Posts Tagged ‘பேரொளி’

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி!

பிப்ரவரி 28, 2013

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி!

விஷமத்தனமான பிரச்சாரம்: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாடும் சாக்கில் யார்-யாரோ அவரைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். கிருத்துவர்கள் அவர் ஏதோ ஏசுவை ஏற்றுக் கொண்டது போல பிட் நோட்டிசுகள் விடுகின்றனர், கிறிஸ்தவர்கள் அவர் கிருஸ்துவை ஏற்றுக் கொண்டதை போல பொய் பிரச்சாரம் செய்கின்றனர்[1]. அதுபோல நமது கருணாநிதியும் இப்படித்தான் 2008ல் பேசினார்[2]. இன்று திமுகவிற்குப் பிறகு, அதிமுக பதவிக்கு வந்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா விழாவில் பங்கு கொண்டு பேசியுள்ளார்[3]. “அண்ணா நாமம் வாழ்க, பெரியார் நாமம் வாழ்க” என்பவர், சுவாமி விவேகானந்தர், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி! 2008ல் பேசியதை இப்பொழுது ஏன் ஞாபகத்தில் கொண்டு வரவேண் டும் என்று கேட்கலாம். ஆனால், இதை வைத்துக் கொண்டுதான், 2013லும் கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று பார்க்கும் போது விவகாரம் புரிகின்றது. கருணாநிதியின் நக்கலான பேச்சை படிக்கவும்:

 

விவேகானந்தர்புகைபிடிப்பார்[4]: நீங்கள் சாமியாரிடத்திலே மோத விட்டாலும், மாமியாரிடத்திலே மோத விட்டாலும் நாங்கள் யாரும் அவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை. கட்டிடத்தைத்தான் எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச்சு என்று கேட்பீர்கள். விவேகானந்தரைப் பற்றி தலைவர்கள் பேசிக் கேட்க வேண்டும் என்ற ஆசையாலும், விவேகானந்தரைப் பற்றி பேசி அதிக நாளாகி விட்டது என்பதாலும்தான். மூட நம்பிக்கைகளை சாய்த்தவர் விவேகானந்தர். மத வெறி, ஜாதி வெறியைச் சாய்த்தவர். அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர். அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். மனம் சுத்தமாக இருந்தால் இவை எல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல்பட்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள்.

கருணாநிதியைத் தொடர்ந்து வீரமணியின் விஷமத்தனம்: ஆக பகுத்தறிவாளிகள், பெரியார் தாசர்கள் என்ற போர்வையில் இப்படியும் தூசிக்கலாம், தூஷணம் செய்யலாம், அதனை சந்தோஷமாக கிருத்துவர்கள் எடுத்தாளலாம் என்று தான் எடுத்துக் காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு “விடுதலை”யில் இதைப் பற்றி வெளிவந்துள்ளவை:

… எந்த வழியிலாவது காட்டவேண்டும் என்கிற கோபம் இயல்பானதே! ####### விவேகானந்தர் ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி என்ற பெயரில் இந்துத்துவா சக்திகள் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ளன. …

… வெளிப்படுத்து வார்கள். விவேகானந்தரின் அறிவுரைகள் என்ற நூல் சென்னை மயிலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தினால் 2008இல் வெளியடப்பட்டுள்ளது. நூலின் 83ஆம் பக்கத்தில்விவேகானந்தர் பின்வரும் இந்து …

சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர்150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு  மட்டும் …

… விவேகானந்தர்   ரதம் செல்லுகிறதாம் – அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவே கானந்தர் முற்போக்குப் பேசினார் – இளை ஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள். …

3.2.13 பிற்பகல் 11.00 மணி அளவில், தென் சென்னை மாவட்டத்தின் திருவல்லிக்கேணி  நீலம் பாசா தர்கா பகுதியில் அன்னி பெசன்ட் சாலை விவேகானந்தர் இல்லம் பின்புறம் திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் …

… மதத்திற்கு மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறதாம்.வெளியிடப்பட்டுள்ள பேச்சு முழுவதும் விவேகானந்தர்இயேசுவைப் போற்றிப் பேசுவதாக உள்ளதாம்.  ராம கிருஷ்ணா மடம் சார்பில் வெளியிடப்பட் டதைத்தானே எடுத்து போட்டிருக்கிறார்கள்? …

… நாத்திகன் என்று முழங்கினார் விவேகானந்தர். தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில்தான் லட்சியம் இருக்கும். லட்சியம் – இருக்கும்போது அங்கே வளர்ச்சி நிச்சயமாக இருக்கும். (நம்பு தம்பி நம்மால் முடியும், ஆகஸ்டு 2008) …

விவேகானந்தரின் 150ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்தவர் சுவாமி விவேகானந்தர் என்று பெருமையாகப் பேசுவார்கள். பல பேர் நினைத்துக் கொண்டு …

…  அதே நேரத்தில் சென்னைக் கடற்கரை சாலை என்ற மிக முக்கியமான பகுதியில் உள்ள விவேகானந்தர்இல்லத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாரிக் கொடுப்பதும் இந்த அரசுதான். திருவள்ளுவர் என்றால் உதாசீனம் -விவேகானந்தர் …

… அனைத்து மாநில அரசுகளும், பள்ளிப் பாடத்திட்டத்தில், நாராயண குரு, ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மிக தத்துவவாதிகளின் போதனை களைப் பாடமாக இணைக்க வேண்டும் – இவ்வாறு அவர் பேசியுள்ளார். …

இப்படி நாத்திகர்கள், கிருத்துவர்கள், பகுத்தறிவுவாதிகள், கிறிஸ்தவர்கள் முதலியோர் எப்படி, ஏன், எதற்காக சொல்லி வைத்தால் போல இப்படி ஒரே நேரத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

 

செய்திகளைப் பரப்புகிறார்கள், இணைதளத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

பிறகு இவற்றைத் தொகுத்து புத்தகம் வெளியிடலாம், ஆராய்ச்சிக் கட்டுரை போர்வையில் கருத்தரங்கங்களில் படிக்கப்படலாம்.

கிருத்துவ இலக்கியக் கழகம், ஏன் திராவிடர் கழகமே வெளியிடலாம்.

© வேதபிரகாஷ்

28-02-2013


[4] ஏப்ரல். 25, 2008 , தினத்தந்தியில், முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது என்று வெளியிடப்பட்டது.

சுவாமி விவேகானந்தர் – ஶ்ரீ ராமகிருஷ்ண மடம்: கருணாநிதி, ஜெயலலிதா – திராவிடகட்சிகளின் வேடங்கள்!

பிப்ரவரி 27, 2013

சுவாமி விவேகானந்தர் – ஶ்ரீ ராககிருஷ்ண மடம்: கருணாநிதி, ஜெயலலிதா – திராவிடகட்சிகளின் வேடங்கள் திராவிடத்துவத்தின் அந்தர்பல்டிக்கள்:

சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர், கருணநிதி, இதே கட்டிடத்தை “செந்தமிழ்” போர்வையில் இடிக்க திட்டம் போட்டார். ஶ்ரீ ராமகிருஷ்ண மட துறவிகள் மனு கொடுத்தபோது, மிரட்டியும் பார்த்தார்[1]. அன்பழகன் என்ற எஞ்சினியர் மூலம் சொல்லி அனுப்பி, காலிசெய்யுமாறு கூறினார். குத்தகை முடிவடைகிறது என்று ஒரு தொழிலதிபர் மூலம் அறிவித்தார்[2]. பிறகு உலகம் முழுவதும் கருவிற்கு எதிராக கருத்து உருவாகவே[3], அந்தர்பல்டி அடித்து சமாளித்தார். அந்த செயலைக் கைவிட்தாக ச்டட்டசபையிலேயே அறிவித்தார்[4]. திராவிட பாரம்பரையத்தை தனகேயுரிய பொய்மாலத்தால் காத்தார். நக்கலாக, அநாகரிகமாக, ஆபாசமாக, அவதூறக பேசுவதில், எழுதுவதில் வல்லவர் கருணாநிதி. 1970ல் ஒருமாதிரி, 2007ல் ஒருமாதிரி….இப்படி மாற்றி-மாற்றி பேசுவதில் கில்லாடி!

விவேகானந்தரின் கொள்கைகளின் ஆட்சி நடத்துவதாக பொய் பேசிய கருணாநிதி: கரு அப்பொழுது பேசியதை நினைவு கூர்ந்தால், ஒவ்வொரு திராவிடப்பூனை, திராவிடக் குஞ்சு, கழகக்கண்மணி, உடன் பிறப்புகள்முதலியோகளுக்குப் பைத்தியமே பிடித்து விடும். அப்பொழுது திராவிடத்தில் ஊறிய நிலையில், ஆங்கிலத்தில் வேறு பேசியுள்ளது. இதோ அந்த பூனை பேசியதைப் பாருங்கள்:

The name `Vivekananda’ means, one who can distinguish the right from the wrong. He was noble sage who had universal vision, which ennobled everyone who came in contact with him or with teachings.“Though he is not with us today, the flame he lit is still alight and from his teachings have sprung the conscience of India and faith in her unity. And his great message manking finds solace and confidence.“The memorial stands here today will be a sentinel guarding not only our frontiers but also our cultural traditions.“Swami Vivekananda always had before him the great motto of elevation of masses. His messages are always gospels of salvation, social elevation and equality for everyone.“I am very happy to inform on this historical occasion that the Tamilnadu government is wedded to the thoughts and gospels for which Swami Vivekananda stood. “விவேகானந்தர் என்றால் சரி-தவறு எதுவென்று பிரித்துப் பார்க்கும் தன்மையுள்ளவர். அவர் ஒரு உலகளாவிய பார்வைக் கொண்ட துறவி. அதனால், யார் அவருடைய தொடர்பு ஏற்பட்டாலும் அல்லது அவரது போதனைகளை அறிந்து கொண்டாலும் அவரை நல்வழிபடுத்தியது.“இங்கு இன்று நிற்கும் இந்த நினைவு மண்டமமானது, நமது கலாச்சார எல்லைகள் மட்டுமல்லாது, நமது கலாச்சாரப் பாரம்பரியங்களையும் காக்க வல்லது.“சுவாமி விவேகானந்தர் சாமன்ய மக்களை உயர்த்தவேண்டும் என்ற சிறந்த கொள்கையைக் கொண்டிருந்தார். அவரது போதனைகள் மீட்சி, சமூக ஏற்றம் மற்றும் சமூக-சமத்துவம் முதலியவற்றைப் பற்ரிதான் இருந்தது.“இந்த சரித்துவ முக்கியத்துவம் வாய்ந்தநேரத்தில் நான் ஒன்று சொல்லிக் கொள்ளப் பெருமைப் படுகிறேன், தமிழக அரசு சுவாமி விவேகானந்தருடைய போதனைகள் மற்றும் அவர் எதற்காக நின்றாரோ அவற்றை இணைத்துக் கொண்டு செயல்படவுள்ளது”

கருணாநிதி 1970 மற்றும் 2008[5]: சமஸ்கிருதத்தை வெறுக்கும், துவேஷிக்கும், அவதூறு பேசும் கரு சமஸ்கிருத சுலோகத்தைச் சொல்லி நல்ல பெயரை வாங்கிக் கொள்ள வேடம் போட்டது தெரியுமா? “உத்திஸ்டதா ஜாக்ரதா, ப்ரபய்வர்ன் நிபோததா”(“Uthistahtha Jagrata, Prapyavarn Nibhodhata” = (Arise, Awake and stop not till the goal is reached).). ஆமாம், அப்பொழுது முலமைச்சராக இருந்தபோது, செப்டம்பர் 2, 1970 அன்று உச்சரித்தது. இதை எந்த ஆரிய பூனையோ, சங்கராச்சாரியோ, மனுதர்மவாதியோ உச்சரிக்கவில்லை. இந்த திராவிடப் பூனைத்தான் உச்சரித்தது! செத்தப்பாடையை வாசித்து வாயைக் கழுவியதா இல்லையா என்று தெரியவில்லை!

2007ல் திருநெல்வேலியில் சுவானி விவேகானந்தர் தங்கிய இடம் இடிக்கப்பட்டது[6]: திருநெல்வேலியில், சுவாமி விவேகானந்தர் வந்திருந்த போது, அங்கிருந்த இடம் / வீடு, சரித்திரத்தன்மையே இல்லாமல் அமைதியாக இடித்துத் தள்ளினார்கள். அப்பொழுது ஏதோ காரணங்களுக்காக ஶ்ரீராமகிருஷ்ண மடமே கன்டுகொள்ளமல் இருந்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால் தான் போலும், அடுத்த வருடமே, இந்த திராவிட கபடு பூனை, கடற்கரையில் இருந்த விவேகானந்தர் இல்லத்தின் மீது கண்வைத்தது! இதோ அப்பொழுது சாமியார்களை மிரட்டி பேசிய பேச்சு:

சாதுக்கள் சவால் விடக்கூடாதுகலைஞர் அறிவுரைசுவாமி விவேகானந்தரைப் பற்றி கருணநிதி பேசிய  

அவதூறுகள்!

“எனக்கு ஒரு ஆசை – விவேகானந்தரைப் பற்றி நம்முடைய தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான் எல்லோரும் பேச அது இங்கே பரவ வேண்டும், ரொம்ப நாளாகி விட்டது விவேகானந்தரைப் பற்றி பேச என்பதற்காக –

அவர் மூட நம்பிக்கைகளையெல்லாம் சாய்த்தவர் – மத வெறிக்கு ஆளாகாதவர் – ஜாதி வெறியைச் சாய்த்தவர் – அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர் என்ற காரணத்தாலும், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – இவையெல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது மனம் சுத்தமாக இருந்தால் என்று எண்ணி சீர்திருத்த நோக்கங் களோடு செயல்பட்டவர்.

அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள்[7]. பாருங்கள், இடிக்கக் கூடிய மண்டபமா அது? இடிக்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு வலுவிழந்த மண்டபமா?

இல்லை; வலுவான மண்டபம். அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை, நினைக்கவுமில்லை, அதற்காக அந்தப் பக்கம் திரும்பவுமில்லை. “அந்த மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம், முறைப்படி தான் நடக்கிறோம் என்று அந்த மடத்தினுடைய பெரிய சாமியார் கூட சவால் விட்டிருக் கிறார். நான் அந்த சவால்களுக்கெல்லாம் பயப்படவில்லை. அது வேறு விஷயம்.

ஆனால், சாதுக்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வரக் கூடாது. அது விவேகானந்தருடைய கொள்கைக்கே – அவருடைய குருநாதர் இராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களுடைய கொள்கைக்கே விரோதமானது. இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது.

குமரிமுனையிலே அவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அமைத்து, அங்கே விவேகானந்தருடைய மண்டபத்தை போஷித்துப் பாதுகாத்து வருகின்ற இந்த அரசைப் பார்த்து சவால் விடுவது நல்லதல்ல, சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தருடைய விவேகமான பொன்மொழியைப் பின்பற்றுங்கள் என்று அவர்களைக் கேட்டுக் கொண்டு இதை இடிப்பதாகவோ அல்லது பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு செல்வதாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும் என்ற உண்மையை உங்களுக்குச் சொல்லி வீணாக நாம் அலட்டிக் கொள்ள வேண்டாம், பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாம், இந்த அரசைப் பொறுத்த வரையில் நாங்கள் தேடிய வரையிலே தற்காலிகமாக எங்களுக்குக் கிடைத்திருக் கிற இடம் அதே காமராஜர் சாலையில் பாலாறு இல்லம் – அந்தப் பாலாறு இல்லத்தில், சோளிங்கநல்லூரில் எங்களுக்கு அந்தப் பெரிய கட்டிடம் அமைகின்ற வரையில் தற்காலிகமாக செம்மொழி மையம் இங்கே இடம் பெறும், செம்மொழி நிறுவனம் பாலாறு இல்லத்தில் நடைபெறும் என்பதைத் தெரிவித்து அமைகின்றேன்”.

பாலாறு இல்லத்தில் தற்காலிக செம்மொழி மையம்: விவேகானந்தர் இல்லத்தை அரசு எடுப்பதாகக் கூறுவது தவறு – கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஏப். 25, 2008 (தினத்தந்தி) – தமிழ் செம்மொழி மையத்துக்காக விவேகானந்தர் இல்லத்தை எடுக்கவில்லை என்றும் அதன் அருகே உள்ள பாலாறு இல்லத்தில் தற்காலிக மையம் இடம் பெறும் என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

சட்டசபையில்: சென்னை விவேகானந்தர் இல்லம் தொடர்பாக சட்டசபையில் பல்வேறு கட்சிகள் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. அதை தகவல் கோரும் நிகழ்வாக எடுத்துக் கொண்டு எம்.எல்.ஏ.க்கள் பேச சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதித்தார். இந்த விவகாரம் பற்றி செங்கோட்டையன் (அ.தி.மு.க.), ஞானசேகரன் (காங்கிரஸ்), ஆறுமுகம் (பா.ம.க.), கம்பம் ராமகிருஷ்ணன் (ம.தி.மு.க.), செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் பேசினார்கள். விவேகானந்தர் இல்லத்தை அரசு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று செங்கோட்டையன், ஆறுமுகம், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். இவர்களுக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

விவேகானந்தர் இல்லம்: செங்கோட்டையன், ஞானசேகரன், ஆறுமுகம், ராமகிருஷ்ணன், செல்வம் ஆகியோர் விவேகானந்தர் இல்லம் குறித்த சில கருத்துக்களை கூறினர். இதிலே வேடிக்கை என்னவென்றால், இல்லாத ஒன்றைப் பற்றி, நடக்கப் போகாத ஒன்றைப் பற்றி அவர்கள் பேசினார்கள் என்பதுதான் ஆச்சரியப் படக்கூடியது. சென்னையில் 1897-ம் ஆண்டில் 9 நாட்கள் தங்கியிருந்து விவேகானந்தர் விரிவுரைகள் செய்ததால் அதன் நினைவாக சென்னை காமராஜர் சாலையில் உள்ள 27 ஆயிரத்து 546 சதுரஅடி பரப்பளவு கொண்ட விவேகானந்தர் இல்லத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு அரசு ஒப்படைக்க வேண்டும் என்று மடத்தின் தலைவர் கேட்டார். 24.2.1997 தேதியிட்ட உயர்கல்வித் துறையின் அரசாணைபடி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்த இல்லம் முதன்முதலாக ராமகிருஷ்ண மடத்திடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது. 3 ஆண்டு காலத்திற்கு, ஆண்டொன்றுக்கு குத்தகைத் தொகை ரூ.1,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

10 ஆண்டு குத்தகை: விவேகானந்தர் இல்லத்திற்கு நுழைவு வழி இல்லை எனக் கூறியதால் அந்த இல்லத்தின் முன்னுள்ள 8 கிரவுண்ட் 1,928 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தையும் குத்தகைக்கு அளிக்கும்படி ராமகிருஷ்ண மடம் செங்கோட்டையன், ஞானசேகரன், ஆறுமுகம், ராமகிருஷ்ணன், செல்வம்கோரியது. 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த நிலத்தையும் 3 ஆண்டுகால குத்தகைக்கு ஆண்டொன்றுக்கு ஆயிரம் ரூபாய் குத்தகைத் தொகை என தி.மு.க. அரசு வழங்கியது. மேலும், இதை 30 ஆண்டுக்கு குத்தகைக்குத் தர வேண்டும் என்று கேட்டனர். அமைச்சரவைக் கூட்டத்தில்தான் அதுபற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறினேன். விவேகானந்தர் இல்லத்தின் சந்தை மதிப்பு ரூ.2 கோடிக்கும் மேல் இருப்பதால், சலுகைக் குத்தகையாக மாதம் ஒன்றுக்கு ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் குத்தகைத் தொகையாகவும், குத்தகைக் காலத்தை 10 ஆண்டுகள் என்றும் நிர்ணயம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவு 28.1.2000 தேதியிட்ட உயர்கல்வித் துறை அரசாணை மூலம் வெளியிடப்பட்டது.

ஏன் அபகரிக்க வேண்டும்?: ஏதோ விவேகானந்தர் இல்லத்திலே உள்ளவர்களுக்கும் தி.மு.க. அரசுக்கும் தகராறு என்பதைப் போல் எழுதப்படுகிறது. `விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க தி.மு.க. ஆட்சி முயற்சி என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியது. அதை ஏன் அபகரிக்க வேண்டும்? என்று எனக்குத் தெரியவில்லை. விவேகானந்தரிடத்திலே எங்களுக்கு பகை எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், பகுத்தறிவு இயக்கத்தினுடைய கருத்துக்களை, பெரியாருடைய கருத்துக்களை, அண்ணாவுடைய கருத்துக்களைப் பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர். அப்படிப்பட்ட விவேகானந்தரிடத்திலே என்ன விரோதம்?

சாமியாரிடம் தள்ளி விட்டனர்: இதுவரையில், விவேகானந்தர் இல்லம் பற்றி நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை, கடிதமும் எழுதவில்லை. செம்மொழியாகத் தமிழை ஆக்கி அதைப் பரப்ப வழிவகைகளைக் காணவும், அதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்ற `ஐம்பெருங்குழு’, `எண்பேராயம்’ போன்ற அமைப்புக்கள் செயல்படவும் ரூ.76 கோடி ஒதுக்கப்படுகிறது. அதற்கு நீங்கள் ஒரு கட்டிடம், ஒரு அமைப்பு ஆகியவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. சோளிங்கநல்லூரிலே ஒரு நிரந்தரமான கட்டிடத்தை கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. தற்காலிகமாக அரசுக்குச் சொந்தமான இடம் தேடப்பட்டது. தற்காலிக இடம் பற்றி எண்ணிய நேரத்தில் யாரோ ஏதேதோ ஒரு கதை கட்டினார்கள். அது பலிக்காத காரணத்தால் இவர்களைச் சாமியார் பக்கம் தள்ளி விடுவோம் என்று சாமியார்களிடம் மோத விடுவதற்காக சில காரியங்களிலே ஈடுபட்டிருக்கிறார்கள்.

விவேகானந்தர் புகை பிடிப்பார்: நீங்கள் சாமியாரிடத்திலே மோத விட்டாலும், மாமியாரிடத்திலே மோத விட்டாலும் நாங்கள் யாரும் அவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை. கட்டிடத்தைத்தான் எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச்சு என்று கேட்பீர்கள். விவேகானந்தரைப் பற்றி தலைவர்கள் பேசிக் கேட்க வேண்டும் என்ற ஆசையாலும், விவேகானந்தரைப் பற்றி பேசி அதிக நாளாகி விட்டது என்பதாலும்தான். மூட நம்பிக்கைகளை சாய்த்தவர் விவேகானந்தர். மத வெறி, ஜாதி வெறியைச் சாய்த்தவர். அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர். அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். மனம் சுத்தமாக இருந்தால் இவை எல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல்பட்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள்.

சாமியார் விட்ட சவால்: இடிக்கக் கூடிய மண்டபமா அது? இடிக்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு வலுவிழந்த மண்டபமா? அது வலுவான மண்டபம். அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை, நினைக்கவுமில்லை. அதற்காக அந்தப் பக்கம் திரும்பவுமில்லை. `அந்த மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம், முறைப்படி தான் நடக்கிறோம்’ என்று அந்த மடத்தினுடைய பெரிய சாமியார் சவால் விட்டிருக்கிறார். நான் அந்த சவால்களுக்கு பயப்படவில்லை. ஆனால், சாதுக்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வரக் கூடாது. அது விவேகானந்தருடைய கொள்கைக்கும், அவருடைய குருநாதர் ராமகிருஷ்ண பரமஹம்சருடைய கொள்கைக்கும் விரோதமானது.

பாலாறு இல்லத்தில் மையம்: குமரிமுனையிலே அவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அமைத்து, இங்கே விவேகானந்தருடைய மண்டபத்தை போஷித்துப் பாதுகாத்து வருகின்ற இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது? அது நல்லதல்ல, சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தருடைய விவேகமான பொன்மொழியைப் பின்பற்றுங்கள். இதை இடிப்பதாகவோ அல்லது பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு செல்வதாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும் என்பது உண்மை. நாம் அலட்டிக் கொள்ள வேண்டாம். பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாம். அதே காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லம் எங்களுக்குக் தற்காலிகமாக கிடைத்திருக்கிறது. சோளிங்கநல்லூரில் பெரிய கட்டிடம் அமைகின்ற வரையில் தற்காலிகமாக பாலாறு இல்லத்தில் செம்மொழி மையம் இடம் பெறும்”, இவ்வாறு அவர் கூறினார்.

2013  –  ஜெயலலிதா  இப்பொழுது  அதே  இடத்தில்  விழாவைத்  துவக்கி  வைத்தார்: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழாவை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னையில் துவக்கி வைத்தார். விவேகானந்தர் பண்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு  தமிழகம் முழுவதும் ஓராண்டு தொடர் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இதற்கான துவக்க விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்றார். இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விவேகானந்தர் பண்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன் விவேக ஜோதி எனும் அணையா விளக்கையும் ஏற்றி வைத்தார்[8].  சென்னை கடற்கரை சாலையில் உள்ள சுவாமி விவேகானந்தர் இல்லத்தில் அவரது  150வது பிறந்த ஆண்டு விழாவை தமிழகம் முழுவதும் ஓராண்டு தொடர் கொண்டாட்டத்திற்கான விழா நடைபெற்றது.இந்த விழாவில் பங்கேற்க வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பேண்டு வாத்தியம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதா மேடை அருகே வைக்கப்பட்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி வணங்கினார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தர் முதலமைச்சருக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.இதையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கினார். தொடர்ந்து விவேகானந்தர் இல்ல வளாகத்தில் அமைய உள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அதையடுத்து விவேக ஜோதி எனும் அணையா விளக்கை முதலமைச்சர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து சுவாமி விவேகானந்தரின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு நூலை முதலமைச்சர் வெளியிட கௌதமானந்தர் பெற்றுக்கொண்டார்.  அதையடுத்து தேசிய இளைஞர் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பரிசுகள் வழங்கினார்.  ராமகிருஷ்ணா மடத்தின் மேலாளர் சுவாமி ஆசுதோசானந்தர் வரவேற்று பேசினார். அவரைத் தொடர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணா விஜயம் இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர் வாழ்த்துமடலை வாசித்து அளித்தார். அதைத் தொடர்ந்து சுவாமி கௌதாமனந்தர் ஆசி உரை வழங்கினார். இந்த விழாவின் இறுதியில் சுவாமி தர்பிஷ்டானந்தர் நன்றி கூறினார். விழாவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், விவேகானந்தர் மிஷன் மற்றும் மடத்தில் பணிபுரியும் துறவியர்கள், மாணவ  மாணவியர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் தொடக்கவிழா, சென்னை விவேகானந்தர் இல்லத்தில் இன்று நடந்தது. முதல்வர் ஜெயலலிதா தலைமை வகித்து, விழாவை தொடங்கி வைத்து, ‘விவேக ஜோதி தீபம்’ ஏற்றினார். தொடர்ந்து விவேகானந்தர் பண்பாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டி, விவேகானந்தரின் புகைப்பட தொகுப்பு நூலை வெளியிட்டார். தேசிய இளைஞர் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது[9]:

முதலமைச்சர் ஜெயலலிதா பேசியது: இந்த இல்லம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ராமகிருஷ்ண மடம் துவங்கியதில் இருந்து முதல் 9 ஆண்டுகள் அது இங்கு தான் இயங்கியது. சுவாமி விவேகானந்தர் இந்த இல்லத்தில் 9 நாட்கள் தங்கி வீர உரையாற்றியிருக்கிறார். அப்படிப்பட்ட இல்லத்தில் இருந்து உங்கள் முன் உறையாற்றுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பிறருக்காக வாழ்ந்த விவேகானந்தர் மற்றும் அவரது குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் கொள்கைள் மீது எனக்கு சிறு வயதில் இருந்தே அதிக ஈடுபாடு உண்டு. என் இல்லத்தில் உள்ள நூலகத்தில் சுவாமி விவேகானந்தர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் புத்தகங்கள் நிறைய உள்ளன. அவற்றை நான் அடிக்கடி படிப்பேன். அனைவரிடமும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமத்துவமாக வாழ்வதே சிறந்தது என்கிறார் சுவாமி விவேகானந்தர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உணர்த்தியவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அவர் மறைவுக்கு பிறகு மக்களுக்கு தொண்டு செய்யுமாறு மன்னர்களை வலியுறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்.

1893ம் ஆண்டு சிகாகோவில் நடந்த சர்வ மத மாநாட்டில், ‘சகோதர, சகோதரிகளே’ என்று துவங்கிய அவரின் பேச்சு உலக மக்களை கவர்ந்தது. 1897ம் ஆண்டு உலக நன்மைக்காக தொண்டும், துறவும் என்ற நோக்கத்தில் சுவாமி விவேகானந்தரால் தோற்றுவிக்கப்பட்டது ராம கிருஷ்ணா மிஷன். சுயநலத்தை தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள் என்றார் சுவாமி விவேகானந்தர். சுயநலமின்றி பிறர் நலத்திற்காக உழைப்பது தான் தொண்டு. அனைத்து மதங்களும் பிறருக்கு உதவி செய்வதையே போதிக்கின்றன. அதனால் தான் நம் நாட்டில் பல தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொண்டுகள் பல வகைப்படும். நாட்டுக்கு செய்யும் சேவை தேசத் தொண்டு. மக்களுக்கு செய்யும் சேவை மக்கள் தொண்டு. இறைவனுக்கு செய்யும சேவை திருத்தொண்டு. இந்த 3 சேவையையும் செய்யும் நிறுவனமாக ராமகிருஷ்ண மடம் உள்ளது என்றால் அது மிகையாகாது.

நான் அரசியலுக்கு வர சுவாமி விவேகானந்தர் ஒரு மிகப் பெரிய தூண்டுகோலாக இருந்தார்: நான் அரசியலுக்கு வர சுவாமி விவேகானந்தர் ஒரு மிகப் பெரிய தூண்டுகோலாக இருந்தார் என்று கூறினால் அது மிகையாகாது[10]. 1982ம் ஆண்டில் நான் அரசியலில் காலடி எடுத்து வைத்த போதே சுவாமி விவேகானந்தர் பற்றி ஒரு பேட்டியிலே குறிப்பிட்டேன். சுவாமி விவேகானந்தர் துறவியாக இருந்து மக்கள் சேவை செய்தார். நான் அவர் வழியில் அரசியலில் துறவறம் பூண்டு மக்கள் சேவை செய்து வருகிறேன். எனக்கு சுயநலம் என்பது அறவே கிடையாது. எனக்கென்று யாரும் கிடையாது, எதவும் தேவையில்லை. எனக்கு எல்லாமே தமிழக மக்கள் தான். தமிழக மக்களால் நான், தமிழக மக்களுக்காகவே நான். ராமகிருஷ்ண மடத்தின் மக்கள் சேவை மற்றும் சமூகப் பணிகளை நன்கு அறிந்தவள் நான். ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகிகள் அரசுக்கு சொந்தமான இந்த விவேகானந்தர் இல்லம் அமைந்துள்ள இடத்தையும், அதன் அருகில் உள்ள காலி இடத்தையும் நீண்ட கால குத்தகைக்கு விடுமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில், இந்த விவேகானந்தர் இல்லமும், அதன் அருகில் உள்ள காலி இடமும் ராமகிருஷ்ணா மடத்திற்கு 99 ஆண்டு கால குத்தக்கைக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்[11].


[2] http://www.telegraphindia.com/1080425/jsp/nation/story_9183277.jsp

TN govt retreats on Vivekananda House
M.R. VENKATESH
Chennai, April 24: The Tamil Nadu government today handed victory to Ramakrishna Math, saying it had “no plans to take back or demolish” Vivekananda House where the monk-philosopher stayed four years after his path-breaking 1893 Chicago address.“The status quo vis-à-vis Vivekananda House will be maintained, and there is no need to exercise our minds over it, or make this a big issue,” chief minister M. Karunanidhi told the Assembly.“The building is strong and I wish to assure you that nobody wants to pull it down or have any such intent.”The Telegraph had earlier this week reported that the DMK-led government had sent word through an industrialist well-wisher of the Math that it would have to vacate the building by today (April 24), two years before the lease expires.The chief minister, however, sent out a veiled warning. He said he hoped Math authorities would not take recourse to legal steps “in haste” and “try to challenge the government” as that would not be in tune with Vivekananda’s philosophy.

Math authorities sounded relieved, but were cautious. “For the time being there is no worry. Beyond that we don’t want to comment now,” said a spokesman for Swami Gautamanandaji, head of the Math in Chennai.

Almost the entire Opposition led by the ADMK and even some of the ruling DMK’s allies such as the Congress and the PMK had opposed any takeover bid by the state before or after the building’s lease period ended in February 2010.

Karunanidhi said there was no proposal to take back the building, which the emissary to the Math had said would be used to house a centre for Tamil classical language.

[6] The guest house in the palace of Raja of Ramnathapuram where the momentous decision to go to United States of America was taken in October 1892.

After the Sri Ramakrishna Paramahamsa (1836-1886) left his mortal coil, Swami Vivekananda started a padayatra in 1886 and reached Ramnathapuram in 1892 In Ramnad, he met Bhaskara Sethupathy, the Raja of Ramnad at his Royal Palace, “Ramalinga Vilasam” and stayed there as the official guest house of for eight days, which was called “Sankara Vilasam”, and the guest house was earlier known as “Colonel Bungalow”, because, a British Colonel Martinez who stayed there from 1790-1830. He lived there up to 70 years, he died and entombed nearby in the CSI cemetery. The bungalow was in a natural surrounding with trees and a big water tank on the backyard. The royal tank was meant for the Raja’s family. For them, there was a secured under ground level entrance with steps reaching down the water level.

This bungalow acquires historical significance, as initially, it was Raja of Ramnad who had earlier decided to go to US to attend the Parliament of religion. But after seeing and discussing with Swami Vivekananda, he decided that Swamiji was the proper person to attend the conference. When the Raja suggested, this to Vivekananda, he immediately did not agree to the proposal. After staying in Ramnad, he proceeded to Kanyakumari and reached there on December 24th, 1892. He requested the fishermen to take him to the rock, but they refused, as they had become Christians by then and said they had to celebrate Christmas; they would not take boats out. So Swami Vivekananda reached the rock by swimming. He remained there for two days and three nights meditating. In his trance, he got divine message that he should attend the Parliament of religion at US. He came back and wrote a letter to Raja of Ramnad expressing that now he was willing to attend the conference adding that he was proceeding to Madras and from there to Bombay. The Raja made all arrangements.

The bungalow with the surrounding land had been in possession of the Raja family. After the Colonel’s demise, the Rajas used to worship Kali with the sacrifice. When Sringeri 22 Pontiff visited the place, the Raja expressed his desire of abandoning the sacrificial practice and follow satvika worship. The great Pontiff advised him thus he stayed there for 48 days and performed Rajarajeswari Yagna and consecrating the place and a golden Vigraha of the Goddess Rajarajeswari was installed within the Palace-temple, which is still worshipped. Thus, the bungalow came to be known as “Sankara vilasam”.

As the important decision of Swami Vivekananda should go to US and attend the conference was taken there at the bungalow, it gets historical significance, as otherwise, Swamiji would not have got such prominence. Also it was a historic place form where the Hinduism became once again world famous.

When Vivekananda returned from US, he reached Colombo and from there, he came to Danuskodi by a boat and from there to Pamban. When he was about to land at Kundukal, Raja was waiting with his entourage to give him a royal welcome there. Because of the achievement of Swamiji and as well as the regard, the Raja had for him, he reverentially bowed his head and offered it as step for Vivekananda to land from the boat as Vivekananda was coming back to Mother land after five years. But, Swamiji tactfully avoided by jumping from the boat on the land. Raja erected a Victory pillar of 25 feet height with the Upanishad expression “Satyameva Jayate”. Swamiji recorded this in his letter to an American disciple. However, the pillar disappeared 25 years ago, reportedly destroyed by the local fishermen. After reaching Ramnad, Swamiji went to the same bungalow and gave lecture nearby open place on the backs of the huge tank, which is known is recorded in the Complete works of Swami Vivekananda.

But, such an important bungalow had been dilapidated and the Ramakrishna Mission had not acquired even though it was more than 100 years since Swami Vivekanada had landed there and lived there, where the momentous decision was “drilled into the head” as per Vivekananda’s own statement by the Raja. The building remained in the custody of the Raja’s family, and for want of funds, the surrounding land was sold to several individuals. Even Ramakrishna Mission did not come forward to either maintain or buy it to preserve it as ‘historical monument’. Under the circumstance, Viking S. Karunanidhi, a rotatarian who has interest in history and in Vivekananda to decided buy the land and construct his own house. He also purchased the dilapidated bungalow and handed over it to the Ramakrishna Mutt, Karur. Now, the Mutt has decided to construct a memorial, as old building the “Sankara Vilasam” has been in dilapidated state and beyond reconstruction or renovation which was purchased from the Raja’s family and given to the Ramakrishna mutt, Karur and Mr.Karunanidhi also purchased some land and gave it on cost price to the Karur Ramakrishna Mutt which is not affiliated with the Ramakrishna mutt affiliated Ramakrishna Mutt Thirupparaithurai. The process of transaction is over and the old building that was beyond repair, was demolished, by the time when the author of this paper reached the place and stated there for four days in January 2007, all that he could see were some photos of that historical building looked like, and some remaining building material, rubble, old bricks some 200 years old and round stone pillars. He requested the ashram to keep some of the relics from the old building, as they were associated with the life of Swami Vivekananda as A new memorial is coming up fast. This building and memorial would be known as “Vivekananda Bhaskaram” after completion of construction with Rs. 40 lakhs and is likely to be inaugurated in May 20 2007. So far Rupees 20 lakhs has been collected as donations and the remaining amount is yet to be realized and the in charge Sri Nagarajan Brahmachari informed that donations are welcome at the following address that would help to complete the building.

Now, authorities are spending on the British period colonial dilapidated buildings spending crores from exchequer, e.g, the Victory memorial hall situated inside the University buildings, Chennai. But, historically important monuments like Col. Martins this are neglected. The attitude of the Government is also intriguing, because, in the case of Ice-house building, though, where Swami Vivekananda stayed in Madras when visited the city , initially decided to demolish, because of Vivekananda association, it was spared and handed over to Ramakrishna Mutt and the Mutt has renovated and been maintaining as a memorial cum exhibition centre. However, in the case of “Sankara Vilasam”, it is unfortunate that it was allowed to be demolished, as though a new memorial is built, historically, it cannot be equated with the original monument.

Acknowledgements:

The author wished to thank Viking MS Karunananidhi and Brahmachari Nagarajan.

Address where donations are welcome
VIVEKANANDA BASKARAM
NO 1, ARANMANAI STREET,
RAMANATHAPURAM 623501
INDIA
PHONE 04567 -22819

சாணக்யாவிற்குப் பிறகு திராவிடம் – கெட்ட வார்த்தை பட்டியல் நீள்கிறது!

ஓகஸ்ட் 14, 2011

சாணக்யாவிற்குப் பிறகு திராவிடம் – கெட்ட வார்த்தை பட்டியல் நீள்கிறது!

 மூதறிஞரை வெல்ல முயன்ற கலைஞர், கலைஞரை மிஞ்சும் மருத்துவர்: தமிழகத்தில் தமிழ் பேசும் தமிழர்களுக்கு, தமிழில் இல்லாத வார்த்தைகள் மீதுதான் அன்பு, காதல், போகம், பிணைப்பு, இணைப்பு எல்லாமே. ஆனால், திடீரென்று அவற்றை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இது ராமசாமி நாயக்கர், அண்ணாதுரை, கருணாநிதி முதலியோர்களுக்கு வழக்கமாக இருந்து வந்தது.  இப்பொழுது ராமதாஸுக்கும் அந்த பித்துப் பிடித்து விட்டது போலும். ஆண்டுக்கு ஆண்டு, வார்த்தைகளுக்கு, புதிய வியாக்ரானம் / விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பிரிவினைவாதங்களை வைத்துக் கொண்டு, பிழைப்பு நடத்தி, மக்களை மயக்கப் பார்த்தது பாமக. ஆனால், ராஜதுரோகக் குற்றட்திற்குள்ளாவோம் என்று பயந்து, அண்ணாதுரையைப் போல, அமைதியாக கொள்கைளை மாற்றிக்கொண்டனர்.

சங்கராச்சாரியார், ரஜினிகாந்த் இந்த இருவர்களால் தான் தமிழகமே கெட்டுவிட்டது: இப்படி ஒருமுறை பேசிக் கலக்கியுள்ளார் ராமதாஸ். அதாவது, தெய்வநம்பிக்கை இளைஞர்களிடம் இவர்களால்தான் வளர்ந்தது, அதனால் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற அளவிற்கு பேசினார். ரஜினி படங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, தியேட்டர் முதலாளிகளை மிரட்டி எல்லாம் செய்து பார்த்தனர். ஆனால், நாத்திகத்தினால் கடந்த 60 ஆண்டுகளில் என்ன சாதிக்க முடிந்தது என்று இந்த பகுத்தறிவாளியால் சொல்லமுடியவில்லை.

“திராவிடம்’ என்ற சொல் கெட்டவார்த்தை: ராமதாஸ் புது அர்த்தம்[1]கிருஷ்ணகிரி: “”திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், “மக்களுக்காக அரசியல்’ என்ற செயல் திட்டத்தை, ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டில் இருந்து, முழுமையான சமச்சீர் கல்வி திட்டத்தை, நடைமுறைப்படுத்த வேண்டும். காமராஜர் காலத்தில், 12 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தது. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின், 11 ஆயிரம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துவங்கப்பட்டன. திராவிட கட்சிகள், கல்வியை கொள்ளையர்களுக்கு தாரை வார்த்துவிட்டன.
சமச்சீர் கல்வி முழுமையாக செயல்படுத்தப்பட்டால், மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு வேலையே இல்லை. 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ள தலைமைச் செயலக கட்டடத்தை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் கூட்டணி வைப்பது குறித்து நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். “திராவிடம்’ என்ற சொல்லை நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், “மக்களுக்காக அரசியல்’ என்ற செயல்திட்டத்தை ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

 

சாணக்யன்ஒருதுரோகி’ : பா..., ராமதாஸ்பேச்சு[2]திண்டிவனம் : திண்டிவனத்தில் நடந்த சாணக்யா பள்ளி திறப்பு விழாவில், “சாணக்யன் துரோகி, சாணக்யா என்ற பெயர் கெட்ட வார்த்தை’ என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்[3].

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்  நடந்த சாணக்யா மெட்ரிகுலேஷன் பள்ளி திறப்பு விழாவிற்கு, மரகதாம்பிகை கல்வி அறக்கட்டளை தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளி வளாகத்தை திறந்து வைத்து, பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:அரசு தேர்வுகளில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. 25 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் இருக்க என்ன காரணம்? விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான தனியார் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குகின்றன. இதற்கு அரசை தான் குறை கூற வேண்டும்.

பல நாடுகளில் கல்வியை அரசுகளே தான் தருகின்றன.கல்வி தற்போது வணிகமாகி விட்டது. புற்றீசல் போல் கிளம்பி உள்ள ஆங்கிலப் பள்ளிகள் மக்களிடையே ஒரு மோகத்தை ஏற்படுத்தியுள்ளன.  ஏழைகளுக்கும் பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும். சாணக்யன் மிகவும் கெட்டவன். சாணக்யா என்ற பெயர் கெட்ட வார்த்தை. சாணக்யனும், வெளிநாட்டைச் சேர்ந்த மாக்கியவல்லியும் துரோகிகள். அடுத்த பள்ளிக்காவது தேவராஜ் வேறு பெயர் சூட்டுவார் என்று நம்புகிறேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

 

திராவிட மாயையிலிருந்து என்று திராவிடர்கள் அல்லது தமிழர்கள் வெளிவரப்போகிறர்கள் என்று தெரியவில்லை: பி. ராமமூர்த்தி 1980களில் “ஆரிய மாயையா, திராவிட மாயையா” என்று திராவிட இயக்கத்தை விமர்சித்தார்[4]. குணா “திராவிடத்தால் வீழ்ந்தோம்!” என்று 1990களில் எழுதியுள்ளார்[5]. அப்பொழுது கருணாநிதி அவரை சிறையில் அடைத்தார். ஆனால், தமிழர்கள் அந்த மாயையிலிருந்து மீளவில்லை. திராவிட மாயையும் தொடர்ந்தது. “திராவிடம்” இல்லாமல் அரசியல் கட்சியே இல்லை என்ற நிலையில் தான் இருந்துவந்தது. பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள், விடுதலை சிறுத்தைகள் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் “திராவிட” அடைமொழி இல்லாத கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. “ஆரியர்” இனம் பொய், மாயை, கட்டுக்கதை என்றெல்லாம் மெய்ப்பிக்கப் பட்ட பிறகும், அந்த இனவாதம், இனவெறி, இனசெருக்கு, இனமாயை வாதங்களை வைத்துக் கொண்டு, திராவிட கட்சிகள் அரசியல் நடத்தி வருகின்றன. பணபலம் மிக்க வீரமணி கோஷ்டியர்கள் கூட கருணாநிதி-ஜெயலலிதா என்று மாறி-மாறி தங்களது திராவிடப் பற்றைக் காட்டிக் கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கு பணம், பதவி ஏதாவது கொடுத்தால் போதும், மாறிக்கொண்டேயிருப்பார்கள், மாற்றிக்கொண்டேயிருப்பார்கள்! கேட்டால் அரசியலில் இதெல்லாம் சகஜம், அரசியலில் நண்பனும் இல்லை-எதிரியும் இல்லை என்றெல்லாம் பேசுவார்கள். இனியேனும், உண்மையை அறிந்து தெளிவார்களா பார்ப்போம்!

வேதபிரகாஷ்

14-08-2011


[3] பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010,23:55 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13883

[4] பி. ராமமூர்த்தி, “ஆரிய மாயையா, திராவிட மாயையா” – விடுதலைப் போரும், திராவிட இயக்கமும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1983.

[5] குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம்!, தமிழக ஆய்வரண், பெங்களூர், 1994.

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

திசெம்பர் 31, 2010

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

கேட்ட பணம் கொடுக்காததால் அவதூறு செய்திகள் பரப்பப்பட்டன: “மிகப்பெரிய அளவில் பணத்தொகை கேட்டு மிரட்டப்பட்டேன். அதற்கு நான்

சென்னை உயர்நீதி மன்றத்தில் அஃபிடேவிட் தாக்கல் செய்யப்பட்டபோதே, இது சொல்லப்பட்டது. சன்-குழுமம் என்றும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டது. அத்தகைய வீடியோ ஒலிப்பரப்பாமல் இருக்கப் பணம் கேட்டதாகவும், பேரம் பேசியதாகவும் சொல்லப் பட்டது.

மறுத்ததால் என் மீது அவதூறான செய்திகளை பரப்பினர், ” என, சாமியார் நித்யானந்தா பேசினார். திருவண்ணாமலையில், சாமியார் நித்யானந்தாவின் 34வது பிறந்த நாளை முன்னிட்டு நித்யானந்த தியான பீடம் சார்பில் சத் சங்கம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு ஆசி வழங்கி நித்யானந்தா பேசியதாவது[1]:

தமிழக முதல்வர் அய்யாவுக்கு நான் கூறிக்கொள்வது; “மிகப்பெரிய ஆன்மிகநிறுவனம் நித்யானந்த தியானபீடம். இதில், தமிழகத்தை சேர்ந்த 12 லட்சம் பேர்

அப்படி தாக்கப்பட்டது நித்யானந்தா விரோதம் என்பதா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா?.

பக்தர்களாக உள்ளனர். இவர்களின் வேதனைகளையும், குமுறல்களையும், புண்படுத்தப்பட்ட மத உணர்வுகளையும், பழிக்கப்படுவதோடு அல்லாமல் மீண்டும் மீண்டும் நாங்கள் தாக்கப்படுவதால், எங்கள் வாழ்வுரிமையை நாங்கள் எங்கு சென்று தான் மீட்டெடுப்போம். மொத்தம் 197 நாடுகளில் தியானபீடத்தின் சத்சங்க மையம், கோவில், வழிபாட்டு தலங்கள் உள்ளன. ஒன்பது மாதங்களில் 120 வழிபாட்டு தியான பீடங்கள் சமூக விரோதிகளால், அடித்து நொறுக்கப்பட்டன.

தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும் தாக்கப்படவில்லை: “தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும்

தமிழகத்தில் மட்டும் ஏன் தாக்கப் படவேண்டும்?  அப்படியென்றல், பெரும்பாலான கிருத்துவ நிறுவனங்கள் அடித்து நொறுக்கப் பட்டிருக்க வேண்டுமே? ஆனால், ஒன்றுமே நடக்கவில்லையே? மாறாக, இது மட்டும் நடக்கிறது என்றால், என்ன அர்த்தம்?

தாக்கப்படவில்லை. சில தமிழ்தொலைக்காட்சிகளும், சில தமிழ்பத்திரிகைகளும் திட்டமிட்டு எங்களை அழிப்பதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய பணத்தொகைக்காக மிரட்டப்பட்டேன். யார் தான் இதற்கு பதில் சொல்வது; யார் தான் முடிவு சொல்வது. யார் தான் முற்றுப்புள்ளி வைப்பது. நாங்களும் எங்கள் அகிம்சை கொள்கையிலிருந்து மாறமாட்டோம். இதை அகிம்மையினாலேயே எதிர்கொள்வோம். எங்களை தாக்குபவர்கள் தாங்களாகவே ஒழிந்து போவார்கள்.

கருணாநிதி ஆளும் மாநிலத்தில் பக்தர்கள் தாக்கப் படுகிறார்கள்: “நீங்கள் ஆளும் இந்த நாட்டில், வாழும் என் மக்களுக்கு, என் பக்தர்களுக்கு சாத்தியமில்லை என்பதனால், தமிழகத்தின் முதல்வராகிய உங்களுக்கு,

கருணாநிதியின் பெயரைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன என்றால் அதன் பின்னணி என்ன? இதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? அதனால்தான் பகலில் சாமி, இரவில் காமி என்றெல்லாம் கருணாநிதி நக்கல் அடித்தாரா?

உங்களின் பார்வைக்கு இந்த கோரிக்கையை நேரடியாக எடுத்து வந்து, உங்களிடம் கொடுத்து உடனடி நிவாரணத்துக்காக காத்திருக்க போகிறோம்.
உங்கள் பெயரை பயன்படுத்தி, எங்களை எல்லாம் தாக்குகின்ற, ஊடகங்கள் சொல்லுகின்ற தகவல்களை மட்டும் கேட்காமல், உளவுத்துறை மூலம் இந்த புள்ளி விவரங்களை சரிபார்த்து கொள்ளுமாறு உங்களை கேட்டு கொள்கின்றேன்.

பக்தர்களையும் மிரட்டி பணம் பறிக்கப் படுகிறது: “என் பக்தர்கள் பாதுகாப்போடு கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லமுடியவில்லை. எங்கள் காப்பு அணிவது என்பது, எங்கள் மத உரிமை; என் படம் பொறித்த டாலர்களை, காப்புகளை அணிந்து வர பள்ளி, கல்லூரிகள் தடை விதித்துள்ளன. இது மத உரிமை மீறிய செயல். என் பக்தர்கள் அமைதியை விரும்புபவர்கள்,

இப்படி யாருக்கும் தெரியாமல் ஒரு ஆணையை அரசு எப்படி வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி வெப்சைட்டில் இன்னும் ராஜரத்தினம் புகை படம் உள்ளது.

எங்கள் மத சின்னம். தியான பீடத்தின் கோரிக்கை கடிதத்தை கோடிக் கணக்கான பக்தர்கள் கண்ணீரோடு, சில லட்சக் கணக்கான மக்களின் ரத்தத்தோடும், உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். நான் சொல்ல முடியாத அளவிற்கு எங்களை சில நிறுவனங்கள், ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டுகின்றன. என் பக்தர்கள் எனக்கு தெரியாமல் மிரட்டப்பட்டு, மிகப்பெரிய பணமும் பறிக்கப்பட்டது”, இவ்வாறு அவர் பேசினார்.

ரத்தக் கையெழுத்துடன் கலைஞருக்கு நித்யானந்தா கடிதம்[2]: “அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. அவர்களை காக்கவே இக்கடிதத்தை எழுதுகிறேன். இதில் இறுதியில் என் ரத்தத்தால் ஆன கையெழுத்தும், கை நாட்டும் வைத்துள்ளேன்”, என்று நக்கீரனில் உள்ளது!


திகவின் விநாயக சதுர்த்தி வியாபாரம்!

செப்ரெம்பர் 11, 2010

திகவின் விநாயக சதுர்த்தி வியாபாரம்!

வித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தி பற்றிய துண்டு அறிக்கைகள் தயார்[1]! விநாயகர் என்கிற இறக்குமதிக் கடவுளுக்கு தமிழ்நாட்டில் பண்டிகையாம்! தமிழர் தலைவர் அவர்கள் 3.9.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி ஆபாசத்தை – அருவருப்பை மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவோம்! வித்தியாசமான வகையில் 4 பக்க அளவில் துண்டு அறிக்கைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஆயிரம் துண்டு அறிக்கைகளுக்கு நன்கொடை ரூ.300 தான். கழகத் தோழர்கள் வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை சென்று விநியோகியுங்கள்! விநியோகியுங்கள்!! திராவிடர் கழகம் தலைமை நிலையம், பெரியார் திடல், சென்னை – 600 007 போன்: 044-26618163.

திகவின் விநாயக சதுர்த்தி அவதூறு பிரச்சாரம்

திகவின் விநாயக சதுர்த்தி அவதூறு பிரச்சாரம்

இறக்குமதி செய்யப்பட்ட கடவுளர்களும், வியாபாரமும்: விநாயகர் என்கிற இறக்குமதிக் கடவுள் என்றால், அல்லா, முஹமது, ஜேஹோவா, மேரி, ஏசு, ………………..முதலியவை என்ன ரகத்தில் வரும்? இவையெல்லாம் என்ன இந்தியாவில் இருந்தனவா? நாத்திகம் என்றால் அறிவு தேவையில்லையா? பகுத்தறிவு என்றால் புத்தி வேண்டாமா?

மதசார்பற்ற / செக்யூலரிஸ நாத்திகமா, மக்களை ஏமாற்றும் வேலையா? மதசார்பற்ற / செக்யூலரிஸ நாத்திகத்தை மெய்ப்பிக்க ரம்ஜானுக்கு, பக்ரீதுக்கு, கிருஸ்துமஸுக்கு………………………இத்தகைய துண்டு அறிக்கைகள் வளியிடுவார்களா? அதிலுள்ளவற்றை எடுத்துக் காட்டி மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவார்களா?

கோவையில் விநாயகரை அவமதிக்கும் நோட்டீஸ்[1] : கோவையில் பரபரப்பு; போலீசில் புகார்: விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடக்கும் நிலையில் கோவையில், விநாயகரை அவமதிக்கும் வகையில் பிரசுரம் வெளியிட்ட தி.க.,வினர் மீது கோவை போலீசில், இந்து அமைப்பினர் புகார் கொடுத்தனர். கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள், அனுமதிக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். பொதுமக்களும் பக்தியுடன், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று விநாயகரை வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தி.க.,வைச் சேர்ந்த சிலர், கோவை ரேஸ்கோர்ஸ், சுங்கம் பகுதியில் “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு’ என்ற தலைப்பில் நான்கு பக்க துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வினியோகித்தனர். இப்பிரசுரத்தை படித்து பார்த்த பொதுமக்களும், இந்து அமைப்புகளும் மிகுந்த வேதனையும், கடும் அதிருப்தியும் அடைந்தனர்.

இந்து அமைப்புகள் போலீஸாரிடம் புகார்: இது தொடர்பாக, வேதனை அடைந்த இந்து முன்னணி, பாரத் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று காலை சுங்கம் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர். நேற்று, இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலர் சதீஷ் தலைமையில் இந்து முன்னணி, பாரத்சேனா, வி.எச்.பி., உள்ளிட்ட இந்து அமைப்புகள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனிடம் புகார் கொடுத்தனர். புகாரில்,” முழுமுதற் கடவுள் விநாயகரை பல்வேறு வகையில் அவமதிக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நோட்டீஸ் சென்னை, வேப்பேரியில் உள்ள திராவிடக் கழகம், தலைமை நிலையத்தில் இருந்து வெளியிட்டதாக அச்சிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நோட்டீசை கைப்பற்றுவதோடு, இந்துக்கள் மனம் நோகும்படியாக, நோட்டீஸ் வினியோகித்தவர்களை கைது செய்து, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

கலவரத்தை தூண்டும் நோட்டீஸ் தி..,வினர் மீது வழக்கு[2]:திண்டுக்கல்: கலவரத்தை தூண்டும் வகையில் விநாயகர் குறித்து சர்ச்சைக்குரிய வாசகம்,போட்டோ அடங்கிய நோட்டீஸ் விநியோகித்த தி.க.,வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் முன்பு நேற்று முன்தினம் சிலர் “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு’ என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகித்தனர். இதில் பார்வதியின் அழுக்கு உருண்டையில் பிள்ளையார் பிறந்ததுள்ளார்.பகவான் பிறப்பு இவ்வளவு அசிங்கமா சிந்திப்பீர். யானை தலையை மனிதருக்கு வைத்தால் பொருந்துமா என்று விநாயகர் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து இந்துமுன்னணி மாவட்ட பொது செயலாளர் ரவிபாலன் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தார்.விநாயகர் பிறப்பை கேவலப்படுத்தியது, போட்டோக்கள் வெளியிட்டது, கெட்ட வார்த்தையால் திட்டியது, விநாயகர் சதுர்த்தியில் கலவரத்தை தூண்ட முயற்சித்தது ஆகிய குற்றத்திற்காக தி.க., மாவட்ட தலைவர் வீரபாண்டி உட்பட 3 பேர் மீது இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்துள்ளார்.


[1] தினமலர், விநாயகரை அவமதிக்கும் நோட்டீஸ் : கோவையில் பரபரப்பு; போலீசில் புகார், செப்டம்பர் 12, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83176

[2] தினமலர், கலவரத்தை தூண்டும் நோட்டீஸ் தி..,வினர் மீது வழக்கு, செப்டம்பர் 10, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=81504


[1] விடுதலை, 07-09-2019, ப.8, http://www.viduthalai.periyar.org.in/20100907/news27.html

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்!

ஜூலை 13, 2010

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்!

தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38052

இது பற்றி விரிவாக பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், தினமலரில் வந்த செய்தியை அப்படியே போட்டுவிட்டு,அடைப்புக்க்குறிகளில் மட்டும் என்னுடைய விமர்சனத்தைச் சிறியதாகக் கொடுத்திருந்தேன்.

இப்பொழுது, விவாதம் ஒன்றிற்கு மேற்பட்ட கோணங்களில் செல்வதால், இதனை மாற்றாமல் அப்படியே வைத்து, இன்னொரு பதிவை செய்ய விரும்புகிறேன்.

எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்: சென்னை: “எங்கெங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை, தமிழ் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது, அதனால், வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் பங்கேற்கும் விழாவில், எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்,” என, ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்த நாடக விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார். [உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டாம் என்று தமிழில் யோரோ சொல்லியிருக்கிறார்களே?]

ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், முதல்வர் கருணாநிதி கதை, வசனம், பாடல்கள் எழுதிய, “போர்வாளும் பூவிதழும்’ என்ற நாட்டிய நாடக விழா, சென்னையில் நேற்று நடந்தது. [ஜகத்ரெக்ஸகன் இப்படி ஜகஜாலக் கில்லாடியாக, எல்லாரையும் வைத்து சிண்டு முடித்து விடுகிறாரா அல்லது திட்டமிட்டே இப்படியொரு நாடகம் அரங்கேறுகிறதா, என்று கூடிய சீக்கிரத்தில் தெரிந்துவிடும்.]

கருணாநிதி-வேலுக்குடிகிருஷ்ணன்-2010

கருணாநிதி-வேலுக்குடிகிருஷ்ணன்-2010

விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் புதியவர்கள். இந்த மேடையில் தான் அவர்களை நேரில் பார்க்கிறேன். ஜெகத்ரட்சகன் மூலம், அவர்களுடைய தமிழை நாம் எல்லாரும் பருகும் வாய்ப்பை பெற்றோம். இத்தனை நாட்கள் இதைக் கேட்காமல் விட்டோமே என்ற எண்ணத்தை அவர்களின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பேச்சில் ஓரிரு வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவர்களின் தமிழ்ப் பற்று, எதை பற்றி சொன்னாலும், இறுதியில் முன் இருப்பது தமிழ்தான், தமிழர்தான் என்ற உணர்வு. அந்த உணர்வுதான் நம்மை இங்கே இணைத்துள்ளது”.

பத்மா.சுப்ரமணியம்.காட்சி.2010

பத்மா.சுப்ரமணியம்.காட்சி.2010

எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது: “அதற்காகத்தான் செம்மொழி மாநாடு நடத்தி முடித்துள்ளோம். எவ்வித பாகுபாடும் இன்றி, செம்மொழி மாநாட்டிற்கு அனைத்து சமயத்தவர்களையும், அனைத்து மதத்தவர்களயும், மாற்று கருத்து உடையவர்களையும், மற்ற கட்சியினரையும் அழைத்து விழா எடுத்துள்ளோம் [இப்படியெல்லாம் பொய் சொல்லுவதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதியேதான்]. கட்சி அடையாளம் இன்றி நடந்த அந்த விழாவில், நாம் தமிழர்கள் என்ற உணர்வுடையவர்கள் பங்கேற்றனர். அந்த உணர்வு இல்லாதவர்கள் மாநாட்டை புறக்கணித்தனர் [இதுதான் கொழுப்பு என்பது. அம்மாந்நாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று தடுக்கப் பட்டவர்கள், மறுக்கப் பட்டவர்கள், ஆய்வுக் கட்டுரைகள் கொடுத்தும் ஒதுக்கப் பட்டவர்கள் முதலியவர்கள் மவுனமாக இருப்பதே இந்த ஆள் தொந்தரவைத் தாங்க முடியாது என்பதால்தான்]. வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் பங்கேற்றுள்ள இந்த விழாவில், கருணாநிதி என்ன பேசுவார் என்ற எண்ணத்துடன் வெளியில் காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள். எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். [இந்துக்களை அவதூறு பேசியபோது, ஸ்ரீராமனை தூஷித்த போதும், அந்த பண்பாடு இல்லாமல் போனது ஏனோ?]

கருணாநிதி-நாட்டியம்-2010

கருணாநிதி-நாட்டியம்-2010

[திருப்பதி லட்டு கொடுத்தால்கூட சுவைத்து சாப்பிடும் ஆட்கள் உள்ளனர்]: விழாவிற்கு நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். ஆன்மிக பிரசாரகர்கள் வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் ஆகியோர் வைணவத் தமிழ் கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதை, முதல்வர் கருணாநிதி உட்பட அனைவரும் ரசித்து கேட்டனர். நாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் குழுவினர், இந்நாடகத்தை தொகுத்து, இசையமைத்து, நாட்டியம் ஆடினர். விழாவில், ஆழ்வார்கள் ஆய்வு மையத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தனர்.

கொஞ்சும்-குஷ்புவும்-தவிக்கும்-கருணாநிதியும்

கொஞ்சும்-குஷ்புவும்-தவிக்கும்-கருணாநிதியும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் இருக்கும் பண்பாடு ஏன் இப்பொழுதைய மனிதர்களை இப்படி வைத்திருக்கிறது? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் வாழ்ந்த எட்டு வரலாற்று சிறப்பு பெற்றவர்களை மையமாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கதைக்கு முதன்மை ஆதாரங்களாக, நற்கண்ணை, காவற்பெண்டு எனும் இரு பெண்பாற் புலவர்களின் பாடல்களும், சாத்தந்தை எனும் முதுபெரும் புலவரின் பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் அமைகின்றன. இந்த சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் இயற்றப்பட்டுள்ளது. இந்நாட்டிய நாடகம், ஏற்கனவே கோவை செம்மொழி மாநாட்டில் நடத்தப்பட்டது.

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்கின்ற ஆட்சி கலைஞருடைய ஆட்சி!

ஜூன் 15, 2010

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்கின்ற ஆட்சி கலைஞருடைய ஆட்சி!

http://viduthalai.periyar.org.in/20100615/news18.html

திருத்துறைப்பூண்டியில் பெரியார் சிலை திறப்பில் தமிழர் தலைவர் பாராட்டு!

திருத்துறைப்பூண்டி, ஜூன் 15_ சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யக் கூடிய ஆட்சி திமுக ஆட்சி என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு-ரையாற்றினார்.

சிறீ ரவிசங்கர், ஸ்ரீ ரவிசங்கர், வீரமணி, நாத்திகம்…………….

ஜூன் 7, 2010

வாழும் கலை ரவிசங்கரின் பின்னணி என்ன?

http://www.viduthalai.com/20100607/news06.html

வீரமணி ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர். மற்ற பல கல்லூரிகளுடன் தொடர்பு கொண்டவர். திகவின் இப்பொழுதைய தலைவர். ஆளும் திராவிட கட்சிகளுடன் மாறி-மாறி உறைவை வைத்துக் கொண்டுப் பிழைத்து வரும் போலி அரசியல்வாதி. விடுதலை என்ற நாளிதழின் ஆசிரியர், இதத பெரும்பாலாக இந்து விரோத சித்தாந்தத்தையேக் கொண்டுள்ளது. சில ஆண்டுகளுகாக அதை நான் கடுமையாக விமர்சித்து, ஈ-மெயில்களை அனுப்பி வந்தேன். அதற்கு பதில் இல்லை என்றாலும், மறைமுகமாக எனக்கு எதிர்ப்பு வந்தது. தனது “நாத்திக செக்யூலரிஸத்தை” மெய்பித்துக் கொள்ள சில மேனாட்டு இஸ்லாமிய-கிருத்துவ விமர்சனக் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட்டது. “மின்தமிழ்” எனக்கு தடை விதித்தது. இப்பொழுது, குறிப்பிட்ட இந்து சந்நியாசிகள், குரு முதலியவற்றை மட்டும் இலக்காகத் தாக்கி வருவது தொடர்கிறது. உலகளவில், ஏன் இந்தியாவிலும் கிருத்துவ-இஸ்லாம் மதங்களில் மிகக்கொடுமையான தீவிரவாதம், அடிப்படைவாதம், மக்கள் உரிமைகள் மீறல், பாலியல் வன்மம், சிறுவர்-சிறுமியர்களை கலவியில் ஈடுபடுத்தும் குரூரங்கள் முதலியவை அளவிற்கு அதிகமாக இருந்தாலும், கண்களை மூடிக்கொண்டு, இத்தகைய பாட்டுகளைப் பாடிவரும் போலித்தனத்தை காட்டவே, அத்தகைய படித்த, பகுத்தறிவுள்ள வீரமணி எழுது தனது விடுதலையில் தலையங்கமாக வந்துள்ளதை இங்கு வெளியிடப்பட்டு அலசப் படுகிறது

பார்ப்பனர் / பிராமணர் ரவிசங்கர்: வாழும் கலை போதிக்கும் சிறீ ரவிசங்கர் என்பவர் பார்ப்பன ஊடகங்களால் தூக்கிப் பிடித்து நிறுத்தப்-படுகிறார். ஆசிரமவாசிகளின் அந்தரங்கங்கள் எல்லாம் ஆபாசமானதாகவும், அருவருப்பானதாகவும், மக்களைச் சுரண்டுவதாகவும், பொருள் குவிப்பதாகவும்தான் இருந்து வருகின்றன. அன்றாடம் வரும் தகவல்கள் எல்லாம் இதனை உறுதிப்படுத்துகின்றன.

ரமணரிஷி துறவியா, கிரஸ்தரா? ரமணரிஷி என்ற ஒருவர் திருவண்ணாமலையில் இருந்தார். ஆன்மிகத்தின் பெயரால் கோடி கோடியாக பணம் சம்பாதித்தார். கடைசியில் தன் அண்ணன் மகனுக்கு அந்தச் சொத்துகளை எழுதி வைத்தார். அது தொடர்பான வழக்கு நீதிமன்றம் சென்றது. துறவிக்கு_ – சந்நியாசம் வாங்கியவருக்கு அண்ணன் மகன் என்ற உறவெல்லாம் கிடையாதே என்று நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தபோது, நான் துறவியல்லவே! நான் எப்போது சந்நியாசம் வாங்கினேன்? என்று பல்டி அடித்தாரா இல்லையா?

பெங்களூரைத் தேர்ந்தெடுப்பது ஏன்? பெரிய பெரிய ஆசிரமம் நடத்துபவர்கள் எல்லாம் பெங்களூருவை ஏன் தேடிச் செல்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வியாகும். அரசியல்வாதிகளாக அங்கு இருப்பவர்கள் பெரும்பாலோர் ஆன்மிகவாதி-களாக இருக்கிறார்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். யோகா என்று கூறப்படும் உடற்பயிற்சிக் கலையை ஆன்மிகக் குதிரையில் பூட்டி சவாரி செய்கிறார்கள் இந்த ஆசிரமவாசிகள். இடை இடையே வசீகரமான, ஆளை மயக்கும் உபந்நியாசங்கள்! அதில் ஏமாந்த சீட கோடிகள் இவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

ரவிசங்கரின் பூர்வோத்திரம் என்ன? இந்த ரவிசங்கரின் பூர்வோத்திரத்தை அறிந்தவர்கள் ஆசாமி ஏதோ வேடம் போடுகிறார் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஊரை விட்டு ஏன் ஓடிவந்தார் என்பதெல்லாம் அவருக்கு மரியாதையைச் சேர்க்கக்-கூடியதல்ல.

சாமியாருக்கு  நெருக்கடி ஏற்படுவது ஏன்?: நித்தியானந்தா சாமியாருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு இந்த சாமியார்களுக்கு எல்லாம் நெரி கட்டிவிட்டது. தங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி விட்டனர். பெங்களூருவில் உள்ள ரவிசங்கரை நோக்கி யாரோ சுட்டதாக ஒரு தகவல்! காவல்துறையின் புலன் விசாரணை ஒரு விதமாக இருக்கிறது; ரவிசங்கர் தரப்பில் வேறு வகையாகச் சொல்லப்படுகிறது. ரவிசங்கர் சீடர்களுக்குள் பிரச்சினை இருக்கிறது. அதன் விளைவாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதாகக் காவல் துறை கூறுகிறது.

சாயிபாபாவை கொலை செய்ய முயன்றது: இதுபோல பல சாமியார்களுக்கும் ஏற்கனவே பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. புட்டபர்த்தியில் சாயிபாபாவைக் கொலை செய்வதற்குச் சீடர்கள் முயற்சித்த போது, அறைக்குள் ஓடிப்போய் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதால் உயிர் தப்பித்தார்.

அமிர்தானந்த மயி அம்மையாரை ஒரு சீடன் கத்தியால் குத்த முயன்றது: அமிர்தானந்த மயி அம்மையாரை ஒரு சீடன் கத்தியால் குத்த முயன்ற நிகழ்ச்சியும் இந்த இடத்தில் நினைவு கூரத்தக்கதாகும். அதுபோல இப்பொழுது ரவிசங்கர் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

ஆண்டவனோடு அந்தரங்கத்தில் பேசுபவர்களுக்கு ஒய் பாதுகாப்பு, இசட் பாதுகாப்பு தேவையா? ரவிசங்கர் விஷயத்தில் வேறு சில கருத்துகளும் கூறப்படுகின்றன. ரவிசங்கருக்கு இப்பொழுது ஒய் பிரிவு பாதுகாப்புத்தான் அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆர்வக் கோளாறினால் அவருடைய சீடர்கள், பக்தர்கள் இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் வெளிவந்துள்ளது. தன் மீது பக்தர்கள் மத்தியில் அனுதாபம் வரு-வதற்குக்கூட கில்லாடி சாமியார் இது போன்ற சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்கலாம். எது உண்மையோ அது வெளியில் கொண்டு வரப்-பட்டே தீர வேண்டும்! கெட்ட நோக்கத்தோடு துப்பாக்-கிச் சூடு நடந்திருந்தால், குற்றவாளி கண்டு பிடிக்கப்-பட்டு கண்டிப்பாகத் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.

சாமியார்களிடம் எப்படி கோடிகள் வருகின்றன? அதே நேரத்தில் இந்தச் சாமியார்களின் அன்றாட வேலைகள் என்ன? அவர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளால் சமுதாயத்திற்கு நன்மையா? அல்லது தனி மனிதருக்கு நன்மையா? என்பதெல்லாம் அறிவியல் ரீதியில் ஆராயப்பட வேண்டும். இந்தச் சாமியார்களின் வேடத்தை நம்பும் மக்கள் தங்கள் ;பொருள்களை இழக்கிறார்கள், காலத்தைக் கரியாக்கு கிறார்கள். இந்த மனிதசக்தி நாசத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். மேலும் இவர்களுக்கு இவ்வளவு சொத்துகள் எப்படி குவிகின்றன? வரவுக்கான கணக்குகள் என்ன? வெளிநாடுகளில் கூட சொத்துகளைக் குவித்து உள்-ளார்களே, இது எப்படி சாத்தியம்? (சந்திரா சாமியார்கள் ஆயுத பேரம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆக-வில்லையா?)

சாமியார்கள் மீது விச்சரணை தேவை: சமுதாயத்தில் பல அவலங்கள் தலை தூக்குவதற்கு இந்தச் சாமியார் தொழில் கரணியாக இருப்பதால் இதன் பின்னணியைக் கண்டறிந்து தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியமாகிறது. சாமியார்களால் சமுதாய முன்னேற்றத்திற்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ ஒன்றும் ஆகப் போவதில்லை; மாறாக மனித சக்தி பாழ்படுத்தப்படுகிறது. இது குற்றங்களிலேயே மாபெரும் குற்றமாகும். எனவே இவர்கள் மீது விசாரணைகள் அவசியம்தேவை! மத்திய மாநில அரசுகள் அலட்சியப்படுத்தக்கூடாது!

வீரமணியின் பின்னணி என்ன?

  1. வீரமணி எப்படி திகவின் தலைவர் ஆனார்?
  2. வீரமணி பெரியாரின் வாரிசு என்று அந்த டிரஸ்டின் தலைவர் ஆனாரா இல்லை, வலுக்கட்டயமாக பறித்துக் கொண்டாரா?
  3. நாத்திகம் பேசும் வீரமணியிடம் எப்படி கோடிகள் வருகின்றன?
  4. தான் நடத்தும் நிகர்நிலை பல்கலைக்கழகம் தகுதியற்றது என்று உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப் பட்டது குறித்து வெட்கமாக இல்லையா?
  5. பெரியார் மணியம்மை பல்கழகம் மற்ற ஊழல்களில் மாட்டிக் கொண்டது அழகாக இருக்கிறதா?
  6. உள்ள நிலையைக் காப்பாற்றக் கொள்ள லட்சங்களில் சேகரிக்க – வசூலில் இறங்கியிருப்பது நியாயமானதா?
  7. தமிழ்நாடு சரித்திர பேரவை மாநாட்டின்போது, பேராளர்களை சரியாக உபசரிக்காமல், குளிக்கக் கூட வழியின்றி அலையவிட்டது முதலியன நன்றான விஷயங்களா?
  8. நாத்திக வேஷத்தில் இந்து விரோத பிரச்சாரத்தை மட்டும் செய்துவருவது “சமதர்மம்” / செக்யூலரிஸம் ஆகுமா? இதனை அவர் பல்கலை மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் புரிந்து கொண்டு கேட்டால், என்ன செய்வார்?
  9. ………………………………………

இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பரீட்சை நேரத்தில் உங்கம்மா, அப்பா படுக்கயறைக் காட்சியை ஒளிபரப்புவாயா?

மார்ச் 4, 2010

பரீட்சை நேரத்தில் உங்கம்மா, அப்பா படுக்கையறைக் காட்சியை ஒளிபரப்புவாயா?

இத்தகைய கனமான வார்த்தைகளை உபயோகப் படுத்துவதற்காக மன்னிக்க வேண்டும்.

ஆனால், இதன் பின்னணியில் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை, இந்தியர்களைக் கேவலப் படுத்த வேண்டும் என்ற ரீதியில் இறங்கியுள்ள கூட்டங்கள் தான் செயல்படுவதாக உள்ளன.

உள்ள நாத்திக அரசும் தாராளமாகவே ஆதரிப்பது தெரிகிறது.

துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் மாபெரும் செக்ஸ் அம்பலம்: துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் மாபெரும் செக்ஸ் அம்பலத்தை, படுக்கயறைக்கேச் சென்று படம் பிடித்து வெளிக்காட்டிய செய்தியாளர்களின் திறமையை, கட்டில் கலவி காட்சிகளை காட்டியேத்தீருவோம் என்ற டிவி விற்பன்னர்களின் சாமர்த்தியத்தை கவனிக்கும்போது, மிகவும் ஆச்சரியமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.

போலி சாமியார்களின் காவியை கிழித்தெரியவேண்டும்: சாமியார் என்ற ரீதியில் ஒரு நடிகையுடன் சல்லாபித்திருக்கும் அந்த போலியைத் தண்டிப்பதில், அவனது காவி உடையை உருவுதலில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் கற்ப்பைப் பற்றி ஆர்பரித்து கொக்கரிக்கும் நடிகர்-நடிகைகளும் தமது குற்றங்களிலிருந்து தப்ப முடியாது. சம்பந்தப் பட்டிருக்கும் அரசியல்வாதிகளும் அத்தகைய குற்றங்களில் சமமாகவேத் தண்டிக்கப்படுவதற்கு பாத்தியதையாக உள்ளார்கள்.

படுக்கறைக் கலவி காட்சிகளை பொது தொலைக்காட்சியில் காட்டுவது துப்பறியும் பத்திரிக்கைத்தொழிலா? நேற்று சன் மற்றும் வசந்த் தொலைக்காட்சியினர் இத்தகைய கலவிக்காட்சிகளை தொடர்ந்து, திரும்ப-திரும்ப காட்டியதற்கு பல பெற்றோர்கள் புகார் செய்துள்ளனர், ஏனெனில் 10+2 பரீட்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன, பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். உடனே ஏதோ தாங்கள் பத்திரிகா தர்மத்தைப் பின்பற்றுகிறார்போல, சாமியார் இவ்வாறு செய்துவிட்டார், மக்கள் விழிப்புணர்வாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வெளிப்படுத்திக் காண்பித்தோம் என்று சப்பைக் கட்ட ஆரம்பித்து விட்டனராம்!

நாத்திகம் என்ற பெயரில் ஊடகத்துறையில் இந்து-விரோத சக்திகள் அப்பட்டமாக வேலை செய்வது: ஊடகத் துறையில் நாத்திகம் போர்வையில் பெரியார்-அம்பேத்கர் என்று பேசிக் கொண்டும், இந்து பெயர்களை வைத்துக் கொண்டு உலாவருவது கிருத்துவ மற்றும் முஸ்லீம் இந்து-விரோத சக்திகள் தாம். இப்போது கூட பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்ற பெயர் அடிபடுகிறது.

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!

பிப்ரவரி 12, 2010

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!

© வேதபிரகாஷ்

முன்னுரை: உலக சைவ மாநாடு நடந்து சில நாட்களே ஆகியுள்ளன[1] (பிப்ரவரி 5-7, 2010). கலந்து கொண்ட மடாதிபதிகள், அடியார்கள், ஆய்வாளர்கள், பேராளர்கள், மற்றவர்கள் இன்னும் தங்கள் ஊர்களுக்குக் கூட சென்று சேரவில்லை. ஆனால், குன்றக்குடி மடாதிபதி, இந்துக்களைத் தூஷித்த, இந்துமதத்தைத் தொடர்ந்து தூஷணம் செய்து வரும் ஒரு ஜீவியை “திருக்குறள் பேரொளி” என்ற பட்டத்தை அளித்து, திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு பச்சைத் துரோகம் மற்றும் அவமானத்தைச் செய்துள்ளது[2]. கிருத்துவர்கள் 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா?” என்ற குறும்புத்தகம் தெய்வநாயகத்தால் எழுதவிக்கப்பட்டு வெளியிடுகிறார்கள்[3]. மு.கருணாநிதி “மதிப்புரை” அளித்துப் பாராட்டுகிறார். தமிழ் தெரிந்த கருணாநிதி, அப்பொழுதே, அது தவறு என்று எடுத்துக் காட்டியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை. ஆகவே அன்றே அவர் திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு தகாத துரோகத்தை செய்து விட்டார் எனலாம். அன்றிலிருந்து, இன்றுவரை, சென்ற வருடம் அந்த போலி / கள்ள ஆராய்ச்சிக்குத் துணைபோய், கிருத்துவர்களின் திரைப்படத்தை ஆரம்பித்து வைத்துள்ளர்[4].

திருவள்ளுவர் இரண்டாவது முறை மைலாப்பூரில் சாகடிக்கப்பட்டார்: கருணாநிதி, அந்த போலி தாமஸ் நினைவு தினமான ஜூலை 3 அன்று எப்பொழுது அந்த மோசடி திரைப்படத்தை ஆரம்பித்து வைத்தாரோ அன்றே திருவள்ளுவரை மைலாப்பூரிலேயே சாகத்து விட்டார் எனலாம்.

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!: உலகத் திருக்குறள் பேரவை சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு, “திருக்குறள் பேரொளி’ விருது வழங்கும் விழா, தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடந்தது. உண்மையில், வாய்மை இருளில், காரிருளில் மறைந்தது எனலாம்.

துறவிகளின் ஆசையும், அரசர்களின் மோக-இச்சைகளும்: விருதை ஏற்று முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “மறைந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் எனக்கு அன்பும், பாசமும், பரிவும் உண்டு. தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும் அவர் கொண்டிருந்த பற்றைக் கண்டு நான் வியந்துள்ளேன். அவரைப் போலவே இளையவர் பொன்னம்பல அடிகளாரும் செயல்பட்டு வருகிறார். இரண்டு அடிகளார்களும் பெரியார், அண்ணா மற்றும் என் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர்கள் என்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். எனக்குதிருக்குறள் பேரொளிஎன்ற விருது வழங்க விரும்புவதாகவும், அதற்காக ஒரு தேதியைத் தருமாறு அடிகளார் என்னிடம் வலியுறுத்தினார். எனக்கிருந்த பல்வேறு அலுவல்களை எடுத்துச் சொல்லி இந்த விழா தேவைதானா? என்றேன்.​ “எனது ஆசையை நிறைவேற்றுங்கள்என்றார். துறவிகள் ஆசைப்படக் கூடாது[5]. இருப்பினும் இந்த ஆசையை நிராகரிக்க முடியாது என சம்மதம் தெரிவித்து[6], விழாவில் பங்கேற்றுள்ளேன்.

இருட்டில் உள்ளவர்கள், ஒளியில் உள்ளவர்கள்!: எனக்கு, “திருக்குறள் பேரொளிஎன்ற விருதை தந்துள்ளனர். திருக்குறளே பேரொளி தான். அந்த பேரொளிக்கு திருக்குறள் என்று பெயரிடத் தேவையா? என்பதுதான் என் கேள்வி. இருந்தாலும், திருக்குறளை பேரொளி என்று இருட்டிலே இருப்பவர்களுக்கெல்லாம் உணர்த்துவதற்காகவாவது[7], இந்த விருது பயன்படட்டும் என்று எண்ணியோ என்னவோ, இந்த பேரொளீயை அவர்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள். இந்த விருதை எனக்கு வழங்கியுள்ளதன் மூலம், என்னைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றியுள்ளதாக நான் கருதவில்லை[8]. ஒளியை கையில் கொடுத்து, அது மற்றவர்களுக்கு பயன்பட வேண்டுமென்று கொடுத்ததாகக் கருதுகிறேன். என் கையிலே தூக்கிப்பிடுத்துருக்கின்ற ஒளி என்ற உணர்வோடு தமிழை, தமிழின் புகழை இந்த தரணியிலே நிலைநாட்டுவதற்கு பயன்படுத்துவேன் என்ற உறுதிமொழியை நான் அவருக்கும், அவருடைய மன்றத்துற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்யமேவஜெயதேயும் “வாய்மையே வெல்லும்” என்பதும்: சட்டசபையில் நான் பணியாற்றும் போது, எப்படியெல்லாம் தமிழுக்கு பணியாற்றுவது எனக் கருதி, “சத்ய மேவ ஜெயதேஎன்ற வார்த்தையைவாய்மையே வெல்லும்என்று மாற்றினோம். முதலில் எப்படி அந்த சொற்றொடரை மாற்றலாம் என்று அதற்கு எதிர்ப்பு இருந்தாலும், பிற்பாடு பழகப்பழக அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர். நம்முடைய தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சுட்டுச் சொல்லாக, இலட்சினைச் சொல்லாக இன்றைக்கு மாறிவிட்டிருக்கின்றது[9].

வாய்மையும் உண்மையும்!உண்மையயும் வாய்மையயும் ஒன்றாக எண்ணிக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. அப்படி இன்னமுன் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். வாய்மை என்பது பிறருக்கு தீங்கில்லாமல் சொல்லப்படுகின்ற ஒரு சொல்லுக்கு பெயர்தான் வாய்மை அடிப்படையில் பிறக்கின்ற ஒரு சொல்லாகும். யாருக்கும் எந்தவித கெடுதலும் ஏற்படாமல், இந்த வார்த்தையினால் உறுதியோட சொல்லப்படுகின்ற சொல் வாய்மை ஆகிறது. உண்மை என்பதை அதற்கு அடுத்தக் கட்டத்தில் வைக்கலாமே தவிர, அது வேறு, இது வேறு[10].

“பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்” என்றார் வள்ளுவர். அதற்கு குறளோவியத்தில் நான் விளக்கம் அளித்திருக்கிறேன். “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்” என்பதற்கு ஒரு சிறிய கதை. அந்த கதையில் வேடன் ஒருவன் வில்லும், அம்பும் கையில் ஏந்தி வேகமாக வருகின்றான். வருகின்ற வேடனுடையக் குறிக்கோள் அவனால் துரத்தப்பட்ட மான்குட்டியை[11] கொன்று அந்த மானை உணவாக ஆக்கிக்கொள்ளவேண்டுமென்ற குறிக்கோளோடு வேடன் வருகிறான்.

வேடன், மான்குட்டி, மாமிசம் சாப்பிடுவது: வள்ளுவர் தன் குடிலிலே அமர்ந்திருக்கிறார். அந்த குடுலுக்குள்ளே மான்குட்டி ஓடிவந்து ஒளிந்துக் கொள்கிறது. ஓடிவந்த வேடன், “ஐயா இங்கே மான்குட்டி வந்ததா? என்று கேட்கிறான், அதற்கு அவர், “இல்லையே, வரவில்லையே” என்கிறர். மான்குட்டித் தப்பித்துக் கொள்கிறது. பக்கத்திலே இருக்கிற ஒருவர், வள்ளுவரைப் பார்த்து, “ஏனய்யா ஊருக்கெல்லாம் உண்மை பேசச் சொல்லி அறிவுரை கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் வேடனிடத்தில் பொய்யாக மான் குட்டி வரவில்லை என்ரு சொல்லிவிட்டீர்களே” என்று கேட்கிறார். “நான் உண்மை சொல்லியிருந்தால் மான்குட்டி இந்நேரம் வேடன் வயிற்றுக்குள் போயிருக்கும். அதனால் தான் நான் வாய்மையோடு மான்குட்டியைக் காப்பாற்றினேன்”, என்கிறார்[12].

நாத்திகமும், ஆத்திகமும்: நான் எழுதிய குறளோவியத்தில், திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை[13] கருத்தில் கொண்டு அதற்கு பொருள் வடித்துள்ளேன். எனக்கு முன் திருக்குறளுக்கு உரை எழுதிய பலர், அவர்கள் ஆத்திகர்களாக இருந்தால், ஆத்திக கருத்துகளையும், நாத்திகர்களாக இருந்தால், நாத்திக கருத்துகளையும் அதில் வெளிப்படுத்தியுள்ளனர்[14]. “ஆனால், நான் திருக்குறளின் உரையை திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை கருத்தில் கொண்டு, நாத்திகத்தை திணிக்காமல், ஆத்திகத்தை புறக்கணிக்காமல் எழுதியுள்ளளேன். நான் குறளோவியத்திலிருந்து ஒன்றிரண்டு சொல்ல விரும்புகிறேன். பலரும் உண்மையும், வாய்மையும் ஒன்று என்று என நினைக்கின்றனர். ஆனால், உண்மை வேறு, வாய்மை வேறு. உண்மை என்பது உள்ளதைச் சொல்வது. வாய்மை என்பது யாருக்கும் தீங்கு நேரக்கூடாது என்று உரைப்பது. “யாருக்கும் தீங்கு செய்யாமல் நன்மை செய்ய வேண்டும் என்றால், பொய்யையும் சொல்லலாம். அந்தப் பொய் உண்மை இல்லை என்றாலும், அது வாய்மைக்கு இணையாகக் கருதப்படும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். எனக்கு கொடுக்கப்பட்ட இந்த விருதை, இங்கு கூடியுள்ள அறிஞர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்,” இவ்வாறு முதல்வர் பேசினார்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க ஆரம்பித்து விட்டது: கருணாநிதியே உண்மையா, பொய்மையா என்ற ஆராய்ச்சி செய்யவேண்டிய நிலையில் உள்ளது, ஏனனில், திருக்குறளைப் பொறுத்த வரைக்கும் செய்துள்ள துரோகம் சொல்ல மாளாது. கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு, திருவள்ளுவரையும், திருக்குறளையும் பழித்தது, தூஷித்தது,………..(முன்னமே குறிப்பிட்டுள்ளேன். எனது நூலில் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை”யில் விளக்கியுள்ளேன்). “குறளா, குரானா?” என்ற பிரச்சினை வந்தபோது, வாய்மூடிக்கொண்டிருந்தது முதலியன. இன்று வேடன், மான்குட்டி, வாய்மை, பொய்மை என்று கதை சொல்கிறார். அப்பொழுது ஏன் மான்குட்டியைக் காப்பாற்றவில்லை? “குறளா, குரானா?” என்று கேட்டபோது, “வாய்மை” வரவில்லையே,’உண்மையும்” சொல்லவில்லையே? மௌனியாக இருந்ததால், இன்னொரு மான் உண்மையிலேயே இதே சென்னையில் கொலைசெய்யப்பட்டது! ஆமாம், “குறள்”தான் என்று வாய்மை சொன்ன கண்ணுதல் என்ற மான்குட்டி கொலை செய்யப்பட்டது. ஆக குறளுக்காக உயிர்விட்டது யார், தியாகம் செய்தது யார் என்றால் கண்ணுதல் தானே. உண்மையிலேயே வாய்மையுடன், அந்த மடாதிபதிக்கு ஏதாவது தெரிந்தால், அந்த விருது அந்த கண்ணுதலுக்குத் தான் கொடுத்திருக்க வேண்டும். பாவம், இந்த மடதிபதிகளுக்கு சரித்திரம் தெரியாது, வரலாறும் தெரியாது. முந்தைய குன்றக்குடி கிருத்துவர்களுக்குத் துணை போனது, அந்த தெய்வநாயகமே தம்பட்டம் அடித்துக் காட்டுகிறன். இந்த குறக்குடி இப்படி செய்கிறது. தெரிந்தும், அரசர்களின் கால்களில் வீழ்ந்து வாழும் காவிவேடத்தில் உலாவரும் போலிகள். இங்குதான் ஆத்திகமும், நாத்திகமும் வெளிப்படுகின்றன. காவி உடையில் நாத்திகம் உலா வருவதால்தான் திருமூலர் சாடுகிறார். சித்தர்கள் தோலுறுத்திக் காட்டுகிறர்கள்! ஆனால் சித்தர்களையேப் புரட்டிப்போடுகிறார் இந்த “பேரொளி”பட்டர்! இன்னும் மான்குடிகள் சாகத்தான் செய்யும், ஏனெனில் வேடர்கள் ஏற்கெனவே விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்! இப்பொழுதுதான் தமிழர்கள் இவர்களைப் புரிந்து கொள்ளப்போகிறர்களோ தெரியவில்லை!

வேதபிரகாஷ்

12-02-2010


[1] அதற்கு எந்த திராவிட கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆத்திகம், ஆன்மீகம் பேசும் திராவிடர்களும் கவலைப்படவில்லை. எனவே தமிழர்கள் அவர்கள் எத்தகையவர்கள் என்று அடையாளங்கண்டு கொள்ளவேண்டும்.

[2] உண்மையிலேயே இத்தகைய திருக்குறள் துரோக, சைவ-துரோக, இந்து-துரோக மடங்கள் இருப்பதைவிட இல்லாமலேயே போய்விடுவது நல்லதே. பிறகு யான் அவர்கள் வெட்கம் இல்லாமல், இந்து, இந்து மடங்கள், இந்து மடாதிபதி என்றெல்லாம் மற்ற நேரங்களில் உலா வருகிறார்கள் என்று தெரியவில்லை.

[3] கத்தோலிக்க சர்ச் செய்துவரும் ஒரு மாபெரும் கள்ள ஆவண, சரித்திரப் புரட்டு ஆராய்ச்சி. ஏற்கெனவே கோர்ட் வரை சென்று அவர்களின் ஃபோர்ஜரி, மோசடி, கள்ள ஆவணம் தயாரித்தல் போன்ற விஷயங்கள் வெளிவந்துள்ளன.

[4] “இந்தியாவில் தாமஸ்” என்ற படத்தை ஆரம்பித்து வைத்து, திருவள்ளுவரை மறுபடியும் சாகடித்துவிட்டார் எனலாம்!

[5] இப்படி சொன்னவுடன், அது தூக்குப்போட்டு செத்திருக்க வேண்டாமோ? இல்லை, ஏதாவது குளம், ஆற்றில் வீழ்ந்து மறைந்திருக்கவேண்டாமோ? எதற்கு, திருநீறு, ஜடாமுடி, ருத்ராக்ஷம் எல்லாம்? யாரை ஏமாற்ற?

[6] ஆமாம் இத்தகைய விபச்சாரவேலை செய்யத் துணிந்தால், யாருக்குதான் ஆசை விடும். அதுவும், இது ஆசையில்லை, தினம் தினம் விருதுகளை நுகரும் மோகம், பட்டங்களைத் தழுவு பற்றும் இச்சை, உட்கார்ந்து கொண்டே ரசிக்கும் சல்லாபம், அது சாகும்வரை அடங்காது.

[7] எந்த கொழுப்பு இருந்தால், இருட்டில் உள்ளவர்கள் என்று மற்றவர்களைச் சொல்ல எண்ணம் வரும். இங்கேயே, அவருக்கு வயதாகியும் அந்த மமதை, செருக்கு, அணவம் முதலியன மனத்தை மறைத்துள்ளது வளிப்படுகிறது.

[8] “கடவுள்” ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் விளம்பரங்கள் கொடுத்துக் கொண்டதில் மட்டும் குறைவில்லை. “கடவுள்” பெயர் சொல்லி நீண்ட ஆயுள் வேண்டும் என்று கேட்டதிலும் வெட்கமில்லை.

[9] இதே மாதிரித்தான் “மாஹாத்மா”, “அண்ணல்” ஆகியது, ஆனால், அத்தகைய மரியாதை, மதிப்பு வரவில்லையே, திராவிடர்களுக்கு? ஏன்?

[10] நிச்சயமாக கருணநிதியை ஆன்மீகவாதி என்று யாரும் நினைத்துக் கொண்டால் அது பொய்யேயாகும்.

[11] அதனால்தான் வயதாகியதும், மான்குட்டி, மானாகியது போலும்! மானாட வந்துவிட்டது, கூட மயிலும் வந்துவிட்டது போலும்! பிறகென்ன, மானாட, மயிலாட, மார்பாட…………………

[12] “தான் மானாட மயிலான” பார்த்துக் கொண்டிருக்கும்போது, யாராவது கேட்டிருந்தால் இல்லையென்றுதான் சொல்லிருப்பார். ஏனெனில் மான்களை ஆடவிட்டுப் பார்க்கும்போது, குட்டிகளைப் பற்றி எப்படி ஞாபகம் வரும்?

[13] நல்லவேளை அக்காலத்தில் கருணாநிதி இல்லை!

[14] எப்படி நாஜுக்காகச் சொல்கிறார் பாருங்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பதால், இப்படி பேசுகிறார்.