Archive for the ‘பிள்ளையார்’ Category

அணில் வேலை செய்கிறது, அணில்கள் வேலை செய்கின்றன, கலியுகத்திலும் அணில்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன (3)

ஜூலை 7, 2021

அணில் வேலை செய்கிறது, அணில்கள் வேலை செய்கின்றன, கலியுகத்திலும் அணில்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன (3)

அணில் போன்று சேவை செய்யும் அர்ஜுன்
தனது கைகளினால் வேலை செய்யும் அர்ஜுன் – அணில் போன்று சேவை செய்யும் அர்ஜுன்
கும்பாபிஷேகம் முடித்து, ஸ்வாமிகள் பிரசாதம் கொடுக்கிறார்.

அர்ஜுன் போன்ற அணில்கள் சேவை செய்து கொண்டிருக்கின்றன: தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்துக்களுக்கு, மடங்களுக்கு, மடாதிபதிகளுக்கு, நம்பிக்கைகளுக்கு மரியாதை, பாதுகாப்பு, போற்றல், ஆதரவு முதலியவை தொடர்ந்து இருந்து வருகின்றன. மத்வ சம்பிரதாயத்தில், மண்ணிற்குத் தான் மகிமை. ஶ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் (மூல பிருந்தாவனத்தில் இருந்து புண்ணிய எடுக்கப் பட்ட மண் மிருத்திக என்று சொல்லப் படும். மண் மட்டுமல்லாது, அந்த வார்த்தையும் புனிதத்துடன் தொனிக்கப் படும், பாவிக்கப் படும். அத்தகைய புண்ணிய மண் எடுத்து மற்ற இடங்களில் பிருந்தாவனங்கள் நிறுவப்பட்டன, நிறுவப் படுகின்றன. அதனால், அவற்றிற்கு அதே மரியாதை, போற்றல், சடங்குகள், கிரியைகள் முறையாக நடக்கும். அதுபோல இங்கு, பேஜேவர் மட ஸ்வாமிஜி[1]  அயோத்தியாவிலிருந்து, புனித மண்ணை எடுத்து வந்து, இங்கு, இக்கோவில் நிறுவ ஆவண செய்து வைத்தார். இப்பொழுதும், கும்பாபிஷேகம் முடித்து வைத்தார்.  மண், சாம்பல், யாக ஆகுதி முதலியவற்றிற்கு அத்தகைய புனிதத் தன்மை உள்ளது, மதிக்கப் படுகிறது. அவற்றைப் பற்றிய சில உதாரணங்கள் கீழே விவரிக்கப் பட்டுள்ளன. ஆனால், இங்கோ – தமிழகத்தில் எல்லாமே பகுத்தறிவு, பெரியாரிஸம், நாத்திக போர்வைகளில், தொடர்ந்து தூஷிக்கப் படுகின்றன. இந்துக்கள் மனரீதியில், உடல் ரீதியிலும் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகிறார்கள்[2].

கொரோனா தடுப்பு விதிமுறைக்ளுடன் பக்தர்கள் வருகிறார்கள், சேவிக்கிறார்கள்.

அணில் வேலை செய்கிறது, அணில்கள் வேலை செய்கின்றன, கலியுகத்திலும் அணில்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன: எவ்வளவு சிறிய உயிரினம் ஆனாலும், மக்களுக்கு உதவ வேண்டும், சேவையில் ஈடுபட்டு பணியை செய்ய வேண்டும், அதில் உருண்டு திளைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு, வேலை செய்தது அணில். ராம பிரான் அதன் சேவையை மெச்சி, அன்பாக தடவிக் கொடுத்தார்.  அதாவது, லங்கைக்குச் சென்று படைகளோடு கடக்க குருக்கில் இருக்கும் கடலுக்கு, அத்தீவுக்கும் இடையே பாலம் கட வேண்டும். ராமரிடம் பலவித தொழிற்நுட்ப வல்லுனர்கள் இருந்தனர். பணிகள் நடந்து பாலம் கட்டியாகி விட்டது. அப்பொழுது, ஒரு அணில் மண்ணின் மேற்பரப்பில் உருண்டு கொண்டிருப்பதைக் கண்டு ராமர் கேட்டார், “நீ ஏன் அவ்வாறு செய்து கொன்டிருக்கிறாய்?” அணில், “நானும் உங்கள் பாலம் கட்டிய பணியில் கலந்து கொண்டு, நீங்கள் எல்லோரும் நடந்து செல்ல வசதியாக இவ்வாறு உருண்டு மண்ணை சமன் படுத்துகிறேன்”, என்றது. அதன் சேவையை மெச்சி, அப்பொழுது, அதன் முதுகில் அன்போடு தடவி கொடுத்தார். அப்பொழுது மூன்று கோடுகளாக மாறியது. அதாவது, மண் நிறைந்த அதன் முதுகை நான்கு விரல்களால் தடவிக் கொடுத்த போது, மூன்று விரலிடைகளில் மண் அப்படியே இருக்க அது அடையாளமாகியது. சேவையின் மேன்மையைப் போற்றும் வகையில், பணியின் மகத்துவத்தை சிறப்பிக்கும் முறையில், வேலையின் உழைப்பை மதிக்கும் நிலையில் பரிசாக, விருதாக, தெய்வத்தின் தானமாக கிடைத்த அடையாளமாக பாவிக்கப் பட்டது. பின்னர் மகாபாரத்தில் கீரிப்பிள்ளை சம்பவம் விவரிக்கப் படுகிறது.

ராமரின் அணிலும், மகாபாரத கீரிப்பிள்ளையும் – கற்க வேண்டிய படிப்பினைகள்

கீரிப் பிள்ளையும், குருக்ஷேத்திர யுத்தமும், தருமனின் யாக ஆகுதி சாம்பலும், கீரிப்பிள்ளையும்[3]: குருக்ஷேத்திர யுத்தத்திற்குப் பிறகு, இந்திரபிரஸ்தத்தில், தான் பெற்ற மகத்தான வெற்றிக்கு, அஸ்வமேத யாகம் சிறப்பாக நடத்தி முடிக்கிறான். யாகம் முடிந்து விட்டது. ஆகுதி குறைந்து விட்டது. சாம்பல் உருவாகி விட்டது. ஆனால், தருமனுக்கு கொஞ்சம் அகம்பாவம் வந்து விடுகிறது. ஆஹா, நான் வெற்றி பெற்று மஹாராஜன் ஆகிவிட்டேன் என்று நினைத்தபடி உட்கார்ந்து கற்பனை செய்து கொண்டிருக்கிறான். அப்பொழுது, ஒரு கீரிப்பிள்ளை வந்து, அந்த சாம்பலைப் பார்த்து, அதில் வந்து உருளுகிறது. தருமனுக்கு சிந்தனை சிதற கோபம் வருகிறது. கீரிப்பிள்ளையோ விடாமல் புரண்டு பார்க்கிறது.

யுதிஸ்ட்ரன் – தருமராஜன் தருமனாகிறான். “கீரிப்பிள்ளையே, உனக்கு என்ன வேண்டும்?,” என்று கேட்கிறான்.

“எனக்கு ஒன்றும் வேண்டாம். இங்கோ ஏதோ மிகப் பெரியப-சிறந்த யாகம் நடந்தது என்று கேள்விப் பட்டேன். அதனால், இங்கு வந்தேன்”

“அப்படியா, சரி நீ என்ன எதிர்பார்க்கிறாய்?”

“முன்பு, ஒரு ஏழைப் பராரி பிராமணனின் வீட்டு அடுப்பு சாம்பலில் உருண்ட போது, என்னுடைய உஅலின் ஒரு பகுதி தங்கநிறமாகி விட்டது. பிறகு முனிவர்களிடம் வழி கெட்டபோது. எங்கெங்கெல்லாம் யாகம் நடக்கின்றனவோ, அங்கெங்கெல்லாம் சென்று ஆகுதி சாம்பலில் உருண்டு பார், மேன்மை இருந்தால், உனது ஆசை தீரும் என்றனர். ஆனால், இங்கும் ஒன்றும் நாக்கவில்லை”

“அதாவது, எனது யாகமும் அந்த அளவுக்கு சிறப்பில்லை போன்றிருக்கிறது,” என்று யோசித்து, ஆணவம் குறைந்து, சித்திக்க ஆரம்பித்தான்.

“தருமரே நன்றி நான் சென்று வருகிறேன், ” என்று அந்த கீரிப்பிள்ளை சென்று விட்டது.

தமிழக கொக்கோக கவிப்பெருங்கவிக்கோக்களுக்கு அணிலைப் பற்றி சரியாமல் இருபது அவர்களது பேதமையை வெளிப்படுத்துகிறது: தமிழகத்திற்கும், அணிலுக்கும் அடிக்கடி தொடர்பு, சந்தர்ப்பம், விவாதம்  வந்து விடுகின்றன. கொக்கோக திராவிட நாசகார கவிக்கோக்களுக்கு மூன்று கோடுகள், இரண்டு கோடுகளாகின்றன[4]. மூன்று என்பது, திராவிடத் தலைவர்களுக்குப் பிடித்த வார்த்தை மற்றும் செயல்பாட்டு எண் வடிவம், குறியீடு, அடையாளமும் ஆகும். மனை, துணைவி, கூட இருப்பவள் என்றெல்லாம் வாழ்க்கை கணக்குகள் நடந்தன, நடக்கின்றன[5]. ஆனால், பக்தர்களுக்கு அணில் மகிமை சரியாகத் தான் புரிந்திருக்கிறது. ராமர் அணிலின் சேவையை மெச்சி, அதன் முதுகில், தடவி கொடுத்தார். அப்பொழுது மூன்று கோடுகளாக மாறியது. அதாவது, மண் நிறைந்த அதன் முதுகை நான்கு விரல்களால் தடவிக் கொடுத்த போது, மூன்று விரலிடைகளில் மண் அப்படியே இருக்க அது அடையாளமாகியது. ஆனால், இந்த கொக்கோக சிறுமதி கவிஞர்களுக்கு கணக்கு தெரியாது போலும். அதனால், “அணில் முதுகில் இராமர் மூன்று கோடு போட்ட மாதிரி,” என்று எழுதினான் அவன்[6]. இவன்கள் எப்படி தடவுவார்கள் என்பது அவர்களுக்குத் தான் தெரியும். ஒரு கையில் ஐந்து விரல்கள், இரண்டு கைகளில் பத்து விரல்கள் என்றிருக்கும் போது, குடிபோதையில், எப்படி-எப்படியோ தடவி இருப்பார்கள்.  “ஐந்து விரலால் நான் உன்னை தொட்ட போது எப்படி? ஜிங்கிடிசாம், ஜிங்கிடிசாம், ஜிங்கிடிசாம்,” என்று பழைய பாடலும் உண்டு[7], ஆனால், இது போன்ற வக்கிரம் இல்லை. ராமர் எந்த இஞ்சினியரிங் காலேஜில் படித்தார், என்று கருணாநிதி கேட்டது, அத்தகைய வக்கிரத்தின் உச்சம். இன்று அதே திராவிட பாரம்பரியம் அணில்களால் மின்சார கம்பிகள் பாதிக்கப் படுகின்றன என்ற அளவுக்கு, பகுத்தறிவு வளர்ந்துள்ளது.

© வேதபிரகாஷ்

07-07-2021

ஸ்டாலின் துர்கா, அர்ஜுன் குடும்பத்தாருடன்
ஶ்ரீ ஆஞ்சநேயர் விக்கிரகத்தின் பீடம்
விக்கிரகத்தின் மேலே அபிஷேகம், விசேஷ பூஜைகள் செய்ய, ஒரு மேடை அமைக்கப் பட்டுள்ளது.
அதில் 40 பேர் இருந்து தெய்வ காரியங்களை செய்யலாம்


[1] உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.

[2]  இவற்றைப்பற்றி என்னுடைய பிளாக்குகளில் விவரமாக பதிவு செய்துள்ளேன்.

[3]  மகாபாரதத்தில் அஸ்வமேத மற்றும் அனுகீத பருவங்களில் (1. Aswamedhika Parva (Chapters: 1–15) 2. Anugita Parva (Chapters: 16–96)) வரும் இந்த கதை சிறிது வேறுபாடுகளுடன் உரையாசிரியர்கள் எழுதி வருகிறார்கள். யாகமறுப்பு போன்ற கருத்துகள் இருப்பதால், இது ஜைன-பௌத்த இடைச்செருகல்கள் என்றும் கருதப் படுகின்றது.

[4] இரண்டு மனைவிகளை (தெரிந்தும், தெரியாமலும்) வைத்திருக்கும் நிலை. இது திராவிட பாரம்பரியத்தில் சிலருக்கு சகஜமாகி விட்டது.

[5]  சில திராவிடத் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் கூட பின்பற்றியது, இன்றைக்கு ஆதரித்து பேசும் நிலைக்கு வந்தாகி விட்டது.

[6]  திருவாச்சி படத்தில் வைரமுத்து எழுதின சினிமா பாடல்.

[7] 1969ல் வெளிவந்த மேஜர் சந்திரகாந்த் பாடலில், “நேற்று நீ சின்ன பாப்பா இன்று நீ அப்பப்பா ஆயிரம் கண் ஜாடையோ,” இந்த வரி வரும். வாலியின் பாடல்.

கோவிலுக்கு வருகிறவர்கள் தியானம் செய்ய, தியான மண்டமும் கட்டப் பட்டுள்ளது.
சுற்றியுள்ள சன்னிதிகள் – நாகதேவதைகள்.
விநாயகர் சன்னிதி
ஶ்ரீ ராமர் கோவில், சன்னிதி
உள்ளே இருக்கும் ஶ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணர் விக்கிரங்கள்

அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் – அர்ஜுன் கட்டிய கோவில், ஸ்டாலின் துர்கா விஜயம்! (2)

ஜூலை 7, 2021

அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் – அர்ஜுன் கட்டிய கோவில், ஸ்டாலின் துர்கா விஜயம்! (2)

அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம்: தமிழ் சினிமா துறையில் ஆக்‌ஷன் கிங் என அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் ஒரு தீவிர ஆஞ்சநேயர் சுவாமி பக்தர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இவர் சென்னை போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவில் கட்டியுள்ளார்[1]. அர்ஜுன் புதியதாக கட்டிய கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த கோயில் தனது 17 வருட கனவு என்று கூறியுள்ள அர்ஜுன், கோயிலில் 180 டன் எடைகொண்ட ஒற்றைக்கல் ஆஞ்சநேயர் சுவாமி சிலை சிறப்பம்சமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்[2]. அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் சுவாமி கும்பாபிஷேகம் விழாவையடுத்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய மனைவி துர்கா ஸ்டாலின் இந்த கோயிலுக்கு சென்றுள்ளார். துர்கா ஸ்டாலின் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்ற புகைப்படம் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஒருவேளை முதலமைச்சரையே வருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கலாம், இருந்தாலும், “சிறந்த பக்தையான” தனது மனைவியை “சென்று வா,” என்று பணித்திருக்கலாம். அரசியல் ரீதியில், இதுவும் ஸ்டாலினுக்கு லாபம் தான்!

ஶ்ரீ ஆஞ்சநேயர் கோவில் நுழைவாயில்
ஶ்ரீ ஆஞ்சநேயர் கோவில் நுழைவாயில் – துவார பாலகர்கள்
நிறுவ பட்ட தியான ஆஞ்சநேயர்

ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்ய தூண்டியதுஅஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம்: தான் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் குறித்து நடிகர் அர்ஜூன் கூறுகையில் “இந்த கோவில் என்னுடைய 17 வருட கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை. தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் பலரின் ஆதரவும் என்னை மேலும் மேலும் இந்த நற்செயலை செய்ய தூண்டுதலாக இருந்தது. இருப்பினும் இந்த கோவிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்ய தூண்டியது என்பது தான் உண்மை. 2004- எஃபக்டை / விளைவை மனதில் வைத்துக் கொண்டு, கூறுகிறார் என்று தெரிகிறது.

அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம்கோவிலில் உள்ள மற்ற சன்னிதிகள்: ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது. இது தான் முதல் 180 டன் எடையுடய ஶ்ரீ ஆஞ்சநேயர் சிலை என்று கூறுகின்றனர். ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளது. பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலின் பிரதிஷ்டை செய்து கொடுத்தார். மேலும் ஒரு சிறப்பம்சமாக பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலுக்கு வருகை தருவதற்கு முன்பு அயோத்திக்கு சென்றிருந்தார். அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேயசுவாமி மந்திரம் கோயிலின் பிரதிஷ்டை செய்ய விஜயம் செய்த சுவாமிகள் தன்னுடன் அயோத்தியின் மண் எடுத்து வந்திருந்தார். அந்த மண்ணின் மீது இந்த கோவிலின் ஶ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சிங்காரச் சென்னையில் எந்த மண் இருந்தது என்று தெரியவில்லை, ஆனால், அம்மண்ணில் பலமுறை விநாயகர் சிலைகள் ஈவேரா-பெரியாரால் உடைக்கப் பட்டுள்ளன. மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில், அப்பாவி பிராமணர்கள் வெட்டப் பட்டுள்ளனர். ஆனால், அதே இடத்திற்கு அயோத்தியிலிருந்து மண் வந்தது என்றால், நினைத்துப் பார்க்க வேண்டும்.

அயோத்தி மண்ணும், சிங்காரச் சென்னை மண்ணும், பெரியா மண்ணும்: பகுத்தறிவின் பெயரால், திக, திமுக, கம்யூனிஸ்ட், சில நேரங்களில் காங்கிரஸ் வகையறாக்களும் பித்து பிடித்தால் போல, “பெரியார் மண்” என்றெல்லாம், தொடர்ந்து பேசி வருவது தெரிந்த விசயமே. இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும், ஏதோ அறநிலையத் துறையினையே பல சோப்புகள், பினாயில், டெட்டால் எல்லாம் ஊற்றி, சுத்தமாக கழுவி, தூய்மைப் படுத்துவது போல, தினம்-தினம் செய்திகள் வந்து கொண்டியிருக்கின்றன. இரண்டு ஆண்டுகளாக கோவில்கள் பூட்டப் பட்டிருக்கின்றன. தினசரி, மாதாந்திர, பட்ச, வருடாந்திர விழாக்கள், கிரியைகள், சடங்குகள் நடக்காமல் இருக்கின்றன. ஆகம சாத்திரங்களின் படி நடக்கவில்லை என்பது தெரிந்த விசயமே. பௌர்ணமி-அமாவாசை வந்து செல்கின்றன. ஆனால், அவற்றைப் பற்றி கவலைப் படாமல், கோவில் சொத்து, நிலம், பாக்கி என்று நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பாக்கி வைத்திருக்கும் வாடகை, குத்தகை பணம் வசூலிக்கப் படவில்லை. லட்சக்கணக்கில் ஆக்கிரமிப்புகளை செய்தவர்கள் – துலுக்கர்-கிருத்துவர்-நாத்திகர்-இந்துவிரோதிகள் உட்பட, யாரையும் விரட்டியடிக்கப் படவில்லை, இதுவரை அனுபவித்த சொத்துக்களுக்கும் பாக்கி வசூலிக்கவில்லை. ஆனால், சீதா கிங்ஸ்டன் பள்ளிக்காரர்கள், எங்களால் முடியவில்லை என்று, இததனை ஆண்டுகள் வாடகைக் கொடுத்தவர்களை சட்டப்படி வெளியேற்றி விட்டார்கள். ஆனால், அதே சட்டம் மற்ற கிரிமினல்களை, சட்டமீறல் செய்தவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஆக ஆழ்வார்கள்-நாயமார்கள் பிறந்த புண்ணிய பூமி, பெரியாரிஸ நாத்திக பூமியாகி, பிறகு பெரியார் மண்ணாகியப் பிறகு, எல்லாமே, மண்ணோடு மண்ணாகி போகும் நிலைக்கு வந்து விட்டது. திருமூலரின் மந்திரங்களும் பொய்த்து விட்டன போலும். காலமேகப் புலவர் இருந்திருந்தால், பாடியே மண்மாரி வரவழைத்து, இந்த நாத்திக மண்ணை மூடியிருப்பார்.

அவரது (துர்கா ஸ்டாலின்) வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது” – நடிகர் அர்ஜுன் பெருமிதம்![3]: “இன்று தமிழ்நாடு முதல்வர் திரு.மு..ஸ்டாலின் அவர்களின் துணைவி துர்கா ஸ்டாலின் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேயசுவாமி மந்திரம் கோவிலுக்கு வந்து ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் தரிசனம் பெற்றார். அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது[4]. விரைவில் இந்த கோவில் பொது மக்களுக்காக திறக்கபடவுள்ளது. கொரோனாவால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் கடவுளின் அனுக்கிரங்களும் ஆசியும் மக்கள் அவசியம். கடவுளின் அருள் மக்களுக்கு கிடைக்க வேண்டும், அவர்களின் வாழ்வில் துன்பம் மறைந்து இன்பம் பெருக வேண்டும் என்பதே என் ஆசை,” என்று கூறினார். நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்று வணங்கி இருக்கிறார்[5]. அவர் கோயிலில் ஒற்றைக்கல் ஆஞ்சநேயர் சிலை முன்பு இருக்கிற புகைப்படம் வெளியாகி சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில், நடிகர் அர்ஜுன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது[6]..

© வேதபிரகாஷ்

07-07-2021


[1] தமிழ்.நியூஸ்.18, Arjun: ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த நடிகர் அர்ஜுன்!, NEWS18 TAMIL, LAST UPDATED : JULY 02, 2021, 09:55 IST

[2] https://tamil.news18.com/news/entertainment/cinema-anjaneyar-temple-built-by-actor-arjun-scs-494581.html

[3] நக்கீரன், அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது” – நடிகர் அர்ஜுன் பெருமிதம்!, நக்கீரன் செய்திப்பிரிவு –ஸ்டாலின், Published on 03/07/2021 (10:12) | Edited on 03/07/2021 (10:35).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/her-visit-made-us-very-happy-actor-arjun

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில்… 180 டன் ஒற்றைக்கல் சிலைதுர்கா ஸ்டாலின் தரிசனம்!, Written By WebDesk, Updated: July 2, 2021 10:36:47 pm.

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/durga-stalin-visits-at-actor-arjun-build-new-temple-319623/

பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது: ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறுவது, சித்தாந்த குழப்பமா, அரசியல் நுணுக்கமா அல்லது சமரச முயற்சியா? திக கடுமையாக எதிர்க்கிறது (2)

மே 20, 2018

பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது: ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறுவது, சித்தாந்த குழப்பமா, அரசியல் நுணுக்கமா அல்லது சமரச முயற்சியா? திக கடுமையாக எதிர்க்கிறது (2)

RSS in Tamilnadu, Tamil news cutting

தமிழ்நாட்டில் கால் பதிப்பது என்பது பகல் கனவு எங்கள் பிணத்தின் மீது தான் நடக்கும்: வீரமணி ஆவேசத்துடன் தொடர்கிறார், “தமிழ்நாட்டில் கால் பதிப்பார்களாம். அது எங்கள் பிணத்தின்மீதுதான் நடக்கும். அதே வைத்யா இன்னொன்றையும் கூறியிருக்கிறார். பெரியார் கொள்கையை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதாம் எச்சரிக்கை! பெரியார் கொள்கைக்கும், எங்களுக்கும் வேறுபாடு இல்லை. ஜாதி, மத ஒழிப்பில் பெரியார் கொள்கையோடு நாங்கள் ஒத்துப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார். அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாட ஆரம்பித்தவர்கள்இப்பொழுது பெரியாரிடம் நெருங்க ஆரம்பித் துள்ளனர். நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். விடுதலைஇந்த இந்துத்துவா சக்திகளை வீழ்த்துவதில் போர்வாளாக செயல்படும். விடுதலைவெறும் காகிதமல்லஆயுதம்,” என்றார்[1]. பிப்ரவரியில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரமுகர்கள் இவரை சந்தித்துள்ளனர். அப்பொழுதும், இப்படி சூடாகப் பேசினாரா என்று தெரியவில்லை.

RSS and Periyarism - FB postings

பிப்ரவரியில் [27-02-2018] ஆர்.எஸ்.எஸ். வீரமணியை சந்தித்தது[2]: தமிழக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரமுகர்கள் 27.2.2018 அன்று தமிழர் தலைவரைச் சந்தித்து அவர்கள் வெளியிட்டுள்ள புத்தகத்தினை வழங்கினர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநிலத் தலைவர் முனைவர் குமாரசாமி, மாநில செயலாளர் (மக்கள் தொடர்பு) பிரகாஷ், மாநில இணைச் செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம.இராஜசேகர் ஆகியோர் தமிழர் தலைவரை சந்திக்க நேரம் கேட்டு அனுமதி பெற்றிருந்த நிலையில் 27.2.2018 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் சென்னை பெரியார் திடல் திராவிடர் கழகத் தலைமையகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர்[3]. RSS A SAGA OF COURAGE AND DEDICATION எனும் தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ள நூலினை அளித்தனர். இந்தியாவில் ஆயிரம் முக்கிய தலைவர்களுக்கு இந்நூலை அளிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையில் அளிக்கிறோம் என்று கூறி அளித்தனர். ‘விஜயபாரதம்‘ வெளியிட்டுள்ள கே.கே.சாமி அவர்கள் எழுதிய “உயர உயரப் பறந்திட….” என்ற நூலையும் அளித்தனர்.

RSS and Periyarism - FB postings-2

கீதையின் மறுபக்கம் (கி.வீரமணி), சந்திரசேகரப் பாவலர் அவர்களால் எழுதப்பட்ட இராமாயண ஆராய்ச்சித் தொகுப்பு நூல், மகாபாரத ஆராய்ச்சி (கி.வீரமணி), அசல் மனுதர்மம், புரிந்து கொள்வீர் புராணங்களை வேதங்களை, இல்லாத இந்துமதம் (பேரா.இறையன்), பார்ப்பனர்களை தோலுரிக்கிறார் விவேகானந்தர் ஆகிய நூல்களை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களுக்கு வழங்கினார். சிறிது நேரம் உரையாடி விட்டு விடை பெற்றுச் சென்றனர். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உடனி ருந்தனர்.

Opposition to RSS meeting at Sastra colege May 2017

தேசிய பிரதிநிதிகள் சபைக் கூட்டம் 2017ல் கோயம்புத்தூரில் நடந்தது: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் சபைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்[4]. சென்ற வருடம், 2017, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது[5]. இதெல்லாம் நிச்சயமாக, ஒரு திட்டத்துடம் செயல்படும் முறையினைக் காட்டுகிறது. தஞ்சை வல்லத்திற்கு அருகே அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் பயிற்சி முகாம் நடந்தது, இப்பயிற்சியின் இறுதி கட்ட பயிற்சியளிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்-ன் தேசிய தலைவர் மோகன் பகவத் கடந்த மே 12-ம் தேதி 2017 முதல் இங்கு வந்து பயிற்சியளித்தார், என்று, சில செய்தித்தாள்களில் மட்டும் செய்தி வெளியாகியுள்ளது. அங்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது[6].

Other side of periyar- Ambedkar possible

வேரா, பெரியார் பற்றி இந்துத்துவவாதிகளின் ஆராய்ச்சி: ஈரோடு வெங்கடப்ப நாயக்கர் பற்றிய முழு ஆராய்ச்சி இந்துத்துவவாதிகள் நடத்த வேண்டும், இதுவரை நடந்தது தொகுப்புதான். ஈவேரா பேசியதாக, எழுதியதாக, சொல்லப் படுகின்றவற்றை இரண்டாம்-மூன்றாம் தர அச்சு புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. ஈவேரா கையெழுத்துப் பிரதிகள் ஆராய்ச்சியாளர்களுக்குக் காண்பிக்கப் படுவதில்லை. பேசிய ஒலிநாடா பதிவுகள் கேட்க அனுமதி இல்லை. பத்து பேர் உட்கார்ந்து எல்லாவற்றையும் ஆய்ந்து, இது தான் ஈவேரா பேசியது, எழுதியது என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பதிப்பு இல்லை. மூல ஆவணங்களை வைத்து ஆய்ந்து தீர்மானித்து ஒப்புக்கொள்ளப் பட்டு, தொகுத்து வெளியிடப்படுவது தான் ஏற்றுக் கொள்ளப்பட்ட பதிப்பு [Critical edition] எனப்படும். ஆனைமுத்து, ராஜேந்திரன், ராஜதுரை-கீதா, வீரமணி தொகுத்தது என்று தான் இப்பொழுது உள்ளது. அவை பல இடங்களில் வேறுபடுகின்றன! கடந்த 25 வருடங்களாக இதை நான் சொல்லி வருகின்றேன், யாரும் கேட்பதாக இல்லை!

Periyar on Paraichi- jacket

முரண்பாடுகள் உண்மையா, அல்லது உண்மைகளை மறைக்கவா?: நம்முடைய ஆட்களே புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 80-90 வயதுள்ள ஈவேராவைப் பார்த்த, பேசிய, கேட்ட பெரியவர்களை பேட்டிக் கண்டு விவரங்களை ஆவணப்படுத்தலாம். மூலங்களை பார்ப்பது, ஆவணக் காப்பகத்திற்கு செல்வது, கள-ஆய்வு செய்வது என்பதெல்லாம், “பார்த்து எழுதும்” புத்தகக்காரர்களிடம் இல்லை. யாதாவது புதியதாக எடுத்துக் காட்டினால், அவற்றை காப்பியடித்து போட்டு, தானாகக் கண்டு பிடித்தது போலக் காட்டிக் கொள்ள பலர் இருக்கவே செய்கிறார்கள். பவானி ஆற்றங்கரையில் பெண்களுடன் சல்லாபித்து மயங்கிக் கிடப்பார், வண்டியில் வைத்து வீட்டிற்கு கூட்டி வரப்பட்டார் என்றெல்லாம் ஒரு நெருங்கிய பெரியவர் எழுதியுள்ளார். பிறகு பேட்டி எடுத்து விவரங்களை சேகரித்து வைத்துக் கொண்டேன். ஆனால், நம்மாட்களோ, பேஸ்புக்கில் வீராப்பு காட்டுவதோடு சரி.

Periyar breaking vinayaka idols

அம்பேத்கர் பற்றி இந்துத்துவவாதிகளின் ஆராய்ச்சி: முன்பு, அம்பேத்கரை “இந்துத்துவ” ரீதியில் விளக்கம் கொடுத்தபோது, பலத்த விமர்சனம் எழுந்தது. ஏனெனில், அது பொய் என்பது, அம்பேத்கரின் புத்தகங்களைப் படித்தாலே தெரிந்து விடுகிறது. மேலும், இந்துத்துவ வாதிகள், சரித்திர / ஆராய்ச்சி கூடுதல்களில் அம்பெத்கர் / ஈவேரா பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை பதிப்பததாகத் தெரியவில்லை, அச்சில் வந்ததாகவும் இல்லை. ஆராய்ச்சி நெறிமுறையும் பின்பற்றுவது கிடையாது, மூலங்களை, மற்ற அச்சில் வந்தவற்றையும், கால ரீதியாகக் குறிப்பிடுவதில்லை. அதாவது முன்னரே, இதைப்பற்றி ஆராய்ச்சி செய்து வெளிவந்த விசயங்களை குறிப்பிடாமல், மற்றவர்களின் ஆராய்ச்சியை, பெயர் கூட குறிப்பிடாமல், தமது போல, மற்ற இடங்களில் போட்டுக் கொள்வது, வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். நிற்க வைத்து கேள்விகள் கேட்டால், அவர்களால் பதில் சொல்ல முடியாது, அந்நிலையில் உள்ளோர், பெரிய நிபுணர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள். இருப்பினும், அம்பேத்கரையும், பெரியாரையும் நேரிலே பார்த்து பேசியது போலவும், அவர்களது எழுத்துகளை எல்லாம் படித்து விட்டது போலவும் காட்டிக் கொள்கிறார்கள். “இந்துத்துவ அம்பேத்கர்” போல மடத்தனமாக, நாளைக்கு “இந்துத்துவ பெரியார்” என்று கூட புத்தகம் எழுதப் படலாம், இது தான் அவர்களது ஆராய்ச்சி போலித்தனத்தைக் காட்டுகிறது.

Arvinda Neelakanda, Periyar, based on historian mave

ஆர்.எஸ்.எஸ் பெரியாரிஸத்தை ஆதரித்தால் என்னாகும்?: பெரியார் திடலுக்கு, சுயமரியாதை பிரச்சார கழகத்திற்கு, சென்று “குடி அரசு,” “விடுதலை” நாளிழ்களை பார்த்தால், இத்தகைய விளக்கம் வராது. பெரியார், வீரமணி, கலிப்பூங்குன்றன் போன்றோரிடம் பேசியிருந்தால், உண்மை நிலை தெரியும். ஆனால், இன்றோ, பெரியார், செகுவேரா, ரெட்டைமலை சீனிவாசன் படம் போடக் கூடிய நிலை இந்துத்துவவாதிகளுக்கு வந்து விட்டது போலும்.  அந்நிலை வரக்கூடாது, என்று மூன்றாண்டுகளுக்கு முன்னர் மற்றும் பின்பும் குறிப்பிட்டேன், இப்பொழுது உண்மையாகி விட்டது. இனி, ஈவேரா பிள்ளையார் உடைத்தது போல, இந்துத்துவ வாதிகளும் உடைப்பார்கள் போலும், இவ்வருடம் விநாயக சதுர்த்தி கொண்டாட்டம் இல்லாமல் போய்விடும் போல. இல்லை அந்த ஊர்வலத்தில் “பெரியார்” படத்தையும் எடுத்துச் செல்வார்கள் போலும். செப்டம்பர் 17 ஈவேராவின் பிறந்த தினம் மற்றும் டிசம்பர் 24 மறைந்த தினம் வருகின்றன, இந்த்துவவாதிகள் கொண்டாடுவார்களா என்று பார்ப்போம்! இனி பெரியார் சிலைக்கு மாலை போட வேண்டியது தான் பாக்கி, இந்துத்துவ வாதிகள், அதற்கும் தயாராகி விடுவார்கள்! பொறுத்து பார்ப்போம்.

Swaraj dodges- Karan Kamble reply - 15-03-2018

அரவிந்த நீலகண்டன், சரித்திராசிரியர் . வெங்கடேசன், பெரியார்:  இங்கு மார்ச் மாதத்தில் நடந்ததையும் குறிப்பிட வேண்டியுள்ளது. அரவிந்த நீலகண்டன், ஈவேராவைப் பற்றி ஸ்வராஜ்யா தளத்தில் அபத்தமான தொகுப்பு ஒன்று வெளிவந்தது[7]. அப்பொழுது அதிலிருந்த தவறுகளைச் சுட்டிக் காட்டி, கமென்டில் பதிவு செய்தேன். ஆனால், பிரசுரமாகவில்லை. அதாவது “ஸ்வராஜ்யா எடிடோரில் போர்ட்” விரும்பவில்லை என்று தெரிந்தது. வெளியிட்டபோது, அது, எனது பதிலைக் கூட வெளியிடாமல் மறைத்தது. பலமுறை பதிவு செய்தும், அதே நிலை தொடர்ந்ந்தது. 12-03-2018 என்று இ-மெயிலில், அதையே அனுப்பி வைத்தேன். ஆனால், வெளியிடமுடியாது என்றே கரண் காம்ப்ளே என்பவர் இ-மெயில் மூலம் தெரிவித்தார். அந்நிலையில் தான் ஆராய்ச்சி உள்ளது. பொதுவாக, இவர்கள் அடுத்தவர்களின் ஆராய்ச்சியை தமது போல, புத்தகங்களில், விவரங்களைப் போட்டுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ம. வெங்கடேசனும், அவ்வாறே அம்பேத்கரைப் பற்றி அறிந்து கொண்டு, பிறகு, குறிப்புகளை கொடுத்து, தானே தெரிந்து கொண்டது போலக் காட்டிக் கொள்வார்.

© வேதபிரகாஷ்

20-05-2018

Arvinda Neelakanda, Periyar, urban legend

[1] http://www.viduthalai.in/headline/161823-2018-05-19-09-51-30.html

[2] விடுதலை, தமிழக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு, புதன், 28 பிப்ரவரி 2018 16:31

[3] http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/157953-2018-02-28-11-18-23.html

[4] விகடன், ‘ஐந்தாயிரம் கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ்!’ -தமிழகத்தில் கிளைவிடும் மெகா பிளான், ஆ.விஜயானந்த், Posted Date : 16:41 (20/03/2017) Last updated : 17:01 (20/03/2017).

[5] https://www.vikatan.com/news/tamilnadu/84125-rss-plans-to-grow-their-roots-in-tamil-nadu.html

[6] இராவணன், சாஸ்திரா பல்கலைக்கழகத்தை இழுத்து மூடு ! தஞ்சை ஆர்ப்பாட்டம், By வினவு – May 18, 2017.

https://www.vinavu.com/2017/05/18/thanjavur-pala-protest-against-sastra-university-and-rss/

[7] Swarajya, Ten Things About Periyar Dravidian Parties Don’t Want You To Know, by Aravindan Neelakandan, Mar 09, 2018, 4:58 pm

https://swarajyamag.com/politics/ten-things-about-periyar-dravidian-parties-dont-want-you-to-know

பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது: ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறுவது, சித்தாந்த குழப்பமா, அரசியல் நுணுக்கமா அல்லது சமரச முயற்சியா? (1)

மே 20, 2018

பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது: ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறுவது, சித்தாந்த குழப்பமா, அரசியல் நுணுக்கமா அல்லது சமரச முயற்சியா? (1)

1975-77 Atal, Jayaprakash arrested-emergency declared

ஆர்.எஸ்.எஸ் மீதான தாக்குதல்கள்: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்க் என்கின்ற ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் பொதுவாக விளம்பரம் இல்லாமலேயே செயல்பட்டு வந்துள்ளது. எமர்ஜென்ஸியின் [1975-1977] போது[1], பலர் சிறையில் அடைக்கப் பட்டனர். அப்பாவி இளைஞர்கள், முதியோர் பலர் சிரையில் அடைக்கப் பட்டனர். இதனால் அவர்களது வாழ்க்கையே பாழாகியது[2]. இதனால், பலர் அவ்வியக்கத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளவே பயந்தனர், பிறகு ஒரு வழியாக, வளர ஆரம்பிக்கும் போது, திராவிட கட்சிகளில் ஆதரவினால், இஸ்லாமிய தீவிரவாதம் தமிழகத்தில் வளர ஆரம்பித்தது. சென்னையில் உள்ள தமிழக ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க அலுவலகத்தில் 08—08-1993 அன்று குண்டுவெடிப்பை நடத்தினர். குண்டு வெடிப்பில் 11 பேர் இறந்தனர் மற்றும் 7 பேர் காயமுற்றனர்[3]. இதனாலும், ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் பயந்தனர். இத்தகைய காரணங்களினால், நடுவில், ஒரு நிலையில் தான், தம்மை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளாமல் இருக்க வேண்டியதாயிற்று. இருப்பினும், அவர்கள் தங்களது சேவைகளைத் தொடர்ந்து செய்து வந்தனர். நிச்சயமாக, அவர்களது சேவையை பாராட்டவே வேண்டும். ஆயிரக்கணக்கானவர், ஏன் லட்சக்கணக்கானவர் ஆர்.எஸ்.எஸ், ஆர்.எஸ்.எஸ்-ஆதரவாளவர், ஆர்.எஸ்.எஸ்-அபிமானி, என்றெல்லாம் இருந்து செயல்பட்டு, பாராட்டிக் கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஊடகங்கள் அதற்கு எதிர்மறையான விளம்பரம், பிரச்சாரம், தாக்குதல் முதலியவற்றைச் செய்து வருகின்றன.

1993- killed in RSS office bomb blast

அம்பேத்கருக்கு அடுத்து, பெரியாரைப் பிடித்துக் கொண்டது: சமீபகாலத்தில், பாஜக அரசியல் ரீதியில் வளர்ந்து வரும் வேளையில், தென்னகத்தில் உள்ள மாநிலங்களில், வெவ்வேறு முறைகளில் அணுக வேண்டியதுள்ளது. பொருளாதார ரீதியில், ஒரிஸா, ஆந்திரா, தெலிங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு முதலிய பலபிரச்சினைகள் இருந்தாலும், சமூகப் பிரச்சினைகள் அவற்றை அரசியலாக்கி விட்டது. எஸ்சி-எஸ்டி மக்களை கவருவதற்காக, அம்பேத்கரை வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்வது தொடர்ந்து வருகிறது. கர்நாடக பரிசோதனை தோல்வியடைந்த நிலையில், தமிழகத்தில், “பெரியாரை” வைத்துக் கொண்டு, தமிழ், திராவிட உணர்ச்சிகளை எழுப்பி, சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறது. தமிழகத்தில் அரசியல் ரீதியில் செல்வாக்குப் பெற்றுவிட்டால், ஒரிஸா, ஆந்திரா, தெலிங்கானா, பிரச்சினைகளை சமாளித்து விடலாம் என்று நினைக்கிறது.

RSS periyar, DC 17-05-2018

 

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கான நான்கு நாள் மாநாடு நடந்ததுமே 2018: சென்னை, அம்பத்தூரில் உள்ள ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கான நான்கு நாள் மாநாடு நடந்தது[4]. 20 நாட்களாக இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 310 பேர் கலந்து கொண்டனர்[5]. இந்த பயிற்சி வகுப்பை அகில ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் மன்மோகன் வைத்யா பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்[6]. அப்போது தமிழக ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் நரசிம்மன் உடன் இருந்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு[7]:

கேள்வி:- தமிழகத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் எத்தனை பேர் கலந்து கொள்கின்றனர்? இவர்களுக்கு எந்தமாதிரியான பயிற்சி அளிக்கப்படுகிறது?

பதில்:- சென்னையில் நடைபெறும் 20 நாள் பயிற்சி முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த 40 வயதுக்கு மேற்பட்ட 310 பேர் கலந்து கொண்டு உள்ளனர். இவர்களுக்கு இந்திய வரலாறு, நம்முடைய கலாசாரம், பண்பாடுகள், பாரம்பரிய இந்து தர்மம், சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் தியாகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதவிர பழனி, கள்ளக்குறிச்சி, திருப்பூரில் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

RSS periyar, DC cutting, 17-05-2018

பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது: கேள்வி-பதில் தொடர்கிறது.

 கேள்வி:- இதுபோன்ற முகாம்கள் நடத்தி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கால் ஊன்ற பார்க்கிறதா?

பதில்:- தமிழ்நாட்டில் திராவிடத்தின் நிலையால் இருந்த தடங்கல்களை பெரிய அளவில் நாங்கள் பொருட்படுத்தவில்லை. பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது. அவருடைய கொள்கையான ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி சமத்துவத்தை கடைப்பிடிப்பது, ஜாதி, மதம் கிடையாது போன்றவற்றை நாங்களும் கடைப்பிடிக்கிறோம். எங்களுக்குள் வேறுபாடு கிடையாது. பிற மாநிலங்களை போல தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ்.க்கு பெரிய ஆதரவு கிடைக்கும் என்பதுடன், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பலம் பொருந்திய இயக்கமாக மாறும் என்றும் நம்புகிறோம்.

கேள்வி: தமிழகத்தில் எவ்வளவு கிளைகளுடன் ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது?

பதில்:- தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற முடியாது என்று பலர் பேசுகிறார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ். கால் மட்டுமல்ல, ஆழமாக வேரூன்றி வெகு காலமாகிவிட்டது. குறிப்பாக தமிழகத்தில் தாலுகா அளவில் 1,788 கிளைகளை தொடங்கி சமுதாயப்பணி ஆற்றி வருகிறது. நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகள் உள்ளன.

கேள்வி:- இளைஞர்கள் எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் உள்ளனர்?

பதில்:- ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் நடத்தப்படும் பயிற்சி முகாம்களில் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

DK response to Vaidya 19-05-2018

வீரமணி, வைத்யா கருத்தை எதிர்த்தது: இதில் “பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது. அவருடைய கொள்கையான ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி சமத்துவத்தை கடைப்பிடிப்பது, ஜாதி, மதம் கிடையாது போன்றவற்றை நாங்களும் கடைப்பிடிக்கிறோம். எங்களுக்குள் வேறுபாடு கிடையாது” என்றெல்லாம் வைத்யா சொன்னது சர்ச்சைக்கு உட்பட்டதாகியது. வைத்யாவிற்கு பதிலாக, வீரமணி கூறியுள்ளது[8], “அம்மா ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதியளிக்கப்பட்டதா? இப்பொழுது எப்படி அனுமதி கிடைக்கிறது? ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் கைப்பாவையாக .தி.மு.. அரசு செயல்படலாமா? தமிழ்நாட்டில் கால் பதிப்போம் என்கிறார்கள். பல இடங்களில் பயிற்சி முகாம்களை நடத்திக் கொண்டுள்ளனர்[9]. இங்கே தஞ்சையையடுத்த ஒரு பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடந்துள்ளதுஅகில இந்திய தலைவர் மோகன் பாகவத் வந்து பல நாள் தங்கியுள்ளார்வெளியில் தெரியவே தெரியாது[10]. அம்பத்தூரில் தனியார்ப் பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடந்துள்ளது. ஆர்.எஸ்.எஸின் அகில இந்திய பொறுப்பாளர் மன்மோகன் வைத்யா என்பவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

© வேதபிரகாஷ்

20-05-2018

DK response to Vaidya 19-05-2018- Viduthalai

[1] The ” Emergency” refers to a 21-month period from 1975 to 1977 when Prime Minister Indira Gandhi had a state of emergency declared across the country.

[2] பெற்றோர் சோகத்தில் இறந்தது, திருமணங்கள் முறிந்தது, முதியோர் கஷ்டப்பட்டது…., சிறையில் குற்றவாலிகளுடன் அடைக்கப் பட்டு துன்புருத்தப் பட்டது என்று…..பல உண்மைகதைகள் உள்ளன.

[3] இது சம்பந்தமாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 18 பேர் மீது தற்போது இல்லாத தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றம் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை இரத்து செய்து விடுவித்தது.

[4] The Hindu, RSS leader to attend camp in Chennai, STAFF REPORTER, CHENNAI, MAY 18, 2018 00:00 IST; UPDATED: MAY 18, 2018 03:40 IST.

[5] Rashtriya Swayamsevak Sangh’s national joint general secretary Manmohan Vaidya is attending four days of a 20-day camp for volunteers of the organisation being held in the city. In all, 310 volunteers from five southern States and Puducherry are participating in the camp at G.K. Shetty Vivekananda Vidyalaya in Ambattur.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rss-leader-to-attend-camp-in-chennai/article23920143.ece

[6] தினத்தந்தி, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பலம் பொருந்திய இயக்கமாக மாறும்அகில இந்திய இணை பொதுச்செயலாளர் பேட்டி, மே 19, 2018, 03:59 AM

[7] https://www.dailythanthi.com/News/State/2018/05/19035944/In-TamilNadu-RSS-Become-a-dynamic-movement-All-India.vpf

[8] விடுதலை, ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே! எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்!, சனி, 19 மே 2018 15:07

[9] சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடந்ததை குறிப்பிடுவது தெரிகிறது.

[10] ஊடகங்களில் செய்திகள் தாராளமாக வந்துள்ளன. ஊர்வலங்களும் நடந்துள்ளன.

லெனின் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை திறப்பு, பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு, அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு! (2)

மார்ச் 7, 2018

லெனின் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை திறப்பு, பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு, அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு! (2)

H raja comments and removal

பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு: இருப்பினும் ராஜா பெயரில் அத்தகைய அறிவிப்பு வெளிவந்ததும், தேசிய அரசிலை கவனித்து வரும் திராவிடக் கட்சிகள் அதிர்ந்து விட்டன. நீர்த்து விட்ட கம்யூனிஸத்தை ஆதரிக்கவும் அவர்களுக்கு மனமில்லை. ஏனெனில், கூட்டணி பேரத்தில் நஷ்டம் வரும். ஆகவே, நக்கீரன் கோபால் அப்பணியை செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது. பெரியார் சிலையை உடைப்போம் என தெரிவித்த எச்.ராஜாவை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை என்பது நாடறிந்தது என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்[1]. நக்கீரன், ஒரு முஸ்லிம் மூலமாக, கம்யூனிஸத்தை ஆதரிப்பது போல ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளது செயற்கையாக உள்ளது[2]. எந்த துலுக்கனும், கம்யூனிஸத்தை ஆதடிக்க மாட்டான் என்பதையும், சிலை வைப்பு, திறப்பு முதலியவற்றை அடியோடு எதிர்ப்பான் என்பதும் தெரிந்த விசயம் தான். இருப்பினும், கோபால் செய்வது, திமுகவின் ஆதரவு இருப்பது வெளிப்படுகிறது. அதாவது, திராவிட கட்சிகள், தலைவர்கள், சித்தாந்திகள் சஞ்சலத்தில் உள்ளனர் என்று தெரிகிறது.

Stalin, DK, Vaiko against Raja

திராவிட கட்சி தலைவர்களின் வீராப்பு: திக, திமுக தலைவர்கள் ஆக்ரோஷமாக அறிக்கை விட்டதாக, ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆட்சிக்கு வரும்வரை காத்திருக்காமல் தைரியம் இருந்தால் பெரியார் சிலையை உடைத்துப் பாருங்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் கருத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[3]. “ஆட்சிக்கு வரும்வரை காத்திருக்காமல்………………….” என்றது, ஆட்சிக்கு வந்துவிடும் என்று ஒப்புக் கொண்டால் போலிருக்கிறது! எச். ராஜா மீது வழக்கு பதிய வேண்டும் என்று சுப. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்[4]. எச். ராஜாவின் பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியதாவது: “திரிபுராவில் ஆட்சிக்கு வந்த உடனேயே காளித்தனங்களை செய்கிறார்கள், தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இப்படி பேசக்கூடிய துணிச்சல் வந்திருக்கிறது என்றால் அதை அவர்கள் உடைக்கட்டும், அதனை வரவேற்கிறோம்”. பிறகு, அஞ்சுவது, மிரட்டுவது என்றேல்லாம் ஏன் என்று தெரியவில்லையே?

Vaiko balances verbal violence

அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு!: ஈரோட்டில் ம.தி.மு.க-வின் 26 வது மாநிலப் பொதுக்குழுவில் இருந்த வைகோவுக்கு இந்தத் தகவல் கிடைக்க மிகவும் ஆக்ரோஷமானார். நிர்வாகி ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருக்க, அவரை இடைமறித்து மைக்பிடித்த வைகோ[5], “பெரியார் சிலையை உடைப்பேன்னு ஒருவர் சொல்லியிருக்கார். அவருக்கு நான் சவால் விடுக்கிறேன். தமிழ்நாட்டுல எந்தப் பகுதியில வேணும்னாலும் வச்சிக்கலாம். தைரியம் இருந்தால் சிலை உடைக்க நாள் குறிச்சிட்டு வாங்க. அப்படி வர்றவங்களோட கை, கால் துண்டாக்கப்படும். இந்தக் கை அரிவாள் பிடித்த கை. மோடியின் முப்படையும் வந்தாலும் அதை சந்திக்க நான் தயார்,” என ஆக்ரோஷமாகப் பேசிவிட்டு அமர்ந்தார்[6]. “ஹெச். ராஜா மட்டுமல்ல, அவருடைய பாட்டன் வந்தாலும் பெரியாரின் சிலையை ஒன்றும் செய்ய முடியாது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருக்கிறார். பெரியார் குறித்த ஹெச். ராஜாவின் கருத்து, அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் பா.ஜ.கவின் கருத்து அல்ல என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, “ஹெச்.ராஜா தனது புத்தியை இழந்துவிட்டார்” என தெரிவித்துள்ளார். “எச்சை” என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது. என்ன ஒரு பெண்மணி இப்படி பேசலாமா என்று கேட்டால், டுவிட்டரில் அவரது பதிவுகள், இதை விட மோசமக இருக்கின்றன.

Raja disturbed the DK cadre

சிலை கலாச்சாரம் திராவிடத்திற்கு அடிப்படையானது: நாத்திக கொள்கைகளை பின்பற்றி வரும் திராவிட சித்தாந்திகள் இந்துமதத்தை எதிர்த்து வருவதால், கடவுளர்களின் உருவங்கள், சித்திரங்கள் முதலியவற்றை எதிர்த்து வந்தனர். தாவது உருவச்சிலையை எதிர்ப்பது உடைப்பது என்பது, மூடநம்பிக்கையை எதிர்ப்பது என்ற விதத்தில் செய்து வந்தனர். சிலைகளை எதிர்த்துக் கொண்டே, சிலைகளை ராமசாமி நாயக்கர், விநாயகர் சிலை உடைத்து, வழக்குகளில் சிக்கியுள்ளார். உச்சநீதி மன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். அதே நேரத்தில், திராவிட கழகங்களுக்கு ஒன்றும் சிலை வைப்பது, உடைப்பது புதியதல்ல என்ற நிலையும் உருவாயிற்று. 1968ல் உலக தமிழ்நாடு பெயரில், மெரினா கடற்கரையில் சிலைகளை திமுக வைத்தது. அதே காலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தினர். சிலைகளுக்குப் பிறகு, திமுக சமாதியும் கட்ட ஆரம்பித்தது. இவ்விரு திராவிட சம்பிரதாயங்கள் இன்று வரை தொடந்து வருகின்றது. கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொண்டார். ஆனால், 1987ல் எம்ஜிஆர் இறந்த போது, அது உடைத்தெரியப் பட்டது! ஆனால், எம்ஜிஆர் இறந்த பிறகு, அவருக்கும் சிலைகள் வைக்கப்பட்டன.

Why Dravida ideologists oppose and support statues

சிலைகள் அதிகமானது, விழாக்களும் அதிகமானது: அம்பேத்கரைப் பற்றி முதலில் திராவிட சித்தாந்திகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஜாதிய அரசியலை நிலைப் படுத்த, அம்பேத்கர் சிலைகளை வைத்து அவற்றை சின்னமாக்கியது திராவிட-அம்பேத்கர் போலி சித்தாந்திகள் தாம். அம்பேத்கர் என்ன தமிழரா, அவர் சிலை ஏன் தமிழகத்தில் வைக்க வேண்டும் போன்ற கேள்விகள் ஆரம்பத்தில் எழுப்பப் பட்டாலும், ஓட்டு வங்கி அரசியலில், அவையெல்லாம் நீர்க்கப் பட்டன, சமரசம் செய்து கொள்ளப்பட்டன.  முத்துராமலிங்கத் தேவர் சிலை வைத்தது, சிலைப்பு-போட்டியை அதிகமாக்கியது. அது முதல், இருவருக்கும் மாற்றி-மாறி மாலை போட்டு, கும்பிடுவது என்பது திராவிர அரசியல் கலாச்சாரத்திற்கு ஆண்டிற்கு ஒருமுறை கட்டாயமாக்கப் பட்டது. இந்த சடங்கில் பெரியார் சிலையும் சேர்ந்தது. கண்ணகி சிலை வைத்தும் அரசியல் செய்தது கருணாநிதி தான்! திராவிட ஆட்சியில் தான் கோடிக்கணக்கான மதிப்புள்ள சிலைகளும் கோவில்களிலிருந்து கடத்தப் பட்டன. அந்நிலையில், இப்பொழுது, பெரியார் சிலை விவகாரத்தை பெரிது படுத்துவது வியப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

07-03-2018

vck-Thevar statue-attacked

[1] நக்கீரன், பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை என்பது நாடறிந்ததுதமிமுன் அன்சாரி கடும் தாக்கு, வே.ராஜவேல், Published on 06/03/2018 (13:59) | Edited on 06/03/2018 (14:00).

[2] http://www.nakkheeran.in/special-articles/special-article/bjp-has-no-courage-thamimun-ansari

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தில் இருந்தால் பெரியார் சிலையை உடைத்துப் பாருங்கள்வீரமணி, சுப.வீ சவால்!, Posted By: Gajalakshmi Published: Tuesday, March 6, 2018, 12:48 [IST]

[4] https://tamil.oneindia.com/news/tamilnadu/veeramani-suba-veerapandiyan-condemns-h-raja-s-post-periyar-313439.html

[5] விகடன், நாள் குறிச்சிட்டு வாங்க ஹெச்.ராஜா’’ – பகிரங்கமாக எச்சரித்த வைகோ!, Posted Date : 15:37 (06/03/2018); Last updated : 17:35 (06/03/2018)

[6] https://www.vikatan.com/news/tamilnadu/118401-vaiko-warns-hraja.html

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

செப்ரெம்பர் 11, 2010

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ராமசாமி நாயக்கர் பிள்ளையார் உடைப்பு 1956

ராமசாமி நாயக்கர் பிள்ளையார் உடைப்பு 1953

ஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்:  ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்!

Equivalent citations: 1958 AIR 1032, 1959 SCR 1211

Bench: Sinha, B P.

PETITIONER:

S. VEERABADRAN CHETTIAR

Vs.

RESPONDENT:

E. V. RAMASWAMI NAICKER & OTHERS

DATE OF JUDGMENT:

25/08/1958

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

IMAM, SYED JAFFER

WANCHOO, K.N.

CITATION:

1958 AIR 1032 1959 SCR 1211

ACT:

Insult to Religion-Ingredients of offence–Interpretation of statute-Duty of Court-Indian Penal Code (Act XLV of 1860), s. 295.

Idol breaker, iconoclast became an idol to be protected

Idol breaker, iconoclast became an idol to be protected

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம்! இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. கோர்ட் சொல்வது “No one appeared for the respondents”! பிரதிவாதிகளின் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை! மற்றொரு இடத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “It is regrettable that the respondents have remained ex parts in this Court.”!! “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்தது வருத்ததிற்கு உகந்தது”, என்று சொல்வது உச்சநீதி மன்றத்தின் நீதிபதி!

EVR statue at Vaikam 31-01-1994

EVR statue at Vaikam 31-01-1994

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் பிள்ளையார் விக்கிரகத்தை உடைத்தது, வழக்குப் போடப்பட்டது: எஸ். வீரபத்ரன் செட்டியார் என்பவர் இந்துமதத்திற்கு எதிராக பேசியும் எழுதிதியும் வருவதாக ராமசாமி நாயக்கர் மற்ற மூன்று நபர்கள் மீது ஜூன் 5, 1953 அன்று புகார் கொடுத்தார். அதுமட்டுமல்லாது மே 27, 1953 அன்று திருச்சி டவுன்ஹாலில் பிள்ளையார் சிலையை உடைப்பதாக சொல்லியிருப்பதால், சைவப்பிரிவைச் சேர்ந்த இந்து சமூகத்தினரது மனங்களில் பீதி, வருத்தம் மற்றும் உணர்ச்சிகள் கிளம்பியுள்ளன. அதுமட்டுமல்லாது, அன்று மாலை 5.30 அளவில் டவுன்ஹால் மைதானத்தில் ஒரு விக்கிரத்தை உடைத்து, அவதூறாக பேசியும் உள்ளார் என்று புகாரில் சொல்லப்பட்டது. இவ்வாறு பேசியது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 295 மற்றும் 295ஆ கீழ், மத உணர்வுகளைப் புண்படும் வகையில் உள்ளது என்ரு சொல்லப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் சர்கிள் இன்ஸ்பெக்டரை குற்றவியல் நடத்தை விதி பிரிவு 202ன் கீழ் விசாரிக்க ஆணையிட்டார். ஜூன் 26, 1953 அன்று, அறிக்கைக் கொடுக்க மாஜிஸ்டிரேட், “மண்ணால் செய்யப்பட்ட கணேசனுடைய விக்கிரம் புனிதமானதாகாது. அது கணேசனுடையது போன்று இருப்பதனால் அது புனிதமான வஸ்து ஆகாது. மக்களால் விடப்படுகின்ற விக்கிரங்கள் வழிபாட்டிற்கு ஆகாது. ஏனெனில் அத்தகைய விக்கிரங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆகவே ஒரு மனிதன் அத்தகைய விடப்பட்ட விக்கிரத்துடன் மோதினால் குற்றாமாக்சது. ஆகையால் இது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295 கீழ் குற்றாமாகாது”

செட்டியாரை அலையவிட்ட நயக்கருக்கு சாதகமான கீழ் கோர்ட்டார்: “குற்றஞ்ச்சாட்டப் பட்டவர் வேண்டுமென்றே, கெட்ட எண்ணத்துடன் மத உணர்வுகளைப் புண்படும் வகையில் பேசியிருந்தால், சந்தேகமில்லாமல், அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான்.  ஆனால், அத்தகைய புகார் கொடுக்க வேண்டுமானால், அரசாங்கத்தின் அனுமதி தேவைப் படுகிறது. அத்தகைய தகுந்த அனுமதி இல்லாததனால், இதற்கு மேல் இவ்வழக்கில் குற்றவியல் நடத்தை விதி பிரிவு 203ன் கீழ் தொடர ஆதாரம் இல்லை என்ற காரணத்தால் நிராகரிக்கிறேன்”

இதனால் வீரபத்ரன் செட்டியார், தனது புகாரை செஸன்ஸ் கோர்டிற்கு ஜூலை 9, 1953 அன்று எடுத்துச் செல்கிறார். ஆனால், ஜனவரி 12, 1954 அன்று நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்கிறார், “மாஜிஸ்ட்ரேட் சொல்லியபடியே, அத்தகைய நடத்தைகள் குற்றாமாகாது என்று ஒப்புக்க் கொள்கிறேன். குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு பொதுகூட்டத்தை ஏற்பாடு செய்து, உருவ வழிபாட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து, மண்ணல் செய்யப் பட்ட கடவுள் கணேசனுடைய உருவத்தை உடைத்துள்ளார். அந்த உருவம் குற்றஞ்சாட்டப்பட்டவருடைய சொந்தப் பொருளாகும், ஆகையால் அது மற்றவர்களால் புனிதமாகக் கருதப்படும் பொருளாகாது. அதே மாதிரி, நானும், ஒரு நம்பிக்கையில்லாதவன், இம்மாதிரி நம்பிக்கையுள்ளவனை புண்படுத்த முடியும்ன் என்று நினைக்கவில்லை. ஆகையால் அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான் என பெய்பிக்க வேண்டிய கூறுகளுக்கு ஏற்றபடி இல்லை”.

இதனால், செட்டியார் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இங்கேயும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் மீது குற்றத்தை மெய்ப்பிக்க போதியா ஆதாரங்கள் காட்டப்படவில்லை, என்று சில வழக்கு உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டினார்.

(1) (1887) I.L.R. 10 All. 150.

(2) (1890) I.L.R. 117 Cal. 852.

உயர்நீதி மன்ற நீதிபதியும் அலைய விட்டார்; செட்டியார் இதற்கு எதிராக அப்பீல் / முறையீடு செய்ய தேவையான சான்றிதழ் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார். ஆனால், இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு Art. 134(1)(c) கீழ், மேல்முறையீடு செல்வதற்கான வழக்கு இல்லை என்று மறுத்து விட்டார். ஆகையால், அவர் மறுபடியும் நீதிமன்றத்திற்கு சென்று, தேவையான அனுமதி பெற்றார். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்தது வருத்ததிற்கு உகந்தது [It is regrettable that the respondents have remained ex parts in this Court.].

தீர்ப்பில் பதிவாகியுள்ள உச்சநீதி மன்றத்தின் கருத்து: இந்த வழக்கில், புண்படுத்தக்கூடிய செயல் நடந்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்னவென்றால், கடவுள் கணேசனுடைய உருவத்தை உடைத்துள்ளார்கள் என்பதாகும். அத்தாட்சி என்பதைவிட, இந்துக்களுக்கு கணேசனுடைய உருவம் அல்லது அம்மாதிரி, வழிபடுவதற்கு என்று ஸ்தாபிக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் புனிதமானது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கீழ்கோர்ட்டின் நீதிபதிகள் நிச்சயமாக சரத்தில் உள்ள வார்த்தைகளுக்கு மிகவும் குறுகிய அர்த்ததைக் கொண்டு அதற்கேற்றபடியான விளக்கத்தை அளித்துள்ளனர். அதாவது கோவிலில் உள்ள விக்கிரங்கள் அல்லது ஊர்வலத்தில், விழாக்களில் எடுத்துச் செல்லப்படகுடியவைதான், இந்த விளக்கத்தில் வரும் என்பது போல பொருள் கொண்டுள்ளர்கள். அத்தகைய குறுகிய விளக்கம் அளிக்க அச்சரத்தில், அத்தகைய வரையரைகள் கொடுக்கப்படவில்லை. ஆகையால், மெத்தப்படித்த நீதிபதி அத்தகைய தவறான வேலையில் பொருட்கொண்டுள்ளார்.

பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவற்றை எரித்தால் என்னாகும்? புனிதமான புத்தகம், பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவையெல்லாம் இந்த வார்த்தைகளில் வரும். ஆக கீழ் கோர்ட்டாரின் திரிபுவாத விளக்கத்தின்படி பார்த்தால் அல்லது அவர்கள் சொன்னது சரியென்றால், அத்தகைய புனித நூல்களை அவமதிப்பு செய்தால், சேதப்படுத்தினால் அல்லது எரித்தால் இந்த சட்டப் பிரிவிலிலேயே வராது என்றாகும். ஆனால், எங்களுடைய கருத்தின்படி, அத்தகைய குறுகிய விளக்கம் மற்றும் அந்த வார்த்தைகளுக்கு அத்தகைய விளக்கத்தை வலியப் பெறுவது ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லா சட்டமுறைகளும் விரோதமானது ஆகும்.

புனிதமான எந்த வஸ்துவும் அவமதிக்கப்படக்கூடாது, சேதப்படக்கூடாது: எந்த வஸ்து, எவ்வளவு அற்பமேயாகிலும் அல்லது விலையில் மிகவும் குறைவானதாக இருந்தாலும், மற்றவர் அது புனிதமானது என்று மதித்தால், இந்த சட்டப்பிரிவில் வரும். அவமதிப்பவர்களை சட்டம் கவனித்துக் கொள்ளும். ஆகையால் அந்த புனிதமானதாக மதிக்கப்படும் வஸ்து, வழிபாட்டிற்குட்பட்டிருக்க வேண்டும் என்ற நிலை தேவையில்லை. ஆகையால் கீழ் கோர்ட்டார்கள் பலத்ரப்பட்ட மக்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்காமல், விஷயத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கொடுத்த புகாரை அணுகியுள்ளர்கள். இந்த பிரிவானது பலதரப்பட்ட மத நம்பிக்கையாளர்களின்  மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்க ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகும். ஆகவே, கோர்ட்டாரே அத்தகைய நம்பிக்கைகளை ஏற்கிறார்களோ இல்லையோ, இத்தகைய விஷயங்களில் மற்றவர்களின் உணர்ச்சிகளை நம்பிக்கைகளை நிச்சயமாக மதிக்க வேண்டும். அத்தகைய விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பெரியார் செய்தது மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது: அகையால், நிச்சயமசக கீழ் கோர்ட்டார்கள் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295ல் உள்ள முக்கியமான வார்த்தைகளை தவறாகத்தான் விளக்கஙம் கொடுத்துள்ளார்கள். இருப்பினும் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டபடியினால், கீழ் கோர்ர்ட்டாருடன் மாறுபட்டாலும், வழக்கின் புகாரை விசாரிக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நடத்தை உண்மையானால், மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது, இருப்பினும், இவ்வழக்கு காலந்தாழ்ந்து விட்டபடியால், விசாரிக்க ஆணையிடவில்லை. இருப்பினும் மறுபடியும் அத்தகைய முட்டாள்தனமன நடத்தை சமூகத்தின் எந்த பிரிவினராவது செய்ய முற்பட்டால், நிச்சயமாக சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்படித்த அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதார்கு சட்டப்பிரிவுகள் பொறுந்தும் என்று நாங்கள் விளக்கம் கொடுத்துள்ளோம். அதன்படியே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை கடுமையாக விமர்சித்ததற்காக ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? உச்சநீதி மன்றம் இவ்வாறு கடுமையாக ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை விமர்சனம் செய்ததற்கு, திட்டியதற்கு மேல்முறையீடு செய்யவில்லையே? அப்படியென்றால், “மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது”, என்றதை ஒப்புக்க்கொள்கிறார்களா? இன்றைக்கு திகவினர், பகுத்தறிவு புல்லர்கள், நாத்திக நொண்டிகள், உண்மைகளை மறைத்து எப்படி பொய்களைப் பரப்புகின்றனர் என்பதனை, இந்த உச்சநீதி மன்ற தீர்ப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

வேதபிரகாஷ்

11-09-2010