நித்யானந்தாவுடன் ரஞ்சிதா ஓட்டமா?
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28140
ரஞ்சிதா 1992ல் பாரதி ராஜா இயக்கிய நாடோடி தென்றல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் பெரிய மருது, சத்யராஜுடன் அமைதிப்படை, அர்ஜுனுடன் கர்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.
மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்தார்.
கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியாயின. இதற்கு பதில் அளித்து ரஞ்சிதா கூறும்போது, எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக்கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்றார்.
தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் ரஞ்சிதா வசித்து வந்தார். சில வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதன் மூலம் மாதம் ரூ. 30 ஆயிரம் வரை வாடகை வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா உல்லாசமாக இருப்பது போன்று பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன.
வீடியோ படங்கள் பற்றி கருத்து கேட்க அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. வீடும் பூட்டி கிடக்கிறது. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2ஆம் தேதி இச்செய்தி வெளியானதில் இருந்து நித்தியானந்தாவும் தலைமறைவாகிவிட்டார்.
நித்யானந்தரும் இப்போது தலைமறைவாகியுள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வெளிமாநிலத்துக்கு ஓடிப் போய்விட்டதாக பெங்களூரில் உள்ள ஆஸ்ரம ஊழியர் ஒருவரே கூறியுள்ளார். இந்த செக்ஸ் வீடியோக்கள் வெளியானபோது, நித்யானந்தர் தனது பெங்களூர் ஆசிரமத்தில்தான் இருந்தாராம். ஆனால் நிலைமை மோசமாவதை உணர்ந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
அவரும் ரஞ்சிதாவும் பத்ரிநாத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக வெளிநாடு பயணம் போகும்போது ரஞ்சிதாவையும் அழைத்துச் செல்வாராம் நித்யா. இப்போதும் அதே பாணியில் அழைத்துச் சென்றிருக்கலாம் என்கிறார்கள்.
நித்யானந்தா மீது பணமோசடி புகார்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28139
நித்யானந்தா ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்திருப்பதாக சேலம் காவல்துறை ஆணையரிடம் அசோகன் என்பவர் புகார் மனு கொடுத்துள்ளார்.
புகார் கொடுத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசோகன்,
என்னுடைய ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலப்பிரச்சனை கோர்ட்டில் உள்ளது உள்ளது. அப்போது என்னிடம் நித்யானந்தா சாமியாரிடம் சென்றால் பிரச்சனை குறையும் என்று சிலர் சொன்னார்கள். பிரச்சனை குறையும் என்று நான் நித்யானந்தா ஆசிரமத்தை தொடர்பு கொண்டேன். எந்த பிரச்சனையானாலும் விண்ணத்தில் எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள்.
பின்னர் சேலம் ஆசிரமத்தை தொடர்பு கொள்ளுமாறு எனக்கு முகவரியும், போன் நம்பரும் கொடுத்தார்கள். அங்கு நான் சென்றுபோது நித்யானந்தா சீடர்கள், சாமியார் உங்கள் பிரச்சனையை குறைக்க சிறப்பு பூஜை நடத்துவதாக கூறியிருக்கிறார். அதனால் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமா சாமியார் கையில் கொடுங்கள். உங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்து வெற்றி கிடைக்கும் என்றனர்.
நானும் அதை நம்பி சாமியாரிடம் பணம் கொடுத்தேன். கேஸ் தோல்வி அடைந்தால் என்ன செய்வது என்று கேட்டேன். கேஸ் தோல்வி அடைந்தால் பணம் திரும்பி பெற்றுக்கொள்ளுங்கள் என்று சாமியாரின் சீடர்கள் சொன்னார்கள்.
இப்போது என்னுடைய கேஸ் கோர்ட்டில் தோற்றுவிட்டது. நான் சாமியாரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். அது முடியவில்லை. யாரும் சரியான பதில் சொல்ல மறுக்கிறார்கள் என்றார்.
நித்யானந்தாவிடமிருந்து என் மகனை மீட்டுத் தாருங்கள்: தமிழாசிரியர் கண்ணீர்
நித்யானந்தாவிடம் கல்வி கற்க சென்ற தனது மகன் திரும்பி வரவில்லை என்றும், மகனோடு தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என்றும் திருச்சி அருகே உள்ள நவலூர் புட்டப்பட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இடும்பன் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் நமது செய்தியாளரிடம் பேசிய இடும்பன், திருச்சில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் இருக்கும் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். ஓய்வு பெற்ற தமிழாசிரியரான எனக்கு 4 பெண்கள், ஒரு மகன். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இதே ஊரைச் சேர்ந்த சித்த மருத்துவர் கோவிந்தராஜன் என்பவர் மூலம் நித்யானந்தா சாமியாரிடம் அறிமுகமானேன்.
சிகிச்சை பலன் அளித்தால், நானும் எனது குடும்பத்தார் அனைவரும், நித்யானந்தா முகாம்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தோம். 10ஆம் வகுப்பில் 440 மார்க் எடுத்து, கேட்டரிங் முடித்து விடுமுறையில் இருந்த எனது மகன் சுரேந்தரை, பெங்களூரில் உள்ள நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான லைப் ப்ரீவ் டெக்னாலஜி என்ற இலவச படிப்புக்கு அனுப்பினேன்.
பெங்களுரில் படிக்கும் பையனையும், சாமியாரையும் மாதம் ஒருமுறை நான் சந்தித்து வந்தேன். அப்போது நவலூர் புட்டப்பட்டு கிராமத்தில் ஆசிரமம் ஆரம்பிப்பித்தால், உங்களைப் போல் நிறைய பேர் பயன்பெறுவார்கள் என்று யோசனைகளை சாமியார் கூறினார்.
சாமியார் பேச்சைக் கேட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள இடத்தை ரூ.4 லட்சத்துக்கு எனது மருமகனிடம் இருந்து வாங்கினேன். இதற்கு சாமியாரின் பக்தர் அமெரிக்காவைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் பணம் கொடுத்தார். அந்த ஆசிரமத்துக்கு என்னை செயலாளராக நியமித்தார் நித்யானந்தா. நித்யானந்தா மீது நம்பிக்கை வைத்து எனது சொந்த பணத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து பாதி ஆசிரமம் கட்டி விட்டேன்.
ஆசிரமம் ஆரம்பித்த சிறிது நாட்களில், அப்பகுதியில் முகாம்கள் அமைக்க பணம் வசூல் செய்யுமாறும், ஆசிரமத்தில் செயலாளராக உள்ளவர்கள் கண்டிப்பாக பணம் வசூலீக்க வேண்டும் என்றும் சாமியார் கட்டளையிட்டார். மேலும் தன்னை சந்திக்க பக்தர்கள் விருப்பப்பட்டால், அவர்களிடமும் பணம் வசூலிக்க சொன்னார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28127
அப்போதுதான் எனக்கு இவர்கள் ஆசிரமம் நடத்தவில்லை. பிசினஸ் செய்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்தது. இந்த விஷயத்தை என் மகனிடம் சொல்ல முயற்ச்சித்தேன். அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
திருச்சியில் கடந்த 2009ஆம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி சாமியார் முகாமிட்டு, ஆசிரமம் செயலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினார் சாமியார். அந்த கூட்டத்தில், பணம் வசூல் செய்யுமாறு நன்கொடை ரசீது கொடுத்தார். நான் அதை வாங்க மறுத்தேன். அப்போது அத்தனை பேரின் மத்தியில் என்னை வெளியே போ என்று சாமியார் கத்தினார்.
கூட்டத்தை விட்டு வெளியே வந்த நான் எனது மகன் சுரேந்தரை தொடர்பு கொண்டேன். ஆனால் பேச முடியவில்லை. தொடர்ந்து போன் செய்த பின் ஒருநாள் சுரேந்தர் பேசினான். அப்போது சாமியாருடைய நோக்கம் பணம் சம்பாதிப்பதுதான். நீ அங்கே இருக்காதே, வந்துவிடு என்று சொன்னேன்.
ஆனால் சுரேந்தர், நான் சாமியாரிடம்தான் இருப்பேன் என்றும், என்னை பார்க்க வராதீர்கள் என்றான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் பெங்களூருக்கு நேரில் சென்று எனது மகனை பார்க்க முயற்சித்தேன். ஆனால் அங்கிருப்பவர்கள் சுரேந்தரை பார்க்க அனுமதிக்கவில்லை என்றார்.
தற்போது சுரேந்தர் தன்னுடைய பெயரை மாற்றி, நித்ய பிரபானந்தா என்று வைத்துக்கொண்டதாகவும், நித்யானந்தா போல நீண்ட முடிகளை வளர்த்துக்கொண்டதாகவும் கூறுகிறார் இடும்பன். எப்படியாவது எனது மகனை சாமியார் நித்யானந்தாவிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்று கண்ணீர் விடுகிறார் இடும்பன்.
நித்தியானந்தாவுடன் தொடர்பு வைத்துள்ள நடிகைகள் பட்டியல்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28096
நித்தியானந்தாவுடன் ரஞ்சிதாவை தவிர மேலும் பல பிரபல நடிகைகள் தொடர்பு வைத்துள்ளார்கள் என்று செய்திகள் வருகின்றன. டிவி நடிகைகள் பலரும் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன.
நித்தியானந்தாவிற்கு நடிகைகளை அறிமுகப்படுத்தி வைத்தவரும் ஒரு நடிகைதான் என்கிறார்கள்.
ராமராஜனுடன் தங்கத்தின் தங்கம் படத்தில் நடித்த ராகசுதா, தொடர்ந்து தமிழச்சி, தம்பி,அம்முவாகிய நான் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சென்னையில் நித்தியானந்தா நடத்திய யோகா வகுப்புக்கு சென்று வந்தார். நித்தியானந்தாவை பார்த்ததுமே அவர் காலில் விழுந்து வணங்கினார். அவருடைய மைசூர் ஆசிரமத்தில் சேர்ந்து சன்னியாசியாகவும் ஆனார்.
ரஞ்சிதா நடித்து தயாரித்த யோகா சிடி
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28100
நித்யானந்தா சாமியாருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளிவந்துள்ளது. ரஞ்சிதாவிற்கு நீண்ட காலமாகவே நித்யானந்தாவுடன் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
ரஞ்சிதா யோகா சிடி ஒன்றை தயாரித்து வந்துள்ளார். பல நிலைகளில் யோகா செய்து காட்டி அதற்கு விளக்கம் அளித்து அந்த சிடியை தயாரித்துள்ளார்.
அந்த சிடிக்கான எடிட்டிங் பணிக்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோவுக்கு சென்று வந்துள்ளார். அதற்குள் அவர் நித்யானந்தாவுடன் இருக்கும் வீடியோ வெளியாகிவிட்டது.
சில காலமாகவே எல்லோரிடமும், உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்லிவந்துள்ளார்.
இதனால் ரஞ்சிதாவிற்கு நீண்ட காலமாக நித்யானந்தாவுடன் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது.
ரஞ்சிதா சிடி கொடு:நச்சரிப்பும், எச்சரிக்கையும்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28099
சாமியார் நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் உல்லாச லீலைகளில் ஈடுபட்டிருக்கும் வீடியோ உலகெங்கும் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.
இந்த லீலை சிடி வடிவில் சென்னை பர்மா பஜாரிலும், ரிச்சி தெருவிலும் கிடைப்பதாக நேற்று தகவல் வந்தது. இதையடுத்து இந்த இடங்களில் மக்கள் குவிந்தனர்.
ரஞ்சிதா சிடி கொடுங்க என்று கடைக்காரர்களை நச்சரித்தார்கள். கொடுக்க முடியுமா முடியாதா என்று சிலர் எச்சரித்தார்கள். அப்படி சிடி எதுவும் இல்லை என்று சமாளித்தார்கள்.
இந்த நிலை இன்றும் தொடர்கின்றது. சிடி வேண்டும் என்று கேட்டு மொய்க்கிறார்கள் பர்மா பஜாரிலும், ரிச்சி தெருவிலும்
Dinakaran-photo
விமர்சனம்:
- முன்பு, வீரப்பன் விஷயத்தில் எப்படி, அவன் இருக்கும் இடம் கோபாலனுக்கு மட்டும் தெரியுமோ, அது போல, இப்பொழுதும், இவ்விவகாரங்கள் எல்லாம், நக்கீரனுக்கு மட்டுமே தெரிந்துள்ளது.
- அடுத்தது, தினகரனுக்கு எல்லா சிடிகளும், படங்களும் கிடைக்கின்றன.
- ஒருவேளை இப்பத்திரிக்கைகளின் வியாபாரத்தைப் பெருக்கவும், அத்தகைய சிடிக்களின் வியபாரத்தை பெருக்கவும், அவர்கள் இம்மாதிரியான யுக்தியைக் கையாளுகின்றனரா?
- இதெல்லாம் ஒன்றும் மக்களுக்குத் தேவையான / அத்தியாவசியமான பொருட்கள் இல்லை. ஆகவே, சூடாக இருக்கும்போது, நல்ல வியாபாரம் நடக்கும், பிறகு, மக்கள் மறந்து விடுவர்.
- சொல்லி வைத்தால்போல், மேலே-மேலே செய்திகளை அடுக்குகிறார்கள். இதே மற்ற விஷயங்களில் இத்தகைய விழிப்புணர்வு, வேகம், துப்பறியும் திறமை இதெல்லாம் வருவதில்லை