயற்ச்சித்தேன். அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

திருச்சியில் கடந்த 2009ஆம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி சாமியார் முகாமிட்டு, ஆசிரமம் செயலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினார் சாமியார். அந்த கூட்டத்தில், பணம் வசூல் செய்யுமாறு நன்கொடை ரசீது கொடுத்தார். நான் அதை வாங்க மறுத்தேன். அப்போது அத்தனை பேரின் மத்தியில் என்னை வெளியே போ என்று சாமியார் கத்தினார்.

கூட்டத்தை விட்டு வெளியே வந்த நான் எனது மகன் சுரேந்தரை தொடர்பு கொண்டேன். ஆனால் பேச முடியவில்லை. தொடர்ந்து போன் செய்த பின் ஒருநாள் சுரேந்தர் பேசினான். அப்போது சாமியாருடைய நோக்கம் பணம் சம்பாதிப்பதுதான். நீ அங்கே இருக்காதே, வந்துவிடு என்று சொன்னேன்.

ஆனால் சுரேந்தர், நான் சாமியாரிடம்தான் இருப்பேன் என்றும், என்னை பார்க்க வராதீர்கள் என்றான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் பெங்களூருக்கு நேரில் சென்று எனது மகனை பார்க்க முயற்சித்தேன். ஆனால் அங்கிருப்பவர்கள் சுரேந்தரை பார்க்க அனுமதிக்கவில்லை என்றார்.

தற்போது சுரேந்தர் தன்னுடைய பெயரை மாற்றி, நித்ய பிரபானந்தா என்று வைத்துக்கொண்டதாகவும், நித்யானந்தா போல நீண்ட முடிகளை வளர்த்துக்கொண்டதாகவும் கூறுகிறார் இடும்பன். எப்படியாவது எனது மகனை சாமியார் நித்யானந்தாவிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்று கண்ணீர் விடுகிறார் இடும்பன்.


நித்தியானந்தாவுடன் தொடர்பு வைத்துள்ள நடிகைகள் பட்டியல்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28096

நித்தியானந்தாவுடன் ரஞ்சிதாவை தவிர மேலும் பல பிரபல நடிகைகள் தொடர்பு வைத்துள்ளார்கள் என்று செய்திகள் வருகின்றன.  டிவி நடிகைகள் பலரும் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன.

நித்தியானந்தாவிற்கு நடிகைகளை அறிமுகப்படுத்தி வைத்தவரும் ஒரு நடிகைதான் என்கிறார்கள்.

ராமராஜனுடன் தங்கத்தின் தங்கம் படத்தில் நடித்த ராகசுதா, தொடர்ந்து தமிழச்சி, தம்பி,அம்முவாகிய நான் படங்களில் நடித்துள்ளார்.  இவர் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சென்னையில் நித்தியானந்தா நடத்திய யோகா வகுப்புக்கு சென்று வந்தார்.  நித்தியானந்தாவை பார்த்ததுமே அவர் காலில் விழுந்து வணங்கினார்.  அவருடைய மைசூர் ஆசிரமத்தில் சேர்ந்து சன்னியாசியாகவும் ஆனார்.

ரஞ்சிதா நடித்து தயாரித்த யோகா சிடி
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28100

நித்யானந்தா சாமியாருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளிவந்துள்ளது.  ரஞ்சிதாவிற்கு நீண்ட காலமாகவே நித்யானந்தாவுடன் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.

ரஞ்சிதா யோகா சிடி ஒன்றை தயாரித்து வந்துள்ளார்.  பல நிலைகளில் யோகா செய்து காட்டி அதற்கு விளக்கம் அளித்து அந்த சிடியை தயாரித்துள்ளார்.

அந்த சிடிக்கான எடிட்டிங் பணிக்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோவுக்கு சென்று வந்துள்ளார்.  அதற்குள் அவர் நித்யானந்தாவுடன் இருக்கும் வீடியோ வெளியாகிவிட்டது.

சில காலமாகவே எல்லோரிடமும்,  உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.   ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்லிவந்துள்ளார்.

இதனால் ரஞ்சிதாவிற்கு நீண்ட காலமாக நித்யானந்தாவுடன் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது.

ரஞ்சிதா சிடி கொடு:நச்சரிப்பும், எச்சரிக்கையும்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28099

சாமியார் நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் உல்லாச லீலைகளில் ஈடுபட்டிருக்கும் வீடியோ உலகெங்கும் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.

இந்த லீலை சிடி வடிவில் சென்னை பர்மா பஜாரிலும், ரிச்சி தெருவிலும் கிடைப்பதாக நேற்று தகவல் வந்தது.  இதையடுத்து இந்த இடங்களில் மக்கள் குவிந்தனர்.

ரஞ்சிதா சிடி கொடுங்க என்று கடைக்காரர்களை நச்சரித்தார்கள்.   கொடுக்க முடியுமா முடியாதா என்று சிலர் எச்சரித்தார்கள்.  அப்படி சிடி எதுவும் இல்லை என்று சமாளித்தார்கள்.

இந்த நிலை இன்றும் தொடர்கின்றது.  சிடி வேண்டும் என்று கேட்டு மொய்க்கிறார்கள் பர்மா பஜாரிலும், ரிச்சி தெருவிலும்

Dinakaran-photo

Dinakaran-photo

விமர்சனம்:

  • முன்பு, வீரப்பன் விஷயத்தில் எப்படி, அவன் இருக்கும் இடம் கோபாலனுக்கு மட்டும் தெரியுமோ, அது போல, இப்பொழுதும், இவ்விவகாரங்கள் எல்லாம், நக்கீரனுக்கு மட்டுமே தெரிந்துள்ளது.
  • அடுத்தது, தினகரனுக்கு எல்லா சிடிகளும், படங்களும் கிடைக்கின்றன.
  • ஒருவேளை இப்பத்திரிக்கைகளின் வியாபாரத்தைப் பெருக்கவும், அத்தகைய சிடிக்களின் வியபாரத்தை பெருக்கவும், அவர்கள் இம்மாதிரியான யுக்தியைக் கையாளுகின்றனரா?
  • இதெல்லாம் ஒன்றும் மக்களுக்குத் தேவையான / அத்தியாவசியமான பொருட்கள் இல்லை. ஆகவே, சூடாக இருக்கும்போது, நல்ல வியாபாரம் நடக்கும், பிறகு, மக்கள் மறந்து விடுவர்.
  • சொல்லி வைத்தால்போல், மேலே-மேலே செய்திகளை அடுக்குகிறார்கள். இதே மற்ற விஷயங்களில் இத்தகைய விழிப்புணர்வு, வேகம், துப்பறியும் திறமை இதெல்லாம் வருவதில்லை

கருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி!

மார்ச் 4, 2010

கயமைத்தன சாமியார்களை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது-கருணாநிதி

வியாழக்கிழமை, மார்ச் 4, 2010, 13:40[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/03/04/karunanidhi-condems-fake-swamijis.html

“கயமைத்தன சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது”, என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பகலில் சாமி-இரவில் காமி: “பகலில் சாமி-இரவில் காமியாகவும் வாழ்க்கை நடத்தி, பாமர மக்களின் வாழ்வையும் அறிவையும் பாழாக்கி வருகின்ற- பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை; பாமர மக்களுக்கு அடையாளம் காட்ட- பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி, பலத்த எதிர்ப்புக்கிடையிலேயும் பிரச்சாரம் செய்து வந்தும்கூட, படக் காட்சிகள், நாடகங்கள் இவற்றின் வாயிலாக எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை சித்திரித்தும் கூட, உதாரணமாக படமாக வெளிவந்த சந்திரகாந்தா, சொர்க்கவாசல், மனோகரா, வேலைக்காரி, பராசக்தி, தூக்குமேடை போன்றவற்றில் அந்தக் காவியுடைதாரிகளின் கபட நாடகத்தை எடுத்துக் காட்டியும் கூட, இன்னமும் புரிந்து கொள்ள முடியாத- புரிந்து கொண்டாலும் திருந்திக் கொள்ள இயலாத- மௌடீகத்தில் மூழ்கியோர்- நாட்டில், சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சமூக நலனும், கண்ணியமும் காக்கப்பட வேண்டுமென்று, அவற்றில் அக்கறை காட்டுகிற ஒரு மக்கள் நல அரசு அண்மையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிற; காட்சியாக்கி காட்டப்படுகிற; கயமைத்தன சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

தொலைகாட்சிகள் அளவுக்கு மீறும்போது – யார் கவலைப்பட்டார்கள்?: “அதே நேரத்தில் குற்றங்கள் நடைபெறுவதைவிட அந்தக் குற்றங்கள் எப்படி நடைபெற்றன- எங்கே யாரால் நடத்தப்பட்டன- எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதைச் சான்றாகக் காட்ட- வெளியிடப்டுகின்ற படங்களாயினும், செய்திகளாயினும் அவை அளவுக்கு மீறும்போது அவற்றை தொலைக்காட்சியிலோ பத்திரிகைகளிலோ படங்களாகப் பார்த்திடும் இளையோர் நெஞ்சங்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும்,  அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தம் என்பதையும் எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்டோர் அனைவரும் எண்ணிப் பார்த்து நடத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்வது ஓர் அரசின் கடமையாகும்.

அந்தக் கடமையை செய்கின்ற அரசு- அந்தக் கடமையைச் செய்கின்ற நேரத்தில்- அந்தக் கடமை வெற்றி பெற அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டியது தான் அனைவரும் மேற்கொள்ளும் சூளுரையாக இருக்க வேண்டுமேயல்லாமல் ஒரு தீமையை விவரிப்பதின் மூலம்- அது மற்றொரு பெரிய தீமைக்கு வித்திடுவதாக ஆகக்கூடாது.

அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத் தொடர்ந்து வெளிவருகின்ற செய்திகள் எவையாயினும் அவற்றை விவரம் உணர்ந்தோர் அரசுக்கும்- அரசின் காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டுமேயல்லாமல்- தாங்களே முன்னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது என்பது மட்டுமல்ல, இத்தகைய தீயவர்களுக்கு தங்கள் செயலை நியாயப்படுத்த வலிமை சேர்ப்பதாகவும் ஆகி விடும்.

“அருவருக்கத் தக்க செய்திகளை மற்றும் படங்களை வெளியிடுவது முள்ளை முள்ளால் எடுக்கும் காரியம் தானே” என்று சில ஏடுகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வாதிடலாம். முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் போதையேற்றும் கள்ளை அருந்தியவனை, மேலும் கள்ளையூற்றி திருத்தி முடியுமா? அது போலத்தான் இந்தச் செய்திகளும் படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்துவிடக் கூடாதே என்ற கவலையோடு அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இது போன்ற ஏமாற்று வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபலபுத்தி உடையவர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

இந்த அரசு எடுக்கின்ற நடவடி கைகளுக்கு உண்மையிலேயே பகுத்தறிவு வளர்த்து ஊருக்கு உபதேசிகளை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று எண்ணுகின்ற ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் “, என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

நாத்திகம், பகுத்தறிவு முதலியன: இவற்றாலும், உள்ள நல்ல சிந்தனைகள், கருத்துகள் பாதிக்கப் பட்டன, அழிந்தன, ஒழிந்தன எனும்போது, அவர்களும் தங்களைப் பற்றி மறு பரிசீலினை செய்து கொள்ளவேண்டும். போலிச்சாமியார்களைப் பற்றி உரிமையோடு பேசும் இவர்கள் போலித்தனமான அரசியல்வாதிகளாக, போலி சமதர்மவாதிகளாக, போலி -செக்யூலரிஸ்டுகளாக இருப்பதை உணரவேண்டும். தமிழக மக்கள் தார்மீகமாக இவர்களால் எந்த அளவிற்கு பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதற்கு அவர்களே பொறுப்பாவார்கள்.

கிருத்துவ, மற்ற சாமியார்கள் உல்லாசத்தில் இருந்தபோது, ஏனிந்த கண்டிப்பு வீரம் வரவில்லை: இந்து-அல்லாத சாமியார்கள் எல்லாம் காவி ஆனிந்துகொண்டுதான் அயோக்கியத்தனம் செய்கிறான். அவர்களும் தான் காவிக்கட்டிக்கொண்டு “நந்தா” , “ஸ்வாமி” என்ற பெயர்களில் உலா வருகிறார்கள், ஆஸ்ரமம் நடத்துகிறார்கள், பாலியல் கலவி செய்கிறார்கள், வீடியோ, படங்கள் எடுக்கிறார்கள், ஏன் இணைத்தளங்களிலேயே போட்டுக் காட்டுகிறார்கள், ஆனால், அப்பொழுதெல்லாம் கருணாநிதிக்கு ஒன்றுமே வரவில்லையே? ஏன்?

  • சன், நக்கீரன் முதலியவர்களுக்கு அப்பொழுது அப்படங்களை வெளியிடவில்லையே ஏன்?
  • பல கிருத்துவ சாமியார்கள் பலான விஷயங்களில் ஈடுபடுகிறார்கள் என்ற செய்திகளுடன் நிறுத்திக் கொள்கிறார்களே ஏன்?
  • வீடியோ அதாரங்கள் அங்கு ஏன் வருவதில்லை?
  • ஏன் அங்கு வீடியோக்கள் வேலைசெய்யாதா?
  • போலிகளிலும் கூட, இந்து-காவி சாமியார்களிடம்தான் வீடியோ பிடிக்குமா, வேலை செய்யுமா?
  • ரஞ்சிதாக்களுக்கு அங்கும் குறைவில்லையே, பிறகு ஏன் அவை ஒளிப்பரப்பப்படுவதில்லை?
  • இவ்வாறு, “பகலில் சாமி, இரவில் காமி” விஷயங்களில்கூட, நாங்கள் பலான மாதிரி பார்ப்போம், ……………..என்றால் அதென்ன காமித்தனம்?

பரீட்சை நேரத்தில் உங்கம்மா, அப்பா படுக்கயறைக் காட்சியை ஒளிபரப்புவாயா?

மார்ச் 4, 2010

பரீட்சை நேரத்தில் உங்கம்மா, அப்பா படுக்கையறைக் காட்சியை ஒளிபரப்புவாயா?

இத்தகைய கனமான வார்த்தைகளை உபயோகப் படுத்துவதற்காக மன்னிக்க வேண்டும்.

ஆனால், இதன் பின்னணியில் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை, இந்தியர்களைக் கேவலப் படுத்த வேண்டும் என்ற ரீதியில் இறங்கியுள்ள கூட்டங்கள் தான் செயல்படுவதாக உள்ளன.

உள்ள நாத்திக அரசும் தாராளமாகவே ஆதரிப்பது தெரிகிறது.

துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் மாபெரும் செக்ஸ் அம்பலம்: துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் மாபெரும் செக்ஸ் அம்பலத்தை, படுக்கயறைக்கேச் சென்று படம் பிடித்து வெளிக்காட்டிய செய்தியாளர்களின் திறமையை, கட்டில் கலவி காட்சிகளை காட்டியேத்தீருவோம் என்ற டிவி விற்பன்னர்களின் சாமர்த்தியத்தை கவனிக்கும்போது, மிகவும் ஆச்சரியமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.

போலி சாமியார்களின் காவியை கிழித்தெரியவேண்டும்: சாமியார் என்ற ரீதியில் ஒரு நடிகையுடன் சல்லாபித்திருக்கும் அந்த போலியைத் தண்டிப்பதில், அவனது காவி உடையை உருவுதலில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் கற்ப்பைப் பற்றி ஆர்பரித்து கொக்கரிக்கும் நடிகர்-நடிகைகளும் தமது குற்றங்களிலிருந்து தப்ப முடியாது. சம்பந்தப் பட்டிருக்கும் அரசியல்வாதிகளும் அத்தகைய குற்றங்களில் சமமாகவேத் தண்டிக்கப்படுவதற்கு பாத்தியதையாக உள்ளார்கள்.

படுக்கறைக் கலவி காட்சிகளை பொது தொலைக்காட்சியில் காட்டுவது துப்பறியும் பத்திரிக்கைத்தொழிலா? நேற்று சன் மற்றும் வசந்த் தொலைக்காட்சியினர் இத்தகைய கலவிக்காட்சிகளை தொடர்ந்து, திரும்ப-திரும்ப காட்டியதற்கு பல பெற்றோர்கள் புகார் செய்துள்ளனர், ஏனெனில் 10+2 பரீட்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன, பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். உடனே ஏதோ தாங்கள் பத்திரிகா தர்மத்தைப் பின்பற்றுகிறார்போல, சாமியார் இவ்வாறு செய்துவிட்டார், மக்கள் விழிப்புணர்வாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வெளிப்படுத்திக் காண்பித்தோம் என்று சப்பைக் கட்ட ஆரம்பித்து விட்டனராம்!

நாத்திகம் என்ற பெயரில் ஊடகத்துறையில் இந்து-விரோத சக்திகள் அப்பட்டமாக வேலை செய்வது: ஊடகத் துறையில் நாத்திகம் போர்வையில் பெரியார்-அம்பேத்கர் என்று பேசிக் கொண்டும், இந்து பெயர்களை வைத்துக் கொண்டு உலாவருவது கிருத்துவ மற்றும் முஸ்லீம் இந்து-விரோத சக்திகள் தாம். இப்போது கூட பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்ற பெயர் அடிபடுகிறது.