Posts Tagged ‘தமிழர்’

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி!

பிப்ரவரி 28, 2013

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி!

விஷமத்தனமான பிரச்சாரம்: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாடும் சாக்கில் யார்-யாரோ அவரைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். கிருத்துவர்கள் அவர் ஏதோ ஏசுவை ஏற்றுக் கொண்டது போல பிட் நோட்டிசுகள் விடுகின்றனர், கிறிஸ்தவர்கள் அவர் கிருஸ்துவை ஏற்றுக் கொண்டதை போல பொய் பிரச்சாரம் செய்கின்றனர்[1]. அதுபோல நமது கருணாநிதியும் இப்படித்தான் 2008ல் பேசினார்[2]. இன்று திமுகவிற்குப் பிறகு, அதிமுக பதவிக்கு வந்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா விழாவில் பங்கு கொண்டு பேசியுள்ளார்[3]. “அண்ணா நாமம் வாழ்க, பெரியார் நாமம் வாழ்க” என்பவர், சுவாமி விவேகானந்தர், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி! 2008ல் பேசியதை இப்பொழுது ஏன் ஞாபகத்தில் கொண்டு வரவேண் டும் என்று கேட்கலாம். ஆனால், இதை வைத்துக் கொண்டுதான், 2013லும் கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று பார்க்கும் போது விவகாரம் புரிகின்றது. கருணாநிதியின் நக்கலான பேச்சை படிக்கவும்:

 

விவேகானந்தர்புகைபிடிப்பார்[4]: நீங்கள் சாமியாரிடத்திலே மோத விட்டாலும், மாமியாரிடத்திலே மோத விட்டாலும் நாங்கள் யாரும் அவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை. கட்டிடத்தைத்தான் எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச்சு என்று கேட்பீர்கள். விவேகானந்தரைப் பற்றி தலைவர்கள் பேசிக் கேட்க வேண்டும் என்ற ஆசையாலும், விவேகானந்தரைப் பற்றி பேசி அதிக நாளாகி விட்டது என்பதாலும்தான். மூட நம்பிக்கைகளை சாய்த்தவர் விவேகானந்தர். மத வெறி, ஜாதி வெறியைச் சாய்த்தவர். அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர். அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். மனம் சுத்தமாக இருந்தால் இவை எல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல்பட்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள்.

கருணாநிதியைத் தொடர்ந்து வீரமணியின் விஷமத்தனம்: ஆக பகுத்தறிவாளிகள், பெரியார் தாசர்கள் என்ற போர்வையில் இப்படியும் தூசிக்கலாம், தூஷணம் செய்யலாம், அதனை சந்தோஷமாக கிருத்துவர்கள் எடுத்தாளலாம் என்று தான் எடுத்துக் காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு “விடுதலை”யில் இதைப் பற்றி வெளிவந்துள்ளவை:

… எந்த வழியிலாவது காட்டவேண்டும் என்கிற கோபம் இயல்பானதே! ####### விவேகானந்தர் ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி என்ற பெயரில் இந்துத்துவா சக்திகள் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ளன. …

… வெளிப்படுத்து வார்கள். விவேகானந்தரின் அறிவுரைகள் என்ற நூல் சென்னை மயிலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தினால் 2008இல் வெளியடப்பட்டுள்ளது. நூலின் 83ஆம் பக்கத்தில்விவேகானந்தர் பின்வரும் இந்து …

சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர்150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு  மட்டும் …

… விவேகானந்தர்   ரதம் செல்லுகிறதாம் – அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவே கானந்தர் முற்போக்குப் பேசினார் – இளை ஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள். …

3.2.13 பிற்பகல் 11.00 மணி அளவில், தென் சென்னை மாவட்டத்தின் திருவல்லிக்கேணி  நீலம் பாசா தர்கா பகுதியில் அன்னி பெசன்ட் சாலை விவேகானந்தர் இல்லம் பின்புறம் திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் …

… மதத்திற்கு மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறதாம்.வெளியிடப்பட்டுள்ள பேச்சு முழுவதும் விவேகானந்தர்இயேசுவைப் போற்றிப் பேசுவதாக உள்ளதாம்.  ராம கிருஷ்ணா மடம் சார்பில் வெளியிடப்பட் டதைத்தானே எடுத்து போட்டிருக்கிறார்கள்? …

… நாத்திகன் என்று முழங்கினார் விவேகானந்தர். தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில்தான் லட்சியம் இருக்கும். லட்சியம் – இருக்கும்போது அங்கே வளர்ச்சி நிச்சயமாக இருக்கும். (நம்பு தம்பி நம்மால் முடியும், ஆகஸ்டு 2008) …

விவேகானந்தரின் 150ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்தவர் சுவாமி விவேகானந்தர் என்று பெருமையாகப் பேசுவார்கள். பல பேர் நினைத்துக் கொண்டு …

…  அதே நேரத்தில் சென்னைக் கடற்கரை சாலை என்ற மிக முக்கியமான பகுதியில் உள்ள விவேகானந்தர்இல்லத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாரிக் கொடுப்பதும் இந்த அரசுதான். திருவள்ளுவர் என்றால் உதாசீனம் -விவேகானந்தர் …

… அனைத்து மாநில அரசுகளும், பள்ளிப் பாடத்திட்டத்தில், நாராயண குரு, ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மிக தத்துவவாதிகளின் போதனை களைப் பாடமாக இணைக்க வேண்டும் – இவ்வாறு அவர் பேசியுள்ளார். …

இப்படி நாத்திகர்கள், கிருத்துவர்கள், பகுத்தறிவுவாதிகள், கிறிஸ்தவர்கள் முதலியோர் எப்படி, ஏன், எதற்காக சொல்லி வைத்தால் போல இப்படி ஒரே நேரத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

 

செய்திகளைப் பரப்புகிறார்கள், இணைதளத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

பிறகு இவற்றைத் தொகுத்து புத்தகம் வெளியிடலாம், ஆராய்ச்சிக் கட்டுரை போர்வையில் கருத்தரங்கங்களில் படிக்கப்படலாம்.

கிருத்துவ இலக்கியக் கழகம், ஏன் திராவிடர் கழகமே வெளியிடலாம்.

© வேதபிரகாஷ்

28-02-2013


[4] ஏப்ரல். 25, 2008 , தினத்தந்தியில், முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது என்று வெளியிடப்பட்டது.

சுவாமி விவேகானந்தர் – ஶ்ரீ ராமகிருஷ்ண மடம்: கருணாநிதி, ஜெயலலிதா – திராவிடகட்சிகளின் வேடங்கள்!

பிப்ரவரி 27, 2013

சுவாமி விவேகானந்தர் – ஶ்ரீ ராககிருஷ்ண மடம்: கருணாநிதி, ஜெயலலிதா – திராவிடகட்சிகளின் வேடங்கள் திராவிடத்துவத்தின் அந்தர்பல்டிக்கள்:

சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர், கருணநிதி, இதே கட்டிடத்தை “செந்தமிழ்” போர்வையில் இடிக்க திட்டம் போட்டார். ஶ்ரீ ராமகிருஷ்ண மட துறவிகள் மனு கொடுத்தபோது, மிரட்டியும் பார்த்தார்[1]. அன்பழகன் என்ற எஞ்சினியர் மூலம் சொல்லி அனுப்பி, காலிசெய்யுமாறு கூறினார். குத்தகை முடிவடைகிறது என்று ஒரு தொழிலதிபர் மூலம் அறிவித்தார்[2]. பிறகு உலகம் முழுவதும் கருவிற்கு எதிராக கருத்து உருவாகவே[3], அந்தர்பல்டி அடித்து சமாளித்தார். அந்த செயலைக் கைவிட்தாக ச்டட்டசபையிலேயே அறிவித்தார்[4]. திராவிட பாரம்பரையத்தை தனகேயுரிய பொய்மாலத்தால் காத்தார். நக்கலாக, அநாகரிகமாக, ஆபாசமாக, அவதூறக பேசுவதில், எழுதுவதில் வல்லவர் கருணாநிதி. 1970ல் ஒருமாதிரி, 2007ல் ஒருமாதிரி….இப்படி மாற்றி-மாற்றி பேசுவதில் கில்லாடி!

விவேகானந்தரின் கொள்கைகளின் ஆட்சி நடத்துவதாக பொய் பேசிய கருணாநிதி: கரு அப்பொழுது பேசியதை நினைவு கூர்ந்தால், ஒவ்வொரு திராவிடப்பூனை, திராவிடக் குஞ்சு, கழகக்கண்மணி, உடன் பிறப்புகள்முதலியோகளுக்குப் பைத்தியமே பிடித்து விடும். அப்பொழுது திராவிடத்தில் ஊறிய நிலையில், ஆங்கிலத்தில் வேறு பேசியுள்ளது. இதோ அந்த பூனை பேசியதைப் பாருங்கள்:

The name `Vivekananda’ means, one who can distinguish the right from the wrong. He was noble sage who had universal vision, which ennobled everyone who came in contact with him or with teachings.“Though he is not with us today, the flame he lit is still alight and from his teachings have sprung the conscience of India and faith in her unity. And his great message manking finds solace and confidence.“The memorial stands here today will be a sentinel guarding not only our frontiers but also our cultural traditions.“Swami Vivekananda always had before him the great motto of elevation of masses. His messages are always gospels of salvation, social elevation and equality for everyone.“I am very happy to inform on this historical occasion that the Tamilnadu government is wedded to the thoughts and gospels for which Swami Vivekananda stood. “விவேகானந்தர் என்றால் சரி-தவறு எதுவென்று பிரித்துப் பார்க்கும் தன்மையுள்ளவர். அவர் ஒரு உலகளாவிய பார்வைக் கொண்ட துறவி. அதனால், யார் அவருடைய தொடர்பு ஏற்பட்டாலும் அல்லது அவரது போதனைகளை அறிந்து கொண்டாலும் அவரை நல்வழிபடுத்தியது.“இங்கு இன்று நிற்கும் இந்த நினைவு மண்டமமானது, நமது கலாச்சார எல்லைகள் மட்டுமல்லாது, நமது கலாச்சாரப் பாரம்பரியங்களையும் காக்க வல்லது.“சுவாமி விவேகானந்தர் சாமன்ய மக்களை உயர்த்தவேண்டும் என்ற சிறந்த கொள்கையைக் கொண்டிருந்தார். அவரது போதனைகள் மீட்சி, சமூக ஏற்றம் மற்றும் சமூக-சமத்துவம் முதலியவற்றைப் பற்ரிதான் இருந்தது.“இந்த சரித்துவ முக்கியத்துவம் வாய்ந்தநேரத்தில் நான் ஒன்று சொல்லிக் கொள்ளப் பெருமைப் படுகிறேன், தமிழக அரசு சுவாமி விவேகானந்தருடைய போதனைகள் மற்றும் அவர் எதற்காக நின்றாரோ அவற்றை இணைத்துக் கொண்டு செயல்படவுள்ளது”

கருணாநிதி 1970 மற்றும் 2008[5]: சமஸ்கிருதத்தை வெறுக்கும், துவேஷிக்கும், அவதூறு பேசும் கரு சமஸ்கிருத சுலோகத்தைச் சொல்லி நல்ல பெயரை வாங்கிக் கொள்ள வேடம் போட்டது தெரியுமா? “உத்திஸ்டதா ஜாக்ரதா, ப்ரபய்வர்ன் நிபோததா”(“Uthistahtha Jagrata, Prapyavarn Nibhodhata” = (Arise, Awake and stop not till the goal is reached).). ஆமாம், அப்பொழுது முலமைச்சராக இருந்தபோது, செப்டம்பர் 2, 1970 அன்று உச்சரித்தது. இதை எந்த ஆரிய பூனையோ, சங்கராச்சாரியோ, மனுதர்மவாதியோ உச்சரிக்கவில்லை. இந்த திராவிடப் பூனைத்தான் உச்சரித்தது! செத்தப்பாடையை வாசித்து வாயைக் கழுவியதா இல்லையா என்று தெரியவில்லை!

2007ல் திருநெல்வேலியில் சுவானி விவேகானந்தர் தங்கிய இடம் இடிக்கப்பட்டது[6]: திருநெல்வேலியில், சுவாமி விவேகானந்தர் வந்திருந்த போது, அங்கிருந்த இடம் / வீடு, சரித்திரத்தன்மையே இல்லாமல் அமைதியாக இடித்துத் தள்ளினார்கள். அப்பொழுது ஏதோ காரணங்களுக்காக ஶ்ரீராமகிருஷ்ண மடமே கன்டுகொள்ளமல் இருந்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால் தான் போலும், அடுத்த வருடமே, இந்த திராவிட கபடு பூனை, கடற்கரையில் இருந்த விவேகானந்தர் இல்லத்தின் மீது கண்வைத்தது! இதோ அப்பொழுது சாமியார்களை மிரட்டி பேசிய பேச்சு:

சாதுக்கள் சவால் விடக்கூடாதுகலைஞர் அறிவுரைசுவாமி விவேகானந்தரைப் பற்றி கருணநிதி பேசிய  

அவதூறுகள்!

“எனக்கு ஒரு ஆசை – விவேகானந்தரைப் பற்றி நம்முடைய தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான் எல்லோரும் பேச அது இங்கே பரவ வேண்டும், ரொம்ப நாளாகி விட்டது விவேகானந்தரைப் பற்றி பேச என்பதற்காக –

அவர் மூட நம்பிக்கைகளையெல்லாம் சாய்த்தவர் – மத வெறிக்கு ஆளாகாதவர் – ஜாதி வெறியைச் சாய்த்தவர் – அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர் என்ற காரணத்தாலும், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – இவையெல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது மனம் சுத்தமாக இருந்தால் என்று எண்ணி சீர்திருத்த நோக்கங் களோடு செயல்பட்டவர்.

அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள்[7]. பாருங்கள், இடிக்கக் கூடிய மண்டபமா அது? இடிக்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு வலுவிழந்த மண்டபமா?

இல்லை; வலுவான மண்டபம். அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை, நினைக்கவுமில்லை, அதற்காக அந்தப் பக்கம் திரும்பவுமில்லை. “அந்த மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம், முறைப்படி தான் நடக்கிறோம் என்று அந்த மடத்தினுடைய பெரிய சாமியார் கூட சவால் விட்டிருக் கிறார். நான் அந்த சவால்களுக்கெல்லாம் பயப்படவில்லை. அது வேறு விஷயம்.

ஆனால், சாதுக்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வரக் கூடாது. அது விவேகானந்தருடைய கொள்கைக்கே – அவருடைய குருநாதர் இராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களுடைய கொள்கைக்கே விரோதமானது. இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது.

குமரிமுனையிலே அவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அமைத்து, அங்கே விவேகானந்தருடைய மண்டபத்தை போஷித்துப் பாதுகாத்து வருகின்ற இந்த அரசைப் பார்த்து சவால் விடுவது நல்லதல்ல, சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தருடைய விவேகமான பொன்மொழியைப் பின்பற்றுங்கள் என்று அவர்களைக் கேட்டுக் கொண்டு இதை இடிப்பதாகவோ அல்லது பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு செல்வதாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும் என்ற உண்மையை உங்களுக்குச் சொல்லி வீணாக நாம் அலட்டிக் கொள்ள வேண்டாம், பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாம், இந்த அரசைப் பொறுத்த வரையில் நாங்கள் தேடிய வரையிலே தற்காலிகமாக எங்களுக்குக் கிடைத்திருக் கிற இடம் அதே காமராஜர் சாலையில் பாலாறு இல்லம் – அந்தப் பாலாறு இல்லத்தில், சோளிங்கநல்லூரில் எங்களுக்கு அந்தப் பெரிய கட்டிடம் அமைகின்ற வரையில் தற்காலிகமாக செம்மொழி மையம் இங்கே இடம் பெறும், செம்மொழி நிறுவனம் பாலாறு இல்லத்தில் நடைபெறும் என்பதைத் தெரிவித்து அமைகின்றேன்”.

பாலாறு இல்லத்தில் தற்காலிக செம்மொழி மையம்: விவேகானந்தர் இல்லத்தை அரசு எடுப்பதாகக் கூறுவது தவறு – கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஏப். 25, 2008 (தினத்தந்தி) – தமிழ் செம்மொழி மையத்துக்காக விவேகானந்தர் இல்லத்தை எடுக்கவில்லை என்றும் அதன் அருகே உள்ள பாலாறு இல்லத்தில் தற்காலிக மையம் இடம் பெறும் என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

சட்டசபையில்: சென்னை விவேகானந்தர் இல்லம் தொடர்பாக சட்டசபையில் பல்வேறு கட்சிகள் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. அதை தகவல் கோரும் நிகழ்வாக எடுத்துக் கொண்டு எம்.எல்.ஏ.க்கள் பேச சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதித்தார். இந்த விவகாரம் பற்றி செங்கோட்டையன் (அ.தி.மு.க.), ஞானசேகரன் (காங்கிரஸ்), ஆறுமுகம் (பா.ம.க.), கம்பம் ராமகிருஷ்ணன் (ம.தி.மு.க.), செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் பேசினார்கள். விவேகானந்தர் இல்லத்தை அரசு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று செங்கோட்டையன், ஆறுமுகம், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். இவர்களுக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

விவேகானந்தர் இல்லம்: செங்கோட்டையன், ஞானசேகரன், ஆறுமுகம், ராமகிருஷ்ணன், செல்வம் ஆகியோர் விவேகானந்தர் இல்லம் குறித்த சில கருத்துக்களை கூறினர். இதிலே வேடிக்கை என்னவென்றால், இல்லாத ஒன்றைப் பற்றி, நடக்கப் போகாத ஒன்றைப் பற்றி அவர்கள் பேசினார்கள் என்பதுதான் ஆச்சரியப் படக்கூடியது. சென்னையில் 1897-ம் ஆண்டில் 9 நாட்கள் தங்கியிருந்து விவேகானந்தர் விரிவுரைகள் செய்ததால் அதன் நினைவாக சென்னை காமராஜர் சாலையில் உள்ள 27 ஆயிரத்து 546 சதுரஅடி பரப்பளவு கொண்ட விவேகானந்தர் இல்லத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு அரசு ஒப்படைக்க வேண்டும் என்று மடத்தின் தலைவர் கேட்டார். 24.2.1997 தேதியிட்ட உயர்கல்வித் துறையின் அரசாணைபடி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்த இல்லம் முதன்முதலாக ராமகிருஷ்ண மடத்திடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது. 3 ஆண்டு காலத்திற்கு, ஆண்டொன்றுக்கு குத்தகைத் தொகை ரூ.1,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

10 ஆண்டு குத்தகை: விவேகானந்தர் இல்லத்திற்கு நுழைவு வழி இல்லை எனக் கூறியதால் அந்த இல்லத்தின் முன்னுள்ள 8 கிரவுண்ட் 1,928 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தையும் குத்தகைக்கு அளிக்கும்படி ராமகிருஷ்ண மடம் செங்கோட்டையன், ஞானசேகரன், ஆறுமுகம், ராமகிருஷ்ணன், செல்வம்கோரியது. 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த நிலத்தையும் 3 ஆண்டுகால குத்தகைக்கு ஆண்டொன்றுக்கு ஆயிரம் ரூபாய் குத்தகைத் தொகை என தி.மு.க. அரசு வழங்கியது. மேலும், இதை 30 ஆண்டுக்கு குத்தகைக்குத் தர வேண்டும் என்று கேட்டனர். அமைச்சரவைக் கூட்டத்தில்தான் அதுபற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறினேன். விவேகானந்தர் இல்லத்தின் சந்தை மதிப்பு ரூ.2 கோடிக்கும் மேல் இருப்பதால், சலுகைக் குத்தகையாக மாதம் ஒன்றுக்கு ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் குத்தகைத் தொகையாகவும், குத்தகைக் காலத்தை 10 ஆண்டுகள் என்றும் நிர்ணயம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவு 28.1.2000 தேதியிட்ட உயர்கல்வித் துறை அரசாணை மூலம் வெளியிடப்பட்டது.

ஏன் அபகரிக்க வேண்டும்?: ஏதோ விவேகானந்தர் இல்லத்திலே உள்ளவர்களுக்கும் தி.மு.க. அரசுக்கும் தகராறு என்பதைப் போல் எழுதப்படுகிறது. `விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க தி.மு.க. ஆட்சி முயற்சி என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியது. அதை ஏன் அபகரிக்க வேண்டும்? என்று எனக்குத் தெரியவில்லை. விவேகானந்தரிடத்திலே எங்களுக்கு பகை எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், பகுத்தறிவு இயக்கத்தினுடைய கருத்துக்களை, பெரியாருடைய கருத்துக்களை, அண்ணாவுடைய கருத்துக்களைப் பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர். அப்படிப்பட்ட விவேகானந்தரிடத்திலே என்ன விரோதம்?

சாமியாரிடம் தள்ளி விட்டனர்: இதுவரையில், விவேகானந்தர் இல்லம் பற்றி நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை, கடிதமும் எழுதவில்லை. செம்மொழியாகத் தமிழை ஆக்கி அதைப் பரப்ப வழிவகைகளைக் காணவும், அதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்ற `ஐம்பெருங்குழு’, `எண்பேராயம்’ போன்ற அமைப்புக்கள் செயல்படவும் ரூ.76 கோடி ஒதுக்கப்படுகிறது. அதற்கு நீங்கள் ஒரு கட்டிடம், ஒரு அமைப்பு ஆகியவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. சோளிங்கநல்லூரிலே ஒரு நிரந்தரமான கட்டிடத்தை கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. தற்காலிகமாக அரசுக்குச் சொந்தமான இடம் தேடப்பட்டது. தற்காலிக இடம் பற்றி எண்ணிய நேரத்தில் யாரோ ஏதேதோ ஒரு கதை கட்டினார்கள். அது பலிக்காத காரணத்தால் இவர்களைச் சாமியார் பக்கம் தள்ளி விடுவோம் என்று சாமியார்களிடம் மோத விடுவதற்காக சில காரியங்களிலே ஈடுபட்டிருக்கிறார்கள்.

விவேகானந்தர் புகை பிடிப்பார்: நீங்கள் சாமியாரிடத்திலே மோத விட்டாலும், மாமியாரிடத்திலே மோத விட்டாலும் நாங்கள் யாரும் அவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை. கட்டிடத்தைத்தான் எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச்சு என்று கேட்பீர்கள். விவேகானந்தரைப் பற்றி தலைவர்கள் பேசிக் கேட்க வேண்டும் என்ற ஆசையாலும், விவேகானந்தரைப் பற்றி பேசி அதிக நாளாகி விட்டது என்பதாலும்தான். மூட நம்பிக்கைகளை சாய்த்தவர் விவேகானந்தர். மத வெறி, ஜாதி வெறியைச் சாய்த்தவர். அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர். அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். மனம் சுத்தமாக இருந்தால் இவை எல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல்பட்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள்.

சாமியார் விட்ட சவால்: இடிக்கக் கூடிய மண்டபமா அது? இடிக்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு வலுவிழந்த மண்டபமா? அது வலுவான மண்டபம். அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை, நினைக்கவுமில்லை. அதற்காக அந்தப் பக்கம் திரும்பவுமில்லை. `அந்த மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம், முறைப்படி தான் நடக்கிறோம்’ என்று அந்த மடத்தினுடைய பெரிய சாமியார் சவால் விட்டிருக்கிறார். நான் அந்த சவால்களுக்கு பயப்படவில்லை. ஆனால், சாதுக்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வரக் கூடாது. அது விவேகானந்தருடைய கொள்கைக்கும், அவருடைய குருநாதர் ராமகிருஷ்ண பரமஹம்சருடைய கொள்கைக்கும் விரோதமானது.

பாலாறு இல்லத்தில் மையம்: குமரிமுனையிலே அவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அமைத்து, இங்கே விவேகானந்தருடைய மண்டபத்தை போஷித்துப் பாதுகாத்து வருகின்ற இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது? அது நல்லதல்ல, சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தருடைய விவேகமான பொன்மொழியைப் பின்பற்றுங்கள். இதை இடிப்பதாகவோ அல்லது பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு செல்வதாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும் என்பது உண்மை. நாம் அலட்டிக் கொள்ள வேண்டாம். பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாம். அதே காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லம் எங்களுக்குக் தற்காலிகமாக கிடைத்திருக்கிறது. சோளிங்கநல்லூரில் பெரிய கட்டிடம் அமைகின்ற வரையில் தற்காலிகமாக பாலாறு இல்லத்தில் செம்மொழி மையம் இடம் பெறும்”, இவ்வாறு அவர் கூறினார்.

2013  –  ஜெயலலிதா  இப்பொழுது  அதே  இடத்தில்  விழாவைத்  துவக்கி  வைத்தார்: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழாவை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னையில் துவக்கி வைத்தார். விவேகானந்தர் பண்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு  தமிழகம் முழுவதும் ஓராண்டு தொடர் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இதற்கான துவக்க விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்றார். இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விவேகானந்தர் பண்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன் விவேக ஜோதி எனும் அணையா விளக்கையும் ஏற்றி வைத்தார்[8].  சென்னை கடற்கரை சாலையில் உள்ள சுவாமி விவேகானந்தர் இல்லத்தில் அவரது  150வது பிறந்த ஆண்டு விழாவை தமிழகம் முழுவதும் ஓராண்டு தொடர் கொண்டாட்டத்திற்கான விழா நடைபெற்றது.இந்த விழாவில் பங்கேற்க வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பேண்டு வாத்தியம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதா மேடை அருகே வைக்கப்பட்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி வணங்கினார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தர் முதலமைச்சருக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.இதையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கினார். தொடர்ந்து விவேகானந்தர் இல்ல வளாகத்தில் அமைய உள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அதையடுத்து விவேக ஜோதி எனும் அணையா விளக்கை முதலமைச்சர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து சுவாமி விவேகானந்தரின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு நூலை முதலமைச்சர் வெளியிட கௌதமானந்தர் பெற்றுக்கொண்டார்.  அதையடுத்து தேசிய இளைஞர் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பரிசுகள் வழங்கினார்.  ராமகிருஷ்ணா மடத்தின் மேலாளர் சுவாமி ஆசுதோசானந்தர் வரவேற்று பேசினார். அவரைத் தொடர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணா விஜயம் இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர் வாழ்த்துமடலை வாசித்து அளித்தார். அதைத் தொடர்ந்து சுவாமி கௌதாமனந்தர் ஆசி உரை வழங்கினார். இந்த விழாவின் இறுதியில் சுவாமி தர்பிஷ்டானந்தர் நன்றி கூறினார். விழாவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், விவேகானந்தர் மிஷன் மற்றும் மடத்தில் பணிபுரியும் துறவியர்கள், மாணவ  மாணவியர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் தொடக்கவிழா, சென்னை விவேகானந்தர் இல்லத்தில் இன்று நடந்தது. முதல்வர் ஜெயலலிதா தலைமை வகித்து, விழாவை தொடங்கி வைத்து, ‘விவேக ஜோதி தீபம்’ ஏற்றினார். தொடர்ந்து விவேகானந்தர் பண்பாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டி, விவேகானந்தரின் புகைப்பட தொகுப்பு நூலை வெளியிட்டார். தேசிய இளைஞர் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது[9]:

முதலமைச்சர் ஜெயலலிதா பேசியது: இந்த இல்லம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ராமகிருஷ்ண மடம் துவங்கியதில் இருந்து முதல் 9 ஆண்டுகள் அது இங்கு தான் இயங்கியது. சுவாமி விவேகானந்தர் இந்த இல்லத்தில் 9 நாட்கள் தங்கி வீர உரையாற்றியிருக்கிறார். அப்படிப்பட்ட இல்லத்தில் இருந்து உங்கள் முன் உறையாற்றுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பிறருக்காக வாழ்ந்த விவேகானந்தர் மற்றும் அவரது குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் கொள்கைள் மீது எனக்கு சிறு வயதில் இருந்தே அதிக ஈடுபாடு உண்டு. என் இல்லத்தில் உள்ள நூலகத்தில் சுவாமி விவேகானந்தர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் புத்தகங்கள் நிறைய உள்ளன. அவற்றை நான் அடிக்கடி படிப்பேன். அனைவரிடமும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமத்துவமாக வாழ்வதே சிறந்தது என்கிறார் சுவாமி விவேகானந்தர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உணர்த்தியவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அவர் மறைவுக்கு பிறகு மக்களுக்கு தொண்டு செய்யுமாறு மன்னர்களை வலியுறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்.

1893ம் ஆண்டு சிகாகோவில் நடந்த சர்வ மத மாநாட்டில், ‘சகோதர, சகோதரிகளே’ என்று துவங்கிய அவரின் பேச்சு உலக மக்களை கவர்ந்தது. 1897ம் ஆண்டு உலக நன்மைக்காக தொண்டும், துறவும் என்ற நோக்கத்தில் சுவாமி விவேகானந்தரால் தோற்றுவிக்கப்பட்டது ராம கிருஷ்ணா மிஷன். சுயநலத்தை தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள் என்றார் சுவாமி விவேகானந்தர். சுயநலமின்றி பிறர் நலத்திற்காக உழைப்பது தான் தொண்டு. அனைத்து மதங்களும் பிறருக்கு உதவி செய்வதையே போதிக்கின்றன. அதனால் தான் நம் நாட்டில் பல தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொண்டுகள் பல வகைப்படும். நாட்டுக்கு செய்யும் சேவை தேசத் தொண்டு. மக்களுக்கு செய்யும் சேவை மக்கள் தொண்டு. இறைவனுக்கு செய்யும சேவை திருத்தொண்டு. இந்த 3 சேவையையும் செய்யும் நிறுவனமாக ராமகிருஷ்ண மடம் உள்ளது என்றால் அது மிகையாகாது.

நான் அரசியலுக்கு வர சுவாமி விவேகானந்தர் ஒரு மிகப் பெரிய தூண்டுகோலாக இருந்தார்: நான் அரசியலுக்கு வர சுவாமி விவேகானந்தர் ஒரு மிகப் பெரிய தூண்டுகோலாக இருந்தார் என்று கூறினால் அது மிகையாகாது[10]. 1982ம் ஆண்டில் நான் அரசியலில் காலடி எடுத்து வைத்த போதே சுவாமி விவேகானந்தர் பற்றி ஒரு பேட்டியிலே குறிப்பிட்டேன். சுவாமி விவேகானந்தர் துறவியாக இருந்து மக்கள் சேவை செய்தார். நான் அவர் வழியில் அரசியலில் துறவறம் பூண்டு மக்கள் சேவை செய்து வருகிறேன். எனக்கு சுயநலம் என்பது அறவே கிடையாது. எனக்கென்று யாரும் கிடையாது, எதவும் தேவையில்லை. எனக்கு எல்லாமே தமிழக மக்கள் தான். தமிழக மக்களால் நான், தமிழக மக்களுக்காகவே நான். ராமகிருஷ்ண மடத்தின் மக்கள் சேவை மற்றும் சமூகப் பணிகளை நன்கு அறிந்தவள் நான். ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகிகள் அரசுக்கு சொந்தமான இந்த விவேகானந்தர் இல்லம் அமைந்துள்ள இடத்தையும், அதன் அருகில் உள்ள காலி இடத்தையும் நீண்ட கால குத்தகைக்கு விடுமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில், இந்த விவேகானந்தர் இல்லமும், அதன் அருகில் உள்ள காலி இடமும் ராமகிருஷ்ணா மடத்திற்கு 99 ஆண்டு கால குத்தக்கைக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்[11].


[2] http://www.telegraphindia.com/1080425/jsp/nation/story_9183277.jsp

TN govt retreats on Vivekananda House
M.R. VENKATESH
Chennai, April 24: The Tamil Nadu government today handed victory to Ramakrishna Math, saying it had “no plans to take back or demolish” Vivekananda House where the monk-philosopher stayed four years after his path-breaking 1893 Chicago address.“The status quo vis-à-vis Vivekananda House will be maintained, and there is no need to exercise our minds over it, or make this a big issue,” chief minister M. Karunanidhi told the Assembly.“The building is strong and I wish to assure you that nobody wants to pull it down or have any such intent.”The Telegraph had earlier this week reported that the DMK-led government had sent word through an industrialist well-wisher of the Math that it would have to vacate the building by today (April 24), two years before the lease expires.The chief minister, however, sent out a veiled warning. He said he hoped Math authorities would not take recourse to legal steps “in haste” and “try to challenge the government” as that would not be in tune with Vivekananda’s philosophy.

Math authorities sounded relieved, but were cautious. “For the time being there is no worry. Beyond that we don’t want to comment now,” said a spokesman for Swami Gautamanandaji, head of the Math in Chennai.

Almost the entire Opposition led by the ADMK and even some of the ruling DMK’s allies such as the Congress and the PMK had opposed any takeover bid by the state before or after the building’s lease period ended in February 2010.

Karunanidhi said there was no proposal to take back the building, which the emissary to the Math had said would be used to house a centre for Tamil classical language.

[6] The guest house in the palace of Raja of Ramnathapuram where the momentous decision to go to United States of America was taken in October 1892.

After the Sri Ramakrishna Paramahamsa (1836-1886) left his mortal coil, Swami Vivekananda started a padayatra in 1886 and reached Ramnathapuram in 1892 In Ramnad, he met Bhaskara Sethupathy, the Raja of Ramnad at his Royal Palace, “Ramalinga Vilasam” and stayed there as the official guest house of for eight days, which was called “Sankara Vilasam”, and the guest house was earlier known as “Colonel Bungalow”, because, a British Colonel Martinez who stayed there from 1790-1830. He lived there up to 70 years, he died and entombed nearby in the CSI cemetery. The bungalow was in a natural surrounding with trees and a big water tank on the backyard. The royal tank was meant for the Raja’s family. For them, there was a secured under ground level entrance with steps reaching down the water level.

This bungalow acquires historical significance, as initially, it was Raja of Ramnad who had earlier decided to go to US to attend the Parliament of religion. But after seeing and discussing with Swami Vivekananda, he decided that Swamiji was the proper person to attend the conference. When the Raja suggested, this to Vivekananda, he immediately did not agree to the proposal. After staying in Ramnad, he proceeded to Kanyakumari and reached there on December 24th, 1892. He requested the fishermen to take him to the rock, but they refused, as they had become Christians by then and said they had to celebrate Christmas; they would not take boats out. So Swami Vivekananda reached the rock by swimming. He remained there for two days and three nights meditating. In his trance, he got divine message that he should attend the Parliament of religion at US. He came back and wrote a letter to Raja of Ramnad expressing that now he was willing to attend the conference adding that he was proceeding to Madras and from there to Bombay. The Raja made all arrangements.

The bungalow with the surrounding land had been in possession of the Raja family. After the Colonel’s demise, the Rajas used to worship Kali with the sacrifice. When Sringeri 22 Pontiff visited the place, the Raja expressed his desire of abandoning the sacrificial practice and follow satvika worship. The great Pontiff advised him thus he stayed there for 48 days and performed Rajarajeswari Yagna and consecrating the place and a golden Vigraha of the Goddess Rajarajeswari was installed within the Palace-temple, which is still worshipped. Thus, the bungalow came to be known as “Sankara vilasam”.

As the important decision of Swami Vivekananda should go to US and attend the conference was taken there at the bungalow, it gets historical significance, as otherwise, Swamiji would not have got such prominence. Also it was a historic place form where the Hinduism became once again world famous.

When Vivekananda returned from US, he reached Colombo and from there, he came to Danuskodi by a boat and from there to Pamban. When he was about to land at Kundukal, Raja was waiting with his entourage to give him a royal welcome there. Because of the achievement of Swamiji and as well as the regard, the Raja had for him, he reverentially bowed his head and offered it as step for Vivekananda to land from the boat as Vivekananda was coming back to Mother land after five years. But, Swamiji tactfully avoided by jumping from the boat on the land. Raja erected a Victory pillar of 25 feet height with the Upanishad expression “Satyameva Jayate”. Swamiji recorded this in his letter to an American disciple. However, the pillar disappeared 25 years ago, reportedly destroyed by the local fishermen. After reaching Ramnad, Swamiji went to the same bungalow and gave lecture nearby open place on the backs of the huge tank, which is known is recorded in the Complete works of Swami Vivekananda.

But, such an important bungalow had been dilapidated and the Ramakrishna Mission had not acquired even though it was more than 100 years since Swami Vivekanada had landed there and lived there, where the momentous decision was “drilled into the head” as per Vivekananda’s own statement by the Raja. The building remained in the custody of the Raja’s family, and for want of funds, the surrounding land was sold to several individuals. Even Ramakrishna Mission did not come forward to either maintain or buy it to preserve it as ‘historical monument’. Under the circumstance, Viking S. Karunanidhi, a rotatarian who has interest in history and in Vivekananda to decided buy the land and construct his own house. He also purchased the dilapidated bungalow and handed over it to the Ramakrishna Mutt, Karur. Now, the Mutt has decided to construct a memorial, as old building the “Sankara Vilasam” has been in dilapidated state and beyond reconstruction or renovation which was purchased from the Raja’s family and given to the Ramakrishna mutt, Karur and Mr.Karunanidhi also purchased some land and gave it on cost price to the Karur Ramakrishna Mutt which is not affiliated with the Ramakrishna mutt affiliated Ramakrishna Mutt Thirupparaithurai. The process of transaction is over and the old building that was beyond repair, was demolished, by the time when the author of this paper reached the place and stated there for four days in January 2007, all that he could see were some photos of that historical building looked like, and some remaining building material, rubble, old bricks some 200 years old and round stone pillars. He requested the ashram to keep some of the relics from the old building, as they were associated with the life of Swami Vivekananda as A new memorial is coming up fast. This building and memorial would be known as “Vivekananda Bhaskaram” after completion of construction with Rs. 40 lakhs and is likely to be inaugurated in May 20 2007. So far Rupees 20 lakhs has been collected as donations and the remaining amount is yet to be realized and the in charge Sri Nagarajan Brahmachari informed that donations are welcome at the following address that would help to complete the building.

Now, authorities are spending on the British period colonial dilapidated buildings spending crores from exchequer, e.g, the Victory memorial hall situated inside the University buildings, Chennai. But, historically important monuments like Col. Martins this are neglected. The attitude of the Government is also intriguing, because, in the case of Ice-house building, though, where Swami Vivekananda stayed in Madras when visited the city , initially decided to demolish, because of Vivekananda association, it was spared and handed over to Ramakrishna Mutt and the Mutt has renovated and been maintaining as a memorial cum exhibition centre. However, in the case of “Sankara Vilasam”, it is unfortunate that it was allowed to be demolished, as though a new memorial is built, historically, it cannot be equated with the original monument.

Acknowledgements:

The author wished to thank Viking MS Karunananidhi and Brahmachari Nagarajan.

Address where donations are welcome
VIVEKANANDA BASKARAM
NO 1, ARANMANAI STREET,
RAMANATHAPURAM 623501
INDIA
PHONE 04567 -22819

குஷ்புவின் சாபம்: “இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை”.

மே 16, 2011

குஷ்புவின் சாபம்: இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி.  அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. 

சினிமாக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு குஷ்பு மறுபடியும் உதாரணமமக உள்ளார். முன்பு கற்பு பற்றி பேசி, கலாச்சாரத்தை இழிவு படுத்திய அம்மணி இப்பொழுது, மக்களின் தேர்தல் முடிவுகளையும் இழிவு படுத்தி பேசியுள்ளது விநோதமாக உள்ளது. அதிமுக வெற்றி பெற்றதும், அதிர்த்து பிரச்சாரம் செய்த திரையுலகப் புள்ளிகள் திகைத்துள்ளன. சிலர் ராஜினாமா செய்துள்ளனர். சிலர் மறைந்துள்ளனர்; சிலர் தங்களுக்கு பாதுபாப்பு கேட்டு நடிக்கின்றனர்.

மக்களுக்குத்தான் தோல்வி: நடிகை குஷ்பு[1]: 13-05-2011, காலை 10.30 மணியளவில் கலைஞரை பார்க்க மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, நெப்போலியன், நடிகை குஷ்பூ ஆகியோர் வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,

திராவிடத்தில் ஊறிய அம்மணி கற்பு ஒன்றும் பெரிதல்ல என்றெல்லாம் வியாக்யானம் கொடுத்தார். இப்பொழுது, அதிமுக அதிக இடங்களில் வென்றுள்ள நிதர்சனத்தையும் மறந்து, தமிழ் மக்களை சாடியுள்ளது எந்த பகுத்தறிவின் வெளிப்பாடு என்று புரியவில்லை.

இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. தி.மு.க. கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை வழங்கி மக்களை காப்பாற்றியிருக்கிறது. இதை அவர்கள் உணரவில்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் மீடியாக்கள் அதிகமாக விளையாடி விட்டன. இந்த வழக்கில் இருந்து தி.மு.க. மீண்டு வரும்”, என்றார்[2]. சில நாட்களுக்கு முன்புதான் கனிமொழிக்கு ஆதரவாக பேசினார்[3].

ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன்[4]: ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு. இதுகுறித்து குஷ்பு கூறுகையில், “ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி. இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார்.நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார். ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன்”, என்றார் குஷ்பு[5].

சின்னத்திரை சங்கத்திலிருந்து ராஜினாமா செய்த குஷ்பு: இப்படி வீராப்பாக பேசினாலும், சின்னத்திரை சங்கத்தின் [Chinna Thirai Producers Council (CTPC)[6] ] தலைவி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருப்பது[7] வேடிக்கைத்தான்! “ஷூட்டிங் செட்யூல்” அதிகமாக உள்ளது என்று காரணம் வேறு சொல்லியிருக்கிறார். திமுகவின் தோல்வி குறித்து ஆராய்ச்சி செய்யபோகிறாராம்[8]. பார்ப்போம் என்ன முடிவு சொல்லப் போகிறார் என்று.

சகநடிகையின் எதிர்ப்பு குரல்: இதற்கு விந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்[9]. அவர் கூறுகையில், “குஷ்பு அரசியலில் பக்குவப்படாதவர் என்பதை நிரூபித்துள்ளார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அந்த தீர்ப்பை குறை சொல்வதும் கேலி செய்வதும் குஷ்புவின் அறியாமையை காட்டுகிறது. சினிமாவுக்கு வந்ததில் இருந்து வாழ்க்கையில் ஏற்றங்களையே பார்த்து இருக்கிறார். சிறந்த நடிகை என்ற புகழ் கிடைத்தது. சிறப்பான வாழ்க்கையும் அமைந்தது. கஷ்ட நஷ்டங்களை சந்தித்தது இல்லை. இந்த தேர்தலில்தான் முதல் முறையாக தோல்வியைப் பார்த்திருக்கிறார் அவர். என்வேதான் அவரால் தாங்க முடியவில்லை. தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக தி.மு.க. ஆட்சி போக வேண்டும் என வாக்களித்துள்ளனர். அப்படியெனில் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா…. எல்லா தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வென்றுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக கண்ணுக்குத் தெரியாத பெரிய அலையே வீசி இருக்கிறது.

குஷ்புவின் ஆணவப்பேச்சு: இதை தவறான தீர்ப்பு என்பது ஆணவ பேச்சு. நான் தேர்தல் பிரசாரம் செய்தபோது மக்களிடம் எழுச்சியை காண முடிந்தது. ஜெயலலிதா முதல்வராகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் வருவது உறுதி என்று பேசினேன். அது நடந்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்றதை கட்சிக்காரர்கள் மட்டும் கொண்டாடவில்லை. மக்களே கொண்டாடுகிறார்கள். நிறைய வீடுகளில் பெண்கள் வெளியே வந்து பட்டாசுகள் வெடிப்பதை பார்க்க முடிந்தது. நான் மூன்று தேர்தல்களை பார்த்துள்ளேன். வெயில், கஷ்ட நஷ்டம் ஆகியவை எனக்கு பழகி விட்டது. குஷ்புவுக்கு அது தெரியாது. சினிமா உலகில் சந்தோஷமாக இருந்தார். முதல் தடவையாக தேர்தல் பிரசாரம் செய்து வெயில் கொடுமைகளை அனுபவித்தார். இதனால் தோல்வியை தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தப்புத் தப்பாக பேசுகிறார். அரசியலுக்கு வந்த பிறகு கட்டுப்பாடு வேண்டும். எது வேண்டுமானாலும் பேசக் கூடாது. குஷ்பு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்,” என்றார்.

குஷ்புவைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர்: திமுகவுக்கு இது தோல்வி அல்ல. மக்களுக்குத்தான் இதுதோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சாபம் விடுவது போல நடிகை குஷ்பு பேசியதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்[10]. சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குஷ்பு அடங்க வேண்டும் என்று விந்தியா காட்டமாக கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற அதிமுக வக்கீல்கள் பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், நடிகை குஷ்புவுக்கு எச்சரிக்கை. தேர்தல் முடிவுகள் மக்களுக்கு தோல்வி என்று கூறி, 202 தொகுதி மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தி, பேட்டி கொடுத்த, நடிப்பில் காலம் சென்ற நடிகை குஷ்புவை மிக வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

செப்ரெம்பர் 6, 2010

திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

தாலி-மாலை எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைக்கும் கருணாநிதி: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்த திருமணத்தை முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி மணமக்களுக்கு மாலையையும், மங்கல நாணையம் எடுத்துக்கொடுத்து[1] நடத்தி வைத்தார்[2]. இப்படி செய்திகள் வந்துள்ளன. திராவிடத் திருமணத்தில், எங்கு தாலி வந்தது[3] என்று எந்த பகுத்தறிவு ஜீவியும் கேட்கவில்லை[4]. அந்த அடிமைச்சின்னத்தை ஏன், இந்த புரோகிதர் எடுத்துத் தரவேண்டும்? சரி, ஏன் ஒரு ஆண் எடுத்துத் தரவேண்டும், ஒரு பெண் எடுத்துத் தரலாமே? பகுத்தறிவு பதில் சொல்வதில்லை போலும்!

திருமண விழாக்களில் விளக்க உரை தேவையானால், அது எப்போது என்பது எனக்கும், வீரமணிக்கும் நன்றாகத் தெரியும்[5]: “திருமண விழாவில் அனைவரிடத்திலும் உள்ள உரிமை காரணமாக கவிஞர் வைரமுத்து நன்றி உரை என்ற பெயரில் மணமக்களுக்கான வாழ்த்துரையுடன், விளக்க உரையும் இங்கு ஆற்றியுள்ளார். ………. இதுபோன்ற திருமண விழாக்களில் விளக்க உரை தேவை. ஆனால், அது எப்போது என்பது எனக்கும், திராவிட கட்சித் தலைவர் வீரமணிக்கும் நன்றாகத் தெரியும். எனவே, தேவைப்படும்போது மட்டுமே நீண்ட நேரம் பேச வேண்டும்”, என்றார் முதல்வர் கருணாநிதி. ஆக, திராவிட திருமணத்தில் இவர்கள் இருவரும்தான் விற்ப்பன்னர்கள் என்று சொல்லிக்கொள்கிறர் போலும்!

திராவிடத்தில் இப்படி பலதார மணம் புரிந்த ஆண்கள்-பெண்கள் மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று வரலாமா? அதற்கு ஏதாவது யோக்கியதை, அந்தஸ்து முதலியவை இருக்கின்றனவா?

புரோகிதரின் மகன் இன்னொரு புரோகிதர் மு.. ஸ்டாலின் சாட்சி சொல்கிறார்: தமிழகத்தில் 1960-ம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. ஆனால், 1967ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அப்போதைய முதல்வர் அண்ணா பெற்றுத் தந்தார். அந்த வகையில் இப்போது நடைபெற்றிருக்கும் கபிலன் – ரம்யா தம்பதியினரின் சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும். தமிழகத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதுபோல், நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை தமிழக முதல்வர் கருணாநிதி பெற்றுத் தருவார்.

ஸ்டாலின் போட்டு உடைத்த உண்மை: “………..அண்ணா பெற்றுத் தந்தார். …………….நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை கருணாநிதி பெற்றுத் தருவார்”, என்று ஸ்டாலின் சொல்லும் போது, மற்ற உண்மைகளையும் சொல்லவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[6]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[7] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர்..

மாப்பிள்ளை, மணப்பெண் எதற்காக இப்படி பட்டு வேஷ்டி, சட்டை, புடவை-ஜாக்கெட் என்று வரவேண்டும்? இப்பொழுது, மணத்தில் இத்தகைய முடநாற்றம்[8]! இதெல்லாம், தமிழனின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியமா? பிறகு எதற்கு இதே தமிழன் நடத்திவைக்கும் கல்யாணங்களில் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு வருகிறர்கள்? பட்டுப்புடவை, பூ, நகைகள் சகிதம் வருகிறார்கள்? இதென்ன பார்ப்பான்கள் கலாச்சாரமா, இல்லை சூத்திரன்கள் கலாச்சாரமா? தட்டுகளில், தாம்பாளங்களில் தேங்காய், பழம், பூ, குங்குமம், மஞ்சள்………..இவையெல்லாம் எதற்கு? ஒரு நண்பர், எனக்கு இப்படி கேட்டுள்ளார்[9]:

சங்க காலத்தில், பெண்கள் தழையுடைத்தான் அணிந்து கொண்டார்களாம். ரவிக்கையெல்லாம் போட்டார்களா என்று தெரியவில்லை. 

ஆகவே அத்தகைய முறையையும் கையாலலாம்.

சங்க இலக்கியத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற எண்ணம் இருந்ததே இல்லை. தலைவன் எப்பொழுதும், மற்ற பெண்டிருடன் காமத்தில் ஈடுபட்டிருப்பான். தலைவி அவன் வருவானா என்று ஏங்கிக் கொண்டிருப்பான்.

இல்லை பரத்தையருடன் இருப்பான். ஆக, தமிழரிடத்தில் காமம்தான் மேலோங்கி இருந்தது போலும்.

ஊடல், கூடல் என்ற நிலையில் அகம் மேலோங்கி நின்ற நிலையில், பிறகுதான் புறம் வருகின்றது.

அந்நிலையில் எங்கு இருந்தது சுயமரியாதை?

கருணாநிதி விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து, ஆசிவாதம் செய்து,……………மணமக்கள் காலில் வீழ்ந்து…………………………..இப்படி திராவிட புரோகிதம் வளர்கிறது[10].

  • இந்து கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றை தூஷிக்கும் இந்த மானங்கெட்ட கூட்டம், எதற்கு அதே சின்னங்களை, சடங்குகளை பின்பற்றி போலி வேடம் போட வேண்டும்?
  • என்ன நெற்றியில் காயம் பட்டிருக்கா என்று நக்கலாக கேட்ட கருணாநிதியின் காலில் ஏன் குங்குமம் இட்டுக் கொண்டு ஒரு தமிழச்சி விழவேண்டும்?
  • தாலியைக் கழற்றி, மணமுறிவு விழா நடத்தும் அயோக்கியர்கள் முன்னிலையில் ஏன் தாலிகாட்டிக் கொள்ளவேண்டும்?
  • எதற்கு அந்த பாட்டுப்புடவை, தேங்காய் …………………………………எல்லாம்?
  • தூஷிக்கும் அந்த ஆள் ஆசிர்வதிக்கமுடியுமா?
  • ஒரே மனத்தில் எப்படி அத்தகைய நல்ல-கெட்ட-சிந்தனைகள் காழ்ப்புகள் வரும்?
  • நாத்திகர்களுக்கு எதற்கு ஆத்திக சடங்குகள், சம்பிரதாயங்கள்?

[1] http://www.maalaisudar.com/newsindex.php?id=35276%20&%20section=19

 

[2] http://thatstamil.oneindia.in/movies/news/2010/09/5-kapilan-vairamuthu-marriage-karunanidhi-rajini.html

[3] வேதபிரகாஷ், தமிழர் கல்யாணம்: தாலி இருந்ததா?, http://dravidianatheism.wordpress.com/2010/02/27/தமிழர்-கல்யாணம்-தாலி-இரு/

[4] வேதபிரகாஷ், திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!,

http://dravidianatheism2.wordpress.com/2010/02/02/திராவிட-புரோகிதர்கள்-நடத/

[5] தினமலர், வைரமுத்து வெளிப்படையானவர் : முதல்வர் பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2 010 ; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 06, 2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=78433

[6] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[7] வேதபிரகாஷ், பகுத்தறிவு-தீவிரவாதம் திராவிட புரோகிதர்களின் ஆண்-பெண் இணைப்புகள்!,

https://rationalisterrorism.wordpress.com/2010/01/29/பகுத்தறிவு-தீவிரவாதம்/

[8] மன்னிக்கவும், இதெல்லாம் திருவாளர் வீரமணியின் விடுதலையில், உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகள்! ஆகவே, உபயம் – வீரமணி

[9] வேதபிரகாஷ், சுயமரியாதை திருமணத்தில் கருப்பு ஆடைகளை ஏன் அணியக்கூடாது: திராவிட புரோகிதர்கள் விளக்குவார்களா?, http://dravidianatheism.wordpress.com/2010/07/17/சுயமரியாதை-திருமணத்தில்/

[10] வேதபிரகாஷ், நவீன திராவிட புரோகிதர்கள், http://dravidianatheism.wordpress.com/2010/05/24/திராவிட-புரோகிதர்கள /

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும் – II

ஜூலை 18, 2010

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும் – II

சென்னையில் நடந்த போர்வாளும் பூவிதழும்என்ற நாட்டிய நாடக விழா: 11-07-2010 அன்று மியூக் அகடமி அரங்கத்தில் ஆழ்வார்கள் ஆய்வு மையம்[1] சார்பில் நடந்த நாடக விழாவில் நாத்திகர் முதல்வர் கருணாநிதி முதல் ஆத்திகர்கள் வரை பலர் கலந்து கொண்டது தமிழகத்தில் ஒரு விசித்திரமான நிகழ்ச்சிதான். அதைவிட விசித்திரமானது, ஓரளவிற்கு பிராமணர்களும், அதாவது திராவிடக் காழ்ப்புடன் சொல்வதானால், “பார்ப்பனர்”களும்[2] வந்திருந்தது அதைவிட அதிசயம். அதைவிட அதிசயமாக மேடையில், இந்த நாத்திக கருணாநிதி இரண்டு பார்ப்பனர்களுடன் உட்கார்ந்திருந்த காட்சி. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்கள் கூட, நாம் தவறவிட்டுவிட்டோமே என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ள விழாவாக இருந்தது.

“ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்”: பொதுவாக, நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு, குறிப்புகள் எடுத்துக் கொண்டு கட்டுரைகள் எழுவது வழக்கம். ஆனால், சில காரணங்களுக்காக, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியவில்லை. ஆகவே, தினமலரில் வந்த செய்தியை[3] அப்படியே போட்டுவிட்டு, அடைப்புக்குறிகளில் மட்டும் என்னுடைய விமர்சனத்தைச் சிறியதாகக் கொடுத்து “ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்”, என்ற தலைப்பில் ஒரு பதிவு செய்திருந்தேன்[4]. ஆனால், அதற்கு பலவிதமாக பதில்கள் வர ஆரம்பித்தன. ஒரு நிலையில் சில நண்பர்களிடம் அவர்களுடைய கருத்தைக் கேட்டேன். பிறகு, அந்நிகழ்ச்சியின் பின்னணியில் பலவித விஷயங்கள் இருந்ததை அறிந்தேன். முக்கியமாக, அரசியலாக்க நினைக்கும் போக்கு தேவையில்லாத ஒன்று என்பதனை எடுத்துக் காட்ட முயல்கிறேன்.

கருணாநிதி, தமிழ்-பாண்டித்யம், தமிழகம்: விருப்பு-வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, கருணாநிதியின் எழுத்துகளைப் படித்து பார்க்கும்போது, அவரது தமிழ்பிரயோகம், நடை, சொல்லாக்கம், தமிழிலுள்ள பாண்டித்யம் முதலியவற்றை மறுக்கமுடியாது. ஆனால், நிச்சயமாக உண்மையான தமிழுணர்வு உள்ளவர்களுக்கு, அவர் பல நேரங்களில் தமிழை பாதுகாக்கத் தவறவிட்டார் அல்லது தமிழ் மொழியை இழிவு படுத்துபவர்களுடன் சேர்ந்து செயல்பட்டார் என்ற வருத்தங்கள் எல்லாம் அதிகமாகவே உள்ளது[5]. செம்மொழி மாநாட்டில் கூட, காலரீதியில் பாகுபாடு செய்து சைவ-வைணவ குறிப்பாக இந்துமதத்திற்கு இடங்கொடுக்காமல் செய்துவிட்டார் என்ற குறையுள்ளது[6].

இந்திய மாநில முதல்வர் என்றால் எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் முதல்வர் என்ற ரிதியில் செயல்படுவதில் தவறிவிட்டார்: கருணாநிதி தமிழ்நாட்டிற்கு, இந்தியாவின் ஒரு மாநிலத்திற்கு முதல்வர் என்பதை அவர் பலமுறை மறந்து விடுகிறாரா அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி நடித்து வந்துள்ளரா என்பதனை அவரே சொல்லவேண்டிய நிலை வந்துள்ளது. இவர் நாத்திகராக, ஏன் இந்து-விரோதி என்று மற்றவர்களால் குற்றஞ்சாட்டப் படக்குடிய நிலையில் இருந்தாலும், தமிழ்நாட்டிலுள்ள 80% மேலாக உள்ள இந்துக்களுக்கும் முதல்வராவார். ஆனால், இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் பேசுதல், கோவில் விவகாரங்களில் தலையிட்டு பிராமண-பிராமண துவேஷம், சமஸ்கிருதம்-தமிழ் என்ற விரோதம்[7], கோவில் நிலத்தை இந்துஅறநிலையத்துறை வழியாகவே விற்றது முதலிய பல காரிங்கள், இவரின்மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது உண்மை. அவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளது[8] அந்த உண்மையை, மக்களின் உணர்வை எடுத்துக் காட்டுகிறது. நம்பிக்கையுள்ள திக-திமுக-இந்துக்கள்கூட, “என்ன இவ்வளவு வயசாகியும், நம்ம தலைவர், இப்படி பேசராரே, நடந்து கொள்கிறரே”, என்று விசனித்துள்ளனர், வருந்தியுள்ளனர்[9].

கருணாநிதியின் பேச்சுகளும், அரசியலும், செக்யூலரிஸமும்: 40 வருடங்களாக இவர் பேசுவதைக் கேட்டிருப்பவர்கள், இவரது பேச்சின் தொணி, தோரணை, உருவகம், உயர்வு புகழ்ச்சி, சிலேடை, நையாண்டி………முதலியவற்றை தாராளமாகவே அறிந்திருப்பர், புரிந்து கொண்டிருப்பர். ஆக, தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பாரம்பரியம், தமிழ் பண்பாடு, தமிழ் விழாக்கள், தமிழ் சடங்குகள், தமிழ் காரியங்கள் / கிரியைகள், தமிழ் நம்பிக்கைகள் என்றெல்லாம் பார்த்தால் இந்திய-இந்து தாக்கத்தை மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியாது. முதலில் சங்க இலக்கியத்தை படித்தவர்கள் அவ்வாறு சொல்லமாட்டார்கள்[10]. இருப்பினும், பொய் என்றும், மாயையென்றும், கட்டுக்கதையென்றும் சரித்திர ஆசிரியர்களால், உலகம் முழுவதும் குப்பைத் தொட்டியில் போர்ட்டுவிட்ட ஆரிய-திராவிட இனவாத கோட்பாட்டுகளை வைத்துக்  இந்து காரணிகளை வெறுப்பவர்கள், எதிர்ப்பவர்கள், வேறோடழிக்கத் துடிப்பவர்கள் ஏன் அதே காரணிகளை வைத்துக் கொண்டு, உபயோகப்படுத்திக் கொண்டு, சூடிக்கொண்டு உலாவரவேண்டும்?

வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் என்ன பேசினார்கள்: இனி தினமலரில் இன்று வெளிவந்துள்ள செய்தியின்படி என்ன என்று பார்ப்போம்: “முதல்வர் விழாவில் வெளுத்துக்கட்டிய வேளுக்குடி கிருஷ்ணன்”, என்ற செய்தியின்கீழுள்ளது[11]: “சமீபகாலமாக முதல்வர் பங்கேற்கும் விழாக்களில், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி, தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், கவிஞர்களும் முதல்வரை வானளாவப் புகழ்கின்றனர். புகழ்ச்சியை முதல்வர் விரும்புகிறாரா, இல்லையா என்பது வேறு விஷயம். சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில், “என்னை புகழ்வதை விட்டுவிட்டு, தலைப்பை ஒட்டி பேசுங்கள்’ என முதல்வரே கடிந்து கொள்ளுமளவிற்கு, “புகழ் பா’ பாடுவதில் போட்டா, போட்டி நிலவியது. ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், முதல்வர் கருணாநிதியின், “போர்வாளும், பூவிதழும்’ என்ற நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னையில் கடந்த வாரம் நடந்தது. முதல்வர் பங்கேற்ற இந்த விழா மேடையில், இதுவரை இல்லாத புதுமையாக, அரசியல் கலப்பில்லாத ஆன்மிகவாதிகளான வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் ஆகியோர் பங்கேற்றனர். வழக்கமான புகழ்ச்சியுரை இன்றி, இயல்பான நோக்கில் விழா இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. முதல்வருக்கு ஏற்றவாறு ஆன்மிக சொற்பொழிவாளர்கள் தங்களது பேச்சை மாற்றியமைத்துக் கொள்வார்களா? ஆன்மிகவாதிகளின் பேச்சை முதல்வர் எப்படி எதிர்கொள்வார் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்தது”.

திருச்சி கல்யாணராமன் பேசியது: குழப்புவது தினமலரா, நிருபரா? தினமரில் தொடர்கிறது, “இந்த எதிர்பார்ப்பை பொய்ப்பிக்கும் வகையில், திருச்சி கல்யாணராமனின் பேச்சு அமைந்தது”, என்று தினமலர் சொல்லிவிட்டு, “துவங்கியதில் இருந்து, இறுதி வரை முதல்வரை புகழ்வதிலேயே குறியாக இருந்தார் அவர். முதல்வரை மகிழ்விக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, தனக்கு சம்பந்தமில்லாத அரசியலையும் தொட்டார். கல்யாணராமன் பேசும்போது, “கம்ப ராமாயணத்தின், உலகம் யாவையும் தாமுளவாக்கலும்’ என்ற பாடலைச் சொல்லி, அந்த பாட்டின் இறுதியில் வரும், “அன்னவருக்கே சரண் நாங்களே‘ என்று இறைவனுக்கு சொல்லப்பட்ட வார்த்தையை முதல்வரைக் காட்டி சொல்லி முடித்தார். இறைவனை விட மிக உயர்ந்தவர் எனும் பொருள்படும்படியாக, இறைவனின்இரு அவதாரங்களின் ஓர் உருவமாக திகழ்கிறார் என்றெல் லாம் கல்யாணராமன் முதல்வரை புகழ்ந்துரைத்தார். அதோடு, ஜெயலலிதாவை வம்புக்கு இழுத்தால்தான், முதல்வர் மகிழ்ச்சியடைவார் (!) என்ற எண்ணத்தில், “பிள்ளை இல்லாதவர்களை, எல்லாம் அம்மா என்று சொல்கின்றனர்‘ என்றது எல்லை தாண்டிய உச்சம்”, என்று முடித்திருப்பது நிருபரின் குழப்பம் என்றே தெரிகிறது.

வேளுக்குடி கிருஷ்ணன் பேசியது: தினமலர் தொடர்கிறது, “இதனால், அவருக்கு பின் பேச வந்த வேளுக்குடி கிருஷ்ணனுக்கு, தேவையற்ற நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், அதற்கு ஆட்படாதவராக வேளுக்குடி கிருஷ்ணன், தனிமனித புகழ்ச்சி, அரசியல் கலப்பின்றி வைணவம் தமிழுக்கு செய்த தொண்டை மட்டும் ஆழ்ந்த கருத்துக்களுடன் அழகாக பேசி முடித்தார். இது ஒரு ஆன்மிக பேச்சாளர், எப்படி பேச வேண்டும் என மற்றவர்களுக்கு பாடம் எடுப்பது போல் இருந்தது. அவரின் பேச்சை, அரங்கில் இருந்த தீவிர நாத்திகவாதிகள், தமிழக அமைச்சர்கள் என அத்தனை பேரும் ரசித்து கேட்டனர். பல்வேறு அரசியல் மேடைகளைக் கண்ட தி.மு.க., முன்னணிப் பிரமுகர்களும், வேளுக்குடியின் பேச்சில் சொக்கியிருந்ததை, அவையில் நிலவிய நிசப்தமும், அவர் பேசி முடித்ததும் எழுந்த கரகோஷமும் உணர்த்தியது. இதை முதல்வர் கருணாநிதி பேச்சிலும் காண முடிந்தது.”

“அவர்கள் பேசிய பிறகு நான் அதிகம் பேசக் கூடாது’ என்ற கருணாநிதி: தினமலர் தொடர்கிறது, “அவர் பேசும் போது, “வேளுக்குடி கிருஷ்ணனையும், திருச்சி கல்யாணராமனையும் முதன் முதலாக இந்த மேடையில் தான் பார்க்கிறேன். தேனினும் இனிய தமிழால் இங்கே அவர்கள் பேசியிருக்கின்றனர். அவர்களின் பேச்சை இத்தனை நாள் கேட்காமல் இருந்து விட்டோமோ என தோன்றுகிறது. அவர்கள் பேசிய பிறகு நான் அதிகம் பேசக் கூடாது’ எனப் புகழாரம் சூட்டினார். “”பல்வேறு தரப்பினரின் விழாக்களில் பங்கேற்பதன் மூலம், பல கருத்துக்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்துத்தான் முதல்வர் ஒப்புக்கொள்கிறார். ஆனால், விழா நடத்துபவர்களோ, முதல்வரைப் புகழ்வதில் குறியாய் இருந்து அவருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

தினமலரின் முந்தைய செய்தி[12] (ஜூலை, 12, 2010,): முன்பு கருணாநிதி பேசியதாக வெளியிட்டுள்லதில், சில வரிகளுக்கு உள்-அர்த்தம் தெரியாமல் இருந்தது. ஏனெனில், வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் பேசியதை அப்பொழுது வெளியாகவில்லை.

சென்னை, ஜூலை, 11, 2010,: “எங்கெங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை, தமிழ் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது, அதனால், வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் பங்கேற்கும் விழாவில், எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்,” என, ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்த நாடக விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், முதல்வர் கருணாநிதி கதை, வசனம், பாடல்கள் எழுதிய, “போர்வாளும் பூவிதழும்’ என்ற நாட்டிய நாடக விழா, சென்னையில் நேற்று நடந்தது.

“எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் புதியவர்கள். இந்த மேடையில் தான் அவர்களை நேரில் பார்க்கிறேன். ஜெகத்ரட்சகன் மூலம், அவர்களுடைய தமிழை நாம் எல்லாரும் பருகும் வாய்ப்பை பெற்றோம். இத்தனை நாட்கள் இதைக் கேட்காமல் விட்டோமே என்ற எண்ணத்தை அவர்களின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பேச்சில் ஓரிரு வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவர்களின் தமிழ்ப் பற்று, எதை பற்றி சொன்னாலும், இறுதியில் முன் இருப்பது தமிழ்தான், தமிழர்தான் என்ற உணர்வு. அந்த உணர்வுதான் நம்மை இங்கே இணைத்துள்ளது”.

“அதற்காகத்தான் செம்மொழி மாநாடு நடத்தி முடித்துள்ளோம். எவ்வித பாகுபாடும் இன்றி, செம்மொழி மாநாட்டிற்கு அனைத்து சமயத்தவர்களையும், அனைத்து மதத்தவர்களயும், மாற்று கருத்து உடையவர்களையும், மற்ற கட்சியினரையும் அழைத்து விழா எடுத்துள்ளோம் கட்சி அடையாளம் இன்றி நடந்த அந்த விழாவில், நாம் தமிழர்கள் என்ற உணர்வுடையவர்கள் பங்கேற்றனர். அந்த உணர்வு இல்லாதவர்கள் மாநாட்டை புறக்கணித்தனர் வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் பங்கேற்றுள்ள இந்த விழாவில், கருணாநிதி என்ன பேசுவார் என்ற எண்ணத்துடன் வெளியில் காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள். எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவிற்கு நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். ஆன்மிக பிரசாரகர்கள் வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் ஆகியோர் வைணவத் தமிழ் கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதை, முதல்வர் கருணாநிதி உட்பட அனைவரும் ரசித்து கேட்டனர். நாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் குழுவினர், இந்நாடகத்தை தொகுத்து, இசையமைத்து, நாட்டியம் ஆடினர். விழாவில், ஆழ்வார்கள் ஆய்வு மையத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் வாழ்ந்த எட்டு வரலாற்று சிறப்பு பெற்றவர்களை மையமாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கதைக்கு முதன்மை ஆதாரங்களாக, நற்கண்ணை, காவற்பெண்டு எனும் இரு பெண்பாற் புலவர்களின் பாடல்களும், சாத்தந்தை எனும் முதுபெரும் புலவரின் பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் அமைகின்றன. இந்த சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் இயற்றப்பட்டுள்ளது. இந்நாட்டிய நாடகம், ஏற்கனவே கோவை செம்மொழி மாநாட்டில் நடத்தப்பட்டது”.

இப்படியிருக்கும்போது, ஈ-மெயிலில் நண்பர் அனுப்பினார், என்று, ஒரு நண்பர் அனுப்பியதில் இப்படியிருந்தது. பத்திகளாகப் பிரித்து தலைப்புகளை மட்டும் கொடுக்கிறேன்.

ஆழ்வார்களை, நாயன்மார்களை ஒதுக்கிவிட்டு நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு: தமிழில் ஆழமான ஞானமும் தெளிவான புலமையும் உடையவர்கள் கனா வுக்குக் கானா குனாவுக்குக் கூனா என்று அடுக்கு மொழியில் பேசித் திரிவதுதான் தமிழ் என்று நினைக்கும் போலித் தமிழறிஞர்கள் இல்லை. தமிழ் வளர்ந்தது சமயத்தால். தமிழை உண்மையில் செழுமைப் படுத்தியவர்கள் பக்தி இலக்கியத்தை வளர்த்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் இன்னும் எண்ணற்ற பக்தி கவிதைகள் படைத்த கவிஞர்களும் பாடகர்களும் பொளராணிகர்களுமே ஆவார்கள். அர்த்தமுள்ள இந்து மதம் படைத்த கண்ணதாசனும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாசகம் மற்றும் புராணங்களையும் தன் கம்பீரமான குரலில் வளர்த்த வாரியார் அவர்களையும் புலவர் கீரன் போன்றவர்களும் இன்னும் எண்ணற்ற உபன்யாசகர்களும் இல்லாமல் தமிழ் இன்று இல்லை. ஆனால் அவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டு ஏன் கம்பனையே ஒதுக்கி விட்டு இன்று இவர்கள் தங்கள் புகழ் பாடுவதற்காக ஒரு செம்மொழி மாநாடு நடத்தியிருக்கிறார்கள்.

வேள்குடி கிருஷ்ணன் அவர்களையும் திருச்சி கல்யாணராமன் அழக்கப்பட்டதேன்? அது செம்மொழி மாநாடாக நடக்கவில்லை மாறாக ஒரு குடும்பத்தின் புகழ் பாடும் செம்மறியாட்டுக் கும்பலின் மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. தினம் தினம் நான்கு பேர் கூடி தன்னைப் பாராட்ட வேண்டும் என்ற புகழ் போதையில் திளைத்த கருணாநிதிக்கு அவரது தொண்டரடிப் பொடிகள் சிலர் சேர்ந்து இன்னும் ஒரு பாராட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் தமிழின் மிகச் சிறந்த அறிஞர்களில் இருவர்களான திரு.வேள்குடி கிருஷ்ணன் அவர்களையும் திருச்சி கல்யாணராமன் அவர்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களை அழைத்து ஏற்பாடு செய்தவர் பற்றி உங்களுக்கே தெரியும். தன் பேச்சில் இவரைஆழ்வார்என்று அழைத்த போதே வேளுக்குடி பயந்திருப்பார்.

திரு.வேள்குடி கிருஷ்ணன் பேசியது: துரதிருஷ்டவசமாக மேற்கண்ட நிகழ்ச்சிக்கு நானும் செல்ல நேரிட்டு விட்டது. வேள்குடி பெயரையும், கல்யாணராமன் பெயரை பார்த்ததும் இவர்களின் தேன் தமிழ் காதில் கேட்கும் ஆசையில் நானும் சென்று விட்டேன். ஜால்ராக்களின் அடித்த வழக்கமான பஜனைகள முடிந்த பின்னால் வேளுகுடி தன் அற்புதமான உரையை ஆரம்பித்தார். திரு.வேள்குடி கிருஷ்ணன் அவர்கள் திராவிட வேதமான ஆழ்வாரின் பிரபந்தப் பாடல்கள் குறித்து மிக அற்புதமான உருக்கான கேட்ப்போர் மனதும், நெஞ்சும், காதும் குளிர ஆழ்வார் பாடல்கள் குறித்து விளக்கினார். வேள்குடி கிருஷ்ணன் ஒரு ஆடிட்டராக இருந்து பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் நிதி அதிகாரி வேலையை உதறி விட்டு நாராயணன் புகழ் பரப்பி வருகிறார். நாரயணனின் பரிபூரண ஆசிகள் பெற்ற வேள்குடி தமிழ் கேட்ப்பவர்களை உருக்க வைப்பது. எந்தவித உச்சரிப்புப் பிழைகளும் தமிழ் இலக்கணப் பிழைகளும் இல்லாத சிறப்பான தமிழ் அவருடையது. குழலிது யாழிலுது என்பார் வேள்குடி தம் தமிழ் உரை கேளாதோர். பூரணமான ஞானமும் அறிவும் நிரம்பிய உண்மையான தமிழறிஞர் வேள்குடி தன்னைத்தான் உலகத் தமிழர்களுக்கு எல்லாம் தலைவன் என்று இறுமாந்திருந்தவர்களுக்கு நிச்சயம் அப்படி ஒரு நிறைகுடத்தின் உரையைக் கேட்டு எப்பேர்ப்பட்ட ஆழமில்லாத ஒரு போலி என்பதை நிச்சயம் அன்று உணர்ந்திருப்பார். அவர் ஆணவத்திற்கும் புகழ் மமதைக்கும் ஒரு பேரிடி விழுந்திருக்கும். இருந்தாலும் வேளுகுடி கிருஷ்ணன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டால் கொடிய மனமும் உருகும், பாவிகள் மனதிலும் கருணை சுரக்கும். ஆனால் யாருக்கு என்ன சுரந்தது என்று நான் சொல்லப்போவதில்லை.

வேளுகுடி அவர்கள் தீவிர வைணவர். உபன்யாசத்தின் பொழுது நாராயணனை தவிர வேறு ஒருவரையும் துதிக்க மாட்டார். அவர் ஆண்டவனை மட்டுமே தொழுது தன் உபன்யாசத்தை நடத்துபவர். அதுதான் சம்பிரதாயம் அவரது மரபு. அன்றைய நிகழ்ச்சியின் பொழுதும் தன் வழக்கப் படி சம்பிரதாயப் படியே கட்சி மேடை போல இல்லாமல் யாரையும் அவர்களே இவர்களே என்று அழைத்து துதிபாடாமல் ஆழ்வார்களின் பாடல்களில் உள்ள சுவைகளையும் அவற்றில் உள்ள தத்துவ மேன்மையையும் மட்டுமே உள்ளம் உருக தன் கம்பீரமான கேட்ப்போரை மயக்கும் அற்புதக் குரலில் சொற்பொழிவாற்றினார். அன்று அவர் கருணாநிதியை பெயரை ஒரு இடத்தில் கூட அழைக்காமல் தன் உரை நிகழ்த்தினார் என்பது ஹைலைட்! கடைசியில் இப்படி ஆழ்வார்களால் போற்றப்பட்ட தமிழுக்கு மாநாடு நடத்தியது பாராட்டு்க்குரியது என்று முடித்துவிட்டார்.

கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே அவரைக் குறிப்பிடாமல் அவர் புகழ் பாடாமல் ஒருவர் ஆண்டவனின் புகழை மட்டுமே பேசி விட்டு ஆளுபவனை உதாசீனம் செய்தது கருணாநிதியைப் பெரிதும் தைத்திருக்கிறது. அதனால்தான் வேளுகுடியை குத்தும் வண்ணம் உள்குத்து வைத்துஇந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்என்று பேசியுள்ளார் கலைஞர்.

திருச்சி கல்யாணராமன் விமர்சனிக்கப்படுதல்: அடுத்து திருச்சி கல்யாணராமன். பல ஆன்மீக அன்பார்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவர். ஆனால் அன்று வேளுகுடி அவர்களின் கண்ணியத்திற்கும் பக்திக்கும் மாறாக நடந்து கொண்டார் திருச்சி கல்யாணராமன். சுயநலத்திற்காக எத்தனையோ பேர் துதிபாடுவதும், கால்களில் விழுவதும் தமிழ்நாட்டில் தினமும் நடப்பது தான். ஆனால் அனுதினமும் ஆண்டவன் புகழ் பரப்பும் புகழ் பெற்ற அறிஞரான திருச்சி கல்யாணராமன் அன்றைய தினம் நடந்து கொண்ட விதம் படு கேவலமாக இருந்தது. அவரது பேச்சும் நடவடிக்கையும் ஆபாசத்தின் உச்சம். வாலியே வெட்கித் தலைகுனிய வைக்கும் ஒரு செயலாக அமைந்து விட்டது. இது காறும் தன் அருமைத் தமிழால் புலமையால் பேச்சாற்றலால் ஆன்மீக அன்பர்களின் உள்ளத்தில் வாழ்ந்து வந்த கல்யாணராமன் இந்த ஒரு நிகழ்த்தியில் தரம் தாழ்ந்து தன்னை அதல பாதாளத்தில் தள்ளி விட்டார். இத்தனை வருடங்கள் அவர் ஆற்றிய உபன்யாசங்களுக்கும் பேருரைகளுக்கும் அர்த்தம் இல்லாமல் செய்து விட்டார். பணத்திற்காகவும் பதவிக்காவும் புகழ் பாடும் அற்பர் கும்பலையெல்லாம் நாண வைத்து விட்டார். ஒரு வாலியும், ஒரு எஸ் வி சேகரும் புகழ் பாடினால் நமக்கு அதிர்ச்சி இல்லை. ஆனால் நாளெல்லாம் பக்தி வளர்த்த ஒரு அறிஞர் கேவலம் தனக்கு சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும் சான்ஸ் வேண்டும் என்று இறைஞ்சிக் கெஞ்சிக் கேட்ட கேவலத்தைக் கண்ட பலரும் அவமானத்திலும் அருவருப்பு உணர்ச்சியிலும் உறைந்து போயினர். நான் ஒரு பிராமணன் எனக்கு டி வி சான்ஸ் கொடுங்கள் நான் மடிப்பிச்சை கேட்க்கிறேன் என்று அவர் பிச்சைக்காரனை விடக் கேவலமாகக் பொது மேடையில் கெஞ்சியதும் என்ன என்று சொல்லுவது. நாளைக்கு மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு திருச்சி கல்யாணராமன் உபன்யாசம் நடக்க வாய்ப்பு இருக்கிறது அவ்வளவு ஏன் இவர் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவராக கூட பிரமோஷன் கிடைக்கலாம்.

தேவையில்லாமல் கூட்டப்பட்ட கமென்ட்: நண்பர் கூட இதையும் சேர்த்திருக்கிறார், “இது மட்டுமல்ல. திருச்சி கல்யாணராமனின் யோக்கிதை கொஞ்ச நாளைக்கு முன்பு வெட்ட வெளிச்சமானது பலருக்குத் தெரியாமல் போயிருக்கலாம். எம் எஸ் சுப்புலெஷ்மி ஒரு பெண் என்பதால் அவர் விஷ்ணு சகஸர்நாமம் பாடியிருக்கக்கூடாது என்று சொன்னவர் இவர். பட்டி தொட்டியெல்லாம் ஒரு பெண் பாடிய விஷ்ணு சகஸரநாமம் ஒலித்ததால், அது பாவத்தைச் சேர்த்துவிட்டது என்ற பொர்ருள் பட பேசினாராம்”, என்று முடித்திருப்பதாக தெரிகிறது. ஏனனில், கடைசியில் “[edited]” என்றுள்ளது. சில இந்துக்களுக்கு, தமக்கு எல்லாமே தெரியும் என்ற நினைப்பு அத்கமாகவே இருக்கிறது. வேதங்களில் பல சாகைகள் பெண் ருஷிகளால் / பண்டிதர்களால் இயற்றப்பட்டது[13] என்ற உண்மையை அறிந்தால், இப்படி யாரும் பேசமாட்டார்கள். ஏனெனில், இந்துக்களே இப்படி உளறினால், மற்ற இந்து-விரோத சக்திகள் இதையே ஆதாரமாக வைத்துக் கொண்டு கதையடிக்க ஆரம்பித்துவ்டுவார்கள்.

“பார்ப்பன பெண் நாட்டிய சிகாமணியான பத்மா சுப்ரமணியம், இந்துத்துவ வெறியரான வேளங்குடி கிருஷ்ணன் என்றெல்லாம் எழுதியுள்ள தமிழர்கள்”: பார்ப்பனர்களே, இவ்வாறு தவறான தகவல்களைக் கொடுத்தால், மற்றவர்களைப் பற்றிக் கேட்கவேண்டுமா? இதோ ஒரு தமிழர், இப்படி எழுதியுள்ளார்[14], “தமிழ் தமிழ் என்று சொன்னால் பார்ப்பானும் நாங்களும் தமிழ்தான் பேசுகிறோம் நாங்களும் தமிழர்கள்தான் என்று நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்வார்கள்…………. இந்நிலையில் பார்ப்பன பெண் நாட்டிய சிகாமணியான பத்மா சுப்ரமணியத்தின் அரங்கேற்றத்தில் பூவிதழும் போர்வாளும் நாட்டிய நிகழ்வில் இந்துத்துவ வெறியரான வேளங்குடி கிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்தார் கருணாநிதி………………”. குறிப்பான வரிகள் மட்டும் இங்கு மேற்கோளாகக் காட்டப் படுகின்றன. அதாவது, ஈழப்பிரச்சினை, கருணாநிதி-எதிர்ப்பு, சாதிப்பிரச்சினை, உள்ளூர்-பிரச்சினை…….இப்படி எது இருந்தாலும், சம்பந்தமேயில்லாமல் பார்ப்பன-எதிர்ப்பு, காழ்ப்பு, துவேஷம், தூஷணம்………..முதலியவை இருப்பதும் வேடிக்கையே!

வேதபிரகாஷ்

18-07-2010


[1] ஜெகத்ரெக்ஸகன் “ஆழ்வார்கள் ஆய்வு மையம்” என்று வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக, ஆண்டு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பண்டிதர்களை கௌரவித்து வருகிறார். இம்முறை, இது அரசியலாக்கப்பட்டுவிட்டது தெரிகிறது.

[2] “பார்ப்பனர் / பார்ப்பான்” என்ற சொற்பிரயோகம், திராவிட சித்தாந்திகளால் இழிவாக உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது.

[3] தினமலர், தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38052

[4] வேதபிரகாஷ், ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:

https://rationalisterrorism.wordpress.com/2010/07/13/ஆத்திக-நாமதாரிகளும்-நாத/

[5] இதை பல கட்டுரைகள் வாயிலாக பதிவு செய்துள்ளேன். குறிப்பாக திருக்குறள் விஷயத்தில், இவர் கிருத்துவர்களுடன் சேர்ந்துகொண்டு செயல்பட்டது.

வேதபிரகாஷ், திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்,

https://rationalisterrorism.wordpress.com/2010/02/11/திருக்குறளை-எதிர்க்கும்/

…………………………………., திருவள்ளுவரை, திருக்குறளை எதிர்க்கும் விரோதிகளின் பின்னணி என்ன?, http://chemozhi.wordpress.com/2010/06/21/திருவள்ளுவரை-திருக்குறள/

[6] இதை பல தமிழறிஞர்கள், புலவர்கள், பண்டிதர்கள் எடுத்துக் காட்டியிருந்தனர். இருப்பினும், இந்துமதத்தைப் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றரீதியில்தான் செயல்பட்டது, என்பது மாநாடே மெய்ப்பித்துவிட்டது.

வேதபிரகாஷ், சமயம் வளர்த்த தமிழ்கருத்தரங்கு, http://chemozhi.wordpress.com/2010/06/25/தமிழை-வளர்த்த-தமிழ்-கருத/

[7] இது இவ்வரசே கிளப்பி விட்டுள்ளப் பிரச்சினை. ஆழ்வார்கள்-நாயன்மார்களோ, தமிழக அரசர்களோ இதனை பிரச்சினையாகவே கருத்வில்லை. அதாவது, அத்தகைய நினைப்பு அவர்களுக்கு இல்லை. ஆனால், திராவிட இயக்கம் தோன்றியபிறகு, இத்தகைய வெறுப்பு, பாகுபாடு….வளர்க்கப்பட்டது. இப்பொழுதைய கருணாநிதி ஆட்சியில் மறுபடியும் கிளப்பிவிடப்பட்டுள்ளது.

[8] சமீபத்தில் கூட, ஓரு வழக்கு இவருக்கு சாதகமாக தீர்ப்புக் கொடுத்திருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளன.

வேதபிரகாஷ், கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!, http://lawisanass.wordpress.com/2010/07/14/கருணாதியின்-மீது-நிலுவ/

[9] ஒரு தொண்டர் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டபோது விமர்சனம் செய்தது, ஒரு அமைச்சர் தீ-மிதித்தபோது கண்டித்தது ………..முதலியன.

[10] ஆகையால்தான், சங்ககாலத்திலிருந்தே, பிராமணர்கள் தங்களது “ஆரிய மயமாக்கும்” சூழ்ச்சிகளை ஆரம்பித்து விட்டனர் என்று வாதிப்பர். ஆனால், பிராமணன், திராவிடன் வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் இல்லை என்பது கூட அவர்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது.

[11] தினமலர், முதல்வர் விழாவில் வெளுத்துக்கட்டிய வேளுக்குடி கிருஷ்ணன், ஜூலை 17,2010, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=41671

[12] தினமலர், தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு,, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: ஜூலை, 12, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38052

[13] வேதங்களைப் பற்றிப் படிக்காமலே, திராவிட சித்தாந்திகள் பல கதைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர். அடிப்படை விஷயங்களைக்கூடத் தெரிந்து கொள்ளாமல், யாரோ இப்படி எழுதியுள்ளனர், பேசியுள்ளனர் என்று, ஒருவர் மேற்கோள் காட்ட, அதை மற்றவர் காப்பியடித்து எழுத, அதனை இன்னொருவர் மேற்கோள்காட்டா……………………இப்படியே ஆராய்ச்சி நடக்கிறது!

[14] http://inioru.com/?p=14983 தொகுப்பாசிரியர்கள் : அசோக் யோகன் – பிரான்ஸ்: சபா நாவலன் –இங்கிலாந்து; : டி.அருள் எழிலன் –இந்தியா; மின்னஞ்சல் : info@inioru.com, inioru@gmail.com, inioru@yahoo.co.uk

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்கின்ற ஆட்சி கலைஞருடைய ஆட்சி!

ஜூன் 15, 2010

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்கின்ற ஆட்சி கலைஞருடைய ஆட்சி!

http://viduthalai.periyar.org.in/20100615/news18.html

திருத்துறைப்பூண்டியில் பெரியார் சிலை திறப்பில் தமிழர் தலைவர் பாராட்டு!

திருத்துறைப்பூண்டி, ஜூன் 15_ சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யக் கூடிய ஆட்சி திமுக ஆட்சி என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு-ரையாற்றினார்.

திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்

பிப்ரவரி 11, 2010

திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்

வேதபிரகாஷ்

குறிப்பு: இக்கட்டுரை “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியவின் பங்கு” என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. திராவிடச் சான்றோர் பேரவை சார்பில் நடந்த ஆய்கத்தில் அதே தலைப்பில் கருத்தரங்கம் கடந்த மார்ச் 2009ல் சென்னையில் நடந்தது. பதிப்பகத்தார் – திராவிட சான்றோர் பேரவை, சென்னை, 2009, ப.201-208.

தமிழகத்தில் தமிழுக்குக் கிடைக்கும் அந்தஸ்த்தும், மதிப்பும், மரியாதையும் சொல்லவொன்னாத நிலையை அடைந்துள்ளன. திருக்குறளை அவமதிக்கும் புனித காரியத்தைத் திருவாளர் பகுத்தறிவு பகலவன் பெரியார் ஈவேரா அவர்கள்தாம் துவைக்கி வைத்தார் . தமிழைப் பற்றியும், தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் அவர் சொல்லியுள்ளதை படித்தால், படித்திருந்தால், படிக்க நேரிட்டால், தமிழ், முத்தமிழ், வாழும் தமிழ், நடக்கும் தமிழ், தமிழின் மூச்சு, தமிழின் உயிர், முதலியவைல்லாம் என்றோ, அவர்களது உடலில் சூடு, சொரணை, தமிழ்ப் பற்று என்றெல்லாம் யாதாவது இருந்திருந்தால், வீழ்ந்திருக்கும், மூச்சு நின்றிருக்கும், செத்திருக்கும். ஆனால், தமிழ் வாழ்ந்திருக்கும். என்னே, அலங்கோலம் இது! தமிழ், முத்தமிழ் ஆகி, வாழும் தமிழ் ஆகி, நடக்கும் தமிழ் ஆகி, இன்று “செம்மொழி”யாகி, ஒரு கட்டடத்தில் அடைப்பட்டு விட்டது . அதன் பெயரில் கிடைத்த கோடிகள், தமிழின் மூச்சுகள், உயிர்கள் பங்கு போட்டுக் கொண்டு விட்டன.

திருக்குறள் சர்ச்சைக்குட்பட்ட பின்னணி (1968 முதல்): திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து, திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. பிறகு தமிழ்மொழி மூலம் சமுதாயத்தில் தங்கள் மீதுள்ள எதிர்மறை சிந்தனைகளை துடைக்க, 1968ல் உலகத் தமிழ் மாநாடு – என்றெல்லாம் செயல்பாடு வெளிப்பட்டது. மதுரை பல்கலைக் கழகத்தில் தமிழக அரசு, ஒரு அறக்கட்டளையை நிறுவி “திருக்குறள் ஆய்வுத்துறை” துவங்கப் பட்டு, கருத்தரங்கங்கள் நடத்தப் பட்டு, புத்தகங்களும் (திருக்குறள் ஆய்வு வெளியீடு) வெளியிடப்பட்டன[2]. அவ்வாறு பல நூல்கள் வெளிவர திருக்குறளின் இந்தியமதத்தொன்மை, சார்பு மற்றும் பிணைப்பு முதலியன நன்றாகத் தெரிந்தது. அதாவது, திருக்குறளை படிக்க-படிக்க, ஆராய-ஆராய அத்தகைய உண்மைகள் புலப்பட்டன[3]. இதனால், திராவிட சித்தாந்திகளுக்கு மட்டுமல்லாது, குறிப்பாக முகமதிய-கிருத்துவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகையால், அவர்கள், இந்த புதிய பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது, மற்றும், தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்வது என்பதில் கலந்து ஆலோசிக்க ஆரம்பித்தனர்.

கிருத்துவ-முகமதிய எதிர்ப்புகள் (1968 முதல்): கிருத்துவ-முகமதிய எதிரிப்புகள் இரண்டு வழிகளில் செயல்பட்டு வெளிப்பட்டன என தெரிகிறது.

  • ஒன்று “அறிவுஜீவிகள்” என்ற ரீதியில் மாநாடுகள் நடத்தி கருத்துருவாக்கம் ஏற்படுத்துவது.
  • இரண்டு துண்டு பிரசாரம் (handbill distribution), சிறுநூல் பிரபலம் / குறுப்புத்தக விநியோகம் (pamphleteering) மூலம் “பயத்தை”த் தூண்டுவது.

குரானை புகழ்ந்தும், குறளை இகழ்ந்தும். “பொதுமறை எது? குறளா? குரானா?” என்ற தலைப்பில் திருச்சியை சேர்ந்த மதனி என்ற முஸ்லிம் எழுதிய ஒரு “ஆராய்ச்சி நூல்” வெளியிடப்பட்டு, 1968ம் ஆண்டு முதல் பதிப்பும் 1974ம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது.

கிருத்துவர்கள் தமது “கட்டுக்கதைகள்” வெளிப்பட்டு அஸ்திவாரம் ஆட்டங்கண்டு விடுமோ என பயந்து, தமது பிரசாரங்களை முடுக்கி விட்டனர். கிருத்துவர்கள் 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா?” என்ற குறுபம்புத்தகம் தெய்வநாயகத்தால் எழுதவிக்கப்பட்டு வெளியிடுகிறார்கள் [4]. மு.கருணாநிதி “மதிப்புரை” அளித்துப் பாராட்டுகிறார்.

பல்கலைகழகங்களும், மதரீதியிலான “நாற்காலிகளும்”, சித்தாந்த மோதல்களும்: முகமதியரும் தமது யுக்திகளைத் தொடங்கினர். அதே மதுரை பல்கலைக் கழகத்தில் “இஸ்லாமிய தமிழிலக்கிய ஆரய்ச்சிப் பிரிவு” துவக்கப் பட்டது. நல்ல முஸ்லிம்கள் இருதலைக்கொள்ளி எறும்புகள் மாதிரி தவித்தனர், ஏனெனில், அவர்கள் “தமிழின் நண்பர்கள்” என்றும் காட்டிக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் தங்களது அடிப்படைவாதத்தையும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். ஆகையால், அவர்கள் திருக்குறளை தவிர்த்து தமது மதம்தான் சிறந்தது என்ற ரீதியில் “சூஃபி மெய்ஞானம்” என்ற போர்வையில் “ஆரய்ச்சி” ஆரம்பித்தனர். அவர்களும் “உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள்” நடத்த ஆரம்பித்தனர்[5]. இவ்விதமாக, திருக்குறள் பின்னேத் தள்ளப்பட்டு, “இஸ்லாமிய தமிழ் இலக்கியம்”, “தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லீம்கள் ஆற்றியத் தொண்டு”, முதலியன முன்வைக்கப் பட்டன. அப்துர் ரஹ்மான், மணவை முஸ்தபா முதலியோர் இதில் பங்கு கொண்டனர்.

இவ்வாறு, முகமதியர் தெளிவாக இருக்கும்போது, கிருத்துவர்கள் தமது “உள்-பிரச்சினைகளுக்காக” யோசித்து செயல்பட வேண்டியிருந்தது. கத்தோலிக்க சர்ச் தெய்வநாயகத்தின் மூலம் இந்த பிரச்சினை அணுக முடிவெடுத்தது. அதனால்தான் தெய்வநாயகத்தை வைத்தே எல்லா பிஷப்புகளும் தமது வேலைகளை இன்றளவிலும் செய்து வருகின்றனர்.

சித்தர்கள்: கிருத்துவர்களும், முகமதியரும்: திருக்குறளைவிட, “சித்தர்”களைப் பிடித்துக் கொண்டால், திருவள்ளுவரையும் மறக்கலாம், தமது “இந்து-விரோத” பிரசாரத்திற்கு “சித்தர் பாடல்களை” திரித்து விளக்கமும் அளிக்கலாம் என முடிவு செய்தனர் போலும். “தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்” என்ற மாநாட்டை மணவை முஸ்தபா[6] 1980ல் நடத்தினார். முதல் கிருத்துவ தமிழ் மாநாடு துருச்சியில் டிசம்பர் 28-30, 1981 தேதிகளில் நடக்கிறது. அதில், வி. ஞானசிகாமணி என்ற கிருத்துவரின் போலி “சித்தர் பாடல்களை” ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட, “அகத்தியர் ஞானம்” என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இவ்வாறு திருவள்ளுவத்தில் முரண்பாடு கொள்ளும் இவர், “சித்தர்களில்” போட்டி போட்டு மாநாடுகள் நடத்துகின்றனர், புத்தகங்கள் வெளியிடுகின்றனர். கருணாநிதியும், கனிமொழியும் சமீபத்தில் சிவவாக்கியர் பாடல்களைப் பற்றி அரைகுறையாக சொல்லி மாட்டிக் கொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இனி தனித்தனியாக, சில குறிப்பான திருக்குறள்-விரோத நிகழ்ச்சிகள் அரங்கேறியுள்ளதைப் பார்ப்போம்.

குறளா, குரானா? இவ்வாறு குரல் எழுப்பியது, கேள்வி கேட்டது, தமிழன் தான், ஆமாம் தமிழ் படித்த முகமதியன். தமிழனாக, இந்தியனாக, ஏன் இந்துவாக இருந்த முகமதியன் தான் கேட்டான், கேட்கிறான். சரி, பதில் தான், உண்மையை வெளிக்காட்டுகிறது. ஆமாம், குரான் முன்னம், குறள், ஆமாம், “திருக்குறள்” இல்லை, துச்சமாம்! காஃபிர்[7] (முகமதியன் அல்லாதவன்) மோமினானதால்[8] (நம்பிக்கையுள்ளாவன்) ஏற்பட்ட கோளாரா அல்லது முகமதியம் வளர்த்த அடிப்படைவாதமா என்று ஆராயவேண்டியுள்ளது. மதம் மாறுவதிலேயே, கடவுள் மாறும்போது, போலித்தனமான நம்பிக்கை வெளிப்படுகிறது.

“பொதுமறை எது? குறளா? குரானா?” இத்தலைப்பில் திருச்சியை சேர்ந்த மதனி என்ற முஸ்லிம் தமிழில் ஒரு “ஆராய்ச்சி நூலை” எழுதியுள்ளதாகவும், அதில் குரான்தான் பொதுமறை என்றும் குறள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் கண்ணுதல்[9] என்பவர் எழுதியுள்ள “பொதுமறை குறள்தான்-குரானில்லை” என்ற மறுப்பு நூல் மூலம் தெரியவந்துள்ளது. 1968ம் ஆண்டு முதல் பதிப்பும் 1974ம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது. புத்தகதை பேகம்பூர், திண்டுக்கல்-2 என்ற விலாசத்திலிருக்கும் “டில்லி குதுப்கானா” என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேற்படி புத்தகம் நெ.67, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-1 என்ற விலாசத்தில் இருக்கும் மன்சர் புக் சென்டர் என்ற புத்தகக் கடையில் விற்பனை செய்யப்படுகிறது. புத்தகதை அச்சிட்டோர் ஜோதி பிரிண்டர்ஸ், திருச்சி-1. இன்று இப்புத்தகம் கிடைப்பதில்லை.

மதனியும், தெய்வநாயகமும்: மேற்கண்ட உண்மைகளினின்று தெளிவாக அறியப்படுவது, மதனி மற்றும் தெய்வநாயகம் முகமதியர் மற்றும் கிருத்துவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவை, குண்டு, வெடிகுண்டு, எதிர்ப்பு சின்னங்கள் தாம், அவைற்றை வெடிக்கச் செய்யும் துப்பாக்கி, ராக்கட்-லாஞ்சர் மற்றும் ரிமோட்-கருவிகள் இஸ்லாமிய-கிருத்துவ தலமைகள்-தலமையகங்கள் தாம்[10]. மதனியின் புத்தகத்தை மறைத்து விட்டனர் முகமதியர், ஏனெனில் இன்று அது கிடைப்பதில்லை. ஆனால், தெய்வநாகம் கிருத்துவ தீவீரவாத பிரச்சாரம், கத்தோலிக்க சர்ச்சின் ஆதரவோடு வலுவாக நடந்து வருகிறது[11]. நாளைக்கு சட்டரீதியில் ஏதாவது பிரச்சினை வந்தால் தப்பித்துக் கொள்ள செய்துள்ள ஏற்பாடு என்று நன்றாகத் தெரிகின்றது[12].

மொழி-இலக்கியம் மதத்திற்கு விரோதமா? இத்தகைய நோக்கு, இந்த மதம் மாறிய முகமதிய-கிறித்துவர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தங்களது இறையியல் கொள்கைகள் பாதிக்கப் படுவதால், வெளிப்படுகின்றது. முகமதியரைப் பொறுத்த வரைக்கும், அரேபிய பாடை(மொழி)த்தான்[13] சிறந்தது. குறிப்பாக, வெளிநாட்டு கிருத்துவர்களுக்கும் இந்த மொழி வெறி, நிறவெறியோடு உள்ளது. அவர்கள் இந்தியாவில் எப்பொழுதுமே இலத்தினில்தான் “பலி-பூஜை” (Eucharist) நடத்துவார்கள். பங்களுரில் தமிழில் இறைவணக்கம் நடந்தபோது, கன்னட-கிருத்துவர்கள் எதிர்த்ததை நினைவு கொள்ளவேண்டும். மேலும்,

இங்கு முகமதிய-கிறித்துவர்கள் தமது மத-கடவுளர்களை, தூதர்களை தமிழில் விளக்க முற்பட்டபோது, பல பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பாக பெண்-கடவுளர், தேவதைகள் முதலியோரை “கேசாதி-பாத” வர்ணனைகளுக்கு உட்படுத்தப் பட்டபோது, ஆரம்பகாலங்களில் எதிர்ப்பு இல்லை. அல்லாப் பிள்ளைத் தமிழ், நபி/முகமதுப் பிள்ளைத் தமிழ், பாத்திமாப் பிள்ளைத் தமிழ் என்பதையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. நபி/முகமதுப் பிள்ளைத் தமிழ் முதலியன இருந்ததாகத் தெரிகிறது, ஆனால், 20வது நூற்றாண்டுகளில் அவர்களது மத-அடிப்படைவாதம், தீவிரவாதம் முதலியன சித்தாந்தரீதியில் வளர்ந்தபோது, அத்தகைய வர்ணனைகளை எதிர்த்தனர். அதுமட்டுமல்லாது அத்தகைய மற்றும் தமது சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகாது என்றுள்ள “பாடபேதங்கள்’ என்ற போர்வையில் பாடல்களையும் நீக்கி விட்டனர் மற்றும் புதிதாக எழுதி சேர்த்தும் உள்ளனர்.

முகமதியமத காப்பியங்களைப் பொறுத்தவரைக்கும், அவர்களுக்கு இடையே இருந்த ஷியா-சுன்னி வெறுப்பும் வெளிப்படுகிறது[14]. தமது கடவுளர், தூதர்களை தமிழ் மரபுபடி அவன், அவள் என்று ஒருமையில் குறிப்பிடுவதை எதிர்த்தனர்[15].

செமித்திய-சகோதர மதங்களின் முரண்பாடு ஏன்? இந்தியாவில் இந்துமதத்தை எதிர்த்து மதம் மாற்ற வேண்டும் என்ற நோக்கில் முகமதியர்-கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, ஒன்றாக செயல்பட்டாலும், அவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் பலமுறை வெளிப்படுகின்றன. யூதர்கள் “ஏசுகிருஸ்து” என்ற நபரை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. அத்தகைய பாத்திரமே பொல்லியானது என்றும், “ஏசுகிருஸ்து” ஒரு கபடதாரி, வேடதாரி மற்றவரைப் போன்று நடித்து ஏமாற்றுவன் (imposter) என்றுதான் அவர்கள் கொண்டுள்ளனர். கிருத்துவர்களுக்கோ, யூதர்களின் மீது தீராத பகை, ஏனெனில் அவர்கள்தாம் தமது தலைவர் சிலுவையில் அறையப்பட காரணமாக இருந்தவர்கள் என்றதினால். முகமதியரோ, “ஏசுகிருஸ்து”வை கடவுளாக, இறைமைந்தனாக ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு, “சிலுவையில் அறைப்பட்டதையும்” மறுக்கின்றனர்[16]. எனெனில், அவர்களது கடவுள் “அல்லா”, அத்தகைய நபர் என்றுமே சிலுவையில், பறிக்கவில்லை மற்றும் உயர்த்தெழவில்லை, மாறாக உயர்வான ஒரு இடத்திற்கு எடுத்தச் செல்லப் பட்டு, அவரது காயங்களுக்கு மருந்து போடப்பட்டு, குணமாகினார் எனச் சொல்கிறாகத்தான் நம்புகின்றனர். பிறகு, மேரி மேக்தலினை மணம் செய்து “ஏசுகிருஸ்து” கல்லறை இந்தியாவில், காஷ்மீரத்தில், “ரோஸாபெல்” என்ற இடத்தில் இருப்பதாகவும் புனையப்பட்ட “சரித்திரம்”![17] ஆகவே, இத்தகைய சூழ்நிலைகளிலும் திருக்குறளை அவர்கள் தாக்குகின்றனர்.

தமிழர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? தமிழ் என்று பேசுபவரும், திருக்குறள், திருவள்ளுவர் என்றெல்லாம் விழாக்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் நடத்தும் தமிழ் அறிஞர்கள், பண்டிதர்கள், புலவர்கள், கவிகள், கவிக்கோக்கள், பெருங்கவிக்கோக்கள் முதலியோர், இவ்வாறு தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் தாக்கப்படுவது, இழிவுபடுத்தப்படுவது, கேவலப்படுத்தப்படுவது முதலியற்றைப் பற்றி கவலைப்படாமல், மூச்சுக்கூட விடாமல் இருப்பது கண்டு ஆச்சரியமாக உள்ளது. முக்கியமாக, பலர் கிருத்துவர்-முகமதியர் முதலியோர் தமக்கு கொடுக்கும் சலுகைகள், பாராட்டுகள், மரியாதைகள் முதலியற்றில் மயங்கி, தமது சுயமரியாதை, மானம் முதலியற்றை மறந்து, அவர்களுடன் செயல்படுகின்றனர். சமயம் வரும்போது திராவிட அரசியல்வாதிகளும் தாம் ஆளும்போது, அவர்களுக்கு, “கலைமாமணி” முதலிய பட்டங்களால் கௌரவிக்கப் படுகின்றனர்.

கண்ணுதலின் போராட்டமும், முடிவும்: கண்ணுதல் என்ற தனிப்பட்ட மனிதர், இந்த குறளா-குரானா போராட்டத்தில் ஈடுபட்டு, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அவரது குறும்புத்தகம் வெளிப்படுத்துகின்றது. இருப்பினும், அவரது எழுத்துகள் மற்றும் தனிநபர் போராட்டம், இப்பொழுதே அறியப்படாமால் உள்ளது. காலடைவில் அவர் முழுவதுமாக மறக்கப்படலாம். கிருத்துவர்கள் தமிழறிஞர்கள், புலவர்கள் முதலியோரது நூல்களை அழித்துள்ளனர். உதாரணத்திற்கு சிவரபிரகாசரின் ஏசுமத நிராகரணம் மற்றும் ஏசுமத நிர்க்கிரகம் என்றஇரு புத்தகங்ககளை அவர்கள் எரித்துள்ளனர். இந்த கண்ணுதல் என்பவரோ முகமத வெறியர்களால் கொலை செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அதற்கு மேல் எந்த விவரமும் தெரியவில்லை[18].

எனவே, இந்த திருக்குறள் எதிர்ப்பு, மறப்பு, மறைப்பு, திரிப்பு முதலிய காரியங்களில் ஒட்டுமொத்த தமிழ்-எதிர்ப்பு கூட்டங்கள்தாம் “திராவிடர்” என்ற போர்வையில், முகமதியர்-கிருத்துவர்களுக்கு துணைபோய், தன் கையே தன் கண்களைக் குத்திக்கொள்வதைப் போன்று தமிழர்கள் செய்ய மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகையால்தான், அவர்களுக்கு மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து குழுக்களும் தமக்கு எடிராக செயல்படுவதை அறியாமல், அவர்கள் தமது காப்பாளர்கள் என்று இன்றளவிலும் நம்பப்பட்டு வர்கின்றார்கள். இந்த மாயவலையிலிருந்து தமிழர்கள் விடுபடும் வரை, தமிழர்களுக்கு, தமிழுக்கு விடிவு காலம் இல்லை.

வேதபிரகாஷ்


[1] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

 

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[2] சென்னை, மயிலாப்பூரில் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ஆம் நாள் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆற்றிய சிறப்புரை – நம் நாடு நாளிதழ் அக்டோபர் 16, 1967) பேசியபோது, “சென்னைப் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் ஆராய்ச்சிக்கு என்றே ஒரு தனித் துறையை ஏற்படுத்தத் தமிழக அரசு முயற்சி செய்யும்” என்றார். ஒருவேளை, அதுதான் மதுரை பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தபட்டதா என்று தெரியவில்லை.

[3] திருக்குறள் உலக பொதுமறை என்றெல்லாம் திராவிட அரசியல்வாதிகள் பேசியபோது, முகமதியர் கடுமையாக எதிர்த்தது மட்டுமல்லாது, அவர்கள் திராவிட சித்தாந்திகளிடம் அவ்வாறு பேசவேண்டாம் என்றும் எடுத்துக் கூறினர். இன்றளவிலும் முகமதியர் இணைத்தளங்கள் மூலம் குறளை குரானுடன் ஒப்பிடுவதை கடுமையாக எதிர்க்கின்றனர்.

[4] ஆர்ச் பிஷப் அருளப்பா இதற்கு பெருமளவில் உதவி வெய்துள்ளதாக, தெய்வநாயகமே ஓப்புக்கொண்டுள்ளதை அவர்கள் வெளியுட்டுள்ள குறும்புத்தகங்கள் மூலம் அறியலாம்.

[5] ஏழாம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மே மாதம் 25, 26, மற்றும் 27 ஆம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

[6] மணவை முஸ்தபா, தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள், மீரா பப்ளிகேஷன், AE-103, அண்ணா நகர், சென்னை-600040, 1983.

[7] காஃபிர் = இவார்த்தை “குஃப்ரு” என்ற அரேபிய சொல்லினின்றுப் பெறப் படுகின்றது. குஃப்ரு என்றால் சுத்தமில்லாதவன், ஆச்சாரமில்லாதவன், விலக்கப்பட்ட உணவை உண்பவன், அல்லாவை நம்பாதவன் என்றெல்லால்ம் பொருள்படும். குரானின் படி, இவ்வுலகம் “தாருல்-இஸ்லாம்” மற்றும் “தாருல்-ஹர்ப்” என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பின்னதில், எப்பொழுதும் “ஜிஹாத்” என்ற புனித மதப்போர் நடத்தி, காஃபிர்களைக் கொன்றால் தான், அந்த “குஃப்ரு” நீங்கப்படும். அதுவர “ஜிஹாத்” தொடரும்.

[8] “மோமின்” = நம்பிக்கை உள்ளவன், அதாவது குரானில் மட்டும் நம்பிக்கையுள்ளவன், அதனால் மற்றவற்றை அடியோடு நம்பாதவன், நம்பக் கூடாதவன், நம்ப முடியாதவன்.

[9] கண்ணுதல், பொதுமறை குறள்தான்-குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.

[10] வில்லிருக்க அம்பை நோவானேன் என்பது பழைய “பழமொழி”, இப்பொழுது, துப்பாக்கி இருக்கத் ரவையை நோவானேன், ராக்கட்-லாஞ்சர் இருக்க குண்டை நோவானேன், ரிமோட்-கருவிகள் இருக்க வெடிகுண்டுகளை நோவானேன் என புது “பழமொழிகள்” உபயோகப்படுத்தலாம். ஆனால், இவையும், தொழிஏநுட்பத்தால் பழையதாகி விடுகின்றன!

[11] ஆகஸ்த்து 2008ல் நடந்த தமிழர் சமயம் மாநாடு முழுக்க-முழுக்க பிஷப்புகள் மாநாடுதான். அவர்கள் பங்கு கொண்டது மட்டுமன்றி அங்கேயே இருந்து, பாடி-ஆடி மற்றவர்களை மகிழ்வித்தனர்.

[12] அருளப்பா மாதிரி சட்டப் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு, தேவையற்ற விளம்பரத்தைத் தர விரும்பவில்லை என்று நன்றாகத் தெரிகின்றது.

[13] திராவிட-மற்றும் சித்தாந்திகளைப் போல “பாஷை” என்ற சொல்லிற்கு பதிலாக “பாடை” என்று அவர்கள் உபயோகிக்கும் வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.

[14] எம். செய்யது முகம்மது ஹஸன் (பதிப்பாசிரியர்), கனகாபிஷேகமாலை, ஐந்தாம் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, கீழக்கரை, 1990, ப.xiv-xv.

[15] அதே இலத்தில், ப.xvii.

[16] முஹம்மது அப்துல்காதிர், இயேசுநாதர் சிலுவையிலறைப்படவில்லை, முஸல்மான் ஆபீஸ், தென்காசி, 1980.

Ahmed Deedat, Crucifixion or Cruci-fiction, Islamic Propagation Centre, Durban, South Africa, 1987.

…………………….., Resurrection or Resusiatation, Islamic Propagation Centre, Durban, South Africa, 1987.

………………………, Who moved the stone?, Islamic Propagation Centre, Durban, South Africa, 1987.

[17] இதன் மீது ஆதாரமாகத் தான் “இந்தியாவில் ஏசு” என்ற படத்தை கிருத்துவர் எடுக்கின்றனர். விவரங்களை அவர்களது இனைத்தளத்தில் காணலாம்.

[18] சமீபத்தில் திரு. நாத்திகம் ராமசாமி அவர்களைப் பார்த்தபோது, கண்ணுதலின் “பொதுமறை குறள்தான்-குரானில்லை” என்ற குறும்புத்தகத்தைக் காண்பித்ததுடன், இந்த சிறிய விவரங்களையும் சொன்னார்கள்.