Archive for the ‘பகலில் சாமி’ Category

இமயமலையில் பதுங்கியுள்ள நித்யானந்தாவை ரஜினியை விட்டுத் தேடச் சொல்லலாமா?

மார்ச் 31, 2010

இமயமலையில் பதுங்கியுள்ள நித்யானந்தாவை ரஜினியை விட்டுத் தேடச் சொல்லலாமா?

தினகரன் இன்று இப்படியொரு செய்தியை வெளியிட்டுள்ளது!

சொல்வதெல்லாம் “நிஜம்” தான்: அது சன்-குழுமத்தைச் சேர்ந்தது மட்டுமன்றி, அரசியல் பலத்தையும் கொண்டுள்ளது. ஆகவே அது பொய்யாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதாவது சொல்வதெல்லம் “நிஜம்” தான்!

இமயமலையில் நித்யானந்தா பதுங்கல்?

பதிவு செய்த நாள் 3/31/2010 3:43:23 PM
http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=1587&id1=12

தலைமறைவாக உள்ள நித்யானந்தா! பெங்களூர்: தியான பீடம் மற்றும் அதன் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்கிடையே நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கு, கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. சென்னை போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரின் ஆங்கில மற்றும் கன்னட மொழிபெயர்ப்பை சிஐடி சூப்பிரண்டு யோகப்பா சமர்ப்பித்தார். கோர்ட்டில் அவர் கூறுகையில், ‘‘நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க 2 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நித்யானந்தாவின் இருப்பிடம் தெரியவில்லை. ஆவணங்களை மொழி பெயர்த்ததை தவிர, இந்த வழக்கில் வேறு முன்னேற்றம் எதுவும் இல்லை’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதி அரளி நாகராஜ், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 6&ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கு தொடர்பாக நித்யானந்தா தனது ஆட்சேபணையை தாக்கல் செய்யவும் நீதிபதி அனுமதி வழங்கினார். தியான பீட தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியுள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பெங்களூரு, நித்யானந்தா, கருணாநிதி: ஜெயலலிதாவிற்கு எப்படி ஹைதராபாதோ, கருணாநிதிக்கு பெங்களூரும், மஹாபலிபுரமும். பெங்களூரில் எல்லாமே உண்டு. ஆனால், மஹாபலிபுரம், இப்பொழுது “செக்ஸ்-டூரிஸ’த்திற்கு உலகப் புகழ் பெற்றுவிட்டது. ஜோ அங்குதான் ஜாலியாக இருந்தான். வில்-ஹியூம் சின்னவீடு வைத்திருந்தான். அவன் ரஜினி படத்திலும் நடித்து இருக்கிறான்!

பெங்களூரு, நக்கீரன் கோபால், ரஜினி காந்த், கருணாநிதி: இவற்றிற்கெல்லாம் நெருங்கிய தொடர்பு உள்ளது. முன்னம், சந்தனக் கடத்தல் வீரப்பன் விஷயத்தில் கோடிகள் பறிமாற்றங்கள் நடந்தன என்றெல்லாம் சட்டசபையிலேயே பேச்சு அடிபட்டபோது, இவர்கள் அதில் சம்பந்தப் பட்டுள்ளதாக விவாதம் வந்தது.

இமயமலை, ரஜினி காந்த், நித்யானந்தா: தினகரன் இப்பொழுது “இமயமலையில் நித்யானந்தா பதுங்கலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளதால், இந்த சம்பந்தமும் இன்று முக்கியத்துவம் பெறுகிறது. இனி கருணாநிதி ஆணையிடுவது தான் பாக்கி. ஆணையிட்டால், உடனே ரஜினியை இமயமலைக்கு அனுப்பி, நித்யனந்தாவைப் பிடித்துவிடலாம்!

நித்யானந்தாவுடன் நிர்வாண நடனம் ஆட அமெரிக்காவிற்கு சென்ற நடிகைகள்!

மார்ச் 30, 2010

நித்யானந்தாவுடன் நிர்வாண நடனம் ஆட அமெரிக்காவிற்கு சென்ற நடிகைகள்!

சன் – டிவி, நக்கீரன், தினகரன்……இவர்களையெல்லாம் மிஞ்சிவிடக்கூடிய நிலையில், ஒரு அமெரிக்க சாமி, அமெரிக்கா ஸ்டைலில் செக்சஸ்-புகார் கொடுத்துள்ளது (மார்ச் 2010), அனைவர்க்கும் ஜொல்லுவிடும் வகையில் உள்ளது.

டக்ளஸ் மெக்கல்லர் மெகா டகிள் விட்டுள்ளரா, இல்லை உண்மையா என்று அந்த “நடிகைகள்” தாம் வந்து விளக்கம் சொல்லவேண்டும்.

லெனின் குருப் வீடியோவைவிட இந்த டக்ளஸ் சொல்வது, புளூ ஃபிலிமையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது!

# அமெரிக்கா வரும்போது, அவரது தனிப்பட்ட குடியிருப்பில், அழகான பெண்களுடன்தான் இருப்பார். அவர்களுடன்தான் சாப்பிடுவார் [அதென்ன “அழகான பெண்கள்” என்று புரியவில்லை. அப்பொழுது அந்த அமெரிக்க சாமியும் நல்ல சாமி இல்லை என்று தெரிகிறது. அதாவது கூட்டிக்கொடுக்கும் சாமி போல!].

# ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது, வேறு யாரும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு நித்யானந்தா என்னை கதவு அருகே காவலுக்கு நிற்க சொன்னார் [ஆஹா, இப்படி எந்த சாமியாவது, நான் மாமா வேலை இப்படித்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்வார்களா?].

இது நம்ம ஆட்களின் கொசுரு!

அமெரிக்காவுக்கு நித்தியானந்தா செல்லும்போதெல்லாம் அவருடன் இரு தமிழ்ப் பட நடிகைகளும் செல்வார்கள், அங்கு நிர்வாண நடனம் ஆடுவார்கள் என்றெல்லாம் சமீபத்தில் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.

ஆகவே, இதில் சம்பந்தப் பட்டுள்ள ஊடகங்கள் நிச்சயாமாக இந்திய சமுதாயத்தைக் கெடுக்கவே திட்டமிட்டு செயல்படுகின்றன என்றுத் தெரிகின்றது.

அவை ஏற்கெனவே ஒத்திகை பார்த்து புளூ ஃபிளிம் எனப்படுகின்ற ஆபாசமான ஆண்-பெண் புணர்ச்சி படங்களை வெளிப்படையாக ஆனால் சூசகமாக பொது ஊடகத்தில் பட்டப்பகலில், அதுவும், முக்கியமாக பரீட்சை நடக்கும் காலத்தில், திரும்ப-திரும்ப ஒளிப்பரப்பியது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த அமெரிக்க சாமியின் புகாரும் அதே ரிதியில்தான் உள்ளன. இங்கு இந்தியாவிலேயே லெனின் குருப் / குருப் லெனின் / நித்ய தர்மானந்தா இத்தகைய படங்களை தனக்குத்தெரிந்த தொழிற்நுட்பத்துடன் எடுத்துள்ளான் என்றால், நிச்சயமாக அந்த மாமா வேலை பார்த்த அமெரிக்க சாமி அதையும் மிஞ்சி புளூ ஃபிளிம் எடுத்தேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்ப்டுவதற்கு ஒன்றும் இல்லை!

சன் – டிவி, நக்கீரன், தினகரன்……முதலியவையெல்லாம் பிரத்யேகமாக ஒளிபரப்பு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒளிபரப்பினாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை!

அன்று சரோஜாதேவி புத்தகம் என்ற நிலையில் இருந்து, சில குறிப்பிட்ட பிரபலமான நடிகை-நடிகர்களுடன் புளூ ஃபிளிம் என்ற நிலையில் இருந்து, இப்பொழுதைய “நித்யானந்தா-ரஞ்சிதா மாதிரி” வெளிப்படையான ஒளிப்பரப்பிற்கு வந்து விட்ட விஷயங்கள், நாளைக்கு புளூ ஃபிளிமே ஒளிபரப்பப் பட்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

நிர்வாண ஓவியன், ஹுஸைன் அன்றே துச்சாதனையும் விஞ்சி ஆடைகளைக் களைந்து படம் காட்டினான். பாரத மாதாவையும் கற்பழித்தான். எந்த இந்தியனுக்கும் சொரணை வரவில்லை!

குஷ்புவின் கற்பின்மை தன்மைப் பற்றி உச்சநீதி மன்றமே உச்சம் குளிர இல்லை சூடேறும் வகையில் தீர்ப்புக் கொடுத்துள்ளது.

இனி கற்ப்பைப் பற்றியோ, உட்லுறவுக் கொல்வது பற்றியோ கவலைப் படவே வேண்டாம்.

திருமணத்திற்கு முன்போ, பின்போ நீதிமன்றமே சொல்லிவிட்டது!

நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)!

மார்ச் 14, 2010

நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)!

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28671

நக்கீரன் இவ்வாறு ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் வெளியிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது!

அது மட்டுமல்ல – நித்யனந்தா – ரஞ்சிதா – கோபிகா! வெளிவராத வீடியோ

என்றெல்லாம் போட்டிருக்கிறது! ஆனால், சொடிக்கியதும் “The video has been removed due to terms of use violation”! அப்படியென்றால் உண்மை என்ன?

http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=337

எந்த உபயோகிப்பு சரத்துகளை யார் மீறுகிறர்கள்?

அத்தகைய உபயோகிப்பு சரத்துகள் என்ன?

நித்யானந்தா சாமியார் பிரபல தமிழ் திரைப்பட நடிகை ரஞ்சிதாவோடு படுக்கையறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகளை டி.வி. சேனல்கள் ஒளிபரப்பின. அதைத் தொடர்ந்து, நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரஞ்சிதா விவகாரம் தவிர, வேறு குற்றச்சாட்டுகள் எதுவும் அவருக்கு எதிராக ஆதாரங்களுடன் வெளிவரவில்லை.

இந்த சூழ்நிலையில், அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. ஆன்மிக சுற்றுலா சென்று இருப்பதாக அவருடைய ஆசிரம நிர்வாகிகள் கூறி வருகின்றனர். எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வீடியோ மூலமாக நித்யானந்தா பதிலளித்து வருகிறார்.

இதற்கிடையே தனியார் டெலிவிஷன் சேனல் ஒன்று நித்யானந்தாவை சந்தித்து பேட்டி எடுத்து ஒளிபரப்பியது. அந்த பேட்டியின் போது பரபரப்பான தகவல்களை வெளியிட்ட நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா தனது பக்தை என்றும், அவர் தனக்கு சேவை செய்ததாகவும் கூறினார். இதன் மூலம் ரஞ்சிதாவுடன் தான் இருக்கும் வீடியோ காட்சியை அவர் மறைமுகமாக ஒப்புக்கொண்டு உள்ளார்.

அவரது பேட்டி விவரம்:

கடந்த 2 வாரங்களாக தங்களைப் பற்றிய  தகவல்களை கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம். இதுபற்றி நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?

எனது 33 ஆண்டுகள் பொதுவாழ்வில் நான் புகழின் உச்சத்தையும் சந்தித்து உள்ளேன். என்னை ஆன்மிக குருவாக ஏராளமானவர்கள் பார்த்து உள்ளார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக நான் வாழ்க்கையின் உச்சத்தையும், தாழ்வையும் சந்தித்து வருகிறேன்.

வாழ்க்கையின் பல பரிமாணங்களை நான் கற்று வருகிறேன். ஆனால் எனக்கு எதிராக இந்த அளவுக்கு ஒரு பகைமை இருக்கும் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. என்னை மக்கள் ஒரு எதிரியாக பார்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

இந்த கஷ்டமான நேரத்திலும் எனக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கான இ-மெயில் கடிதங்கள், போன் அழைப்புகள், ஆதரவு குரல்கள் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்தும் வந்து கொண்டு இருப்பதை, ஒரு கெட்டதிலும் ஒரு நல்ல விஷயமாக உணர்கிறேன். எனது பக்தர்கள் அல்லாதவர்கள் கூட ஒரு தனி மனிதனை தவறாக சித்தரிக்கும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை அந்த வீடியோ காட்சிகள் ஏற்படுத்தி உள்ளன. உண்மையிலேயே அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது நீங்கள்தானா?

நிச்சயமாக அந்த வீடியோ காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளன. வீடியோ காட்சிகளில் சில உண்மைகள் மாறாட்டம் செய்யப்பட்டு உள்ளன. அதில் சதி நடந்து உள்ளது.

என் சம்பந்தபட்ட வீடியோ காட்சிகளை பயன்படுத்தி சில இடங்களில் `மார்பிங்’ (நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாறாட்டம் செய்தல்) செய்யப்பட்டு உள்ளது.

அந்த வீடியோ காட்சிகளில் எந்தெந்த பகுதிகள் சதி நோக்கத்துடன் ரெக்கார்டிங் செய்யப்பட்டு உள்ளது என்பதை தற்போது ஆராய்ந்து வருகிறோம். இந்த சூழ்நிலை குறித்து அது தொடர்பான நிறைய விஷயங்களை என்னால் கூறமுடியும். எனது தனிப்பட்ட வாழ்க்கை முடித்து வைக்கப்பட்டு உள்ளது.

நான் குளித்த பிறகு துணிகளை மாற்றிய காட்சி படங்களை சில பத்திரிகைகள் வெளியிட்டு உள்ளன. வீடியோக்கள் எனக்கு எதிராக அவதூறாக சித்தரிக்கப்பட்டு காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் எந்த அளவு காட்சிகள் மாறாட்டம் செய்யப்பட்டு உள்ளன என்று எனக்கு தெரியவில்லை.

இது தொடர்பாக எங்களுக்கு எதுவெல்லாம் (வீடியோ காட்சிகள்) கிடைத்து இருக்கிறதோ அவற்றை எல்லாம் ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம். அதன் முடிவுகள் தெரியவருவதற்கு முன் எனது கருத்துகளை சொல்லாமல் அமைதியாக இருக்கவே விரும்புகிறேன்.

வீடியோவின் சில பகுதிகள் திரிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறீர்கள். அந்த நடிகை உங்களுக்கு சேவை செய்தாரா? இந்த வீடியோ காட்சிகள் டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு அந்த நடிகை ஆசிரமத்தில் இருந்தாரா?

அந்த நடிகை (ரஞ்சிதா) நீண்ட காலமாக எனக்கு சேவை செய்து இருக்கிறார். அவர் தானாக முன்வந்து எனக்கு சேவை செய்தார். எனது உடல் நலம் குன்றி இருக்கும்போது எல்லாம் எனது நலனில் அக்கறை கொண்டு அவர் என்னை கவனித்து கொண்டார். அவர்களது மொத்த குடும்பமும் எனது பக்தர்கள். அதை நான் மறுக்கவில்லை. அந்த நடிகையும் ஒரு பக்தர்.

2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நீங்கள் உடல் நலம் குன்றி இருந்தீர்களா?

ஆமாம். நான் பல நாட்கள் உடல் நலம் குன்றி இருந்தேன். உடல் ரீதியாக நான் சரியாக இல்லை என்பதை உணர்ந்தேன்.

இந்த சம்பவம் ஒரு தவிர்க்க முடியாத மன வருத்தம் கொடுத்து இருக்கிறது. உங்களை பின்பற்றுபவர்களுக்கு நீங்கள் உண்மையானவராக இல்லையே?

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். பிரமச்சரியம் என்பது தனி நபர்களின் விஷயம். அவற்றை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். அந்த விஷயத்தில் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொன்னேன். என்ன நடக்கிறது என்பதை உணரும் தன்மையுடன் உங்களுக்கு “பயோ-மெமரி” (பயோ-நினைவாற்றல்) அதிகமாக இருந்தால் மற்றவர்களின் சேவை குறைவாக இருக்கும்.

உங்களது “பயோ-மெமரி” வேறு சிலரின் தேவையில் இருந்தால் திருமண வாழ்க்கையுடன் சந்தோஷமாக வாழலாம். தனி நபர்கள் அவர்கள் விரும்பியபடி தங்களது நிலையை தேர்வு செய்து வாழ வேண்டும் என்று நான் எப்போதும் கூறுகிறேன்.

உங்கள் மீது எங்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?

வாழ்க்கையில் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்பதை நான் நம்புகிறேன். மற்றவர்களுக்காக என்னிடம் எதுவும் இல்லை.

மீண்டும் 2009-ம் ஆண்டு சம்பவத்துக்கே போகலாம். அந்த நேரத்தில் நீங்கள் சுயநினைவு இழந்த நிலையில் இருந்ததாக சொன்னீர்கள்? அது பற்றி நீங்கள் தற்போது என்ன சொல்கிறீர்கள்?

சில நபர்கள் தவறாக விரும்பியதால் அவற்றை தவறாக செய்து இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும்.

இந்த வீடியோ காட்சிகளுக்கு பின்புலத்தில் சதித் திட்டம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

எனது சொந்த விஷயத்தில் சிலர் ஏன் நுழைந்தார்கள்? இதில் சதி திட்டமோ அல்லது வேறு ஏதோ இருக்கிறது என்பது உறுதி. அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்துவிட்டனர்.

இவ்வாறு பேட்டியில் சாமியார் நித்யானந்தா கூறி இருக்கிறார்.

நித்யானந்தா ஏற்கனவே 2 வீடியோ கேசட்டுகளை வெளியிட்டு உள்ளார். இப்போது அவரது சார்பில் 3-வதாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ கேசட் ஒன்றில் அவர் கூறி இருப்பதாவது:-

நாங்கள் ஒரு அமைதியான குழுவினர். எளிமையான மக்கள். பக்தர் என்ற பெயரில் எங்களுக்கு எதிராக இதுபோன்ற ஒரு எதிரி தோன்றுவார் என ஒருபோதும் கருதியது இல்லை. மேலும், ஆசிரமத்தின் மீதான தாக்குதல்களை சமாளிப்பதற்காக நாங்கள் பயிற்சி பெறவில்லை. அத்தகைய தாக்குதல்கள் குறித்து நாங்கள் சிந்தித்து பார்த்தது கூட கிடையாது.

சமூகத்தில் பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எதையும் நான் செய்துவிடவில்லை. அந்த வீடியோவில் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இல்லை. அதில் 2 பேர் உடைகளுடன்தான் உள்ளனர். அதில் ஒருவர் மற்றவர் மீது எதையும் கட்டாயப்படுத்தவில்லை.

வீடியோ வெளியானதும் ஏராளமான கட்டுப்பாடற்ற நபர்கள் ஆசிரமத்துக்குள் நுழைந்து சேதப்படுத்தி உள்ளனர். எனவே, பக்தர்கள் மிகவும் அச்சம் அடைந்தனர். எனக்கு ஏதாவது ஆகுமோ என்றும் பயந்தனர். அப்போது, ஆசிரமத்தை பாதுகாப்பதில் முனைப்புடன் பணியாற்றினர். தற்போது, ஆசிரமத்தை மறு நிர்மாணம் செய்யும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

எங்களுடைய மக்கள் தொடர்பு துறை அழிக்கப்பட்டு விட்டது. தற்போதைய சூழ்நிலையில், நான் என்ன விளக்கம் கூறினாலும் இந்த சமூகமும், மக்களும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. உடலில் உள்ள சக்தியை ஒருமுகப்படுத்தும் `ஹீலிங்’ கலையை பயின்றவர்கள், யாரையும் தொடுவதில் தவறு கிடையாது. டி.வி. சேனல்களில் காட்டப்பட்ட இருவரும் முழு ஆடைகளுடன் இருப்பதாக தெரிகிறது. எனவே, அதில் எந்த வித சட்டவிரோதமும் கிடையாது.

எங்களுடைய ஆசிரமத்திலும் சட்டவிரோத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை. சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை நான் பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை. ஒரு தரப்பு கருத்தை மட்டுமே எடுத்துச் சொல்வதற்கு முன்பாக, எங்களுடைய பதிலையும் டி.வி. சேனல்கள் பெற்றிருக்க வேண்டும். எங்களுடைய கருத்துகளையும் டி.வி. சேனல்கள் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். என்னை விட, ஊடகங்கள் மிகவும் பிரபலமானவை.

எனவே, ஊடகங்களால் உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பும் நிலைமை உருவாகிறது. இது ஒரு அமைப்பு ரீதியான தாக்குதல். இத்தகைய அச்சுறுத்தலை, ஒருபோதும் நாங்கள் பார்த்தது இல்லை. சமூகத்தால் நாங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, யாரும் எங்களுடைய உதவிக்கு வரவில்லை. இந்த இக்கட்டான தருணத்தில் கூட, எந்த உதவியையும் நாங்கள் பெறவில்லை.

அதே நேரத்தில், ஆசிரமம் அமைந்துள்ள உள்ளூர் வாசிகள் கூட, எங்களுக்கு எதிராக திரண்டனர். ஒரு தரப்பு கதையை மட்டுமே வெளியிட்ட ஊடகங்கள், எங்களுடைய ஒரு பக்தரை கூட அணுகி விளக்கம் கேட்கவில்லை. டி.வி. சேனல்கள் உள்ளிட்ட ஊடகங்களின் ஒருதலைப்பட்ச தன்மையே இந்த விவகாரங்களுக்கு காரணம்.

திசை மாறும் நித்யானந்தா விவகாரம்!

மார்ச் 9, 2010

திசை மாறும் நித்யானந்தா விவகாரம்!

பரபரப்பு-பிரச்சாரம், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி கவனத்தை சிதறடித்தல், சிற்றின்ப-செக்ஸ் ரீதியில் செய்திகளைப் பரப்பி டிவி-செனல்கள் எல்லாம் புளூ ஃபிலிம் ஒளிபரப்புதல்: பாமரர் முதல் போலீஸார் வரை, நிதயானந்தா விஷயத்தை ஒரு பரபரப்பு செய்தி, வக்கிர மனங்களுக்குத் தீனி போடும் ஒளிபரப்புக் காட்சிகள், யாருமேத் தட்டிக் கேட்கமுடியாது என்ற நிலையில் எல்லாமே தொடரும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் 8 என்று ஏதோ உலக மளிர் தினம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டால்கூட, இவ்விஷயத்தில் எந்த நிலையும் மாறுவதாகத் தெரியவில்லை. போலீஸார்கூட ஏதோ இதை கைகழுவிவிடவேண்டும் என்ற போக்கில் செயல்படுவது போலத் தெரிகிறது. குற்றம் நடந்துள்ளது என்ற உணர்ச்சியை, நிலையை உருவாக்கியப் பிறகு, ஏதோ விதத்தில் எல்லாம், திசைத் திருப்புவதில் முயற்சிகள் நடப்பது காணும்பொது, பொருளற்றதாகி விடுவதைப் போல உள்ளது. இதை ஒரு சமூகத் தீவிரவாதக் குற்றமாகக் கருதும் போது, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாரானாலும் தண்டிக்கப் படவேண்டும். இல்லையென்றால், மறுபடியும் பாரபட்சமுறையில், அரசியல் காரணங்களுககாக, இவ்விஷயம் மறைக்கப் படுகிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். பல கொடி சொத்துகள், பினாமி சொத்துகள், என்றெல்லாம், இதில் விஷயத்தை நுழைப்ப்து ஏன் என்றுத் தெரியவில்லை.

நித்யானந்தா மீது எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கொடுக்கவில்லை – கமிஷனர்[1]: நித்தியானந்தா மீது இதுவரை எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கூறவில்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நித்யானந்தா மீதான கற்பழிப்பு வழக்கு கர்நாடக போலீசுக்கு மாற்றப்படுகிறது. இதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளேன். நித்யானந்தா மீதான மோசடி வழக்கை நாங்கள் தான் விசாரிப்போம். கற்பழிப்பு வழக்கில் கொலை மிரட்டல் சட்டப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் சட்டப்பிரிவில் கர்நாடக போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உதவி செய்வோம். கொலை மிரட்டல் சம்பவம் சேலத்தில் நடைபெற்றுள்ளது. நித்யானந்தா மீது அவரது சீடர் லெனின் கொடுத்த புகார் அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளோம். அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை.

தனிப்படை போலீசார் அனுப்பப்படவில்லை: முன்பு நிதனந்தரைப் பிடிக்க தனிப்போலீஸ் படை கிளம்பியுள்ளது, என்றெல்லாம் கதை விட்டார்கள். ஆனால், இப்பொழுது, தனிப்படை போலீசார் அனுப்பப்படவில்லை என்று கமிஷனரே சொல்ல்ல ஆரம்பித்து விட்டார். நித்யானந்தா பற்றி விசாரிக்க வெளிமாநிலங்களுக்கு இதுவரை தனிப்படை போலீசார் அனுப்பப்படவில்லை. நித்யானந்தா சென்னைக்கு வரும்போது எங்கெங்கு தங்குவார், யார், யார் அவரை சந்திப்பார்கள், யார், யாரோடு அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது, அவரது பண பரிவர்த்தனை எப்படி நடைபெற்றது என்பது பற்றி இப்போது பூர்வாங்க விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. மோசடி வழக்கு தொடர்பாக நித்யானந்தாவை கண்டிப்பாக விசாரிப்போம். கர்நாடக போலீசுக்கு, தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. மேற்பார்வையில் இந்த வழக்கில் தமிழக போலீசார் அனைத்து உதவிகளையும் செய்வார்கள் என்றார்.

லெனின் கருப்பனுக்குத்தான் சிக்கல்? இதற்கிடையே, நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருப்பதைப் போன்ற காட்சிகளை வீடியோவில் படம் பிடித்த அவரது சீடர் லெனின் கருப்பன் என்கிற நித்ய தர்மானந்தாவைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது. தமிழக இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் அலுவலக மாநில செயலாளர் குமரவேல் இந்த மனுவை கொடுத்தார். அதில், நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின் ஒரு மோசடி நபர் ஆவார். சேலத்தில் காந்த படுக்கை விவகாரத்தில் பொதுமக்களை ஏமாற்றியவர். ஆசிரமத்தின் தனி அறையில் நடைபெற்ற சம்பவத்தை ரகசியமாக படம் பிடிக்கும் விலை உயர்ந்த அதிநவீன கேமரா லெனினுக்கு எப்படி கிடைத்தது. இதற்காக பின்னணியில் அவருக்கு துணைபுரிந்தவர்கள் யார்?, டிசம்பர் மாதத்தில் பதிவு செய்த வீடியோ படங்களை ஏன் அப்போதே காவல்துறையிடம் கொடுத்து புகார் செய்யவில்லை. மேலும், முதலில் காவல்துறையினரை அணுகாமல் வீடியோ படங்களை செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியது ஏன்?, சேலத்தில் நித்யானந்தா சாமியாரால் மிரட்டப்பட்டதாக சொல்லும் இவர் உடனடியாக ஏன் புகார் செய்யவில்லை. இப்படி அடுக்கடுக்கான சம்பவங்கள் லெனின் மீது எழுந்துள்ளது. அவர் கொடுத்த புகார் மனுவிலும் இந்த சந்தேகங்கள் உள்ளன. மிரட்டி பணம் பறித்தல், மற்றும் இந்து சமயத்தை அவமானப்படுத்துதல் ஆகியவற்றை உள்நோக்கமாக கொண்டு லெனின் செயல்பட்டுள்ளதாக அறிகிறோம். எனவே, இவர்மீதும் விசாரணை நடத்தி, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

லெனின் எங்கே…? இதற்கிடையே கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து, அவரிடம் நித்தியானந்தா தொடர்பான புதிய வீடியோவைக் கொடுத்துத புகார் செய்த லெனின் கருப்பன் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கமிஷனர் ராஜேந்திரனிடம் கூறுகையில், லெனின் புகார் கொடுத்ததோடு சரி, அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியாது. போலீஸ் கட்டுப்பாட்டில் அவர் இல்லை. காந்தப் படுக்கை மோசடி குறித்து எனக்குத் தெரியவில்லை. இப்போதுதான் நீங்கள் கேட்கிறீர்கள். அதுபோன்ற வழக்கு உள்ளதா என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் விசாரிக்கிறேன் என்றார் ராஜேந்திரன். இதுவும் விசித்திரமாக உள்ளது. ஏனெனில் முன்பு வந்த செய்திகள் என்னவென்றால், லெனின் உயிருக்கு ஆபத்து, அதனால் ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியே பாதுகாப்பு தருகிறார் என அறிவிக்கப்பட்டது.

ரஞ்சிதாவைத் திருமணம் செய்ய சம்மதித்த நித்யானந்தா!- புதிய தகவல்கள்[2]: “நித்யானந்தா தனது பிரம்மச்சரியத்தைத் துறந்து, ரஞ்சிதாவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டார். ஆனால் அப்படி திருமணம் செய்தால் பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் காப்பாற்ற முடியாது என்பதால் கடைசி நேரத்தில் மறுத்தார். அதன் விளைவுதான் ரஞ்சிதாவும் லெனின் கருப்பனும் திட்டமிட்டு சாமியாரைக் கவிழ்த்தனர்”, என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஞ்சிதா ஆரம்பத்தில் நடிகை ராகசுதா மற்றும் ஒரு சினிமா தயாரிப்பாளர் மூலம்தான் சாமியாருக்கு அறிமுகமானாராம். அந்த சமயங்களில் எப்போதாவது ஒருமுறை பெங்களூர் போய் வருவாராம். ஆனால் நித்யானந்தாவுக்கு தன்மேல் ஒரு ஈர்ப்பு இருப்பது புரிந்ததும் அங்கே தங்க ஆரம்பித்தாராம். அவரது அந்தரங்க அறைக்குச் சென்று பணிவிடை செய்யும் அளவுக்கு இது வளர்ந்தது. பின்னர் சாமியாரின் பிரம்மச்சரியத்தை பனிக்கட்டியாய் உருக வைத்துவிட்டதாம் ரஞ்சிதாவின் கவர்ச்சி. சாமியாரை விட ரஞ்சிதா மூன்று வயது மூத்தவராம். ரஞ்சிதாவின் அழகில் கட்டுண்ட சாமியார், அவர் சொன்னதையெல்லாம் கேட்க ஆரம்பித்தாராம். லெனின் கருப்பனுக்கு இந்த விவகாரம் முழுமையாகத் தெரியும் என்கிறார்கள் பெங்களூர் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் ஆரம்பத்திலிருந்தே ரஞ்சிதாவை ‘அண்ணி’ என்ற முறை சொல்லி அழைக்க ஆரம்பித்தாராம் லெனின். இதனை நித்யானந்தரின் செய்லாளர் உள்ளிட்ட ஆசிரம நிர்வாகிகள் வெளிப்படையாகவே இப்போது சொல்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, தனது சீடர்கள் மற்றும் மத அமைப்புகளை நினைத்து பயந்தாராம் நித்யானந்தம். அப்போதுதான், பிரம்மச்சர்யத்தைத் துறந்து இல்லற வாழ்க்கையை அனுபவிப்பதாக வெளிப்படையாக அறிவித்த குக்கே சுப்பிரமணிய மடத்தின் சாமியாரை உதாரணமாகச் சொல்லி நித்யானந்தா மனதை சமாதானப்படுத்தியுள்ளார் ரஞ்சிதா.

லெனின், ரஞ்சிதா கூட்டு: இருவரும் திருமணத்துக்கு தயாரான போது, அதற்கு மடத்தின் முக்கிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெர்வித்ததோடு, ஆசிரம சொத்துக்களை முடக்கிவிடுவோம் என்றும் எச்சரிக்க, மிரண்டு போன நித்யானந்தா, திருமணத்துக்கு முரண்டு பிடித்துள்ளார். அதே நேரம் வேறு சில பெண்களையும் ஆசிரமத்துக்கு வரவழைத்து உல்லாசம் அனுபிவித்துள்ளார். இதை ரஞ்சிதா பார்த்து அதிர்ச்சியடைந்து லெனின் கருப்பனிடம் கூறினாராம். அப்போது உருவானதுதான் இந்த வீடியோ திட்டம் என்கிறார்கள் ஆசிரமத்தைச் சேர்ந்த சிலர். இந்த செக்ஸ் வீடியோ எடுக்கப்பட்டதில் ரஞ்சிதாவின் பங்கை லெனினும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பெங்களூர் நித்யானந்தா மடத்தில் உள்ள நித்யானந்தாவின் அந்தரங்க செயலாளர் சேவானந்தா இப்படிக் கூறியுள்ளார்: நாங்கள் ஆரம்பத்திலேயே ரஞ்சிதாவையும் லெனினையும் சந்தேகப்பட்டோம். இருவரும்தான் மிக நெருக்கமாக இருப்பார்கள். இருவரும் சேர்ந்து போட்ட சதித்திட்டம்தான் இது என்பது இப்போது தெரிகிறது. இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள்!” என்றார்.

நித்யானந்தருக்கு நான் செய்தது சேவை!- ரஞ்சிதா திடீர் பேட்டி[3]: நித்யானந்தாவுக்கு நான் சேவைதான் செய்தேன். காலைப் பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் தவறா.. அதில் ஏதேதோ சேர்த்து நீலப்படமாக்கிவிட்டார்கள்!, என்று ஆவேசப்பட்டுள்ளார் நடிகை ரஞ்சிதா. நித்யானந்த சாமியாருடன் ரஞ்சிதா படுக்கையில் உருண்டு புரண்ட காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியாகி, போலிச் சாமியாரின் முகத்திரையை விலக்கிக் காட்டியது. இந்த வீடியோ வெளியான கையோடு சாமியாரும் ரஞ்சிதாவும் தலைமறைவாகிவிட்டனர். கும்பமேளாவில் சாமியார் இருப்பதாக அவரது ஆசிரமத்தினர் கூறியுள்ளனர். வீடியோவில் சாமியாருடன் இருப்பவர் ரஞ்சிதாதான் என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. இப்போது அவர் கேரளாவில் ரகசிய இடமொன்றில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் செல்போன் மூலம் குமுதம் ரிப்போர்டர் இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

ரஞ்சிதா பேட்டி: அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

  • அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?

ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள், ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்… அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்… அந்த ஆபாச காட்சிகள்… காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

  • சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?

நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா?

  • உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?  பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி?

எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே? அதான் இப்போது சொல்லிட்டேனே… நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்…” -இவ்வாறு கூறியுள்ளார் ரஞ்சிதா.

இலக்கணப் பிழையாகும் நித்யானந்தன்ரஞ்சிதாவின் லீலை[4]! சைக்கிள் கேப்பில் லாரியே ஓட்டும் சினிமாக்காரர்களுக்கு, தேசிய நெடுஞ்சாலை கிடைத்தால் விடுவார்களா…நித்யானந்தா- ரஞ்சிதா விவகாரத்தை சுறுசுறுப்பாக சுட்டு சூடான சினிமாவாகத் தர முடிவு செய்துவிட்டது ஒரு குழு. அதுதான் ‘இலக்கணப் பிழை’ என்ற பெயரில் படமாகிறது!. சாமானியன் முதல் சாமியார்கள் வரை சபலப்பட்டு தங்களின் எல்லைகளை மீறும்போது ஏற்படும் பிழையால் அவர்களின் வாழ்க்கை எப்படி புரட்டிப் போடப்படுகிறது என்பதுதான் இலக்கணப்பிழை படத்தின் கதை. யுவா எண்டர்டெய்ண்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் திரைக்கு வரத் தயாராகயிருக்கும் இலக்கணப் பிழை படத்தில் ஆட்டோகாரனான கதாநாயகன் தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் படுக்கையறைக் காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் ஊடகங்களில் வெளியான சாமியார் நித்யானந்தாவின் படுக்கையறைக் காட்சிகள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி தொடந்து பேசப்பட்டு வருவதால், ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள படுக்கறைக் காட்சியை நீக்கிவிட்டு, கொஞ்சமும் மாற்றமில்லாமல், சாமியாரின் படுக்கையறைக் காட்சிகள் போல அதே கோணத்தில் படமாக்கவுள்ளாராம் இயக்குநர் ஜோ. இதில் கதாநாயகன் காலை கள்ளக் காதலி அமுக்கி விடுவது, உணவு அளிப்பது, மாத்திரை வழங்குவது, தண்ணீர் கொடுப்பது உள்பட, தமிழர்களுக்கு ‘நன்கு பரிச்சயமான’ அத்தனை காட்சிககளும் இந்தப் படத்தில் உண்டாம். இந்தப் படத்தில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகி புதுமுகம். இலக்கணப் பிழை படத்தின் சில காட்சிகளை எடிட்டிங்கில் பார்த்த தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர், பெரிய தொகை கொடுத்து தெலுங்கு உரிமையை வாங்கிக் கொண்டார் என்றார் இயக்குநர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளிவருகிறதாம் இலக்கணப் பிழை!

மெல்வின் பாய்ட் டயமன்ட் (Melvin Boyd Diamond ) என்பவரின் இறப்பு: தினமலர் போன்ற பத்திரிக்கைகள் எல்ல்லம் கூட அரைத்த மாவையே அரைப்பது ஆச்சரியமாக உள்ளது[5]. மெல்வின் பாய்ட் டயமன்ட் (Melvin Boyd Diamond) என்ற கனடாவைச் சேர்ந்தவர் யோகா ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் திடீரென்று ஒரு விபத்தில் இறந்தார். பிறகு பிரேத பரிசோதனை அறிக்கை அவ்வாறே நிரூபித்தது[6]. அதாவது, அந்த பெண்மணியின் கும்பத்தினருக்கு இதய நோய் இருந்தது. ஒருநாள் அவர், இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்து விட்டார்[7]. லெனின் இதை ஒரு சிஷ்யை தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லிவிட்டான். இன்னொரு பேட்டியில் ஒரு பெண் மர்மமாக கொலைசெய்யப் பட்டாள் என்றும் கூறியுள்ளான். இதிலிருந்து, இப்பிரச்சினையைப் பற்றி உண்மைகளை அறியவேண்டும் என்பதைவிட, அதில் எந்த அளவிற்கு, பரபரப்பு-பிரச்சாரம், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி கவனத்தை சிதறடித்தல், சிற்றின்ப-செக்ஸ் ரீதியில் செய்திகளைப் பரப்பி டிவி-செனல்கள் எல்லாம் புளூ ஃபிலிம் ஒளிபரப்புதல், ……….என்ற கீழ்த்தரமான நிலைக்கு வந்துவிட்டன.


[1] தடீஸ்தமிழ், நித்யானந்தா மீது எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கொடுக்கவில்லைகமிஷன, http://thatstamil.oneindia.in/news/2010/03/09/no-rape-complaints-from-any-woman.html

 

[2] தடீஸ்தமிள், ரஞ்சிதாவைத் திருமணம் செய்ய சம்மதித்த நித்யானந்தா!- புதிய தகவல்கள், திங்கள்கிழமை, மார்ச் 8, 2010, 14:17[IST],

http://thatstamil.oneindia.in/movies/gossip/2010/03/it-was-the-joint-conspiracy-lenin.html

[3] நித்யானந்தருக்கு நான் செய்தது சேவை!- ரஞ்சிதா திடீர் பேட்டி, http://thatstamil.oneindia.in/movies/interview/2010/03/ranjitha-s-interview-magazine.html

[4] ‘இலக்கணப் பிழை’ யாகும் நித்யானந்தன்-ரஞ்சிதாவின் லீலை!,

http://thatstamil.oneindia.in/movies/shooting-spot/2010/03/nithyanandan-ranjitha-sexcapades-be.html

[5] தினமலர், பினாமி’கள் பிடியில் பல கோடி ரூபாய் சொத்துகள் நித்யானந்த மடம் , ‘வெறிச்’ , மார்ச் 09,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6838

[6] http://www.hindu.com/2010/03/09/stories/2010030955501300.htm

[7] http://m.timesofindia.com/PDATOI/articleshow/5659498.cms

நித்யானந்தா, சன்-டிவி, கார்ட்டூன், குழந்தைகள்!

மார்ச் 8, 2010

நித்யானந்தா, சன்-டிவி, கார்ட்டூன், குழந்தைகள்!

இன்றைய “டி ஹிந்து”வில் ஒரு கார்ட்டூன் வந்துள்ளது.

மிகவும் அருமையாக எல்லாவற்றையும் அடக்கி அந்த கார்ட்டூன் பல விஷயங்களை நமக்க்கு எடுத்துக் காட்டுகிறது!

The-Hindu-cartoon-obscene-TV

The-Hindu-cartoon-obscene-TV

“தி ஹிந்து”, அந்த கார்ட்டூனிஸ்ட் மற்றும் ஆசிரியருக்கு நன்றி.!

நித்யானந்தா பேய் – மோகம் பிடித்துள்ள ஊடகங்கள்!

மார்ச் 7, 2010
நித்யானந்தா பேய் – மோகம் பிடித்துள்ள ஊடகங்கள்!
குமுதம் ரிப்போர்ட்டர், 11.3.2010

பிற இதழ்களிலிருந்து சுவாமி நித்யானந்தாவின் காதல் லீலை – ஆ.விஜயானந்த்

http://viduthalai.periyar.org.in/20100307/news06.html

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம். 33 நாடுகளில் கிளைகள். 32 வயதில் இரண்-டாயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதி. உலகம் முழுவதும் 1,500 கிளைகள். விவேக் ஓபராய் முதல் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா வரை விசிறிகள் என காவி சாம்ராஜ்யத்தை நிலை நாட்டிய சுவாமி நித்யானந்த பரமஹம்சர், தன்னுடைய காவி உடைக்குள் ஒளித்து வைத்திருந்த காமம், நடிகை ரஞ்சிதா ரூபத்தில் அம்பலப்பட்டுப் போகும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். கதவைத் திற காற்று வரட்டும் என்றவர் கதவைச் சாத்து காதல் வரட்டும் என்று அம்பல-மாகட்டும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது சர்வதேச மீடியாக்களின் பக்கங்களில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் நித்தியானந்தர், தான் நடத்திய ஆபாச வேட்டை சி.டி. அம்பலமாகாமல் இருக்க நடத்திய கடைசி கட்ட சேஸிங் ஒரு விறுவிறுப்பான ஆங்கிலப் படம் போன்றது.

பெயர் வைத்த ரஜினியின் குரு! மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹீலிங் தெரபியில் எக்ஸ்பர்ட்டான நித்யானந்தரை முதன் முதலில் அடையாளம் கண்டுகொண்டது திருவண்ணாமலை விசிறி சாமியார்தான். எட்டு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் பற்று கொண்டிருந்த ராஜசேகருக்கு, இமயமலையில் வைத்து பரமஹம்ச நித்யானந்தர் எனப் பெயர் சூட்டியது நடிகர் ரஜினியின் ஆன்மிக குருவான பாபாஜி. மெக்கானிக்கல் டிப்ளமோ பட்டம் மட்டுமே வாங்கியிருந்த நித்யானந்தருக்கு சரளமாகப் பேசத் தெரிந்த ஆங்கிலமும், தீவிர புத்தக வாசிப்பும் தனித்த புகழைத் தேடித் தந்தது. இதுவரை யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளாத நித்யானந்தர், தனக்கென ஒரு பெருங் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தை நடத்தி வந்த சண்முகசுந்தரம் நித்யானந்தரிடம் பக்தியைக் காட்ட மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள பிடாடியில் 200 ஏக்கர் ஆசிரமம் எழுந்தது.

ஆனந்த நடன அசிங்கம்! இந்த ஆசிரமம் உருவாவதற்கும் ஒரு பின்னணியைச் சொல்கிறார்கள். பெங்களூரு ஆசிரமத்தில் அய்நூறு ஆண்டுகள் பழைமையான ஆலமரம் ஒன்று இருக்கிறது. அந்த ஆலமரத்தின்கீழ் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சித்தர் சமாதியானாராம். அந்த சித்தர்தான் இந்த ஜென்மத்தில் அவதரித்துள்ள நான் என்றாராம் நித்யானந்தா. சாமியார் கைகாட்டிய அந்த இடத்திலேயே மிகப் பெரிய காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டு, நித்யானந்த தியான பீட ஆசிரமம் உருவானது. எட்டு ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிர-மத்தின் அசிங்கப் பக்கங்கள் அம்பலமானது 2005 ஆம் ஆண்டில் சிறு வயதுப் பெண்களை நித்யானந்தா அருகில் அவரது சீடர்கள் அனுமதிக்கிறார்கள். ஹீலிங் தெரபியைக் கொடுக்கும் போது இளம்பெண்களின் உடல்களை வருடுகிறார். இவர் நடத்தும் ஆனந்த நடனத்தில் நடக்கும் காட்சிகள் அருவருப்பானவை. ஸ்டார் ஓட்டல்களை விஞ்சும் வகையில் ஆனந்த நடனம் இருக்கிறது என்றெல்-லாம் புகார் சொல்லப்பட்டது.

பெங்களூரு டூ சேலம் … இன்றைக்கு சுவாமிகளின் படங்களுக்குச் செருப்படி கொடுக்கிறார்கள். போராட்டம் ஆர்ப்-பாட்டம் எனத் தீவிரம் காட்டுகிறார்கள். முதலியார் இனத்தில் பிறந்தவரை வேற்று சாதி சன்னியாசிகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அதன் விளைவுதான் இந்தப் பிரச்சினையெல்லாம் என புதுக் காரணத்தை அடுக்கிய ஆசிரம நிருவாகி ஒருவரிடம் அப்படியானால் வெளியான படங்கள் அவருடையது அல்ல என்கிறீர்களா? என்றோம்.

இது பற்றி உண்மைகளைப் பேச ஆரம்பித்தால் எனக்கு நேரும் விளைவுகளை நினைக்கவே பயமாக இருக்கிறது. இந்த ஆபாச சி.டி. விவகாரத்தின் பின்னணி எட்டுப் பேருக்குத் தெரியும். ஆசிரமத்தில் சுவாமிக்கு அடுத்தடியாக இருக்கும் இவர்கள் மூலம்தான் பெரும் தொகையைக் குறி வைத்துப் பேரம் நடந்தது. இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருந்த இந்த சேஸிங் காட்சிகள் பெங்களூரு ஆசிரமத்தில் தொடங்கி, சேலம் அழகாபுரத்தில் முடிந்தது என்று சொன்னால்தான் பொருத்தமானதாக இருக்கும். இந்தப் பேரத்தில் பங்கெடுத்த ஒருவரிடம் அனுப்புகிறேன். அவரிடம் பேசுங்கள். இன்னும் விளக்கமாகத் தகவல் கிடைக்கும் என நம்மை அங்கிருந்து சென்னை நகரின் பிரதான பகுதியில் உள்ள அந்த நபரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

நாம் சந்தித்த ஆசிரமத்தின் அந்த முக்கிய நபர் கூறும் காட்சிகள் இனி அப்படியே.

ரஞ்சிதா என்ட்ரி … இதுவரை மீடியாக்களில் ஒளிபரப்பான காட்சிகள் இருபது நிமிடம் அய்ந்து செகண்ட். ஆனால், உண்-மையில் ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் கொண்ட முழுநீளஆபாசப்படம் அது. நடிகை ரஞ்சிதாவோடு சுவாமி இருக்கும் அறை பெங்களூருவில் உள்ள அவரது படுக்கை அறைதான். அந்தப் படுக்கையறைக்குள் அவ்வளவு சுலபத்தில யாரும் நுழைய முடியாது. ராணுவத்தில் மேஜராக இருந்த ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் ரஞ்சிதா. நாடோடித் தென்றல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி வரிசையில் வந்த நேரத்தில் திருமணமும் செய்து கொண்டார். காஷ்மீரில் சில காலம் சேர்ந்து வாழ்ந்த ரஞ்சிதாவுக்கு அந்த வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து வாங்கினார். மிகுந்த மனப் போராட்டத்தில் இருந்த அவரிடம் நடிகை ராகசுதா, சுவாமி நித்யானந்தாவிடம் ஹீலிங் தெரபி வாங்கினால், மனசாந்தி கிடைக்கும் என பெங்களூரு நெடுஞ்சாலைக்கு ரூட் போட்டுக் கொடுத்தார். இதன் பிறகு ஆசிரமத்திலேயே தங்கி சேவை செய்ய ஆரம்பித்தார் ரஞ்சிதா என தொடக்கத்தை விவரித்தவர்,

அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் . . .மரணத்தை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்கவேண்டும். அடிமனதில் மன அமைதியை உருவாக்குவதன்மூலம் இறைவனை அடைய-லாம் என்ற சுவாமியின் அடிப்படை தியரி ரஞ்சிதாவுக்கும் பிடித்துப் போய்விட்டது. பெங்களூரு ஆசிரமம் ஒரு வினோதமானது. அங்கு ஆண், பெண் பாகுபாடெல்லாம் கிடையாது. ஓரிரு மணி நேர உறக்கம். மற்ற நேரமெல்லாம் தியானம்தான்.

எப்போதும் இளம் பெண் துறவிகளும், ஆண் துறவிகளும் நடந்து கொண்டேயிருப்பார்கள். இந்த வாழ்க்கையோடு ரொம்பவே பழக்கப்பட்டு விட்டார் ரஞ்சிதா. நித்யானந்தரின் படுக்கையறையைச் சுத்தம் செய்ய பல பெண்கள் வந்து போவார்கள். அவர்களைப் போல்தான் இவரும் ஒரு கட்டத்தில் சுவாமியோடு மிகவும் நெருக்கமாகிவிட்டார். இதை ஒரு சில துறவிகள் பார்த்துவிட்டாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள வாழ்க்கை முறைகள் அப்படி. அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் தவறில்லை என்பது ஓஷோவின் தத்துவம்தான் என்றாலும், அதை வெளிப்படையாக யாரும் சொன்னதில்லை.

அமெரிக்க கேமரா அஸ்திரம் . . .இந்த நேரத்தில் சுவாமிகளின் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளைப் பார்த்த ரஞ்சிதாவுக்கு சின்ன ஆசை ஏற்பட்டிருக்கிறது. சரியான நேரம் பார்த்துக் காத்துக் கிடந்தார். அவருக்குப் பின்புலமாக இருந்து தூண்டில் வீசியது ஆசிரமத்தின் ஒரு சில துறவிகள்தான்.  அவர் பயன்படுத்திய கேமிரா உளவுத் துறைக்குப் பயன்படுத்தும் அதிநவீன கேமரா. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது என்பது நாங்கள் பின்பு நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அந்த கேமிராவின் தொழில் நுட்பம் எப்படியென்றால் ஏதாவது பொருள்கள் அசைந்தால் மட்டுமே படம் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. சுவாமியோடு தான் இருக்கும் நாட்களில் உடலுறவுக் காட்சிகளைப் படம் பிடிக்கவேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரது அறையைச் சுத்தம் செய்யப் போனவர் படுக்கையில் இடதுபுறத்தில் உள்ள பூச்சட்டியில் இந்த கேமராவை சரியான கோணத்தில் பொருத்தியிருக்கிறார். வழக்கம் போல் அன்றிரவு இருவரும் இணைந்திருக்கிறார்கள். நீங்கள் பார்த்த ஒரு காட்சியின் போது விளக்கை அணைக்க சுவாமி முயலும்போது ரஞ்சிதா அதைத் தடுக்கும் காட்சிகள் தெளிவாகத் தெரியும். இதிலிருந்தே ரஞ்சிதாவின் சூழ்ச்சியைத் தெரிந்து கொள்-ளலாம்.

துணையோடு தூண்டில்: இதன்பிறகு எதையும் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல் ஆசிரமத்தின் பணிகளில் தீவிரம் காட்டிய ரஞ்சிதா, சுவாமியின் அனுமதியோடுதான் டி.வி.சீரியல்களில் தலைகாட்டி வந்தார். இந்தக் காட்சிகளை வியாபாரமாக்கும் நோக்கத்தில் இருந்தவருக்கு தூபம் போட்ட சாமியார்களும் ஆசிரமத்தில் ஒரு சில பாலியல் விவகாரங்களில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்கள்தான். இவர்களது சீண்டல்களால் இதுவரை அய்ந்து இளம் பெண்கள் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு கனடா நாட்டு இளம் துறவி மாடியில் இருந்து குதித்து தற்-கொலை செய்து கொண்டார். இதெல்லாம் ஆசிரம வளா-கத்திற்குள்ளேயே மூடி மறைக்கப்பட்ட உண்மைகள். இதில் நித்யானந்தா டார்ச்சரால் இரு பெண்கள் தற்-கொலை வரை போனதாகவும் சொல்கிறார்கள் என்றனர்.

ரஞ்சிதாவை இயக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் சுவாமி தர்மானந்தா. சேலத்தைச் சேர்ந்த இந்தத் துறவியின் இயற்பெயர் லெனின். 2004 ஆம் ஆண்டு காந்தப் படுக்கைமோசடியில் சேலம் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. இந்த விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்தான் லெனின். பின்னர் பெயரை மாற்றிக் கொண்டு சுவாமியின் நம்பிக்கைக்குரிய ஒருவராக மாறினார். ஆசிரமத்தின் முதல் பத்து முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். ரஞ்சிதா விவகாரத்தில் இருந்து சாமியைக் காப்பாற்ற, தான் பாடுபடுவதாகக் கடைசி வரை காட்டிக் கொண்ட இந்தத் துறவிதான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்போது மீடியாக்களுக்கு இதை அனுப்பி வைத்ததும் இந்த லெனின்தான்.

ஆபாசத்தின் விலை அய்ம்பது கோடி ரூபாய்: இரண்டு மாதங்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை தொடங்கியது. அப்போது லெனின் தன்னிடம் மிக ரகசியமாக இதை ரஞ்சிதா கொடுத்ததாக சில படங்களை ஆசிரமத்தின் தலைமை நிர்வாகியிடம் கொடுத்தார். அதில் ரஞ்சிதாவும், சுவாமியும் இருக்கும் ஆபாசப் படங்கள் மட்டுமே இருந்தன. இதற்கு மசியாத ஆசிரம நிர்வாகிகளிடம் சி.டி.யும் காட்டப்பட்டது. இது வெளி-யாகாமல் இருக்க ரஞ்சிதா நிர்ணயித்த தொகை அய்ம்பது கோடி ரூபாய். இதில், சரிபாதி லெனின் மற்றும் அவரது அண்ணன் குமார் ஆகியோருக்கு என்று முடிவானது.

நித்தியானந்தரின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் சதானந்தா உள்ளிட்ட வெகுசிலருக்கு மட்டும் இந்த சி.டி.காட்டப்பட்டது. இந்தக் காட்சிகளைப் பார்த்த பெங்களூரு ஆசிரமத்தின் வி.அய்.பி. துறவி ஒருவர், இது பக்கா பிளாக்மெயில். இது சுவாமியே கிடையாது. அவளை உள்ளே அனுமதித்ததற்கு அய்ம்பது கோடி ரூபாய் என்பது டூ மச் என சத்தம் போட்டார். இவரது அவசர செயல்பாடுதான் முதலில் போடப்பட்ட அச்சாரம். இந்த சி.டி.விவகாரம் பல கட்டங்களாக சென்னை மற்றும் பெங்களூருவில் பேரம் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை நடக்கும் போது செல்போனில் மட்டுமே ரஞ்சிதா பேசுவார். தர்மானந்தாதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்.

நேரடிப் பேச்சில் நித்தியானந்தா: பின்னர் விவகாரம் சீரியஸாகப் போன நேரத்தில் மட்டும் நான்கு முறை நேரடிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் நித்யானந்தா. பெங்களூரு ஆசிரமத்தில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தாலும், சக துறவிக்கு இவ்வளவு பணம் செல்வதை நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. லெனினை சந்தேகத்துடன் பார்த்து வந்தனர். பணம் வருவதற்குத் தாமம் ஏற்பட்டதால் ரஞ்சிதாவுக்குச் சாதகமாக நேரடி வியாபாரத்திற்கு உதவி செய்ய முன்வந்தார் சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவ தொழில் அதிபர் ஒருவர். சுவாமியின் பெயர் கண்டிப்பாக நாறிப்போகும். பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணுங்கள் என அவர் சொல்ல, இரண்டு வாரத்திற்கு முன்பு சென்னையில் முக்கிய ஓட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஆசிரம நிர்வாகிகள், தர்மானந்தா, தொழிலதிபர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஃபைனல் ரேட் 15 கோடி ரூபாய்: நீண்ட நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் அய்ம்பது கோடி என்பது அதிகம். கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என கோரிக்கை வைக்கப்பட கடைசியாக யாருக்கும் பாதகமில்லாமல் முடிவாக 15 கோடி கொடுக்கிறோம். அந்த சி.டி.யின் ஒரிஜினல் பிரிண்ட் படங்கள் என அனைத்தும் செட்டில் செய்யப்பட வேண்டும் என ஆசிரம நிர்வாகிகள் உறுதியாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் நித்யானந்தருக்கு அப்போதே செல்போனில் சொல்லப்பட நான் கட்டிக் காத்த பெயர் காற்றில் பறந்துவிடக்கூடாது. 15 கோடி ரூபாயை செட்டில் பண்ணுங்கள். தர்மானந்தாதான் இவ்வளவும் செய்திருக்கிறான். அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் எனப் பேசியிருக்கிறார். இதன் பிறகும், இந்தப் பணம் லெனினுக்குப் போய்ச் சேரக்கூடாது என ஆசிரம நிர்வாகிகள் வஞ்சம் பார்த்ததன் விளைவுதான் இப்படி ஊரெல்லாம் சிரிப்பாய் சிரிக்கக் காரணம் என பேரத்தின் உச்சத்தை அதிர்ச்சியோடு விவரித்தவர், லெனினுக்குச் சொந்த ஊர் சேலம். இதே சேலம்தான் நித்தியானந்-தருக்கு இறுதி சவக்குழி தோண்டக் காரணம். கடந்த 15 ஆம் தேதியில் கோவை சேலத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார் சுவாமி. கோவை வ.உ.சி. மய்தானத்தில் அவரைப் பார்க்கத் திரண்ட கூட்டமே அவரது மகிமையைச் சொல்லும். சேலம் அழகாபுரத்தில் உள்ள ஆசிரமத்துக்குச் சென்றவர், முக்கிய வி.அய்.பி.களின் வீடுகளுக்குச் சென்று பூஜையும் செய்தார். சேலம் நேரு அரங்கில் மாபெரும் சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு ராம-கிருஷ்ணா தெருவில் உள்ள ஆசிரமத்தின் கிளைக்கு இரவு வந்தார். தர்மானந்தாவும் அங்கு இருந்தார். இந்தக் கிளையில் நள்ளிரவு இரண்டு மணி வரை நடந்த வாக்குவாதங்களை சாகும் வரையில் நித்யானந்தாவால் மறக்கமுடியாது.

தர்மானந்தா உள்பட பேரம் பேச அழைக்கப் பட்டவர்கள், தொகை போதாது. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றெல்லாம் பேச, ஒரு கட்டத்தில் கடுப்-பின் உச்சிக்கே போன சுவாமி, ஆசிரமத்தில் தர்மானந்தா செய்த செயல்களைப் பற்றியும் ரஞ்சிதாவோடு சேர்ந்து கொண்டு என்னை பிளாக் மெயில் செய்வது சரியானதா? எனவேதனைப்பட்டார். அருகில் இருந்த ஆசிரம நிர்வாகிகள் சுவாமியின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்தனர். தர்மானந்தாவுக்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவை, தான் அனுபவிப்பதாகப் புலம்பினார் சுவாமி. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரஞ்சிதா தரப்பினர் பணம் வந்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் ஊரெல்லாம் அம்பலமாகும். அதான் ஆசிரமத்தில் பல ஆயிரம் கோடிகள் இருக்கிறதே என அழுத்தமாகப் பேச ஒரு கட்டத்தில் தன் முகத்தில்தானே அறைந்து கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டார் நித்யானந்தா.

நீண்ட நேரம் நீடித்த அவரது அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை. பின்னர் ஒரு வழியாகத் தன்னைத் தேற்றிக் கொண்டவர், இத்தோடு செட்டில் செய்துவிடுங்கள். நான் இனி தர்மானந்தா முகத்தி-லேயே விழிக்கக் கூடாது என முடிவாகச் சொல்லிவிட்டார். அத்தோடு பிரச்சினை முடிந்தது. பணத்தை செட்டில் செய்வதற்குக் கால அவகாசம் கேட்கப்பட்டது. அந்த நேரத்தில் சுவாமியின் கதறலைப் பார்த்திருக்கிறார் வி.அய்.பி. பக்தர் ஒருவர். அவர் ஆசி-ரமத்தின் தலைமை நிர்வாகி ஒருவரிடம், தர்-மானந்தாவின் கதையை நான் பார்த்துக் கொள்-கிறேன். பணம் எதுவும் தரவேண்டாம். போலீஸ் அதிகாரிகள் நமக்குத் துணை நிற்பார்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

டி.ஜி.பி. இருக்கிறார்: இந்தத் தகவலை சுவாமியிடம் கூறிய ஆசிரமத்தின் துறவி தமிழ்நாட்டில் டி.ஜி.பி. லத்திகா சரணிடம் பேசப் போகிறார்கள். அவனை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடலாம். போலீஸ் விட்டாலும் உங்களுக்காக உயிரை விடக் காத்திருக்கும் மூன்றரை லட்சம் பக்தர்கள் அவனை சும்மா விடமாட்டார்கள். என ஆறுதல்படுத்த நிம்மதிப் பெருமூச்சில் ஆழ்ந்தார் நித்யானந்தா. இந்த விவரம் தர்மானந்தாவுக்குத் தெரிந்தால் திருந்திவிடுவான். 15 கோடி ரூபாய் மிச்சம் எனஆசிரம நிர்வாகி ஒருவர் கணக்கு போட்டார். இதைத் தெரிந்து கொண்ட தர்மானந்தா, இரண்டு மாதம் பாடுபட்டும் பைசா தராமல் ஏமாற்றுகிறார்கள். போலீசில் போனால் சிக்கிவிடு-வோம். போலீசிலிருந்து தப்பினால் இவர்கள் உயிரோடு விடமாட்டார்கள் எனப் பயந்து முதல் கட்டமாக செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார்.

இப்போது ரஞ்சிதா: நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் தர்மானந்தாவைப் பிடிக்க முடியவில்லை. சேலத்திலும் தேடினோம். இதன் பிறகு ரஞ்சிதாவோடு சுவாமி இருக்கும் ஒரு சில காட்சிகளை மட்டும் அனைத்து மீடியாக்களுக்கும் சென்று சேரச் செய்தார். இதை வைத்து ஒரு மீடியா, இரண்டு கோடி ரூபாய் கொடுங்கள். செய்தியை வெளியிட மாட்டோம் என மிரட்டிய தகவலும் உண்டு. இதே மீடியா நடிகை ரஞ்சிதாவை நித்யானந்தாவுக்கு எதிராகப் புகார் கொடுக்கத் தூண்டியபோது நான் தவறு செய்துவிட்டேன். என் விவகாரத்தை நான் கையாளாமல் மூன்றாம் நபரிடம் பொறுப்பை ஒப்படைத்ததுதான் பெருங்குற்றம். சுவாமி-ஜிக்கு எதிராக நான் எந்தப் புகாரும் சொல்லமாட்டேன் என உறுதியாக மறுத்துவிட்டார்.

இப்போது நித்யானந்தாவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுவிட்டு பெங்களூரு ஆசிரமத்தில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ரஞ்சிதா. மீடியாக்களின் பார்வை திசை மாறும்போது சீரியல் வேலைகளில் இறங்குவார். சுவாமி இப்போது வாரணாசியில் பூரண கும்பமேளாவில் இருக்கிறார். ஒரு வாரம் கழித்துதான் வருவார். அதற்குள் எல்லாம் மாறிவிடும். இதுதான் நடக்கப் போகிறது என்றவர், எது நடக்கக்கூடாது என சுவாமி நினைத்தாரோ அது நடந்து விட்டது. இதில் குற்றவாளி யார்? காமத்திற்கு சபலப்பட்டவரிடம் பணத்திற்கு சபலப்பட்டவர் விளையாட நினைத்தார். இரண்டு பேரின் பசியும் ஒன்றுமில்லாமல் மீடியாவின் பெரும் பசியைத் தீர்த்துவிட்டதுதான் இந்த இருவரும் செய்த அருஞ்செயல் என சேஸிங்கை படிப்படியாக விவரித்து முடித்தார். நமக்கு வியர்த்துக் கொட்டியது

மீடியாக்களில் நித்யானந்தரின் ஆலிங்கனங்கள் அம்பலமாகும் தகவல்கள் வாரணாசியில் இருக்கும் அவருக்குத் தெரிவிக்கப்பட, எல்லாம் எனது விதிப் பயன். உங்கள் எல்லோரையும் நான் மனதார நம்பினேன். என்னைக் கைவிட்டு விட்டீர்கள். இந்தச் செயலால் நான் காராஹிருகத்திற்குச் (சிறை) செல்ல வேண்டிய நிலை வந்தாலும் ஏற்றுக் கொள்வேன். கடவுளின் விருப்பம் எதுவோ அதுதான் நடக்கும் எனச் சொல்லிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாராம்.

இப்போது அவரைத் தேற்றுவதற்குப் புதிய வார்த்தைகளைத் தேடி அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரம துறவிகள்.

– நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், 11.3.2010

காந்த செக்ஸ் படுக்கை விற்ற ஸ்ரீநித்ய தர்மானந்தா!

மார்ச் 7, 2010

காந்த செக்ஸ் படுக்கை விற்ற ஸ்ரீநித்ய தர்மானந்தா என்கின்ற லெனின் குருப்!

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6812

காந்தப் படுக்கை மோசடியில் தர்மானந்தா: நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின், ஏற்கனவே, காந்தப் படுக்கை மோசடியில் சிக்கியவர். ஆத்தூரை சேர்ந்த லெனின், அழகாபுரத்தில் வசித்து வந்தார். இவர், காந்தப் படுக்கை விற்பனை செய்து வந்தார். ஒரு காந்தப்படுக்கை விலை 12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. காந்தப் படுக்கையில் “உறவு’ கொண்டால், உணர்வுகளை அதீதமாக தூண்டி விடும் என, பொய் பிரசாரம் செய்யப்பட்டது. அதை நம்பி, காந்தப்படுக்கையை வாங்கிய ஏமாந்த தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் போலீசில் அடுக்கடுக்காக புகார் அளித்தனர்.

magnetic_floating_bed

magnetic_floating_bed

காந்தப் படுக்கையில் “உறவு’ கொண்டால்: காந்தப் படுக்கையில் “உறவு’ கொண்டால், உணர்வுகளை அதீதமாக தூண்டி விடும் என, பொய் பிரசாரம் செய்யப்பட்டது. அதாவது செக்ஸ் அதிகமாக வரும் என்றார்களாம். நம்பிவிட்டனராம், 60 வருடங்களாக பெரியார் பால் குடித்து வந்த பகுத்தறிவுவாதிகள். அதாவது அவர்களது பிரச்சாரத்தை விட லெனின் பிரச்சாரம்தான் எடுபட்டது போலும்!

magnetic-bed-example

magnetic-bed-example

வேறு தொழில் செய்யாமல் இந்த தொழிலை ஆரம்பித்தார்: இப்பிரச்னை, தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, லெனின் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சில காலம், வேறு தொழில் எதுவும் செய்யாமல் லெனின், வீட்டில் இருந்து வந்தார். நித்யானந்தாவின் புகழ் பரவிய நிலையில், அவரை சேலத்துக்கு அழைத்து வந்தார். ஆன்மிக வழியில் தன்னை தயார் படுத்தி கொண்ட லெனின், தன் பெயரை தர்மானந்தா என மாற்றி கொண்டு, நித்யானந்தாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக விளங்கி வந்தார். தற்போது, “சிடி’ பிரச்னையில் சிக்கியுள்ளதால், நித்யானந்தா தரப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

magnetic-bed

magnetic-bed

இப்படங்கள் எல்லாம் உதாரணத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளன. அதன் பயன்கள், விளைவுகள் பற்றி எந்தவிதமான கருத்துகளையும் கொள்ளவேண்டாம்.

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா ஓட்டமா, ரஞ்சிதா சிடி, நடிகைகள் லிஸ்ட்!

மார்ச் 5, 2010

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா ஓட்டமா?

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28140

ரஞ்சிதா 1992ல் பாரதி ராஜா இயக்கிய நாடோடி தென்றல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் பெரிய மருது, சத்யராஜுடன் அமைதிப்படை, அர்ஜுனுடன் கர்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.

மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்தார்.

கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியாயின. இதற்கு பதில் அளித்து ரஞ்சிதா கூறும்போது, எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக்கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்றார்.

தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் ரஞ்சிதா வசித்து வந்தார். சில வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதன் மூலம் மாதம் ரூ. 30 ஆயிரம் வரை வாடகை வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா உல்லாசமாக இருப்பது போன்று பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன.

வீடியோ படங்கள் பற்றி கருத்து கேட்க அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. வீடும் பூட்டி கிடக்கிறது. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2ஆம் தேதி இச்செய்தி வெளியானதில் இருந்து நித்தியானந்தாவும் தலைமறைவாகிவிட்டார்.

நித்யானந்தரும் இப்போது தலைமறைவாகியுள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வெளிமாநிலத்துக்கு ஓடிப் போய்விட்டதாக பெங்களூரில் உள்ள ஆஸ்ரம ஊழியர் ஒருவரே கூறியுள்ளார். இந்த செக்ஸ் வீடியோக்கள் வெளியானபோது, நித்யானந்தர் தனது பெங்களூர் ஆசிரமத்தில்தான் இருந்தாராம். ஆனால் நிலைமை மோசமாவதை உணர்ந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
அவரும் ரஞ்சிதாவும் பத்ரிநாத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக வெளிநாடு பயணம் போகும்போது ரஞ்சிதாவையும் அழைத்துச் செல்வாராம் நித்யா. இப்போதும் அதே பாணியில் அழைத்துச் சென்றிருக்கலாம் என்கிறார்கள்.

நித்யானந்தா மீது பணமோசடி புகார்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28139

நித்யானந்தா ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்திருப்பதாக சேலம் காவல்துறை ஆணையரிடம் அசோகன் என்பவர் புகார் மனு கொடுத்துள்ளார்.

புகார் கொடுத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசோகன்,

என்னுடைய ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலப்பிரச்சனை கோர்ட்டில் உள்ளது உள்ளது. அப்போது என்னிடம் நித்யானந்தா சாமியாரிடம் சென்றால் பிரச்சனை குறையும் என்று சிலர் சொன்னார்கள். பிரச்சனை குறையும் என்று நான் நித்யானந்தா ஆசிரமத்தை தொடர்பு கொண்டேன். எந்த பிரச்சனையானாலும் விண்ணத்தில் எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள்.

பின்னர் சேலம் ஆசிரமத்தை தொடர்பு கொள்ளுமாறு எனக்கு முகவரியும், போன் நம்பரும் கொடுத்தார்கள். அங்கு நான் சென்றுபோது நித்யானந்தா சீடர்கள், சாமியார் உங்கள் பிரச்சனையை குறைக்க சிறப்பு பூஜை நடத்துவதாக கூறியிருக்கிறார். அதனால் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமா சாமியார் கையில் கொடுங்கள். உங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்து வெற்றி கிடைக்கும் என்றனர்.

நானும் அதை நம்பி சாமியாரிடம் பணம் கொடுத்தேன். கேஸ் தோல்வி அடைந்தால் என்ன செய்வது என்று கேட்டேன். கேஸ் தோல்வி அடைந்தால் பணம் திரும்பி பெற்றுக்கொள்ளுங்கள் என்று சாமியாரின் சீடர்கள் சொன்னார்கள்.

இப்போது என்னுடைய கேஸ் கோர்ட்டில் தோற்றுவிட்டது. நான் சாமியாரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். அது முடியவில்லை. யாரும் சரியான பதில் சொல்ல மறுக்கிறார்கள் என்றார்.

நித்யானந்தாவிடமிருந்து என் மகனை மீட்டுத் தாருங்கள்: தமிழாசிரியர் கண்ணீர்

நித்யானந்தாவிடம் கல்வி கற்க சென்ற தனது மகன் திரும்பி வரவில்லை என்றும், மகனோடு தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என்றும் திருச்சி அருகே உள்ள நவலூர் புட்டப்பட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இடும்பன் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் நமது செய்தியாளரிடம் பேசிய இடும்பன், திருச்சில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் இருக்கும் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். ஓய்வு பெற்ற தமிழாசிரியரான எனக்கு 4 பெண்கள், ஒரு மகன். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இதே ஊரைச் சேர்ந்த சித்த மருத்துவர் கோவிந்தராஜன் என்பவர் மூலம் நித்யானந்தா சாமியாரிடம் அறிமுகமானேன்.

சிகிச்சை பலன் அளித்தால், நானும் எனது குடும்பத்தார் அனைவரும், நித்யானந்தா முகாம்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தோம். 10ஆம் வகுப்பில் 440 மார்க் எடுத்து, கேட்டரிங் முடித்து விடுமுறையில் இருந்த எனது மகன் சுரேந்தரை, பெங்களூரில் உள்ள நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான லைப் ப்ரீவ் டெக்னாலஜி என்ற இலவச படிப்புக்கு அனுப்பினேன்.

பெங்களுரில் படிக்கும் பையனையும், சாமியாரையும் மாதம் ஒருமுறை நான் சந்தித்து வந்தேன். அப்போது நவலூர் புட்டப்பட்டு கிராமத்தில் ஆசிரமம் ஆரம்பிப்பித்தால், உங்களைப் போல் நிறைய பேர் பயன்பெறுவார்கள் என்று யோசனைகளை சாமியார் கூறினார்.

சாமியார் பேச்சைக் கேட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள இடத்தை ரூ.4 லட்சத்துக்கு எனது மருமகனிடம் இருந்து வாங்கினேன். இதற்கு சாமியாரின் பக்தர் அமெரிக்காவைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் பணம் கொடுத்தார். அந்த ஆசிரமத்துக்கு என்னை செயலாளராக நியமித்தார் நித்யானந்தா. நித்யானந்தா மீது நம்பிக்கை வைத்து எனது சொந்த பணத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து பாதி ஆசிரமம் கட்டி விட்டேன்.

ஆசிரமம் ஆரம்பித்த சிறிது நாட்களில், அப்பகுதியில் முகாம்கள் அமைக்க பணம் வசூல் செய்யுமாறும், ஆசிரமத்தில் செயலாளராக உள்ளவர்கள் கண்டிப்பாக பணம் வசூலீக்க வேண்டும் என்றும் சாமியார் கட்டளையிட்டார். மேலும் தன்னை சந்திக்க பக்தர்கள் விருப்பப்பட்டால், அவர்களிடமும் பணம் வசூலிக்க சொன்னார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28127

அப்போதுதான் எனக்கு இவர்கள் ஆசிரமம் நடத்தவில்லை. பிசினஸ் செய்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்தது. இந்த விஷயத்தை என் மகனிடம் சொல்ல முயற்ச்சித்தேன். அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

திருச்சியில் கடந்த 2009ஆம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி சாமியார் முகாமிட்டு, ஆசிரமம் செயலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினார் சாமியார். அந்த கூட்டத்தில், பணம் வசூல் செய்யுமாறு நன்கொடை ரசீது கொடுத்தார். நான் அதை வாங்க மறுத்தேன். அப்போது அத்தனை பேரின் மத்தியில் என்னை வெளியே போ என்று சாமியார் கத்தினார்.

கூட்டத்தை விட்டு வெளியே வந்த நான் எனது மகன் சுரேந்தரை தொடர்பு கொண்டேன். ஆனால் பேச முடியவில்லை. தொடர்ந்து போன் செய்த பின் ஒருநாள் சுரேந்தர் பேசினான். அப்போது சாமியாருடைய நோக்கம் பணம் சம்பாதிப்பதுதான். நீ அங்கே இருக்காதே, வந்துவிடு என்று சொன்னேன்.

ஆனால் சுரேந்தர், நான் சாமியாரிடம்தான் இருப்பேன் என்றும், என்னை பார்க்க வராதீர்கள் என்றான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் பெங்களூருக்கு நேரில் சென்று எனது மகனை பார்க்க முயற்சித்தேன். ஆனால் அங்கிருப்பவர்கள் சுரேந்தரை பார்க்க அனுமதிக்கவில்லை என்றார்.

தற்போது சுரேந்தர் தன்னுடைய பெயரை மாற்றி, நித்ய பிரபானந்தா என்று வைத்துக்கொண்டதாகவும், நித்யானந்தா போல நீண்ட முடிகளை வளர்த்துக்கொண்டதாகவும் கூறுகிறார் இடும்பன். எப்படியாவது எனது மகனை சாமியார் நித்யானந்தாவிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்று கண்ணீர் விடுகிறார் இடும்பன்.


நித்தியானந்தாவுடன் தொடர்பு வைத்துள்ள நடிகைகள் பட்டியல்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28096

நித்தியானந்தாவுடன் ரஞ்சிதாவை தவிர மேலும் பல பிரபல நடிகைகள் தொடர்பு வைத்துள்ளார்கள் என்று செய்திகள் வருகின்றன.  டிவி நடிகைகள் பலரும் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன.

நித்தியானந்தாவிற்கு நடிகைகளை அறிமுகப்படுத்தி வைத்தவரும் ஒரு நடிகைதான் என்கிறார்கள்.

ராமராஜனுடன் தங்கத்தின் தங்கம் படத்தில் நடித்த ராகசுதா, தொடர்ந்து தமிழச்சி, தம்பி,அம்முவாகிய நான் படங்களில் நடித்துள்ளார்.  இவர் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சென்னையில் நித்தியானந்தா நடத்திய யோகா வகுப்புக்கு சென்று வந்தார்.  நித்தியானந்தாவை பார்த்ததுமே அவர் காலில் விழுந்து வணங்கினார்.  அவருடைய மைசூர் ஆசிரமத்தில் சேர்ந்து சன்னியாசியாகவும் ஆனார்.

ரஞ்சிதா நடித்து தயாரித்த யோகா சிடி
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28100

நித்யானந்தா சாமியாருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளிவந்துள்ளது.  ரஞ்சிதாவிற்கு நீண்ட காலமாகவே நித்யானந்தாவுடன் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.

ரஞ்சிதா யோகா சிடி ஒன்றை தயாரித்து வந்துள்ளார்.  பல நிலைகளில் யோகா செய்து காட்டி அதற்கு விளக்கம் அளித்து அந்த சிடியை தயாரித்துள்ளார்.

அந்த சிடிக்கான எடிட்டிங் பணிக்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோவுக்கு சென்று வந்துள்ளார்.  அதற்குள் அவர் நித்யானந்தாவுடன் இருக்கும் வீடியோ வெளியாகிவிட்டது.

சில காலமாகவே எல்லோரிடமும்,  உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.   ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்லிவந்துள்ளார்.

இதனால் ரஞ்சிதாவிற்கு நீண்ட காலமாக நித்யானந்தாவுடன் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது.

ரஞ்சிதா சிடி கொடு:நச்சரிப்பும், எச்சரிக்கையும்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28099

சாமியார் நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் உல்லாச லீலைகளில் ஈடுபட்டிருக்கும் வீடியோ உலகெங்கும் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.

இந்த லீலை சிடி வடிவில் சென்னை பர்மா பஜாரிலும், ரிச்சி தெருவிலும் கிடைப்பதாக நேற்று தகவல் வந்தது.  இதையடுத்து இந்த இடங்களில் மக்கள் குவிந்தனர்.

ரஞ்சிதா சிடி கொடுங்க என்று கடைக்காரர்களை நச்சரித்தார்கள்.   கொடுக்க முடியுமா முடியாதா என்று சிலர் எச்சரித்தார்கள்.  அப்படி சிடி எதுவும் இல்லை என்று சமாளித்தார்கள்.

இந்த நிலை இன்றும் தொடர்கின்றது.  சிடி வேண்டும் என்று கேட்டு மொய்க்கிறார்கள் பர்மா பஜாரிலும், ரிச்சி தெருவிலும்

Dinakaran-photo

Dinakaran-photo

விமர்சனம்:

  • முன்பு, வீரப்பன் விஷயத்தில் எப்படி, அவன் இருக்கும் இடம் கோபாலனுக்கு மட்டும் தெரியுமோ, அது போல, இப்பொழுதும், இவ்விவகாரங்கள் எல்லாம், நக்கீரனுக்கு மட்டுமே தெரிந்துள்ளது.
  • அடுத்தது, தினகரனுக்கு எல்லா சிடிகளும், படங்களும் கிடைக்கின்றன.
  • ஒருவேளை இப்பத்திரிக்கைகளின் வியாபாரத்தைப் பெருக்கவும், அத்தகைய சிடிக்களின் வியபாரத்தை பெருக்கவும், அவர்கள் இம்மாதிரியான யுக்தியைக் கையாளுகின்றனரா?
  • இதெல்லாம் ஒன்றும் மக்களுக்குத் தேவையான / அத்தியாவசியமான பொருட்கள் இல்லை. ஆகவே, சூடாக இருக்கும்போது, நல்ல வியாபாரம் நடக்கும், பிறகு, மக்கள் மறந்து விடுவர்.
  • சொல்லி வைத்தால்போல், மேலே-மேலே செய்திகளை அடுக்குகிறார்கள். இதே மற்ற விஷயங்களில் இத்தகைய விழிப்புணர்வு, வேகம், துப்பறியும் திறமை இதெல்லாம் வருவதில்லை

கருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி!

மார்ச் 4, 2010

கயமைத்தன சாமியார்களை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது-கருணாநிதி

வியாழக்கிழமை, மார்ச் 4, 2010, 13:40[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/03/04/karunanidhi-condems-fake-swamijis.html

“கயமைத்தன சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது”, என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பகலில் சாமி-இரவில் காமி: “பகலில் சாமி-இரவில் காமியாகவும் வாழ்க்கை நடத்தி, பாமர மக்களின் வாழ்வையும் அறிவையும் பாழாக்கி வருகின்ற- பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை; பாமர மக்களுக்கு அடையாளம் காட்ட- பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி, பலத்த எதிர்ப்புக்கிடையிலேயும் பிரச்சாரம் செய்து வந்தும்கூட, படக் காட்சிகள், நாடகங்கள் இவற்றின் வாயிலாக எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை சித்திரித்தும் கூட, உதாரணமாக படமாக வெளிவந்த சந்திரகாந்தா, சொர்க்கவாசல், மனோகரா, வேலைக்காரி, பராசக்தி, தூக்குமேடை போன்றவற்றில் அந்தக் காவியுடைதாரிகளின் கபட நாடகத்தை எடுத்துக் காட்டியும் கூட, இன்னமும் புரிந்து கொள்ள முடியாத- புரிந்து கொண்டாலும் திருந்திக் கொள்ள இயலாத- மௌடீகத்தில் மூழ்கியோர்- நாட்டில், சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சமூக நலனும், கண்ணியமும் காக்கப்பட வேண்டுமென்று, அவற்றில் அக்கறை காட்டுகிற ஒரு மக்கள் நல அரசு அண்மையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிற; காட்சியாக்கி காட்டப்படுகிற; கயமைத்தன சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

தொலைகாட்சிகள் அளவுக்கு மீறும்போது – யார் கவலைப்பட்டார்கள்?: “அதே நேரத்தில் குற்றங்கள் நடைபெறுவதைவிட அந்தக் குற்றங்கள் எப்படி நடைபெற்றன- எங்கே யாரால் நடத்தப்பட்டன- எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதைச் சான்றாகக் காட்ட- வெளியிடப்டுகின்ற படங்களாயினும், செய்திகளாயினும் அவை அளவுக்கு மீறும்போது அவற்றை தொலைக்காட்சியிலோ பத்திரிகைகளிலோ படங்களாகப் பார்த்திடும் இளையோர் நெஞ்சங்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும்,  அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தம் என்பதையும் எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்டோர் அனைவரும் எண்ணிப் பார்த்து நடத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்வது ஓர் அரசின் கடமையாகும்.

அந்தக் கடமையை செய்கின்ற அரசு- அந்தக் கடமையைச் செய்கின்ற நேரத்தில்- அந்தக் கடமை வெற்றி பெற அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டியது தான் அனைவரும் மேற்கொள்ளும் சூளுரையாக இருக்க வேண்டுமேயல்லாமல் ஒரு தீமையை விவரிப்பதின் மூலம்- அது மற்றொரு பெரிய தீமைக்கு வித்திடுவதாக ஆகக்கூடாது.

அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத் தொடர்ந்து வெளிவருகின்ற செய்திகள் எவையாயினும் அவற்றை விவரம் உணர்ந்தோர் அரசுக்கும்- அரசின் காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டுமேயல்லாமல்- தாங்களே முன்னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது என்பது மட்டுமல்ல, இத்தகைய தீயவர்களுக்கு தங்கள் செயலை நியாயப்படுத்த வலிமை சேர்ப்பதாகவும் ஆகி விடும்.

“அருவருக்கத் தக்க செய்திகளை மற்றும் படங்களை வெளியிடுவது முள்ளை முள்ளால் எடுக்கும் காரியம் தானே” என்று சில ஏடுகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வாதிடலாம். முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் போதையேற்றும் கள்ளை அருந்தியவனை, மேலும் கள்ளையூற்றி திருத்தி முடியுமா? அது போலத்தான் இந்தச் செய்திகளும் படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்துவிடக் கூடாதே என்ற கவலையோடு அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இது போன்ற ஏமாற்று வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபலபுத்தி உடையவர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

இந்த அரசு எடுக்கின்ற நடவடி கைகளுக்கு உண்மையிலேயே பகுத்தறிவு வளர்த்து ஊருக்கு உபதேசிகளை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று எண்ணுகின்ற ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் “, என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

நாத்திகம், பகுத்தறிவு முதலியன: இவற்றாலும், உள்ள நல்ல சிந்தனைகள், கருத்துகள் பாதிக்கப் பட்டன, அழிந்தன, ஒழிந்தன எனும்போது, அவர்களும் தங்களைப் பற்றி மறு பரிசீலினை செய்து கொள்ளவேண்டும். போலிச்சாமியார்களைப் பற்றி உரிமையோடு பேசும் இவர்கள் போலித்தனமான அரசியல்வாதிகளாக, போலி சமதர்மவாதிகளாக, போலி -செக்யூலரிஸ்டுகளாக இருப்பதை உணரவேண்டும். தமிழக மக்கள் தார்மீகமாக இவர்களால் எந்த அளவிற்கு பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதற்கு அவர்களே பொறுப்பாவார்கள்.

கிருத்துவ, மற்ற சாமியார்கள் உல்லாசத்தில் இருந்தபோது, ஏனிந்த கண்டிப்பு வீரம் வரவில்லை: இந்து-அல்லாத சாமியார்கள் எல்லாம் காவி ஆனிந்துகொண்டுதான் அயோக்கியத்தனம் செய்கிறான். அவர்களும் தான் காவிக்கட்டிக்கொண்டு “நந்தா” , “ஸ்வாமி” என்ற பெயர்களில் உலா வருகிறார்கள், ஆஸ்ரமம் நடத்துகிறார்கள், பாலியல் கலவி செய்கிறார்கள், வீடியோ, படங்கள் எடுக்கிறார்கள், ஏன் இணைத்தளங்களிலேயே போட்டுக் காட்டுகிறார்கள், ஆனால், அப்பொழுதெல்லாம் கருணாநிதிக்கு ஒன்றுமே வரவில்லையே? ஏன்?

  • சன், நக்கீரன் முதலியவர்களுக்கு அப்பொழுது அப்படங்களை வெளியிடவில்லையே ஏன்?
  • பல கிருத்துவ சாமியார்கள் பலான விஷயங்களில் ஈடுபடுகிறார்கள் என்ற செய்திகளுடன் நிறுத்திக் கொள்கிறார்களே ஏன்?
  • வீடியோ அதாரங்கள் அங்கு ஏன் வருவதில்லை?
  • ஏன் அங்கு வீடியோக்கள் வேலைசெய்யாதா?
  • போலிகளிலும் கூட, இந்து-காவி சாமியார்களிடம்தான் வீடியோ பிடிக்குமா, வேலை செய்யுமா?
  • ரஞ்சிதாக்களுக்கு அங்கும் குறைவில்லையே, பிறகு ஏன் அவை ஒளிப்பரப்பப்படுவதில்லை?
  • இவ்வாறு, “பகலில் சாமி, இரவில் காமி” விஷயங்களில்கூட, நாங்கள் பலான மாதிரி பார்ப்போம், ……………..என்றால் அதென்ன காமித்தனம்?

பரீட்சை நேரத்தில் உங்கம்மா, அப்பா படுக்கயறைக் காட்சியை ஒளிபரப்புவாயா?

மார்ச் 4, 2010

பரீட்சை நேரத்தில் உங்கம்மா, அப்பா படுக்கையறைக் காட்சியை ஒளிபரப்புவாயா?

இத்தகைய கனமான வார்த்தைகளை உபயோகப் படுத்துவதற்காக மன்னிக்க வேண்டும்.

ஆனால், இதன் பின்னணியில் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை, இந்தியர்களைக் கேவலப் படுத்த வேண்டும் என்ற ரீதியில் இறங்கியுள்ள கூட்டங்கள் தான் செயல்படுவதாக உள்ளன.

உள்ள நாத்திக அரசும் தாராளமாகவே ஆதரிப்பது தெரிகிறது.

துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் மாபெரும் செக்ஸ் அம்பலம்: துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் மாபெரும் செக்ஸ் அம்பலத்தை, படுக்கயறைக்கேச் சென்று படம் பிடித்து வெளிக்காட்டிய செய்தியாளர்களின் திறமையை, கட்டில் கலவி காட்சிகளை காட்டியேத்தீருவோம் என்ற டிவி விற்பன்னர்களின் சாமர்த்தியத்தை கவனிக்கும்போது, மிகவும் ஆச்சரியமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.

போலி சாமியார்களின் காவியை கிழித்தெரியவேண்டும்: சாமியார் என்ற ரீதியில் ஒரு நடிகையுடன் சல்லாபித்திருக்கும் அந்த போலியைத் தண்டிப்பதில், அவனது காவி உடையை உருவுதலில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் கற்ப்பைப் பற்றி ஆர்பரித்து கொக்கரிக்கும் நடிகர்-நடிகைகளும் தமது குற்றங்களிலிருந்து தப்ப முடியாது. சம்பந்தப் பட்டிருக்கும் அரசியல்வாதிகளும் அத்தகைய குற்றங்களில் சமமாகவேத் தண்டிக்கப்படுவதற்கு பாத்தியதையாக உள்ளார்கள்.

படுக்கறைக் கலவி காட்சிகளை பொது தொலைக்காட்சியில் காட்டுவது துப்பறியும் பத்திரிக்கைத்தொழிலா? நேற்று சன் மற்றும் வசந்த் தொலைக்காட்சியினர் இத்தகைய கலவிக்காட்சிகளை தொடர்ந்து, திரும்ப-திரும்ப காட்டியதற்கு பல பெற்றோர்கள் புகார் செய்துள்ளனர், ஏனெனில் 10+2 பரீட்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன, பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். உடனே ஏதோ தாங்கள் பத்திரிகா தர்மத்தைப் பின்பற்றுகிறார்போல, சாமியார் இவ்வாறு செய்துவிட்டார், மக்கள் விழிப்புணர்வாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வெளிப்படுத்திக் காண்பித்தோம் என்று சப்பைக் கட்ட ஆரம்பித்து விட்டனராம்!

நாத்திகம் என்ற பெயரில் ஊடகத்துறையில் இந்து-விரோத சக்திகள் அப்பட்டமாக வேலை செய்வது: ஊடகத் துறையில் நாத்திகம் போர்வையில் பெரியார்-அம்பேத்கர் என்று பேசிக் கொண்டும், இந்து பெயர்களை வைத்துக் கொண்டு உலாவருவது கிருத்துவ மற்றும் முஸ்லீம் இந்து-விரோத சக்திகள் தாம். இப்போது கூட பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்ற பெயர் அடிபடுகிறது.